Thursday, May 26, 2011

த‌மிழக அரசு அ‌றி‌வி‌த்து‌ள்ளது எ‌ந்த வகை‌யி‌ல் ‌நியாய‌ம்?


திருமண உதவி கேட்கும் ஏழை‌ப் பெ‌ண்க‌ளு‌ம், இளநிலை பட்டம் அல்லது டிப்ளமோ பெற்ற பெண்களின் பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.24 ஆயிரத்திற்கு‌ள் இரு‌க்க வே‌ண்டு‌‌ம், பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த பெண்ணாக இருந்தால் 5ஆம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும். மற்ற வகுப்பைச் சேர்ந்த பெண்கள் 10ம் வகுப்பு படித்திருக்க வேண்டும். அ‌ப்படி இரு‌ந்தா‌ல் ம‌ட்டுமே ரூ.25 ஆயிரத்துடன், தாலி செய்வதற்கு 4 கிராம் தங்கமும் இலவசமாக வழங்கப்படும்'' எ‌ன்று த‌மிழக அரசு பு‌திய ‌நிப‌ந்தனையை ‌வி‌தி‌த்து‌ள்‌ளது.

த‌மிழக ச‌ட்ட‌ப்பேரவை தே‌ர்த‌‌ல் வா‌க்குறு‌திபடி படித்த ஏழைப் பெண்களுக்கு ரூ.25 ஆயிரம் உதவியுடன் தாலிக்கு 4 கிராம் தங்கமும், பட்டம் அல்லது டிப்ளமோ பெற்ற பெண்களின் திருமணத்திற்கு ரூ.50 ஆயிரத்துடன் 4 கிராம் தங்கமும் இலவசமாக வழங்கப்படும் என்று பதவியேற்ற நாளிலே முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார்.

அவ‌ர் அ‌றி‌‌வி‌த்த கையோடு த‌மிழக சமூகநலம், சத்துணவுத் துறை முதன்மைச் செயலர் மோகன் பியாரே மூல‌ம் வெ‌ளி‌யி‌ட்ட‌ப்ப‌ட்டு‌ள்ள அரசாணை‌யி‌ல் இ‌ந்த பு‌திய ‌நிப‌ந்தனை ‌வி‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.
இ‌ந்த கால‌த்‌தி‌ல் பெ‌ண் ‌பி‌ள்ளைகளு‌க்கு ‌திருமண‌ம் ச‌ெ‌ய்து வை‌க்க பெ‌ற்றோ‌ர்க‌ள் படு‌ம்பாடு சொ‌ல்‌லிமாளாது. அ‌ந்த அளவு‌க்கு த‌ங்க‌த்த‌ி‌ன் ‌விலை ஏழைக‌ள் வா‌ங்க முடியாத அளவு‌க்கு எ‌ட்டா நிலை‌க்குச் செ‌ன்று ‌வி‌ட்டது. அ‌ப்படி இ‌ப்படி எ‌ன்று ‌சிறுக ‌சிறுக நகைகளை சே‌ர்‌த்து வை‌க்‌கி‌ன்றன‌ர் பெ‌ண் ‌பி‌ள்ளைகளை பெ‌ற்றவ‌ர்க‌ள். ஒ‌ரு‌வ‌ழியாக நகைகளை சே‌ர்‌த்து த‌ங்க‌ள் ‌பெ‌ண் ‌பி‌ள்ளைகளு‌க்கு ‌திருமண‌ம் செ‌ய்து வை‌க்க‌ி‌ன்றன‌ர். அ‌த்துட‌ன் த‌மிழக அரசு கொடு‌த்த 20,000 ரூபாயு‌ம் அவ‌ர்களு‌க்கு ஒரு கட‌ன் சுமையை குறை‌ப்பதாக இரு‌ந்தது.

த‌ற்போது அத‌ற்கு‌ம் இடி ‌விழு‌ந்த மா‌தி‌ரி வெ‌ட்டு வை‌த்து‌ள்ளது த‌மிழக அரசு. ‌திருமண‌ உத‌வி‌த் தொகை பெற வே‌ண்டுமானா‌ல் பெ‌ண்‌ணி‌ன் பெ‌ற்றோ‌‌ரி‌ன் ஆ‌ண்டு வருமான‌ம் 24,000 ரூபா‌ய்க்கு குறைவாக இருக்க வேண்டும் எ‌ன்று. ‌கிராம‌ப்புற‌த்‌தி‌ல் நெ‌ற்ப‌யிரு‌க்கு களை எடு‌‌க்கு‌ம் ஒரு பெ‌ண்‌ணி‌ன் ஒரு நா‌ள் கூ‌லி 100 முத‌ல் 130 வரை கொடு‌க்‌க‌ப்படு‌கிறது. ம‌ண்வெ‌ட்டியை எடு‌த்து வேலை‌க்கு செ‌‌ன்றா‌ல் 150 ரூப‌ா‌‌ய்‌க்கு குறை‌ந்து கூ‌லியை வா‌ங்காம‌ல் வருவ‌தி‌‌ல்லை ‌கிராமபுற ம‌க்க‌ள். இ‌ப்படி கூ‌லிவேல‌ை‌க்கு செ‌ன்று ச‌ம்பா‌தி‌க்கு‌ம் ஏழை‌ப்‌பெ‌ற்றோ‌ர்க‌ளி‌ன் ஆ‌ண்டு வரு‌ம் 35 ஆ‌யிர‌‌த்‌தி‌ற்கு மே‌ல் இரு‌க்கு‌ம் போது 24 ஆ‌யிர‌ம் ரூபா‌ய் இரு‌ந்தா‌ல்தா‌ன் ‌திருமண உத‌வி‌ தர‌ப்படு‌ம் எ‌ன்று த‌மிழக அரசு அ‌றி‌வி‌த்து‌ள்ளது எ‌ந்த வகை‌யி‌ல் ‌நியாய‌ம்?

Tuesday, May 24, 2011

பருத்த உடல் இளைக்க...

சேர்க்க வேண்டிய உணவுகள்: 

6.00 AM 
  GREEN TEA - யை பால், சர்க்கரை இல்லாமல் காய்ச்சிய சுடு நீரில் போட்டு 10  நிமிடம் கழித்து பருக வேண்டும்.

8.00 AM
  வேக வைத்த பாசிப்பயிறு (அ) கொண்டைகடலை, சுண்டல் (அ) காணப்பயிறு + ஒரு கப் பச்சை காய்கறிகள்.

11.00 AM
  முட்டைகோஸ் சூப் (அ) காய்கறி சூப்.


1.00 PM
  ஒரு கப் சாதம் + ஒரு கப் காய்கறிகள் + ஒரு கப் கீரை.

4.00 PM
   GREEN TEA + ஒரு ஆப்பிள் (அ) ஒரு ஆரஞ்சு (அ) ஒரு கொய்யா (அ) ஒரு கீத்து பப்பாளி.
7.30 PM
  கம்பு (அ) கேப்பை (அ) கேழ்வரகு தோசை (2 NOS) + தக்காளி சட்டினி மட்டும்.

தவிர்க்க வேண்டிய உணவு பொருட்கள்:


கோதுமை, ஓட்ஸ், மண்ணிற்கு அடியில் விளையும் காய்கறிகள், மற்றும் கிழங்குகள், இனிப்பு வகைகள், பேக்கரி வகைகள், பொறித்த உணவுகள், தேங்காய், மட்டன், முட்டை, சிக்கன், மீன், பால் பொருட்கள், இனிப்பு வகையான பழங்கள் ( வாழை, சப்போட்டா, திராட்சை, மாம்பழம், பலாப்பழம்), பேரிட்சை, பருப்பு ( முந்திரி, பாதாம், பிஸ்தா), கூல்ட்ரிங்க்ஸ், சாக்கலேட்ஸ், பிஸ்கட்ஸ், ஐஸ்கிரீம், பார்லி, எண்ணெய் பண்டங்கள் மற்றும் பலகாரங்கள்.

எளிமையான உடற்பயிற்சிகள்:




ரொம்ப கடினமான உடற்பயிற்சிகள் தேவையில்லை. வெறும் கயிற்றை வைத்தே உடற்பயிற்சி செய்யலாம். அதுதான் POCKET ROPE GYM. வெறும் 250 ரூபாய்க்கு கடைகளில் கிடைக்கிறது. அதோடு, உடற்பயிற்சி எப்படி செய்ய வேண்டும் என்ற குறிப்பும் இணைக்கப்பட்டுள்ளது. அதில் கொடுத்துள்ள உடற்பயிற்சிகளை மட்டும் செய்தால் போதுமானது.

கண்டிப்பாக இரண்டே வாரத்தில் சுமார் மூன்று கிலோ எடையை குறைத்து விடலாம்.


மேற்கண்ட உணவு கட்டுப்பாடும், உடற்பயிசியும் கடைபிடிப்பதால் எவ்வித பக்க விளைவுகளும் ஏற்படாது. இருந்தாலும் மிக மிக அதிக எடை உள்ளவர்கள் கண்டிப்பாக OBESITY DOCTOR மூலம் ஆலோசனை செய்த பின்னர் இம்முறைகளை கடைபிடிக்கவும். ஏனெனில் அவர்களுக்கு அதிகப்படியான எடையை குறைக்க மாத்திரைகளும், மருந்துகளும் கொடுப்பார்கள்.


உடல் எடையை குறைத்த பின்னர் சரிவிகித உணவும், சீரான உடற்பயிசியும் அவசியம் தேவை. அப்பொழுது தான் குறைத்த எடையை கூடாமல் சீராக வைத்துக் கொள்ள முடியும்.

Monday, May 23, 2011

இது பேஸ்புக் செய்த சதி


சமூக இணையத்தளமான பேஸ்புக் உரிமையாளர்கள் பேர்ஸன் மாஸ்டெல்லர் என்ற நிறுவனத்தின் சேவையை இதற்கெனப் பெற்றுள்ளனர்.

மோசமான தந்திரங்களைப் பிரயோகிக்கும் வெகுசனத் தொடர்பு நிறுவனமொன்றை வாடகைக்கு அமர்த்தி கூகுள் நிறுவனத்துக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதாக பேஸ்புக் ஒப்புக் கொண்டுள்ளது.

கூகுள் நிறுவனம் பற்றி எதிரிடையான செய்திகளை பத்திரிகைகளில் பிரசுரிக்கச் செய்வதே இந்த நிறுவனத்துக்கு வழங்கப்பட்டப் பணி.

