Sunday, March 27, 2011

பலபெண்களை காதல் வசப்படுத்தி ...போட்டோ,வீடியோ எடுத்து..(18+)



 
னிமேல் நீ என்னில் பாதி... புயல் - வெயில் - மழை... பாலை - சோலை இவை எல்லாம் ஒன்றாக நாம் கடப்போம்!'' என்று சினிமாக் களில் தருகிற வாக்குறுதிகள் மாதிரியே, திருநெல்வேலி அருகில் இருக்கும் தோப்புவிளைகிராமத்து தேவால யத்தில் மேரிசுதாவுக்கு வாக்குறுதி அளித்தார் ரீகன். கல்யாணமாகி சென்னைக்கு அவரோடு வாழ வந்த கொஞ்ச நாளிலேயே, மிகமிக விபரீதமான வினோதமான ஒரு காமுகனுக்கு தான் வாழ்க்கைப்பட்டிருக்கிறோம் என்று மேரிசுதாவுக்குப் புரிந்துபோனது.தப்பான புருஷனின் பர்ஸை அவனுக்குத் தெரியா மல் துழாவினால் என்ன கிடைக்கும்? சில சமயம் பாக்கெட்டுக்குள் கைவிட்டால் என்ன கிடைக்கும்? ரீகன் தன் வீட்டுக்குள்ளேயே வைத்திருந்த கம்ப்யூட்டரின் ஹார்டு டிஸ்க்கில் மேரிசுதா தேடிக் கண்டடைந்தது எல்லாமே அசிங்கம், அருவருப்பு, வக்கிரத்தின் உச்சம்! புகைப்படங்கள், ஆடியோ - வீடியோ பதிவுகளில் அடுத் தடுத்து பல பெண்களோடு ரீகன் இருந்த காட்சிகள் எல்லாமே 'உவ்வே' ரகம்!
தனியொரு நபர் இத்தனைப் பெண்களோடு இப்படி சல்லாபம் செய்யவும், சுற்றித்திரியவும், அவர்களோடு தான் இருந்த அந்தரங்க காட்சிகளை அடுக்கடுக்காக பதிவு செய்யவும், ஒரு கட்டத்தில் பிரச்னை முற்றிப்போனால் அவர்களை சினிமாட்டிக் வில்லனாக மிரட்டி பதிவு செய்துகொள்ளவும் எப்படித்தான் முடிந்ததோ... என்று அதிரவைக்கும் அளவுக்கு இருந்தன மேரிசுதா நம் முன் கொண்டுவந்து கொட்டிய ஆதாரங்கள்.
பட்டப்பகலில், வெட்டவெளியில், சற்று தூரத்திலேயே சாதாரணமாக மக்கள் நடமாட்டம் இருக்க... அந்தக் கடற்கரையில் அதிரவைக்கும் போஸில் ஒரு பெண்ணை எப்படித்தான் சம்மதிக்க வைத்து படமெடுத்தார்களோ என்று நினைக்கும்போதே நடுக்கம் கண்டது நமக்கு.
''எனக்கு முன்னால எத்தனைப் பேர் உன்னைத் தொட்டான்? ஒளிவு மறைவு இல்லாம ஒழுங்காகச் சொல்லிடு... நான் உன்னை விட்டுடறேன்!'' என்று ஆரம் பித்து, அந்தப் பெண்ணின் வாயாலேயே வரிசையாக சில ஆண்களின் பெயர்களை வாங்குகிறது அந்த 'மெஸ்மரிச' குரல்!
