Friday, March 4, 2011

நிதர்சன கதைகள்-25-கருணை



traffic
மாதவனுக்கு கசகசப்பாய் இருந்தது. கர்சீப்பை எடுத்து கழுத்து வியர்வையை துடைத்துக் கொண்டார். நிழலான இடமாய்ப் பார்த்து நின்றிருந்தாலும், நடு ரோட்டிற்கு ஓடி வண்டியை மடக்குவது என்பது ஒரு கொடுமையான வேலை. இப்படி ஓடிச் சென்று வழிமறித்து வண்டிகளைப் பிடிப்பது ஒன்றும் சுலபம் கிடையாது. சமயங்களில் வண்டிக்காரர்கள் கட் அடித்து இடித்துவிட்டுப் போய்விடுவதும் உண்டு. என்ன தான் நம்பர் நோட் செய்தாலும் ஒன்றும் வேலைக்காகாது. மாதவன் ஒரு ட்ராபிக் கான்ஸ்டபிள்.

வண்டிகளை மடக்குவதற்கு சரியான இடம் பார்த்து நிற்க வேண்டும். எங்கு ஃபிரீ லெப்ட் இல்லையோ அங்கு கண்களுக்கு தெரிகிறாற்போல நிற்கக்கூடாது. கொஞ்சம் உள்ளடங்கி ஓரமாய் நிற்க வேண்டும். அப்போது தான் யாருமில்லை என்ற நினைப்பில் வண்டியோட்டுபவன் “சல்”லென வண்டியை ஸ்லோ செய்து திரும்புவான். திரும்பியவுடன் வேகமெடுக்க ஆரம்பிக்கும் நேரத்தில் சட்டென இரண்டு கைகளை விரித்தபடியே குறுக்கே புகுந்து ஓரங்கட்டச் சொல்ல வேண்டும். வண்டியின் திருப்பத்திற்கும் குறுக்கே போய் நிற்பதற்கும் சரியான தூரம் வேண்டும். அது குறைவாக இருக்கும் பட்சத்தில் ப்ரச்சனைதான்.

அப்படி மடக்கியவுடன், சட்டென வண்டியின் சாவியை எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். முக்கியமாய் இளைஞர்களிடம். இல்லாவிட்டால் மயிராப் போச்சென போய்க் கொண்டேயிருப்பார்கள். அப்படி மடக்கப்படும் முகங்களில் தெரியும் கோபத்தையும், “அய்யோ மாட்டினமா” என்கிற பாவ முகமும், “த்தா.. மாட்னேண்டா” என்று தனக்குள்ளே சொல்லிக் கொண்டு ஓரங்கட்டும் ஆட்களின் முகங்கள் தூக்கத்தில் கூட வரும்.

”கையில காசேயில்லை சார்.. வேணுமின்னா வண்டிய வச்சிக்க.. காசு கொண்டாந்து கொடுத்துட்டு எடுத்துட்டுப் போறேன்” என்று வண்டியை விட்டு கிளம்புபவன், “சார்.. ஒரு இருபது இருக்கு. அவ்ளதான் இருக்கு.. அசீஸ் பண்ணுங்க..” “எவ்வளோ ஃபைன்.. பில் தருவீங்களா?’ என்று அலட்சியமாய் கேட்கும் முதுகில் மார்பழுத்திய பெண்களோடு வரும் இளைஞர்கள். என பல முகங்கள். எல்லோர் முகத்திலும் ஒரு விரோதம் இருக்கும். “தேவடியாப் பய’ என மனதில் திட்டும் குரல் கேட்கும். ஆனால் அதைப்பற்றியெல்லாம் கவலைப் பட்டால் முடியாது. சம்பளத்தைவிட இது முக்கியம்.. ஒவ்வொரு நாளும் அதுவும் இந்த வண்டிகளின் புகையின் நடுவே நின்று, வெயில் மழை என்று உழைக்கும் உழைப்புக்கு ஏற்ற கூலி இதுதான். சம்பளம் அல்ல.. என்று திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டாலும் மாதவனுக்கு உள்ளுக்குள் தன்னைப் பற்றிய கழிவிரக்கம் சுரந்து கொண்டேதானிருக்கும்.

ஒருநேரம் இல்லை ஒருநேரம் மாதவனுக்கு என்ன பொழைப்பு இது என்று எரிச்சலாய்க்கூட வந்ததுண்டு. மாசம் வரும் பத்து சொச்ச சம்பளத்துடன் நிம்மதியாக இருக்கலாம். ஆனால் இருக்கிற விலைவாசியில் அது எங்கே போகிறதென்றே தெரியவில்லை. தினசரி குறைந்தது முன்னூறு ரூபாயாவது கல்லா கட்டவில்லையென்றால் தெனப்படிக்கு பிரச்சனைதான். கலெக்‌ஷன் டைமில் கூட ஆள் இருந்துவிட்டால் அதிலும் பங்கு போய்விடும். அது மட்டுமில்லாமல் சார்ஜெண்டும் இருந்துவிட்டால் அவருக்கு ஒரு பங்கு என்று எல்லாம் போக நூறு மிஞ்சினால் பெரிய விஷயம். சரவணபவன் காபி இருபது ரூபாய் விற்கும் காலத்தில் நூறு ரூபாய்க்கு எவ்வளவு மதிப்பு இருக்கும்?. அண்ணாச்சி பரவாயில்லை.. தெனம் காபியும், டிபனும் இலவசமாய் கொடுத்துவிடுகிறார். மாதவன் வேலை பார்க்கும் ஸ்டேஷனில் பரவாயில்லை. ஒரு சில ஸ்டேஷனில் எல்லோர் கலெக்‌ஷனையும் சேர்த்து போஸ்டுக்கு ஏற்றவாறு பிரித்துக் கொள்கிறார்களாம். அநியாயம். அலைந்து திரிந்து மடக்கிப் பிடிப்பது நாம்.. அதில பங்கு அவர்களுக்கு.. சே.. என்னா பகல் கொள்ளை.. என நினைத்துக் கொள்வார் மாதவன்.