இந்த நிறுவனம் போக்லாந்து யுத்தத்தின் போது ஆர்ஜன்டீன ஆட்சியாளர்களை பிரதிநிதித்துவம் செய்த நிறுவனமாகும்.

வாசிப்போர் மத்தியில் குழப்பத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தும் வகையில் கூகுளின் சமூக வட்ட சேவை தொடர்பான கதைகளை இந்த நிறுவனம் வெளியிட்டது.

கூகுளின் சமூக இணையத்தளம் (சோஷியல் சேர்கள்) வாடிக்கையாளர்களின் இரகசியங்களை மீறிவிட்டது என்ற அடிப்படையில் தான் இந்தப் பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டன.

பேஸ்புக்கிற்கு நேரடி சவால் விடுக்கக் கூடிய ஒரு சமூக இணையத்தளமாக இருப்பது கூகுளின் சோஷியல் சேர்கள் மட்டுமே.

வாடிக்கையாளர்கள் படங்கள், வீடியோக்கள் உட்பட பல்வேறு தகவல்களை இதில் தரவேற்றம் செய்ய முடியும். பேஸ்புக்கில் இருந்து அங்கீகாரமற்ற முறையில் தரவுகளையும், ஏனைய சேவைகளையும் இது பெற்றுக் கொள்வதாக பேஸ்புக் குற்றம்சாட்டியிருந்தது.

பேஸ்புக்கால் வாடகைக்கு அமர்த்தப்பட்ட நிறுவனம் இது தொடர்பாக ஒரு குறிப்பை எழுதுவதற்கு அமெரிக்காவின் பிரபல சட்டத்தரணி ஒருவரை நாடியுள்ளது.

வாஷிங்டன்போஸ்ட் உட்பட பிரபல பத்திரிகைகளில் இந்தக் கட்டுரையைப் பிரசுரிக்க எழுதுமாறு கேட்டு அவரை நாடியுள்ளது. அவர் இந்த முயற்சிக்குப் பின்னால் இருப்பவர்கள் யார் என்று கேள்வி எழுப்பியபோது மேற்படி நிறுவனம் பதிலளிக்க மறுத்துவிட்டது.

அதனையடுத்து அந்த சட்டத்தரணி இது தொடர்பான ஈ மெயில் தொடர்புகளை இணையத்தளம் வாயிலாக வெளியிட்டுள்ளார்.

அதனையடுத்தே பேஸ்புக்கின் குட்டு அம்பலமாகியுள்ளது.

உங்களுக்கு ரூபாய் 40 கோடிக்கு எ டி எம் கார்டு வேண்டுமா?

 பெனின் குடியரசு நாட்டில் பணம் படைத்த பெண் ஒருவர், தம்மிடம் தேங்கி உள்ள பணத்தை ஏழைகளுக்கு (மட்டும்) வழங்க முடிவு செய்துள்ளதாகவும், "நீங்கள் ஏழையாக இருக்கும் பட்சத்தில், முழுமையான தகவல் அனுப்பி பயன் பெறலாம்' எனவும், நமக்கு முதல், "இ-மெயில்' வருகிறது.

அவர்கள் கேட்ட விவரங்களை அனுப்பியதும், நமது பெயரில் அந்நாட்டின் காப்பீடு திட்டத்தில், 40 கோடி ரூபாய்க்கு கணக்கு துவங்கியிருப்பதாக, அடுத்த மெயில் வருகிறது. உடன், அரசு அனுமதியுடன் கூடிய, காப்பீடு நிறுவன சான்றிதழும், "ஸ்கேன்' செய்து அனுப்பப்படுகிறது. நாம் புத்திசாலியாக இருந்து, தடையில்லா சான்றிதழ் கேட்கும் பட்சத்தில், அதையும் அனுப்புகின்றனர்.
இந்த நூதன மோசடி மீது நம்பிக்கை ஏற்பட, இதுவே முதல் அஸ்திரமாகிறது. அதன் பின், மும்பையில் இருப்பதாக கூறப்படும், "கூரியர்' நிறுவனத்தின் பெயரிலிருந்து நமக்கு மெயில் வரும். அதில், நம் பெயரில் ஏ.டி.எம்., கார்டு அடங்கிய பார்சல் வந்திருப்பதாகவும், உரிய ஆவணங்களுடன் வந்து பெறுமாறும் கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து மோசடியாளரை நாம் தொடர்பு கொண்டு நன்றி தெரிவிக்கும் போது, "இதுவரை நடந்த பரிமாற்றத்திற்கான கட்டணமாக, 17 ஆயிரம் ரூபாய் செலுத்தி, ஏ.டி.எம்., கார்டை பெறுமாறு, கூறுகின்றனர். இதற்காக மும்பை நபர் ஒருவரை தொடர்பு கொள்ளவும் வலியுறுத்தப்படுகிறது. அதன் பின், என்ன நடக்கும் என்பதை, புத்திசாலிகள் யூகித்து விடுவர். இதுவரை புகாருக்கு ஆட்படாத இந்த நூதன மோசடி, தற்போது தமிழகத்தில் பரவலாக ஆக்கிரமித்துள்ளது. "குரூப் மெயில்' மூலம் நம் இ-மெயில் முகவரியை தெரிந்து கொண்டு, இந்த நூதன மோசடி துவங்குகிறது. ஆசையில், இது போன்ற மோசடிகளுக்கு நாம் செவி சாய்க்காமல் சென்றால், இருப்பதையாவது காப்பாற்றிக் கொள்ளலாம்.

கை கால்களை விரித்து மல்லாந்து உறங்குவோர்


நீங்கள் உறங்கும் விதத்தை அடிப்படையில் கொண்டு உங்களைப்பற்றி சொல்ல முடியும். இங்கு ஒவ்வொரு நிலையிலும் உறநங்குபவர்கள் பற்றி எடுத்துக் கூறப்படுகின்றன. இவற்றில் நீங்கள் எந்த வகையினர் என்பதை பரிசீலித்துப் பாருங்கள்.

தலைமுதல் கால் வரையில் முழுமையாக போர்வையால் மூடிக் கொண்டு உறங்கும் பழக்கமுடையவர்கள்



பொதுமக்கள் மத்தியில் தைரியமான நபராக உங்களைக் காட்டிக்கொண்ட போதிலும், ஆழ் மனதின் அடிப்படையில் நீங்கள் பலவீனமான, கூச்ச சுபாவமுடையவர். அதிகளவான ரகசியங்களைப் பேணிப்பாதுகாப்பீர்கள். நீங்கள் ஏதேனும் பிரச்சினைகளை எதிர்நோக்கினாலும் அதனை வெளிப்படுத்தி உதவி கோராது, உங்களுக்குள்ளேயே பிரச்சினை மூடி மறைத்துக்கொள்வீர்கள். உங்களது உளநிலையையே தூங்கும் விதம் விபரிக்கின்றது.
கரங்களை உதவியாகப் பயன்படுத்தி, மல்லாந்து உறங்குபவர்


நீங்கள் கூடுதலான நுண்ணறிவையும், புதிய விடயங்களை அறிந்து கொள்வதில் நாட்டமும் உடையவர். சில வேளைகளில் எரிச்சலூட்டக் கூடிய எண்ணங்களைக் கொண்டிருப்பீர்கள், இதானல் மக்களால் உங்களை புரிந்துகொள்ள முடியாத நிலை ஏற்படும். உங்களது குடும்பம் பற்றி கூடுதல் சிரத்தை எடுத்துக்கொள்வீர்கள். எனினும், நீங்கள் மிகவும் அரிதாகவே எவர் மீதும் அன்பு கொள்வீர்கள்.

கால்களை ஒன்றுடன் ஒன்று பின்னி மல்லாந்து உறங்குபவர்

கால்களைப் பின்னி உறங்குபவர்கள் சுயநல எண்ணத்தைக் கொண்டவர்கள், தமக்கு விருப்பான முறையில் உலகம் இயங்க வேண்டும் என்பதே இவர்களின் நோக்கமாகும். மாற்றங்களை ஏற்றுக் கொள்வதற்கு உங்களினால் முடிவதில்லை. தனிமையாக இருப்பது உங்களுக்கு பிடிக்கும். விட்டுக்கொடுப்பதில் உங்களுக்கு உடன்பாடில்லை.

குறுகிய நிலையில் உறங்குபவர்




உங்களது கடந்த கால தோல்விகளினால் நீங்கள் பெரிதும் மன உலைச்சல் அடைந்திருப்பீர்கள். தனிமைப்படுத்தப்பட்ட மனோநிலையைக் கொண்டிருப்பீர்கள். உங்கள் வாழ்க்கையில் அன்பை இழந்து விட்டதாக மற்றவர்களுக்கு தெரியப்படுத்த விரும்புவீர்கள். எந்த நேரத்திலும் ஐயத்துடன் காணப்படுவீர்கள்.

ஒரு பக்கமாக குறுகி உறங்குபவர்



சுயநல, பொறமைக்கார மற்றும் பழிவாங்கும் குணங்களை உடையவராக உங்களை விபரிக்க முடியும். உங்களைச் சுற்றியிருப்பவர்கள் மிகவும் நிதானமாக செயற்பட வேண்டும். மற்றவர்களினால் எடுக்கப்படும் தீர்மானங்கள் உங்களை அதிகமாக கோபப்பட வைக்கும்.

ஒரு காலை மடக்கி ஒரு பக்கமாக உறங்குபவர்


எப்போதும் எதைப் பற்றியாவது முறைப்பாடு செய்வதே உங்களது வாடிக்கையாக அமைந்திருக்கும். பதற்றக்காரர் என்பதனை உங்களது புனைப்பெயராக சூட்ட முடியும். சிறிய விடயங்களினால் கூட நீங்கள் பதற்றமடைந்து கோபப்படக்கூடும். வாழ்க்கை என்பது பாரிய விடயமல்ல, இலகுவாக வாழக் கற்றுக்கொள்ளுங்கள்.

ஒரு கையை மடக்கி ஒரு பக்கமாக உறங்குபவர்



ஒரு காலை மடக்கி உறங்குபவருக்கு நேர் எதிரான குணங்களை நீங்கள் கொண்டிருப்பீர்கள். பண்பான, நேர்மையான, அன்பானவராக திகழ்வீர்கள். எதிலும் முழுமை இருக்காது. தன்நம்பிக்கையை வளர்த்துக் கொள்வதற்கும், பிழைகளிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொள்வதற்கும் பழகிக்கொண்டால் வாழ்க்கையில் எப்போதும் வசந்த வீசும்.

