Sunday, May 15, 2011

வருங்காலம் வெல்க - ஜெயலலிதா

     இந்த முறை திமுகவை தமிழக மக்கள் தூக்கி எறிந்திருக்கிறார்கள். தமிழக மக்கள் இலவசங்களுக்கு மயங்குவார்கள் தான் ஆனால் மாய்ந்து போய் விட மாட்டார்கள் என்பதை திமுக இப்போது தெள்ளத் தெரிந்து கொண்டிருக்கும்.
 
ஆட்சி கட்டிலை, வைர கிரீடத்தை ஜெயலலிதாவுக்கு தமிழக மக்கள் வழங்கி இருக்கிறார்கள்.

அவர் என்ன செய்ய வேண்டும் மக்கள் நினைக்கிறார்கள்.

1. தமிழ் அறிஞர் குழு ஒன்றை நியமித்து தமிழ் புத்தாண்டு என்று கொண்டாட வேண்டும் என்று சங்க இலக்கியங்கள் முதலானவற்றை ஆய்ந்து பின்னர் புத்தாண்டை மாற்றுவது குறித்து முடிவெடுங்கள்.
2. நம் சகோதர்களை கொன்று குவித்த இலங்கை அரசுக்கு எதிராக குறைந்தபட்ச தண்டனையாவது வாங்கி கொடுங்கள்.

3. எதிர் கட்சியே கிடையாது என்ற எண்ணத்தில் இஷ்டத்திற்கு முடிவு எடுத்து விடாதீர்கள்.

4. தமிழகம் முழுதும் நிறைந்திருக்கும் ரவுடிகள் (பெயருக்கு தான் ஆனால் எல்லாம் வெது வேட்டு) கூட்டத்தின் கொட்டத்தை அடக்க வேண்டும். (முதல் சூளுரையே அது தானே - சட்டம் ஒழுங்கை நிலை நிறுத்துவேன் -நேற்று ஜெயலலிதா)

5. ஊழல் கரை படாத ஒருவரை தேர்ந்தெடுக்க வேண்டுமானால் கருவிலுள்ள குழந்தையைத் தான் தேர்ந்தெடுக்க வேண்டும்.அந்தளவு நாட்டில் ஊழல் மலிந்துள்ளது, பழைய நினைவுகளை அழித்து புது ஜெயலலிதாவாக மாறுங்கள்.

6. மம்தாவைப் போல மிக எளிமையாக எல்லாம் வேண்டாம்; கொஞ்சம் ஆடம்பரமாய் இருங்கள் போதும்.

7. பத்திரிகை,தொலைக்காட்சி வழியாக நாட்டு மக்களுக்கு அரசாங்கத்தில் என்ன தான் நடக்கிறது என்று அடிக்கடி தெரியப் படுத்தினால் அதிக தவறுகள் நிச்சயமாய் குறையும்.

8. இலவசங்களை அறிவித்து வெற்றி பெற்று விட்டீர்கள் என என்னிட வேண்டாம். அவர்களும் கொடுத்தார்கள். மேலும் அறிவிக்கவும் செய்தார்கள். எனவே அந்த சோம்பேறி ஆக்கும் செயலை விடுத்து வேலை வாய்ப்பை உருவாக்கிட வேண்டும். பசித்தவனுக்கு மீனைக் கொடுப்பதினும், மீன் பிடிக்க கற்றுக் கொடுத்தால் அவன் என்றும் பிறரிடத்து கை ஏந்தி நிற்க வேண்டி வராது அன்றோ?


9. அவர்கள் அதிமுகவிற்கு செய்ததை இவர்கள் திமுகவிற்கு செய்ய முற்படாமால், அவர்கள் மக்களுக்கு செய்யாததை இவர்கள் செய்ய வேண்டும்.

10. திரைத் துறையை சிலரின் இரும்பு பிடியில் இருந்து மீட்டெடுக்க வேண்டும்.


11. கடைசியாக, அவர்கள் செய்தது எல்லாமே தவறு என்று முடிவு கட்டி விடாதீர்கள். சில திட்டங்களை மக்களை கவரும் நோக்கிலாவது அவர்கள் தொடங்கினார்கள். அதை நீங்களும் தொடர்வதால் நலமின்றி வேறில்லை.

12. நாட்டில் இவ்வளவு டாஸ்மாக் தேவையா? பள்ளி,கோயில் என்று போது இடங்களுக்கு அருகில் இருக்கும் மது பானக் கடைகளை உடனடியாக மூடி விடுங்கள்.

13. கேபிள் டிவியை முடிந்தளவு சீக்கிரமே அரசுடைமை ஆக்குங்கள்.