ஆனால் இன்னைக்கு அது கூட கிடைக்காது. மாச டார்கெட் முடித்தே ஆகவேண்டும் என்று இன்ஸ்பெக்டர் ஐயா ரொம்ப ப்ரெஷர். மாசக் கடைசியில் கேஸ் பிடிக்கவிலலையென்றால் அவருக்கு மேலிடத்தில் மண்டகப்படியுண்டு. குறைந்தது ஐம்பதாவது பிடிக்க வேண்டும். இன்றைக்கென்று பார்த்து பெரிதாய் எதுவும் மாட்டவில்லை. எல்லோரும் சரியாகவே நின்று, சிக்னல் பார்த்து வருவதாய் மாதவனுக்கு பட்டது. ஞாயிற்றுக்கிழமை வேறு... பக்கத்து தியேட்டர் காம்ப்ளக்ஸில் மேட்னி வரும் ஆட்களை விட்டால் அஞ்சு மணி வரை காத்தாடத்தான் இருக்கும். டார்கெட் முடிக்காமல் போனால் ”இதே உன் காசுன்னா பிடிக்காம வ்ருவியா.?” என்று சடுதியில் நீதிமானாய் மாறிக் கேள்வி கேட்பார் இன்ஸ்பெக்டர்.

மணி இரண்டு. மாதவன் சுறுசுறுப்பானார். வண்டியில் இரண்டு குழந்தைகளுடன் ஒரு மிடில் க்ளாஸ் தகப்பன். மாதவன் தன் இரண்டு கைகளையும் விரித்துக் கொண்டே அந்த வண்டியின் முன் ஓட, அவன் பதறியடித்து பிரேக்கைப் பிடித்து ஓரமாய் ஒதுக்கிவிட்டு, பரிதாபமாய் மாதவனையே பார்த்தான். மாதவன் பரபரவென அந்த் வண்டியின் அருகே வந்து வண்டியின் சாவியை எடுத்து பாக்கெட்டில் போட்டுக் கொண்டு,

“இறங்குங்க.. போய் அய்யா கிட்ட சலான் வாங்கிக்கங்க..” என்று சொல்லிவிட்டு கிளம்ப யத்தனிக்க,

“சார்.. சார்..” என்றபடி பையன்களை ப்ளாட்பாரம் ஓரமாய் ”பத்திரமாய் நில்லுங்க” என்று சொல்லிவிட்டு மாதவனருகில் வந்து “சார்.. பசங்க பசிக்குதுன்னாங்க.. ஓட்டலுக்கு கூட்டிட்டுப் போறேன்.. கையில நூத்தம்பது ரூபாதான் இருக்கு.. பார்த்து செய்யுங்க சார்..” என்று கெஞ்ச ஆரம்பித்தான்.

மாதவனுக்கு இதெல்லாம் புதிதல்ல. அவர் அவனை சட்டை செய்யாமல்

”அதெல்லாம் எனக்கு தெரியாது அய்யாவ பாரு..” என்றபடி, வேகமாய் திரும்பிய இன்னொரு வண்டியை நோக்கி இரண்டு கைகளை விரித்தபடி குறுக்கே ஓட, அந்த வண்டிக்காரன்.. கோபமாய்..

“ஓரம்போங்க..சார்.. குறுக்கே நிக்காதீங்க.. நானே நிக்கிறேன்..” என்றபடி.. வண்டியை நிறுத்தி என்ன என்பது போல மாதவனை பார்த்தான். மாதவன் வண்டியின் சாவியை எடுக்க கைவைத்த போது..

“ஹலோ..சார்.. கைய எடுங்க.. வண்டி சாவில கை வைக்கிற வேல வேணாம். எதுக்கு வண்டிய ப்ளாக் பண்ணீங்க..?”

மாதவனுக்கு இதுவும் புதிதல்ல.. இம்மாதிரி தாட் பூட்டென கேள்வி கேட்பவர்கள் எல்லாம் அடுத்தடுத்து கேட்கப்படும் லைசன்ஸ், இன்சூரன்ஸ், ஹெல்மெட், இத்யாதிகளில் சரணடைந்து விடுவார்கள். அதைவும் மீறிப் போனால் வண்டியின் நடுவில் ஒட்டும் கருப்பு ஸ்டிக்கர், நேம் போர்ட் என்று எவ்வளவோ உள்ளது.

“ஃபிரீ லெப்ட் கிடையாது இங்க. நீங்க பாட்டுக்கு வர்றீங்க.. க்ராஸ் பண்ணுறவங்களுக்கு ஏதாவது ஆச்சுன்னா யார் பொறுப்பு..?”