ஒரு பக்கமாகவே உறங்குபவர்



நீங்கள் தன்நம்பிக்கையுடைவர், என்ன காரியத்தை எடுத்தாலும் அதில் வெற்றி காண்பது உங்களது வாடிக்கை. வலது பக்கமாக, வலது கரத்தை மடக்கி தலை சாய்த்து உறங்குவோர் அதிகாரம் மற்றும் அதிஸ்டத்தினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.

கை மற்றும் கால்களை விரித்து மல்லாந்து உறங்குவோர்



நீங்கள் சுதந்திரத்தை விரும்பும் ஓர் ஆத்மா. வசதிகளை விரும்பும், அன்பை வழிபடும் நபராக நீங்கள் திகழ்வீர்கள். எனினும், நீங்கள் அடுத்தவர்களின் விடயங்கள் பற்றி குறை கூறுவதில் நாட்டமுடையவர்களாக காணப்படுவீர்கள்.

Sunday, May 22, 2011

பசியிலிருந்தும் தலைசுற்றலையும் தவிர்க்கலாம்



பரிட்சைக்கு முன்பதாக நீங்கள் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் தயாராகுவது, பாடங்களை படிப்பது போன்று இன்றிமையாததாகும். ஆகவே பரீட்சைக்கு முன்பு நீங்கள் நன்றாக உண்டால்தான், பசியிலிருந்தும் தலைசுற்றலையும் தவிர்க்கலாம். அப்போதுதான் வினாக்களுக்கும் பதிலளிக்க முடியும்.

அறிவுறுத்தல்கள்

சத்துக்கள் சமனான உணவை பரீட்சைக்கு முன் உண்ணுங்கள். பரீட்சை காலை நேரமாக இருந்தால், காலை உணவை உண்ண நேரம் ஒதுக்கிக் கொள்ளுங்கள். பலத்தை வழங்குவதற்காக புரதச் சத்து நிறைந்த உணவையும் பழங்களையும் உண்ணுங்கள்.

முட்டை, கடலை, தயிர், ஷீஸ் போன்ற புரதச்சத்து நிறைந்த உணவுகளை காலை மற்றும் மதிய நேர உணவாக உட்கொள்ளுங்கள். அந்த நாள் முழுவதும் அதன் பலனை நீங்கள் பெறலாம்.

உண்ணும் உணவின் அளவை குறைத்துக் கொள்ளுங்கள். இல்லாவிடில் தூக்கம் வருவது போன்று உணர்வீர்கள். சிற்றூண்டிகளை தவிர்த்துக் கொள்ளுங்கள். பரீட்சையின் போது தூக்கம் வரும்.

உணவிற்கு பதிலாக கோப்பி அருந்துவதை தவிருங்கள். வழமையாக நீங்கள் கோப்பி அருந்தி பழக்கப்பட்டவராயின் அதை இடைநிறுத்தும் போது தலையிடி ஏற்படலாம். அதிகளவில் கோப்பி மற்றும் உற்சாகபானம் போன்றவற்றை அருந்துவீர்களாயின் பதற்றம் ஏற்படும். கிரீன் டீ அருந்த பழகுவது சிறந்ததாகும்.

பரீட்சையின் போது பதற்றமாக இருக்கும் போது, உணவருந்த முடியாமல் இருக்கும் போது புரதச் சத்து நிறைந்த, மென்மையான, சக்தி வாய்ந்த பானங்களை அருந்துங்கள். இவை நீங்கள் உணவு உண்ணும் வரை உங்களுக்கு சக்தியை வழங்கும்.

பரீட்சை இடைவேளையின் போது உண்பதற்காக உங்கள் பைகளில் சத்துள்ள சிற்றூண்டிகளையும், பழங்களையும் வைத்திருங்கள். சக்தியை எரிக்கக் கூடிய இனிப்புப் பண்டங்களை அதிகளவில் சேர்க்காதீர்கள்.

விட்டமின்களை சேருங்கள். விட்டமின் ‘பி’ போன்றவற்றை எடுத்தீர்களானால் மூலையின் செயற்பாட்டை அதிகரிக்கும். ஆதற்கு முன் வைத்தியரின் ஆலோசனையை பெற மறவாதீர்கள். சகல சத்துக்களும் நிறைந்த உணவை உண்பதால் உங்கள் உடல் ஆரோக்கியமடைகின்றது.

பரிட்சை நேரத்தின் போது சிறிதளவு தூய நீர் அருந்துங்கள். நீர் அருந்தாமல் இருப்பின் ஒரு வரட்சி தன்மை ஏற்பட்டு பரீட்சை மீதான கவனம் குறையும்.

Friday, May 20, 2011

உங்கள் Wi-Fi மோடத்தை இப்போது பயன்படுத்துபவர்கள் யார் ?

              நம் வீட்டில் வயர்லெஸ் மோடம் வைத்து நாம் அடுத்த ரூமில் இருந்து கொண்டு லேப்டாப்பில் இணையத்தில் உலா வருவோம். முதலில் நாம் இணையத்திற்கு வயர்கள் மூலமாக இணையத்தில் உலா வந்தோம். ஆனால் இப்பொழுது அனைவரும் வயர் ப்ரீ அல்லது வயர்லெஸ் மூலமாக வேகமாக இணையத்தில் உலா வருகிறோம். தை இப்போது 
ஆனால் அதிலும் சில சிக்கல்கள் உள்ளது.அதே நேரத்தில் நம் வீட்டுக்கு வெளியே காரில் இருந்து கொண்டு அல்லது பக்கது வீட்டில் இருந்து கொண்டு யாராவது நம் வயர்லெஸ் மோடம் வழியாக நம் காசில் இணையத்தில் உலா வந்தால் என்ன ஆகும்.


நம் காசும் போச்சு நம் தனி மனித இணைய பாதுகாப்பும் போச்சு என்று கொள்ள வேண்டியதுதான். இது போல நடந்தால் கண்டுபிடிக்க நம் கணினி தவிர வேற எந்த கணினிகள் நம் வயர்லெஸ் மோடம் வழியாக இயங்குகிறது என்று தெரிந்து கொள்ள Who is on my Wifi என்ற மென்பொருள் உதவுகிறது. மென்பொருள் தரவிறக்க சுட்டி.

நாம் தேடும் அரட்டை மென்பொருள்


நண்பர்களின் கணினியிலேயோ இல்லை ப்ரெளசிங் சென்டரிலேயோ இணைய அரட்டையில் ஈடுபட வேண்டுமெனில் அதற்கு நாம் தேடும் இணைய அரட்டை மென்பொருள் வேண்டும். ஒரு சில கணினியில் Limit பயனர் கணக்கில் பனியாற்றுவோம் அந்த சூழ்நிலையில் நம்மால் மென்பொருளை நிறுவிக்கொள்ள முடியாது. இதுபோன்ற சூழ்நிலைகளை தவிர்க்க ஒருதளம் உதவி செய்கிறது.

இணையத்தில் அடி எடுத்து வைத்தவுடனே முதலில் இணைய பயனாளர்கள் கற்றுக்கொள்வது என்னவெனில் சாட்டிங் செய்ய மட்டுமே ஆகும். பெரும்பாலான இணைய பயனாளர்கள் நண்பர்களிடம் அரட்டை அடிக்கவே இணையத்தை பெரிதும் நாடிச் செல்கிறனர். முக்கியமான தருணங்களில் அரட்டைகளில் ஈடுபடுவது சாதரண செயல் ஆகும். ஆனால் எந்த நேரமும் ஒரு சில இணைய பயனாளர்கள் அரட்டையில் ஈடுபடுவார்கள். அவர்கள் சாப்பிடாமல் வேண்டுமானாலும் இருப்பார்கள் ஆனால் அரட்டையில் ஈடுபடாமல் மட்டும் இருக்க மாட்டார்கள். 

அவர்கள் இணையத்திற்கு தினமும் செல்வார்கள் ஆனால் அவர்கள் செய்யக்கூடிய ஒரே செயல் அரட்டை அடிக்கும் செயல் மட்டுமே ஆகும். இதனால் பணம் மட்டுமே செலவாகும். இதுபோன்ற பயனாளர்கள் பல்வேறு இணைய அரட்டைகளில் ஈடுபடுவார்கள் உதாரணாமாக யாகூ, ஸ்கைப், எம்.எஸ்.என், ஜிடால்க் மற்றும் பல இணைய அரட்டைகளில் தொடர்ச்சியாக ஈடுபடுவார்கள் இதுபோன்ற பயனார்கள் ஒவ்வொரு நிறுவனத்திற்கும் தனித்தனி மென்பொருளை நாடிச்செல்ல வேண்டும். 

தளத்திற்கான சுட்டி

சுட்டியில் குறிப்பிட்ட தளத்திற்கு சென்று வேண்டிய இணைய அரட்டை நிறுவனத்தை தேர்வு செய்து கொண்டு பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட்டு உள்நுழைந்து கொள்ளவும். பின் நீங்கள் விரும்பிய நண்பர்களுடன் அரட்டையில் ஈடுபட முடியும். வீடியோ மற்றும் ஆடியோ அரட்டையிலும் ஈடுபட முடியும். மொத்தத்தில் அரட்டை அடிக்க சிறப்பானதொரு தளம் இதுவாகும். நாம் இனி தனித்தனி மென்பொருள்களின் உதவியை நாடிச்செல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஒரே இடத்தில் இருந்து கொண்டு அனைத்து வசதிகளையும் பெற முடியும்.


ப்ளாக்கரில் Font Size-ஐ மாற்றுவது எப்படி?



