Sunday, June 12, 2011

கில்லாடித்தனமான ஜி-மெயில் திருட்டு! பாதிப்பு மிக மிக தீவிரம்!!


சோல், தென் கொரியா: ஜி-மெயில் பாஸ்வேர்ட் திருட்டு வலைப்பின்னல் ஒன்று, எண்ணிக்கை சொல்ல முடியாத அளவில் தனிப்பட்ட ஜி-மெயில் அக்கவுன்ட்களைப் பாதித்திருப்பதை, ஜி-மெயில் நிர்வாகம் ஒப்புக் கொண்டுள்ளது. இதன் பாதிப்பு இப்போது, மிகத் தீவிரமடைந்துள்ளது, அமெரிக்க அரசே நேரடியாக இதில் தலையிடும் அளவுக்கு!

குறிப்பிட்ட சில தனியார்களின் ஜி-மெயில் பாஸ்வேர்ட்களே திருடப்பட்டுள்ளன. ஆனால், பாஸ்வேர்ட் திருடப்பட்ட ஜி-மெயில்கள் எத்தனை என்ற விபரமோ, பாதிக்கப்பட்டவர்களின் பெயர் விபரங்களோ, வெளியிடப்படவில்லை.

தற்போது கிடைத்துள்ள தகவல்களின்படி, மிகத் தீவிரமாகப் பாதிக்கப்பட்டுள்ள தனியார்களில், தென் கொரியாவின் முக்கிய அரசு உயரதிகாரிகளும் அடங்குகின்றனர். இவர்களில் பலர், ராஜாங்க ரகசியங்களை அனுப்புவதற்கும் ஜி-மெயிலையே உபயோகித்து வந்திருப்பது தெரியவந்துள்ளது.

ஜி-மெயில் திருட்டுப் பற்றிய தகவல் வெளியானவுடன் கலவரமடைந்துள்ள தென் கொரிய அரசு, அமெரிக்காவின் உதவியை நாடியுள்ளது. தென் கொரிய உயரதிகாரிகளின் எந்தெந்த ஜி-மெயில்களின் பாஸ்வேர்ட்கள் திருடப்பட்டன என்ற விபரம் தமது நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அவசியம் என்று கோரியுள்ளது, தென் கொரிய அரசு.

ஆனால், அது உடனடியாகச் சாத்தியமில்லை எனக் கைவிரித்திருக்கின்றது ஜி-மெயில் நிர்வாகம்.
ஜி-மெயிலின் பாதுகாப்புப் பிரிவின் தொழில்நுட்ப டைரக்டர் எரிக் க்ரொஸ், “ஆசிய நாடுகளின் முக்கிய அதிகாரிகள் சிலரின் ஜி-மெயில் பாஸ்வேர்ட்கள் திருடப்பட்டுள்ள விஷயம் உண்மைதான். இதில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது தென் கொரிய அரசு அதிகாரிகள்தான்” என ஒப்புக் கொண்டிருக்கிறார்.

ஆசிய அரசு அதிகாரிகளைத் தவிர, சில அமெரிக்க அதிகாரிகள், சீன செயற்பாட்டாளர்கள் (சீன அரசுக்கு எதிரான ஆட்கள்), பத்திரிகையாளர்கள், ராணுவ அதிகாரிகள் ஆகியோரின் ஜி-மெயில் பாஸ்வேர்ட்களும் திருடப்பட்டுள்ளதை அவர் உறுதிப்படுத்தியிருக்கின்றார்.

ஆனால், பாதிக்கப்பட்ட பத்திரிகையாளர்களும், ராணுவ அதிகாரிகளும் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற விபரத்தை வெளியிடவில்லை.

ஜி-மெயிலின் பாதுகாப்பு வளையங்களையெல்லாம் தாண்டிக் கில்லாடித்தனமாகச் செய்யப்பட்ட இந்தத் திருட்டு, சீனாவின் மாகாணமான ஜினானிலேயே தொடங்கப்பட்டுள்ளது என்பதை ஜி-மெயில் அறிந்திருக்கின்றது.

இந்தத் திருட்டில், சீன அரசின் கைகளும் நிச்சயமாக இருக்கும் என்றே, சந்தேகிக்கப்படுகிறது.