இந்த பட்டியல் இதனுடன் நில்லாது சாலை அமைத்தல், கல்வி நிலைய சீர்திருத்தங்கள் என மிகப் பெரிதாய் நீளும் மக்களுக்கு நன்மை எனப் படுபவை யாவற்றையும் நிறைவேற்றுங்கள்.

மீண்டும் தேர்தல் ஐந்து ஆண்டுகள் கழித்து தான் வரும் என்ற திமுக கொள்கையை கடைபிடித்தால் அவர்களுக்கு கிடைத்த அதே விடை உங்களுக்கும் கிடைக்காது என்பதற்கு உத்தரவாதம் ஏதுமில்லை.

பதிவு பிடித்திருந்தால் , ஓட்டு போடுங்கள்.
அப்படியே தமிழ்மணம் பயன்படுத்துவோர், அதன் பட்டை ஏன் குறிப்பிட்ட சில தளங்களில் மட்டுமே வேளை செய்கிறது என்ற ரகசியத்தையும் சொல்லுங்கள்...
Any உள்குத்து??

ஹேக்கிங் பண்ணுவதும் அதை சமாளிப்பதும் எப்படி? சூடான பதிவு..

பகுதி -1 (WebCam Hacking using google )

(இந்த பதிவு ஒரு விழிப்புணர்வை தருவதற்காகவும், தொழில் நுட்ப பாதுகாப்பு அவசியம் என்பதை உணர்த்தவே... எல்லா நாடுகளிலும் தகவல் பாதுகாப்பு சட்டங்கள் உண்டு. இதனை செயல் படுத்தி பார்ப்பது சட்டப்படி தவறு. இனி உங்கள் சொந்த முடிவே... நான் இதற்கு பொருப்பாளி இல்லை... I am not responsible for any of your action...)

இதனால சகலமான தமிழ் பேசும், படிக்கும் மக்களுக்கு தெரிவிச்சுக்கிறது என்னன்னா...
இணையத்துல திருட்டு பசங்க தொல்ல அதிகமாயிட்டதால, அதனை பத்தின விவரம் இல்லாத மக்க ஏமாந்து போராங்க... இனிமே மக்க எல்லாரும் அவங்க மென்பொருள் மற்றும் கணிணியில் தேவையான பாதுகாப்பு செட்டிங்க் (Configuration Settings) செய்துக்கனும்னு கேட்டுக்குறோம்... தவறுனா, அவங்க தகவல் எப்போ வேணும்னாலும் திருடு போகலாம்... எப்படி திருடு போகலாம்னு வாரா வாரம் சொல்லப் போரோம்... கேட்டுக்கங்க......சாமியோவ்.........அடுத்த வீட்ட எட்டி பாக்கிறதுன்னா ரொம்ப பேருக்கு ஒரு அலாதி ஆனந்தம் தாங்க... நிறைய பேரு, வீட்டு கதவு, ஜன்னல், இண்டு இடுக்கு எல்லாம் பூட்டிட்டுவாங்க... ஆனால், அவங்க வீட்ல, அலுவலகத்துல இருக்கிற வெப் கேமிராவுல ஒரு சின்ன பாதுகாப்பு செட்டிங்க் (Configuration Settings) செய்ய தவறுனதால, உலகமே அவங்கள பார்க்கலாம்...

இணையத்துல வெப் கேமிராவை ஆக்கிரமிக்கிறது எப்படின்னூ பார்க்கலாம்.

உண்மை 1 - ஒரு கணிணிய இணையத்துல நீங்க இணைத்தால், அதுக்கு ஒரு Public IP கிடைத்தால், அந்த கணிணிய உலகத்துல எந்த மூலையில இருந்தும் தொடர்பு கொள்ளலாம். சரி..அதுக்கு என்ன? அது தான் எங்களுக்கு தெரியும்ல...

உண்மை 2- இப்போ, அந்த கணிணியில ஒரு வெப் கேமிராவை நிலை நிறுத்தம் (Install) செய்யறீங்க. இந்த கேமிராவை கட்டுப்படுத்த, அந்த கேமிராவோட வந்த ஒரு மென்பொருளையும் நிலை நிறுத்தம் (Install) செய்யவீங்க. அந்த மென்பொருள் உங்களுக்கு ஒரு உபயோகிப்பாளர் தொடர்பி (User Interface) யாக, இன்டெர்னெட் எக்ஸ்ஃப்ளோரை (Internet Explorer -ie) பயன்படுத்த சொல்லும். ஆமா... இப்போவெல்லாம் பொதுவாகவே முன்வாசலாக (Front End tool) இன்டெர்னெட் எக்ஸ்ஃப்ளோரர் தான் பயன்படுது. அது தான் எங்களுக்கு தெரியுமே... வந்துட்டாய்ங்க..சொல்றதுக்கு...