நமது ப்ளாக்கில் உள்ள எழுத்துக்கள் நம்முடைய டெம்ப்ளேட்டை பொறுத்து சிறியதாகவோ, அல்லது பெரியதாகவோ இருக்கும். அதனை வாசகர்கள் தங்களுக்கு ஏற்றவாறு மாற்றிக் கொண்டு படிக்கும் வசதியை நிறுவுவது எப்படி? என்று பார்ப்போம்.
Font size-ஐ மாற்றுவதற்கான code:


<a href="javascript:void(0);" onclick="javascript:body.style.fontSize='.5em'"><span style="font-size: xx-small;">அ</span></a> <a href="javascript:void(0);" onclick="javascript:body.style.fontSize='1em'"><span style="font-size: x-small;"> அ </span></a> <a href="javascript:void(0);" onclick="javascript:body.style.fontSize='1.5em'"><span style="font-size: small;"> அ </span></a> <a href="javascript:void(0);" onclick="javascript:body.style.fontSize='2em'"><span style="font-size: large;"> அ </span></a> <a href="javascript:void(0);" onclick="javascript:body.style.fontSize='2.5em'"><span style="font-size: x-large;"> அ </span></a>



இதை Sidebar-ல் வைக்க:

1. Dashboard=>Design=>Page Elements பக்கத்திற்கு செல்லவும்.

2. Add a gadget என்பதை க்ளிக் செய்து, HTML/JavaScript என்பதை தேர்வு செய்யவும்.

3.Title என்ற இடத்தில் தலைப்பு கொடுத்துவிட்டு, Content என்ற இடத்தில் மேலுள்ள Code-ஐ paste செய்யவும்.


4. பிறகு Save என்பதை க்ளிக் செய்யவும்.

அப்படி செய்த பின் உங்கள் ப்லாக்கில் பின்வருமாறு காட்சி அளிக்கும். தை க்ளிக் செய்தால் எழுத்துக்களின் அளவு மாறும்.


 அ அ அ அ 

Thursday, May 19, 2011

Registry Editor ஒப்பன் ஆகாமல் தடுக்க


விண்டோஸ் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தின் அனைத்து கட்டளை தொகுப்புகளும் Registry Editor-ல் மட்டுமே இருக்கும். இந்த விண்டோஸ் Registry Editor யை முறையாக கையாளமல், தவறாக பயன்படுத்தினோம் ஆனால் விண்டோஸ் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டமே முடக்கப்பட்டுவிடும்.

 மேலும் இதனால் மீண்டும் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டமே நிறுவவேண்டி வரும், எனவே தான் விண்டோஸ் ரிஸிஸ்ட்டரியை எடிட் செய்யும் போது கவனத்துடன் செயல்பட வேண்டும். இல்லையெனில் விண்டோஸ் ரிஸிஸ்ட்டரியில் பணியாற்றும் முன்னரே விண்டோஸ் ரிஸிஸ்ட்டரியை நகல்(Backup) எடுத்துக்கொள்ள வேண்டும். 

கணினியை ஒரு பயனாளர் மட்டும் பயன்படுத்தினால் பராயில்லை, நண்பர்கள், உறவினர்கள் பயன்படுத்தினால்தான் பிரச்சினை அவர்கள் என்ன செய்கிறோம் என்றே தெரியாமல் விண்டோஸ் ரிஸிஸ்ட்டரியில் புகுந்து மாற்றங்களை செய்து விடுவார்கள். பின் கணினியானது எதாவது பாதிப்பிற்கு உள்ளாகும் இல்லையெனில் முடக்கப்பட்டுவிடும். 

அவர்கள் என்ன செய்தார்கள் என்று தெரியாமல், அந்த பிரச்சினையை சரிசெய்ய முடியாமல் கடைசியில் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தை மீண்டும் கணினியில் நிறுவ வேண்டும். இதுபோன்ற சிக்கல்களை சமாளிக்க வேண்டுமெனில் நாம் முதலிலேயே ரிஸிஸ்ட்டரியை பாதுகாத்து கொள்வது நல்லது. இதற்கு இரண்டுவழிதான் உள்ளது. ஒன்று ரிஸிஸ்ட்டரியை நகல்(Backup) எடுத்து தனியே வைக்க வேண்டும். இல்லையெனில் ரிஸிஸ்ட்டரியை டிசேபிள் செய்ய வேண்டும். விண்டோஸ் ரிஸிஸ்ட்டரியை எவ்வாறு டிசேபிள் செய்வது என்று கீழே காண்போம்.






முதலில் ரன் விண்டோவினை ஒப்பன் செய்யவும், ஒப்பன் செய்ய Ctrl+R கீகளை ஒருசேர அழுத்தி ஒப்பன் செய்யலாம். இல்லையெனில் Start > Run என்பதை தேர்வு செய்து ஒப்பன் செய்யவும். தோன்றும் விண்டோவில்gpedit.msc என்று டைப் செய்து ஒகே செய்யவும்.













அடுத்ததாக தோன்றும் விண்டோவில் User Configuration > Administrative Templates > System என்னும் வரிசையை தெரிவு செய்யவும்.









System என்னும் தேர்வினை தெரிவு செய்யவும். வலதுபுறமாக தோன்றும் வரிசையில் Prevent access to registry editing tools என்பதை இரட்டை கிளிக் செய்யவும். கிளிக் செய்தவுடன் தோன்றும் விண்டோவில் Enabled என்னும் ஆப்ஷன் பட்டனை தேர்வு செய்து ஒகே செய்யவும்.









அவ்வளவுதான் இப்போது விண்டோஸ் ரிஸிஸ்ட்டரியானது டிசேபிள் செய்யப்பட்டிருக்கும். இப்போது விண்டோஸ் ரிஸிட்டரியை ஒப்பன் செய்து போது எரர் செய்தி மட்டுமே தோன்றும்.









இதனை மீண்டும் எனேபிள் செய்ய மேலே சொன்ன வழிமுறையை பின்பற்றி Not Configured என்னும் ஆப்ஷன் பட்டனை தேர்வு செய்து கொள்ளவும். விண்டோஸ் ரிஸிட்டரியை காப்பாற்ற இதுவும் ஒரு வழிமுறை ஆகும்.


நாய்க்காக ரயிலை நிறுத்திய டிரைவர்

ரயில்வே துறையின் உயர் அதிகாரியின் செல்ல நாயை, பிளாட்பாரத்திலேயே, மறந்து விட்டு விட்டு வந்ததால், அதை மீட்க, சூப்பர் பாஸ்ட் ரயிலை, அவசர நிலை பிரேக்கை பயன்படுத்தி நிறுத்தினார் டிரைவர். 

இந்த சம்பவம், சட்டீஸ்கர் மாநிலம் ராய்கார் ரயில் நிலையத்தில் நடந்தது. பூரி - குர்லா சூப்பர் பாஸ்ட் ரயிலில் இணைக்கப்பட்ட விசேஷ பெட்டியில், பிலாஸ்பூர் டிவிஷனல் ரயில்வே மானேஜர், எல்.சி.திரிவேதி, தன் செல்ல நாய்க்குட்டியுடன் பயணம் செய்தார். 

ராய்கார் ரயில் நிலையத்தில் ரயில் நின்றதும், ரயில்வே ஊழியர் ஒருவர், அந்த நாயுடன் பிளாட்பாரத்தில் இறங்கினார். சிறிது நேரத்தில் ரயில் புறப்பட்டது. அப்போதுதான், அந்த ஊழியர் ரயிலில் ஏறாதது தெரிய வந்தது. உடனே, வாக்கிடாக்கியில் இன்ஜின் டிரைவருக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது. அவர், அவசர நிலை பிரேக்கை பிடித்து, ரயிலை நிறுத்தினார். 

பின், அந்த நாய், உரிமையாளரிடம் சேர்க்கப்பட்டது. சூப்பர் பாஸ்ட் ரயிலை, இவ்வாறு திடீர் பிரேக் போட்டு நிறுத்தினால், விபத்து ஏற்பட வாய்ப்பு உண்டு. இந்த சம்பவம் குறித்து, ரயில்வே உயர் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

எவ்ளோ தடவ சொல்லிட்டேன் "ஏ டி எம்" ம பத்தி. இன்னும் திருந்தலையா நீங்க?.

சேலம் வந்த சென்னை அதிகாரியின் ஏ.டி.எம்., கார்டை திருடி, பண மோசடியில் ஈடுபட்ட வாலிபரை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். சென்னையை சேர்ந்தவர் பாஸ்கர். தலைமைச் செயலகத்தில் பணியாற்றி வரும் இவர், ஏப்ரல் 16ல் சேலம் வந்தார்.
 ஏற்காடு உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு சென்று விட்டு மீண்டும் சென்னை திரும்பினார். சேலம் வந்த இவரது, பர்சை மர்ம நபர் திருடி சென்று விட்டார். இந்த பர்சில் வைத்திருந்த ஸ்டேட் வங்கி, கனரா வங்கி ஏடி.எம்., கார்டுகளின் பின்னால் அதற்கான ரகசிய எண்களையும் பாஸ்கர் குறித்து வைத்திருந்தார். அதனால், அதை திருடிய மர்ம நபர் ரகசிய எண்ணைக் கொண்டு, சேலம் ஜங்ஷன், ஓமலூர் மெயின் ரோடு, சண்முகா மருத்துவமனை அருகில், ஓமலூர் ரோடு பெட்ரோல் பங்க் ஆகிய இடங்களில் உள்ள ஏ.டி.எம்., மையங்களில், 58 ஆயிரம் ரூபாய் வரை எடுத்துள்ளார். 
இது குறித்து, பாஸ்கர், சேலம் மாநகர் மத்திய பொருளாதார குற்றப்பிரிவு போலீஸில் புகார் தெரிவித்தார். இந்த புகாரின் பேரில், போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது, ஏ.டி.எம்.,களில் உள்ள தானியங்கி கேமராவில் பதிவான படங்களை கொண்டு, பாஸ்கரின் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுத்த வாலிபரை, போலீஸார் அடையாளம் கண்டு உள்ளனர். மேலும், அவரது படத்தையும் பொருளாதார குற்றப் பிரிவு போலீஸார் வெளியிட்டுள்ளனர். 

அந்த வாலிபர், 5.6 அடி உயரத்தில், மாநிறத்தில் இருப்பார். ஏ.டி.எம்.,களில் பணம் திருடிய போது, வெள்ளை நிறத்தில் பச்சை கலரில் கோடு போட்ட சட்டையும், கரும் பச்சை கலரில் பேண்டும் அணிந்திருந்தார். தலையில், "பி' என்ற எழுத்துடன் தோப்பி அணிந்து இருந்தார். இவர் குறித்த தகவல் தெரிய வந்தால், போலீஸ் உதவி கமிஷனர், மத்திய பொருளாதார குற்றப்பிரிவு, சேலம், என்னும் முகவரியிலும், 944391 6547, 94432 55337, என்னும் மொபைல் எண்களிலும் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என, பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் தெரிவித்துள்ளனர்.

