Saturday, April 23, 2011

இன்டர்வியூ போகாமலே வேலை?


”சுரேஷ் தன் லேப் டாப்பைத் திறந்து, மெயிலில் இன்-பாக்ஸை ஓபன் பண்ணிய அடுத்த நொடியில் பிரமித்துப் போகிறான். காரணம், அமெரிக்காவில் இருக்கும் புகழ்பெற்ற ஐ.டி. கம்பெனியில் இருந்து அவனுக்கு வேலைக்கு அழைப்பு வந்திருக்கிறது.

சந்தோஷத்துடன் விஷயத்தை அம்மா, அப்பாவிடம் சொல்கிறான். அப்பா, உற்சாகமாகி மகன் அமெரிக்காவுக்கு போவதற்கு பாஸ்போர்ட் எடுப்பது, விசா வாங்குவது பற்றிய விசாரணையில் இறங்குகிறார்.

இதைக் கேள்விப்பட்ட அப்பாவின் நண்பர் ஒருவர், ‘ஏம்ப்பா… எப்ப நீ அந்த கம்பெனியில இன்டர்வியூ அட்டண்ட் பண்ணினே?’ எனக் கேட்க… அப்போதுதான் உறைக்கிறது சுரேஷ§க்கு… ‘இன்டர்வியூ அட்டண்ட் பண்ணாமலே எப்படி இது?!’ என்று! மெயிலை முழுமையாகப் படித்த பின்புதான் புரிந்தது அது ஏமாற்று வேலை என்பது!”
- இன்டெர்நெட் வழியாக ஏமாற்றும் வித்தைகள் பற்றி, விறுவிறுப்பாக திரைக்கதை வசனத்தோடு சொன்னார் ‘கெம்பா இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட்’ நிறுவனத்தின் இயக்குநர் கார்த்திகேயன்.


”இதைக்கேட்டதுமே… இன்டெர்நெட்டில் வேலை தேடுவது ஆபத்தானது என்று அச்சப்பட்டு பதுங்கிவிடக்கூடாது. காரணம், இன்றைய உலகில் இன்டர்நெட் இல்லாமல் இயங்கவே முடியாது என்ற சூழல்தான் நிலவுகிறது. அதுமட்டுமல்ல… இன்டர்நெட்டில்தான் ஏமாற வேண்டும் என்றில்லை. எப்படி வேண்டுமானாலும் ஏமாற்றப்படலாம் என்பதும் உண்மைதானே! எனவே, ஏமாறாமல் இருப்பது எப்படி என்பதைத் தெரிந்து கொள்வது அவசியம்.
‘நீங்க தமிழ்லயிருந்து இங்கிலீஷ§க்கு நல்லா டிரான்ஸ்லேட் பண்ணுவீங்களா? அப்ப எங்க வெப் அட்ரஸ்ல ரெஜிஸ்டர் பண்ணுங்க’; ‘வீட்டுல இருந்தபடியே ஒரு நாளைக்கு 100 டாலர் சம்பாதிக்கணுமா..? உடனே இந்த லிங்க் அட்ரஸ்ஸ கிளிக் பண்ணுங்க’ என்று ஆரம்பித்து, இரண்டு ஸ்டெப் போனதும், மூன்றாவது ஸ்டெப்பாக ’40 டாலரை முன் பணமா செலுத்துங்க. உங்க கிரெடிட் கார்டு நம்பரை ரெஜிஸ்டர் பண்ணுங்க’ என்று அந்த வெப்சைட் கேட்டால்… உடனே அலர்ட் ஆகிவிட வேண்டும். வேலை கொடுக்கும் எந்த ஒரிஜினல் நிறுவனங்களும் நம்மிடம் இருந்து முன்பணம் கட்ட சொல்ல மாட்டார்கள்!” என்று தெளிவு படுத்தியவர்,
”அதேபோல் ‘காக்னிசென்ட்’ நிறுவனத்தில் ‘டொமஸ்டிக் காலர்’ வேலைக்கு 400-500 ஆட்கள் தேவைப்படுகிறார்கள் என்று ஒரு வெப்சைட்டில் விளம்பரம் வந்தால்… அது வடிகட்டின பொய்; ஏமாற்றுத் தந்திரம். அம்மாதிரியான பெரிய நிறுவனங்கள் மிடில் லெவலில் உள்ள வேலைகளுக்கு வெப்சைட்டில் விளம்பரம் கொடுக்க மாட்டார்கள் என்பதுதான் நிதர்சனம்!” என்று எச்சரித்தார்.
நிறைவாக, ”வேலை தேடுகிறேன் என்ற வேகத்தில் கிடைக்கிற அத்தனை ஜாப்-போர்ட்டல்களிலும் பயோடேட்டாவை போஸ்ட் செய்தால், அதை இன்னொரு ஏமாற்றுக் கம்பெனி கையில் எடுத்து, நீங்கள் அவர்களிடம் ரெஜிஸ்டர் செய்தது போல் மிஸ்யூஸ் பண்ணுவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே, நீங்கள் ரெஜிஸ்டர் செய்த போர்ட்டலில் அல்லாமல் வேறு யாரிடம் இருந்து ‘உங்களுக்கு வேலை தயார்’ என்று மெயில் வந்தாலும் அலட்சியம் செய்துவிடுங்கள்!” என்றார் கார்த்திகேயன் அக்கறையோடு!
வேலை தேடும் ஆர்வத்தில் ஹைடெக்காக ஏமாறாமல் இருக்க வேண்டியதும் முக்கியம் ஃப்ரெண்ட்ஸ்!

ATM இல் நமக்கு தெரியாத ஒரு வித்தை


இது ஒரு முக்கியமான டிப்ஸ்:

 நீங்கள் ஒரு ATM -ல் பணம் எடுக்க செல்லும்போது எதிர்பாராதவிதமாக உங்களை ஒரு திருடன் மிரட்டி பணத்தை எடுக்க சொன்னால் என்ன செய்ய வேண்டும்.                      
    நீங்கள் அவனுடன் எந்த விவாதமும்,கெஞ்சலும் செய்ய வேண்டாம். மிகவும் எளிதாக உங்களுடைய ATM PIN Number -இய் தலைகீழ் மார்க்கமாக Enter  செய்யுங்கள்.
 எடுத்துகாட்டாக:
  உங்களுடைய  PINNumber 1234 என்றால் 4321 என்று Enter  செய்யுங்கள்.

 இவ்வாறு உங்கள் PINNumber type செய்தால் ATM மிஷன்-ல் இருந்து பணம் வெளியில் வரும்.ஆனால் பாதியிலேயே பணம் சிக்கி கொள்ளும். அதோடு  மட்டுமில்லாமல்  ஓசைபடாமல் போலீஸ்-க்கும்  தகவல்  அளித்துவிடும் .  அனைத்து ATM -ம் இந்த வசதியை கொண்டுள்ளது.ஆனால் இந்த வசதி இருப்பது பெரும்பாலானவருக்கு தெரியாத ஒன்று.
     தயது செய்து இதை சோதித்து பார்க்க முயலாதீர்.நீங்கள் ஆபத்தில் இருக்கும் போது மட்டுமே பயன்படுத்துங்கள்

எவன்தான் கண்டுபிடிச்சானோ இந்த இண்டர்நெட்டை

எங்கு பார்த்தாலும் கம்ப்யூட்டர்... கம்ப்யூட்டர்...! இந்த அதிசயக் கருவியை கண்டுபிடித்த பிதாமகன் யார்?

'டிஃபரன்ஸ் இன்ஜின்' என்பதுதான் முதல் கம்ப்யூட்டர். இந்த கான்செப்டை 1786-ம் ஆண்டில் உருவாக்கியவர் ஜெ.ஹெச்.முல்லர். அதன் பிறகு, அந்த விஷயத்தையே மறந்துவிட்டார்கள். ஆனால், அதே கான்செப்டை கையிலெடுத்து, 1822-ம் ஆண்டில் கட்டமைத்தார் 'சார்லஸ் பாப்பேஜ்'. இவரைத்தான், 'கம்ப்யூட்டரின் தந்தை' என்கிறார்கள். இவர் கட்டமைத்த கம்ப்யூட்டர், கால ஓட்டத்தில் பல்வேறு நிபுணர்களின் கை வண்ணத்தால், பல பரிணாமங்களைக் கண்டு... இப்போது நாம் உபயோகிக்கும் கம்ப்யூட்டர் வரை வந்து நிற்கிறது.
--------------------------------------------------------------------------------
இன்டெர்நெட்டை யார் கண்டுபிடித்தார்கள்?

உலகை ஆளும் 'இன்டெர்நெட்'டை உருவாக்கியவர் ஒரே ஒரு மனிதர் அல்ல. அது பல அறிஞர்களின் உழைப்பால் விளைந்தது, படிப்படியாக வளர்ந்து, www (world wide web) என்ற நிலையை அடைந்துள்ளது.

