Sunday, December 11, 2011

சிறுநீரின் வீரத்தில் வீடியோ கேம்! (வீடியோ இணைப்பு)



ஆண்கள் சிறுநீர் கழித்துக் கொண்டு விளையாடுகின்ற வீடியோ விளையாட்டு வசதி லண்டனில் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. 

மதுபான சாலை ஒன்றில் உள்ள கழிவறைகளில் இவ்வேற்பாடு செய்யப்பட்டு உள்ளது.சிறுநீர் கழிக்கின்றபோது வீடியோ கேம் ஆட்டம் இயல்பாகவே இடம்பெறுகின்ற வகையிலான நுட்பம் இது. 

சிறுநீர் கழித்துக் கொண்டு ஆடுகின்ற வீடியோ ஆட்டம் உலகில் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பது இதுவே முதல் தடவை என்று பெருமிதமாக சொல்லிக் கொள்கின்றனர் ஏற்பாட்டாளர்கள்.

ஆனால் யப்பானில் உள்ள பொது மலசல கூடங்களில் சிறுநீர் கழித்துக் கொண்டு ஆடுகின்ற வீடியோ விளையாட்டு ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. 

இவ்வீடியோவைப் பாருங்கள்.


சிறுநீரின் வீரத்தில் வீடியோ கேம்!

கழுத்து நெரித்துக் கொலை செய்யப்படும் பெண்(வீடியோ இணைப்பு)



இந்த மனித உரிமை மீறல் காட்டு மிராண்டி தனத்தை மனித நேயமுள்ள எவன் தான் ஆதரிப்பான் ..?

ஒருவர் உயிரை பரிபதர்க்கு பிறருக்கு என்ன உரிமை உள்ளது ..?

இந்த காணொளியை பார்க்கும் அனைவருக்கும் ஆத்திரம் வரத்தானே செய்யும்
..!


71 வயது கிழவனுக்கு வந்த காம வெறியால் 11 வயது சிறுமியின் வாழ்க்கை..


மட்டக்களப்பு - ஏறாவூர் மெஹாரின் கிராமத்தில் தனது வீட்டைச் சுத்தப்படுத்தவெனக் கூறி 11 வயது சிறுமியை அழைத்துச் சென்று 71 வயது கிழவன் அச்சிறுமியின் கற்பை சூரையாடியுள்ளார்.

இந்த சம்பவம் நேற்று மாலை வேளையில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

பாதிக்கப்பட்ட சிறுமி மட்டக்களப்பு வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

சந்தேகநபரான கிழவன் கைது செய்யப்பட்டு இன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளார்.

கல்லூரி மாணவிகளின் ஆபாச நடன கிளப்புகள்!!

சென்னையில் ஆபாச நடன கிளப்புகள் பெருகி வருகின்றன. கலாச்சார நடனம் என்ற பெயரில் அனுமதி வாங்கி இந்த கிளப்புகளை நடத்துகிறார்கள்.

சிந்தாதிரிப்பேட்டையிலும், அண்ணாசாலையில் உள்ள சாந்தி தியேட்டர் அருகிலும், ராயப்பேட்டையிலும் நடக்கும் இந்த கிளப்புகளில் கல்லூரி மாணவிகளை ஆபாச நடனம் ஆட வைப்பதாக ஜான்சிராணி பெண்கள் பாதுகாப்பு சங்கத்தலைவியும் மனித உரிமைகள் கழக சர்வதேச அமைப்பின் மகளிர் அணி தலைவியுமான கல்பனா கண்டித்துள்ளார்.

இந்த கிளப்புகளில் மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை நடன நிகழ்ச்சி நடத்துகின்றனர். இதற்கு ஒருவருக்கு ரூ.300 கட்டணம் வசூலிக்கிறார்கள். அதற்கு ரசீது கொடுப்பது இல்லை. மாடியில் நடக்கும் இந்த கிளப்புகளின் அருகிலேயே டாஸ்மாக் மதுபான கடைகள் உள்ளன.

அங்கிருந்து மது வாங்கி குளிர்பானத்தில் கலந்து நடன நிகழ்ச்சியை பார்ப்போருக்கு வினியோகிக்கின்றனர். அதற்கு தனியாக பணம் வாங்குகிறார்கள். கல்லூரி மாணவிகளை கலாச்சார நடனம் என்ற பெயரில் ஏமாற்றி அழைத்து வந்து ஆபாச நடனம் ஆட வைக்கின்றனர். 15 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவிகளையும் ஆட வைக்கிறார்கள்.

அவர்களுக்கு போதையில் இருக்கும் வாடிக்கையாளர்கள் கைகளை தொட்டு டிப்ஸ் என்ற பெயரில் பணத்தை அள்ளி கொடுக்கின்றனர். அந்த பணத்தையும் கிளப் நடத்துபவர்களே பிடுங்கி கொள்கிறார்கள். இந்த பெண்களிடம் மொபைல் நம்பர்களை வாடிக்கையாளர்கள் வாங்கி செல்கின்றனர்.

இதன் மூலம் அவர்களின் எதிர்காலம் தடம் புரளும் பரிதாப நிலைமை ஏற்படுகிறது. கலாச்சார சீரழிவை ஏற்படுத்தி இளம்பெண்கள் வாழ்க்கைக்கு வேட்டு வைக்கும் இந்த நடன கிளப்புகள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கல்பனா வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளார்.

ஆபாச நடன கிளப்புகளை மூடக்கோரி அவற்றின் முன்னால் விரைவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். சம்பந்தப்பட்டவர்கள் மீது பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

தி டர்ட்டி பிக்சர் - ஒரு அழுக்குப் பார்வை


உங்களுக்குள் ஓர் உந்துதல் இருந்தால் மட்டுமே நீங்கள் நட்சத்திரமாக ஜொலிக்க முடியும்' எனும் ஃப்ரெடிரிக் நீட்சேவின் மேற்கோளுடன் துவங்குகிறது 'தி டர்ட்டி பிக்சர்!'

பலரும் எதிர்பார்த்தது போல இது 'சில்க்' ஸ்மிதாவின் வாழ்க்கையைச் சொல்லும் படம் அல்ல. வெறுமனே 'சில்க்' எனும் பிம்பத்தின் கவர்ச்சியை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம்.

படம் எண்பதுகளில் நடப்பதாகச் சித்தரிக்கப்பட்டு இருக்கிறது. சினிமாவில் சேரும் ஆசையுடன் தன் கிராமத்தில் இருந்து வெளியேறி நகரத்தை நோக்கி வருகிறாள், ரேஷ்மா. அங்கே அவளுக்கு ஆதரவு தருகிறார் ஒரு பெண்மணி. அவர் வீட்டில் தங்கி, முயற்சிகள் மேற்கொள்கிறாள். 

சினிமாவில் நடிக்க வாய்ப்புத் தேடிச் செல்லும் இடத்தில் 'நீ கனவுக்கன்னி மாதிரி இல்லை' என்று சொல்லிவிட்டு, 'இந்தா சாப்பாட்டுக்கு வெச்சுக்க' என்று ஐந்து ரூபாயை நீட்டுகிறான் திரைப்பட நிறுவனத்தின் ஆள் ஒருவன். அதை வாங்கிக் கொண்டு வரும் வழியில் தன் அன்புக்கும், மதிப்புக்கும் உரிய நடிகர் 'ஸ்மாஷிங் சூர்யா' எனும் சூர்யகாந்தின் படம் திரையிடப்பட்டிருப்பதைப் பார்க்கிறாள். அவரின் தீவிர விசறி இவள் என்பதால், உடனே டிக்கெட் வாங்கிக் கொண்டு திரையரங்கிற்குள் நுழைகிறாள். 

அங்கே அவளுக்கு அருகே அமர்ந்திருப்பவன் அவளிடம் சில்மிஷம் செய்ய... அவள் முறைத்துப் பார்க்க... ஐம்பது ரூபாயை நீட்டுகிறான். அவள் 'ஏன்?' என்று கேட்க, 'வா.. வேற இடத்துக்குப் போய் ஜாலியா இருக்கலாம்' என்று அழைக்கிறான். அவனை அவமானப்படுத்திவிட்டு, மீண்டும் அந்த திரைப்பட நிறுவனத்துக்கு வந்து அந்த ஆள் தந்த ஐந்து ரூபாயை விட்டெறிகிறாள். 'எவனோ ஒருத்தன் எனக்கு ஐம்பது ரூபாய் கொடுத்து கூப்பிடுறான். என்கிட்ட ஒன்னுமில்லாமையா அவன் தர்றான்..?' என்று கேட்டு விட்டு நடக்கிறாள். 

அந்த ஐம்பது ரூபாய் தான் அவளை அவளுக்கே தான் யார் என்பதை உணர்த்துகிறது. 'பசங்களுக்குத் தேவையானது என்கிட்ட இருக்கு. அப்ப நான் ஒசத்தியா, இல்ல அவங்களா?' என்று படத்தின் ஆரம்பக் காட்சி ஒன்றில் அவள் பேசும் வசனம் ஒன்று வருகிறது. அப்போது அவள் தன் உடலைப் பார்த்த விதத்துக்கும், அந்த ஐம்பது ரூபாய் உணர்த்திய விதத்துக்கும் உள்ள வேறுபாட்டையும் புரிந்து கொள்ள ஆரம்பிக்கிறாள். மீண்டும் ஒரு முறை திரைப்பட வாய்ப்பு கேட்கச் செல்லும் போது அங்கே நடன ஒத்திகை நடந்து கொண்டிருக்கிறது. ஆடவேண்டிய முக்கியமான பெண் வரவில்லை. 'நான் ஆடட்டுமா?' என்று கேட்டு விட்டு, சவுக்கால் தன்னைத் தானே அடித்துக் கொண்டு குனிந்து நிமிர்ந்து அவள் ஆடும் ஆட்டம் அந்தக் காட்சியின் கதாபாத்திரங்களை மட்டுமல்லாது ரசிகர்களையும் திருப்திப்படுத்துகிறது. பெண் உடல் என்பது போகத்துக்கான சந்தைப் பொருளாக மட்டுமே இருந்திருக்கிறது அன்றைக்கும், இன்றைக்கும்!

தான் நடித்த பாடல் காட்சி வரும் என்று ஆசையோடு திரையரங்கம் சென்று பார்க்கும் போது அவளுக்கு ஓர் ஏமாற்றம் காத்திருந்தது. அவள் நடித்த காட்சி வரவில்லை. படத்தின் 'ரஷ்' பார்க்கும் போது, காட்சியைத் துண்டித்துவிடுகிறான், அந்தப் படத்தின் இயக்குனர் ஆப்ரகாம். அதோடு மட்டுமல்லாமல், தன் காலணியைக் கழட்டி ரேஷ்மாவின் ஆட்டம் ஓடிக்கொண்டிருக்கும் திரையின் மீது வீசி எறிகிறான். இந்தக் காட்சியின் நுண்மையான அரசியல் என்னவெனில், நடிகையாக... அதுவும் கவர்ச்சி நடிகையாக இருக்கும் ஒருத்தியை அவள் துறை சார்ந்த ஒருவனே ஏற்றுக் கொள்வதில்லை என்பதைத்தான். படத்தின் பிற்பகுதியில், 'செக்ஸை வெச்சு படம் எடுக்குறீங்க... அதை திரையிடுறீங்க... அதை விமர்சிக்கிறீங்க... அதுக்கு விருதும் கொடுக்கறீங்க... ஆனா அதுல நடிக்கும் என்னை மட்டும் ஏத்துக்க மாட்டேன்றீங்க!' என்று ரேஷ்மா கேட்பாள். அந்தக் கேள்வி அன்றைக்கு இருந்த நடிகைகள், இன்றைக்கு இருக்கும் நடிகைகள் கேட்க நினைத்த / நினைக்கும் கேள்வியாகத்தான் தென்படுகிறது.

ஆப்ரகாம் இயக்கிய அந்தப் படம் விமர்சகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெறுகிறது. ஆனால் வணிக ரீதியாகத் தோல்வியைத் தழுவுகிறது. 'வேணுன்னா பாருங்க சார்... இந்தப் படத்துக்காக உங்க கையில ட்ராஃபி இருக்கும்!' என்று ஆப்ரகாம், தன் தயாரிப்பாளர் செல்வகணேஷிடம் சொல்ல அதற்கு அவர், 'ஆமா இன்னொரு கையில திருவோடு இருக்கும்!' என்கிறார். அவார்ட் ஃபிலிம் எடுப்பதை மட்டுமே குறிக்கோளாக வைத்து இயங்கி வந்த அந்தக் காலகட்டத்தின் இயக்குனர் மனப்பான்மையை விளக்குவதாக இந்தக் காட்சி இருக்கிறது. அப்போது, இயக்குனரின் உதவியாளர் ஒருவர் ரேஷ்மா ஆடிய காட்சி ஒன்று வெட்டப்பட்ட விஷயத்தை தயாரிப்பாளருக்குச் சொல்கிறான். அந்தப் பிரின்டுகளின் பாஸிட்டிவ்களை இயக்குனர் எரித்துவிட, தன்னிடம் இருக்கும் நெகட்டிவ்களைக் கொண்டு அந்தக் காட்சியைச் சேர்த்து படத்தை மீண்டும் திரையிடுகிறார் தயாரிப்பாளர். படம் வசூலை அள்ளுகிறது. ஆபாச நடனத்துக்குக் கிடைத்த வரவேற்பில் ஆப்ரகாம் காணாமல் போகிறான்.

அந்த ரேஷ்மாவைத் தேடிப் பிடித்து அவளை தன் படத்தில் நடிக்குமாறு அழைக்கிறார் செல்வகணேஷ். அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போது சாலையில் 'சில்க்' என்று எழுதப்பட்ட விளம்பர வண்டி ஒன்று கடந்து செல்கிறது. 'இனிமே நீ ரேஷ்மா இல்லை. 'சில்க்'னு வெச்சிக்க!' என்கிறார் அவளிடம். 'சில்க்' உதயமாகிறாள்!

'சில்க்' வந்த பிறகு அடுத்தடுத்து காட்சிகள் விரைவாக நகர்கின்றன. முதல் படமே 'ஸ்மாஷிங் சூர்யா'வுடன்தான்! ஆரம்பத்தில் அவருடன் நடிக்கத் தயங்கி, அவமானம் அடைந்து, பிறகு அவர் அறைக்குச் சென்று அவரை 'செட்யூஸ்' செய்து, தன் அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு எல்லாவற்றையும் தூக்கி எறிந்துவிட்டு நடிக்க ஆரம்பிக்கிறாள். அப்போது துவங்கி க்ளைமேக்ஸுக்கு முன்பு வரை உடலை எடுத்துக் காட்டும் உடையுடன் வலம் வருகிறார் சில்க்.

'சில்க்' ஆக, வித்யா பாலன். தன்னுடைய கேரியரில் பெருமையாகச் சொல்லிக் கொள்ள ஒரு கேரக்டர் இது என்பதில் சந்தேகமே இல்லை. கிராமத்தில் இருந்து வரும் பெண்ணுக்குரிய 'தடால்' பேச்சு, சினிமாவுக்குள் நுழைந்த பிறகு ஆளுக்கு ஏற்றாற் போல் தன்னை மாற்றிக்கொள்ளும் குணம், 'மேடம் இன்னும் கொஞ்சம் ஹீட் வேணும்' என்று இயக்குனர் கேட்டதற்கு, 'ஸ்ஸ்... ஹா...' என்று ஒலி எழுப்பி, உடலை வளைந்து நெளிந்து நடிப்பது, 'ஒரு சில்க்குகே கண்ணு முழி பிதுங்குது... மூணு சில்க்னா லுங்கி கழண்டுறாது' என்று 'சில்க்' கெக்கலிக்கும் இடம், 'எத்தனை ஷகிலா வந்தாலும் 'சில்க்' ஆக முடியாது!' என்று சொல்லும் கம்பீரம், தான் தயாரித்த படம் ஃப்ளாப் ஆகும் போது கலங்கும் இடம், தன்னை பயன்படுத்திக் கொண்டவர்கள் தன்னை கைவிடும் போது கதறும் காட்சி, பணக் கஷ்டத்தினால் திண்டாடும் போது 'ப்ளூ ஃபிலிம்'மில் நடிக்கலாமா, வேண்டாமா என்று 'சில்க்' குழம்புவது என எல்லா ஸீன்களிலும் நீக்கமற நிறைந்து காணப்படுகிறார் வித்யா. 