கலெக்டர் கார் சிறுமி காலில் ஏறிய கொடுமை

கரூர் கலெக்டர் கார் மாரியம்மன் கோவிலில், அங்கப் பிரதட்சணம் செய்த சிறுமியின் காலில், ஏறியது. 

கரூர், இரட்டை வாய்க்கால் பகுதியை சேர்ந்தவர் மேகலா (12). லாலாப்பேட்டை அரசு பள்ளியில், 7ம் வகுப்பு படிக்கிறார். விடுமுறைக்கு, தன் தாத்தாவுடன், கரூர் மாரியம்மன் கோவிலுக்கு வந்தார். கோவில் வெளிப் பிரகாரத்தில், அங்கப் பிரதட்சணம் செய்வதற்கு படுத்தார். 

அப்போது, நகராட்சி ஊழியர்கள் சார்பில் நடைபெற்ற மண்டகப்படி பூஜையில் கலந்து கொள்ள, கரூர் கலெக்டர் உமாமகேஸ்வரி, "ஸ்கார்பியோ' காரில் வந்தார். கோவிலுக்கு முன் பக்தர்கள் நெரிசல் நிறைந்த, குறுகலான பாதையில், கலெக்டர் கார் வந்தது. 
அந்தப் பாதையில், அங்கப் பிரதட்சணத்துக்கு மேகலா படுத்திருந்ததை கவனிக்காத கார் டிரைவர், அவர் கால் பாதம் மீது காரை ஏற்றி, சிறிது தூரம் சென்று நிறுத்தினார். மேகலாவின் அலறல் சத்தம் கேட்டு, அருகில் இருந்தோர் பதறியபடி ஓடி வந்தனர். "ரேடியல்' டயர் என்பதால், சிறுமியின் காலில் பெரிதாக பாதிப்பு ஏற்படவில்லை. 

காரை விட்டு இறங்கிய கலெக்டர் உமாமகேஸ்வரி, பாதிக்கப்பட்ட மேகலாவிடம் நலம் விசாரிக்காமல், அவரை மருத்துவமனையில் சேர்க்கும்படி கூறி விட்டு, "விறுவிறு'வென கோவிலுக்குள் சென்றுவிட்டார். கலெக்டரின் அலட்சிய போக்கால், பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். சம்பவத்தை பத்திரிகையாளர்கள் கவனித்துவிட்டதால், சிறுமியை கலெக்டர் காரில் ஏற்றி, கரூர் அமராவதி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.

70 மணி நேரத்தில் தயாராக்கப்பட்ட வீடு

அதிவேக வளர்ச்சி அடைந்த நாடுகளில் ஒன்றான ஜப்பான் நாட்டில், மார்ச், 11ம் தேதி மற்றும் ஏப்ரல், 7ம் தேதி என சுனாமி, பூகம்பம் போன்ற இயற்கை சீற்றங்களால், லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். அதிலும் குறிப்பாக, அணு உலையில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக மேலும் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அங்கு, 140 ஆண்டுகளுக்குப் பின், இதுபோன்ற சோக நிகழ்வு மீண்டும் நிகழ்ந்துள்ளது. இன்னமும் அங்கு நிலைமை முழுமையாக சீராகவில்லை. இருப்பினும், அந்நாட்டு மக்கள் வீடிழந்து தவிப்பதை, அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கவில்லை. வீடுகளை இழந்தும், வீட்டை விட்டு பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றவர்களுக்கும் என, தற்காலிக வீடுகளை அமைத்துக் கொடுக்க அரசு தயாராகி விட்டது.

அணு உலைகள் மூலம் மட்டுமே அங்கு மின் உற்பத்தி என்ற நிலையில், அதற்கும் பாதிப்பு வந்து விட்ட நிலையில், தற்போது பெரும்பாலோர் சூரிய மின்சக்தியை பெரிதும் பயன்படுத்த துவங்கி விட்டனர். அரசும் அதற்கு பெருமளவு உதவி வருகிறது. தற்போது, சுனாமி மற்றும் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, புதிய வீடுகளை கட்டித் தரும் முனைப்பில் இருக்கும் ஜப்பான் அரசு, அவ்வீடுகளில் முழுக்க முழுக்க அனைத்து பயன்பாட்டிற்கும் சூரிய சக்தியை மட்டுமே பயன்படுத்த முடிவு செய்துள்ளது.
இதற்கு, "டிமோர் வீடுகள்' என பெயரிடப் பட்டுள்ளது. நான்கு முதல், பத்து பேர் வரை வசிக்கும் அளவில், மூன்று மாடல்களில் வீடுகளை கட்டி வருகிறது. இதில், சமையல், படுக்கை, ஹால், குளியலறை ஆகிய பகுதிகளில் விளக்கெறியவும், வானொலி, "டிவி' மற்றும் மின் சாதனப் பொருட்கள் அனைத்திற்கும் சூரிய சக்தி மட்டுமே பயன்படுத்தப்பட உள்ளன. இதில், குறிப்பிட்ட அம்சம் என்னவென்றால், வெறும் இரண்டு நபர் இருந்தால் போதும், ஒரு வீட்டை கட்டி விட முடியும்.
அதற்கடுத்த சிறப்பம்சம் என்னவெனில், வெறும் மூன்று நாளில் ஒரு வீடு, குடியேற தயாராகி விடுகிறது. இவற்றின் மேற்கூரைகள், எளிதில் தீப்பிடிக்காத ஆஸ்பெஸ்டாஸ் தகடுகளால் வேயப்பட்டு, அதன் கீழ், மரத்தாலான பகுதி அமைக்கப்படுவதால், வீட்டுக்குள் வெப்பம் இருக்காது. சூரிய வெப்பத்தையே முழுக்க முழுக்கப் பயன்படுத்த இருப்பதால், சுற்றுச்சூழல் பாதிப்பும் இல்லை.
மேலும், இவ்வீடுகளை ஓரிடத்திலிருந்து பெயர்ந்து, வேறொரு இடத்தில் அமைக்க வேண்டுமானாலும், அதே வசதிகளுடன் மாற்ற முடியும் என்பது இதன் மற்றொரு சிறப்பம்சம்.

ஜப்பான் நாடு சுனாமி, பூகம்பம், அணு உலை விபத்து என, அடுத்தடுத்து சோதனைகளை சந்தித்தும் கூட, சிறிதும் அசராமல், பாதிக்கப்பட்ட தன் மக்களுக்காக அதிவேகத்தில் புனரமைப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறது அந்நாட்டு அரசு. இவ்வீடுகள் அனைத்தும் பங்களா வீடுகளில் காணப்படும் அனைத்து நவீன வசதிகளை உள்ளடக்கி அமைக்கப்படுகிறது.

அதிலும், மிக விரைவாக, மூன்றே நாளில் அமைக்கப்படுவது தான், பல நாட்டின ரையும் மூக்கில் விரல் வைக்கும் அளவுக்கு வியப்படைய செய்துள்ளது.

கேரளாவின் 21வது முதல்வர். உம்மன் சாண்டி பதவியேற்றார்

கேரளாவின், 21வது முதல்வராக, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த உம்மன் சாண்டி, நேற்று பதவியேற்றுக் கொண்டார். அவருடன், கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த ஆறு பேர், அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.
சமீபத்தில் நடந்து முடிந்த கேரள சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் தலைமையிலான, ஆளும் ஐக்கிய ஜனநாயக முன்னணி, 72 இடங்களிலும், மார்க்சிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி, 68 இடங்களிலும் வெற்றி பெற்றன.இதன்மூலம், நான்கு இடங்களில் மட்டுமே கூடுதலாக வெற்றி பெற்று, மிகச் சிறிய பெரும்பான்மை மூலம், ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆட்சியை பிடித்தது. கூட்டணி கட்சிகளுக்கு இடையில், அமைச்சரவையை பகிர்ந்து கொள்வதில் இழுபறி ஏற்பட்டதால், புதிய அரசு பதவியேற்பதில் தாமதம் ஏற்பட்டது.காங்கிரஸ் மூத்த தலைவரான உம்மன் சாண்டி, கூட்டணி கட்சிகளுடன், தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி, சுமுக முடிவை ஏற்படுத்தினார். அமைச்சரவை மற்றும் இலாகா பங்கீடு தொடர்பாக, கூட்டணி கட்சிகளுக்கு இடையே, ஒப்பந்தம் ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து, திருவனந்தபுரம், கவர்னர் மாளிகையில் நடந்த எளிமையான விழாவில், புதிய அரசின் பதவியேற்பு விழா நேற்று நடந்தது. கேரளாவின், 21வது முதல்வராக, உம்மன் சாண்டி பதவியேற்றுக் கொண்டார்.அவருடன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியைச் சேர்ந்த குஞ்சாலிக் குட்டி மற்றும் கே.எம்.மணி (கேரள காங்கிரஸ்-எம்), கே.பி.மோகனன் (எஸ்.ஜே.டி), ஜேக்கப் (கேரள காங்கிரஸ்-ஜே), கனேஷ் குமார் (கேரள காங்கிரஸ்-பி), சிபு பாபி ஜான் (ஆர்.எஸ். பி.,-பி) ஆகியோரும், அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.கவர்னர் ஆர். எஸ்.கவாய், இவர்களுக்கு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். இந்த விழாவில், முன்னாள் முதல்வரும், இடதுசாரி கட்சித் தலைவருமான அச்சுதானந்தன், கேரள மாநில காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதாலா மத்திய அமைச்சர் ராமச்சந்திரன் உள்ளிட்ட, பலர் கலந்து கொண்டனர்.

வரும் 23ம் தேதி, அமைச்சரவை மேலும் விரிவு படுத்தப்படுகிறது. அப்போது, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒன்பது பேரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியைச் சேர்ந்த மூன்று பேரும், கேரளா காங்கிரஸ் (எம்) கட்சியைச் சேர்ந்த ஒருவரும், அமைச்சர்களாக பதவியேற்கவுள்ளனர்.உம்மன் சாண்டியின் எளிமை: கேரள முதல்வராக பதவியேற்றுள்ள உம்மன் சாண்டி (67), மிகவும் எளிமையானவர். கட்சித் தொண்டர்களை பெயர் சொல்லி அழைக்கும் அளவுக்கு, நெருக்கமாக பழகக் கூடியவர். மாணவ பருவத்தில் இருந்தே, காங்கிரசில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.