முதன் முதலாக 1961-ல் இதனை உருவாக்கியவர் லியோநார்டு க்ளெய்ன்ராக் (Leonard Kleinrock) என்பவர். 1962-ல் ஜெ.சி.ஆர். லிக்லிடெர் என்பவர், லியேநார்டுடன் இணைந்து புது வலைதள ஐடியாவை உருவாக்கி, ARPANET என்று பெயரிட்டார். 1968-ல் 'நெட்வொர்க் வொர்க்கிங் குரூப்' என்ற நிறுவனம் இதனை இன்னும் நெறிப்படுத்தியது. 1969-ல் 'யு.சி.எல்.ஏ.' என்ற நிறுவனம் பொதுமக்களின் பயன்பாட்டுக்கான இன்டெர்நெட்டை அறிமுகப்படுத்தியது.
--------------------------------------------------------------------------------
மெயில் அனுப்புவது என்றாலே... ஒரு காலத்தில் அது 'யாஹ"' என்பதாகத்தான் இருந்தது. 1990-களில் சி.வி. எனப்படும் 'கரிகுலம் வீட்டாய்' எழுதும்போது 'யாஹ"' மெயில் ஐடி இருப்பதை கௌரவமாகக் குறிப்பிடுவார்கள். அதன் பிறகுதான் பல நிறுவனங்கள் களத்தில் இறங்கின. அத்தகைய பெருமைக்குரிய யாஹ" நிறுவனத்தை நிறுவியவர்கள்... ஜெரி யாங், டேவிட் ஃபிலோ ஆகியோர்தான்.
--------------------------------------------------------------------------------
'கூகுள்' என்ற ஸர்ச் இன்ஜினுக்குள் (Search engine) நுழைந்து, வெண்டைக்காய் முதல் விண்வெளி ஆராய்ச்சி வரை அனைத்துத் தகவல்களையும் பெற முடிவது எப்படி? 1996-ல் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்திலிருந்து லேரி பேஜ், செர்கே பிரின் என்ற இருவர், 'ஸர்ச் இன்ஜின்' எனும் தேடு தளங்கள் குறித்து ஆராய்ச்சி செய்தார்கள். அதில் இணையதளத்தில் ஒரு குறிப்பிட்ட பெயர், பல ஆயிரம் முறை பதிவாகியுள்ளதைக் கண்டுபிடித்தனர். அதுவரை அந்த நிறுவனம் ஒரு கம்பெனியாக முறையாக பதிவு செய்யப்படவில்லை. 1998, செப்டம்பர் 7-ம் தேதி அந்தக் கம்பெனி பதிவு செய்யப்பட்டது. அதுதான் இன்றைக்கு உலகின் நெம்பர் ஒன் தேடுபொறி தளமாக இருக்கும் கூகுள்!
--------------------------------------------------------------------------------
'ஆர்குட்' எனப்படும் சோஷியல் நெட்வொர்க் முதலில் புழக்கத்துக்கு வந்தது... 2004 ஜனவரியில். உருவாக்கிய 'ஆர்குட்' பெயரிலேயே அது அழைக்கப்படுகிறது. ஆரம்பிக்கப்பட்ட ஓராண்டுக்குள் இதை அதிகம் பயன்படுத்தியவர்கள் அமெரிக்கர்கள்தான். அதன் புகழ் பரவியதும்... பிரேஸில்காரர்கள் அதிகம் பயன்படுத்த ஆரம்பித்தார்கள். இப்போது இந்தியா அந்த வரிசையில் நிற்கிறது. அமெரிக்கர்களோ... வேறு சைட்டுக்கு தாவி விட்டார்கள்.
--------------------------------------------------------------------------------
கண்ணுக்குத் தெரியாத 'செல்' தொடங்கி, காணவே முடியாத 'அண்டம்' வரை உலகின் அனைத்து விஷயங்கள் குறித்தும் பக்கம் பக்கமாக தகவல்களை நிரப்பி வைத்திருக்கும் விக்கிபீடியா... ஓர் ஆச்சரிய என்சைக்ளேபீடியா. 'ஜிம்போ' என்றழைக்கப்படும் ஜிம்மி டோனல் (Jimmy Donal) என்ற அமெரிக்கர்தான் இந்த விக்கிபீடியாவை நிறுவியவர்.
--------------------------------------------------------------------------------
கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தில் லேட்டஸ்ட்டாக உலகையே தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துக் கொண்டிருப்பவர் பிரணவ் மிஸ்ட்ரி எனும் இந்தியர். இவர் சொல்ல ஆரம்பித்திருக்கும் 'சிக்ஸ்த் சென்ஸ்' எனும் டெக்னாலஜி... பிரமிப்பின் உச்சிக்கே செல்ல வைக்கிறது. 'மானிட்டர் தேவையில்லை, சி.பி.யு. தேவையில்லை. ஆனாலும் கம்ப்யூட்டர் உண்டு. அதுவும் உங்கள் ஒவ்வொருவரிடமும் உண்டு' என்கிறார். தீப்பெட்டி மற்றும் மேளக்காரரின் கை விரல் முனைகளில் இருக்கும் உறை ஆகியவை போல சின்னஞ்சிறு கருவிகள் ஒன்றிரண்டை வைத்துக் கொண்டே... போட்டோ எடுக்கிறார், கட் அண்ட் பேஸ்ட் செய்கிறார், புத்தகத்தில் இருப்பதை காப்பி செய்கிறார். இந்தக் கம்ப்யூட்டருக்கு.... சுவர், பேப்பர், கைகள், சட்டை, சோபா... இப்படி எல்லாமே மானிட்டர்கள்தான்!
---------------------------------------------------

இஸ்லாமியர்களுக்கு என தனி இன்டெர்நெட்






உலகம் முழுவதும் வசித்துவரும் இஸ்லாமியர்களுக்கு என தனி இன்டெர்நெட் விரைவில் உருவாக்கப்படும் என ஈரான் அறிவித்துள்ளது.
 தற்போது வேர்ல்டு வைட் வெப் என்றழைக்கப்படும் இன்டெர்நெட் மூலம் அனைத்து மக்களுக்கும், அனைத்து தகவல்களும் உடனுக்குடன் கிடைத்துவருகிறது. இந்த இன்டெர்நெட்டில் அமெரிக்கா முக்கியமான பங்கை வகிக்கிறது. பெரும்பாலான சைட்டுகள் அமெரிக்காவை மையமாக கொண்டே செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்டெர்நெட்டில் அமெரிக்காவின் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக ஈரான் அரசு இஸ்லாமிய மக்களுக்கு என தனியான இன்டெர்நெட்டை உருவாக்க உள்ளது. இந்த இன்டெர்நெட்டில் இஸ்லாமின் கொள்கைகள், சர்வதேச தகவல் பரிமாற்றத்திற்காக பார்ஸி மொழியை மேம்படுத்துவது போன்றவை உட்பட பல்வேறு தகவல்கள் இடம் பெறும் வகையில் உருவாக்கப்பட உள்ளது என ஈரான் அரசின்பொருளாதார பிரிவை சேர்ந்த அலி அக்வமொகம்மதி தெரிவித்துள்ளார்.

டிஜிட்டல் ஓட்டலுக்கு வாருங்கள்


நம்மூர் ஓட்டலில் கரும்பலகையில் இன்றைய ஸ்பெஷல் என்று எழுதி வைப்பதற்கு பதிலாக  டிஜிட்டல் பலகையில் அன்றைய ஸ்பெஷல் உணவுகள் மின்னினால் எப்படி இருக்கும்?  அதோடு ஓட்டலின் சிறப்பு உணவு பற்றிய வாடிக்கையாளர்களின் டிவிட்டர் பதிவுகளும் வரிசையாக மின்னிக்கொண்டிருந் தால் எப்படி இருக்கும்?
வருங்கால ஓட்டல்கள் இப்படி இருக்குமா? என்பது தெரியவில்லை. ஆனால் ஓட்டல்கள் இவ்வாறு டிவிட்டர் போன்ற சேவையை அரவணைத்துக்கொண்டு புது யுகத்தில் அடியெடுத்து வைக்குமாயின் அந்த ஓட்டல்களின் முன்னோடி என 4 புட்  ரெஸ்டாரண்டை வர்ணிக்கலாம். அமெரிக்காவில் ரெஸ்டாரண்டுகளின் சொர்க்கபுரி என்று வர்ணிக்கப்படும் நியூயார்க் நகரில் துவக்கப் பட்டுள்ள இந்த ஓட்டல் முழுக்க முழுக்க  இணைய யுகத்திற்கு ஏற்ற  யுத்திகளை கையாண்டு இருப்பதோடு  பழைய வழிகளையெல்லாம் கைகழுவி இருக்கிறது.
இந்த ரெஸ்டாடரண்டை பொறுத்தவரை  வாடிக்கையாளர்கள் தான் ராஜா. அவர்கள்தான் அதற்கு விளம்பர தூதர்களும் கூட. இன்னும் சொல்லப்போனால் வாடிக்கையாளர்கள்தான் அதன்  சமையல் கலைஞர்களும் கூட!