டெபிட் கார்டு வெச்சிருக்கீங்களா அப்ப இத படிங்க முதல்ல


டெபிட் கார்டின் பயன்பாடு குறித்தும், பணப் பரிவர்த்தனையின்போது ஏற்படும் பிரச்னைகள் குறித்தும், இதற்கு வங்கிகள் வழங்கும் நடைமுறைத் தீர்வுகள் குறித்தும் வங்கி வட்டாரத்தில் உள்ள சில அதிகாரிகளிடம் பேசினோம். அவர்கள் கொடுத்த டிப்ஸ்கள் இதோ...!

எங்கே வாங்குவது?

சேவிங் பேங்க் அக்கவுன்ட் வைத்திருக்கும் எல்லோருக்கும் எல்லா வங்கிகளும் டெபிட் கார்டை கொடுக்கின்றன. முன்பெல்லாம் டெபிட் கார்டு பெற பல நாட்கள் காத்திருக்க வேண்டும். ஆனால், இப்போது கணக்கு தொடங்கும்போதே டெபிட் கார்டையும் அதற்கான 'ரகசிய எண்’ணையும் கொடுத்து அசத்துகின்றன பல வங்கிகள்.

பணம் வராமல் போனால்..?

சில நேரங்களில் ஏ.டி.எம்-ல் பணம் வெளிவராது. ஆனால், நம் கணக்கில் பணம் எடுக்கப் பட்டதாக ரசீது வந்துவிடும். இப்படி நடந்தால் பதறத் தேவையில்லை. உடனே உங்களது வங்கியின் சேவைப் பிரிவைத் தொடர்பு கொண்டு, உங்கள் பெயர், முகவரி, வங்கிக் கணக்கு எண், ஏ.டி.எம். இருக்கும் இடம், பணப் பரிவர்த்தனை நடந்த தேதி, நேரம், நீங்கள் பயன்படுத்திய ஏ.டி.எம். எந்த வங்கியினுடையது என்கிற தகவல்களை சொன்னால் போதும்; வங்கி அதை சரி பார்த்து, தவறு நடந்திருந்தால் நமக்கான பணத்தை கொடுத்துவிடும். இந்தப் பணம் ஏழு நாட்களுக்குள் கொடுக்க வேண்டும் என்பது ஆர்.பி.ஐ.யின் லேட்டஸ்ட் உத்தரவு. 

கார்டு மாட்டினால்...?


ஏ.டி.எம்.ல் பணம் எடுக்கும் போது, குறிப்பிட்ட கார்டுக்குரிய ரகசிய எண்ணை குறித்து ஏதாவது குழப்பம் இருந்தால் உடனே 'கேன்ஸல்’ பட்டனை அழுத்தி, கார்டை வெளியே எடுத்துவிடுவதே நல்லது. அதிலும் வெளியூருக்கு போன சமயத்தில் ஏதோ ஒரு ரகசிய எண்ணை போடும் தவறை செய்யக்கூடாது. காரணம், வெளியூர் ஏ.டி.எம்.மில் நம் கார்டு மாட்டினால் திரும்ப பெற அலைய வேண்டியிருக்கும். வெளியூர் செல்லும் சமயங்களில் முடிந்த வரை ஸ்வைப் வசதி (கார்டை உள்ளே சொருகிவிட்டு உடனே எடுத்துவிடும் வசதி) கொண்ட ஏ.டி.எம். மெஷினை பயன்படுத்தலாம். ஒருவேளை, ஏ.டி.எம்.-ல் கார்டு மாட்டினால், உடனே சேவை மையத்துக்குத் தொடர்பு கொண்டு புகார் செய்து, நம் கார்டை வேறு யாரும் பயன்படுத்த முடியாதபடி 'பிளாக்’ செய்வது அவசியம். இதன்பிறகு புகார் கொடுத்து, அந்த கார்டுக்கு சொந்தக்காரர் நாம்தான் என்கிற ஆதாரத்தை கொடுத்தால் அடுத்த சில நாட்களில் கார்டு திரும்ப கிடைத்துவிடும். தொலைந்த கார்டுகளை சரிபார்த்துக் கொடுக்க வங்கிகள் 100-200 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கின்றன. 