கேரள மாநில காங்கிரசின் மூத்த தலைவர்களான கருணாகரன், அந்தோணிக்கு பின், கட்சித் தொண்டர்களிடையே உம்மன் சாண்டி செல்வாக்கு பெற்றவராக இருந்ததால், 2004ல், காங்கிரஸ் மேலிடம், இவரை முதல்வர் பதவியில் அமர்த்தி அழகு பார்த்தது.கேரள மாநிலத்துக்கான சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டதும், காங்கிரஸ் சார்பில், ரமேஷ் சென்னிதலா முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என, கூறப்பட்டது. இருந்தாலும், உம்மன் சாண்டி, முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதனால், கட்சிக்குள் எழுந்த கருத்து வேறுபாடுகளை, தனது சாமர்த்தியத்தால், திறமையாக கையாண்டு, சுமுக முடிவை ஏற்படுத்தினார்.குஞ்சாலிக் குட்டி: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியைச் சேர்ந்தவர் குஞ்சாலிக் குட்டி, புதிய அமைச்சராக பதவியேற்றுள்ளார். கோழிக்கோடு ஐஸ்கிரீம் பார்லர் வழக்கில் இவருக்கு தொடர்பு இருப்பதாக, எதிர்க்கட்சியினர் பிரசாரம் செய்தனர். அந்த பிரசாரத்தை முறியடித்து, மீண்டும் வெற்றி பெற்று, அமைச்சராகியுள்ளார்.கடந்த தேர்தலில், இவரது கட்சி ஏழு தொகுதிகளிலும் மட்டுமே வெற்றி பெற்றது. தற்போதைய தேர்தலில், 24 தொகுதிகளில் போட்டியிட்டு, 20ல் வெற்றி பெற்றுள்ளது. "என் மீது கூறப்பட்ட புகார்கள் பொய் என, இந்த தேர்தலில் மக்கள் தீர்ப்பு அளித்துள்ளனர்' என, குஞ்சாலிக் குட்டி பெருமிதத்துடன் கூறினார்.

நடிகருக்கு அமைச்சர் பதவி :கேரள காங்கிரஸ் (பி) சார்பில், போட்டியிட்டு வெற்றி பெற்ற கனேஷ் குமாருக்கு, அமைச்சர் பதவி தரப்பட்டுள்ளது. இவர், கார்யஸ்தன், போர் பிரண்ட்ஸ், ஜனகன், உஸ்தாத் உட்பட, நூற்றுக்கும் மேற்பட்ட மலையாள திரைப்படங்களிலும், "டிவி' சீரியல்களிலும் நடித்துள்ளார்.கடந்த, 2001ல், அந்தோணி தலைமையிலான காங்கிரஸ் அரசில், இவர் போக்குவரத்துத் துறை அமைச்சராக பதவி வகித்தார். தற்போது, இரண்டாவது முறையாக, இவருக்கு அமைச்சர் பதவி கிடைத்துள்ளது. தற்போதைய அமைச்சரவையில் புது முகமாக இடம் பிடித்துள்ளவர், சிபு பாபி ஜான். கடந்த, 2001 தேர்தலிலும், இவர் வெற்றி பெற்றபோதும், தற்போது தான் அமைச்சர் பதவி கிடைத்துள்ளது. இவர், பி.டெக்., படித்தவர்.

ஆட்சி போச்சு... தஞ்சை பெரிய கோவில் சென்டிமென்ட்

கடந்த செப்., 22 முதல் 26ம் தேதி வரை, தஞ்சை பெரிய கோவிலில் ஆயிரமாவது ஆண்டு விழா நடந்தது. 25ம் தேதியன்று கோவிலுக்குள் பத்மா சுப்பிரமணியம் தலைமையில் ஆயிரம் நடனக் கலைஞர்கள் நடனமாடினர்.இந்நிகழ்ச்சியில் பங்கேற்க பட்டு வேட்டி, சட்டை சகிதமாக வந்த கருணாநிதி, பிரதான வாயில் வழியாக வராமல், சிவகங்கை பூங்கா வழியாக, தெற்குப்புற வாயில் வழியாக வந்து, மூலஸ்தானத்துக்கு பக்கவாட்டில் அமர்ந்து நிகழ்ச்சியை கண்டுகளித்தார். பெரிய கோவிலுக்குள் முதல்வர் வந்து சென்றதால், பெரிய கோவில் சென்டிமென்டுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதாக பலரும் கருதினர்.அடுத்த நாள் நிறைவு விழாவில், முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா பேசுகையில், "இந்த நாள் கணக்கு பார்க்கும் நாள்; கணக்கு தீர்க்கும் நாள். ராஜராஜன் காலத்தில் சதுர்வேதி மங்கலங்களை உருவாக்கினார். ஆனால், தி.மு.க., தலைவர் கருணாநிதி சமத்துவபுரத்தை உருவாக்கி, அவர் காலத்தைச் சேர்ந்த ஆதிக்க கணக்கை கருணாநிதி தீர்த்துள்ளார்' என பேசி சென்றார்.
தஞ்சை பெரிய கோவிலுக்குள் பதவியில் இருப்பவர்கள் வந்து சென்றால், பதவி பறிபோகும் என்பது, இந்த தேர்தல் மூலம் மீண்டும் நிரூபணமாகி உள்ளது.

"தஞ்சை பெரிய கோவிலுக்கு வி.ஐ.பி.,க்கள் வந்து சென்றால், அவர்கள் பதவி பறிபோகும்; உயிர் போகும்' என, பல கருத்துக்கள் நிலவுகின்றன. இதனால், இங்கு வரும் பெரும்பாலான வி.ஐ.பி.,க்கள், பெரிய கோவிலுக்குள் செல்வதை தவிர்ப்பர்.இதற்கு, பிரதமராக இருந்த இந்திரா, முன்னாள் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா, முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., போன்றோரை உதாரணமாகக் கூறுவர். தஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேகத்தின் போது ஏற்பட்ட தீ விபத்தில், 50க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.இச்சம்பவம் அறிந்து அப்போதைய முதல்வராக இருந்த கருணாநிதி, கோவிலின் நேர் வழியாக வராமல் பக்கவாட்டு வாசல் வழியாக வந்து, கோவிலுக்குள் செல்லாமல், சம்பவ இடத்தை மட்டும் பார்வையிட்டுச் சென்றார். இதுபோல, பல உதாரணங்களை கூறலாம்.

கடந்த நவம்பரில், "2ஜி' ஸ்பெக்ட்ரம் பிரச்னையில் சிக்கிய ராஜா, பதவி இழந்து, கைதாகி இன்று வரை வெளியே வர இயலாத வகையில் டில்லி திகார் சிறையில் சிக்கித் தவிக்கிறார். "2ஜி' ஸ்பெக்ட்ரம் பிரச்னையால், காங்., - தி.மு.க., உறவும் பல கட்ட பிரச்னைகளை சந்தித்து, கனிமொழி, தயாளு போன்றோரிடம் சி.பி.ஐ., விசாரணை, கலைஞர் "டிவி' அலுவலகத்தில் ரெய்டு, குற்றப்பத்திரிகையில் கனிமொழி பெயர், தொடர் விசாரணை, எந்த நேரமும் கைதாகலாம் என்ற நிலை, தேர்தல் கூட்டணியில் இழுபறி என தொடர்ந்த சிக்கல், பெரிய கோவில் சென்டிமென்டை மீண்டும் நிரூபித்துள்ளது.


தேர்தல் துவங்கியது முதல், தி.மு.க., - அ.தி.மு.க., கூட்டணியை வைத்து கணித்த அனைவரும், இரு கட்சிகளும் சம பலத்தில் வருவர், கூட்டணி ஆட்சி நடக்கும் என, பல யூகங்களை தெரிவித்தனர்.இதனால், தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்றாவிட்டாலும், மத்தியில் அங்கம் வகிப்பதால் தங்களை அ.தி.மு.க.,விடம் இருந்து காத்துக் கொள்ளலாம் என எண்ணிய தி.மு.க.,வுக்கு, தேர்தல் ரிசல்ட் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.எதிர்க்கட்சியாகக் கூட அமர இயலாத அளவுக்கு, தஞ்சை பெரிய கோவில், "சென்டிமென்ட்' தன் வேலையை காட்டியுள்ளது என்பது, இந்த சென்டிமென்ட் மீது நம்பிக்கை வைத்துள்ளவர்களை மீண்டும் முணுமுணுக்க வைத்துள்ளது

எனக்கு மூன்று திருமணங்கள்

என் வயது 57. எனக்கு, மூன்று திருமணங்கள். முதல் மனைவி இறந்து விட்டாள்; மறுமணம் புரிந்து கொண்டேன்; அவளும் இறந்து விட்டாள். மீண்டும், பலரின் வற்புறுத்தலால் மணம் புரிந்து கொண்டேன். மூன்றாவது மனைவி, ஏற்கனவே மணமாகி, கணவனை பிரிந்து, அதாவது, ஊர் பஞ்சாயத்து மூலம் விவாகரத்து பெற்று, வாழ்ந்து வந்தவர். அவருக்கு, 15 வயதில் மணமாகி, மூன்று மாதத்திற்கு பின், விவாகரத்து பெற்றுக் கொண்டதாக கூறினர்.

எனக்கும், அவருக்கும் கிட்டதட்ட, இருபது வருட வயது வித்தியாசம். என்னிடம் சேர்ந்த போது, "நீ ஆயிரம் பேரிடம் பழகியிருந்தாலும், இனி, என்னிடம் மட்டும் நன்றாக அனுசரித்து வாழ்...' என்று கூறி, மனைவியாக ஏற்று, அதிலிருந்து வழுவாமல், என் கடமைகளில் நியாயமாக நடந்து வந்தேன். எங்களுக்கு ஒரு பெண்ணும், ஒரு ஆணும் பிறந்து, பத்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு படித்து வருகின்றனர்; இது, இன்றைய நிலை.

இதனிடையில், என் மூன்றாவது மனைவிக்கு என்ன நினைப்பு வந்ததோ, ஒரு காதலனைத் தேர்ந்தெடுத்து, அவனுடன் உல்லாசமாக இருந்ததாக, 2002ல், என்னிடமே கூறினாள். ஏதோ தவறாக நடந்து கொண்டாள் என நினைத்து, "இனி, அவ்வாறு தவறான வழியில் செல்லாதே...' என எச்சரித்து, தாம்பத்யத்துக்காகத்தான் இவ்வாறு செய்தாளோ என்று நினைத்து, இன்னும் கொஞ்சம் நெருக்கமாக இருந்து வந்தேன்.
பின், 2007லிருந்து, மீண்டும், பக்கத்து நிலத்துக்காரருடன் என் மனைவிக்கு தொடர்பு இருப்பதாக, அந்த ஆளின் மனைவியே என்னிடம் கூறினார். அந்த ஆள், எனக்கு ஊர் முறைப்படி மருமகன் ஆகிறான்; அதனால், தவறாக சொல்கின்றனர் என்று நினைத்து, அவர்கள் நடவடிக்கையை கவனிக்க ஆரம்பித்தேன்.