அண்ணே, இப்போது உண்மை-1 யும், உண்மை 2யும் சேர்த்து முடிச்சு போடுங்க... உங்க கண்ணி இணையத்துல இருக்கும் போது, அதுல வெப்கேமரா இருந்து, அதை முறையா பாதுகாப்பு செட்டிங்க் (Configuration Settings) செய்யாம இருந்தா, யாரு வேணும்னாலும் உங்க கேமராவை பார்க்கலாம்...அவ்வ்வ்வ்வ்...

நெசமாவ...??? இத தான் மில்லியன் டாலர் கேள்வின்னு சொல்லுவாங்க...

கூக்லி (www.google.com) யில், சில குறிப்பிட்ட முறையில் தேடுனா (google hacking), அதுவே அந்த மாதிரியான பாதுக்காப்பு இல்லாத வெப் கேமராக்களை காட்டி குடுத்துடும். நம்ம சும்மா அது மேல சொடுக்கி, உள்ளே போய் பார்க்கலாம். சில சமயம் வெப் கேமிராவை மொத்தமாக(admin) கட்டுப் படுத்தலாம்...

சில நேரம், உபயோகிப்பாளர் பெயர் மற்றும் கடவுச்சொல் கேட்கும். guest/guest அல்லது admin/admin உபயோகிக்க திறந்து கொள்ளும்... சில அறிவு ஜீவிகள் மட்டும் சுதாரித்து, பாதுகாப்பு செட்டிங்க் (Configuration Settings) செய்திருப்பாங்க.

சரி... இப்ப எப்படி வெப் கேமிராவை ஆக்கிரமிக்கிறாங்கன்னு பார்க்கலாம்.

படி 1: இன்டெர்னெட் எக்ஸ்ஃப்ளோரில் (Internet Explorer -ie) www.google.com type pannnga..



படி 2: தேடுதல் பெட்டியில் (search box) கீழே உள்ள ஏதாவது ஒன்றை தட்டச்சு செய்யலாம்.
inurl:/view.index.shtml
inurl:view/indexframe.shtml
inurl:lvappl
inurl:/view/shtml
inurl:viewerframe?mode=



படி 3: வந்த பட்டியலிடப்பட்டுள்ள யூஆர்எல் (URL) ஏதேனும் ஒன்ரை சொடுக்க, அது மைக்ரோசாஃப்ட் ஆக்டிவ் எக்ஸ் (Microsoft Active-x)-ஐ பதிவிரக்கம் செய்ய சொல்லும். குறிப்பு - சில கேமராக்களின் முன்வாசலாக (Front End tool) பட்சட்த்தில், ஜாவா பதிவிரக்கமாக ஆரம்பிக்கும்.









படி4: பதிவிரக்கம் செய்த பின்னர், அது அந்த வெப்கேமராவிற்குரிய மென்பொருளை பதிவிரக்கம் செய்ய சொல்லும்.



படி5: அதன் பின்னர், நேரடி ஒளிபரப்பை காணலாம்.





தடுப்பது எப்படி?

1. உங்கள் வெப்கேமராவிற்கு, உடனடியாக உபயோகிப்பாளர் பெயர் மற்றும் கடவுச்சொல்லை அமுல் படுத்துங்கள்.

2. அறியாமை என்பது ஒரு காரணமாக கொள்ளப் படாது. இணைய தள பாதுகாப்பை அறிந்து மற்ற நண்பர்களுக்கு சொல்லிக் கொடுங்கள்...

முக்கிய குறிப்பு - பொதுவாகவே, நீங்கள் ப்ரொசிங் பண்ணிய பின்னர், history மற்றும் cookies-ஐ அழித்து விடுங்கள்.

தகவல் தொழில்நுட்ப மோசடி ரூபாய் ஒரு கோடி வரை அபராதம்.

எப்போதாவது முழுவதுமாக, வெளிநடப்பு இல்லாமல் நடைபெறும் பாரளுமன்ற கூட்டத்தில், சில நேரம் சில உருப்படியான சட்டங்களையும் உருவாக்கி விடுவார்கள். அந்த வகையில் ஒரு முக்கியமான சட்டம் - தகவல் தொழில்நுட்ப சட்டம் - 2000. பொதுவாக நமக்கு சட்டங்களைப் பற்றிய விழிப்புணர்வு மிகவும் குறைவு. இந்த சட்டமும் அதற்கு விதி விலக்கு அல்ல. அந்த குறையை சிறிதளவேனும் போக்க வேண்டும் என்ற எனது நீண்ட நாள் ஆசையில் இந்த முதல் கட்டுரை.

ரூபாய் 100 க்கான ஏர்டெக்கான் முன்பதிவு செய்ததை தவிர்த்து வேறு எதுவும் வாங்கவில்லை. அவர், அவருடைய தெருவில் உள்ள ஒரு இணையதள மேயும் மையத்திற்கு (Internet Browsing Center) சென்று அவரின் கடன் அட்டையை பயன் படுத்தி www.airdeccan.net -ல் முன் பதிவு செய்தார். அந்த மைய மேலாளர், தட்டச்சு பதிவு (Key Logger) மென்பொருள் கொண்டு அவருடைய கடன் அட்டையின் தகவல்களை சேகரித்து, அதை பயன்படுத்தி பலவற்றையும் வாங்கி மோசடி செய்து விடுகிறார்.

பாவம் குப்புசாமி. என்ன செய்வார்? யாரை நாடுவார்? எப்படி இந்த மோசடியை நிரூபிப்பது? எந்த சட்டம் கொண்டு வழக்கு பதிவது?

இப்பொழுது எந்த சட்டம் கொண்டு நீங்கள் குற்றவாளியை தண்டிப்பீர்கள்? அதற்கு தான் இந்த தகவல் தொழில்நுட்ப சட்டம் - 2000....
தகவல் தொழில்நுட்ப சட்டம் - 2000 , அதன் உட்பிரிவான தகவல் பாதுகாப்பு சட்டம் மற்றும் ஆக்கிரமிப்பளர்களுக்கு ( Hackers) தரப் படும் தண்டனைகள் பற்றிய ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த பதிப்பு.

தகவல் தொழில்நுட்ப சட்டம் - 2000 - ஒரு அறிமுகம்

இந்த சட்டம், மின்னணு தகவல் பரிமாற்றம் மற்றும் இதர மின்னணு தொலை தொடர்பியலின் மூலம் நடைபெறும் கணக்கு வழக்கிற்கு ஒரு சட்ட அங்கீகாரம் அளிக்க வேண்டும் என்பதற்காகவும், பொதுவாக காகிதங்களை (எழுத்து மூலமான) அடிப்படையாக கொண்ட தகவல் பரிமாற்றத்திற்குப் பதிலாக, மின்னணு சம்பந்தப் பட்ட காகிதம் இல்லாத தகவல் பரிமாற்றம் மற்றும் தகவல் சேமிப்பை அடிப்படையாகக் கொண்ட "மின்னணு வணிகம்" ("electronic commerce") முறையில் அரசு மற்றும் அரசு சார்ந்த துறைகளிடம் கோப்புகளை பதிவு செய்ய வழிவகை செய்யும் பொருட்டு, இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் சிறிது மாற்றம் கொண்டுவரப்பட்டது. இந்த சட்டமே தகவல் தொழில்நுட்ப சட்டம் - 2000. இது மேலும் பிற சட்டங்களான வங்கி, வணிகம், குற்றவியல் மற்றும் பிற சட்டங்களுடன் தொடர்பு கொண்டது.
அதில் ஒரு பிரிவு, தகவல் பாதுகாப்பு பற்றியது...

THE INFORMATION TECHNOLOGY ACT, 2000
ACT NO. 21 OF 2000 [9th June, 2000.]
CHAPTER IX
PENALTIES AND ADJUDICATION
43.Penalty for damage to computer, computer system, etc.

43. கண்ணி மற்றும் கணிணி சார்ந்த இதர அமைப்பிற்கு(இயந்திரத்திற்கு) கேடு விளைவிப்பவர்க்கு தரும் தண்டனை.
கணிணி அல்லது கணிணி சார்ந்த அமைப்பு(இயந்திரம்) அல்லது கணிணி கட்டமைப்பிற்கு அதனுடைய உரிமையாளர் அல்லது பொருப்பாளருடைய அனுமதி இல்லாமல் கீழ்கண்ட செயல்களை செய்பவர் இந்த சட்டத்தின் படி குற்றவாளி ஆகிறார்.

அ) கணிணி அல்லது கணிணி சார்ந்த அமைப்பு(இயந்திரம்) அல்லது கணிணி கட்டமைப்பினை உபயோகித்தல் அல்லது உபயோகிப்பதை தடை செய்தல்
ஆ) கணிணி தகவல் அமைப்பு அல்லது கணிணி சார்ந்த அமைப்பு(இயந்திரம்) அல்லது கணிணி கட்டமைப்பில் உள்ள தகவல்களை, அல்லது கணிணியுடன் இணைத்துக் கொள்ள கூடிய தகவல் சேகரிப்பு கருவியில் உள்ள தகவல்களை பதிவிரக்கம், படிஎடுத்தல் அல்லது தகவலை வெளிக்கொணர்தல்
இ) கணிணி அல்லது கணிணி சார்ந்த அமைப்பு(இயந்திரம்) அல்லது கணிணி கட்டமைப்பில் அதற்கு தீங்கு விளைவிக்க கூடிய கட்டளைகளை கொண்ட புரோகிராம் அல்லது வைரஸை கொண்டுவருதல் அல்லது கொண்டுவருவதற்கு வழிவகை செய்தல்
ஈ) கணிணி அல்லது கணிணி சார்ந்த அமைப்பு(இயந்திரம்) அல்லது கணிணி கட்டமைப்பு, தகவல், தகவலமைப்பு, அதில் நிலை நிறுத்தப் பட்டுள்ள மென்பொருள்களுக்கு கேடு விளைவித்தல் அல்லது கேடு விளைய காரணமாயிருத்தல்
உ) கணிணி அல்லது கணிணி சார்ந்த அமைப்பு(இயந்திரம்) அல்லது கணிணி கட்டமைப்புக்கு தடை(கோளாறு) ஏற்படுத்துதல் அல்லது தடை ஏற்பட காரணமாயிருத்தல்
ஊ) அனுமதிக்கப் பட்ட பயனீட்டாளர்களை கணிணி அல்லது கணிணி சார்ந்த அமைப்பு(இயந்திரம்) அல்லது கணிணி கட்டமைப்பினை பயன்படுத்த முடியாமல் செய்வது அல்லது பயன்படுத்தமுடியாமல் போவதற்கு காரணமாயிருத்தல்.
எ) இந்த சட்டத்தில் சொல்லியுள்ள குற்றங்களை வேரு யாரேனும் புரிவதற்கு உதவியாய் இருத்தல்
ஏ) கணிணி அல்லது கணிணி சார்ந்த அமைப்பு(இயந்திரம்) அல்லது கணிணி கட்டமைப்பில் மாற்றம் செய்து அதன் மூலம் ஒரு பயனீட்டளர் கட்ட வேண்டிய பணத்தினை மற்றொரு பயனீட்டாளரின் கணக்கில் மாற்றுதல்...

தண்டனை::

மேற் சொன்ன குற்றங்களை குற்றவாளியின் மீது நிரூபிக்கும் பட்சத்தில், குற்றவாளி பாதிக்கப் பட்டவர்க்கு இழப்பீடாக ரூபாய் ஒரு கோடிக்கு மிகாமல் தர வேண்டியது வரும். இழப்பீட்டுப் பணம் குற்றத்தின் தன்மை மற்றும் அதன் விளைவினைப் பொருத்து முடிவு செய்யப் படலாம். மேலும் குற்றத்தின் தன்மையை பொருத்து வேறு சட்டங்களின் மூலமும் தண்டனை வழங்கப் படலாம்.


இந்த கட்டுரையில் ஏதேனும் குறை இருப்பின் சுட்டிக் காட்டுங்கள்... மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்...
சில முக்கிய தகவல்கள்.


The address of the Cyber Crime Cell:
Cyber Crime Cell,Crime Branch CID.,Admiralty House,Government Estate,Chennai - 600 002.Tamil Nadu.
Website : www.cbcid.tn.gov.inEmail ID : cbcyber@tn.nic.inTelephone Nos. : 044-25389779, 044-25393359, Mobile : 98414-22844

Explanation.-For the purposes of this section,-

1) ‘‘computer contaminant’’ means any set of computer instructions that are designed-
2) To modify, destroy, record, transmit data or programme residing within a computer, computer system or computer network; or
3) By any means to usurp the normal operation of the computer, computer system, or computer network;
a) ‘‘computer data base'' means a representation of information,
b) Knowledge, facts, concepts or instructions in text, image, audio, video that are being prepared or have been prepared in a formalized manner or have been produced by a computer, computer system or computer network and are intended for use in a computer, computer system or computer network;
c) ‘‘Computer virus'' means any computer instruction, information, data or programme that destroys, damages, degrades or adversely affects the performance of a computer resource or attaches itself to another computer resource and operates when a programme, data or instruction is executed or some other event takes place in that computer resource;
d) ‘‘Damage’’ means to destroy, alter, delete, add, modify or rearrange any computer resource by any means.