ஆன்லைனில்...!


ஒரு வாடிக்கையாளர் வங்கிக் கணக்கு ஆரம்பிக்கும்போது, தனது பிறந்த தேதி, பான் கார்டு நகல், இ-மெயில் மற்றும் மொபைல் நம்பரை கொடுத்திருந்தால், அந்த வங்கியின் இணையத்திற்கு சென்று, இ-பேங்கிங் அக்கவுன்டை தொடங்கிக் கொள்ளலாம்.பொதுவாக ஆன்லைன் மூலம் பணப் பரிமாற்றம் செய்யும்போது, கார்டு நம்பர், பெயர், கார்டின் முடிவுக் காலம், சி.வி.வி நம்பர் போன்ற தகவல்களும், பணம் பெறுபவர்களின் வங்கிக் கணக்கு எண், வங்கியின் பெயரும் ஆன்லைனில் கேட்கப்படும். அதை சரியாக பூர்த்தி செய்தால் மட்டுமே பணப் பரிமாற்றம் சரியாக நடைபெறும். அதில் சில பிழைகள் இருந்தால், பணப் பரிமாற்றம் தடைபடுவதோடு, பணமும் நம் கணக்கிலிருந்து கழிக்கப்பட்டுவிடும்.

லட்சம் கோடியெல்லாம் பொதுமக்களுக்கு சாதாரணமாகிவிட்டது


மறுபடியும் ஊழலா என்று யாரும் நினைத்துவிடவேண்டாம் .இது புகுஷிமாவில் ஏற்பட்டுள்ள அணு உலை விபத்தினால் உண்டான பாதிப்புகளை சரி செய்ய ஆகும் செலவிற்கு ஜப்பான் அரசு உத்தேசித்துள்ள தொகை .

ஜப்பானின் புகுஷிமாவில் உள்ள அணுமின் நிலையங்களில் நிகழ்ந்த மோசமான விபத்தை கட்டுக்குள் கொண்டு வர ஜப்பான் அரசும் TEPCO நிறுவனமும் தீவிரமாக முயன்று வருகின்றன .


இந்நிலையில் ஜப்பான் பொருளாதார ஆராய்ச்சி மையத்தின் தலைவரான திரு கசுமசா எல்வாட்டா வெளியிட்டுள்ள செய்தியில் அணு உலை பாதிப்புகளை முற்றிலுமாக சரி செய்ய 10 வருடங்கள் ஆகும் எனவும் இதற்கு 250 பில்லியன் டாலர் அதாவது ஏழரை லட்சம் கோடி ருபாய் செலவாகும் என தெரிவித்துள்ளார் .

இந்தியாவை பொறுத்தவரையில் லட்சம் கோடியெல்லாம் பொதுமக்களுக்கு சாதாரணமாகிவிட்டது என்றாலும் பொருளாதார நிபுணர்களுக்குதான் அதன் உண்மையான மதிப்பு தெரியும் .

இந்தியாவில் இது போன்றதொரு அணு விபத்து நிகழுமானால் 50 ஆண்டுகளுக்கு இந்தியாவால் எழுந்திருக்கவே முடியாது .மறுபடியும் முதலில் இருந்துதான் வரவேண்டும் .

இந்தியாவில் உள்ள 20 அணு உலைகளில் இருந்து வெறும் 3% மின்சாரம் மட்டுமே கிடைக்கிறது .இவை அனைத்தையும் மூடிவிட்டால் பெரிய பாதிப்பு ஒன்றும் வந்துவிட போவதில்லை .

ஆனால் இத்தனை சொல்லியும் கேட்காமல் இந்திய அரசு பூகம்ப ஆபத்து நிறைந்த ஜைத்தாபூரில் 10 அணு உலைகளையும் .சுனாமி ஆபத்து நிறைந்த கூடங்குளத்தில் 8 அணு உலைகளை அமைக்கும் வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது .

இவற்றிலெல்லாம் எந்த விபத்தும் ஏற்பட வாய்ப்பே இல்லை என உண்மை சொல்லுதல் புகழ் ?டாக்டர் மன்மோகன் சிங் கூறி வருகிறார் .

சமீபத்தில் ஜெர்மன் அரசு தான் அமைத்துள்ள 5 அதிநவீன அணு உலைகள் உட்பட 17 அணுமின் நிலையங்களை 10 வருடங்களுக்குள் மூட உத்தரவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது .

அவளுடைய அங்க அமைவுகளும், அசைவுகளும்

எனக்கு அவளால் இப்படி ஒரு அசிங்கம் நேரும் என நான் கனவிலும் நினைக்கவில்லை .தனி மனித ஒழுக்கத்திலும் உடல் தூய்மையிலும் அனைவராலும் மதிக்கப்பட்ட என்னை ஒரே நிமிடத்தில் ஊரார் சிரிக்க வைத்து விட்டாள்.

அவள் பெயர் வடிவுக்கரசி .அவள் நிறமோ கருப்புதான் .ஆனால் அவள் உடலின் வளைவு நெளிவுகளாலும் இயற்கையாய் அமைந்த மேடு பள்ளங்களாலும் யாரையும் ஒரே நிமிடத்தில் கவிழ்த்தும் வல்லமை படைத்தவள் .அவள் முகத்தில் நமது முகத்தை பார்க்கலாம் அவள் முகம் அப்படி ஒரு பளபளப்பு .

 
 எனக்கோ பெண்களை கண்டாலே அலர்ஜி .இவள் கடந்த சிலநாட்களாகவே எனது தெருவில் அடிக்கடி முகம் காட்டிக்கொண்டிருந்தாள் .இவள் தோற்றத்தை பார்த்ததுமே எனக்கு ஒரு இனம்புரியாத உணர்ச்சி மேலிட்டது .

எனக்கும் கிட்டத்தட்ட திருமண வயதாகிவிட்டது .எனது அழகை கண்டு பல பெண்கள் எனக்கு தூண்டில் போட்டிருக்கிறார்கள் .ஆனால் நான் ஒழுக்கமாக வளர்ந்து விட்ட காரணத்தால் எந்த பெண்ணிடமும் நான் சிக்கவில்ல .

ஆனால் இவளிடம் எங்கே நாம் சிக்கி அசிங்கப்பட்டுவிடுவோமோ என்று ஆரம்பத்திலிருந்தே எனக்குள் ஓர் உணர்வு இருந்து கொண்டிருந்தது .இதற்கு காரணம் அவளுடைய அங்க அமைவுகளும் அசைவுகளும்தான்.
அவள் அடிக்கடி குறுகலாக அமைந்திருந்த எங்கள் தெருவில் என்னை குறுக்கிட்டு கொண்டிருந்தாள் .நான் அவளை கண்டு ஒதுங்கி செல்வேன் ஆனால் அவளோ லேசாக என்னை பார்த்து சிரித்துவிட்டு உரசிச் செல்வாள் .நாளாக நாளாக தெருவில் அவள் அடிக்கடி தென் பட்டாள்.


மெதுவாக உரசி உரசி சென்று கொண்டிருந்த வடிவுக்கரசி ஒரு நாள் எனக்கெதிரே வந்து என் மீது பலமாக இடித்து விட்டாள் .நான் ஒரு கணம் தடுமாறி அவள் மேல் சாய்ந்துவிடப்பார்த்தேன்.ஆனால் சுதாகரித்துக்கொண்டு நான் விலகி விட்டேன் .


அவள் மேல் எனக்கு ஆத்திரமாக வந்தது .இருந்தாலும் அவள் மேல் இடித்ததில் என் தவறும் உள்ளது .நான் கவனமாக நடந்து வந்து கொண்டிருந்தால் அவள் மீது இடித்திருக்க மாட்டேன்.


ஆனால் இவளை இப்படியே நமது தெருவில் நடமாட விட்டால் ஒரு நாள் அவள் கண்டிப்பாக நம்மை அசிங்கப்படுத்தாமல் விடமாட்டாள் என்று எண்ணி தெருவில் வசிக்கும் சில பெரியவர்களிடம் அவள் என்னிடம் தவறுதலாக நடக்க முயற்ச்சிப்பது குறித்து புகார் செய்தேன் .ஆனால் அவர்களோ எனது கருத்துக்கு சிறிதும் செவி சாய்க்க வில்லை .நீ தெருவில் கவனமாக நடந்தால் அவள் எப்படி உன்னை தொட முடியும் தவறு உன் மீதுதான் என்று என்னை குற்றம் சாட்டினார்கள் .


நானும் அதன் பின்னர் கவனமாகவே தெருவில் நடக்க ஆரம்பித்தேன் அவளும் தெருவில் வந்து சென்று கொண்டேதான் இருந்தாள்.ஒரு வாரமாக எந்த தொந்தரவும் இல்லை . 


நேற்று மாலை சுமார் 6.45 மணி இருக்கும் .மாலை கருக்கல் நேரம் .அலுவலகத்திலிருந்து களைப்புடன் வீடு நோக்கி வந்துகொண்டிருந்தேன் .ஒரு வாரமாக என்னை உரசாமல் இருந்த அவள் மொத்த வெறியையும் அடக்கி வைத்துக்கொண்டு இருந்திருக்கிறாள் . 


திடீரென என் மீது பாய்ந்து என்னை கட்டித் தழுவிக்கொண்டாள்.அப்படியே நடுத்தெருவில் என்னை படுக்க வைத்து அய்யய்யோ இதற்கு மேல் சொல்ல எனக்கு நா கூசுகிறது .


தெருவில் அனைவரும் இதை பார்த்தவுடன் சிரியோ சிரி என்று கை கொட்டி சிரித்தார்கள் .நான் இது நாள் வரையிலும் சுத்தமாக வாழ்ந்து கொண்டிருக்கிறேனல்லவா அதனால் தான் அவர்களுக்கு அப்படி ஒரு மகிழ்ச்சி .


எப்படியோ அவளிடம் இருந்து மீண்டு வாயில் வந்தபடியெல்லாம் அவளை திட்டி விட்டு வீடு வந்து சேர்ந்தேன் .வீடு வந்ததும் நன்றாக குளித்துவிட்டு கட்டிலில் போய் சாய்ந்தேன் .இரவு முழுவதும் தூக்கமே வரவில்லை .ஆனால் ஒன்றே ஒன்று மட்டும் முடிவு செய்து விட்டேன் .அவளை இனி நம் தெருவில் வர விடக்கூடாது .இதற்கு ஒரே தீர்வு தெருவில் பாதாள சாக்கடை அமைப்பதுதான் .என்ன அன்பர்களே திடீரென கதை தடம் மாறியது போல் தெரிகிறதா .நான் இந்த கதையில் வடிவுக்கரசி என குறிப்பிட்டது எங்கள் தெருவில் செல்லும் சாக்கடையைத்தான்.

கார் ஏசி இவ்வளவு ஆபத்தானதா? ஒரு வேண்டுகோள்

A \C கார் பயன்படுத்துபவரா நீங்கள் .அப்படியானால் நீங்கள் இதை கண்டிப்பாக படிக்கவேண்டும் .

A \C காரை பயன்படுத்தும்போது எப்போதுமே காருக்குள் நுழைந்தவுடன் A \C ஐ இயக்கி ஜன்னலை மூடக்கூடாது .காருக்குள் அமர்ந்தவுடன் காரின் ஜன்னல்களை ஒரு சில நிமிடங்களுக்கு திறந்து வைத்துவிட்டு அதன் பின்னர் தான் A \C ஐ இயக்கவேண்டும் .


இது குறித்து நிகழ்த்தப்பட்ட ஆராய்ச்சி முடிவுகளில் பல அதிர்ச்சி உண்மைகள் கண்டறியப்பட்டுள்ளன .பொதுவாகவே அனைத்து கார்களுக்குள்ளும் அமைந்துள்ள DASHBOARD ,இருக்கைகள் மற்றும் காருக்குள் உள்ள அனைத்து பிளாஸ்டிக்கினால் ஆன பாகங்கள் பென்சீன் எனப்படும் கேன்சரை உருவாக்கும் நச்சை உமிழ்கின்றன .

சாதாரணமாக மனித உடல் ஏற்றுக்கொள்ளும் பென்சீனின் அளவு சதுர அடிக்கு 50 மில்லி கிராம் .
வீடுகளில் நிழலில் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் காருக்குள் சதுர அடிக்கு 400 முதல் 800 மில்லி கிராம் என்ற அளவில் பென்சீன் இருக்கும் .

அதே வேளையில் வெயிலில் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் காருக்குள் பென்சீனின் அளவு சதுர அடிக்கு 4000 மில்லி கிராம் வரையில் இருக்கும் .இது மனித உடல் ஏற்றுக்கொள்ளும் அளவை விட 40 மடங்கு அதிகம் .

இதன் காரணமாக கேன்சர் ,லுக்கூமியா ,சிறு நீராக பாதிப்பு கல்லீரல் பாதிப்பு போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன .

கார்களிலுள்ள ஜன்னல்களை சிறிது நேரம் திறந்து வைப்பதனால் அதிகப்படியான பென்சீன் வெளியேறிவிடும் .

இதன் மூலமா நான் சொல்லிக்கிறது என்னண்ணா A \C காருல உக்காந்து போயி என்ஜாய் பண்ண விரும்புறவுங்க கொஞ்ச நேரம் ஜன்னல திறந்து காத்து வாங்கிட்டு அப்புறமா A \C ஐ ஆண் பண்ணி என்ஜாய் பண்ணுங்க .

33 வயது மகனுக்கு படுக்கையில் சோறு ஊட்டும் தாய் : 6 ஆண்டுகளாக தீராத ஒரு மருத்துவ போராட்டம்



மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் விபத்துக்குள்ளாகி, படுக்கையில் கிடக்கும் 33 வயது மகனுக்கு, அவரது தாய் ஆறு ஆண்டுகளாக சோறு ஊட்டி வருகிறார்.


கருக்கட்டான்பட்டியைச் சேர்ந்தவர் ஜெகதீஷ். ஆறு ஆண்டுகளுக்கு முன் வைகையில் குளிக்கச் சென்றார். அப்போது, அவர் அருகில் பாம்பை விரட்டிக் கொண்டு ஒரு கூட்டம் ஓடி வந்தது. இதனால் நிலை தடுமாறி தலை குப்புற தண்ணீரில் விழுந்தார். சற்று நேரத்தில் அவரது கை, கால்கள் செயலற்றுப் போனது. உடன் சென்ற நண்பர்கள் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர்.முதுகுத் தண்டுவட நரம்பிலும், கழுத்து எலும்பிலும் அடிபட்ட அவருக்கு ஆபரேஷன் செய்யப்பட்டது. ஆனாலும் பலன் இல்லை. பல மாற்று வைத்திய முறைகளினாலும் பணம் கரைந்ததே தவிர, கை, கால் அசைவுகள் வரவில்லை.

ஜெகதீஷ், ""நானும் மற்றவர்களைப் போல் வேலைக்குச் சென்று, அம்மாவை பார்த்துக் கொள்ள ஆசைப்படுகிறேன். ஆனால், என்னுடைய கடமைகளை முடிக்கவே என்னால் முடியவில்லை. அது தான் வருத்தமாக உள்ளது,'' என்கிறார்.


காலைக்கடன் முதல் அத்தனை வேலைக்கும் தன் தாயையே இவர் நம்பியுள்ளார். படுக்கையில் இருந்தாலும் மற்றவர்களை போல் ஜெகதீஷ் உற்சாக மனநிலையில் உள்ளார்.கடந்த சில ஆண்டுகளுக்கு முன், அவரது தந்தை மாரிச்சாமி விபத்தில் பலியானார். இது, ஜெகதீஷ் குடும்பத்தினரை மேலும் சோகமாக்கியுள்ளது. பிளஸ் 2 படித்துள்ள ஜெகதீஷ், விபத்து நடப்பதற்கு முன், ராணுவத்தில் சேர விரும்பினார்.


உசிலம்பட்டியில் ஊர்காவல் படையிலும் பணியாற்றியுள்ளார். சொந்தக் காலில் நிற்க வேண்டும் என விரும்பிய அவர், இன்று கால் அசைவுகளின்றி இருப்பதை பார்க்கும்போது பரிதாபமாக உள்ளது.இவருடைய நோயை சவாலாக ஏற்று ஏதாவது மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்க முன்வந்தால், இவருக்கு மீண்டும் வாழ்க்கை கிடைக்கும். உதவிக்கரம் நீட்ட விரும்புவோர் 98947 48763 என்ற எண்ணில் அழைக்கலாம்.

யூ டியூப் பார்வையாளர்களை கணக்கெடுத்து வெளியுட்டுள்ளார்கள்

அண்மையில் தன் ஆறாவது பிறந்த நாளைக் கொண்டாடுகையில், தன் தளத்தில் பதிக்கப்பட்டுள்ள வீடியோ காட்சிகளை, நாளொன்றுக்கு சராசரியாக, 300 கோடி பேர் பார்த்து ரசிப்பதாக கூகுள் தெரிவித்துள்ளது. இன்னொரு வகையில் பார்த்தால், உலகின் பாதி மக்கள் தொகை, யு–ட்யூப்பில் ஒரே நேரத்தில் காட்சிகளைக் கண்டு களிப்பதாகத் தெரிகிறது.
 
தாங்கள் எடுத்த வீடியோ காட்சிகளை மற்றவர்கள் பார்த்து ரசிக்க வேண்டும் என விரும்புபவர்களுக்கு வாய்ப்பினைத் தரும் யு-ட்யூப் தளம் இன்று அசுர வளர்ச்சியைப் பெற்றுள்ளது. 
சென்ற ஆண்டைக் காட்டிலும் இது 50% கூடுதலாகும். இதிலிருந்து மக்கள் தகவல்களைக் காட்சிகளாகவே பார்த்து ரசிக்க விரும்புகின்றனர் என்று தெரிகிறது.
இந்த தளத்தில் ஒவ்வொரு நிமிடமும் அப்லோட் செய்யப்படும் வீடியோ காட்சிகளைத் தொடர்ந்து பார்த்தால், இரண்டு நாட்கள் பார்க்க வேண்டும். அந்த அளவிற்கு அதிகமான எண்ணிக்கையில் வீடியோ காட்சிகள் அப்லோட் செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வந்து விட்டது தமிழ் பாடல்கள் கேட்க புதிய இணையதளம்

தமிழ் பாடல்களை கேட்டு மகிழவும் தரவிறக்கவும் எத்தனையோ இணைய தளங்கள் உள்ளன .இப்போது நான் பகிரப்போகும் தளம் மிகச்சிறந்த இசை வலை தளங்களில் ஒன்று எனலாம் .

இசைக்கு மயங்காதவர் யார்தான் இருக்க முடியும் .இசையை கேட்டு மகிழ எத்தனையோ வழி முறைகளை உள்ளன .இசை பல்வேறு பரிணாமங்களை கண்டு இன்று இணைய தளம் மூலமாகவும் மக்களை மகிழ்வித்து வருகிறது.

இதிலுள்ள சிறப்புகளை சொல்லவேண்டுமானால் பாடல்களின் எண்ணிக்கை மற்றும் பாடல்களின் தரம் .எல்லாவற்றையும் விட சிறப்பம்சம் இங்கே பாடல்களை வகைப்டுத்தியிருப்பது .

ராக தேவன் இசையமைத்துள்ள 800 க்கும் அதிகமான திரைபடங்களிலுள்ள பாடல்களை இங்கு கேட்டு மகிழலாம் .REAL PLAYER வைத்திருப்பவர்கள் இதை தரவிறக்கம் செய்ய முடியும் .

இசையருவியில் குளிக்கஇங்கே சுட்டுங்கள் .மேலும் இதே இணைய தளத்தின் இன்னொரு பிரிவு பக்தி பாடல்களை பகிர்கின்றது .பக்தி மழையில் நனைய விரும்புவோர் இங்கே சுட்டவும் . 

இது போல தமிழ் கிறிஸ்தவ பாடல்களை கேட்டு மகிழவும் தரவிறக்கவும் ஓர் அருமையான தளம் உள்ளது .எண்ணற்ற பாடல்களை கொண்ட அந்த தளத்திற்கு செல்ல இங்கே சுட்டவும் .பதிவு பிடித்திருந்தால் கருத்தும் வாக்கும் அளிக்கலாம் .