ஜனவரி 2010ல், ஒருநாள், அந்த ஆள் ஓட்டலிலிருந்து வாங்கி வந்த உணவு பொட்டலத்தை, வேறு ஒருவன் மூலம் என் மனைவிக்கு கொடுத்தனுப்பி, அதை, என் மனைவி வாங்கி உண்பது தெரிந்த பின், அவன் மனைவி சொன்னது உண்மை என, நம்ப வேண்டியதாகி விட்டது.

ஊருக்கே இவர்களின் நடத்தை தெரிந்துள்ளது. அதனால், பலமுறை சண்டை வந்து, சில தடவை அடித்து விட்டேன். இருமுறை, என் மனைவி அவளின் தாய் வீட்டுக்கும் சென்று விட்டாள்.

அவ்வாறு சென்ற ஒரு தடவை, என் மீது வன்முறை தடுப்பு அலுவலகத்தில் புகார் கொடுத்து, என்னை அழைத்து எச்சரித்து, என்னிடம் நல்லபடி வைத்து வாழ்வதாக, எழுதி வாங்கிக் கொண்டனர். தற்போது, என் வீட்டில் இருந்து, என்னை சிறிதும் மதிக்காமல், அவள் இஷ்டத்திற்கே நடந்து கொள்கிறாள்.
நான் ஒரு தடவை, 12 நாள் வீட்டை விட்டு போய் விட்டேன்; பிறகு வந்து விட்டேன். தற்கொலை செய்து கொள்ளத்தான் போனேன்; என்னவோ திரும்பி விட்டேன். சில மாதங்களாகவே நாங்கள் பேசிக் கொள்வதில்லை. எங்களுக்கு பிறந்த மகள், பெரியவளான போது, என்னை அழைக்காமல், என் அபிப்பிராயத்தை கூட கேட்காமல், என் உறவினர்கள் யாருமே இல்லாமல், அவளுடைய தாய் வீட்டார், ஐந்தாறு பேரை மட்டும் வைத்து, செய்து முடித்தாள்; அன்று முதல், நான் வீட்டில் சாப்பிடுவதில்லை.

நான் ஓய்வு பெற்ற (வி.ஆர்.எஸ்.,) மின்வாரிய அலுவலர்; பென்ஷன் வாங்குகிறேன். எனக்கு, நான்கு பெண், இரண்டு ஆண் குழந்தைகள். மூன்று பெண், ஒரு ஆணுக்கு திருமணமாகி விட்டது; இவளின் குழந்தைகள் மட்டுமே உள்ளனர். இருந்த நிலத்தை இவளின் மகனுக்கே சுத்த கிரயம் செய்து கொடுத்து விட்டேன். இந்நிலையில், நான் என்ன செய்ய வேண்டுமென ஆலோசனை கூறவும்.

உங்கள் இரு மனைவிகள் எதனால் இறந்தனர், இறக்கும் போது அவர்களின் வயதென்ன, அவர்களுடனான உங்கள் தாம்பத்யம் எப்படி இருந்தது, இறந்த இரு மனைவிகளும் அக்கா, தங்கைகளா என்ற தகவல்கள், உங்கள் கடிதத்தில் இல்லை.

உங்களுக்கு குடி, வெற்றிலை, பாக்கு, புகையிலை, சீவல் போடும் பழக்கம் உண்டா என்பது தெரியவில்லை. மின்வாரியப் பணியிலிருந்து எதற்காக விருப்ப ஓய்வு பெற்றீர்கள், பணியிடத்தில் எதுவும் பிரச்னையா என்பதும் புரியவில்லை.

உங்கள் மூன்றாவது மனைவி தன்முனைப்புள்ளவர், பிடிவாதக்காரர், பிரச்னைகளுக்கு உரிய தீர்வு வர காத்திராதவர் என யூகிக்கிறேன்.
உங்கள் மூன்றாவது திருமணமே, அவசியமில்லாதது. கல்யாணம் செய்துதான் ஆக வேண்டும் என்றால், 35 - 40 வயது விதவைப் பெண்ணை நீங்கள் மணந்திருக்க வேண்டும்.

உங்கள் முதலிரவில், "நீ ஆயிரம் பேரிடம் பழகியிருந்தாலும், இனி, என்னிடம் மட்டும் பழகி, நன்கு அனுசரித்து வாழ்...' என்று கூறியிக்கிறீர்கள். இது, பத்தினிகளை சீண்டும் வார்த்தை; மறைமுகமாக உசுப்பிவிடும் வார்த்தை.

இந்த வார்த்தைகளில் இருந்து, பேச்சில் நீங்கள் கண்ணியம் காக்காதவர், தணிக்கை பண்ணாமல், வார்த்தைகளை அள்ளி கொட்டுபவர் என்பது புலனாகிறது. திருமணமான முதல் ஏழு வருடங்கள், ஒழுக்கமாக இருந்த உங்கள் மனைவி, எதனால் தடம் புரண்டார் என்பதை பார்ப்போம்...

1. உங்களிரு மனைவிகளின் மரணங்களில் ஒளிந்திருக்கும் மர்மம் பற்றி ஊரார், உங்கள் உறவினர், உங்கள் மூன்றாவது மனைவியிடம் கோள் மூட்டியிருக்கக் கூடும். அதனால், உங்களது மனைவிக்கு, உங்கள் மீதிருந்த பயமும், மரியாதையும் காணாமல் போயிருக்கும்.

2. திருமணமான ஏழு வருடங்களில், உங்கள் பலம், பலவீனத்தை உங்கள் மனைவி முழுமையாக கணித்திருப்பார். தான் தவறு செய்தால், அவரால் எதுவும் செய்ய முடியாது என்ற அசட்டுத் துணிச்சல் அவருக்கு வந்திருக்கும். திருமண பந்தம் மீறிய தன் முதல் தொடர்பை, 2002ல் உங்களிடம் சொல்லி, உங்களை ஆழம் பார்த்திருக்கிறார். நீங்களோ, நெருக்கமான தாம்பத்யத்தால் அவளை திருப்திபடுத்த பார்த்தீர்கள்; அது, தவறான அணுகுமுறை. உங்களது செயல்பாடுகள் பற்றி சரியான கணிப்பு உங்கள் மனைவியிடம்தான் இருக்கும். அறுபது வயது ஆண், இருபது வயது பெண்ணை தாம்பத்யத்தால் திருப்திபடுத்தினால் போதுமா? தோற்ற பொருத்தம், இதர, இதர தேவைப்படும். சமுதாய விமர்சனம் பாசிட்டிவ்வாக தேவை.

3. உங்கள் மனைவிக்கு, யாரோ ஒரு ஆண், விபரமாக செயல்பட சொல்லித் தருகிறார். அதனால்தான், உங்கள் மனைவி, உங்கள் மீது வன்முறை தடுப்பு அலுவலகத்தில் புகார் கொடுத்து, கண்டிக்க வைத்திருக்கிறாள்.

4.என்ன தவறு செய்தாலும், அவள், உங்களுக்கு தேவை என்ற நிலையில் இருக்கிறீர்கள்; அதனால்தான், உங்கள் செயல்பாடுகள் ஆக்கரீதியாய் இல்லை. ஒரு தடவை தற்கொலை செய்ய, 12 நாள் வீட்டை விட்டு சென்று விட்டீர்கள். இருந்த நிலத்தை மூன்றாவது மனைவியின் மகனுக்கே சுத்த கிரயம் செய்து கொடுத்து விட்டீர்கள். மனைவி சமைத்த சமையலை சாப்பிடுவதில்லை. சில, பல மாதங்களாக நீங்கள் மனைவியுடன் பேசுவதில்லை. நீங்கள் இல்லாமல் மகளின் பூப்புனித நீராட்டு விழாவை, தன் தாய் வீட்டிலேயே நடத்தி முடித்து விட்டாள் உங்கள் மனைவி.

5. உங்களுக்கும், உங்களிரு மனைவிகள் மூலம் பெற்ற குழந்தைகளுக்கும், சரியான தகவல் தொடர்பு இருக்காது என, நம்புகிறேன்.

6. ஊர் பஞ்சாயத்து மூலம், உங்களின் மூன்றாவது மனைவியை விவாகரத்து செய்து விடுங்கள். பென்ஷன் பணத்தை வைத்து, மீதி ஆயுளை தன்னந்தனியனாக கழியுங்கள்.

7. பொருந்தாத திருமணங்கள் நிரந்தர தலைவலியை பரிசளிக்கும் என்பது இக்கேள்வி - பதில் மூலம் அறியப்படும் நீதி.

இருபதாவது குழந்தையை பெற்று சாதனை

உக்ரைன் நாட்டில் ஒரு பெண் தன், இருபதாவது குழந்தையை பெற்று, சாதனை படைத்துள்ளார்.

உக்ரைன் நாட்டின் மேற்கு பகுதியில் ஒரு கிராமத்தில் வசிக்கும் அந்த பெண்ணின் பெயர், லியோனோரா நமினி; வயது 41. சமீபத்தில் இவருக்கு, இருபதாவது குழந்தை பிறந்தது. இதன் மூலம், இவருக்கு, பத்து ஆண், பத்து பெண் குழந்தைகள் உள்ளனர்.

இவரது மூத்த மகன் பெயர் ஜோனாதன்; வயது இருபது. அவருக்கு திருமணம் ஆகி விட்டது. மேலும், ஆறு குழந்தைகள் வேலைக்கு செல்கின்றனர். எட்டு குழந்தைகள் பள்ளியில் படிக்கின்றனர். ஆறு குழந்தைகள் துவக்க பள்ளியில் படிக்கின்றனர். இந்த குழந்தைகளின் தந்தை பெயர் ஜனோஸ் நமினி. அவருடன் கூட பிறந்தவர்கள் மொத்தம், 16 பேர். தாய் லியோனோரா, அவரது குடும்பத்தில், 14வது நபர்.