“அவ்வளவு பொறுப்பு இருக்கிறவர் க்ராஸிங்க்ல நிக்க வேண்டியதுதானே..? ஓரமா ஒளிஞ்சிட்டு  நிக்கிறீங்க.? போலீஸோட வேலை என்ன தெரியுமா? குற்றம் நடக்காம தடுக்கிறதுதான்.. நீங்க.. நடக்கவுட்டு பிடிக்கிறீங்க.. இதுல யாரு தப்பு செஞ்சாங்கன்னு புரியலை..?”

மாதவனுக்கு அயர்ச்சியாய் இருந்தது.. இனி தாங்காது அஸ்திரங்களை விட வேண்டியதுதான் என்று யோசித்து “ரொம்ப பேசாதீங்க..” என்று ஆரம்பிக்க..

“என்ன.. ஆர்.சி;புக், இன்சூரன்ஸ். ஹெல்மெட், வண்டியோட நேம் ப்ளேட், கருப்பு ஹெட்லேம்ப் ஸ்டிக்கர் அதானே.. எல்லாம் சரியாயிருக்கு.. வேணுமின்னா பாத்துக்கங்க.. ‘ என்றான் அலட்சியமாய்.

“மிஸ்டர்.. ராங் சிக்னல்ல வந்திட்டு ரூல்ஸ் பேசாதீங்க.. ஒழுங்கு மரியாதையா அய்யாகிட்ட போய் ஃபைன் கட்டிட்டு சலான் வாங்கிக்கங்க..”

“நான் ஏன் சார் சலான் வாங்கணும் நீங்க என்னை பிடிக்கும் போது.. எனக்கு சிக்னல் இருந்திச்சு..”

“அப்ப நான் பொய் சொல்றேனா.. த..பாரு.. இந்த சிக்னல்ல நாலு கேமரா இருக்கு அதில எல்லாம் ரெக்கார்ட் ஆவுது..”

“அப்போ பிரச்சனையே இல்லை.. அதுல பார்த்துட்டு நோட்டீஸ் கொடுங்க.. நான் கோர்டுல வந்து பைன் கட்டுறேன். ப்ரூப் பண்ணுங்க.. பண்ணாத தப்புக்கெல்லாம் நான் ஃபைன் கட்ட முடியாது.”

“அங்க என்னய்யா ப்ரச்சனை..?” என்று சார்ஜெண்ட் கேட்டார்.

“பாருங்கய்யா.. ராங் சிக்னல்ல வந்திட்டு ரொம்பத்தான் ரூல்ஸ் பேசுறாரு..” என்றதும் அந்த இளைஞன் சாவதானமாய் இறங்கி.. சார்ஜெண்டை நோக்கி நடந்து போய்.. தன் பையிலிருந்து ஒரு கார்டை எடுத்துக் கொடுத்து “இதான் என் கார்டு.. என் போன் நம்பர் எல்லாம் இருக்கு.. நான் சரியாத்தான் வந்தேன்.. அப்படி நான் ராங் சிக்னல்தான் வந்தேன்னு உங்க கேமரா மூலமா கண்டு பிடிச்சி சொல்லுங்க.. ஃபைன் கட்டுறேன். இல்லேன்னா.. நீங்க ஃபைன் கட்ட வேண்டியிருக்கும் என்று சொல்லிவிட்டு யாரையும் மதிக்காமல் வண்டியை நோக்கிப் போக, மாதவன் “என்னங்கய்யா..?” என்று அந்த கார்டை வாங்கிப் பார்த்தான். வாசுதேவன் மனித உரிமைக் கழகம் என்று போட்டிருக்க.. “சரிதான் சார்..” என்றபடி, அவன் வண்டியை எடுத்துக் கொண்டு போவதையே பார்த்துக் கொண்டிருக்க..

“சார்..சார்..” என்று தீனமான குரல் கேட்டுக் கலைந்து குரல் வந்த திசையை பார்த்தார் மாதவன். குழந்தைகளோடு வந்தவன். குழந்தைகள் வண்டியை பிடித்தபடி தன் அப்பாவையே பாவமாய் பார்த்தபடி நிற்க.. ”சார்.. கொஞ்சம் ஐயாகிட்ட சொல்லுங்க சார்.. பசங்க பசியில இருக்குதுங்க.. கையில வேற காசில்ல..” என்றவனை ஆழமாய் பார்த்தார் மாதவன். அவன் முகத்தில் ஒரு எதிர்பார்ப்பு இருந்தது..

“சரி.. சரி.. ஒரு இருபது ருவா கொடுத்துட்டு கிளம்பு இனிமே இந்தமாதிரி சிக்னல் பாக்காம வரக்கூடாது என்ன..?” என்றார்.

The Social Network



the-social-network-movie
மார்க் ஜூகர்பெர்க் 2003ல் ஹார்வேட் மாணவன் ஆறே வருடங்களில் கோடீஸ்வரன். எப்படி? இந்த கேள்விக்கான பதில் தான் இந்த திரைப்படம். கற்பனைகதையல்ல. நிஜத்தில் கண் முன்னே பார்த்து வளர்ந்து ஓங்கி நிற்கும் ஒருவனின் கதை. வழக்கமாய் நிஜ வாழ்க்கை கதைகள் அதிலும் சமகாலத்தில் வாழும் ஆட்களை பற்றிய கதைகளில் பெரிதாய் ஈர்பிருக்காது. அதிலும் வெறும் கம்ப்யூட்டர், வெப்சைட் என்று சுற்றி கொண்டிருக்கும் ஒருவனது கதையை சுவாரஸ்யமாக சொல்ல முடியுமா?என்று யோசிப்பவர்களும் முடியும் என்று அழுத்தம் திருத்தமாய் சொல்லில்யிருக்கிறார்கள் திரைக்கதையாசிரியரும், இயக்குனரும். 

the-social-network-20100927023625890_640w
கம்ப்யூட்டர் புலியான மார்க்கின் காதல் முறிவுக்கு பின் தான் படிக்கும் ஹாவர்ட்டின் லோக்கல் நெட்வொர்கை உடைத்து facemash.com என்றொரு இணையதளத்தை உருவாக்கி தங்கள் ஹாவர்டில் படிக்கும் மாணவிகளின் போட்டோக்கள் டேட்டாபேஸை திருடி மாணவர்களிடையே ஒரு பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிட, அதன் காரணமாக அவனை ஆறு மாதம் படிப்புக்கு தடை பெறுகிறான். ஒரு போதையான மது இரவில் ஹாவர்ட் ரோயிங் டீமிலிருக்கும் இரட்டையர்கள் தங்கள் சைட்டுக்கு வேலை செய்ய மார்க்கை அழைக்கிறார்கள். 

the-social-network-20100901014239966_640w
சிறிது நாட்கள் கழித்து மார்க்குக்கு பேஸ்புக் பற்றிய ஐடியா தோன்ற, அவனது நண்பன் எடுராடோவிடம் சொல்கிறான். அந்த இணைய தளம் மூலமாக ஹாவர்டிலிருக்கும் அத்துனை மாணவர்களையும் ஒன்றினைத்து அவர்களுக்குள்ளான தகவல்களை பரப்ப முடியும் என்று சொல்ல, எடுராடோ அவனுக்கு ஆயிரம் டாலர் கொடுத்து உதவுகிறான். சடுதியில் ஹாவர்டில் பிரபலமான பேஸ்புக்கின் வளர்ச்சி, கொஞ்சம் கொஞ்சமாய் பெரிய ஆலமரம் வளர ஆரம்பிக்க பிரச்சனையும் ஆரம்பிக்கிறது.
இரட்டையர்கள் சகோதர்களும், முதலாய் பணம் கொடுத்து உதவிய நண்பனும் மார்க் தங்களை ஒதுக்கிவிட்டு தங்கள் ஐடியாவையும் சுட்டு விட்டதாய் கேஸ் போட, அதில் எவ்வாறு மார்க் வென்றெடுக்கிறான் என்பதுதான் கதை. முழுக்க, முழுக்க, வசனங்களாலேயே நிரப்பப்பட்ட திரைக்கதை. அதிலும் மார்க் பேசும் சப்டைட்டிலில்லா ஸ்பீடுக்கு கூடவே ஓடி சில சமயம் நுரை தள்ளுகிறது. 
the-social-network-20100901014236138_640wஆனால் படத்தின் ஆரம்ப காட்சியில்  வரும்,  கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட ஷாட்டுகள் கொண்ட நீண்ட காட்சியை என்ன தான் சுவாரஸ்யமாய் டயலாக் நடிப்பு என்றிருந்தாலும் நம் இயக்குனர்கள் வைப்பார்களா? என்று தெரியவில்லை.. ஆனால் சரி சீன். இம்மாதிரியான நிஜ வாழ்க்கை கதைகளில் இருக்கும் சமகால காதல், பணம், துரோகம், செக்ஸ் போன்ற  சுவாரஸ்யங்களை வைத்து திறமையான திரைக்கதையமைத்த ஆரோன் சார்கின்னை பாராட்டத்தான் வேண்டும். 

Paranormal Activity 2



Paranormal_Activity_2_1284811474_2010இரண்டு வருடங்களுக்கு முன் ஹாலிவுட்டையே கலக்கிய படம். வெறும் பதினைந்தாயிரம் டாலரில் படமாக்கப்பட்டு, பின்பு இரண்டு ஆண்டுகள் ரிலீஸ் செய்ய முடியாமல் இருந்து, ஸ்பீல்பெர்க்கின் கண்ணில் பட்டு, மோட்சமடைந்து பாரமவுண்டினால் ரிலீஸ் செய்யப்பட்டு சுமார் 100 மில்லியனுக்கு மேல் வசூல் செய்த படம். சுமாராய் பேசப்படும் படத்தையே எட்டு பார்ட் எடுக்கிறவர்கள் இவ்வளவு பெரிய ஹிட்டை எடுக்காமல் இருப்பார்களா? அதான் இரண்டாவது பார்ட்
.
Paranormal Activity 2 2010 TS Xvid Feel-Free.avi_snapshot_01.00.16_[2010.10.30_07.30.44]
வழக்கமாய் இம்மாதிரியான படங்களில் முதல் பார்ட்டில் செட்டான ஒரு பார்மெட் இருக்கும். அது ஒரு சக்சஸ் பார்முலாவாக இருப்பதால் மீண்டும் அதையே இன்னும் பாலீஷ் செய்யப்பட்டு இன்னும் ப்ரெஷ்ஷாக கொடுக்க முயற்சிப்பார்கள். இதிலும் அதையே.. செய்து வெற்றியும் பெற்றிருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும். இக்கதை முதல் பாகத்தின் தொடர்ச்சி கிடையாது, அதன் முன் பகுதி. முதல் பகுதியின் முடிவையும் இரண்டாவது பகுதியின் முடிவையும் மிக அழகாய் முடிச்சு போட்டிருப்பது திரைக்கதையாசிரியன் திறமை.
Paranormal Activity 2 2010 TS Xvid Feel-Free.avi_snapshot_00.11.44_[2010.10.30_07.29.17]கிறிஸ்டி ரே பிரசவத்திற்கு பிறகு தன் குழந்தை ஹண்டருடன் வீட்டிற்கு வருகிறாள்.  குழந்தையின் முதல் சில மாத வீடியோக்களுடன் காட்சிகள் நகர்கிறது. அவளுடய கணவன் டான், அவனுடய பெண், வீட்டை பார்த்துக் கொள்ளுமொரு  ஆயா போன்ற பிலிப்பைன்ஸ் பெண், ஏபி எனும் நாய் இதுதான் அவர்கள் குடும்பம். ஒரு நாள் இரவு வீட்டின் எல்லாக் கதவுகளும் பூட்டியிருக்க.. வீட்டையே தலைகீழாக்கி போடப்பட்டிருக்க.. கிறிஸ்டியின் ஒரு நெக்லஸை தவிர எதுவும் திருடு போகவில்லை. எனவே வீடு முழுவது செக்யூரிட்டி கேமராக்களை பொருத்துகிறார்கள். அதன் பிறகு ஒவ்வொரு இரவும் நமக்கு காட்டப்பட.. மெல்ல.. மெல்ல அமானுஷ சக்திகளின் அட்டகாசங்கள் ஆரம்பமாகிறது. ஆனால் அதை நம்பாத டான்.. எல்லாவற்றுக்கும் ஒரு விஞ்ஞான காரணம் சொல்கிறான். ஒரு கட்டத்தில் அமானுஷ சக்தி குழந்தை ஹண்டரிடம் போய் நிற்க, அவனுடய் ரூமிலிருக்கும் நாய் அதை கண்டு மிரண்டு குலைக்க ஆரம்பிக்கிறது. திடீர் திடீரென நடக்கும் சில பல அதிர்ச்சிகள் தொடர, வேறு வழியில்லாமல் முன் இந்த வீட்டில் ஏதோ தவறு இருக்கிறது என்று சொன்ன ஆயாவை வேலையை விட்டு விரட்டிய டான் அவளை வரவழைக்கிறான். அவள் ஒரு சிலுவையை அவனுக்கு கொடுத்து, இவ்வீட்டில் உள்ள துஷ்ட சக்தியை கிறிஸ்டியின் மீது வைத்து அவளுடய ரத்த சம்பந்தமான அவளுடய சகோதரி கேட்டியின் மீது மாற்றிவிட்டால் அவனுடய குழந்தையும், குடும்பமும் பிழைக்கும் என்கிறாள். ஆனால் அதன் பிறகு நடக்கும் விஷயங்கள் எல்லாம் ஏறு மாறானவை.  டேன் மற்றும் கிறிஸ்டிக்கு என்ன ஆயிற்று? குழந்தை ஹண்டரை ஏன் அமானுஷ்ய சக்தி ஆகர்ஷிக்கிறது? அவனுக்கு என்னவாயிற்று என்பது போன்ற கேள்விகளுக்கு வெள்ளித்திரையில் பதில் தெரிந்து கொள்ளுங்கள்.
Paranormal Activity 2 2010 TS Xvid Feel-Free.avi_snapshot_00.56.37_[2010.10.30_07.30.40]தன் ஒரே தொந்தரவான நாயை ஒரு நாள் அமானுஷ சக்தி அடித்துப் போட, அந்த ஒரே நாள் இரவில் நடக்கும் பல விஷயங்கள் ஸ்பைன் சில்லிங். படம் முடிந்துவிட்டது என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது முதல் பாகத்தின் கேட்டியை வைத்து இந்த பாகத்தை முடித்திருப்பது.. அட்டகாசம்.  நிச்சயம் வழக்கமான ரெண்டாவது பாகம் தானே என்ற சலிப்புடன் பார்க்க ஆரம்பித்தவர்களை நிமிர்ந்து உட்காரச் செய்துவிடும் க்ளைமாக்ஸ்.

டெக்னிக்கலாய் முதல் பாகத்தைவிட சிறப்பாக இருக்கிறது. முதல் பாகத்தில் கூடவே ஓடிவரும் கேமரா காட்சிகள் தான் அதிகம் இருக்கும். இதில் அம்மாதிரியான காட்சிகள் சில சமயம் பார்வையாளர்களின் பாயிண்ட் ஆப் வியூவிலும், சில காட்சிகள் டேனின் பெண்ணின் கேமராவின் பார்வையிலும் இருக்கிறது. சிசி டிவி கோணங்களில் காட்டப்படும் காட்சிகள் மெல்ல, மெல்ல..  ஒரு கட்டத்தில்  நடு முதுகில் சில்லிட வைக்கிறது. ராத்திரியில் படம் பார்த்தால் நிச்சயம் வீட்டின் ஏதாவது அறையில் சத்தம் கேட்டால் ஒரு ஜெர்க் ஏற்படுவது நிச்சயம்.

தற்கொலைகளும்.. பொதுபுத்தியும்.

சென்ற வாரம் இரண்டு தற்கொலைகள். ஒரு பெண் சக மாணவி வைத்திருந்த பணம் காணாமல் போனதால், சந்தேக லிஸ்டில் இருந்த நான்கு பேரில்  தன்னை மட்டும்  நிர்வாணப்படுத்தி செக் செய்தார்கள் என்பதற்காக தூக்கு போட்டுக் கொண்டார். இன்னொருவர் பள்ளியில் பரிட்சையில் காப்பி அடித்தற்காக ஆசிரியர் திட்டியதை தாங்க முடியாமல் தூக்கு போட்டுக் கொண்டார். இதற்காக முதல் சம்பவத்தில் நான்கு ஆசிரியர்களை கைது செய்து அப்போதைக்கு பிரச்சனையை முடித்திருக்கிறது போலீஸும், கல்லூரி நிர்வாகமும். கோர்ட்டில் அவர்களை அரெஸ்ட் செய்ததே தவறு என்று கூறி ஜாமீன் கொடுத்துள்ளது. 


இறந்த பெண் ஏழை, பிற்படுத்தப்பட்ட பெண் என்றதும், கூட்டமாய் வந்து பிரச்சனை செய்த மக்கள் கூட்டத்தை சமாளிக்க இம்மாதிரியான நடவடிக்கைகள் எடுத்தால் நிச்சயம் எதிர்காலத்தில் நல்ல ஆசிரியர்கள் கிடைக்க மாட்டார்கள். காப்பி அடித்தால் மடியில் வைத்துக் கொஞ்சுவார்களா என்ன? இம்மாதிரியான விஷயங்களை பத்திரிக்கைகளும் ஏதோ உணர்ச்சிவசப்பட்ட நிலையிலேயே பரபரப்புக்காக செய்திகளை போட்டு விடுகிறது. உடனே நம் பதிவர்களும் ஆளாளுக்கொரு பதிவு போட்டுவிடுகிறார்கள். ஜாதிப் பிரச்சனை, அது இது என்று ஆளாளுக்கு ஒர் கற்பனையில். மொத்தத்தில் இவர்களுக்கு தெரிந்த நிஜமெல்லாம் தினசரிகளில் வந்த செய்தி மட்டுமே.. பேப்பரை படித்து மட்டுமே ஆளாளுக்கு பதிவு போடுபவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்பெண் தற்கொலைக்கு முன் அரைகுறையாய்த்தான் கடிதமெழுதி வைத்திருக்கிறார். அதில் எங்கேயும் தன்னை நிர்வாணப்படுத்தி செக் செய்தார்கள் என்று எழுதியிருந்ததாய் இல்லை.
இதில் உச்சம் என்னவென்றால் ஒருவர் எப்படி ஒரு பெண் அவ்வளவு பணத்தை காலேஜுக்கு கொண்டு வரலாம் என்று கேட்டிருந்தார். என்ன கொடுமைங்க இது?.  அதன் பின்னணியில் இருப்பது யாருக்கும் தெரியாது. எப்படி அந்தப் பெண் திருடியிருக்க வாய்ப்பில்லை, அவள் ஏழை, பிற்படுத்தப்பட்ட பெண் என்ற காரணத்தினால் தான் அவமானப்படுத்தப்பட்டாள் என்று ஒரு வர்ஷன் இருக்கும் போது, ஏன் அந்த பெண் திருடியிருக்கக்கூடாது? தான் மாட்டியதால் அவமானப்பட வேண்டியிருக்குமே என்று தூக்கு மாட்டி செத்திருக்கலாம் என்ற வர்ஷனும் இருக்கத்தானே செய்யும். இதோ இன்று இவர்களை கைது செய்து அவமானப்பட வைதாகிவிட்டது. நாளையே இவர்கள் குற்றமற்றவர்கள் என்று நிருபிக்கப்பட்டுவிட்டால், இதே பத்திரிக்கைகளும், பதிவர்களும் அவர்கள் எழுதியதற்கு குறைந்தபட்சமாக வருத்தமாவது தெரிவிப்பார்களா? நிச்சயம் செய்ய மாட்டார்கள் ஏனென்றால் அதற்கான பரபரப்பு போன பிறகு எழுதுவது வேஸ்ட். இப்படி போலியாய் குற்றம் சாட்டப்பட்டு அவமானத்திற்கு உட்பட்டவர்களின் வலி மிகக் கொடியது.

ஒரு பெண் காப்பியடிப்பதை பார்த்து ஆசிரியர் திட்டாமல் என்ன செய்ய வேண்டும்?.  உடனே அவர்கள் அவளை என்ன சொல்லித் திட்டினார்கள் என்பதுதான் முக்கியம் என்று சொல்வது மீண்டும் ஜாதி, மற்றும் பொருளாதார நிலையை வைத்து பேசும் சப்பைக்கட்டுகள் தான். பத்திரிக்கையில் வந்த செய்தியின் படி, நன்றாக படிக்கும் மாணவியான அவர் உடல் நிலை சரியில்லாததால் படிக்கவில்லை. அதை சரி செய்யும் நோக்கில் காப்பி அடித்துள்ளார். ஒரு ஆசிரியை இம்மாதிரியான செயல்களை நன்றாக படிக்காத மாணவி செய்திருந்தால் கூட எக்கேடோ கெட்டு போகிறதென்று விட்டு விடுவார். நன்றாக படிக்கும் மாணவி இப்படி செய்தால் நிச்சயம் கோபப்பட்டு திட்டத்தான் செய்வார். அம்மாணவி தூக்கு போட்டு செத்துப் போனதால் அவள் செய்தது நியாயம் என்றாகிவிடுமா?

ஒருவர் தவறு செய்தால் அவர்களுக்கு ஜாதி, இன, பண வேறுபாடு இல்லாமல் சட்டம் தன் கடமையை செய்ய வேண்டும். ஆனால் இங்கு நடக்கும் பல விஷயங்கள் வெறும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இயக்கும் மாப் சைக்காலஜியில் கும்பல் சேரும் கூட்டத்தை சரி செய்வதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகள், அந்த ஆசிரியர்களின் வாழ்க்கையை எவ்வளவு தூரம் பாதிக்கும் தெரியுமா?

போன வாரம் இன்னொரு செய்தி ஒரு அரசு ஆஸ்பத்திரியில் தங்கள் குழந்தைக்கு உடல் நிலை சரியிலலை என்று போய் காட்டியிருக்கிறார்கள். அதற்கு டாக்டர்.. குழந்தையின் உடல் நிலை மோசமாக இருக்கிறது. விரைவில் ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். ஆனால் அதை மதிக்காத பெற்றோர்கள் மேலும் ஒரு மாதம் கழித்து குழந்தையின் நிலமை மோசமான போது கொண்டு வந்து ஆபரேஷன் செய்யச் சொல்லி கேட்டிருக்கிறார்கள். டாக்டர் இப்போது நிலை மோசமாக உள்ளது இப்போது ஆபரேஷன் செய்தால் சான்ஸ் ரொம்ப குறைவு என்று சொல்லிவிட்டுத்தான் ஆபரேஷன செய்திருக்கிறார். ஆபரேஷன் தோல்வியடைந்து குழந்தை இறந்துவிட்டது. உடனே ஒரு கூட்டத்தை கூட்டிக் கொண்டு வந்து டாக்டரை கைது செய்ய வேண்டும் என்று ஒரு கும்பல் ஆஸ்பிட்டலை முற்றுகையிட்டு ப்ரச்சனை செய்திருக்கிறதது.

சைக்கிள்காரனுக்கு குறுக்கே நடந்து அடிபட்டால், தவறு நடந்து வந்தவன் செய்திருந்தாலும் சைக்கிள்காரந்தான் தப்பு செய்தான், என்று முடிவு செய்வது போல யாரோ எவரோ எங்கோ ஒருவர் செய்யும் தவறான செயல்களை பொதுபுத்திக் கொண்டு உணர்ச்சிவசப்படாமல் பார்க்க பழகினால் பல பிரச்சனைகளுக்கான காரணம் தெரியும்.

அமெரிக்காவுடன் போருக்கு நாங்கள் தயார்..


(விதி யார விட்டு வச்சிது?)
நல்லா பாருங்க.



இது அமெரிக்காவிடம் இருக்கும் சக்தி.....


Join Only-for-tamil

லட்ச கணக்கான fighter விமானங்கள்....
Join Only-for-tamil

சரம் மாதிரியாக குண்டு மழை பொழியும் விமானங்கள்..

Join Only-for-tamil


Join Only-for-tamil

இவை அனைத்தையும் சமாளிக்கும் விதத்தில்,
இந்தியாவின் ஒரே பிரம்மாண்ட சக்தி...

Join Only-for-tamil



சும்மா சிரிக்கப்புடாது ...
அவரது சாகச காட்சிய பார்த்துட்டு முடிவு பண்ணுங்க...




Join Only-for-tamil

எப்புடி தலைவன் கலக்கி புட்டாருல்ல?

விண்டோஸ் நிரல்களை லினக்ஸ்ஸில் நிறுவுவது எப்படி?



How to install windows programs in linux?




நிறைய நபர்களுக்கு லினக்ஸ் பிடிக்காமல் விண்டோஸ் இயக்குதளத்தையே பயன்படுத்துவதற்கு முக்கிய காரணம் விண்டோஸ் நிரல்களை (program)  லினக்ஸ் இயக்குதளத்தில் நிறுவ முடியாது என்பதன் காரணமாகத்தான். இதனை சரி செய்யும் வகையில் லினக்ஸ் இயக்குதளத்தில் இந்த மென்பொருளை நிறுவினால் போதுமானது! இதனை நான் பயன்படுத்தி பார்க்கும் போது மிக நன்றாக வேலை செய்தது. இதில் நான் winamp,vlc,MS office என நாம் அன்றாட விண்டோஸ் இயக்குத்தலத்தில் பயன்படுத்தும் மென்பொருளை பயன்படுத்தி பார்த்தேன் ம்ம்ம்ம்.... வேலை செய்தது ஆனால் மிகப் பெரிய மென்பொருள்கள் அதாவது வரைகலை (graphics) மிகுதியாக இருக்கும் மென்பொருள் வேலை செய்யவில்லை. மேலும் இதில் நான் நிகழ்பட விளையாட்டை நிறுவி பார்க்கவில்லை அதனால் நீங்கள் இதனை பயன்படுத்தி எனக்கு கூறுங்கள்! 
இந்த மென்பொருளை உங்கள் லினக்ஸ் இயக்குதளத்தில் நிறுவ :- http://www.winehq.org/download/

கவனிக்க:- இந்த மென்பொருள் ஆப்பில் ,சொலாரிஸ் என பல இயக்குதளங்களில் வேலை செய்யும்! அதனால் இதனை வைத்து கொண்டு எந்த இயக்குதளத்திலும் விண்டோஸ் நிரல்களை நிறுவலாம்!

USB Drives களை பார்மெட் செய்ய எளிய மென்பொருள்


நம்மிடம் உள்ள தகவலை வெளியே எடுத்துச்செல்ல பெரும்பாலும் நாம் பயன்படுத்துவது CD,DVD,Pen Drive,Usb Drive போன்றவைகள் ஆகும். நாம் வைத்துள்ள Drive களை வைரஸ் அல்லது வேறு சில காரணங்களினால் பார்மெட் செய்ய நேரும். அப்போது வைரஸ் பிரச்சினையின் காரணமாக பார்மெட் செய்வதில் பல பிரச்சினைகள் நேரும். பார்மெட் செய்ய இயலாது. இதனை சரிசெய்ய ஒரு எளிய மென்பொருள் உள்ளது.



Disk Formatter என்னும் மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி இன்ஸ்டால் செய்து கொள்ள வேண்டும். கணினியுடன் இணைக்கபட்ட மென்பொருளை காட்டும், Format என்ற பொத்தானை அழுத்தி Format செய்து கொள்ள முடியும்.இதன் சிறப்பு வசதி மென்பொருள் வெறும் 50kb அளவு உடையது ஆகும். FAT32 and NTFS format களை உடையது ஆகும்.
மென்பொருளை பதிவிறக்க: Disk Formatter 

 
மென்பொருட்கள் இல்லாமல் USB Drive களை பார்மெட் செய்ய:
எந்தவித மென்பொருளும் இல்லாமல் கணினியில் நிறுவியுள்ள ஆப்ரேட்டிங்சிஸ்ட்டம் மூலமாகவே USB Drive களை பார்மெட் செய்ய முடியும்.
முதலில் Start->Rum->cmd என்று தட்டச்சு செய்து command prompt யை ஒப்பன் செய்ய வேண்டும். பின் My computer யை ஒப்பன் செய்து Drive எந்த கோலன் என்பதை குறித்துகொண்டு command prompt ல் Format என டைப் செய்து F:G:H:I:J: இது போல எந்த கோலன் என்பதை Format கோலன், உதரணாத்திற்க்கு G: கோலன் என்றால் format g: என்று டைப் செய்து Enter Keyயை அழுத்தவும்.


அடுத்ததாக பார்மெட் செய்ய ரெடி, என்று Enter கீயை அழுத்த சொல்லும் பின் எண்டர் கீயை அழுத்தவும்.


பார்மெட் ஆக தொடங்கும், ஒரு சில வினாடிகளில் பார்மெட் ஆகிவிடும்.


விரும்பினால் Drive க்கு பெயரை இங்கேயே எழுதலாம்.
அவ்வளவு தான் இனி Drive களை பார்மெட் செய்வது எளிதாகும்.

வீடியோக்களை கன்வெர்ட் செய்ய


பல்வேறு விதமான வீடியோ பைல்கள் நம்மிடம் இருக்கும். அவை ஒவ்வொன்றும் தனித்தனி பைல் பார்மெட்டில் இருக்கும். அவற்றை பயன்படுத்தும் போது ஒரு சில பைல்கள் மட்டும் எதாவது கோளாருகளை உண்டாக்கும். அவ்வாறு உள்ள வீடியோ பைல்களை கன்வெர்ட் செய்ய வேண்டுமெனில் நாம் எதாவது ஒரு மென்பொருளை நாட வேண்டும். வீடியோக்களை கன்வெர்ட் செய்ய புகழ்பெற்ற மென்பொருள் Total video converter ஆகும். இதை தவிர்த்து சிறந்த மென்பொருட்கள் உண்டா என்று இணையத்தில் தேடி பார்த்தால் பல இருக்கிறன. அவற்றில் ஒன்றுதான் AIO Video Converter, இந்த மென்பொருளானது இலவச மென்பொருள் ஆகும்.

மென்பொருளை தரவிறக்க சுட்டி


மென்பொருளை இணையத்தின் உதவியுடன் பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்து Choose Encoding Profile என்பதில் எந்த பார்மெட்டில் வீடியோவை மாற்றம் செய்ய நினைக்கிறீர்களோ அதனை தேர்வு செய்து கொள்ளவும்.


பின் Add பொத்தானை அழுத்தி எந்த வீடியோவை மாற்றம் செய்ய நினைக்கிறீர்களோ அதை தேர்வு செய்து கொள்ளவும். பின் Convert என்ற பொத்தானை அழுத்தவும்.


இந்த அப்ளிகேஷனின் அமைப்பை (Setting)  உங்கள் விருப்பபடி மாற்றியமைத்து கொள்ள முடியும். இந்த மென்பொருளின் உதவியுடன் எந்த வீடியோ பைலாக இருந்தாலும் நீங்கள் குறிப்பிடும் பைல் பார்மெட்டில் மாற்றம் செய்து கொள்ள முடியும்.