'ஸ்மாஷிங் சூர்யா'வாக நஸ்ரூதீன் ஷா. தனக்குக் கொடுக்கப்பட்ட கேரக்டருக்கு கச்சிதமாக நியாயம் செய்திருக்கிறார். இயக்குனர் தன்னிடம் கதை சொல்ல வரும் போது குறுக்கிட்டு, 'ஹீரோ அனாதையா இருக்குறதெல்லாம் சிக்ஸ்டீஸ்ல.. இப்ப ஹீரோவுக்கு ஒரு குடும்பம் இருக்கணும். ஒரு தங்கச்சி இருக்கணும். அவள் கற்பழிக்கப்படணும். அதுக்கு அவன் பழிவாங்கணும். படம் ஹிட்!' என்று சொல்லும் இடத்தில் அப்படியே அந்தக் காலகட்ட நாயகர்களை நம் கண் முன் நிறுத்திவிடுகிறார் ஷா.

இயக்குனர் ஆப்ரகாம் ஆக, இம்ரான் ஹாஷ்மி. 'மர்டர்', 'ஜன்னத்', 'ஒன்ஸ் அபான் எ டைம் இன் மும்பை' போன்ற பாலிவுட் படங்களில் நடித்தவருக்கு இதில் அவ்வளவாக ஸ்கோப் இல்லை எனினும், படம் முழுக்க இவர் பார்வையில் தான் நகர்கிறது. 

சில காட்சிகளில் 'நைலா' என்ற பத்திரிகையாளர் வருகிறார். அன்றைய பாலிவுட் பத்திரிகைகள் எப்படி மஞ்சள் பத்திரிகைகளாக இருந்தன என்பதற்கு இவர் எழுதும் கட்டுரைகள் சான்றாக அமைகிறது. அண்ணன் சூர்யகாந்த்துடன் நடிப்பதையும், தம்பி ரமாகாந்த்துடன் பழகுவதையும் முடிச்சுப் போட்டு, 'சில்க் இன்றைய சினிமாவின் நவீன திரௌபதி' என்ற ஃப்ளேக்லைனுடன் வரும் கட்டுரையை 'சில்க்' வாசிப்பதாக வைத்திருக்கும் காட்சி இதை எதிரொலிக்கும். ஆனால் அதே பத்திரிகையாளர் சூர்யகாந்த்தைப் பேட்டி காண வரும் போது, 'என்ன செய்யறது... ஆண்களை மகான்களாகக் காட்ட, சில சமயம் பெண்களை பிசாசாகக் காட்ட வேண்டியிருக்கு!' என்று சொல்லும் இடம்... பிரமாதம்!

எண்பதுகளின் திரை உலகத்தை, ரசிகர் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட கனவுக்கன்னி 'சில்க்' ஸ்மிதாவின் வாழ்க்கையை எடுக்க நினைத்ததில் ஒன்றும் தவறில்லை. ஆனால் அவர் பட்ட கஷ்டங்களையும், பிறருக்குச் செய்த உதவிகளையும் மறந்துவிட்டு வெறுமனே கவர்ச்சி, சிகரெட், பிராண்டி, குதிரை ரேஸ் போன்ற நெகட்டிவ் பக்கங்களைக் காட்டியதில் தான் தோற்றுப் போகிறார் இயக்குனர் மிலன் லுதாரியா. அதேபோல ஒரே காட்சியில் தோன்றியவுடன், 'சினிமாவுக்குத் தேவையானது மூணு விஷயம் மட்டும்தான்... என்டர்டெயின்மென்ட்.. என்டர்டெயின்மென்ட்.. என்டர்டெயின்மென்ட்..' என்று 'சில்க்', ஆபரகாமிடம் சொல்லும் இடமும் 'அட போங்கப்பா...' ரகம்! 

'அலைகள் ஓய்வதில்லை' படத்தில் ராதாவின் காதலுக்கு உதவி செய்ததை அறிந்து தியாகராஜன் 'சில்க்'கை அறைவார். கண்ணில் நீர் தேங்கி நிற்க, அவர் பேசும் வசனம் பார்ப்பவரை அவர்மேல் பரிதாபம் கொள்ளச் செய்யும். அந்த இரக்கத்தில் துளி அளவேனும், இந்தப் படத்தில் 'சில்க்' ரேஷ்மா க்ளைமேக்ஸில் இறக்கும் போது சுத்தமாகத் தோன்றவில்லை. 'சில்க்' ஸ்மிதாவை ஒரு 'போர்னோகிராஃபிக் ஆர்டிஸ்ட்' ஆக கற்பிதம் செய்து கொண்டுள்ள பாலிவுட்டில், வணிகத்தைத் தாண்டி ஒரு நடிகையின் வாழ்க்கையை உண்மையான அக்கறையுடன் செய்ய வேண்டும் என்று நாம் எதிர்பார்ப்பது ஏமாற்றமாகவே அமையும்!

படத்தில் விருது வழங்கும் நிகழ்வு ஒன்று வருகிறது. 'இப்ப நான் நாலு பட்டனை கழட்டுனா இங்க இருக்குறவங்களுக்கு வேர்த்துக் கொட்டும். ஆனா நான் செய்ய மாட்டேன். நீங்க எல்லோரும் நாகரிகம்கிற போர்வையில இருக்கீங்க. ஃபேமிலியா இருக்கும் போது மூஞ்சியைத் திருப்பிக்கிறீங்க. ஆனா தனியா படத்தைப் பார்த்துட்டு ஃபேமிலியைப் பெருக்கிக்கிறீங்க. நீங்க கடைசி வரைக்கும் நாகரிகப் போர்வையிலேயே இருங்க. ஆனா நான் என் ரசிகர்களுக்குக் காட்டிட்டேதான் இருப்பேன்!' என்று 'சில்க்' ரேஷ்மா பேசும் வசனம் நிச்சயம் உங்களைக் கைதட்ட வைக்கும். 'மேல போனாலும் 'சில்க்' ஜொலிச்சுகிட்டேதான் இருப்பா!' என்று 'சில்க்'கின் சவத்திற்கு சிதை மூட்டிய பிறகு ஆப்ரகாம் கலங்கும் இடத்தில்... தியேட்டரில் விசில்!

'எதிர்பாலினத்தவரை மனதளவில் துகிலுரித்துப் பார்க்கும் ஆர்வம் ஒவ்வொருவரிடத்திலும் இருக்கிறது' என்று பாலியல் தொடர்பான உளவியலை வரையறுக்கிறார் சிக்மன்ட் ஃப்ராய்ட். ஆனால் 'சில்க்' ரேஷ்மா சொல்வது போல நாம் நாகரிகம் என்கிற போர்வையைப் போர்த்திக் கொண்டு 'ச்சீ... அதெல்லாம் அழுக்கு. அசிங்கம்' என்கிறோம். நமக்கு அசிங்கமாக இருப்பது 'சில்க்'குக்கு அழகு மிகுந்ததாகத் தோன்றி இருக்கிறது. 'அழகு உண்மையானது. உண்மையே அழகு!' என்று ஓர் இடத்தில் எழுதுகிறான் கவிஞன் கீட்ஸ். அப்படிப் பார்த்தால், 'ஆபாசம்' என்று சொல்லப்படுகிற அந்த அசிங்கம் உண்மையானது தான். அழகானதுதான். Yes, Dirty is Beauty! (Not the Picture).

ஜெயித்த 'சில்க்' ! : காத்திருக்கும் சோனியா



வித்யா பாலன் நடிப்பில் இந்தியில் வெளியாகி இருக்கும் படம் THE DIRTY PICTURE. சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை பிரதிபலிப்பதாக கூறப்பட்டு வெளியாகி இருக்கும் இப்படம் இந்தியில் பெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது.

THE DIRTY PICTURE படத்தில் வித்யா பாலனின் நடிப்பை இந்தி திரையுலகத்தின் முக்கிய பிரமுகர்கள் அனைவருமே புகழ்ந்து இருக்கிறார்கள். முதல் வாரத்தில் இப்படம் 50 கோடி வசூல் செய்து இருக்கிறது.

இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பால் தமிழ் திரையுலகில் 'ஒரு நடிகையின் வாக்குமூலம்' படக்குழு சந்தோஷத்தில் இருக்கிறது. ஒரு நடிகையின் வாழ்க்கையை மையாக வைத்து இப்படத்தினை இயக்கி இருக்கிறார் ராஜ்கிருஷ்ணா.
சோனியா அகர்வால் திருமண விவாகரத்துக்கு பிறகு இப்படத்தில் நாயகியாக நடித்து இருக்கிறார். THE DIRTY PICTURE படத்தின் வெற்றியால், படத்தின் வேலைகளை முடித்து விரைவில் வெளியிட வேண்டும் என்ற முனைப்பில் பணியாற்றி வருகிறார்கள். சோனியா இப்படம் வெளிவருவதில் மிகுந்த ஆவலாக இருக்கிறாராம்.

அணை 'வீக்' இல்லை... கேரள அரசியல் கட்சிகள்தான் 'வீக்'! - கே.எம்.அப்பாஸ் அதிரடி

'போராட்டம், மறியல், உருவப் பொம்மை எரிப்பு என்று நாளுக்கு நாள் முல்​லைப் பெரியாறு விவகாரம் தீவிரம் அடைகிறது. இதற்குக் காரணம் அணை அல்ல, கேரள அரசியல்தான்’ என்று புதியதோர் கோணத்தைச் சொல்கிறார் விவசாயிகள் சங்கத் தலைவர் கே.எம்.அப்பாஸ். பல ஆண்டுகளாக முல்லைப் பெரியாறு பிரச்னைக்காக தனிமனிதராக நின்று குரல் கொடுத்து வருபவர் இவர். 

அணையின் வரலாற்றையும் இன்றைய அரசியலையும் நமக்குச் சொல்கிறார்...


''முன்பு தேனி, மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய பகுதி மக்கள் குளத்து நீரையும், மழை நீரையும் மட்டுமே நம்பி விவசாயம் செய்துவந்தனர். நிரந்தரத் தண்ணீருக்குத் தீர்வு வேண்டி ஆய்வு செய்தபொழுது சிவகிரி மலையில் உற்பத்தி ஆகி வரும் முல்லை ஆறும், சதுரகிரி மலையில் உற்பத்தி ஆகி வரும் பெரியாறும் ஓர் இடத்தில் கலக்கும் இடத்தில் அணை கட்டுவதற்குத் திட்டமிடப்பட்டது. அதுதான், முல்லைப் பெரியாறு அணை. இதற்கு முன்னிலை வகித்தவர் ஆங்கிலப் பொறியாளர் ஜான் பென்னி குக். 1886-ல் சென்னை ராஜதானி கவர்னர் ஹாமில்டன் முன்னிலையில் தமிழகம் மற்றும் கேரளமும் இணைந்து 999 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் போடப்பட்டது. இதனால் ஓர் ஆண்டுக்கு ஏக்கருக்கு ஐந்து ரூபாய் வீதம் 8,000 ஏக்கருக்கு 40 ஆயிரம் ரூபாயை தமிழகம் கேரளாவுக்குக் கட்ட வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது. சென்னை பொறியாளர்கள் ரியாஸ், ஸ்மித் லோகன்பால் இவர்களோடு தலைமைப் பொறியாளர் பென்னி குக் முன்னிலையில் 1886-ம் ஆண்டு அணை கட்டத் தொடங்கி 10-10-1895 அன்று திறப்பு விழா நடந்தது.
இந்த அணை கட்டுவதற்கு ஏகப்பட்ட பொருட் செலவும் உயிர் சேதமும் ஏற்பட்டது. காலரா, பூச்சிக் கடி, யானை மற்றும் புலி போன்ற வன விலங்குகளால் 422 பேர் கொல்லப்பட்டதாக அரசுப் புள்ளி விவரங்கள் கூறுகிறது. அணையைக் கட்டிய கிழக்கிந்திய கம்பெனி போதுமான நிதி இல்லை என்று கைவிட்ட நிலையில், பென்னி குக், 'நான் பிறந்தது ஒரு முறைதான். அதற்குள் என் லட்சியத்தை அடைவேன்’ என்று தன்னுடைய நாட்டுக்குச் சென்று மனைவியின் நகைகள், சொத்துக்கள் எல்லாவற்றையும் விற்றுப் பணம் கொண்டுவந்து அணையைக் கட்டி முடித்தார். அதனால்தான் அவரது பெயரை.. லோகன், லோகி, லோக நாயகன், லோகநாயகி, பென்னிகுக் என்று இப்பகுதி மக்கள் சூட்டுகிறார்கள். அவர்கள் உருவில் பென்னி குக் இன்றும் வாழ்கிறார். கடைகள், வீதிகள், மன்றங்களுக்கும் அவர் பெயர் வைத்து நன்றி செலுத்துகிறார்கள். நீர் இருக்கும் வரை அவர் பெயர் இருக்கும்.

சமீப காலம் வரை எந்தப் பிரச்னையும் இல்லை. '999 ஆண்டு ஒப்பந்தம் பழமையானது. அதனால் புதிய ஒப்பந்தம் போடவேண்டும். புதிய அணை கட்ட வேண்டும்’ என்று கேரள அரசு 2006-ம் ஆண்டு சட்டசபையில் கேரள அணைகள் பாதுகாப்புச் சட்டம் என்று ஒரு மசோதாவை உருவாக்கியது. அதனால், தமிழக அரசு வழக்கமாக கொடுக்கும் 2.40 லட்சம் ரூபாயைப் பல கோடிகளாக உயர்த்தலாம் என்றும், புதிய அணை கட்டினால் மின்சாரம், சுற்றுலா பெருகும் என்றும் யோசித்தது கேரள அரசு.

தமிழகத்தில் முல்லைப் பெரியாறு அணை நீர் பாயும் வழித்தடங்களில் சுமார் 26 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் கேரளா மக்களுடையது. இது வரை தமிழகம் முல்லைப் பெரியாறு தண்ணீரைப் பயன்படுத்தியதற்காக 27 கோடியே 8 லட்சம் ரூபாய் கட்டியுள்ளது. இது போக கேரள மின்சாரத்திற்கு உத்தேசமாக சுமார் 116 கோடி செலவழித்துள்ளது. 1961 முதல் 2001 வரை கேரள போலீஸாருக்கு 1:4 என்ற விகிதத்தில் 50 ஆண்டுகளாக பல லட்சம் ரூபாய் சம்பளத்தை தமிழக அரசு வழங்கியுள்ளது.

1979-ம் ஆண்டு ஏற்பட்ட நில நடுக்கத்தில் அணையில் விரிசல் என்று கூறியது கேரள அரசு. அதனால் அணையைப் பலப்படுத்த தமிழக அரசு சுமார் 26.75 கோடி செலவிட்டது.

இப்போது விரிசல், நில நடுக்க ஆபத்து என்று கேரள மக்கள் இடையே வீண் பீதியைக் கிளப்புவதற்குக் காரணம் இருக்கிறது. அது, கேரளாவில் தற்போது நிகழும் அரசியல் சூழ்நிலைதான். கடந்த 2011-ம் ஆண்டு நடந்த கேரள சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 72 இடங்களையும், இடதுசாரிகள் (கம்யூனிஸ்ட்) 68 இடங்களையும் கைப்பற்றினார்கள். இதனால், காங்கிரஸ் கட்சியின் உம்மண் சாண்டி முதல்வரானார்.

காங்கிரஸ் அமைச்சர் ஜேக்கப் கடந்த அக்டோபரில் இறந்ததால், விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. 140 இடங்களைக்கொண்ட கேரள சட்டசபையில் காங்கிரஸ் 71 இடங்களைப் பெற்றுள்ளது. இதில் ஆளும் கட்சியின் சட்டசபைத் தலைவர் ஒருவர் போக 70 என்று பலம் இருக்கிறது. ஒருவேளை காங்கிரஸ் தோற்றுவிட்டால், இடது சாரிகள் சம பலம் பெற்றுவிடுவார்கள். அதனால் எப்படியும் தேர்தலில் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக முதல்வர் உம்மண் சாண்டி, இந்த முல்லைப் பெரியாறு விவகாரத்தைப் பெரிதுபடுத்துகிறார். இதற்கு எதிர்ப்பு அரசியல் பண்ணவே, கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன், நடக்கவே முடியாத நிலையிலும் வந்து அணையைப் பார்வை​யிட்டு, 'கேரள மக்களின் உயிருக்​கும் உடைமைக்கும் பாதிப்பு’ என்று பொய்ப் பிரசாரம் செய்தார். அடுத்த நாளே, கேரள சட்டசபை பேச்சாளர் கார்த்திகேயன், மத்திய நீர்ப்பாசனத் துறை அமைச்சர் ஜோசப் உள்ளிட்டோர் வந்து அணையைப் பார்வையிட்டு, 'அணையில் நீர்க் கசிவு, விரிசல், நிலநடுக்கம்’ என்று பொய்ப் பிரசாரம் செய்கிறார்கள். உண்மையில் அணை வீக் இல்லை. கேரள அரசியல் கட்சிகள்தான் வீக்.

முல்லைப் பெரியாறு அணையின் உண்மை நிலை தெரியும் என்பதால், கேரள உயர் அதிகாரிகள் மௌனம் காக்கின்றனர். கடந்த வாரம் கேரள உயர் நீதிமன்றம், 'அணை உடையப்போகிறது என்கிறீர்கள், மக்களைப் பாதுகாக்க என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்?’ என்று கேள்வி எழுப்பியது. அப்போது, 'அணை உடைந்தால் 480 வீடுகள்தான் பாதிக்கும்’ என்று பதில் தந்தது கேரள அரசு. 'அணை உடைந்தால் ஐந்து மாவட்டங்கள், 45 லட்சம் மக்கள் கொல்லப்படுவார்கள்’ என்று கூறப்பட்ட கருத்தை கேரள அட்வகேட் ஜெனரல் தண்டபாணி நிராகரித்த காரணத்தால்தான், அவரது உருவ பொம்மையை எரித்து வருகின்றனர் கேரள அரசியல்வாதிகள்.

முல்லைப் பெரியாறு அணை இரு புறமும் மலைகளால் சூழ்ந்துள்ளது. அதனால் அணை உடைந்தால், உப்புத் துறையில் 420 குடும்பங்களும், சப்பாத்துப் பகுதியில் 580 குடும்பங்களும் மட்டுமே பாதிப்பு அடையும். அந்த இரண்டு கிராமங்களுக்கும்கூட, பாதுகாப்பாக 36 அடி உயரத்தில் கரை கட்டப்பட்டு உள்ளது. இந்த உண்மையை எடுத்துக்கூறிய பொறியாளர்களையும், அங்கு உள்ள அரசியல்வாதிகள் கடுமையாக விமர்சிக்கிறார்கள். முன்பு அணை உடைவது போலவும், வெள்ளத்தால் மக்கள் அடித்துச் செல்லப்படுவதாகவும் குறும் படம் இயக்கினார்கள். இப்போது அதையே டேம் 999 என்ற பெயரில் படம் எடுத்து, கேரள மக்களின் உணர்வுகளைத் தூண்டுகிறார்கள்.

ஒரு கிலோ அரிசி உற்பத்திக்கு 236 லிட்டர் தண்ணீரும், ஒரு கிலோ காய்களுக்கு 86 லிட்டரும் ஒரு கிலோ பழத்துக்கு 112 லிட்டர் தண்ணீரும் தேவைப்படுகிறது. கேரளத்தில் இருந்து ஓர் ஆண்டிற்கு 12 முதல் 15 டி.எம்.சி. தண்ணீரை தமிழகம் வாங்குகிறது. ஆனால், இங்கே உற்பத்தி செய்த 3.26 லட்சம் டன் காய்கள், பழங்களை ஆண்டுதோறும் கேரளாவுக்கு அனுப்புகிறது. 2,000 மெட்ரிக் டன் பால் அனுப்புகிறது. இது வாங்கும் தண்ணீரைவிட அதிகம். ஒட்டுமொத்தமாகச் சொல்வது என்றால் 48% உணவுப்பொருளை கேரளாவுக்கு அனுப்புகிறது தமிழகம். ஆனாலும் தமிழன் வஞ்சிக்கப்படுவதுதான் வேதனை'' என்கிறார் அப்பாஸ்.

கேரள அரசியலுக்காக தமிழர்களின் வாழ்க்கை பணயம் வைக்கப்படுவதுதான் வேதனையான விஷயம்! 

-

முதல்வர் சொல்வது பொய்!

முல்லை பெரியாறு விவகாரம் குறித்து, 'நாம் தமிழ் மக்கள் பேரவை’ மற்றும் 'நிலம் நீர் சங்கம்’ இணைந்து சென்னையில் கருத்தரங்கு ஒன்றை நடந்தியது.

அதில் பேசிய தமிழக அரசின் முன்னாள் தலைமைப் பொறியாளர் அ.வீரப்பன், ''நில‌ ந‌டுக்க‌ம் ஏற்ப‌ட்டால் முல்லை பெரியாறு அணை உடைந்துவிடும் என்றும் சில‌ தின‌ங்க‌ளுக்கு முன் ஏற்ப‌ட்ட‌ சிறு ந‌டுக்க‌த்தில் அணை விரிச‌ல் விட்டிருப்ப‌தாக‌வும் போலியான‌ த‌க‌வ‌ல்க‌ளை அளித்து வ‌ருகிறார் கேர‌ள‌ முத‌ல்வ‌ர். நில‌ ஆய்வின் ப‌டி அந்த பகுதியில் 3.5 முதல் 4.2 ரிக்ட‌ர் அள‌வுதான் நில நடுக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இது அணைக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது. ஒரு க‌ன‌ரக‌ லாரி ந‌ம்மைக் க‌ட‌ந்து செல்லும் போது ஏற்படும் உணர்வுதான், இந்த‌ அதிர்விலும் ஏற்ப‌டும்'' என்றார்.

1 முதல் 10 வகுப்பு வரை மாதாந்திர உதவித் தொகை!


 தமிழகத்தில் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு மாதந்தோறும் கல்வி உதவித் தொகை வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பு:

'சமூகநீதியை நிலைநாட்டுவதில் முன்னோடியாக திகழும் முதல்வர் ஜெயலலிதா பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின மக்களின் கல்வி மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காக ஏராளமான திட்டங்களை முனைப்புடன் செயல்படுத்தி வருகிறார்கள்.

இதன் அடிப்படையில், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் வகுப்பைச் சார்ந்த மாணவ, மாணவியருக்கு பள்ளிக் கல்வி உதவித்தொகைத் திட்டத்தின்கீழ், விடுதியில் தங்காமல் 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு மாதம் ரூ.25 வீதம் 10 மாதங்களுக்கும், 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரைபயிலும் மாணவ, மாணவியர்களுக்கு மாதம் ரூ.40 வீதம் 10 மாதங்களுக்கும், 9 ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு மாதம் ரூ.50 வீதம் 10 மாதங்களுக்கும் கல்வி உதவித் தொகை வழங்கப்படும்.

இதே போன்று விடுதியில் தங்கி 3ம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு மாதம் ரூ.200 வீதம் 10 மாதங்களுக்கும், 9ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு மாணவ, மாணவியர்களுக்கு மாதம் ரூ.250,- வீதம் 10 மாதங்களுக்கும் கல்வி உதவித் தொகை வழங்கப்படும். இது தவிர, தனி மானியமாக ஆண்டொன்றுக்கு ரூ.500 வழங்கப்படும்.

ஒன்றாம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை கல்வி பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் இனத்தைச் சார்ந்த மாணவ,மாணவியர் இதனால் பயனடைவார்கள். இதற்கென, 11 கோடியே 32 லட்சம் ரூபாய் ஒப்பளிப்பு வழங்கி, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்,' என்று அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏன் இப்டி பயந்து சாகிறே!


கீழே உள்ளது உங்களுக்கே படிக்க முடியவில்லையா?
கீழே உள்ள சுட்டியை அழுத்தவும்.
சுட்டி 
இந்த எழுத்துருவை தரவிறக்கி உங்கள் கணிப்பொறியில் நிறுவிக்கொள்ளவும்

gak; fz;fspy; Muk;gpf;fpwJ/ fz; ghu;f;Fk; fhl;rp ga  tifiar;rhu;e;jJ vd;W K:is jPu;khdpj;j khj;jpuj;jpy; nfhgk; g[wg;gLfpwJ
/ Hypothalamus, Pituitary Glandf;F xU jdpg;gl;l bra;jp mDg;g[fpwJ/ mJ Pituitary-apd; Kd;gf;f Risf;Fg;ngha;. mJ clnd (ACTH)  “Adrino Cardico Traffic Harmone” vd;fpw ,urhadj;ij ,uj;jj;jpy; fyf;fpwJ/ rpy fz';fspy; ,J ml;updy; Rug;gpf;F bry;fpwJ/ (ml;updy; fpl;dp?f;F gf;fj;jpy; ,Uf;fpwJ) ml;updy; ,d;Dk; ,uz;L Harmone-r; Ruf;fpwJ/



1.  Epi Nephrine

2.  Nor  Epi  Nephrine

,it ,uz;Lk; kpd;ntfj;jpy; cly;KGJk; khWjy;fis Vw;gLj;Jfpd;wd/ mojofSf;F ntz;oa cWg;g[fSf;F (if. fhy;) Mf;!p$d;/ ru;f;fiu vy;yhk; mjpfkhf mDg;g[fpwJ/  rpd;dr;rpd;d ftdk; <u;f;Fk; tpt&a';fs; (KJFmupg;g[) uj;J bra;ag;gLfpwJ/ ,jaj;jpw;F ntiyg;gG mjpfkhfpwJ/ rUkj;jpw;Fk;. $Puzj;jpw;;Fk;  ,uj;jf;FHha;fs; RU';Ffpd;wd/ gak;te;jhy; Kfk; btspwpg;nghtJ ,jdhy;jhd;/ mogl;lhy; ,uj;jk; rPf;fpuk; fl;ojl;lt[k; jahu;/ EiuaPuy; nrfupj;Js;s FSf;nfh!; tpLjiy gz;zg;gLfpd;wd/ gpuhztha[j; njitf;F Rthrf;FHha;fs; tpuptilfpd;wd/ jirehu;fs; RU';Ffpd;wd/ rpWePu; nghtnjh. kw;w fhupankh epd;Wnghfpd;wd/ fz;fs; tpuptilfpwJ/ ehf;F cyu;fpwJ/ cly; tpau;f;fpwJ/ (rz;il nghl;lhy; cly; R{lhFk;nghJ Fspuitf;f)/ nuhkf;fhy;fs; rpypu;j;J Ko br';Fj;jhf epw;fpwJ/ ,itbay;yhk; Rkhu; xU epkplj;jpw;Fs; epfH;fpd;wd/





ஒரு மொட்டைக் கடிதம்


ஜெயலலிதாவுக்கு மிரட்டல் விடுத்து அனுப்பப்பட்ட கடிதங்கள் மீது நடவடிக்கை எடுங்கள் என்று உள்துறை செயலாளர், தமிழக டி.ஜி.பி. உள்ளிட்ட அதிகாரிகளிடம் புகார் கடிதங்கள் கொடுத்த அ.தி.மு.க. இப்போது பிரதமரிடமே புகார் கொடுத்திருக்கிறது. தம்பிதுரை, மைத்ரேயன் உள்ளிட்ட அ.தி.மு.க.வின் 15 எம்.பி.க்களும் பிரதமரை நேரில் சந்தித்து 3 பக்க புகார் மனுவையும் கொடுத்திருக்கிறார்கள். 

புகார் கொடுத்துவிட்டு வந்த தம்பிதுரை, ""பிரதமர் எங்கள் புகாரைப் பற்றி முழுவதுமாக கேட்டுக்கொண்டார். எதிர்க்கட்சித் தலைவரான ஜெயலலிதாவுக்கு போதிய பாதுகாப்பு கொடுப்பது எங்கள் கடமை. அவருக் கான பாதுகாப்பு குறித்து தமிழக அரசுடன் கலந்து பேசுகிறோம் என்று உறுதியாக கூறியிருக் கிறார்''’என்றார்.

இந்த நிலையில் தமிழக அரசும் முன்னாள் முதல்வரான ஜெய லலிதாவுக்கு வழங்கப்பட்டு வரும் பாதுகாப்பு குறித்து விளக்கங்களை கொடுத் துள்ளது. திருச்சியில் பத்திரிகையாளர்களிடம் பேசிய முதல்வரும், 2001-ம் ஆண்டில் தமிழக முதல்வராக இருந்தபோது ஜெயலலிதாவுக்கு என்ன பாதுகாப்பு கொடுக்கப் பட்டதோ அதே பாது காப்பு தொடர்கிறது என்று கூறியிருக்கிறார். 
ஆனாலும் அ.தி.மு.க. எம்.பி. மைத்ரேயனோ, ""எங்கள் தலைவிக்கு வந்த மிரட்டல் கடிதங்கள் பற்றி நாங்கள் உள்துறை செய லாளர், டி.ஜி.பி. உள்ளிட்ட தமிழக உயர் அதிகாரி களிடம் புகார் கடிதங்கள் கொடுத்தும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை'' என்கிறார் நம் மிடம். 

ஜெ.வுக்கு வந்த மிரட்டல் கடிதங்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று காவல்துறை வட் டாரத்தில் விசாரித்தோம்.

""முதல் கடிதம் மதுரை மாவட்டம் கள்ளந்திரி முகவரியிட்டு அனுப்பப்பட்டி ருக்கிறது. இரண்டாவது கடிதம் வடகரை முகவரியிட்டு அனுப்பப்பட்டிருக்கிறது. இரண்டு கடிதங்களின் முகவரிகளுமே போலியானவை. வடகரையில் வைகைப்புயல் பாலு என்கிற கேரக்டரே இல்லை. இரண்டு கடிதங்களுமே அனுப்புனர் முகவரிக்கு சம் பந்தம் இல்லாத இடத்தில் இருந்துதான் போஸ்ட் செய்யப்பட்டிருக்கின்றன. கள்ளந்திரி முகவரியிட்ட கடிதம் தஞ்சாவூர் போஸ்ட் ஆபீசில் இருந்து அனுப் பப்பட்டிருக்கிறது. 

வடகரை முகவரி யிட்ட கடிதம் சென்னை தி.நகர் போஸ்ட் ஆபீசிலிருந்து அனுப்பப்பட்டி ருக்கிறது. இரண்டு கடி தங்களின் கையெழுத்தும் வேண்டுமென்றே மாற்றி எழுதப்பட்டிருக்கிறது. திட்டமிட்டு குழப்பம் ஏற்படுத்துவதற்காக இந்த கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவே எங்களின் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. ஆனாலும் நாங்கள் சீரியசாக இந்த புகார்களை விசாரித்து வருகிறோம். விரைவில் உண்மை குற்றவாளிகள் பிடிபடுவார்கள்''’ என்கிறார்கள். 

ஜெ.வுக்கு கொடுக்கப்படும் பாதுகாப்பு குறித்து செக்யூரிட்டி பிரிவு அதிகாரிகளிடம் பேசினோம். ""ஜெ. முதல் முறை முதல்வராக இருந்தபோது விஜயகுமார் ஐ.பி.எஸ். தலைமையி லான எஸ்.பி.ஜி.தான் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டது. இரண்டாவதாக 2001-ல் முதல்வராக அவர் பொறுப்பேற்ற போது தமிழ் தீவிரவாத அமைப்புகளாலும், விடுதலைப்புலிகள் அமைப்பினாலும் அவர் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக முடிவு செய்த செக்யூரிட்டி ரெவ்யூ கமிட்டி அவருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்க அறிவுறுத்தியது. 2001 ஜூன் 1-ம் தேதி இந்த முடிவு எடுக்கப்பட்டு ஜூலை 5-ம் தேதி முதல் இந்த பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது'' என்றவர்கள் தற்போது ஜெயலலிதாவுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் பாதுகாப்பு பற்றியும் விளக்கினார்கள். 

""இசட் பிளஸ் பாதுகாப்பில் இன்ஸ் பெக்டர் கேடரில் ஒரு பர்சனல் செக்யூரிட்டி ஆபீசர்தான் நியமிக்கப்படுவார்கள். ஆனால் ஜெயலலிதாவுக்கு அவரிடம் ஏற்கனவே பாதுகாப்பு அதிகாரிகளாக இருந்த டி.எஸ். பி.க்கள் திருப்பதி சாமி, பெருமாள் சாமி இரண்டு பேர் நியமிக்கப்பட்டிருக் கிறார்கள். 3 இன்ஸ் பெக்டர்கள், 12 எஸ்.ஐ.க்கள் நியமிக்கப்பட்டிருக் கிறார்கள். இவர் களோடு 58 காவ லர்களும் பாது காப்பு பணியில் ஈடுபடுவார்கள். புல்லட் புரூஃப் கார் ஒன்றும் வழங் கப்படுகிறது. 

தானியங்கி துப்பாக்கிகளோடு இந்த செக்யூரிட்டி அதிகாரிகள் பணியாற்றுகிறார்கள். 

மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய் யும்போது லோக்கல் போலீஸ் பாதுகாப் போடு 20 கமாண்டோ படை யினரும் கூடு தலாக செக்யூரிட்டி பிராஞ்ச் போலீசாருடன் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். 

இது மட்டும் இல்லாமல் ஒரு இன்ஸ் பெக்டர் தலைமையிலான 12 பேர் கொண்ட தேசிய பாதுகாப்பு படை வீரர்களும் (கறுப்பு பூனை படையினர்) பாதுகாக்கிறார்கள்'' என்று பாதுகாப்பு படையினர் விவரங்களை கூறினார்கள். மொட்டைக் கடிதங்களை வைத்து சீரியஸான பாதுகாப்பு விஷயத்தில் "ஜெ' அரசியல் செய்வதாகவே மத்திய உளவுப் பிரிவினரே கருதுகின்றார்கள்.

-சகா

நான்கு வகை!



எக்ஸ், ஒய், இசட், இசட் பிளஸ் என்று நான்கு வகையான பாதுகாப்பினை அளித்து வருகிறது செக்யூரிட்டி பிராஞ்ச். சாதாரண மிரட்டல் இருப்பவர்களுக்கு எக்ஸ் பிரிவு பாதுகாப்பும், அமைச்சர்கள், நீதிபதிகள், தூதரக அதிகாரிகள் உள்ளிட்டவர்களுக்கு ஒய் பிரிவு பாதுகாப்பும், ஆபத்தின் தன்மை கொஞ்சம் அதிகமாக இருக்கிறவர்களுக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படுகிறது. இசட் பிரிவு பாதுகாப்பில் துணை முதல்வர் ஸ்டாலின், முன்னாள் படைத்தளபதி பத்மநாபன், சுப்ரமணியசாமி மூன்று பேரும் இருக்கிறார்களாம். எக்ஸ் மற்றும் ஒய் பிரிவு இரண்டிலுமாக சேர்த்து 230 பேருக்கு பாதுகாப்பு அளித்து வருகிறது செக்யூரிட்டி பிராஞ்ச்.

விழித்துக் கொண்ட காம உலகம்! -மரண கானா விஜி


மரணத்தை அடிக்கடி பாத்து பழகிப் போய்ட்ட எனக்கு, மனசுங்கிறதே மரத்துப் போய்டுச்சு. சாவை பாத்தா எந்த சஞ்சலமும் ஏற்படறதே இல்ல. இப்படி தறிகெட்டுப் போன நான், அடிக்கடி ஜெயிலுக்குப் போற நெலமையும் வந்துச்சு. துட்டுக்காக, பொய்க் கேஸை ஒத்துக்கிட்டு ஜெயிலுக்குப் போவேன். 15 நாள் உள்ளே இருந்துட்டு வெளியே வந்துடுவேன்.

ஜெயில்லயும் நான் சும்மா இருந்தது கெடையாது. சாவை பத்தி கானா கட்டுவேன். ஜெயிலே ரசிக்கும். கைதி கள்லாம், "பாடுறா விஜி... பாடுறா!'ன்னு கைத்தட்டுவாங்கோ. ஒரு கானா பாடுனா... ஆயிரம், ரெண்டாயிரம்னு ரூவா கெடைக்கும். கைதிங்க அவங்ககிட்டே இருக்கிற காசை கொடுப்பாங்க. அதுதான் இந்த பணம்... அதனால எனக்கு ஜெயில்ல இருக்கிற ஃபீலிங்கே இருக்காது. ஜெயில்லயும் எனக்கு சில உறவுகள் கெடைச்சது. அந்த உறவுகளும் ஒரு கட்டத்துல செத்து போனது. அதையெல்லாம் என் மனசு ஈஸியா எடுத்துக்கிட்டது. அதுக்குப் பெறகு நான் ஜெயிலுக் குப் போறதே இல்லே. எல்லாத்தையும் விட்டுட்டேன்.

அப்புறம்தான் சாவு நடக்கிற வீடுகள்ல மரண கானா பாடறதுன்னு முடிவு பண்ணி பாட ஆரம்பிச்சேன். ராத்திரி முழுக்க மரண கானா பாட கூப்பிடுவாங்க. விடிய... விடிய... பாடிக்கிட்டே இருப்பேன். தொடர்ந்து 9 மணி நேரம் பாடுவேன். இந்த 9 மணி நேரத்துல, 24 கதைகள் என் கானா வுல சொல்லுவேன். எல்லா கதைகளுமே கறுப்பு பறையன் சொல்லிக் கொடுத்த மரண சித்தாந்தங்கள்தான் அடங்கியிருக்கும். ஒவ் வொரு சாவு வீட்லயும் எனக்கு ஒவ்வொரு அனுபவம் கெடைச்சது. அந்த அனுபவ மெல்லாம் ஜீரணிக்க முடியாத சோகமா இருக்கும்.

இன்னிக்கு 5 வகையான கானா இருந்தாலும் ஒரிஜினல் கானாங் கிறது மரண கானாதான். அந்த கானாவை பாடுற ஒரே ஆள் தமிழ்நாட்டுலயே நான் மட்டும்தான்.

கானாங்கிறதும் ஒரு மிகப் பெரிய இசை வடிவம்தான். ஆனா, ஒரிஜினல் கானாவை திருடி அதுக்கு மியூசிக் போட்டு பொழைச்சிக்கிட்டு இருக்காங்க சினிமாக்காரங்க. இன்னிக்கு சினிமாவுல வர்ற கானா எதுவும் உண்மையான கானாவோ கானா வடிவமோ கெடையாது. ரசினிகாந்த்தின் பாச்சா பாரு... பாச்சா பாரு... பாட்டு, நாக்க முக்க... நாக்க முக்க... பாட்டு எல்லாமே கானாவுல இருந்து திருடியதுதான்.

கானாங்கிற இசை வடி வத்தை மேடை இசை கச் சேரிகள்ல கொண்டு வரணும்னு ஆசைப்பட் டேன். இதுக்காக, கர்நாடக கச்சேரி நடக்கும் சபாக்கள அணுகி, கானாவுக்கு வாய்ப்புக் கேட்டு அலஞ்சேன். ஆனா, ரெண்டு காலும் சூம்பிப் போன என் உருவத்தையும் அழுக்குப் படிஞ்ச துணிமணிகளையும் பாத்து எல்லாருமே என்னை தொரத்தி அடிச்சாங்க. எல்லா எடத்துலயும் பாப்பானுங்க ஆதிக்கம்தான் இருந்துச்சு. தமிழிசையை அனுமதிக்காதவங்க என் மரண கானாவையா மேடை ஏத்துவாங்கன்னு ஆத்திரமெல்லாம் அப்போ வந்துச்சு.

இதுக்காக ஒருமுறை குன்னக்குடி வைத்தியநாதனை நான் பார்த்தப்போ, "ஏய்... ஏய்... வெளியே போ. மொதல்ல குளிச்சிட்டு வா! குளிக்க வழியில்லாதவனுக்கெல்லாம் எதுக்குடா இசை'ன்னு சொல்லி தொரத்தினாரு. அடுத்த நாளு குளிச்சிட்டு போனேன்.

"கானாங்கிறது சேரில பாடுறது. அது கேவலமானது. நீ, சங்கீதம் கத்துக்கிட்டு வா! அப்புறம் கானாங்கிற மசிர பத்தி பேசலாம்'ன்னாரு. அதுக்கு நான், "உங்க சங்கீதத்துக்குள்லெல்லாம் கானா அடங்காது. சங்கீதம் வேற, கானா வேற. என்னால சங்கீதம் கத்துக்க முடியும். அப்படி கத்துக்கிட்டா சங்கீதம்தான் இருக்கும் கானா இருக்காது'ன்னு கத்திட்டு வந்தேன்.

இப்படி ஏகப்பட்ட சோக அனுபவம் கிடைச்சது. அந்த கோவத்துலதான் கர்நாடக சங்கீதத்துக்கு போட்டியா... நானும் கானாவுல நிறைய ராகத்தைப் பிரிச்சேன். சங்கீதத்துல சரிகமபதநின்னு பிரிச்சாங்க. நான் அத கானாவுல எடுப்பு, தொடுப்பு, முடிப்புன்னு பிரிச் சேன். அவங்க தவள கல்யாணி ராகம்னாங்க. அதுக்குப் போட்டியா சட்டி முனியம்மா ராகத்தை வெச்சேன். சிந்து பைரவின்னாங்க. நான் குண்டு திருநான்னு ராகம் போட்டேன். பஞ்ச ரத்ன கீர்த்தனைன்னாங்க. நானோ கஞ்சாரத்ன கீர்த்தனை உருவாக்குனேன். பெயர்தான் இப்படி ஏட்டிக்குப் போட்டியா இருக்கும். ஆனா, அர்த் தங்கள்லாம் கர்நாடக இசையை விட ஒயர்ந்ததா இருக்கும்.

இப்படியெல்லாம் ராகங்களை உருவாக்கி கர்நாடக இசையை... ஆதிக்கத்தை ஒழிக்க மரண வீடுகள்ல கானா பாடுறதையே என்னோட வாழ்க்கையா மாத்திக்கிட்டேன். இதுவரை 3000-த்துக் கும் அதிகமான வீடுகள்ல பாடியிருக் கேன். என்னை அறிஞ்ச அய்யா வி.கே.டி. பாலன், என்னை வெளி உலகத்துக்கு அடையாளப்படுத்தினாரு. அதன் பெறகு முற்போக்கு எழுத்தாளர் சங்கமும், திராவிடர் கழகமும், கூத்துப்பட்டறையும் என்னை ஆதரிச்சி, அரவணைச்சி முற் போக்கு மேடைகள் அமைச்சு கொடுத் தாங்கோ. இந்த மேடைகள்ல அய்யா பெரியாரின் தத்துவங்களையும் கானா வடிவத்துல பாடுனேன். அது மட்டுமில் லாம பார்ப்பன இசைக்கு எதிரா அதனை கிழிக்கிற விதத்துல இந்த மேடைகள பயன்படுத்திக்கிட்டேன். விளிம்பு நிலை மக்களின் குரலா என் மரணகானா ஒலிச் சிக்கிட்டு இருந்தது. என் பணியைப் பாத்து, கானாவைக் கேட்டு மனம் உருகிய அய்யா தி.க.வீரமணி, எனக்காக ஒரு பாராட்டு விழா நடத்தி எனக்கு பெரியார் விருது கொடுத்து கௌரவிச்சாரு. அதே மாதிரி, என்னப் பத்தி தெரிஞ்சுக்கிட்ட கனிமொழி அவர்கள் சங்கம நிகழ்வில் எனக்கு வாய்ப்பு தந்து பெருமைப் படுத்தினாங்க. இந்த வாய்ப்புகள்தான் இன்னிக்கு கல்லூரிகளிலும் பல்கலைக் கழகத்திலும் படிக்கும் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை ஊக்கப்பாடல்களைப் பாடுபவனாக வலம் வருகிறேன்'' என்று நீண்டநேரம் மூச்சுவிடாமல் நம்மிடம் தன்னைப் பற்றி பகிர்ந்துகொண்டார் விஜி.

""நான் சொல்றதுக்கு நெறைய இருக்கு. ஆனா, அதையெல்லாம் தாங்கிக் கிற மனவலிமை உங்களுக்கு இருக்காது. வேறொரு சந்தர்ப்பத்துல நெறைய பேசறேன்.

இதுவரை நிஜ மனுசங்களோட சாவைப் பத்தி நெறைய சொல்லியிருக்கேன். ஆனா, என்னையும் பாதிச்ச ஒரு மரணம் இருக்கு. அதுதான்... சினி மாங்கிற நெழல் உலக அழகி சில்க்கின் சாவுதான். நடிகைகளிலே எனக்குப் பிடிச்ச முகம் சில்க்கோட மொகம்தான். அந்த அழகிய பார்த்துடணும்னு ரொம்ப நாள் முயற்சி பண்ணியிருக்கேன். ஆனா முடியலை. ஒருநா சில்க் செத்துட்டதா கேள்விப்பட்டு துடிச்சிட்டேன்.

சாவுலயாவது அந்த மொகத்தை தரிசிச்சிடணும்னு சில்க் வீட்டுக்குப் போனேன். உள்ளே விடாம தொரத்தி அடிச்சாங்க. கோபம் கோபமா வந்துச்சு. கோபம் வந்தா என்னால என்ன பண்ண முடியும்? அழுதுக் கிட்டே இருந்தேன். வி.ஆர்.புரம் சுடுகாட்டுக்குத்தான் சில்க்கின் பாடி வருதுன்னு தெரிஞ்சிக்கிட்டு முன்கூட்டியே அங்கு போயிட் டேன். அதே மாதிரி வந்துச்சு சில்க்கோட பாடி. ஏனோ... ஒண்ணு, ரெண்டு நடிகர்கள்தான் வந்திருந்தாங்க. சில்க்கை பொணமா பார்த்து தாங்க முடி யாம விம்மி விம்மி அழுதேன். அவ கால தொட்டு கும்பிட நகர்ந்து நகர்ந்து போனேன். அங்கிருந்த தாடிக்காரன் விடல. என்னை மெரட்டினான். வெளியே போடான்னு சத்தம் போட்டான்.

அதுவரைக்கும் பொறுமையா இருந்த நான் ஆவேசப்பட்டேன். தாடிக்காரன்ட்ட, "யோவ்... இங்கு நான்தான் வெட்டியான். நான் பாட்டுப் பாடாம எரிக்க முடியாது'ன்னு நான் அவன மிரட்டினேன். அங்கிருந்த பொணம் எரிக்கும் குணாவும் இத ஆமோதிச்சாரு. அதுக்குப் பெறகு தாடிக்காரன் என்னை தடுக்கல.

சில்க்கின் கால்மாட்டில் உட்கார்ந்து, அந்தக் கால தொட்டுக் கும்பிட்டுட்டு... பாட ஆரம்பிச்சேன். சில்க்கைப் பத்தி எப்படியோ பாட ஆரம்பிச்ச நான், "அழகுப் பெட்டகம் உறங்கிவிட்டது, காம உலகம் விழித்துக் கொண் டது'ன்னு என் மரண கானாவை முடிச்சேன். தாடிக்காரன் கண்ணிலிருந்து கண்ணீர் வழிஞ் சது. ரொம்ப நாளைக் குப் பிறகு அன்னிக்கு நான் அழுதேன்'' என்று பழைய சம்பவங்களில் ஆழ்ந்துபோன விஜி சோகமயமானார்.

கண்களைத் துடைத் துக்கொண்டு மீண்டும் நம்மிடம் பேசிய விஜி, ""உலக சித்தாந்தங் களுக்கு முன் என் மரண சித்தாந்தங் களை வைத்து கானா எனும் கலை மீது நம்பிக்கை கொண்டு அதுலயே வாழ்ந்துக் கிட்டு இருக்கேன். கடந்த 30 வருட காலங்கள்ல நான் ஒரு கானா கலைஞனா வாழ்ந்ததைவிட குற்றவாளியா வாழ்ந்ததுதான் அதிகம். அந்த கசப்பையெல்லாம் மறக்க நெனைக்கிறேன். மனுச வாழ்க்கையில வெளியே தெரியாத, காட்டப்படாத இன்னொரு பக்கத்தையும் வலியையும் இந்த ஒலகம் தெரிஞ்சிக்கிடட்டும். அதுமூலம் என் மனசுல இருக்கிற ரணம், வேதனை குறையட்டும்ங் கிறதுக்காகத்தான் நக்கீரனிடம் என்னைப் பத்தி பகிர்ந்துக்கிட்டேன்.

கடைசியா நான் வேண்டிக்கிறதெல்லாம்... என் வாழ்க்கையில இன்னொரு விஜியை நான் சந்திக்கக்கூடாது. ஆனா... அய்யா வி.கே.டி. பாலனைப் போல ஆயிரம் பேரை நான் சந்திக்கணும். இது என் ஆசை. நான் செத்துப் போயிட் டேன்னு என்னைக் காவது கேள்விப் பட்டா... எனக்காக நக்கீரன் வாசகர்கள் ரெண்டு சொட்டு கண்ணீர் சிந்துவாங்க. அது போதும் எனக்கு'' என்று முடித்தார் ரொம்பவும் உணர்ச்சி வயப்பட்டவராக மரணகானா விஜி.

கற்புதான் குருதட்சணையா? கொந்தளிக்கும் மாணவிகள்!


நமது செல்போனில் பதட்டத்தோடு வந்த அந்தப் பெண்குரல்...’’""நர்ஸிங் கல்லூரி மாணவி சாய்னா பேச றேன். நக்கீரன் மூலம் எங்க கல்லூரி தாளாளரின் முகத்திரையைக் கிழிக்க விரும்பறேன். உங்களைச் சந்திக்கணும்'' என்றார் அழுகை கலந்த குரலில்.

"பதட்டப்படாதேம்மா. எப்ப வேண்டு மானாலும் சந்திக்கலாம்'’என்று ஆறுதல் படுத்தினோம். அடுத்த கொஞ்ச நேரத்தில் தன் வாப்பா அப்துல் ரஹீத்துடன் நம்மை சந்தித்தார் சாய்னா. என்ன நடந்தது? என்றோம். 
தனக்கு நேர்ந்த சங்கட அனுபவங்கள் குறித்து விவரிக்க ஆரம்பித்தார் சாய்னா. ""எனக்கு சொந்த ஊர் குடியாத்தம். வாப்பா.. எங்கவூர் மசூதியில் வேலை பாக்கறார். நர்ஸிங் படிச்சி... அன்னை தெரசா மாதிரி... நோயாளிகளுக்கு சேவை பண்ணணும் என்பதுதான் என் லட்சியம். எங்க வாப்பாவும் இதுக்கு ஓ.கே. சொல்லிட்டார். இங்க தமிழ்நாட்டில் இருக்கும் நர்ஸிங் கல்லூரிகள் நன்கொடைகளை அதிகமா கேட்டுச்சி. அப்ப என் தோழிகள்... ஆந்திர மாநில கல்லூரிகள்ல நன்கொடை குறைவு. அதேபோல்.. கட்டணத்தை வசதிக்குத் தகுந்த மாதிரி... கொஞ்ச கொஞ்சமா கட்டலாம்னு சொன்னாங்க. அதைக்கேட்டு சந்தோசமான நான்... திருப்பதியில் இருக்கும் வேதா நர்ஸிங் கல்லூரிக்கு அப்ளிகேஷன் போட்டேன். எனக்கும் சீட் கிடைச்சிது. ரொம்ப சந்தோசமா... அந்தக் கல்லூரியில் போய்ச் சேர்ந்தேன். அங்க என் சந்தோசம் ஒருவாரம் கூட நீடிக்கலை. காரணம், அங்க சேர்ந்தப்பவே என் சீனியர் மாணவிகள் என்னைத் தனியாக் கூப்பிட்டு... "இங்க இருக்கும் கரஸ்பாண்டண்ட் வேதநாயகம் மோசமான ஜொள் பார்ட்டி. அவர்ட்ட ரொம்ப... ஜாக்கிரதையா இருக்கணும்'னு எச்சரிக்கை கொடுத்தாங்க.


அவங்க சொன்னமாதிரியே... கரஸ்பாண்டண்ட் வகுப்பில் டபிள் மீனிங்கில் பேசினார். சிலநேரம் வல்கராவும் கமெண்ட் அடிப்பார். ஹாஸ்டல தங்கி இருக்கும் மாணவிகளை அடிக்கடி வீட்டுக்குக் கூப்பிட்டு.. வீட்டு வேலைகளைச் செய்யச் சொல்வார். அப்ப அவர் நிறைய சில்மிஷங்களும் பண்ணுவாராம். பல மாணவிகள் இதைச் சொல்லி அழுதிருக்காங்க. அவர் பலவிதமா எனக்குத் தூண்டில் போட்ட போதும் ரெண்டு வருசம் எப்படியோ சமாளிச்சிட் டேன். இப்ப ஃபைனல் இயர். இதற்கிடையில் இதே கல்லூரியில் படிக்கும் எங்க மாமா பையனை எங்க வீட்டில் எனக்கு நிக்காஹ் பண்ணிவச்சிட்டாங்க. எக்ஸாம் நெருங்கிய நேரத்தில் பலருக்கும் ஹால் டிக்கட் கொடுத்த கரஸ்பாண்டண்ட் எனக்கு மட்டும் கொடுக்காம இழுத்தடிச்சார்.. அதைக் கேட்டு நான் அவர் அறைக்குப் போனேன். எடுத்த எடுப்பிலேயே "நீயும் உன் ஹஸ்பண்டும் ஒழுங்கா எக்ஸாமை எழுதி நல்லபடியா ஊர்ப்போய்ச் சேரணும்னா... நான் சொல்றதைக் கேட்கணும். உன்னை நினைச்சி நான் பலநாள் தூங்கலை. உன் அழகு என்னை பைத்தியமா ஆக்கிடிச்சி. ஒருநாள்.. ஒரே ஒருநாள் என் ஆசையை நீ தீர்த்துவச்சா... அடுத்த நிமிஷமே ஹால் டிக்கட் தருவேன். இல்லைன்னா... உன்னைப்பத்தி தப்புத் தப்பா வதந்தி பரப்பி... உன்னை வாழவிடாமப் பண்ணிடு வேன்'னு வில்லன் கணக்கா.. வெட்கமில்லாமப் பேசினார். எனக்கு அழுகை வந்துடுச்சி. அப்படியே வெளில ஓடிவந்துட்டேன்...''’என்று வழிந்த கண்ணீரைத் துடைத்துகொண்டவர்..

""மேதாவி வேசத்திலிருக்கும் அந்த அயோக்கியனின் முகமூடியைக் கிழிக்கணும். என்னோட எக்ஸாமை நான் நல்லபடியா முடிச்சி.. நர்ஸ் சேவையை வாழ்நாள் முழுக்கத் தொடரணும். இதுதான் என் விருப்பம். நம்ம வேலூர் கலெக்டர்ட்ட கூட... அந்த கேடுகெட்ட கரஸ்பாண்டண்ட் பத்தி புகார் கொடுத்திருக்கேன். எனக்கு நீதி கிடைக்கும் வரை ஓயமாட்டேன்''’’ என்றார் அழுத்தமாக.
அந்தக் கல்லூரி கரஸ்பாண்டண்ட் வேதநாயகத்தைப் பலமுறை தொடர்புகொள்ள முயன்றும்.. ’அவர் பிஸி. வெளியே போயி ருக்கிறார்’ என்ற பதிலையே காலர் ஐ.டி.போல சொல்லிக் கொண்டிருந்தது அந்தக் கல்லூரி நிர்வாகம்.

இது குறித்து வேலூர் ஆட்சியர் ராஜேந்திரனிடன் நாம் கேட்டபோது ‘""சாய்னாவின் புகார் திடுக்கிடவைத்தது. இது குறித்து சித்தூர் கலெக்டருக்கு இவரது புகார் மனுவை அனுப்பி நடவடிக்கை எடுக்கும்படி கேட்டிருக்கிறேன். கல்லூரிக்குள்ளேயே இப்படி காமப் பிசாசுகள் என்றால்... சங்கடமாகத்தான் இருக்கிறது''’என்றார் வருத்தம் இழையோட.

இந்த நிலையில்.... நமது நண்பர் ஒருவர் மூலம் கடலூர் பகுதியைச் சேர்ந்த அந்த இரண்டு கல்லூரி மாணவிகளும் நம்மைச் சந்தித்தனர். அவர்கள் முகத்தில் கவலையான கவலை. அவர்களின் புகாரும் இதே ரகம். 

அவர்களை விசாரித்தபோது... ""கடலூரில் இருக்கும் ஒரு கிறிஸ்த்தவக் கல்லூரியில் படிக்கிறோம். எங்க கல்லூரியில்.. தனது பெயரில் அருமையை வைத்திருக்கும் வசதிப் பேராசிரியர்... துறைத் தலைவரா இருக்கார். அவரிடமும் ஜானின் மகன் என்ற பொருள் வரக்கூடிய பெயரையுடைய பேராசிரியரிடமும் நாங்க படாதபாடு படறோம். புராஜக்ட் ஒர்க்குக்கு கையெழுத்து வாங்கப்போனா.... அனுசரிச்சிப்போனாதான் கையெ ழுத்துன்னு கட்டிப்பிடிக்கறாங்க. மிரட்டி மிரட்டியே தப்புத்தப்பா நடந்துக்கறாங்க. குறிப்பா துறைத் தலைவர் வீட்டில் பெரும்பாலும் அவர் மனைவி இருக்கமாட்டாங்க. அதனால் மகள் வயசு உள்ள மாணவிகளை எல்லாம் பலவந்தமா வீட்டுக்கு கூட்டிட்டுப்போய்.... விதவிதமா தன் ஆசையைத் தீர்த்துக்குவார். 

அழகான மாணவிகளைப் பார்த்தா எதையாவது சொல்லி... தங்கள் சபலத்தை தீர்த்துக்கறதில் இவங்க ரெண்டுபேருமே கில்லாடிங்க. போன வருசம் டூர் போனப்ப... இந்த மன்மதப் பேராசிரியர்கள் பல மாணவிகளைத் தனித்தனியா கூட்டிட்டுப்போய் அங்க இங்க தொட்டுத் தடவி... எல்லா அசிங்கமும் பண்ணி... செல்போன்லயும் படம்பிடிச்சாங்க. அதே போல் இப்ப வந்திருக்கும் பாதரும்.. அந்த விஷயத்தில் பிளேபாயா இருக்கார். படிக்கவரும் மாணவிகள் வாழ்க்கையில் இவர்கள் விளையாடுவது எந்த வகையில் நியாயம்? இவங்க அட்டூழி யம் நாளுக்கு நாள் அதி கரிச்சிக் கிட்டே இருக்கு. இவங்களை யாரு தட்டிக்கேட்கறது.?''’’ என குமுறி யவர்கள்....

""எங்களுக்கு மட்டும் இல்லை. திருவண்ணாமலை கடவுள் பெயரில் இருக்கும் அந்த கல்வி உலகத்தில் படிக்கும் மாணவிகளையும்... சில பேராசிரிய மிருகங்கள் வேட் டையாடிக்கிட்டு இருக்கு. என் தோழி ஒருத்தியை போனில் பேசச் சொல்றேன் அவ கிட்டயும் விசாரிங்க''’ என்றபடி அந்த மாணவியை செல்போன் லைனில் பிடித்துக்கொடுத்தனர்.

லைனில் வந்த அந்த மாணவி...

""எங்க கல்லூரியில் மகிழ்ச்சியானவரும்... அரச மோகனமானவரும் பேராசிரியரா இருக்காங்க. இவங்க மாணவிகளை பாலியல் ரீதியாய்ப் பாடாய்ப் படுத்திக்கிட்டு இருக்காங்க. அவங்க எந்த மாணவியைக் குறிவைக்கிறாங்களோ அவங்க.. இவங்க கூப்பிடற இடத்துக்கு வந்தாகணும். இல்லைன்னா... எல்லா வகையிலும் பழிவாங்கிடுவாங்க. சமீபத்தில்... நாங்க நெட்டை குட்டைன்னு பட்டப்பெயர் வச்சிக்கூப்பிடும் ரெண்டு மாணவிகளை அவங்க வற்புறுத்தி... பிச்சாவரத்துக்குக் கூட்டிட்டுப்போனாங்க. குட்டையான மாணவிக்கு தங்கமான பெயர். ஆள் சிவப்பா, கொஞ்சம் புஷ்டியா இருப்பா. அந்த நெட்டை மாணவிக்கோ ஒரு மிடுக்கான கவிஞரின் பெயர். ஆள் கருப்பா இருந்தாலும் வளர்ந்து வாட்டசாட்டமா இருப்பா. இவங்களை அங்க இருக்கும் விருந்தினர் மாளிகைக்கு கூட்டிட்டுப் போயிருக்காங்க. அப்ப ஒரு பேராசிரியர் தன் செல்போன்ல... ஒரு மாணவியை அங்க அங்கமா... படம் எடுக்க... அந்த மாணவி... என் வாழ்க்கையை ஏன் சார் வீணாக்கறீங்கன்னு அழுதிருக்கா. அவ அழுகையைப் பார்த்து பயந்துபோன அந்த பேராசிரியர்... சரி இதோ டெலிட் பண்ணிடறேன்னு அவ எதிர்லயே அழிச்சிருக்கார். அப்பவும் அந்தப் பொண்ணு... அழிச்சாலும் படத்தை ரெகவரி பண்ணமுடியும். எனக்கு எதிர்காலத்தில் பிரச்சினை வந்தா என்ன பண்றதுன்னு... கதற... "உனக்கு நிறைய மார்க் போடறேன். ஏன் கவலைப்படறே. இதை நானும் மறந்துடறேன், நீயும் மறந்துடு'ன்னு சொல்லியிருக்கார். பாடம் போதிக்கக்கூடிய புனிதமான தொழிலில் இருப்பவர்கள் செய்யக்கூடிய செய்கையா இது?''’என்றார் கொதிப்பாய்.

இவர்கள் சொன்ன தகவல்களைக் கேட்டு கலவரமான நாம்.. சிதம்பரத்தில் இருக்கும் அந்த எஸ்.ஐ.யைத் தொடர்பு கொண்டு... இது குறித்தெல்லாம் கேட்க...

""கல்விக்கூடங்கள் சமீபகாலமா காமக்கூடங்களா மாறிக்கிட்டு வருது. பிச்சாவரத்துக்கு போறதோட இதே சிதம்பரத்தில் இருக்கும் லாட்ஜ்களில் ரூம்போட்டும் மாணவிகளை இப்படிப் பட்ட பேராசிரியர்கள் வேட்டை யாடறாங்க. ஒரு தடவை நாங்க ரெய்டுக்குப் போனப்ப.... ஒரு லாட்ஜில் மாணவிகளோட தங்கியிருந்த பேராசிரி யரைக் கையும் களவுமா பிடிச்சோம். அந்த மாணவிகள்... வீட்டுக்குத் தெரிஞ்சா தற்கொலை பண்ணிக்குவோம்னு கதற அவங்களுக்கு புத்தி சொல்லி அனுப்பி வச்சோம். அந்தப் பேராசிரியருக்கு மட்டும் நாலு அறைகொடுத்து எச்சரிச்சோம். இதேபோல்.... இன்னொரு ரெய்டில் டி.டி.யில் ஒர்க் பண்ணும் 35 வயசு பேராசிரியை ஒருத்தர்... 19 வயசு மாணவனோட மாட்டினாங்க. அந்தப் பேராசிரி யை இனி இப்படி செய்யமாட்டேன். என்னை விட்டுடுங்கன்னு காலில் விழுந்து கதறினாங்க. 

பையனோ மேடம்தான் வற்புறுத்தி அழைச்சிக்கிட்டு வந்தாங்கன்னு கண்ணைக் கசக்கினான்.... அடக் கருமமேன்னு ரெண்டுபேரையும் துரத்திவிட்டோம். காலம் எப்படியெல்லாம் மாறிப்போச்சு பாருங்க'' என்று அதிரவைத்தார்.

இத்தகைய கொடு மைகளுக்கு யார் முற் றுப்புள்ளி வைப்பது?

திரைப்படங்களுக்கான தேடியந்திரம்


கேன் ஐ ஸ்டிரிம் இட் போலவே வாட்ச்லே தளமும் எந்த படத்தை எங்கே பார்க்கலாம் என்னும் கேள்விக்கு பதில் சொல்கிறது. திரைப்படங்கள் மட்டும் அல்ல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் எங்கே பார்க்கலாம் என்று சொல்கிறது.

திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கான தேடியந்திரம் என்றும் இதனை சொல்லலாம்.

எந்த படத்தை பார்க்க விருப்பமோ அந்த படத்தின் பெயரை சமர்பித்தால் அந்த படம் எங்கே எல்லாம் பார்க்க கிடைக்கிறது என இந்த தளம் பட்டியல் போடுகிறது. எங்கே எல்லாம் என்பது அமேசானிலா, நெட்பிலிக்சிலா, ஐடியூன்சிலா, ஹுலுவிலா என்பதாகும்.
இவை எல்லாமே படங்களை ஸ்டிரிமிங் அல்லது தரவிறக்க முறையில் இணையத்திலேயே பார்க்க உதவும் சேவையை வழங்கும் இணையதளங்கள்.

நெட்பிலிக்ஸ் அனுமதிக்கப்பட்ட புதிய படங்களை கூட ஸ்டிரிமிங் முறையில் வழங்குகிறது. அமேசான் தளத்திலும் படங்களை வாங்கலாம். யூடியூப்பின் போட்டி தளமான ஹுலுவிலும் படங்களை பார்க்க முடியும்.

ஆப்பிளின் ஐடியூன்ஸ் பிரதானமான பாடல் விற்பனை கடை என்ற போதிலும் படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் இதில் வாங்க முடியும்.

திரையரங்கிற்கு போகாமல் டிவிடியும் வாங்காமல் இருந்த இடத்திலிருந்தே மடிக்கணணி அல்லது கணணியில் விரும்பும் படத்தை பார்க்க நினைக்கும் ரசிகர்கள் இந்த தளங்கள் ஏதாவது ஒன்றில் அந்த படம் இருக்கிறதா என்று பார்த்து வாங்கி கொள்வார்கள். பல படங்கள் இலவசமாகவும் கிடைக்கும்.

சில நேரங்களில் எந்த படம் எங்கே கிடைக்கிறது என்று தெரியாது. நெட்பிலிக்சில் ஒரு படத்தை தேடிக்கொண்டிருந்தால் அந்த படம் ஹுலுவில் கிடைக்கும். இந்த விடயம் தெரியாமல் நெட்பிலிக்ஸ் ரசிகர்கள் தவித்து கொண்டிருப்பார்கள். அதே போல சில படங்கள் அமேசான் இணைய கடையில் கிடைக்கலாம். சில ஐடியூன்சில் கிடைக்கலாம்.

எப்படியும் படத்தை பார்த்து விட வேண்டும் என நினைப்பவர்கள் ஒவ்வொரு தளமாக நுழைந்து தேடிப்பார்க்க வேண்டும். அந்த கஷ்டம் ரசிகர்களுக்கு எதற்கு என கேட்டு படத்தை சொன்னால் அது கிடைக்குமிடத்தை தானே தேடி தருகிறது வாட்ச்லே தளம்.

படத்தின் பெயரை குறிப்பிட்டதுமே அந்த படத்தை எந்த திரைப்பட சேவை தளங்களில் இருந்து வாங்கி கொள்ளலாம் என்று காட்டுவதோடு அப்படி வாங்குவதற்கான இணைப்பையும் அருகிலேயே தருகிறது. தேடியவுடன் அப்படியே கிளிக் செய்து பார்த்து கொள்ளலாம்.

இணையவாசிகள் தங்கள் தேவைக்கு ஏற்ப தேடலை பட்டை தீட்டிக்கொள்ளலாம். உதாரணத்திற்கு இலவசமாக மட்டும் பார்க்க கூடிய இடங்களை காட்ட சொல்லலாம். காசு கொடுக்க தயார் என்றால் கட்டணத்தின் வரம்பையும் குறிப்பிட்டு தேடலாம்.

இதே போலவே தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தேடலாம். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை அவை ஒலிபரப்பாகும் போதே பார்க்க வேண்டும் என்ற அவசியமில்லை.

பெரும்பாலான நிகழ்ச்சிகள் இணைய வடிவில் கிடைக்கின்றன. எப்போது விருப்பமோ அப்போது தரவிறக்கம் செய்து பார்க்கலாம். அத்தகைய நிகழ்ச்சிகள் கிடைக்கும் இடத்தையும் இந்த தளம் காட்டுகிறது.

பிடித்த வீடியோக்களை புக்மார்க் செய்து வைப்பதற்கு

யூடியூப்பில் வீடியோக்களை பார்வையிடும் போது Watch Later என்ற வசதியின் மூலம் அவற்றை பின்னர் பார்த்து ரசிக்கலாம்.

எனினும் யூடியூப் போன்று பிரபலமான Vimeo, TED மற்றும் பேஸ்புக் வீடியோக்களை பின்னர் பார்வையிடுவதற்கு ஏற்றவாறு புக்மார்க் செய்து வைத்தும் பார்க்கலாம்.

இந்த வசதியை http://radbox.me/ எனும் தளம் தருகின்றது.

இத்தளத்தில் பதிவு செய்த பின்னர் வீடியோக்களை புக்மார்க் bookmarklet மூலமாகவும் அல்லது கைபேசி மூலம் பார்க்க விரும்புகிறீர்கள் எனில் வீடியோ யூ.ஆர்.எல் ஐ மின்னஞ்சல் செய்வதன் மூலமும் புக்மார்க் செய்து வைக்கலாம்.

முஸ்லிம் சிறுவர்களை மிரட்டும் வீடியோ!

ரம்ஜான் பிரியாணி வாசனை கூட விலகாத நிலையில்... திருவண்ணாமலை பேருந்து நிலையத்தின் அருகேயுள்ள அந்த மசூதி முன் 23, 15 வயது பிள்ளைகள் கும்பல் கும்பலாய் நின்று எதை யோ பார்த்துக் கொண் டிருந்தார்கள். வண்டி யை நிறுத்தி "என்ன பண்றீங்க?' என அவர் களை நெருங்கியபோது மொபைலில் ஓடிக் கொண்டிருந்த வீடியோ வை முதலில் இருந்து ஓட்டிக் காட்டினார்கள். ஒரு குட்டி சாத்தான் போன்ற உருவம் "ஆ ஊ' என்ற பேக்கிரவுண்ட் வாய்ஸ்சோடு கைகளை வீசிக் கொண்டிருந்தது மிரட்டலாய்.

""பெங்களூர்ல பைசல்ங்கற 13 வயசு பையன் தொழுகைக்கு போகாம வீட்ல உட் கார்ந்து டி.வி. பாத் துக்கிட்டிருந்திருக்கான். அவுங்க அம்மா குரான் புத்தகத்த கைல தந்து தொழுகைக்கு போக சொல்லியிருக்காங்க. இந்த பையன் குரான் புத்தகத்த தள்ளிவிட் டுட்டு போகமாட்டன்னு அடம் புடிச்சிருக்கான். குரான் புத்தகத்த தள்ளி விட்ட கொஞ்ச நேரத் தில இந்த மாதிரி பேயா மாறிப் போயிருக்கான். அந்த வீடியோதான்ணே யிது'' என்றார்கள் சீரியஸாக முகத்தை வைத்துக் கொண்டு. அந்த வீடியோவை முழுவதுமாக உண்மையென நம்பி திகிலடித்துப் போய் நின்றிருந்தார்கள். அப்போது பள்ளிவாசலுக்குள்ளிருந்து தொழுகை முடிந்து வெளியே வந்த முகமது உசேனிடம் இதுகுறித்து நாம் கேட்டபோது ""இந்த வீடியோ கடந்த ஒரு வாரமா எங்க மதத்தைச் சேர்ந்தவங்க மொபைலுக்கு எம்.எம்.எஸ்.ஸா வருது. பசங்க இதப்பாத்துட்டு நைட்ல தூக்கத்துலயிருந்து எழுந்து அலறுதுங்க. சின்ன வயது பசங்க மனதில் ஆழமா பாதிப்ப உண்டாக்கியிருக்கு. இது கிராபிக்ஸ்ன்னு சொன்னாக்கூட நம்ப மாட்டேன்கிறாங்க. ஸ்கூல்ல கூட இதே பேச்சுதான்னு பசங்க சொல்லும்போதுதான் இதோட தாக்கம் புரிந்தது'' என்றார் கவலையாக.
ஆட்டோ டிரைவர் ஷான் பாஷாவோ, ""பசங்க வயது ஆக ஆக தானா மதத்தின் மீதான பற்று அதிகமாகி கடவுளுக்கு செய்ய வேண்டியத செய்வாங்க. ஆனா அத புரிஞ்சிக்காம சில பேர் இப்படி ஒரு வீடியோவ உருவாக்கி, பொய்யா அதற்கு ஒரு கதைய தயார் பண்ணி உலாவவிட்டு பயமுறுத்தி மதத்தின் பேர்ல நம்பிக்கைய வரவழைக்கப் பார்க்கறாங்க. இது எந்த விதத்தில் நியாயம்னு தெரியல'' என்றார் எரிச்சலாய்.

இதுபற்றி இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் மாநில துணை தலைவர் முனீரிடம் கேட்டபோது, ""10 வய துக்கு குறைவானவர்களை தொழுகை செய் யும்படி கட்டாயப்படுத்துவது தவறு. அதோட இளம் பருவத்தினருக்கு தொழுகையின் நன் மைகளை எடுத்துச் சொல்ல வேண்டுமே தவிர பயமுறுத்தி கடவுள் நம்பிக்கையை கொண்டு வரக்கூடாது. இப்படி மிரட்டி வரவைப்பது இஸ்லாத்துக்கு எதிரானது. இந்த மாதிரி வேண்டுமென்றே கிராபிக்ஸ் மூலம் வீடியோக்களை உருவாக்கி பயமுறுத்துவதால் மதமும் வளராது. தொழுகையும் வளராது. கட்டாயப்படுத்தி செய்தால் மதத்தின் பெயர் கெட்டுப் போய் விடும். இதை இப்படி செய்பவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்'' என்றார் அழுத்தமாய்.

"வேலையற்ற வீணர்களின் மூளையற்ற வார்த்தைகளை, வேடிக்கையாகக் கூட நம்பிவிடாதே' என்ற பட்டுக்கோட்டையாரின் பாட்டுவரி எங்கிருந்தோ நம் காதில் வந்து விழத்தொடங்கியது.

சூப்பர் ஸ்டார்க்காக திருமணத்தை தள்ளி வைத்த சினேகா?



‘கோச்சடையான்’ படத்தில் ரஜினிகாந்தின் தங்கையாக சினேகா நடிக்கிறார். ரஜினி மகள் சவுந்தர்யா இயக்கும் படம், ‘கோச்சடையான்’. இதில் ரஜினி ஹீரோவாக நடிக்கிறார். கே.எஸ்.ரவிக்குமார் திரைக்கதை, டைரக்ஷன் மேற்பார்வை செய்கிறார். 

இதில் ரஜினி ஜோடியாக நடிக்க அனுஷ்காவிடம் கேட்டதாகத் தெரிகிறது. இதுபற்றி முடிவு தெரியாத நிலையில், ரஜினி தங்கையாக சினேகா நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் முதல் முறையாக திருமணம் குறித்து பேசிய சினேகா, காதலிப்பது உண்மைதான், ஆனால் திருமணம் இப்போது இல்லை லேட்டாகும் என்று தெரிவித்துள்ளார். ரஜினியின் கோச்சடையானில் சினேகா அவரது தங்கையாக நடிக்கிறார். இதனால்தான் திருமணம் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறுகிறார்கள்.

குடியேற நினைப்பவர்களை ‘மிரட்ட’ வருகிறது புதிய வீடியோ!

நாடுகடத்தப்படும் ஆட்களை வீடியோ படம்பிடித்து இன்டர்நெட்டில் வெளியிடுவதன் மூலம், புதிதாக வரத் திட்டமிடும் ஆட்களுக்கு மிரட்டல் விட ஆஸ்திரேலியா திட்டமிட்டுள்ளது. உரிய அனுமதியின்றி நாட்டுக்குள் வருபவர்களின் கதி இப்படியாகும் என்று புரிய வைப்பதே இதன் நோக்கம் என்றும் கூறப்பட்டுள்ளது.
விசா இன்றி ஆஸ்திரேலியாவுக்கு படகுகளில் வரும் குடியேற்றவாசிகளை, மலேசியாவுக்கு அனுப்பி வைப்பதற்கான ஒப்பந்தம் ஒன்றை ஆஸ்திரேலியா செய்துள்ளது. இந்த ஏற்பாட்டின்படி ஆஸ்திரேலியாவில் குடியேறும் திட்டத்துடன் வந்த 800 பேர் விரைவில் மலேசியாவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
இவர்கள் கப்பல்களில் ஏற்றப்பட்டு நாடுகடத்தப்படும் காட்சியையே வீடியோவில் படம்பிடித்து, இணையத்தில் வெளியிடத் திட்டமிடுகின்றது ஆஸ்திரேலியா.

ஆஸ்திரேலிய குடிவரவுத்துறை அமைச்சர் கிரிஸ் போவன், “இந்த ஒளிப்பதிவு, சட்டவிரோதமாக ஆஸ்திரேலியாவுக்கு வரத் திட்டமிடும் ஆட்களுக்கு கடுமையான சேதியொன்றைச் சொல்லப்போகின்றது. உரிய அனுமதியின்றி இந்த நாட்டுக்குள் நீங்கள் வந்தால், இதே கதிதான் உங்களுக்கும் ஏற்படும் என்பதே அந்த கடுமையான சேதி” என்று ஏ.பி.சி. ரேடியோவில் தெரிவித்துள்ளார்.

கடந்த காலத்திலும் ஆஸ்திரேலியா, சட்டவிரோத குடியேற்றவாசிகளை மிரட்டுவதற்காக சில ஒளிப்பதிவுகளை இணையத்தில் வெளியிட்டுள்ளது. ஆனால், அந்த ஒளிப்பதிவுகள் பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட விளம்பரங்கள் என்ற வகையிலேயே இருந்தன.

இம்முறைதான் முதல் தடவையாக நிஜமான குடியேற்றவாசிகளைப் படம்பிடித்து வெளியிடவுள்ளது.

இதில் சம்பந்தப்பட்டவர்கள், தமது படங்கள் வெளியிடப்படுவதை பிரைவசி ஆக்ட் சட்டப்படி எதிர்த்து சாலஞ்ச் செய்வது சாத்தியமே. படம் பிடிக்கப்படவுள்ளவர்கள் சரியான சட்ட ஆலோசனை பெற்றுச் செயற்பட்டால், படம் பிடிக்கும் திட்டம் ஆஸ்திரேலிய அரசுக்கு சிக்கலை ஏற்படுத்தலாம்.

மயக்கம் என்ன - கலாச்சார சீரழிவு.அதற்கு 15-ந்தேதி வரை தான் ஆயுசு. ஐகோர்ட்டு உத்தரவு

சென்னை சாலி கிராமத்தைச் சேர்ந்த ஷீலா சினி ஆர்ட்ஸ் பட நிறுவனம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் ஒரு மனுதாக்கல் செய்யப்பட்டது. 


அதில் கூறி இருப்பதாவது:-  

மனசு என்ற படத்தை நாங்கள் தயாரித்தோம். இந்த படத்தின் திருட்டு சி.டி. படம் ரிலீசாவதற்கு முன்பே வெளியானதால் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஜெமினி பிக்சர்ஸ் சர்கியூட் நிறுவனத்திடம் ரூ.92 லட்சம் நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடர்ந்தோம். இந்த வழக்கில் ரூ.70 லட்சம் நஷடஈடு கொடுக்கும்படி ஜெமினி பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு கோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால் இதுவரை நஷ்டஈடு கொடுக்கவில்லை. 

இந்தநிலையில், தனுஷ் நடித்த மயக்கம் என்ன படத்தை ஜெமினி பிக்சர்ஸ் சர்கியூட் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அந்த படத்தை முடக்க உத்தரவிடவேண்டும். மேலும், நஷ்டஈட்டை வழங்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. 

இந்த வழக்கை சென்னை ஐகோர்ட்டின், மாஸ்டர் கோர்ட்டு நீதிபதி அருள் விசாரித்து வருகிற 14-ந்தேதிக்குள் மயக்கம் என்ன திரைப்படத்தை முடக்க உத்தரவிட்டார். இந்த வழக்கில் மனுதாரர் சார்பில் வக்கீல் சிவராமன் ஆஜரானார்.

கணவர் என்று நினைத்து வேறொருவர் பைக்கில் ஏறிச்சென்ற பெண்

கணவர் என்று நினைத்து வேறொருவர் பைக்கில் ஏறிச்சென்ற பெண்

ஹெல்மெட் ஏற்படுத்திய காமெடி குழப்பம்


உள்பாவாடை காணாமல் போய்விட்டால் கூட எங்கள் மீது கேஸ் போடுகிறான் : கே.என்.நேரு பேச்சு

திருவாரூர் மாவட்ட திமுக செயலாளர் பூண்டி கலைவாணன் பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கலைவாணன் கைதை கண்டித்து திருவாரூரில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.; திமுக தலைவர் கலைஞர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கே.என்.நேரு கலந்துகொண்டு பேசினார்.
அவர்,’அதிமுக அரசு போடப்படுகின்ற வழக்குகளில் முதன் முதலில் ஆரம்பித்தது திருச்சியில்தான்.நீதிமன்றங்களில் தீர்ப்பு உங்களுக்கு எதிராகவும், எங்களுக்கு சாதகமாகவும் வரும் காலம் வரும்.

சினிமாவில்,’உள்பாவாடை காணாமல் போய்விட்டால் கூட எங்கள் மீது கேஸ் போடுகிறான்’’ என்று சொல்லுவான். அது மாதிரி நீங்கள் உண்மை நிரூபிக்கப்படாமல் யார் மீதும் அபாண்டமாக குற்றம் சுமத்தி வழக்கு போடுகிறார்கள்.
அதனால்தான், இவர்களுக்கு வேறு வேலையே இல்லையா? இதுதான் வேலையா? என்று மக்கள் கேட்கிறார்கள்.
திமுக அரசை நசுக்க பார்க்கிறீர்கள்.& எவ்வளவுக்கு எவ்வளவு எங்களை நசுக்குகிறீர்களோ, அவ்வளவுக்கு அவ்வளவு பந்து போல எழுந்திருப்பான் திராவிட முன்னேற்ற கழகத்தை சேர்ந்தவன்’’ என்று பேசினார்.

ஈவ்டீசிங் +2 மாணவியை கார் ஏற்றிக் கொன்ற மருத்துவ கல்லூரி மாணவர் கைது

ஈவ்டீசிங் பிரச்சனையால் சைக்கிளில் சென்ற +2 மாணவி மீது காரை ஏற்றி கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட சென்னை மருத்துவக் கல்லூரி மாணவனை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை தியாகராஜ நகரைச் சேர்ந்த செய்யது முகமது என்பவரது மகள் மைமூன் சர்மிளா(17). அதே பகுதியில் உள்ள மெட்ரிக் பள்ளியில் +2 படித்து வந்தார். நேற்று முன்தினம் பள்ளி முடிந்து சைக்கிளில் மைமூன் சர்மிளா வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது மைமூன் சர்மிளாவின் சைக்கிள் மீது கார் ஒன்று மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் படுகாயமடைந்த அவர் வண்ணார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் இறந்தார். 

மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில் மைமூன் சர்மிளா மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற காரை ஓட்டியவர் ஒரு கல்லூரி மாணவன் என்பது தெரிய வந்தது.

இந்த தகவலை அறிந்த மைமூன் சர்மிளா படித்து வந்த பள்ளியைச் சேர்ந்த மாணவ, மாணவியர் தனியார் மருத்துவமனை முன் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் காரை ஓட்டி வந்த கல்லூரி மாணவனை உடனடியாக கைது செய்யக் கோரி சாலை மறியிலும் ஈடுபட்டனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

அதன்பிறகு நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்த பள்ளி மாணவ, மாணவியர் அங்கே முற்றுகை போராட்டம் நடத்தினர். அப்போது பள்ளி மாணவ, மாணவியர் சார்பாக கமிஷனர் அலுவலகத்தில் மனு ஒன்று கொடுக்கப்பட்டது.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது,

பள்ளி மாணவி மைமூன் சர்மிளா சென்ற சைக்கிளின் மீது ஒரு கல்லூரி மாணவர் காரை மோதிவிட்டு தப்பிச் சென்றுள்ளார். இதில் மைமூன் சர்மிளா படுகாயமடைந்து இறந்துவிட்டார். தற்போது தலைமறைவாகி உள்ள அந்த கல்லூரி மாணவர் சர்மிளாவை பல நாட்களாக பின் தொடர்ந்து வந்து கிண்டல் செய்தவர்.

சம்பவத்தன்று புதிய காரில் வந்த அந்த மாணவர் வழக்கம் போல சர்மிளாவை கிண்டல் செய்தார். அதில் பயந்து போன சர்மிளா, சைக்கிளை வேகமாக ஓட்டிச் சென்றார். அப்போது அந்த மாணவர் சர்மிளாவின் சைக்கிள் மீது காரை மோதவிட்டுள்ளார். இதில் படுகாயமடைந்த சர்மிளா இறந்ததால் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி, அந்த மாணவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

சர்மிளா மீது மோதிவிட்டு நிறுத்தாமல் சென்ற கார் மானூரில் உள்ள ஒரு ஒதுக்குபுறமான இடத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. அந்த காரை போலீசார் பறிமுதல் செய்தனர். நெல்லை மாநகர போக்குவரத்து போலீசார் நடத்திய விசாரணையில், விபத்தை ஏற்படுத்திய காரை ஓட்டியவர் மானூரைச் சேர்ந்த டாக்டர் ஒருவரின் மகன் மோனீஸ் ரேஷர்(19) என்பதும், அவர் சென்னை தனியார் மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருவதும் தெரிய வந்தது. இதனையடுத்து மோனீஷ் ரேஷரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து போலீஸ் கமிஷனர் கருணாசாகர் கூறியதாவது,

பள்ளி மாணவ, மாணவியர் அளித்த புகாரின் பேரில் விபத்து வழக்கு, கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது. இந்த புகார் குறித்து விசாரித்து வருகிறோம் என்றார்.

ஹீரோயின் ஷூட்டிங்கில் நடந்த ஆச்சரியம்.


மதூர் பண்டார்கர் தனது ஹீரோயின் படத்தின் ஷூட்டிங்கை அர்ஜுன் ராம்பால், க‌ரீனா கபூரை வைத்து தொடங்கிவிட்டார். ஐஸ்வர்யாராய் அடம்பிடித்தது போல் அவரை கதாநாயகியாக்கியிருந்தால் இந்நேரம் மதூர் தாலாட்டுதான் பாடிக் கொண்டிருக்க வேண்டியிருக்கும்.

சென்ற 26ஆம் தேதி ஹீரோயின் ஷூட்டிங்கில் ராம்பால் தனது பிறந்தநாளுக்கு கேக் வெட்டும் காட்சியை எடுத்தனர். ஆச்ச‌ரியமாக அதேநாள்தான் ராம்பாலின் பிறந்தநாள். மதூர் இது தெ‌ரியாமலே இந்தக் காட்சியை வைத்துள்ளார்.

தர்மேந்திரா வளர்ந்து வரும் காலத்தில் அவரது பிறந்தநாளுக்கு நடிகை மீனா குமா‌ரி கேக் வெட்டினார். அதை இந்தக் காட்சி பிரதிபலிப்பதாக கிசுகிசுக்கிறார்கள். மீனா குமா‌ரியின் பாத்திரத்தில் க‌ரீனா கபூரும் குறிப்பிட்ட காட்சியில் ராம்பாலுடன் நடித்தது குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டு ஸ்கூல்களில் கவர்ச்சியாக ஸ்டைல் உணவுகள்,!

The junk foods in the fancy, colorful wrappers that come to school in many kids’ lunch boxes are way too tempting for our kids to resist. Do you experience after you pack your kid a healthy lunch, and many times it would come back uneaten? When you opened up the lunch box after school, do you see it all still sitting there, completely untouched?

Now it’s time for you to come up with better ideas for a healthy school lunch that would be appealing enough so the kid would eat it.

உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் ஸ்கூலுக்குச் செல்லும்போது கொடுத்துவிடும் லஞ்ச், பாக்ஸோடு அப்படியே திரும்பி வருகிறதா? நீங்கள் கொடுத்துவிடும் உணவு நன்றாக இல்லை என்று குழந்தை சொல்கிறதா? அல்லது, குழந்தை உணவை உண்கிறது, ஆனால் உங்கள் குழந்தையை கோஷாக்கு காரணங்களுக்காக டாக்டரிட் அழைத்துச் செல்ல வேண்டிய தேவை அவ்வப்போது ஏற்படுகிறதா?

டிப்பிக்கல் அமெரிக்க ஸ்கூல் லஞ்ச் - Crackers, beans, milk, chicken and some salad.

Let’s face it. நீங்கள் கொடுத்துவிடும் லஞ்சில்தான் சிக்கல் உள்ளது.

உணவைக் கொடுத்துவிடும்போது கிரியேட்டிவ்வாக நீங்கள் செயற்பட்டால், இந்தச் சிக்கல் ஏற்படாது.

சூப்பர் மார்க்கெட்களில் விற்பனையாகும், ஜங்க் ஃபூட்களைப் பாருங்கள். அவை குழந்தைகளுக்கு பிடிக்கின்றன.

பிரான்ஸில் ஸ்கூல் உணவு (meat) - French fries, a slice of baguette, a burger patty, a slice of cake and a puff pastry.

காரணம், கவர்ச்சிகரமமாக செய்யப்பட்ட பேக்கிங், கலர்ஃபுல்லான உணவு.

ஆனால், தொடர்ச்சியாக அப்படியான உணவு குழந்தைக்கு கொடுப்பது கெடுதல் என்பது உங்களுக்கு தெரியும்.

இருந்தாலும், வேறு எந்த உணவையும் மறுக்கும் குழந்தைக்கு வேறு வழியில்லாமல், “இதையாவது உண்ணட்டும்” என்று கொடுப்பதில்தான் அவற்றின் விற்பனையில் 70 சதவீதம் உள்ளது. மிகுதி 30 சதவீதம்தான், பெற்றோர்களால் விரும்பி வாங்கிக் கொடுக்கப்படுகின்றன.

பிரான்ஸ் ஸ்கூல் உணவு (seafood) - Mussels on the top left, an artichoke, fries, baguette, cheescake and grapefruit.

அந்த உணவு மட்டும் ஏன் குழந்தைக்கு பிடித்திருக்கின்றது என்று நீங்கள் யோசித்தீர்களா? மேஜிக், அந்த உணவில் கிடையாது. அதன் பிரசன்டேஷனில் உள்ளது.

குழந்தைகளுக்கான உணவு தயாரித்து, அதை மார்க்கெட் செய்யும் பன்னாட்டு நிறுவனங்கள், உணவு தயாரிப்பைவிட அதிகம் செலவு பண்ணுவது, அவற்றின் பிரசன்டேஷனுக்கு என்பது உங்களுக்கு தெரியுமா?

Kellogg’s நிறுவனத்தின் குழந்தைகளுக்கான உணவு பாக்கட்கள் விற்பனையில் சக்கை போடு போடுகின்றன.

அவற்றின் மொத்த தயாரிப்பு விலையில் 57 சதவீதம், பிரசன்டேஷனில் செலவாகின்றது.

அமெரிக்கா, ஜங்க் ஃபூட் ஷ்டைலில் உணவு - Tater tots, chicken nuggets, cut fruits, chocolate milk and packets of sauce.

இந்த பிரசன்டேஷனில் முக்கிய செலவைப் பிடிப்பவை, ரிசர்ச் மற்றும் விளம்பரங்கள் என்பதை நிறுவனத்திக் கோஸ்ட் ஸ்ட்ராக்ஷரில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

உணவு தயாரிப்பு பற்றி ரிசர்ச் செய்கிறார்களே என்று புளகாங்கிதம் அடையாதீர்கள். இவர்கள் செலவு செய்து ரிசர்ச் பண்ணுவது, குழந்தைகளுக்கு போஷாக்கான உணவைக் கொடுக்க வேண்டும் என்பது தொடர்பாக அல்ல.

சீனா, ஓரளவு காரமான ஸ்கூல் உணவு - Spicy pork/chicken, a piece of fish, broccoli and cauliflower, with a generous serving of rice and soup.

அந்த உணவை குழந்தைகளை கவரும் விதத்தில் எப்படி அட்ராக்ஷனாக தயாரிப்பது, மற்றும் புதிய கிரியேட்டிவ் ஐடியாக்களுக்காகவே அவர்களது ரிசர்ச் நடைபெறுகின்றது.

அப்படி செலவு செய்து தயாரிக்கப்பட்ட உணவு பாக்கட்டுகள் சூப்பர் மார்க்கெட் ஷெல்ஃப்க்கு வரும்போது, சைக்காலஜிக்கலாக உங்கள் குழந்தையை அட்ராக்ட் பண்ணுகின்றது. அந்த உணவு வேண்டும் என்று அடம் பிடிக்கிறது குழந்தை. இது ஒரு சிம்பிளான பிசினெஸ் டூல் மாத்திரமே!

கொரிய ஸ்கூல் நான் வெஜ் லஞ்ச் - fish, vegetables, spicy squid, seaweed soup and some rice.

Kellogg’s நிறுவனம் உங்கள் குழந்தைக்கான உணவுத் தயாரிப்புச் செலவில் 57 சதவீதத்தை பிரசன்டேஷனில் செலவு செய்யும்போது (பணம் கொடுப்பது நீங்கள் என்பது வேறு விஷயம்), நீங்கள் குழந்தைக்கு ஸ்கூலுக்கு கொடுத்துவிடும் உணவுத் தயாரிப்பின் பிரசன்டேஷனில் பைசா செலவு செய்வதில்லை என்றால், உங்கள் உணவு குழந்தையைக் கவர முடியாது.

குழந்தையின் லஞ்ச் பாக்ஸில் உணவு அப்படியே திரும்பவும் வீட்டுக்கு வந்து சேரும்.

அமெரிக்கா, மெக்ஸிகன் ஸ்டைல் லஞ்ச் - taco salad with cheese, mashed potatoes and what looks like a fruit salad.

Kellogg’s எப்படி தமது உணவை உங்கள் தலையில் கட்டுகிறதோ, அதே பாணியில் உங்கள் உணவை உங்கள் குழந்தையின் தலையில் கட்டும் டெக்னிக்தான், கிரியேட்டிவிட்டி அன்டு பிரசன்டேஷன்.

அனேக நாடுகளில் இப்போது ஸ்கூல் கேன்டீன்களில், அல்லது வென்டிங் மெஷின்களில் ஜங்க் ஃபூட் விற்பதை நிறுத்தி விட்டார்கள். போஷாக்கான பாலன்ஸ் ஃபூட் கொடுக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

அவர்கள் உணவைக் கொடுக்கும் விதத்தை திட்டமிட்டுக் கொடுப்பதற்கு நியூட்ரிஷன் அன்டு டயட்டிட்டிக்ஸ் நிபுணர்களை வேலைக்கு அமர்த்தியிருக்கிறார்கள்.

அவர்களது திட்டமிடலில் வழங்கப்படும் உணவுகள், குழந்தைகளைக் கவர்கின்றன.

செக் ரிப்பப்ளிக் (முன்னாள் செக்காஸ்லோவேக்கியா) ஸ்கூல் லஞ்ச் - Soup, rice with a meat stew, dessert (with a raw egg on top), juice and tea.

இதை வேறு விதமாகச் சொன்னால், கிராஃப்ட் தனது வியாபாரத்துக்கான செய்யும் அதே சைக்காலஜிகல் முறையை இவர்கள், குழந்தைகளுக்கு போஷாக்கான உணவு கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு செய்கிறார்கள்.

இங்கு நாம் கொடுத்துள்ள போட்டோக்களில், வெவ்வேறு நாடுகளில், குழந்தைகளுக்காக வழங்கப்படும் உணவுகள் பிரசன்ட் பண்ணப்பட்ட விதத்தைப் பாருங்கள். அந்தந்த நாடுகளின் உணவு வகைகளைத்தான் கொடுத்திருக்கிறார்கள், ஆனால், குழந்தைகளைக் கவரும் வகையில்.

ஞாபகத்தில் வையுங்கள், குழந்தைக்கு நல்லது என்று நீங்கள் நினைக்கும் உணவு, குழந்தையையும் அட்ராக்ட் பண்ண வேண்டும். உங்கள் குழந்தையை நீங்கள் கவர்வதைவிட அதிகமாக Kellogg’s கவர முடிந்தால், தவறு உங்களில்தான்!

இப்படியான கட்டுரைகள் விறுவிறுப்பு.காம் இணையத்தில் வெளியாவதை விரும்புகிறீர்களா? உங்கள் கருத்துக்களை தயவுசெய்து அறியத்தரவும். தொடர்வதா வேண்டாமா என்று முடிவெடுக்க வசதியாக இருக்கும்

ஓடிப்போன நடிகையின் கணவர். தனிமையில் குழந்தையுடன் தவிக்கும் நடிகை.

இன்னமும் தனக்கு திருமணம் ஆகவில்லை என்று கூறி வரும் ஒரு நடிகை, ஏற்கனவே கணவனால் கைவிடப்பட்டவர்தான் என்று கோடம்பாக்கத்தில் பேசிக் கொள்கிறார்கள்.


`டிராவல்ஸ் படத்தில் நடித்த இரண்டெழுத்து நாயகி தனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்று வெளியில் சொல்லிக் கொண்டிருக்கிறார். ஆனால், அது உண்மை அல்ல. அவருக்கு திருமணமாகி, ஒரு குழந்தையும் இருக்கிறதாம்.
ரகசியமாக மணமுடித்த கணவர், இப்போது `டிராவல்ஸ் நாயகியை தனியே தவிக்க விட்டுவிட்டு தலைமறைவாகி விட்டாராம். காணாமல் போன கணவர் மீது புகார் கொடுக்கும் முடிவில் இருக்கிறாராம் நடிகை! ஐயோ பாவம்!!

ராஜிவ் கொலை வழக்கில், இவரது கூற்றுதான் நிஜமான திருப்பம்!

“ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு விதிக்கப்பட்டுள்ள தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டால் மகிழ்ச்சி அடைவேன்” இவ்வாறு ராஜிவ் கொலை வழக்கு சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு தலைமை வகித்த டி.ஆர்.கார்த்திகேயன் கூறியிருக்கிறார்.


இவரது கூற்று, இந்த விவகாரம் பற்றி வெளியே உள்ள எதிரான கருத்தின் வீரியத்தை, குறைக்கும் வகையில் உள்ளது.

தண்டனை விதிக்கப்பட்ட மூவரின் தூக்குத் தண்டனையையும் ரத்து செய்ய வேண்டும் என்று, தமிழக அரசு முதல், அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் என பல தரப்பினரும் கோரிவரும் நிலையில், இந்த விவகாரம் பற்றிய இரண்டாவது கருத்து ஒன்றும் சமீப காலமாகப் பரப்பப்பட்டு வருகின்றது.

ராஜிவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதித்தவர்களின் தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்றும், அவர்களுக்கு கருணை காட்ட வேண்டியது அவசியமில்லை என்றும் உள்ளது இந்த இரண்டாவது கருத்து. இதே கருத்துடன் பிரபல நாளிதழ் தினமலரில் வெளியான ஒரு கட்டுரை பலத்த எதிர்ப்பைச் சந்திக்க நேர்ந்தது.

அப் பத்திரிகையின் பிரதிகளை நீதிமன்றத்தின் முன் எரிக்கும் போராட்டம் ஒன்றும் கோபமடைந்த வக்கீல்களால் நடாத்தப்பட்டது.

இப்படியான சூழ்நிலையில்தான் இந்த வழக்குப் பற்றி மற்றைய யாரையும்விட மிக நன்றாக அறிந்த டி.ஆர்.கார்த்திகேயன், “இந்த மூவருக்கும் விதிக்கப்பட்டுள்ள தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டால் மகிழ்ச்சி அடைவேன்” என்று கூறியுள்ளார்.

தற்போது தூக்குத் தண்டனையை எதிர்நோக்கியுள்ள மூவரையும் கைது செய்ததே, டி.ஆர்.கார்த்திகேயன் தலைமையிலான புலனாய்வுக் குழுதான். ராஜிவ் கொலை மர்மத்தைக் கண்டு பிடித்ததாக மத்திய அரசினால் கூறப்படுபவர்களும், இதே குழுதான்.

அந்த வகையில், ராஜிவ் கொலை வழக்கில் நிஜமான குற்றவாளிகள் யார், இந்த மூவருக்கும் ராஜிவ் கொல்லப்பட்டதில் உள்ள சம்மந்தம் எவ்வளவு, இவர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் எந்த ஆதாரங்களில் உறுதிப்படுத்தப்பட்டன, அந்த ஆதாரங்கள் எப்படிக் கிடைத்தன என்ற விபரங்கள் அனைத்தும் மிக நன்றாகத் தெரிந்த நபரும், டி.ஆர்.கார்த்திகேயன்தான்!

நிருபர்களுக்கு கருத்து தெரிவித்த டி.ஆர்.கார்த்திகேயன், “ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது எனக்கு தனிப்பட்ட முறையில் எந்த விரோதமும் இல்லை. நான் எனது கடமையை செய்தேன். தற்போது அரசாங்கம் தனது கடமையை செய்யட்டும். அவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தூக்கு தண்டனை குறைக்கப்பட்டு ஆயுள் தண்டனையாக மாற்றப்படுமானால் நான் மகிழ்ச்சி அடைவேன்” என்று கூறியிருக்கிறார்.

1991ம் ஆண்டு மே மாதம் 21ம் தேதி இரவு, ராஜிவ் காந்தி குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டார். கொல்லப்பட்டது, ராஜிவ் காந்திதான் என்பது உறுதிப் படுத்தப்பட்டு 12 மணி நேரமாகியும், கொலையை புலனாய்வு செய்யப்போவது யார் என்ற முடிவு எடுக்கப்படவில்லை. யாருடைய தலைமையில் புலனாய்வுக் குழுவை அமைப்பது என்ற குழப்பமே தாமதத்துக்கான காரணம்.

அதன்பின் இந்த விசாரணையில் டி.ஆர்.கார்த்திகேயன் எப்படிக் கொண்டுவரப்பட்டார் என்பதைத் தெரிந்து கொண்டால்தான், தற்போது அவரது கூற்றுக்கு வேல்யூ அதிகம் இருப்பதை நன்றாகப் புரிந்து கொள்ளலாம். விறுவிறுப்பு.காம், கடந்த வாரம் வெளியிட்ட ‘ராஜிவ் காந்தி கொலையில், புலிகள் சிக்கிய கதை’ தொடரின் 7ம் அத்தியாயத்தின் பெயரே, ‘கார்த்திகேயன் காட்சிக்குள் வருகிறார்’ என்பதுதான்.

அதை ஒருமுறை படித்துப் பாருங்கள். டி.ஆர்.கார்த்திகேயன் யார் என்பது புரியும்!

‘செப்.11’ டெலிபோன் உரையாடல் ரிக்கார்டிங், வெளியாகி விட்டது!

வாஷிங்டன், அமெரிக்கா: செப்டெம்பர் 11 தாக்குதல்கள் நடைபெற்று சுமார் 10 வருடங்கள் ஆகியுள்ள நிலையில், அன்றைய தினத்தில் நடைபெற்ற முக்கிய உரையாடல்களின் ரிக்கார்டிங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அன்று காலை நடைபெற்ற பதட்டம் நிறைந்த வெவ்வேறு உரையாடல்களின் தொகுப்பு, இந்த ஆடியோ ஒலிப்பதிவுகள்.

உலகையே அதிர வைத்த அன்றைய தினத்தின் காலையில், பதட்டமான பல சம்பவங்கள் ஓரிரு மணி நேரத்துக்குள் நடந்து முடிந்தன. விமானங்கள் கடத்தப்படும் தகவல்கள் அடுத்தடுத்து வருகின்றன. ஏர் ட்ராபிக் கன்ட்ரோல் டவர் திரையிலிருந்து விமானங்கள் மறைந்து போகின்றன. ராணுவத்துக்கு தகவல் போகின்றது. மறைந்துபோன விமானங்களை தேட அமெரிக்க விமானப்படையின் போர் விமானங்கள் பறக்கத் தொடங்குகின்றன…
இப்படி வெவ்வேறு சம்பவங்கள் வெவ்வேறு இடங்களில் நடைபெற்றன. இவை எல்லாமே மிகவும் முக்கியமான இடங்கள் என்பதால், அங்கு மேற்கொள்ளப்படும் தொலைபேசி உரையாடல்கள் அனைத்தும் பதிவு செய்யப்படுவது வழக்கம்.

அந்த உரையாடல்களே, தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

செப்.11 தாக்குதலில் உளவுத்துறைகள் கோட்டைவிட்டது தொடர்பாக ஏற்கனவே விறுவிறுப்பு.காமில் படித்திருப்பீர்கள். இந்த ரிக்கார்டிங்குகள் அன்று நடைபெற்ற சம்பங்களின் மற்றொரு பக்கத்தைக் காட்டுகின்றன.

செப்டெம்பர் 11 தாக்குதல் முடிந்தபின், அதுபற்றிய விசாரணையில் பங்குகொண்ட புலனாய்வாளர் மைல்ஸ் காரா, “புலனாய்வில், பல அலுவலகங்களில் இருந்து எடுக்கப்பட்ட ஆடியோ ரிக்கார்டிங்களைக் கேட்க வேண்டியிருந்தது. அவை அனைத்தையும் இணைத்தால், ஆயிரக் கணக்கான மணி நேரம் கேட்க வேண்டியிருக்கும்.

அவற்றிலிருந்து, முக்கிய உரையாடல்களை மாத்திரம் பிரித்தெடுத்து, தொகுத்து தற்போது வெளியிடப்பட்டுள்ளது. ஒரு விஷயத்தை ஒப்புக் கொள்ள வேண்டும். செப்டெம்பர் 11ன் கதை, இதுவரை சொல்லப்பட்டதிலேயே மிக உச்சகட்ட ரியாலிட்டியுடன் இருப்பது இந்த ரிக்கார்டிங்களில்தான். மிகப் பயங்கரமான அன்றைய தினத்தில், நடந்த சம்பவங்களை, அது நடைபெற்ற கணங்களில், அதில் சம்மந்தப் பட்டவர்களின் குரல்களிலேயே கேட்கும் ரியாலிட்டி இது” என்கிறார்.

நியூயோர்க் ஏர் ட்ராபிக் கன்ட்ரோல் டவர்

தொகுப்பில் மொத்தம் 114 வெவ்வேறு ஒலிப்பதிவுகள் உள்ளன. வெவ்வேறு அலுவலகங்களில், அன்று காலை நடைபெற்ற டெலிபோன் உரையாடல்களின் போது, ரிக்கார்டிங் செய்யப்பட்டவை இவை.

இந்த ஆடியோ தொகுப்பு, 2001ம் ஆண்டு செப்டெம்பர் 11ம் தேதி காலை அமெரிக்காவில் நடைபெற்ற (இந்த விபத்து தொடர்பான) முக்கியமான இரு உரையாடல்கள் தவிர்க்கப்பட்ட நிலையிலேயே வெளியிடப்பட்டுள்ளது. அவற்றில் ஒன்று, யுனைட்டட் ஏர்லைன்ஸ் விமான இலக்கம் 93ன் காக்பிட் உரையாடல் ஒலிப்பதிவு. இது கிட்டத்தட்ட 30 நிமிடங்கள் நீளமானது.

அந்த விமானம் விபத்துக்குள்ளாகிய போது, அதிலிருந்த பயணிகள் சிலரது குடும்பத்தினர் இந்த ஒலிப்பதிவு வெளியாவதை விரும்பவில்லை. அதனால், குறிப்பிட்ட 30 நிமிட ஒலிப்பதிவு பகிரங்கப்படுத்தப்படுவது தடை செய்யப்பட்டுள்ளது.

அதேபோல, தவிர்க்கப்பட்ட மற்றொரு ஒலிப்பதிவு, செப். 11ம் தேதி காலை 9.28க்கு தொடங்கிய தொலைபேசி உரையாடல். கான்பிரன்ஸ் கால் முறையில் நடைபெற்ற இந்த உரையாடலில், அன்றைய அமெரிக்க அரசின் முக்கிய புள்ளிகளின் (சென்னி, ரம்ஸ்பீல்ட், மயர்ஸ்) குரல்கள் பதிவாகியுள்ளன. ராஜாங்க ரகசியம் என்ற பிரிவின்கீழ் வரும் இந்த ஒலிப்பதிவும், பகிரங்கப் படுத்தப்படவில்லை.

ஆடியோ தொகுப்பிலுள்ள ஓரிரு சுவாரசியமான உரையாடல்களைத் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்கள்? இதோ, விறுவிறுப்பு.காம் சில ஒலிப்பதிவு சாம்பிள்களின் எழுத்து வடிவத்தைத் தருகிறது. படித்துப் பாருங்களேன்.

ஏர் ட்ராபிக் கன்ட்ரோல் அலுவலக ராடாரில் விமானங்களில் பொசிஷன்கள்.

செம்.11ம் தேதி காலை. உலக வர்த்தக மையக் கட்டடத்தின் வடக்கு கோபுரத்தில் முதலாவர் விமானம் போய் மோதி 16 நிமிடங்களின்பின் தொடங்குகிறது இந்த ஒலிப்பதிவு. நியூபோர்க் ஏர் ட்ராபிக் கன்ட்ரோல் ராடார் சென்டரின் மேனேஜருக்கு வ6ந்த தொலைபேசி அழைப்பு இது.

“ஹேய். உங்களது ஜன்னல் வழியாக உடனே வெளியே பாருங்கள்” என்கிறது மறுமுனைக் குரல்.

“கிட்டத்தட்ட 4000 அடி உயரத்தில் பறக்கும் விமானம் ஒன்று தெரிகிறதா?”

“ஆம். நான் அதைத்தான் பார்க்கிறேன்”

“அந்த விமானம் ஒரு கட்டடத்தை நோக்கிப் போவது போல தெரிகிறதா?”

“ஆ.. மிகவேகமாக கீழ்நோக்கிச் சரிகிறது. 4000 அடி உயரத்துக்கு இறங்கிவிட்டது. ஒரே சரிவில் 800 அடி உயரம் குறைந்து விட்டது” என்றார் மேனேஜர். அவருக்கு முன்னால் இருந்த ராடார் திரையில் அந்த விமானம் பறக்கும் சரியான உயரத்தை இலக்கங்களில் அவரால் காண முடியும்.

“அது என்ன வகை விமானம் என்று உங்களால் கூறமுடியுமா?”

“இதோ.. ஒரு நிமிடத்தில் (ராடார்) திரையில் பார்த்து விடுகிறேன்”

அவர் ராடார் திரையில் அது எந்த விமானம் என்று பார்க்கும்வரை, ராடார் பிம்பம் திரையில் நிலைக்கவில்லை. மறைந்து விட்டது. அதாவது, கட்டடத்தில் போய் மோதிவிட்டது. ஏர் ட்ராபிக் கன்ட்ரோல் அலுவலகத்தில் இருந்த மற்றையவர்களின் குரல்கள் பதட்டமாக கூக்குரலிடுவது பதிவாகியுள்ளது. “கடவுளே.. மற்றொரு விமானம், உலக வர்த்தக மையக் கட்டடத்தில் வேகமாக மோதுகிறது”

இதுபோன்ற 114 தொலைபேசி உரையாடல்கள் இந்த ஒலிப்பதிவுத் தொகுப்பில் வரிசையாக உள்ளன. நீங்கள் முதலில் படித்த ஒலிப்பதிவில் ஒலித்த அதே மேனேஜர் எஃப்.ஏ.ஏ. அலுவலகத்தை அவசரமாக தொலைபேசியில் அழைப்பதும் பதிவாகியுள்ளது. “அவசரம். ராணுவ விமானங்களை வானத்துக்கு அனுப்பக்கூடிய அதிகாரம் உடைய யாராவது அதிகாரியுடன் நான் பேசவேண்டும். இணைப்பு தாருங்கள்” என்கிறார் நடுங்கும் குரலில்.

இந்த தொலைபேசி அழைப்பு வரும்வரை எஃப்.ஏ.ஏ. அலுவலகத்துக்கு விஷயமே தெரிந்திருக்கவில்லை!

ஏர் ட்ராபிக் கன்ட்ரோல் டவரில் வேலை செய்பவர்கள்

ராணுவத் தரப்புக்கும் விஷயம் உடனே தெரிவிக்கப்படவில்லை என்பதற்கு உதாரணமாக மற்றொரு ஒலிப்பதிவு உள்ளது. காலை 9.34க்கு நடைபெற்ற தொலைபேசி உரையாடல் அது.

ராணுவ ஏவியேஷன் பெண் அதிகாரி ஒருவர், வாஷிங்டன் சென்டரிலுள்ள எஃப்.ஏ.ஏ. அலுவலகத்தை தொலைபேசியில் அழைக்கிறார். அமெரிக்கன் ஏர்லைன்ஸின் விமான இலக்கம் 77 ராடாரில் இருந்து மாயமாக மறைந்துபோய், 30 நிமிடங்கள் ஆகின்றன என்பதை அறிந்து திகைக்கிறார் அவர்.

அந்த விமானத்துடன் தொடர்புகள் அறுந்து 30 நிமிடங்கள் ஆகியும், விஷயம் ராணுவத்துக்கு தெரியப்படுத்தப்படவில்லை!

போனை அட்டென்ட் பண்ணிய எஃப்.ஏ.ஏ. அலுவலக அதிகாரி ஒருவர், “பிளைட் 77 உடன், ராடார் தொடர்புகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டு விட்டன. விமானம் எங்கே என்பதோ, அதற்கு என்ன நடந்தது என்பதோ எமக்கு தெரியவில்லை. அது ஒரு போயிங் 767 விமானம் என்ற தகவல் மாத்திரமே தெரியும். எஃப்.ஏ.ஏ.யின் இன்டியானாபோலிஸ் சென்டர் தந்த தகவல் இவ்வளவுதான்” என்று கூறுவது பதிவாகியுள்ளது.

தொலைபேசியில் அழைத்த ராணுவ ஏவியேஷன் பெண் அதிகாரி, “எனக்கு தெரிய வேண்டியதெல்லாம், அந்த விமானம் எந்த இடத்தில் பறந்துகொண்டு இருந்தபோது கடைசியாக உங்களுடன் தொடர்பில் இருந்தது?” என்று கேட்கிறார். இந்த விபரம் தெரிந்தால்தானே, ராணுவம் தமது போர் விமானங்களை அந்த இடத்துக்கு தேடுதல் வேட்டைக்கு அனுப்ப முடியும்?

“ம்… அது எனக்கு சரியாகத் தெரியாது. எமக்கு தகவல் கொடுத்தது பாஸ்டன். அது, இன்டியானாபோலிஸ் சென்டர். நான் கடைசியாக அவர்களுடன் பேசியபோது, விமானம் 77, யோர்க் என்ற இடத்துக்கு கிழக்கில் பறப்பதாக சொன்னார்கள். யோர்க், எந்த மாநிலத்தில் இருக்கிறது என்றுகூட எனக்கு தெரியாது”

இந்த தொலைபேசி உரையாடல் முடிவடைந்து சரியாக 3 நிமிடங்களில், விமானம் 77, பென்டகனில் போய் மோதியது!