"இத்துடன் குழந்தை பெற்றுக் கொள்வதை நிறுத்தப் போவதில்லை. இன்னும், அதிக குழந்தைகளைப் பெற்றுக் கொள்வேன்...' என்கிறார் லியோனோரா.

செல்போன் நிறுவனங்கள் கொள்ளையே அடிக்கின்றன

   அண்மையில் வெளியான திரைப்படம் ஒன்றில், செல்போனில் சிக்னல் கிடைக்காததால் செல்போன் சேவை அளிக்கும் நிறுவனங்களை எல்லாம் நகைச்சுவை நடிகர் ஒருவர் திட்டித் தீர்ப்பது போன்ற ஒரு காட்சி. பார்ப்பதற்கு நகைச்சுவையாகத் தோன்றினாலும்,செல்போன் வைத்திருக்கும் ஒவ்வொருவரும் அனுபவிக்கும் வேதனை அது. 




  "விருப்பமானவங்க கால் செய்யும்போது அவங்க விரும்பும் பாடலைக் கேட்கச் செய்யுங்க' என்று விளம்பரம் செய்து காலர் டியூனை செயலாக்கம் செய்யக் கட்டணம் என எதற்கெடுத்தாலும் கட்டணம்தான். பேலன்ஸில் உள்ள தொகையில் திடீர் திடீரென |30 குறையும். வாடிக்கையாளர் சேவைப் பிரிவைத் தொடர்புகொண்டு கேட்டால், "எஸ்.எம்.எஸ். பேக் உங்கள் எண்ணுக்கு தவறுதலாகத் தேர்வாகிவிட்டது. அடுத்த மாதம் இந்தச் சேவையை நீக்கிவிடுகிறோம்' என்பார்கள்.

      


       
மக்களின் செல்போன் மோகத்தைப் பயன்படுத்தி செல்போன் சேவை அளிக்கும் நிறுவனங்கள் பெரும் கொள்ளையே அடிக்கின்றன. செல்போன் எண்களை வணிக நிறுவனங்களுக்குத் தந்து தேவையற்ற அழைப்புகளுக்கு வழிவகை செய்வது ஒருபுறம் என்றால், சேவை என்ற பெயரில் எதற்கெடுத்தாலும் காசு பறிப்பது மற்றொரு புறம். ரிங்டோனை தேர்வு செய்யக் கட்டணம், அதைப் பதிவிறக்கம் செய்யக் கட்டணம். 

கட்டணம் குறைந்துவிட்டது குறித்துக் கேட்டால் குறைந்தது குறைந்ததுதான் என வருத்தமேயின்றிச் சொல்வார்கள். பிடித்தமானவர்கள் போன் செய்யும்போது காலர் டியூனால் மகிழ்விக்கலாம் என்றால், "இந்த காலர் டியூனை காப்பி பண்ண எண் ஒன்றை அழுத்துங்கள்' என்ற விளம்பரத்தைத்தான் அடிக்கடி கேட்க வேண்டியிருக்கும். சில நிறுவனங்கள் தங்களுக்குச் செல்போன் கோபுரம் இல்லாத பகுதியில் இணைப்புக் கிடைக்காததை மறைத்து, "நீங்கள் தொடர்பு கொள்ளும் எண் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது' எனத் தெரிவிக்கின்றன. 

50 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 42.50 ரூபாய்க்குத்தான் பேசலாம். எப்பேர்ப்பட்ட பகல் கொள்ளை இது. முழுத் தொகையும் கணக்கில் ஏறும் வசதி குறித்து பல மாதங்களுக்கு முன்னரே தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) ஆலோசனை செய்தது. ஆனால், இன்னும் நடைமுறைக்கு வந்தபாடில்லை. செல்போன் சேவை அளிக்கும் நிறுவனங்கள் "மனசு வைத்தால்' மட்டும் அவ்வப்போது முழு "டாக் டைம்' வசதி வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கும். 

அது மட்டும் செல்போன் நிறுவனங்களுக்கு கட்டுபடி ஆகிறதா என்ன? "ஆட்-ஆன்' எண்களைத் தேர்வு செய்து குறைந்த கட்டணத்தில் பேசுங்கள் என்ற சலுகையை அனைத்து நிறுவனங்களுமே அளிக்கின்றன. ஆனால், அதற்கு மாதந்தோறும் தனி வாடகை. 

50 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்து, குறைந்த அழைப்புக் கட்டணத்தில் பேச வேண்டுமானால் தனியாக ஒரு தொகைக்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும். பூஸ்டர் கார்டு, போனஸ் கார்டு என ஒவ்வொரு நிறுவனமும் ஒவ்வொருவிதமாக ஏமாற்றுகின்றன. இப்போது அனைத்து செல்போன் நிறுவனங்களும் இணையதள சேவையிலும் இறங்கியுள்ளன. அதிலும் செல்போன் பயன்படுத்துவோருக்கு சாதகமான அம்சங்கள் இல்லை.

இலவச "டவுண்லோட்', "அன்லிமிடெட் பிரவுசிங்' என்றெல்லாம் கவர்ச்சிகரமாக விளம்பரம் செய்தாலும் "பேலன்ஸ்' தொகை மொத்த மொத்தமாக காலியாவதுதான் மிச்சம். காரணம் கேட்டால் உரிய பதில் கிடைக்காது. மாதந்தோறும் வாடிக்கையாளர் எண்ணிக்கையைப் பெருக்குவதிலேயே குறியாக இருக்கும் நிறுவனங்கள், அதற்கேற்ப கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதில்லை.

இதனால், செல்போனில் பேசும்போது தெளிவாகக் கேட்காதது, பேசிக் கொண்டிருக்கும்போதே பாதியில் இணைப்புத் துண்டிக்கப்படுவது என பல சிரமங்கள். மொத்தத்தில் செல்போன் சேவை அளிக்கும் நிறுவனங்கள் அனைத்துமே சேவையைப் பொறுத்தவரை தொடர்பு எல்லைக்கு வெளியேதான் உள்ளன.






அன்றாட வாழ்வில் செல்போன் தவிர்க்க முடியாத ஓர் அம்சமாகிவிட்டதைப்போல பெரும் இம்சையாகவும் மாறிவிட்டது. இப்போதெல்லாம் 5 ரூபாய்க்குக் கூட செல்போனில் ரீசார்ஜ் செய்யும் வசதி வந்துவிட்டது. ஆனால், பெருமைப்படக்கூடிய விஷயம் அல்ல அது. சட்டைப்பையில் 5 ரூபாயைக்கூட வைத்திருக்கவிடாமல் பறித்துக் கொள்ள செல்போன் நிறுவனங்கள் வகுத்துள்ள உத்தியாகத்தான் கருத வேண்டும்.

நமது ப்ளாக்கில் Back to Top பட்டனை கொண்டுவர..





நம்மில் பலர் வலைப்பதிவின் முகப்பு பக்கத்தில் இரண்டுக்கும் மேற்பட்ட பதிவுகளை வைத்திருப்போம். சில பதிவுகள் நீளமாக இருக்கும். அந்த சமயம் பதிவை படிப்பவர்கள் கீழே வரை படித்த பின் மீண்டும் மேலே வருவதற்கு கடினமாக இருக்கும். ஆனால் Back to Top பட்டனை வைத்தால் எளிதாக பக்கத்தின் மேலே சென்றுவிடலாம்.

Back to Top பட்டனை எப்படி வைப்பது?

1. முதலில் Blogger Dashboard=>Design=>Page Elements பக்கத்திற்கு செல்லவும்.

2. Add a gadget என்பதை க்ளிக் செய்தால் ஒரு window வரும். அதில் HTML/JavaScript என்பதை தேர்வு செய்யவும்.

குறிப்பு: Add a Gadget இரண்டுக்கும் மேற்பட்ட இடத்தில் இருந்தால், நீங்கள் எங்கு வேண்டுமானாலும் இதை செய்யலாம். ஏற்கனவே நீங்கள் HTML/JavaScript gadget வைத்திருந்தால் அதில் சேர்ப்பது நல்லது.

3. பிறகு Title என்ற இடத்தில் உங்களுக்கு விருப்பமான தலைப்பை இடவும். உதாரணமாக, Back To Top.
Content என்ற இடத்தில் பின்வரும் Code-ஐ paste செய்யவும்.

<a style="display:scroll;position:fixed;bottom:5px;right:5px;" href="#" title="Back to Top"><img src="http://4.bp.blogspot.com/_I0BsyBYud2E/TMen3G2wjTI/AAAAAAAAAbg/bbTgNx8_15o/s1600/4.gif"/></a>

4. பிறகு Save என்பதை க்ளிக் செய்யவும்.

இனி உங்கள் ப்ளாக்கின் கீழே Back To Top பட்டன் காட்சி அளிக்கும்.






Code-ல் மாற்றம் செய்வதற்கு:

**மேலே உள்ள Code-ல் நீல நிறத்தில் உள்ள Back to Top என்பதற்கு பதிலாக உங்களுக்கு விருப்பமான வார்த்தைகளை மாற்றிக் கொள்ளலாம். உதாரணத்திற்கு "மேலே செல்ல"

**மேலே உள்ள Code-ல் சிகப்பு நிறத்தில் உள்ளhttp://4.bp.blogspot.com/_I0BsyBYud2E/TMen3G2wjTI/AAAAAAAAAbg/bbTgNx8_15o/s1600/4.gif என்பதற்கு பதிலாக உங்களுக்கு விருப்பமான படத்தின் முகவரியை (Image URL) கொடுக்கலாம்.

மேலே உள்ள Code-ல் bottom:5px;right:5px; என்ற இடத்தில் உங்களுக்கு ஏற்றவாறு மாற்றிக் கொள்ளலாம். உதாரணத்திற்கு,

*கீழிருந்து பட்டன் வரை உள்ள இடைவெளியை மாற்ற bottom:5px; என்பதில் 5 என்பதற்கு பதிலாக வேறு எண்ணை மாற்றலாம்.

* வலது பக்கத்திலிருந்து பட்டன் வரை உள்ள இடைவெளியை மாற்ற right:5px; என்பதில் 5என்பதற்கு பதிலாக வேறு எண்ணை மாற்றலாம்.

** பட்டன் இடது பக்கம் தெரிய வேண்டுமானால், right என்பதற்கு பதிலாக left என்று மாற்றிக் கொள்ளவும்.

உங்களுக்காக சில பட்டன்கள்: