Tuesday, November 15, 2011

இளம்பெண் நிர்வாணமாக குளித்து கின்னஸ் சாதனை


இரத்தத்தினை உறைய வைக்கும் -0 ° C யில் குளிர் நிறைந்த ஆர்ட்டிக் கடற் பரப்பில் Avseenko Natalia எனும் பெண் நிர்வாணமாக 6 நிமிடங்கள் கடலில் குளித்து சாதனை படைத்துள்ளார். தற்போது உலகில் அதிகபடியான சாதனைகள் நிர்வாணம் எனும் போர்வையிலேய நடாத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.




அம்மணமாக்கி இளம் பெண் உறுப்பில் அடிக்கும் ஆண்கள்!! (வீடியோ இணைப்பு)


இந்தியாவில் ஆதிவாசி இளம் பெண் ஒருவரை நிர்வாணமாக்கி அவரது பெண் உறுப்பில் உதைந்து கொட்டனால் தாக்கும் காம வெறி அரக்கர்களின் அதிர்ச்சி செயலை மக்களே பாருங்கள்.


ஆடை களைந்து வோட்டு கேட்கும் பெண் வேட்பாளர் (வீடியோ இணைப்பு)

தேர்தல்களத்தில் வெற்றி பெற புது புது யுத்திகளை கையாள்வார்கள் ஆனால் இங்கு ஒரு பெண் வில்லங்கமான முறையில் வாக்குகளை சேகரிக்க முயற்சி எடுத்துள்ளார். போலந்து நாட்டில் ஜனநாயக இடது முன்னணி (SLD) எனும் அரசியல் கட்சியில் போட்டியிடும் வேட்பாளர் Katarzyna Lenart. இவரின் வயது 23. இவர் தனது தேர்தல் பிரச்சாரத்திற்காக ஒரு காணொளியை தயார் செய்துள்ளார். 


இளைஞர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ள அரை நிர்வாணமாக காட்சி கொடுத்துள்ளார். தனது உடல் அங்கங்களை வெளிப்படுத்தாமல் தணிக்கை செய்து வெளியிட்டு இருக்கும் அவர், இளைஞர்களிடம் ஓர் வேண்டுகோளையும் முன் வைத்துள்ளார்.
தனக்கும் கட்சிக்கும் வாக்களித்து வெற்றி பெற செய்தால் நிர்வாணமாக காட்சி தருவதாக உறுதி அளித்துள்ளார் இப்பெண் வேட்பாளர். இன்று நிர்வாணம் எனும் ஒன்று பல சாதனைக்கு உரிய சொல்லாக மாறிவருவது மிகவும் வருத்தப்படதக்க விடயமாகும்.

தங்கையுடன் தொடர்பு வைத்திருந்த கணவனின் ஆணுறுப்பைக் கடித்துக் குதறிய மனைவி!!


தனது கணவர் தனக்கு தெரியாமல் தனது தங்கையுடன் இரகசிய தொடர்புகளை வைத்திருந்ததை அவதானித்த சந்தர்பத்தில் தனக்கு மனசுக்கு தாங்க முடியாத வேதனையினால் கணவரின் ஆணுறுப்பை சேதப்படுத்தியதாக மனைவி வைத்தியரிடம் தெரிவித்தார்.


தான் காதலித்து திருமணம் செய்தவர் தனக்கு துரோகம் செய்ததினாலேயே தான் கவலையில் இவ்வாறான வேலையில் ஈடுபட்டதாகவும், தன்னுடன் தங்கை ஒரே வீட்டில் வசித்து வருபவராகவும், சமூகத்தில் மதிக்கப்படக்கூடிய அரச தொழிலில் ஈடுபட்டுவருவதாகவும் மனைவி தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டவர் திருகோணமலை தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது. பாசத்துடன் வாழ்ந்த மனைவிக்கு செய்த துரோகம் ஆணுறுப்பை இழக்கும் அளவுக்கு வந்து விட்டது.

இவ்வாறு மனைவியினால் தாக்கப்பட்டவர் ஒரு பாடசாலையின் ஆசிரியர் என்பதுடன் இவர் தொடர்பான ஏனைய விபரங்களை இவரின் நலன்கருதி இவ்விடத்தில் நாம் பிரசுரிக்கவில்லை.

இருந்தும் இவர் யார் என அறிய ஆவல் கொண்டவர்கள் பாடசாலைகளில் எந்த ஆசிரியர் நொண்டிக் கொண்டு வருகின்றார் என்பதை அவதானிக்கும் பட்சத்தில் மனைவியால் கடித்துக் குதறப்பட்டு ஆணுறுப்புச் சேதமடைந்த ஆசிரியர் இவர்தான் என்பதை அடையாளப்படுத்திக் கொள்ள முடியும்.

ஐஸ்வர்யாராய் பெண் குழந்தைக்கு தாயானார்.

பிரசவத்திற்காக மும்பையிலுள்ள 7 ஸ்டார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஐஸ்வர்யா ராய்க்கு இன்று காலை பெண் குழந்தை பிறந்தது.



இது தொடர்பில் அமிதாப் பச்சன் தனது டுவிட்டர் பக்கத்தில் "அழகான பெண்குழந்தை ஒன்றுக்கு நான் தாத்தாவாகி விட்டேன்" என மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். தாயும், குழந்தையும் நலமாக உள்ளதாக மருத்துவமனை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

பிரபல நடிகையின் 3 வது வீடியோ வெளியானது (வீடியோ இணைப்பு)


பூனம் பாண்டே வெளியிட்ட முதல் வீடியோவில், குளியல் அறையில்.,பாத் டப்பில் படுத்தபடியும், நின்றபடியும், வளைந்து நெளிந்தபடியும், குனிந்து தனது முன்னழகைக் காட்டியபடியும், ஹேன்ட் ஷவர் மூலம் தனது உடலில் தண்ணீரை பீய்ச்சியடித்தபடியும் காட்சி தந்தார்.


அவர் வெளியிட்டுள்ள இரண்டாவது வீடியோவில் பாத்ரூமிலிருந்து வெளியேறி படுக்கையறைக்கு வருகிறார். பிறகு வெறும் உள்ளாடைகளோடு மேக்கப் போட்டுக்கொள்கிறார்.
மேக்கப் முடிந்ததும் மேலாடையின்றி படுக்கையில் படுத்திருக்கிறார். மூன்றாவது வீடியோவில் உடைமாற்றும் காட்சிகள் வருமா? என்று அவரது ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்தார்கள்.

இதோ வந்துவிட்டது உங்கள் ஏக்கங்களை தடுக்க பூனம்பாண்டெவின் மூன்றாவது ஆபாச வீடியோ. அதில் படுக்கை அறையில் உட்கார்ந்தபடியும், வளைந்து நெளிந்தபடியும், நாக்கைச் சுழற்றியபடியும், பறக்கும் முத்தங்களைக் கொடுத்தபடியும் சாக்ஸை கழட்டுகிறார், ஷூவைக் கழற்றுகிறார். 

படுக்கையில் புரளுகிறார், டான்ஸ் மூவ்மென்ட் கொடுக்கிறார், முன்னழகையும், பின்னழகையும் மடக்கியும், முடக்கியும் காட்டுகிறார். இன்னும் என்னென்னவோ செய்கிறார்.

ஒவ்வொரு உடையாக கழற்றிப் போடும் பூனம் இறுதியாக தனது கருப்பு நிற மேலுடையையும் கழற்றி விட்டு வெள்ளை நிற டாப்ஸ் மற்றும் ஷார்ட்ஸுடன், பின்புறத்தைக் காட்டியபடி படுக்கையில் படுத்துக் கொண்டு விடை பெறுகிறார்.

இந்தியாவிலா இந்த கொடுமை?

ஆப்பிரிக்காவின் 26 மிக ஏழ்மையான நாடுகளை விட மிக அதிகமான பிகார், சட்டீஸ்கர், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், ஒரிஸ்ஸா, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய இந்தியாவின் 8 மாநிலங்களி்ல் கடும் வறுமையின் பிடியில் சிக்கி உழன்று வருவதாக சர்வதேச ஆய்வறிக்கையொன்றில் கூறப்பட்டு்ள்ளது.

2020ம் ஆண்டில், அதாவது இன்னும் 10 ஆண்டுகளில் இந்தியா உலகின் மாபெரும் வல்லரசு நாடுகளில் ஒன்றாகிவிடும் என்று நம் நாட்டு கட்சிகளும் (இடதுசாரிகள் தவிர்த்து) உள்ளிட்ட சில நாடுகளும் பிரச்சாரம் செய்து வருகின்றன.

இது எவ்வளவு பெரிய பொய் பிரச்சாரம் என்பதை இந்த ஆய்வு முடிவுகள் பொட்டில் அடிப்பது போல தெளிவாக எடுத்துக் காட்டியுள்ளன.
படிப்பறிவிலும் சமூகராதியிலும் மிகவும் பிற்பட்ட பிகார், சட்டீஸ்கர், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், ஒரிஸ்ஸா, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய எட்டு மாநிலங்களில் மட்டும் 42.1 கோடி மிகக் கொடுமையான வறுமையின் பிடியில் சிக்கியுள்ளனர்.

இந்த எண்ணிக்கை உலகின் மிக ஏழ்மையான கண்டமான ஆப்பிரிக்காவில் உள்ள மிக மிக ஏழ்மையான 26 நாடுகளில் வசிக்கும் மிக ஏழ்மையான மக்களின் ஒட்டுமொத்த கூட்டுத் தொகையை விட அதிகமாகும். இந்த நாடுகளில் மிகக் கடுமையான ஏழ்மையில் உள்ளோர் எண்ணிக்கை 41 கோடியாகும்.

ஐ.நா. சபையின் மனிதவள மேம்பாட்டுத்துறையும் ஆக்ஸ்போர்ட் மனிதவளத்துறையும் இணைந்து வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் இந்தத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இதன் மூலம் ஆப்பிரிக்க நாடுகளை விட இந்தியாவில் தான் வறுமை அதிகமாக இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக இந்தியப் பெண்களில் பாதிபேர் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ்வதாகவும் அந்த ஆய்வு கூறுகிறது.

உலகின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் பாதிப்பேர், அதாவது 48.4 கோடி பேர் தெற்காசிய நாடுகளிலும் 25 சதவீதம் பேர் ஆப்பிரிக்க நாடுகளிலும் வாழ்கின்றனர்.

இதில் தண்ணீர், மின்சாரம், கழிப்பிட வசதி இல்லாத உலக மக்களில் 51 சதவீதம் பேர், அதாவது 84.4 கோடி பேர் தெற்காசியாவிலும், 28 சதவீதம் பேர் அதாவது 45.8 கோடி பேர் ஆப்பிரிக்காவிலும் உள்ளனர்.

உலகிலேயே நைஜர் நாட்டில் தான் மிக அதிகபட்சமாக மொத்த மக்கள் தொகையில் 93 சதவீதம் பேரும் வறுமையில் வாழ்கின்றனர்.

5.2 பில்லியன் மக்கள் வசிக்கும் 104 நாடுகளில் நடத்தப்படப்பட்ட ஆய்வில் 1.7 பில்லியன் மக்கள் வறுமையில் தான் உள்ளனர்.

கூகுளின் அடுத்த அடி


56,622 கோடி மதிப்பீட்டில் மோட்டோரோலா மொபிலிட்டி நிறுவனத்தை கூகுள் நிறுவனம் விரைவில் கையகப்படுத்துகிறது.மொபைல் போன் தயாரிப்பில் மோட்டோரோலா மொபிலிட்டி நிறுவனம் சர்வதேச அளவில் முன்னிலை வகிக்கிறது. குறிப்பாக, கூகுள் நிறுவனத்தின் ஆன்ட்ராய்டு ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் போன்களை தயாரிப்பதில் மோட்டோராலா மொபிலி்ட்டி சர்வதேச சந்தையில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது.

இந்த நிலையில், ஆன்ட்ராய்டு போன்களை நேரடியாக களமிறக்கும் வகையில், மோட்டோரோலா மொபிலிட்டி நிறுவனத்தை விரைவில் கையகப்படுத்துகிறது கூகுள். மோட்டோரோலா மொபிலிட்டி நிறுவனத்தின் 63 சதவீத பங்குகளை கூகுள் வாங்குகிறது.

அதாவது, மோட்டோரோலா நிறுவனத்தின் ஒரு பங்கை 40 அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூ.1,800) கொடுத்து வாங்குகிறது கூகுள். இந்த வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம் மோட்டோரோலாவின் ஆன்ட்ராய்டு போன்களின் தயாரிப்பு கூகுள் கட்டுப்பாட்டிற்குள் வர இருக்கிறது.இந்த வர்த்தக ஒப்பந்தத்திற்கு இரு நிறுவனங்களின் இயக்குனர் குழுக்கள் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மிகப்பெரிய கையகப்படுத்தும் நடவடிக்கை குறித்து கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி (சிஇஓ) கூறியதாவது:

"எங்களின் ஆன்ட்ராய்டு ஓஎஸ் கொண்ட போன்களை தயாரிப்பதில் மோட்டோரோலா மொபிலிட்டி நிறுவனம் மிகுந்த அர்ப்பணிப்பும், முக்கியத்துவத்தையும் கொடுத்து வருகிறது. இதுவே, அந்த நிறுவனத்தை கையகப்படுத்துவதற்கு மிகமுக்கிய காரணம்.இந்த நடவடிக்கை, ஆன்ட்ராய்டு ஓஎஸ் பயனாளிகள், பங்குதாரர்கள் மற்றும் ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன்களை உருவாக்கும் டெவலப்பர்களுக்கு மிகுந்த ஊக்கத்தை அளிக்கும் விதமாக அமையும்.

இந்த புதிய முயற்சியின் மூலம் ஆன்ட்ராய்டு ஓஎஸ் கொண்ட புதிய மோட்டோரோலா போன்கள் ஸ்மார்ட்போன் மார்க்கெட்டை பரிமாணத்திற்கு கொண்டு செல்லும்.

இருப்பினும், வழக்கம்போல் ஆன்ட்ராய்டு ஆபரேட்டிங் சிஸ்டத்தை ஓபன் சோர்ஸாக வழங்குவது தொடரும். மோட்டோரோலா மொபிலிட்டி நிறுவனத்தின் வர்த்தகமும், ஆன்ட்ராய்டு ஓஎஸ் வர்த்தகத்தையும் தனித்தனியாகவே மேற்கொள்வோம். இதனால், எந்த குழப்பமும் இருக்காது," என்று கூறினார்.மோட்டோரோலாவை கூகுள் கையகப்படுத்துவதன் மூலம், ஆன்ட்ராய்டு போன் மார்க்கெட்டில் மாபெரும் புரட்சி ஏற்படும் என்று கருதப்படுகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் மோட்டோரோலாவை கையகப்படுத்தும் பணி முழுவதுமாக நிறைவடையும் என்று கூகுள் தெரிவித்துள்ளது.













இந்த கையகப்படுத்தும் நடவடிக்கை காரணமாக ஆப்பிள் நிறுவனத்திற்கும், ஆசியாவை சேர்ந்த மொபைல் தயாரிப்பாளர்களுக்கும் மிகப்பெரிய நெருக்கடி ஏற்படும் என்று மார்க்கெட் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

அதே நேரத்தில் மோட்டோரோலோவின் அப்ளிகேஷன், சாப்ட்வேர் உற்பத்திப் பிரிவு தொடர்ந்து மோட்டோரோலோ சொல்யூசன்ஸ் வசமே இருக்கும். 

யார் இந்த திம்மக்கா

கர்நாடகா மாநிலம் பெங்களுரூவில் இருந்து தும்கூர் போகும் வழியில் 25 வது கிலோமீட்டரில் வருகிறது கூதூர் கிராமம். 

அதுவரை வறண்டு வெப்பமாகக் காணப்பட்ட பூமி குளிர்ந்து காணப்படுகிறது, அதற்கு காரணமான ஆயிரத்திற்கும் அதிகமான ஆலமரங்கள் அழகு காட்டி சாலையின் இருபக்கங்களிலும் இருந்து காற்றை வீசி வரவேற்கிறது. மரங்களில் உள்ள பல்வேறுவித பறவைகள் தங்கள் மொழியால் கீதம் பாடி வரவேற்கின்றன, மொத்தத்தில் மரங்கள் அடர்ந்த அந்த திடீர் சோலைவனம் மனதை சிக்கென பறிக்கிறது. 

எங்கும் இல்லாத அளவிற்கு, எங்கு இருந்து வந்தன இத்தனை ஆலமரங்கள், யார் கொண்டுவந்தது நட்டது, அதைவிட யார் இவ்வளவு சிரத்தை எடுத்து பராமரித்தது என்ற பல கேள்விக்கு எல்லாம் விடைதான் , எழுதப்படிக்கத்தெரியாத திம்மக்கா. 

யார் இந்த திம்மக்கா என்பதை அறிய சில வருடங்கள் பின்னோக்கி பயணிக்கவேண்டும் 

சாதாரண கிராமத்து ஏழைப்பெண்ணான திம்மக்கா வாக்கப்பட்ட கிராமம்தான் கூதூர். 

சிக்கண்ணா என்ற விவசாய தொழிலாளியின் வாழ்க்கைத் துணையான திம்மக்காவிற்கு குழந்தை பாக்கியம் இல்லாது போனது, இதை காரணமாக்காட்டி உற்றமும், சுற்றமும் கொட்டிய வார்த்தைகளால் திம்மக்கா ரொம்பவே காயப்பட்டுவிட்டார். இரவுகளை தூக்கம் இல்லாமலும், பகல்களை உணவு இல்லாமலும் கழித்தார். ஆனாலும் எதுவும் ஆறுதலாக இல்லை மேலும், மேலும் துக்கம் துரத்திட, இப்படியே பத்து வருடங்கள் ஒடிப்போனது. இப்போது 80 வயதாகும் திம்மக்காவிற்கு அப்போது வயது 28. 

பெற்று வளர்த்தால்தான் பிள்ளைகளா, உயிரும்,உணர்வும் உள்ள மரங்கள் பிள்ளைகள் இல்லையா, பெற்ற பிள்ளை கூட தாயை மட்டும்தான் கவனிக்கும், ஆனால் பெறாத பிள்ளைகளான மரங்கள், சுயநலமின்றி ஊரையே கவனித்துக்கொள்ளுமே என்றெல்லாம் யோசித்த திம்மக்கா மரம் நடுவது அதுவும் ஆலமரங்களை தொடர்ச்சியாக நடுவது என்று முடிவெடுத்தார். 

இவ்வளவு யோசித்த திம்மக்கா அந்த ஊரின் தண்ணீர் பஞ்சத்தை பற்றி யோசிக்க மறந்துவிட்டார், ஆனாலும் முன்வைத்து காலை பின்வைக்கப்போவது இல்லை என்ற முடிவுடன் நாலு கிலோமீட்டர் தூரம் நடந்துசென்று தண்ணீர் கொண்டுவந்து ஆலமரங்களுக்கு தண்ணீர் விட்டார். 
ஆரம்பத்தில் இது என்ன பைத்தியக்காரத்தனம் என்று கேலி செய்த கணவர் சிக்கண்ணா கூட ஆலமரசெடி இலைகளும், தலைகளும் விட்டு உருவாகி வருவதைப் பார்த்து தானும் திம்மக்காவிற்கு உதவலானார். 
வயல்காட்டில் வேலை செய்த நேரம் போக எப்போதும் ஆலமரம் நடுவது, நட்ட மரங்களை பேணி பாதுகாத்து வளர்ப்பது, வளர்ந்த மரங்களிடம் அன்பும், பாசமுமாகப் பேசுவது என்று மரங்களை தனது குழந்தைகளுக்கும் மேலாக வளர்த்தார். 

மரங்களை வளர்ப்பதற்காக ஊரில் நிறைய குட்டைகளை உருவாக்கினார், அதில் மழைக்காலத்தில் பெய்யும் தண்ணீரை தேக்கிவைத்து வெய்யில் காலத்தில் மரங்களுக்கு ஊற்றி பயன்படுத்தினார். 

அப்படியும் தண்ணீர் பற்றாமல் போகும்போது சிரமம் பாரமால் தலையிலும், இடுப்பிலும் குடங்களை சுமந்துகொண்டு தண்ணீர் சேகரிக்க புறப்பட்டு விடுவார். ஒரு சமயம் நாலுகிலோ மீட்டர் தூரம் போய் தண்ணீர் கொண்டுவந்தவர், மரங்களுக்கு அருகில் வரும்போது கால் தடுக்கி முள்ளில் விழுந்துவிட்டார். கை,கால்களில் ரத்தம். ஒ...வென்று அழுகை.பதறி ஒடிவந்த சிக்கண்ணா,‘ என்னம்மா ரொம்ப வலிக்குதா’ என்று கேட்டபோது, ‘வலிக்காக அழலீங்க...கொண்டுவந்த தண்ணீர் கொட்டிப் போச்சுங்க...அதான் அழறேன்’ என்று கூறியிருக்கிறார். 

இப்படியாக திம்மக்கா மரம் வளர்க்க ஆரம்பித்து 50 ஆண்டுகளுக்கு மேலாகிறது. திம்மக்காவின் பேச்சுப்படி சொல்லப்போனால் அவரது மூத்த பிள்ளைக்கு இப்போது வயது 52 ஆகிறது. விளையாட்டுப்போல வளர்த்த மரங்கள் இன்று கூதூர் மக்களை குளு, குளு என வைத்தபடி திகு, திகுவென வளர்ந்து நாட்டிற்கு பயன்தரும் வகையில் வளர்ந்து நிற்கின்றது. 

சுற்றுச்சுழலின் நண்பர் என்ற உயரிய விருதினை அமெரிக்கா அளித்து கவுரவித்தது வரை திம்மக்கா வாங்கியிருக்கும் விருதுகள் பலப்பல. 

இன்றைய தேதிக்கு திம்மக்கா வளர்த்துள்ள மரங்களின் மதிப்பு பல கோடி ரூபாயாகும். அத்தனையும் இப்போது அரசாங்கத்தின் சொத்து.பதிலுக்கு அரசாங்கம் திம்மக்காவிற்கு மாதம் 500 ரூபாய் முதியோர் உதவித் தொகையும், வசிப்பதற்கு பெங்களுரூவில் ஒரு வீடும் வழங்கியது. 

என் எசமான் (சிக்கண்ணா) இறந்த பிறகு, என் பிள்ளைகள்தான் (மரங்கள்) என் உலகம். இவைளை விட்டு நான் எங்கேயும் வரலை என்று சொல்லிவிட்டு பெங்களுரூ வீட்டை திருப்பிக் கொடுத்து விட்ட திம்மக்கா கூதூரிலேயே 500 ரூபாய் ஒய்வு ஊதியத்தில் தன் ‘பிள்ளைகளுடன் ’வாழ்ந்து வருகிறார். வீட்டில் இருக்கும் நேரத்தைவிட மரங்களுடன் செலவழிக்கும் நேரமே அதிகம். 

எண்பது வயதைத் தாண்டிவிட்ட திம்மக்கா தொடர்ந்து தொலைதூரம் சென்று தண்ணீர் சுமந்துவர முடியாத சூழ்நிலையில், புதிதாக மரமேதும் வளர்க்கவில்லை, ஏற்கனவே வைத்து, வளர்த்த மரங்களை மட்டும் பாதுகாத்து வருகிறார். வளர்ந்த மரங்களும் திம்மக்கா தங்கள் பக்கம்வரும்போது குளிர்ந்த காற்றை வீசியபடியும், ‘அம்மா எங்கள விட்டு எங்கேயும் போயிடாதீங்கம்மா’பேசியபடியும் காணப்படுகின்றன.

இன்பச் சுற்றுலாவுக்கு பெண்களை அனுப்பி வை


"நான், காஷ்மீருக்கு இன்பச் சுற்றுலா செல்லத் திட்டமிட்டுள்ளேன்; உனது வீட்டுக்கு அருகில் வசிக்கும் இரு பெண்களை, என்னுடன் அனுப்பி வை' என, கோவை ஆடிட்டருக்கு, அரசு உயரதிகாரி பெயரில் தந்தி அனுப்பியதாக, கோவை, "மாஜி' உதவி நகரமைப்பு அலுவலர் நேற்று கைது செய்யப்பட்டார்.

கோவை-சத்தி ரோட்டிலுள்ள, அலமு நகரில் வசிப்பவர் பரமசிவம்; ஆடிட்டர். இவருக்கு, சென்னையில் பணியாற்றும் அரசு உயரதிகாரி ஒருவரின் பெயரில், தந்தி ஒன்று சமீபத்தில் வந்தது. அதில், "நான் வட மாநிலங்கள் மற்றும் காஷ்மீருக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டுள்ளேன். என்னுடன் உங்கள் பகுதியில் வசிக்கும் இரு பெண்களை (பெயர் குறிப்பிட்டு) அனுப்பி வை' என, குறிப்பிடப்பட்டிருந்தது. அதிர்ச்சியடைந்த பரமசிவம், சம்பந்தப்பட்ட அதிகாரியைத் தொடர்பு கொண்டு விசாரித்த போது, முன்விரோதம் காரணமாக, யாரோ ஒரு நபர் தந்தி அனுப்பி, இரு பெண்களையும் மன ரீதியான டார்ச்சருக்கு உள்ளாக்க முயன்றது தெரியவந்தது. இச்சம்பவம் நடந்த அடுத்த சில நாட்களில், அலமு நகரில் வசிக்கும் மேலும் சில பெண்களுக்கு, "பழனிச்சாமி' என்ற பெயரில் கடிதங்கள் வந்தன. கடிதத்தில், அப்பகுதி பெண்கள் சிலரை, மிகவும் கீழ்த்தரமாக விமர்சித்தும், வேறு சில நபர்களுடன் பாலியல் தொடர்புபடுத்தியும், வாசகங்கள் தெரிவிக்கப்பட்டிருந்தன.

தந்தி மற்றும் கடிதங்கள் இரண்டும், சென்னை நகரில் இருந்து வந்திருந்ததால், பாதிக்கப்பட்ட பெண்கள் உள்ளிட்டோர், சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். இவர்களது மனு, மாநகர மத்திய குற்றப்பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, தீவிர விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில், போலி பெயர்களில் தந்தி மற்றும் கடிதங்களை அனுப்பியது, அலமு நகரில் வசிக்கும் தங்கவேலு,50, என தெரியவந்தது. இவர், கோவை மாநகராட்சியில் உதவி நகரமைப்பு அலுவலராகப் பணியாற்றி, லஞ்ச முறைகேடு குற்றச்சாட்டுகளின் பேரில், "டிஸ்மிஸ்' செய்யப்பட்டவர். நேற்று காலை, கோவை அலமு நகருக்கு வந்த சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் அதிகாரிகள், தங்வேலுவை கைது செய்து அழைத்துச் சென்றனர்.

சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கூறியதாவது: கைது செய்யப்பட்டுள்ள தங்கவேலுக்கும், அலமு நகரில் வசிப்போருக்கும் இடையே பிரச்னை இருந்துள்ளது. தங்கவேலு, அஸ்வத் நகரில் உள்ள ரிசர்வ் சைட்டை ஆக்கிரமித்து வைத்திருந்தது தொடர்பாக, அப்பகுதி மக்கள் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்து, சட்டப்படியாக நிலத்தை மீட்டுள்ளனர். இதனால், அப்பகுதியில் வசிப்போரை பழிவாங்கும் விதமாகவும், பெண்களுக்கு மன ரீதியாக டார்ச்சர் கொடுக்கும் விதமாகவும், போலி பெயரில் தந்தி, ஆபாசக் கடிதங்களை அனுப்பியுள்ளதாக, விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. இதன் பேரில், அவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 419 - ஆள் மாறாட்டம், 467 - போலி ஆவணம் தயாரித்தல், 506(2) - கொலை மிரட்டல், பிரிவுகளில், வழக்குப்பதிவு செய்து, நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம். தங்கவேலு, கோவையில் இருந்து சென்னை வந்து பிரபல ஓட்டலில் தங்கியிருந்ததற்கான சில ஆவணங்களையும் பறிமுதல் செய்துள்ளோம். இவ்வாறு, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்தனர்.

ரஜினிகாந்த் லேட்டஸ்ட் புகைப்படம்


சூப்பர் ஸ்டார் ரஜினியை, அவரது நண்பரும் நடிகருமான மோகன்பாபுவின் மகள் லட்சுமி மஞ்சு சமீபத்தில் சந்தித்தது நினைவிருக்கலாம்.


இந்தச் சந்திப்பின்போது ரஜினியுடன் தான் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பின்னர் வெளியிடுவதாக லட்சுமி மஞ்சு தெரிவித்திருந்தார். அந்தப் படம் இப்போது வெளியாகியுள்ளது.

உடல் நலக்குறைவு ஏற்பட்டு, சிகிச்சையில் குணமடைந்த பிறகு சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள மகள் ஐஸ்வர்யா வீட்டில் தங்கி ஓய்வு எடுத்து வருகிறார் ரஜினி.
ரஜினி முன்பு போல் சுறுசுறுப்பாக இல்லை என்றும் ராணா படத்தை நிறுத்தப் போவதாகவும் தகவல்கள் வெளியாயின. ராணா வரலாற்று படம் என்பதால் கத்திச் சண்டை போடுவது, குதிரையேற்றம் போன்ற காட்சிகளில் ரஜினியால் நடிக்க இயலாது என்றும் கூறப்பட்டது. அண்ணாமலை, படையப்பா மாதிரியான கதையை தயார் செய்யும்படி ரஜினி அறிவுறுத்தி இருப்பதாகவும் செய்திகள் வந்தன. ஆனால் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் இதனை மறுத்தார்.

'ராணா' படம் நிறுத்தப்படவில்லை என்றும் விரைவில் படப்பிடிப்பு துவங்கும் என்றும் அவர் கூறினார். ரஜினி வீட்டில் ஓய்வு எடுத்த பிறகு அவரது அதிகாரப்பூர்வ படம் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. எனவே அவர் எப்படி இருக்கிறார் என்று அறிய முடியாமல் இது போன்ற சர்ச்சையான கருத்துகள் வெளிவந்த வண்ணம் இருந்தன.

தற்போது முதல் தடவையாக பூரண குணமடைந்த ரஜினியின் அதிகாரபூர்வ படம் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தை லட்சுமி மஞ்சு தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். இந்த படம் ரஜினி ரசிகர்களுக்கு தனது தசரா பரிசு எனக் கூறி வெளியிட்டுள்ளார் லட்சுமி!

பெற்ற மகளையே விபச்சாரத்தில் தள்ளிய பெற்றோர் (வீடியோ இணைப்பு)




விஜய் டிவியில் நடந்தது என்ன? என்ற நிகழ்ச்சியில் ஒளிபரப்பான கொடுமை சம்பவம் இது. வேறு எங்கோ அல்ல தமிழ்நாடு கேரளா எல்லையை ஒட்டி அமைந்துள்ள ஒரு கிராமத்தில் நடந்த இந்த கொடுமை.

கொடுமை 1

கொடுமை 2


நீங்கள் பேஸ்புக் உறுப்பினரா? இல்லையா?


* சமூக வலைதளத்தில், உங்களது சுய விவரங்கள் முழுவதையும், அனைவரும் பார்க்கும்படி வெளியிட வேண்டாம். ஏனெனில், "பேஸ் புக்' வலைதளத்தில், "ஸ்பை' என்ற பட்டனை "கிளிக்' செய்தால், உங்களது சுய விவரம் பற்றி அனைவரும் அறிந்து கொள்ள முடியும். எனவே, எச்சரிக்கையுடன், உங்கள் பதிவுகளை வெளியிட வேண்டும்.


* தெரியாத நபருடன் வலைதள நண்பராக இணைவதைத் தவிருங்கள்.

* புகைப்படங்கள் மற்றும் காட்சிப் பதிவுகளை, பிறருடன் சமூக வலைதளத்தில் பகிர்ந்து கொள்வதில், எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.

* கவர்ச்சி படங்கள், காட்சிப் பதிவுகளை உங்களது பதிவிலிருந்து நீக்கினால் நல்லது.

* கவர்ச்சியான மற்றும் தனிப்பட்ட குடும்ப மற்றும் பெண் நண்பர்களின் படங்களை வெளியிடுவதால், அதை சிலர் தவறாக பயன்படுத்த அதிக வாய்ப்புகள் உள்ளன.

கடந்த ஐந்தாண்டுகளாக, இணையத்தில் சமூக வலைதளங்களின் ஆக்கிரமிப்பு அதிகமாக உள்ளது. பிரபலமான "பேஸ்புக், ஆர்குட்' போன்ற நான்காயிரம் சமூக வலைதளங்கள், இணையதளத்தில் கொட்டிக் கிடக்கின்றன. இதில், செக்ஸ் மற்றும் ஆபாச தகவல்களுக்காக மட்டும் 3,000 வலைதளங்கள் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த இணையதளத்தின் முகப்பு பக்கத்தில் துவங்கி, ஆபாச தகவல்கள் படிப்படியாக, பல்வேறு இணையதளங்களின் வழியே நீண்டுக் கொண்டு செல்கின்றன. தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியானது, ஒரு புறம் நன்மைக்காக பயன்பட்டாலும், இன்றைய தலைமுறையினரை தவறான வழியில் சீரழிப்பதாகவும் மாறியுள்ளது.

"பேஸ்புக்'கில் பல லட்சம் உறுப்பினர்கள் இணைந்த வண்ணம் உள்ளனர். இது, தற்போது ஒரு குழுமம் அல்லது தனிநபர் பற்றிய தகவல்களின் தொகுப்பு இணையமாக, முதலிடத்தில் உள்ளது. மற்ற, "ஆர்குட், ஹை பைவ், ட்விட்டர்' போன்ற நெட்வொர்க்குகளும், சமமான உறுப்பினர்களைக் கொண்டுள்ளன. பள்ளி மாணவர்களை சுண்டியிழுக்கும் ஆபாச படங்கள் இணையதளங்களில் அதிகமாக உள்ளன. இவற்றின் மீது, தகவல் தொழில் நுட்பச் சட்டத்தின் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆபாச தளங்களை பார்க்க, எந்த கட்டுப்பாடும் வரையறுக்கப்படாததால், பல இளைஞர்களின் வாழ்க்கை சீரழிகிறது.

அந்தரங்க உறுப்பால் விபத்திலிருந்து காப்பாற்றப்பட்ட பெண்


விபத்து ஒன்றிலிருந்து ஒரு பெண்ணை அவரது முலைகளே காப்பாற்றிய ஆச்சரிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. பலத்த மழை பெய்து கொண்டிருந்த போது லிசா என்ற பெண் காரில் வீட்டுக்குச் சென்றுள்ளார்.

குறித்த கார் கட்டுப்பாட்டை இழந்து இன்னொரு வாகனத்துடன் கடுமையாக மோதியுள்ளது.

நுரையீரல் சிதைந்த நிலையிலும், விலா எலும்பில் நான்கு வெடிப்புக்களுடனும், மூக்கு உடைந்த நிலையிலும் தீ அணைப்பு வீரர்களால் காப்பாற்றப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.


ஆனால் அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் அவரது தாயாரிடம் முக்கியமான விடயம் ஒன்றைக் கூறினார்கள்.

அதாவது அவளது முலையில் ஏற்கனவே அறுவைச்சிகிச்சையின் மூலம் பொருத்தப்பட்ட சிலிக்கன் ஜெல் மட்டும் இல்லாவிட்டால் அவள் விபத்து நடந்த இடத்திலேயே இறந்திருப்பாள். அவை தான் தக்க சமயத்தில் airbag ஆக தொழிற்பட்டு அவளது இருதயத்தைப் பாதுகாத்தது.

குறித்த துயரமான சம்பவம் தொடர்பாக லிசா கருத்துத் தெரிவிக்கையில்,

நான் பழுதடைந்த நுரையீரலாலும் நொறுங்கிய விலா எலும்புகளாலும் கடுமையாகப் பாதிக்கப்படுள்ளேன்.

ஆனால் எனது chicken fillets க்கு நன்றியைத் தெரிவிக்கிறேன். ஏனெனில் அவை தான் எனது உயிரைப் பாதுகாத்தன. வேலை முடிந்து வீட்டுக்கு வந்த அன்று கார் ஓடி வரும் போது சீட் பெல்டையும் அணியவில்லை.


ஆனால் அதிஷ்டவசமாக விபத்து நடந்த அன்று இரவு இரண்டு implants பொருத்தப்பட்ட பிராவை அணிந்திருந்ததால் தப்பினேன்.


30E அளவில் 4000 ஸ்டேர்லிங் பவுண்கள் செலுத்தப்பட்டு பெரிதாக்கப்பட்ட முலைகள் தான் எனது உயிரைப் பாதுகாத்தது என்பதை பேரதிசயமாகப் பார்க்கிறேன் என்கிறார் அவர்.



    வண்டிக்கு பெட்ரோல் போடுவதில் இவ்வளவு சூட்சுமம் இருக்கிறதா?

    உங்கள் வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்பப் போகிறீர்களா….? அதற்கு முன் கீழே உள்ள தகவல்களைப் பற்றிச் சிந்தியுங்கள்…!!! எல்லா பெட்ரோல் பம்புகளும் தங்கள் சேமிப்புத் தொட்டிகளை நிலத்துக்கு அடியில் பதித்து வைத்திருக்கின்றன. நிலத்தின் வெப்பநிலை குளிர்ச்சியாக இருக்கும் போதே எரிபொருள் அடர்த்தியுடன் இருக்கும். வெப்பநிலை அதிகரிக்கும்போது, பெட்ரோல் விரிவடையும். 

    எனவே, மதியம், மாலையில் நீங்கள் ஒரு லிட்டர் பெட்ரோல் வாங்கினால், அது மிகச்சரியாக ஒரு லிட்டர் இருக்காது. எனவே, நிலத்தின் வெப்பநிலை குளிர்ச்சியாக இருக்கும் அதிகாலை நேரங்களில் வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்புங்கள்.
    பெட்ரோல் வணிகத்தில் வெப்ப அளவும், அடர்த்தியும் மிக முக்கியமானவை. பெட்ரோல் ஒரு டிகிரி அதிக வெப்பநிலையில் இருந்தால் அது மிகப் பெரிய மாற்றம். ஆனால் பெட்ரோல் பங்கில் இதுபோன்ற கட்டுப்பாடுகள் பார்க்கப்படுவதில்லை. அதேபோல உங்கள் வாகனத்தின் பெட்ரோல் தொட்டியை எப்பொழுதும் முழுமையாக நிரப்பாதீர்கள். 

    அதனால் உங்களுக்கு நஷ்டமே ஏற்படும். பாதி மட்டுமே நிரப்புங்கள். அதிக எரிபொருள் இருந்தால், அந்தத் தொட்டியில் காற்று குறைவாகவே இருக்கும். நாம் நினைப்பதைவிட வேகமாக பெட்ரோல் ஆவியாகக் கூடியது. பங்கின் பெட்ரோல் சேமிப்புத் தொட்டிகளில் மிதக்கும் கூரைகள் இருக்கும். இதன் காரணமாக உள்ளே பெட்ரோலுக்கும் காற்றுமண்டலத்துக்கும் இடையே இடைவெளி இருக்காது. எனவே, ஆவியாதல் குறையும். வாகன பெட்ரோல் தொட்டியில் பாதி நிரப்பினால், பெட்ரோல் ஆவியாவதை ஓரளவு குறைக்க முடியும்.

    அதேபோல நீங்கள் பெட்ரோல் நிரப்பப் போகும் போது தான், அந்த பங்கில் லாரியில் இருந்து பெட்ரோல் இறக்கப்படுகிறது என்றால், அப்போது வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள். கிடங்கின் அடியில் தேங்கியிருந்த கசடுகள் அப்போது கலங்கி இருக்கும். இது எஞ்சினை பாதிக்கும்.

    காதலனே கற்பை பறித்த இளம் பெண்ணின் உண்மைக்கதை (வீடியோ இணைப்பு)


    பல பெண்கள் இவ்வாறு முன்பின் தெரியாதவர்களுடன் நெருங்கிப்பழகி வாழ்வைத்தொலைத்த கதைகள் அன்றாடம் நடக்கின்றன , ஆனாலும் அவை மூடிமறைக்கப்பட்டுவிடுகின்றன, இந்த குறுந்திரைப்படம் இதுபோன்ற அப்பாவி பெண்களுக்கு விடப்படும் எச்சரிக்கை!
    ஓரிரு நாள் மட்டுமே பழக்கமான ஆணொருவருடன் நெருங்கிப்பழகும் பெண்ணின் நிலை என்னவாகும் என்பதை மிகவும் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கும் இந்த குறுத்திரைப்படம் பல விருதுகளையும் பெற்றுள்ளது,

    அடுத்த படத்தில் இதுவரை பார்க்காத விஜய்

    ஆரம்பகாலத்தில் காதலை மையமாகக் கொண்ட கதைக்களங்களில் நடித்து வந்தார் விஜய். ‘பூவே உனக்காக’ , ‘ காதலுக்கு மரியாதை’ போன்ற படங்களில் நடித்து வந்தவரை கமர்ஷியல் பாதையில் முழுமையாக திரும்பிய படம் ‘திருமலை’. அப்படத்திற்கு கிடைத்த வரவேற்பால் தொடர்ந்து கமர்ஷியல் படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.


    ‘திருமலை’ படத்தினை தொடர்ந்து ‘கில்லி’, ‘மதுர’, ‘திருப்பாச்சி’, ‘சிவகாசி’, ‘ஆதி’, ‘போக்கிரி’, ‘குருவி’, ‘வில்லு’, ‘வேட்டைக்காரன்’, ‘சுறா’, ‘வேலாயுதம்’ என நடித்த பல படங்கள் கமர்ஷியல் படங்கள். இடையில் ‘சச்சின்’, ‘காவலன்’ என சில படங்கள் மட்டுமே வேறு கதை களங்களில் நடித்தார்.

    விஜய் நடிப்பில் அடுத்ததாக வெளிவர இருக்கும் படங்கள் அனைத்துமே விஜய்யின் நடிப்பை வெளிப்படுத்தும் வகையில் அமைய இருப்பதாக, விஜய் ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் இருக்கிறார்கள். 
    ஷங்கர் இயக்கும் ‘நண்பன்’ படத்தில் விஜய்க்கு சண்டை காட்சிகள் எதுவுமே இல்லாமல் முழுக்க காமெடியில் பட்டைய கிளப்பி இருக்கிறாராம். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க இருக்கும் படத்தில் கூட இதுவரை பார்க்காத விஜய்யை பார்க்கலாம் என்கிறது படக்குழு.

    ஏ.ஆர்.முருகதாஸ் படத்தினை முடித்துவிட்டு கெளதம் மேனன் இயக்கும் ‘யோஹன்’ படத்தில் நடிக்க இருக்கிறார். அப்படத்தில் இன்டர்நேஷனல் ஏஜென்ட்டாக நடிக்க இருக்கிறார்.

    விஜய்யை வெவ்வேறு பரிமாணங்களில் அடுத்த அடுத்த படங்களில் பார்க்க இருப்பதால், வலைதளங்களில் அவரது ரசிகர்கள் மத்தியில் அதுகுறித்து கருத்து பரிமாற்றம் நடைபெற்று வருகிறது.

    ஐஸ்வர்யாவுக்கு,நாளை மறுநாள் பிரசவம்

    நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் நடிகை ஐஸ்வர்யாவுக்கு, நவம்பர் 17-ல் குழந்தை பிறக்கலாம் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். முன்னாள் உலக அழகியும், பாலிவுட்டின் முன்னணி நடிகையுமான ஐஸ்வர்யாவுக்கும், பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பின் மகன், அபிஷேக்கு பச்சனுக்கும் கடந்த 2007ம் ஆண்டு திருமணம் நடந்தது.


    சுமார் நான்கு ஆண்டுகள் கழித்து ஐஸ்வர்யாவுக்கு இப்போது தான் குழந்தை பிறக்க இருக்கிறது. தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் ஐஸ்வர்யா, மும்பையில் உள்ள செவன்ஹில்ஸ் மருத்துவமனையில், அதிநவீன வசதிகள் கொண்ட சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் மருத்துவமனையின் 5வது மாடியில், முக்கியமான நபர்களுக்காக 4 அறைகளை அமிதாப் குடும்பத்தினர் முன்பதிவு செய்துள்ளனர்.
    இதனிடையே ஐஸ்வர்யாவுக்கு எந்நேரமும் குழந்தை பிறக்கலாம் என்று மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றனர். இதுகுறித்து `செவன்ஹில்ஸ் மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகையில், “நிறைமாத கர்ப்பிணியான ஐஸ்வர்யாராய் எங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஐஸ்வர்யாராய்க்கு எந்த நேரமும் குழந்தை பிறக்கலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. வருகிற 17-ந்தேதி மதியம் குழந்தை பிறக்கும் என்று நாங்கள் தேதி குறிப்பிட்டுள்ளோம் என்றனர்.

    ஐஸ்வர்யா குழந்தை பிறப்பையொட்டி, செவன்ஹில்ஸ் மருத்துவமனையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    Facebook ல் தன்னுடைய நிர்வாண படத்தை உலாவவிட்ட பிரபல நடிகை

    தனது நிர்வாண புகைப்படத்தை போட்டோ சொப் உதவியுடன் கேவலமான முறையில் இறைவன படத்துடன் இணைத்து, அவரின் கீழ் பாகிஸ்தான் அணி வீரர் ஒருவர் மண்டியிடும் படத்தை இணைத்து தனது பேஸ்புக் ஃபான் பக்கத்தில் உலவ விட்டுள்ளார் கற்புக்கரசி பூணா.