வழக்கமாக புதிய ரெஸ்டாரண்டை துவக்கும்போது பளிச் விளம்பரங்கள், அதிரடி தள்ளுபடி போன்ற யுத்திகளை கடைபிடிப்பது வழக்கம். அதற்கு மாறாக இந்த ரெஸ்டாரண்ட் முழுக்கு முழுக்க சமூக வலைப் பின்னல் சேவைகளான டிவிட்டர் மற்றும் பேஸ்புக்கை நம்பி துவங்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப  இந்த ரெஸ்டாரண்டின் உணவு தயாரிப்பு மற்றும் விநியோகமும், சமூக மயமாக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் புகழ் பெற்ற துரித  உணவு வகையான பர்கர் உணவை வழங்கும் நோக்கத்தோடு துவக்கப் பட்டுள்ள இந்த ரெஸ்டாரண்டில் நுழைந்ததுமே வாடிக்கையாளர்கள் ஹைடெக் வரவேற்புக்கு ஆளாகின்றனர். மெனு புத்தகம் போன்றவற்றிற்கு பதிலாக டிஜிட்டல் யுகத்தின் அடையாளச் சின்னமான ஐபேடு சாதனத்தின் மூலமாக பணியாளர்கள்  வாடிக்கையாளர்களிடம் ஆர்டரை எடுத்துக்கொள்கின்றனர். இதைத் தவிர வாடிக்கையாளர்களே பயன்படுத்திக்கொள்ளக்கூடிய வகையில் மேஜைகளிலும் ஐபேடு சாதனங்கள் வைக்கப்பட்டுள்ளன. மேஜைகளின் வைபீ இணைய வசதியும்  இருக்கிறது. ஐபேடில் ஆர்டர் செய்து விட்டு அமர்ந்திருந்தால் போதும் தானாக உணவு வந்து சேரும். இந்த டிஜிட்டல் வசதிகளை சாதரணமானது என்றே சொல்ல வேண்டும். எப்படியும் வருங்கால ஓட்டல்களில் ஐபேடு போன்ற கையடக்க கம்ப்யூட்டர் பலகைகள் புழக்கத்திற்கு வரப்போகின்றன.
4 புட் ரெஸ்டாரண்டில் விசேஷம் என்னவென்றால் அங்குள்ள டிவிட்டர் பலகைதான். ஐபேடில் உணவு  வகையை ஆர்டர் செய்தபடியே டிவிட்டர் பலகையில் ஓடிக்கொண்டிருக்கும் குறும்பதிவுகளை படித்துப் பார்க்கலாம். அந்த குறும்பதிவுகள் சக வாடிக்கையாளர்களால் பகிர்ந்து கொள்ளப்பட்டவை. எல்லாமே அந்த ரெஸ்டாரண்டின் பிரத்யேக உணவு வகை தொடர்பான கருத்துக்கள் ஆகும்.
இந்த குறும்பதிவுகளால் என்ன பயன் என்றால் அந்த ரெஸ்டாரண்டில் எந்த உணவு நன்றாக இருக்கிறது என்பதை இந்த பதிவுகள் மூலம் தெரிந்துகொள்ளலாம்.
இப்போது வழக்கமாக ஓட்டலுக்கு செல்லும் காட்சியை கற்பனை செய்துகொள்ளுங்கள். உள்ளே நுழைந் ததுமே  சர்வரிடம் சாப்பிட என்ன இருக்கிறது என்று கேட்போம் அல்லவா! சர்வரும் வரிசையாக உணவு வகைகளை மூச்சுவிடாமல் ஒப்பிப்பார்.
ஆனால் சாப்பிட எந்த உணவு நன்றாக இருக்கும் என்பதை அவரிடம் கேட்க முடியுமா? கேட்டால் சரியான பதில் கிடைக்குமா?
இப்போது மீண்டும் 4 புட் ரெஸ்டாரண்டுக்கு வாருங்கள். அங்கு இந்த பிரச்சனையே கிடையாது.  அந்த ரெஸ்டாரண்டில் உணவு சாப்பிட்டவர்கள் அது நன்றாக இருந்ததா? ஆம் எனில் எந்த விதத்தில் நன்றாக இருந்தது எனும் தங்களது சுவை அனுபவத்தை டிவிட்டர் பதிவுகளாக பகிர்ந்துகொள்கின்றனர்.  அந்த பதிவுகள் ரெஸ்டாரண்டின் டிவிட்டர் பலகையில் வெளியாகிக்கொண்டே இருக்கும். அதனை பார்த்து எந்த உணவை சாப்பிடலாம் என்பதை தேர்வு செய்து கொள்ளலாம்.
4புட் ரெஸ்டாரண்டு வாடிக்கையாளர்கள்  உணவு வகைகள் பற்றிய கருத்துக்களை பகிர்ந்துகொள்ள வழி செய்வதோடு நின்றுவிடவில்லை. உணவு வகைகளை தயார் செய்து கொள்ளும் உரிமையையும் அவர்களுக்கே வழங்குகிறது. அதாவது குறிப்பிட்ட வகையான பர்கரை மட்டுமே வாடிக்கையாளரின் தலையில் கட்டாமல்  பர்கருக்கான  விதவிதமான பொருட்களை பட்டியலுக்கு அவற்றிலிருந்து வாடிக்கையாளர்கள் தங்களுக்கு விருப்பமான பிரத்யேக பர்கரை  தயார் செய்துகொள்ள வழி செய்துள்ளது.
நம்பினால் நம்புங்கள் இவ்வாறு 9 கோடிக்கு மேற்பட்ட வகையான பர்கர்களை வாடிக்கையாளர்கள் உருவாக்கிக்கொள்ளலாம்.
அதுமட்டுமல்ல இந்த பர்கர்களுக்கு அவர்கள் தாங்கள் விரும்பும் பெயரிட்டு அதனை தங்களது டிவிட்டர் மற்றும் பேஸ்புக் பக்கங்கள் மூலம் நண்பர்களோடு பகிர்ந்துகொள்ளலாம். அவர்கள் பரிந்துரையை ஏற்று நண்பர்கள் குறிப்பிட்ட அந்த பர்கரை ஆர்டர் செய்தால் அதற்கேற்ற தள்ளுபடி அந்த வாடிக்கையாளருக்கு வழங்கப்படும். மாமூலான விளம்பர வழியை நாடாமல் இப்படி வாடிக்கையாளர்கள் தங்களது சொந்த பர்கரை உருவாக்கி அதனை தங்கள் சமூக வலைப்பின்னல் தளத்தின் மூலம் பிரபலமாக்குவதையே தனக்கான விளம்பரமாக இந்த ரெஸ்டாரண்டு கொண்டுள்ளது. 4 புட் புதுமை ஓட்டல் என்பதில் சந்தேகமில்லை.
முகவரி:www.4food.com

எனக்கு FACE BOOK தேவையில்லை


முதலில் கூகுல்.அதன் பிறகு பேஸ்புக்,யூடியூப்.நடுவே டிவிட்டர்,ஜிமெயில்.
இப்படி தினந்தோறும் விஜயம் செய்யும் இணையதளங்களின் பட்டியல் எல்லோருக்குமே உண்டு.இதில் வரிசை மாறலாம்.ஆனால் தினமும் தவறாமல் செல்லும் இணையதளங்கள் என்று சில நிச்சயமாக இருக்கும்.இவற்றில் சில இணையதளங்களில் மணிக்கணக்கில் செலவிடும் ப‌ழக்கம் சிலருக்கு இருக்கலாம்.
கெட்ட பழக்கம் என்று சொல்லும் அளவுக்கு சிலர் குறிப்பிட்ட அந்த தளங்களுக்கு அடிமையாகி இருப்பதுண்டு.அதாவது அவர்கள் நினைத்தாலும் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அந்த தளங்களில் அதிக நேரத்தை வீண‌டித்து கொண்டிருப்பார்கள்.
உதாரணத்திற்கு பேஸ்புக்கே கதி என இருக்கும் பேஸ்புக் பிரியர்கள் இருக்கின்றனர்.சதா யூடியூப்பில் விடியோ காட்சிகளாக பார்த்து கொண்டிருக்கும் யூடியூப் பிரியர்களும் இருக்கின்றனர்.கூகுலின் இமெயில் சேவையான ஜிமெயில் பற்றி சொல்லவே வேண்டாம்.புதிய இமெயில் வந்துள்ளதா என்று பார்க்க கை அடிக்கடி பரபரக்கும்.
இப்படி குறிப்பிட்ட இணையதளங்கள் மற்றும் இணைய சேவைகளுக்கு அடிமையாகி போவதை இணைய யுகத்தின் பலவீனம் என்றும் சொல்லலாம்.இதற்கு மாற்று மருந்து தேவை என்று நினைத்தால் அதற்கும் ஒரு இணையதளம் இருக்கிறது.கீப்மீஅவுட் இது அந்த இணையதள‌ம்.

அதாவது,நானே விரும்பினாலும்  அந்த இணையதளத்தின் பக்கம் போக அனுமதிக்க கூடாது என நீங்கள் கருதும் இணையதளங்களின் பட்டியலில்  இந்த தளத்தில் சமர்பித்தீர்கள் என்றால் அந்த தளங்களின் பக்கம் செல்லாமல் இந்த தளம் பார்த்து கொள்ளும்.
இனி பேஸ்புக் பக்கமே போககூடாது என சபதம் எடுத்து கொண்டு இந்த தளத்தில் பேஸ்புக் பெயரை சமர்பித்தீர்கள் என்றால் அதன் பிறகு பேஸ்புக் பக்கம் உங்கள் அனுமதிக்காமல் இந்த தளம் உங்களை காப்பாற்றும் .அந்த அளவுக்கு எல்லாம் கட்டுப்பாடு வேண்டாம் என்று நினைத்தாலும் தேவைக்கேற்ப கட்டுப்படுத்தி கொள்ளலாம்.
ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட நேரம் பேஸ்புக் பக்கம் போக அனுமதிக்காமல் இருக்கும் படி வரைமுறை செய்து கொள்ளலாம்.பேஸ்புக் என்பது உதாராணம் தான்.அவரவர் பழக்கம் மற்றும் விருப்பத்திற்கெ ஏற்ப எந்த தளத்தை வேண்டுமானாலும் குறிப்பிட்டு எப்படி வேண்டுமானாலும் கட்டுப்படுத்தி கொள்ளலாம்.
ஒவ்வொரு நாளும்,வாரத்தில் ஒரு நாள் அல்லது மாதத்தில் ஒரு நாள் விரதம் இருப்பது போல என எப்படி வேண்டுமானாலும் இணையவாசிகள் தங்களுக்கான கட்டுப்பட்டை நிர்ணயித்து கொள்ளலாம்.
இணையத்தில் சுயக்கட்டுப்பாடு இல்லாதவர்களுக்கு இந்த சேவை நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும் என்பதோடு தேவையானதாகவும் இருக்கும்.
இப்படி இணையவாசிகள் தங்களுக்கு தாங்களே விலங்கு மாட்டிக்கொள்ளும் இணையதளங்களில் இருந்து முன்ன‌ணி 10 இணையதளங்களின் பட்டியல் முகப்பு பக்கத்தில் இடம் பெறுகிறது.உங்களூக்கான தளம் அந்த பட்டியலில் இருந்தால் அதனை கிளிக் செய்து கொள்ளலாம்.
அதோடு சக இணையவாசிகள் எந்த தளங்களுக்கு எல்லாம அடிமையாக இருக்கின்றனர் என்னும் தகவலையும் இந்த‌பட்டியலை பார்த்து தெரிந்து கொள்ள‌லாம்.சுய கட்டுப்பாடு தேவை என்னும் அளவுக்கு எந்த தளங்கள் எல்லாம் இணைய உலகில் பிரபலமாக உள்ளன என்ற த‌கவலையும் இது தெரிவிக்கும்.
ஆங்கிலம் உள்ளிட்ட சில மொழிகளில் இந்த தளம் செயல்படுகிறது.பிரபலமான தளங்களின் பட்டியலில் ஆங்கிலம் தவிர பிற மொழி தளங்கள் சிலவும் இடம் பெறுகின்றன.அந்த வகையில் மற்ற மொழிகளில் கோலோச்சும் தளங்களையும் இதை பார்த்தே அறிய முடியும்.
இணையவாசிகள் தங்களை தாங்களே கட்டுப்படுத்தி கொள்ளவும் இந்த தளத்தை பயன்படுத்தலாம்.அல்லது பெரியவர்கள் தங்கள் பிள்ளைகள் பேஸ்புக் போன்ற தளங்களில் அதிக நேஅர்ம் செலவிடுவதை கட்டுப்படுத்த விரும்பினாலும் அவர்கள் சார்பில் இந்த  சேவையை பயன்படுத்த‌லாம்.
இணையதள முகவரி;http://keepmeout.com/en/

சைனா போனிலும் இன்டர்நெட் இருக்கு.

ஒரு காலத்தில் nokia மற்றும் standard கைபேசியில் மட்டுமே internet உபயோகிக்க முடியும்.
ஆனால் இப்போது china கைபேசியிலும் internet டை use பண்ணமுடியும்.
 இப்போது G'FIVE என்ற china மொபைலில்
aircel simமை பயன்படுத்தி internet பயன்படுத்துவது பற்றி பார்போம்


முதலில் உங்கள் கைபேசியில் menu பொத்தானை அழுத்தவும்.
பின்பு webயை தேர்வு செய்ய வேண்டும்.
அதன் பிறகு dada accountயை அழுத்தவும்
அடுத்து GPRS யை தேர்வு செய்யவும்.
பின்பு ஏதேனும் ஒரு settingகை தேர்வு செய்து edit பொத்தானை click செய்யவும்.
அடுத்து பின்வரும் setting கை கைபேசியில் எழுதவும்.
account name=ao
APN =aircelgprs.pr
பிறகு save பொத்தானை அழுத்தவும்.
பின்பு wap serviceயை click பண்ணவும்.
பிறகு settingகை தேர்வு செய்ய வேண்டும்,

அடுத்து edit accountயை தேர்வு செய்யவேண்டும்
பின்பு aircel accountடை click செய்து edit account டை click செய்யவும்.
அடுத்து பின்வரும் setting கை edit செய்யவும்.
account name=PI
homepage=www.google.com
data account=ao
connection type=HTTP அடுத்து use proxy=yes பின்பு proxy address=192.168.035.201 பின்பு proxy=8081
அடுத்து back பொத்தனை அழுத்தவும்.
பின்பு active accountடை தேர்வு செய்யவும்.
பின்பு back பொத்தானை 3 முறை அழுத்தவும்.
பிறகு homepageயை click செய்யவும்.
இப்போது google page load ஆகும்.

உங்கள் மொபைல் போன் தொலைந்து விட்டால் என்ன செய்வீர்கள்?

செல்போன்களை தொலைத்து விட்டால் அதனுடன் நாம் சேகரித்த

தகவல்கள் தொலைபேசி எண்கள் முதல் வீடியோக்கள் வரை அனைத்தும்

வீணாகிவிடும்.


இதுபோன்ற நேரங்களில் பல சிக்கல்கள் ஏற்படக்கூடும். செல்போன்களில் 

இருக்கும் தகவல்களை வேறு எங்காவது பத்திரப்படுத்தினால் மட்டுமே 
தகவல் இழப்பை தவிர்க்க முடியும். 

எனவே செல்போன்கள் தொலைந்துபோனால் கவலைப்பட இனி 
தேவையில்லை. அவ்வாறு செல்போன்களை தொலைத்து மன 
உளைச்சலில் இருப்பவர்கள் பின் வரும் WEBSITE பயன்படுத்தலாம்.

இந்த இணையத்தளம் நமது செல்போனில் உள்ள அனைத்து 
தகவல்களையும் ஆன்லைனில் சேமிக்கும் வசதியை 
http://www.mobyko.com/Home.do

என்னும் இணையத்தளம் வழங்குகிறது. பெரும்பாலும் இந்த வசதியை 
செல்போன்களுக்கு பயன்படுத்த முடியும்.


இந்த இணையத்தளத்தை பயன்படுத்த நாம் செய்ய வேண்டியது பின்வருவன :

இந்த இணையத்தளத்திற்கு சென்று நமது செல்போன் மாடலை தேர்வு 
செய்து , நமது செல்போன் எண்ணை அளிக்க வேண்டும்.

உடனே நமது CELL PHONE NUMBERக்கு ஒரு செய்தி ( Message ) வரும். 
அந்த செய்தியில் நமக்கு ரகசிய NUMBER அனுப்பி வைப்பார்கள். அந்த 
எண்ணை அடிப்படையாக வைத்து ஒரு புதிய கணக்கை தொடங்க 
வேண்டும்.

புதிய அக்கவுண்டை தொடங்கிய பின்னர் நமது தொலைபேசிக்கு 
அவர்களின் புரோகிராமை அனுப்பி வைப்பார்கள்.
 <=====> 



இதனை இணையத்தளத்தில் அளிக்கப்பட்டிருக்கும் வழிமுறைகளை 
பின்பற்றி , புரோகிராமை நமது செல்போனில் டவுன்லோடு
செய்துக்கொள்ள வேண்டும்.

அதன் பிறகு நமது செல்போனில் உள்ள வீடியோக்கள் , ஆடியோக்கள் 
அனைத்தும் ONLINEனில் சேமிக்கப்படும். 

அவ்வளவுதான் முடிந்ததது உங்களது வேலை. நமது செல்போன் 
தொலைந்து போனால் கூட புதிய செல்பேசிக்கு அனைத்து
தகவல்களையும் கொண்டு வர முடியும்.

அடடா! உண்மையிலேயே இது செல்போன் தானா?


இங்கு கையில் இருப்பது ஏதோ கண்ணாடி துண்டு என்று நினைக்காதிர்கள், இது ஒரு புதிய செல்போன் வடிவம் என்றால் உங்களால் நம்ப முடியுமா? 


ஆனால் உண்மை அதுதான்!



தென்கொரியா,ஜப்பான்,அமெரிக்க போன்ற நாடுகள், நம்மை போல ஜி.எஸ்.எம் நெட்வொர்க்கில் இல்லாமல், சி.டி.எம்.ஏ என்ற "சிம்கார்டு" இல்லாத நெட்வொர்க்கில், அதாங்க நம்ம ரிலைன்ஸ் செல்போன் போல இருப்பது நாம் அனைவரும் அறிந்ததே.

அதன் அடுத்த கட்டமாக தென்கொரிய செல்போன் வடிவமைப்பாளர்கள் புதிதாக அறிமுகப்படுத்தி இருக்கும் அதிநவீன தொழிநுட்ப வடிவமே இந்த செல்போன் இதன் பெயர் "விண்டோ மொபைல்".

இனி இந்த செல்போன் சிறப்பு அம்சத்தை பற்றி பாருங்கள்.

இருபக்கமும் ஒளி ஊடுருவும் வகையில் உள்ள ஒரு மெல்லிய கண்ணாடி போல் உள்ளது, இதன் நிறத்தை உங்களுக்கு பிடித்த நிறத்தில் மாற்றிக்கொள்ள முடியும், இதன் வெளி தோற்றம் வெயில், மேகமூட்டம், மழை அன்றைய வானிலைக்கு ஏற்றவாறு மாறிக்கொள்ளும் வகையில் வடிவமைத்து இருகிறார்கள்.

இன்று பனி என்றால்:
____________________



இன்று மழை என்றால்:
_____________________



இதில் தனியாக கீபோர்டு எதுவும் இல்லை, ஆனால் உங்கள் நண்பரின் பெயரை அல்லது நம்பரை சொல்லி "வாய்ஸ்டயல்" பண்ண முடியும், அல்லது உங்கள் விரலால் வேண்டிய நம்பரை எழுதியோ அல்லது சேமித்த நம்பரை எடுத்தோ தேவையான நபரை அழைக்க முடியும்.



மற்றும் இதில் கேமிரா, எஸ்.எம்.எஸ் போன்ற அணைத்து வசதிகளும் இருக்கிறது, உங்கள் எஸ்.எம்.எஸ்-சை விரலால் தொட்டு எழுதியும் வேண்டிய படங்களை வரைந்தும் அனுப்ப முடியும்.



இனி இந்த தொழில் நுட்பத்தை எந்த நிறுவனம் வாங்கி இந்த செல்போனை எப்போது வெளியிட போகிறது என்பது தான் இப்போது இங்கு பர பரப்பான பேச்சு.

அனேகமாக "சாம்சாங்" அல்லது "எல்.ஜி" நிறுவனம் இந்த தொழில் நுட்பத்தை வாங்க கூடும் என்று பரவலான பேச்சு தென்கொரியர்கள் இடையே உலவுகிறது.

சமிபத்தில் தான் "சாம்சாங்" நிறுவனம் தன் ஆகசிறிய கைகடிகாரமாக பயன் படுத்த கூடிய S9110 என்ற செல்போன் வடிவத்தை அறிமுகப்படுத்தியது இங்கு குறிப்படதக்கது.



தென்கொரிய சமூகத்தில் நவீன தொழிற்நுட்பம் எப்படி வளர்ந்து இருக்கிறது என்பதை இங்கு பாருங்கள் ("டிஜிடல் கொரியா" புத்தகத்தில் இருந்து).

பதினோரு மாத காலம், இதுதான் ஒரு செல்போன் கொரியர்களின் தங்கியிருக்கும் காலம். அதன் பிறகு பழைய போனை தூக்கியெறிந்து விட்டு அதி நவீன புதிய போனை, வாங்கி விடுகிறார்கள்.

செல்போன் வைத்திருப்போர்களில் 99 சதவீதம் பேர் காமிரா போன்ற வசதியுடன் கூடிய நவீன போன்களை வைத்திருக்கின்றனர். இவர்களில் அறுபத்திமூன்று சதவீதம் பேர் செல்போன் மூலமே கட்டணங்களை செலுத்தும் பழக்கம் கொண்டிருக்கின்றனர்.

செல்போன் வைத்திருப்பவர்களில் ஐம்பத்து சதவீததுக்கும் மேல் மூன்றாவது தலைமுறை செல்போன் களுக்கு மாறியிருக்கின்றனர். இதன் காரணமாக பெரும்பாலான தென் கொரியர்கள் செல்போனிலிருந்தே இன்டெர்நெட்டில் உலாவுகின்றனர்.



செல்போன் வைத்திருப்பவர்களில் ஒருசிலரை தவிர மற்றவர்கள் எல்லோரும் காசு கொடுத்து ரிங்டோன் வாங்குகின்றனர். ரிங் பேக் டோன் என்று சொல்லப்படும் புதுமையான ரிங்டோன் தென்கொரியாவில் உதயமானதுதான்.

தென்கொரிய மாணவர்களின் நாற்பது சதவீதம் பேர் வகுப்பறையிலிருந்தே எஸ்எம்எஸ் செய்திகளை அனுப்பி கொள்கின்றனர், முப்பது சதவீத மாணவர்கள் நாளொன்றுக்கு தோராயமாக நூறு எஸ்எம்எஸ்க்கு மேல் அனுப்புகின்றனர்.



இந்த தகவல்கள் சுவாரசியமாக இருந்தால், "ஓட்டளித்து உங்கள் நண்பர்களுடன்" இந்த பக்கத்தை பகிர்ந்து கொள்ளாமே?

WiFi - Wireless Fidelity


 (WiFi - Wireless Fidelity). இந்த தொழில்நுட்பம் பரவலாகி விட்ட நிலையில், பெரும்பாலான இடங்களில் நாம் சுவாசிக்கும் காற்றில் கூட இணையம் கலந்திருக்கும் வாய்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தொழிநுட்பப் பரிச்சயம் இல்லாத எவரும் எளிதில் உபயோகப்படுத்திக் கொள்ள ஏதுவான வகையில் வடமில்லா வலையமைப்பு உபகரணங்கள் கிடைக்கின்றன.


 எங்கெங்கும் WiFi மயம். ஏறத்தாழ உலகத்தில் மொத்தம் மூன்று லட்சத்திற்குமதிகமான வடமில்லா வலையமைப்பு மையங்கள் (WiFi Hot spots) இருப்பதாக புள்ளிவிவரங்கள் கோலம் போடுகின்றன. மிகக்குறுகிய காலத்தில் பிரம்மாண்டமான வளர்ச்சியை அடைந்திருக்கும் இந்த தொழில்நுட்பம் எப்படி செயல்படுகிறது, அவற்றை எப்படி சரியான முறையில் பயன்படுத்துவது, அவற்றில் மறைந்திருக்கும் அபாயங்கள் ஆகியவை குறித்து இத்தொடரில் காண்போம்.

மைக்கெல் மார்கஸ்

பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒரு அமைச்சர், பல்லாயிரம் கோடி அல்வா, வீட்டு முற்றத்துக்குள் பனித்து, இனித்து ஊத்தி மூடப்பட்ட கதைகள் போன்ற எந்த மசாலாவும் இன்றி 1985ஆம் ஆண்டு அமெரிக்க தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம், தொலைதொடர்பு தவிர்த்து மின்காந்த அலைகளைப் பய்னபடுத்தும் உபகரணங்களுக்கென ஒதுக்கப்பட்டிருந்த, (உ.தா. Microwave Ovens) சில அலைக்கற்றைகளை (900MHz, 2.4GHz, 5.8GHz spectrum :D) பொதுப்பயன்பாட்டுக்கு வழங்கியது. எவரும், எவ்வித முன்னனுமதியின்றி புகுந்து விளையாடிக் கொள்ளலாம் என்ற சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்பை வெளியிட்டது. இந்த அறிவிப்பின் பின்னணியிலிருந்தவர் மைக்கேல் மார்கஸ். மைக்கெல் மார்கஸ் பரிந்துரைத்த இம்முடிவால் தொலைதொடர்புத் தொழிலும், தொழில்நுட்பமும் பல பரிமாணங்களைத் தாண்டியிருக்கிறது.


சும்மா கிடைக்கும் அலைக்கற்றைகளை ஒவ்வொரு பிரிவினரும் தங்கள் தேவைக்கேற்ப பயன்படுத்த ஆரம்பித்தனர். அதன் பலனாக சந்தையில் அறிமுகமான பல தொழில்நுட்பங்களில் வடமில்லா வலையமைப்பும் (WiFi) ஒன்று. ஆரம்பத்தில் வடமில்லா வலையமைப்பு உபகரணங்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள் போட்டி போட்டு, முறுக்கிக் கொண்டு, தங்கள் வழி தனி வழி என்று பிரத்யேக வலையமைப்பு வழிமுறைகளைப் பயன்படுத்தினர் (network protocols). விளைவு ஒரு நிறுவனத்தின் உபகரணம் மற்றொரு நிறுவனத்தின் உபகரணத்தோடு தொடர்பு கொள்ள இயலாமல் போனது. இக்காரணத்தால் பொதுமக்களை இத்தொழில்நுட்பம் பெரிதாக ஈர்க்கவில்லை, மாறாக ஒரு சலிப்புணர்வையே ஏற்படுத்தியது. தொழில் மந்தமானதால் மனைமுடைந்து சரக்கடிக்க வந்த இடத்தில், முதலாளிகள் கூட்டுச் சேர்ந்தனர், அனைவருக்கும் பொதுவான ஒரு வலைத்தொடர்பு வழிமுறையை உருவாக்கி அதனைப் பின்பற்றும் வகையில் அவரவர் தங்கள் உபகரணங்களத் தயாரித்து சந்தைப் படுத்துவதென முடிவு செய்தனர்.

அனைவரும் ஏற்றுக்கொள்ளத் தக்க பொதுவான வழிமுறைகளை வடிவமைக்கும் பொறுப்பு IEEE (Institute of Electrical and Electronics Engineers) வசம் 1988ஆம் ஆண்டு ஒப்படைக்கப்பட்டது. ஒன்பது ஆண்டுகள் பலமுறை விவாதித்து, சண்டை சச்சரவுகளை அடக்கிக் கட்டப்பஞ்சாயத்துகள் பல செய்யப்பட்டு 1997ல் 802.11 என்ற வடமில்லா வலையமைப்புக்கென பிரத்யேகமான, பொதுவான தொடர்பு வழிமுறை வெளியிடப்பட்டது. இதன் பின்னர் தான் WiFiன் பிரம்மாண்டம் சாமன்யர்களின் வரவேற்பறை வரை ஆக்கிரமித்த அற்புதங்கள் நிகழ ஆரம்பித்தன.


ஒரே அலைக்கற்றைகளை பல உபகரணங்கள் (WiFi, Microwave ovens) பயன்படுத்தும் போது எவ்வாறு தகவல்கள் சேதாரமில்லாமல் பயணிக்கின்றன என்ற சந்தேகம் இதுவரை எழாத அன்பர்கள் முகத்தை கழுவிவிட்டு மீண்டும் துவக்கத்திலிருந்து படிக்கவும் :). இந்தச் சிக்கலைத் தவிர்க்க இரண்டு விதமான தீர்வுகள் கையாளப்படுகின்றன. ஒன்று குறிப்பிட்ட கால இடைவெளியிலோ அல்லது தகவல் பறிமாற்றம் பாதிக்கப்படும்போதோ தொடர்பு அலைவரிசையை மாற்றித் தருவது (frequency-hopping spread spectrum), மற்றொன்று ஒரே நேரத்தில் பல அலைவரிசைகளில் கலந்து கட்டி தகவல்களை அனுப்பவது (direct sequence spread spectrum). ஒன்றுக்கு மேற்பட்ட உபகரணங்களில் மின்காந்த அலைத்தொடர்புகள் மோதிக்கொள்ளும் போது(signal interference), அதனைச் சமாளிக்க மேற்சொன்ன இரண்டு வழிகளும் பின்பற்றப்படுகின்றன. உங்கள் செல்பேசியில் அழைப்பு வரும் போது அருகிலிருக்கு தொலைக்காட்சிப்பெட்டியோ அல்லது வானொலிப் பெட்டியோ சீற்றம் கொள்வது ஒரு உதாரணம்.

ஆரம்பத்தில் 2 Mbps வேகத்தில் தவழ ஆரம்பித்த வடமில்லா வலையமைப்பு இன்று 54 Mbps வேகத்தில் வேகமெடுத்து ஓடிக்கொண்டிருக்கிறது. வேகத்திற்குத் தகுந்த மாற்றங்களை தொடர்பு வழிமுறையான 802.11 பிரதிபலிக்கத் தவறவில்லை. ஒவ்வொரு மாற்றத்திற்குப் பின்னும் 802.11a,802.11b,802.11g மற்றும் 802.11n வழிமுறைகளின் பெயர்களும் மாற்றம் பெற்றன. ஒவ்வொரு வழிமுறையின் செயல்விவரங்கள் கீழே.

802.11a - 5GHz அலைவரிசை - 54Mbps வேகம்
802.11b - 2.4GHz அலைவரிசை - 11 Mbps வேகம்
802.11g - 2.4GHz அலைவரிசை - 54Mbps வேகம்
802.11n(draft) - 2.4GHz அலைவரிசை - 100 Mbps வேகம்

வேகத்திற்கேற்ப விலை. இவற்றுள் 802.11a 5GHzல் செயல்படும் திறன் கொண்டதால் விலை அதிகம் மற்றும் பயணிக்கும் தூரம் குறைவு. 2.4GHzல் செயல்படும் இதரவகைகள் அதே அலைக்கற்றையை பயன்படுத்தும் microwave oven, chordless telephone மற்றும் bluetooth உபகரணங்களால் தொல்லையைக் கொடுத்தாலும் அவற்றின் வேகத்திற்கு அடக்கமான விலையில் கிடைக்கும். 802.11b மற்றும் 802.11g பெரும்பாலும் அனைத்து இடங்களிலும் கிடைக்கும். 802.11n சந்தைக்குப் புதிது, இன்னும் அனைத்து இடங்களுக்கும் சென்றடையவில்லை.

மேற்சொன்ன விவரங்களை மனப்பாடம் செய்து கொண்டு , அடுத்த முறை கடைக்குச் சென்று வடமில்லா வலையமைப்பு உபகரணங்கள் வாங்கும் போது அவற்றின் வழிமுறை வகைகளைப் (802.11a,b,g,n) பற்றிய கேள்விகளைஅள்ளி விட்டு கடைக்காரரை அரள விடப்போகும் அன்பர்களுக்கு வாழ்த்துக்கள் :). அவ்வாறு கேள்விகள் கேட்கும் போது சுற்றியிருக்கும் அனைவரும் உங்களைப் பார்க்கும் பார்வையின் போதையே தனி, அனுபவித்துப் பார்க்கவும் :D.

அடுத்து என்னென்ன உபகரணங்கள் சந்தையில் கிடைக்கின்றன, அவற்றின் பயன் ஆகியவை குறித்து. இப்பொழுது வெளிவரும் அனேக செல்பேசிகள்/மடிக்கணினிகளில் வடமில்லா வலையமைப்பு வசதியோடே வருகின்றன. எனவே அவற்றைப் பயன்படுத்தும் எண்ணமிருந்தால் வாங்கும் போது இத்தொழில்நுட்பம் குறித்தான விவரங்களைப் பார்த்து வாங்குதல் சிறப்பு. தனி உபகரணங்கள் விவரங்கள் கீழே.




மேலே உள்ளவை வடமில்லா வலையமைப்புப் பொருத்திகள் (wireless adaptors). தடமில்லா வலையமைப்பு வசதியில்லாத மடிக்கணினியோ அல்லது மேசைக் கணினியோ வைத்திருப்பவர்கள் இவற்றை பொருத்தினால் அவ்வசதியைப் பெறலாம். அவற்றின் தோற்றமும், பொருத்தும் வழிமுறையும் பீதியளிப்பதாகக் கருதுபவர்களுக்கு USB பொருத்திகளும் கிடைக்கின்றன.



ADSL routers மற்றும் wireless routers இவையிரண்டும் வலையமைப்புக் கருவிகள். உங்கள் இணைய இணைப்பு மற்றும் வலையமைப்பு இரண்டையும் சமாளிக்க வல்ல ADSL routers மற்றும் வலையமைப்பு வசதிக்கான wireless routers ஆகியவையும் இரண்டும் கண்னெனத்தகும்.


வடமில்லா வலையமைப்புத் தொடர்புப் புள்ளி (wireless access point) என்பது வலையமைப்பு தடத்தினை (802.3), வடமில்லாதவையாக மாற்ற வல்லது (converts 802.3 to 802.11). உங்கள் கணினிக்கு வரும் வலையமைப்பு வடத்தினை இதில் பொருத்தினால் அந்த இடத்திலிருந்து வடமில்லா வலையமைப்புக்கான அலைகளைப் பரப்பும்.


வடமில்லா வலையமைப்புத் தொடர்புப் புள்ளி என்பது access point/router எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். அவை செயல்படும் வழிமுறையும், உங்கள் கணினியில் இருக்கும் பொருத்தியின் (wireless adaptor) செயல்பாட்டு வழிமுறையும் ஒத்ததாக இருந்தால் அதிகபட்ச வலைத்தொடர்பு வேகத்தினைப் பெற்று மகிழலாம். உதாரணத்திற்கு 802.11g வழியில் செயல்படும் தொடர்புப் புள்ளியில், 802.11b வழியில் செயலபடும் பொருத்தியைக் கொண்ட கணினியினை இணைத்தால் 802.11bக்கு உரிய வேகத்தினையே அனுபவிக்கலாம். உபகரணங்கள் வாங்கும் போது இதனையும் கருத்தில் கொள்ளவும்.

இன்று அனேக அகலப்பட்டை இணைய இணைப்புகள் ADSL routers மூலமாக வழங்கப்படுகின்றன. உங்கள் வீட்டில் இருந்தால், எழுந்து சென்று பார்த்து விட்டு, பிறகு தொடர்ந்து படிக்கவும். பெரும்பாலான பயனாளர்கள் இவ்வசதி குறித்து போதிய விழிப்புணர்வின்றியே பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர். இணைய இணைப்பு வழங்குநர்களும் இது குறித்த விசயங்களை வாடிக்கையாளர்களுக்கு முறையாகத் தெரிவிப்பதாகத் தோன்றவில்லை. வாடிக்கையாளர்களுக்குப் பாடம் நடத்துவது அவர்கள் வேலையில்லையென்றாலும், பயனாளர் என்ற முறையில் அறிந்து கொள்வது நம் கடமை. அதற்கு முக்கிய காரணம் பாதுகாப்பு. பாதுகாப்பற்ற வடமில்லா வலையமைப்பின் மூலம் வரும் ஆபத்துகள் பலவிதம். முக்கியத் தீவிரவாதி என்றோ, இவர் தான் வெடிகுண்டு முருகேசன் என்றோ, ஒரு நாள் அதிகாலை, சுபவேளை மாமாக்கள் ஓலையோடு வரக்கூட வாய்ப்பிருக்கிறது. 

தமிழக மீனவர்கள் கடைசியாக எப்பொழுது சிங்கள இராணுவத்தால் தாக்கப்பட்டார்கள் என்பதே நினைவில் இல்லாத போது, இரண்டு வருடங்களுக்கு முன்பு அகமதாபாத்தில் குண்டுகள் வெடித்து பலர் பலியானது நிச்சயம் மறந்திருக்கும். அச்சம்பவத்தின் சிறப்பு என்னெவென்றால் குண்டுவெடிப்பு நடப்பதற்குச் சில நிமிடங்களுக்கு முன்பு இந்த மாதிரி, இந்த இடத்தில், இப்படி வெடிகுண்டு வெடிக்கப்போகிறது என்று காவல்துறைக்கு தீவிரவாதிகளால் மின்னஞ்சல் அனுப்பப்பட்டது. அதை மேலதிகாரிகள் பார்வைக்குக் கொண்டு செல்லும் முன்பே தொலைக்காட்சிகள் விளம்பரக் கொண்டாட்டங்களோடு அகமதாபாத்திலிருந்து நேரடி வர்ணனைகளைத் தொடங்கி விட்டிருந்தன.

கென்னத்

குண்டுவெடிப்பு விசாரணைக்கு அந்த மின்னஞ்சல் ஒரு முக்கிய ஆதாரமாகக் கருதப்பட்டது. இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட குண்டுதுளைக்காத சட்டைக்குப் பலியான ஹேமந்த் கர்க்கரே தலைமையில் மின்னஞ்சலின் பூர்வீகம் தேடத்துவங்கப்பட்டது. தேடலின் பாதை முடிந்த இடம் மும்பையில் தங்கியிருந்த கென்னத் என்றொரு அமெரிக்கரின் வீடு. மின்னஞ்சலில் தொடக்கப்புள்ளியான இணைய இணைப்பு முகவர் எண்ணிற்குரியவர் அவர். பல நாட்கள் குடைந்தெடுத்ததில் கென்னத் ADSL router மூலம் வடமில்லா வலையமைப்பில் இணையத்தைப் பாவித்து வந்ததையும், அதைக் காற்றோட்டமாக எந்தப் பாதுகாப்பும் இன்றி திறந்து வைத்திருந்ததையும் தவிர வேறெந்த தவறும் செய்யவில்லை என்று தெரியவந்தது. பின் எப்படி? மடிக்கணினியை மடியில் வைத்து, தங்கள் மடியைக் காருக்குள் வைத்து மும்பைத் தெருக்களில் இணைய இணைப்பைத் திறந்து வைத்திருக்கும் அன்பரைத் தேடியலைந்த குற்றவாளிகளுக்குச் சிக்கிய இரை தான் கென்னத். ரோட்டோரமாக சில நிமிடங்கள் வாகனத்தை நிறுத்தி மின்னஞ்சல் அனுப்பி மறைந்திருக்கிறார்கள்.


இது யாருக்கு வேண்டுமானாலும் நடக்க வாய்ப்பிருக்கிறது. நீங்கள் வடமில்லா வலையமைப்பைப் பாவிப்பவரா, உங்கள் வலையமைப்பு சாலையில் செல்லும் யார் வேண்டுமானாலும் கொக்கி போட்டு ஆப்பு வைக்க முடியாத அளவுக்கு பாதுகாப்பானதாக இருக்கிறதா?. இல்லையென்றால் உடனே சரிசெய்து விடுவது அவசியம். கென்னத் என்ற நபருக்கு நேர்ந்தது யாருக்கும் வரலாம், கென்னத்தின் பெயர் வேறு மாதிரி இருந்திருப்பின் விசாரணையின் போக்கு எப்படி வேண்டுமானாலும் இருந்திருக்கலாம்.

உங்கள் வடமில்லா வலையமைப்பு பரிபூரணமாக பாதுகாப்பாக இருக்க வேண்டுமெனில், வலையமைப்பினை பிற நபர்கள் யாராக இருந்தாலும் பகிர்ந்து கொள்ளாமல் இருத்தல் நலம். அப்படியே தவிர்க்கவியலாமல் பகிர்ந்து கொள்ள வேண்டிய சூழ்நிலை வந்தால், வேலை முடிந்த மறுநிமிடம் வலையமைப்பில் இணைவதற்கானக் கடவுச்சொல்லை மாற்றுவது பரிந்துரைக்கப்படுகிறது. காரணம் வடமில்லா வலையமைப்பில் ஒருவர் இணைந்து விட்டால், உங்கள் தொடர்புப்புள்ளியில் நடைபெறும் 'அனைத்து' தகவல் பறிமாற்றங்களையும் (HTTPS பக்கங்களைத் தவிர்த்து) கண்குளிரக் காணலாம். இதற்கென பல இலவச மென்பொருட்கள் இணையத்தில் இரைந்து கிடக்கின்றன. ஆர்வமுள்ளவர்கள் கூகுளாடவும். பயிற்சிக்காக மட்டுமே அவற்றைப் பயன்படுத்துங்கள், பக்கத்து வீட்டு தொடர்புப் புள்ளியை எட்டிப் பார்ப்பது குற்றம் என்பதை நினைவில் கொள்ளவும் :).

வடமில்லா வலையமைப்பின் பாதுகாப்புக்கு என்னென்ன செய்ய வேண்டும்?. முதலில் வடமில்லா வலையமைப்புத் தொடர்புப் புள்ளியினை எப்படி அணுகுவது என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்?. தொடர்புப்புள்ளியின் உள்-வலையமைப்பு எண்ணை (LAN-IP address), உலாவியில் உள்ளிட்டால், தொடர்புப் புள்ளியின் மென்பொருள் பக்கங்களைக் காணலாம். ஒரு வேளை உள்-வலையமைப்பு எண் தெரியாவிட்டால் start->run->cmd என்ற இடத்திற்குச் சென்று ipconfig என்று உள்ளிடவும். அதில் default gateway என்று குறிப்பிடப்பட்டிருக்கும் உள்-வலையமைப்பு எண் தான் உங்கள் வடமில்லா வலையமைப்பிற்கானத் தொடர்புப் புள்ளியினுடையது.

இந்த பக்கங்கள் ஒவ்வொரு உபகரணத்தின் தயாரிப்பு நிறுவனத்திற்கேற்ப மாறுபடும். எனவே தேடிக் கண்டுபிடிக்கவும். சிரமங்கள் இருப்பின் உங்கள் வடமில்லா வலையமைப்பு உபகரணத்தின் தயாரிப்பு நிறுவனத்தின் பெயர் மற்றும் என்ன வகை (manufacturer and model details)ஆகிய விவரங்களுடன் கூகுளிடம் சரணடையவும். பின்வரும் விவரங்களை உங்கள் தொடர்புப்புள்ளியின் மென்பொருள் பக்கங்களில் உள்ளிட்டு விட்டால் அதிகபட்ச பாதுகாப்புக் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது ;).

password/கடவுச்சொல்:


முதலில் உங்கள் வடமில்லா வலையமைப்பின் தொடர்பு புள்ளியினைத் தொடர்பு கொண்டு வலையமைப்பில் இணைவதற்கானக் கடவுச்சொல்லை உள்ளிட வேண்டும். தயாரிப்பாளர்கள் பயனாளர் பெயராக 'admin/administrator' மற்றும் கடவுச்சொல்லாக 'admin/password' ஆகியவற்றை உள்ளிட்டே விற்பனை செய்வார்கள். அதை மாற்றாமல் அப்படியே பத்திரமாக வைத்திருந்தால் அதிகபட்சம் இரண்டே முயற்சிகளில் உங்கள் வலையமைப்பு புள்ளிக்கு நுழைய முடியும். என்வே கடவுச்சொல்லை கடினமான ஒன்றாக மாற்றுவது சாலச்சிறந்தது. சிறிய எழுத்துக்கள், பெரிய எழுத்துக்கள் மற்றும் எண்கள் (combination of lowercase, uppercase and numbers) இவற்றின் கலவையாக இருத்தல் சிறப்பு.


Wireless Encryption / சங்கேதக் குறியீட்டு முறைகள்:

தொடர்புப்புள்ளியின் மென்பொருள் பக்கங்களில் wireless அல்லது WiFi என்ற பகுதிக்குச் சென்றால் வலையமைப்பின் தொடர்பு முறைக்கு என்னென்ன சங்கேதக் குறியீட்டு முறைகளைப் பின்பற்றுவது (encryption methods) போன்ற விவரங்கள் இருக்கும். இம்முறைகளில் WEP (wireless encryption protocol) மற்றும் WPA/WPA2 (WiFi Protected Access) என்று இரண்டு உண்டு. WEP முறைக்கு WEAK encryption protocol என்ற பெயரும் உண்டு. WEP சற்றுப் பழைய கஞ்சி தான் என்றாலும், வலையமைப்பு விஷயங்கள் தெரிந்தவருக்கு WEP முறையை உடைப்பதற்கு 60 நொடிகள் போதும் :D. இன்றைய தேதிக்கு WPA முறையே சிறந்தது. WPA பயன்படுத்துவதற்கு உங்கள் இயங்குதளத்தில் (operating system) அதற்கான கோப்புகள் இருக்க வேண்டும். இல்லாதவர்கள் இங்கே சென்று தறவிறக்கம் செய்து கொள்ளலாம்.


முதலில் WEP எப்படி செயல்படுகிறது?. பறிமாறிக் கொள்ளும் தகவல்களைச் சங்கேதக் குறியீடுகளாக மாற்றுவதற்கான குறிச்சொல்லை (encryption key) வழங்கிவிட்டால், அதற்கேற்ப தகவல்கள் மாற்றப்பட்டு அனுப்பப்படும். அந்த குறிச்சொல்லை வடமில்லா வலையமைப்பிற்கான தொடர்புப் புள்ளி மற்றும் பயன்படுத்தும் கணினி என இரண்டு பக்கமும் உள்ளிட்டால் மட்டுமே தொடர்பு சாத்தியப்படும் என்பது நினைவில் கொள்ளவும். ஒரு குறிச்சொல்லை வைத்துக் கொண்டு காலம் முழுக்க தகவல் பறிமாறிக்கொள்வது ஆபத்தானது. மொழி தெரியாத ஊரில் என்ன பேசுகிறார்கள் என்பது ஆரம்பத்தில் புரியாவிட்டாலும் சில காலம் கழித்து நாம் அந்த மொழியைக் கற்றுக் கொள்வதைப் போல, உங்கள் வலையமைப்பினை தொடர்ந்து நோட்டம் விட்டால் அக்குறிச்சொல்லைக் கண்டுபிடிப்பது எளிது. இதுவே WEP பெரிதும் நம்பப்படாமல் போனதற்கான காரணம்.

WEP/WPA ஆகியவற்றுக்கு உங்கள் கணினியைத் தயார்ப்படுத்துவதற்கு control panel-> network connections -> wireless network -> properties என்ற இடத்திற்குச் சென்று WEP/WPA தேவையானதைத் தேர்வு செய்து குறிச்சொற்களை இடவும் (பார்க்க படம்) . இக்குறிச்சொற்களும், தொடர்புப்புள்ளியின் குறிச்சொற்களும் ஒன்றாக இருப்பது அவசியம்.

அடுத்து WPA/WPA2. இதில் முதன்முதலில் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள மட்டுமே நாம் வழங்கும் குறிச்சொல் (pre shared key) பயன்படுத்தப்படும். அதன் பின் குறிப்பிட்டக் கால இடைவெளியில் குறிச்சொல் தானாகவே மாற்றப்பட்டுக் கொண்டே இருக்கும். இதனால் இத்தொடர்பு முறையை உடைப்பது மிகமிக கடினம். இதனை செயல்படுத்துவதற்கு உங்கள் தொடர்புப் புள்ளியில் இதற்கான மென்பொருள் பக்கத்துக்குச் சென்று WPA என்பதனைத் தேர்வு செய்து, PSK என்ற இடத்தில் குறிச்சொல்லை வழங்கி பின்னர் group key interval/Rekey interval என்ற இடத்தில் எத்தனை நொடிகளுக்கு ஒருமுறை உங்கள் குறிச்சொல் மாற்றப்பட வேண்டும் என்பதனையும் உள்ளிட்டு சேமித்து விட்டால் உங்கள் பாதுகாப்பான வடமில்லா வலையமைப்புத் தயார்.

SSID (Service Set Identifier)/சேவைப்பெயர் :

SSID என்பது உங்கள் தொடர்புப் புள்ளியின் சேவைக்கான பெயர். அந்த பெயரிலே தான் உங்கள் தொடர்பு புள்ளி காற்றிலே பரப்பப்படும். வடமில்லா வலையமைப்பு உபகரணங்களின் சேவைப்பெயர்களாக பெரும்பாலும் தயாரிப்பாளர்களின் பெயரையே சேமித்து வைத்திருப்பார்கள் (ஒரு வெளம்பரம்ம்ம்). அதனை முதல் வேலையாக மாற்றிவிடுவது இனிது. அதனினும் இனிது உங்கள் SSID broadcasting என்ற தேர்வைச் செயலிழக்க செய்து விடுவது. உங்களின் சேவைப்பெயர் உங்களுக்கு மட்டுமே தெரிந்தால் போதுமானது.

MAC address filtering:

MAC (media access control) address என்பது அனைத்து வலையமைப்பு உபகரணங்களிலும் அதனைப் பெற்றெடுத்தத் தயாரிப்பாளர்கள் வைக்கும் பெயர். உங்களின் கணினி, வடமில்லா வலையமைப்பின் தொடர்புப் புள்ளி ஆகிய அனைத்துக்கும் இந்தப் பெயர் இருக்கும். தொடர்புப் புள்ளியின் மென்பொருள் பக்கங்களில் Wireless Management/ MAC Filter ஆகியவற்றிற்கானப் பக்கத்துக்குச் சென்று எந்தெந்த பெயர்களை(MAC address) மட்டும் அனுமதிக்க வேண்டும் என்று உள்ளிட்டால், அவற்றைத் தவிர வேறு யாரும் உங்கள் வலையமைப்பில் நுழைய முடியாது. இந்த முறை பாதுகாப்புக்கானப் பரிந்துரைகளில் முக்கியமான ஒன்று என்பதை நினைவில் கொள்ளவும். உங்கள் கணினியின் MAC address தெரிந்து கொள்ள, start->cmd -> run என்ற இடத்திற்குச் சென்று ipconfig/all என்று உள்ளிட்டால், வரும் பல தகவல்களில் physical address என்ற ஒன்றும் இருக்கும். அதுவே உங்கள் கணினியின் MAC address.

இடத்தேர்வு:

உங்கள் வடமில்லா வலையமைப்பின் தொடர்புப் புள்ளியை, குஷ்டமாக இருந்தாலும் வீட்டின் நடுவே வைப்பது நல்லது. ஜன்னலரோமோ வாசல் பக்கமோ வைப்பது வில்லங்கத்தை விருந்துக்கழைப்பதற்கு ஒப்பானது. கட்டிடங்களுக்குள் வடமில்லா வலையமைப்பின் பயணிக்க முடிந்த தூரம் சுமார் 30 மீட்டர்கள் என்பதால், அதற்கேற்ற இடத்தைத் தேர்வு செய்து கொள்வது சிறப்பு.

பாதுகாப்பு வழிமுறைகள் கொஞ்சம் கிர்ர்ரடிக்க வைத்தாலும், வீடுகளில் இணைய இணைப்பினைப் பகிர்வதற்கு வடமில்லா வலையமைப்பு மிகவும் விரும்பப்படும் காரணம், அதன் வசதி மற்றும் வலையமைப்பினைச் செயல்படுத்துதலின் எளிமைத் தன்மை. மைக்கெல் மார்கஸ் பரிந்துரைத்த அலைக்கற்றை குறித்தான முடிவுகள், ஆரம்பத்தில் சோர்ந்து விடாமல் கூடி வாழ முற்பட்ட உபகரணத் தயாரிப்பாளர்கள், spread spectrum முறையை உலகுக்களித்தத் தானைத் தலைவி ஹெடி லமர் என எல்லாரும் சேர்ந்த அளித்த ஊட்டச்சத்தின் விளைவே இன்று வடமில்லா வலையமைப்பு பிரம்மாண்டமாய் பரவலாகியிருக்கிறது. சில நகரங்களே கூட ஒட்டுமொத்தமாக வடமில்லா வலையமைப்பின் கீழ் கொண்டு வந்து, நகராட்சியால் இணையச் சேவை வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது (WiFi City, Municipal WiFi). இந்தியாவில் புனே நகரத்தில் கூட நகரம் முழுமைக்குமான வடமில்லா வலையமைப்பு வழங்குவதற்கானத் திட்டம் சில ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது. புனே வாசிகள் யாரேனும் இருந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள்.



30 முதல் அதிகபட்சம் 50 மீட்டர்கள் வரை பயணிக்கும் வடமில்லா வலையமைப்பு 50 கிலோமீட்டர் பயணித்தால் எப்படி இருக்கும்? வேகத்தில் 54 Mbps இல் இருந்து 1024 Mbps ஆக அசுரவேகமெடுத்தால் எப்படி இருக்கும் போன்ற யோசனைகளுக்கு செயல்வடிவம் கொடுத்து வடமில்லா வலையமைப்பினை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த வந்திருக்கும் தொழில்நுட்பங்கள் தான் WiMedia (802.15.3) மற்றும் WiMax (802.16). இன்னும் பரவலாகாத இத்தொழில்நுட்பங்கள் விரைவில் நம் வீதிகளில் வலம் வரும் நாள் தூரமில்லை. அது போன்ற ஒரு நாளில் WiMedia மற்றும் WiMax பற்றிய பகிர்வுகளுடன் சந்திக்க சுடுதண்ணி காத்திருக்கிறது என்பதைத் தெரிவித்துக் கொண்டு, இத்தொடர் நிறைவடைகிறது.


பி.கு: பாதுகாப்பு வழிமுறைகள் குறித்தான் செயல்விளக்கங்கள் ஒவ்வொரு உபகரணத்தின் தயாரிப்புக்கேற்ப மாறுபடும் என்பதால் பொதுவாகவே சொல்லப்பட்டுள்ளது. அவற்றைச் செயல்படுத்துவதில் சிரமங்கள் இருந்தால் பின்னூட்டத்தில் உங்கள் உபகரணத்தின் விவரங்களோடு தெரிவித்தால் உதவி செய்ய தயாராக உள்ளது என்பதனை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.