Saturday, April 23, 2011

தேர்தலில் ஜெயலலிதா வென்றால் ...அல்லது தோற்றால்....



நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் ஒரு வேளை  அண்ணா.தி.மு.க.ஜெயித்தால்.....

நடந்து முடிந்த பொதுத்தேர்தலில் கருணாநிதியின் பாசிச ஆட்சியை அகற்றி மீண்டும் அனைத்திந்திய அண்ணா.திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சியமைக்க வாய்ப்பளித்துள்ளார்கள்.நான் பிரச்சாரத்திற்க்காக போகும் இடமெல்லாம் மக்கள் வெள்ளமென திரண்டு அன்பு சகோதரியான எனக்கு ஆதரவு தெரிவித்த போதே எங்கள் வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டது. ஸ்பெக்ட்ரம், மணல்கொள்ளை, கேபிள் டி.வி .ஆதிக்கம், அரிசி கடத்தல், சட்டம் ஒழுங்கு சீர்குலைவு என்று கருணாநிதியின் கொடுங்கோல்  ஆட்சியில் சிக்கித்தவித்த மக்களுக்கு ஒரு விடிவு என் மூலம் ஏற்பட்டிருக்கிறது...இவ்வளவு பெரிய வெற்றிக்கு பெரிதும் உதவியாக இருந்த தேர்தல் ஆணையத்திற்கு நன்றி சொல்ல கடமை பட்டுள்ளேன்.
மிரட்டலுக்கு அஞ்சாமல் மிகவும் நியாயமாக தேர்தல் நடக்க அவர்கள்தான் காரணம். எங்களுக்கு வாக்களித்த  மக்களுக்கு நன்றி.....கூட்டணி கட்சி தலைவர்களுக்கு நன்றி....
அண்ணா நாமம் வாழ்க......புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் நாமம் வாழ்க...

No comments:

Post a Comment