    இவர் தனது ஃபேஸ்புக் செய்திக் குறிப்பில் இப் புகைப்படத்தை தனது ஃபான் ஒருவர் எடிட் செய்து அனுப்பியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அவரின் ஃபேஸ்புக் செய்தி வருமாறு.

    Hail the God of Cricket – Sachin Tendulkar scales yet another peak — 15k club..The first cricketer ever to score 15000 test runs…Kudos (Pic Mailed to me by my Fan) Hope u Love it .. muwaaaah!! Xox 




    ஆண்குறியால் கின்னஸ் உலகப்புகழ் அடைந்தவர்.

    உலகிலேயே மிகப்பெரிய ஆண்குறியைக் கொண்டவர் என்ற புகழை யோன் பல்கன் எனும் இளைஞன் பெற்றுள்ளார். இவரின் ஆண்குறியின் நீளம் 13.5இன்ஞ்கள் ஆகும். இவரின் இந்த சாதனை கின்னஸ் சாதனை புத்தகத்தில் பதியப்பட்டுள்ளது.

    எமது இணையத்தள வரைமுறை காரணமாக இவரின் ஆண்குறியின் படத்தினை வெளியிடவில்லை. சரி இவரின் முகத்தையாவது பாருங்களன்.

    windows laptop - ஐ, Apple Laptop ஆக எப்படி மாற்றுவது?




    இப்படித்தான் 

    புதிய திட்டங்கள் 43 - முதல்வர் ஜெயலலிதா முன்னேற்றம்.


    * கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வருவாய் கிராமங்கள் பெரிய அளவில் உள்ளன. எனவே, அவை மறுசீரமைப்பு செய்யப்படும்.

    * கன்னியாகுமரி மாவட்டத்தில் கடல் அரிப்பைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் மற்றும் விசாரணைகளை பொதுப்பணித் துறை மேற்கொள்ளும். 

    * நாகப்பட்டினத்தில் மீன்வள தொழில்நுட்ப கல்வி நிறுவனம் அமைக்கப்படும்.

    * பொன்னேரி வருவாய் கோட்டம் பிரிக்கப்பட்டு, அம்பத்தூரைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய வட்டம் அமைக்கப்படும். அதில், அம்பத்தூர், மாதவரம் தாலுகாக்கள் இருக்கும்.

    * சிவகாசி அரசு மருத்துவமனையில் தீக்காய சிகிச்சைப் பிரிவு அமைக்கப்படும்.

    * கோவையில் உள்ள மேட்டுப்பாளையம் சாலை, திருச்சி சாலை, அவிநாசி சாலை, பொள்ளாச்சி சாலை, சத்தியமங்கலம் சாலைகள் மேம்படுத்தப்படும்.

    * உக்கடம், ஆத்துப்பாலம், வடக்கு சுற்றுச்சாலை ஆகிய இடங்களில் மேம்பாலங்கள் கட்டப்படும்.

    * ராமநாதபுரம் மாவட்டம் ஆழ்கடல் மீன்பிடிப்பு இனி, டோக்கன் முறை மூலம் ஒரு நாளைக்கு இரண்டு முறைக்கு மேல் அனுமதிக்கப்படும்.

    * அரியலூர் மாவட்டத்தில் சேதம் அடைந்துள்ள 42 கி.மீ. நீளமுள்ள சாலை சீரமைக்கப்படும்.
    * கனரக வாகனங்கள் செல்வதற்கு ஏற்ற வகையில் சாலைகள் அமைப்பது தொடர்பாக அந்த மாவட்டத்தில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.

    * ஈரோடு மாவட்டம் மாரியம்மன் கோயில் அருகே புதிய மேம்பாலம் அமைக்கப்படும்.


    * ஈரோடு மாவட்டம் சி.எஸ்.ஐ. தேவாலயம் அருகே சாலை விரிவுபடுத்தப்படும்.


    * காரமடை வழியாக உதகைக்குப் புதிய வழித்தடம் குறித்த சாத்தியக்கூறுகள் ஆராயப்படும்.


    * தூத்துக்குடி மாவட்டத்தில் சாலைப் போக்குவரத்தைக் குறைக்கும் வகையில் புதிய சரக்கு முனையம் அமைக்கப்படும்.


    * பெரியகுளம் - கொடை ரோடு சாலையை விரிவுபடுத்துவது குறித்து ஆராயப்படும்.


    * திருவண்ணாமலையில் நடைபெறும் மகாதீப திருவிழாவுக்கு மாநில அரசின் பங்கான 50 சதவீதம் 70 சதவீதமாக உயர்த்தப்படும்.


    * சித்ரா பௌர்ணமி தினம் மதப் பண்டிகையாக அறிவிக்கப்படுகிறது.


    * வேலூர் சி.எம்.சி. மருத்துவமனை சந்திப்பில் புதிய மேம்பாலம் அமைக்கப்படும்.


    * வேலூரில் சுற்றுச்சாலை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும்.


    * பட்டாசு ஆலைகளில் பணியாற்றுவோருக்கான பயிற்சி முகாம், சிவகாசியில் அமைக்கப்படும்.


    * நாமக்கல் புறநகர்ப்பகுதியில் பஸ் கட்டுமானத்துக்கான பிரிவு தொடங்கப்படும்.


    * கடலில் மீனவர்கள் காணாமல் போகும் நேரங்களில் தேவையின் அடிப்படையில் ஹெலிகாப்டர்கள் வாடகைக்கு அமர்த்தப்பட்டு தேடுதல் பணிகள் முடுக்கிவிடப்படும்.


    * தேடுதல் பணியில் ஈடுபடும் கடலோர போலீஸôருக்கு அதிவேக படகுகள் வழங்கப்படும்.


    * தூத்துக்குடி நகருக்கு கூடுதல் தண்ணீர் அளிக்கப்படும்.


    * தூத்துக்குடியில் ஒருங்கிணைந்த பஸ் நிலையம்.


    * தூத்துக்குடி வி.வி.டி. சந்திப்பில் புதிய மேம்பாலம் அமைக்கப்படும்.


    * பிளாஸ்டிக் கழிவுகளை பிரித்தெடுக்கும் பயிற்சி சுய உதவிக் குழுக்களுக்கு அளிக்கப்படும். அந்தக் கழிவுகளைக் கொண்டு சாலைகள் அமைக்கப்படும்.


    * எஸ்.எம்.எஸ். முறை மூலம் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ஆசிரியர்களின் வருகை பதிவு கணக்கிடப்படும்.


    * கடலூர் மாவட்டத்துக்கென ஒரு பெருந்திட்ட வளாகத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.


    * புதிதாக கட்டப்படும் அரசு விடுதிகளில் சூரிய மின் சக்தி அமைப்புகள் நிறுவப்படும்.


    * மேட்டூர் அணையில் இருந்து ஜூனில் தண்ணீர் திறக்கப்படுகிறது. அதற்கு முன்பாக, அங்குள்ள கால்வாய்களைத் தூர்வாரும் பணிக்கான நிர்வாக ஒப்புதல் ஜனவரியிலேயே அளிக்கப்படும்.


    * திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கால்வாய்களில் தண்ணீர் சீராகச் செல்லும் வகையில் ஒருங்கிணைந்த அளவில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படும்.


    * தருமபுரி மாவட்டம் வத்தல்மலையில் 12 கிலோ மீட்டர் நீளத்துக்கு இணைப்புச் சாலை திட்டம் செயல்படுத்தப்படும். இந்த மலைப்பகுதியில் சுற்றுலா தலமாக்க சுற்றுலாத் துறை நடவடிக்கை எடுக்கும்.


    * கிருஷ்ணகிரியில் உள்ள தோட்டக் கலை விவசாயிகள் பயன்பெறும் வகையில், அங்குள்ள மாம்பழங்களை கொள்முதல் செய்து, மாம்பழக் கூழுடன் பால் சேர்த்த கலவையை மதிய உணவுத் திட்டத்தில் வழங்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆவின் நிறுவனம் மேற்கொள்ளும்.


    * அரியலூர் மாவட்டம் மருதயாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைக்கப்படும்.


    * மேட்டூரில் இருந்து தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டவுடன் அனைத்து கால்வாய்களையும் பராமரிக்கும் பணி தொடங்கப்படும். அணை ஜுனில் திறக்கப்படும் போது, அவை நல்ல முறையில் இருப்பதற்கு வழி செய்யப்படும்.


    * தேசிய தோட்டக்கலை இயக்கத்தில் சிறிய வெங்காயத்தையும் சேர்த்து, அவற்றை பயிரிடும் விவசாயிகள் பயன்பெற நடவடிக்கை எடுக்கப்படும்.


    * பெரம்பலூர் மாவட்டத்தில் ஒழுங்கு முறை விற்பனை சந்தை அமைக்கப்படும்.


    * திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் விபத்து சிகிச்சைப் பிரிவு ஏற்படுத்தப்படும். இதன்மூலம், 60 கிலோமீட்டர் பயணம் செய்து சென்னையிலுள்ள ஸ்டான்லி மருத்துவமனைக்கு வருவது தவிர்க்கப்படும்.


    * மாற்றுத் திறனாளிகள் ஓய்வூதியம் பெறுவதற்கான குறைந்தபட்ச வயதின் அளவு 45-லிருந்து 18 ஆகக் குறைக்கப்படும்.


    * அனைத்து மாவட்டங்களிலும் சட்டப் பிரச்னைகளை எதிர்கொள்ள மாவட்ட ஆட்சியருக்கு தனி உதவியாளர் நியமிக்கப்படுவார்.


    * கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பிரிண்டருடன் இணைந்த லேப்டாப் கம்ப்யூட்டர்கள் வழங்கப்படும்.


    * தூத்துக்குடி மாவட்டம் கோரப்பள்ளம் கண்மாய் தூர்வாரப்பட்டு, அதன் கரைகள் பலப்படுத்தப்படும்.


    துபாய் : ஒரு ஷொட்டு - ஒரு குட்டு


    ஷொட்டு 

    பணித் திறன் குறைந்த வேலைகளுக்கான ரோபோக்களைத் தயாரிக்க துபையைச் சேர்ந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது. அபுதாபியில் உள்ள ராயல் குழும நிறுவனம் ஆள் உயரத்திலான ரோபோக்களைத் தயாரிக்க உள்ளது. மாதத்துக்கு 12 ரோபோக்களைத் தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ராயல் குழுமத்தின் அங்கமான பார்சிலோனாவைச் சேர்ந்த பிஏஎல் ரோபாட்டிக்ஸ் இது தொடர்பான ஆராய்ச்சியில் தீவிரம் காட்டி வந்தது. இதன் விளைவாக வர்த்தக ரீதியில் மனித உயரத்திலான ரோபோக்களை உருவாக்கியுள்ளது.


    இந்த ஆண்டு தொடக்கத்தில் இந்நிறுவனம் "ரீம்' எனப்படும் 1.65 மீட்டர் உயரமுள்ள ரோபோக்களை அறிமுகப்படுத்தியது. இந்த ரோபோக்கள் மணிக்கு 5 கி.மீ. வேகத்தில் செல்லக்கூடியது. இந்த ரோபோவில் தாமாக செயல்படும் "நேவிகேஷன் சிஸ்டம்' உள்ளது. "டச் ஸ்கிரீன்' உள்ளது. எத்தகைய தரையிலும் செயல்படக்கூடியது. இதனால் திறமை தேவைப்படாத பணியாளர்களுக்குப் பதிலாக இதைப் பயன்படுத்த முடியும். இதன் மூலம் சரக்குகளை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்குக் கொண்டு செல்ல பயன்படுத்தலாம். சமீபத்தில் அபுதாபியில் நடைபெற்ற தேசிய கண்காட்சியில் இந்த ரோபோவின் செயல்பாடு அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. இதையடுத்து 20 ரோபோக்களுக்கு உடனடியாக முன் பதிவு செய்யப்பட்டது. இப்போது இத்தகைய ரோபோக்களை தயாரிக்கும் பணியில் இந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் மாதத்துக்கு 12 ரோபோக்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக இந்த ஆலையின் உற்பத்தித் திறன் உயர்த்தப்படும் என்று நிறுவனத்தின் சந்தைப்பிரிவு மேலாளர் ஜோரியென் குய்ஜ் தெரிவித்தார்.


    இப்போது இந்நிறுவனம் தயாரிக்கும் ரோபோக்கள், வணிக வளாகங்கள், கண்காட்சி மையங்களில் பயன்படுத்தப்படுகின்றன. அடுத்த கட்டமாக மருத்துவமனைகள், விமான நிலையங்களில் பயன்படுத்தும் அளவுக்கு இதன் செயல்பாட்டை உயர்த்தத் திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

    இதில் லித்தியம் பேட்டரி இருப்பதால் ஒரு முறை ரீசார்ஜ் செய்தால் இது 8 மணி நேரம் வரை செயல்படும். ஒரு ரோபோவின் விலை 2,69,157 டாலர். இந்திய மதிப்பில் ரூ. 1.44 கோடி. இத்தகைய ரோபோக்கள் பயன்படுத்தப்பட்டால் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிக்கும். ஆள் பற்றாக்குறை நிலவும் நாடுகளுக்கு இத்தகைய ரோபோக்கள் வரப்பிரசாதமாகும்.

    ******************************************************

    குட்டு 

    கள்ள மதுபான விற்பனையில் ஈடுபட்டுவந்த 2 இந்தியர்களுக்கு வெவ்வேறு குற்றச் செயல்களுக்காக மரண தண்டனை விதிக்கப்பட்டது.

    ஐக்கிய அரபு சிற்றரசு நாட்டின் நீதிமன்றம் இத் தீர்ப்பை விதித்தது. 2009-ம் ஆண்டு நடைபெற்ற இச் சம்பவத்தில், போட்டிக் குழுவைச் சேர்ந்த 2 இந்தியர்களை மற்றொரு கள்ளச் சாராய கோஷ்டி கடத்திச் சென்று பாலியல் ரீதியாகத் துன்புறுத்தி அடித்து உதைத்து சித்திரவதை செய்து இறுதியில் கொன்று எங்கோ புதைத்துவிட்டது என்று அரசுத் தரப்பில் வழக்கு தொடுக்கப்பட்டது.

    கள்ளச் சாராய விற்பனையில் ஈடுபட்ட இரண்டு கோஷ்டிகளிலுமே இந்தியர்கள் இருந்துள்ளனர். இச் சம்பவத்தில் தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு வயது 20 முதல் 30 வரைதான் ஆகிறது. குடிபோதையில் இச் செயல்களை அவர்கள் செய்துள்ளனர்.

    முதலில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ஒரு எதிரிக்குத்தான் மரண தண்டனை விதித்தார். அரசுத்தரப்பு மேல் முறையீடு செய்ததால் வழக்கில் மறுவிசாரணை நடந்தது.

    அதன் பிறகே இச் செயலில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்ட 2 பேருக்கு மரண தண்டனையும் 2 பேருக்கு 15 ஆண்டுகள் சிறைவாசமும் 9 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது.

    சிறை வாசம் விதிக்கப்பட்டவர்கள் தண்டனைக் காலம் முடிந்ததும் இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பப்படுவர்.கொலை செய்யப்பட்டவர்கள், கொலை செய்ததாகக் கூறப்படுவோர் பெயர்களை நீதிமன்றம் வெளியிடவில்லை.