''இது என் புருஷன் ரீகன் குரலேதாங்க. நடுராத்திரியில் வீடியோவில் அசிங்கப் படத்தை ஓடவிட்டுட்டு, அதுல வர்றமாதிரி எல்லாம் என்னை கோ ஆபரேட் பண்ண சொல்லுவான் அந்தப்பாவி. மறுத்தால் கடுமையா அடி உதைதான். நான் ஒரு பக்கம் கதறி அழுதுக்கிட்டு இருக்கும்போதே, யாராச்சும் ஒரு பொண்ணுக்கு போன் போட்டு அவளோட தான் எப்படி எல்லாம் இருந் தேன்னு அவ வாயாலேயே படிப்படியா சொல்லச் சொல்லுவான். வேண்டாத பொண்ணுங்களை தன் வழியிலிருந்து விலக்குறதுக்கு கடுமையா மிரட்டுவான். அதையெல்லாம் செல்போன்ல எதுக்குத்தான் பதிவு செஞ்சி வெச்சிக்கிட்டானோ? ஆனா, இன்னிக்கு அவன்கிட்ட இருந்து விடுதலை வாங்க அதுதான் எனக்கு உதவப் போகுது!'' என்று சொல்லி கண்களை துடைத்துக்கொள்கிறார் மேரிசுதா.
''எனக்கும் ரீகனுக்கும் கல்யாணமான புதுசுலேயே படுக்கை அறையில் செல்போனை வெச்சு நாங்க ஒண்ணா இருக்கிறதை படம் பிடிக்க ஆரம்பிச்சான். நான் தடுத்தா, 'ப்ளீஸ் சுதா... உன்னோட ஞாபகம் வர்றப்ப பார்த்துக்கிறதுக்குத்தான்(?) இதெல்லாம்' அப்ப டின்னு கெஞ்சுவான். இருந்தாலும் அவன் அசந்திருக்கிற நேரம் பார்த்து அந்தப் படத்தை எல்லாம் நான் தேடித்தேடி அழிச்சிக்கிட்டே இருந்தேன். என்னோட மூணரை வயசு பையன் ரிக்காடோ என் வயித்துல இருந்த சமயம், பிரசவத்துக்காக தாய் வீடு போய் வந்தேன். திரும்பி வந்தப்பதான் பெட்ரூமில் புதுசா அந்த கம்ப்யூட்டர் இருந்தது. ராத்திரிப் பொழுது ஆனாலே அசிங்கப்படங்களை அதுல ஓடவிட்டு பார்க்கிறது, எதையெதையோ செல்போனில் இருந்து எடுத்து அதில் சேகரிக்கிறதுன்னு பாதிநேரம் அதே வேலையா இருப்பான்.
அடுத்தடுத்து அவனோட வக்கிரம் கூடிப்போய் வெவ்வேற பெண்களோட என் எதிரிலேயே கேவலமா பேச ஆரம்பிச்சப்பதான், ரீகனோட அம்மாக்கிட்ட விஷ யத்தைச் சொல்லி கதறி அழுதேன். 'ஆம்பிளைன்னா அப்படித்தான். களைச்சு வீட்டுக்கு வர்ற ஆம்பிளைக்கு வெந்நீர் போட்டுக் கொடுக்கிறதுதான் நல்ல பொம் பளைக்கு அழகு' அப்படின்னு எகத்தாளமா அவங்கப் பேசினாங்க. வீட்டுக்குள்ள சண்டை முத்துனப்ப, 'விருப் பம் இருந்தா இரு... இல்லாட்டி தற்கொலை பண்ணி செத்துப்போ' அப்படின்னு சொல்லி ரீகன் என்னை அடிக்க ஆரம்பிச்சிட்டான். அவங்க அப்பாக்கிட்ட இதையெல்லாம் எடுத்துச் சொல்லவே முடியாது. ஏன்னா யாரும் இல்லாத நேரத்துல தற்செயலா தடுக்கி விழுற மாதிரி என் மேல விழுறது... 'நீ ரொம்ப அழகா இருக்கே' அப்படின்னு வயசுக்கு தகாம இளிக்கிறது... இப்படி என் மாமனாரே தனி டார்ச்சர் கொடுத்தாரு.
சொந்தமா தொழில் தொடங்கப் போறேன்னு சொல்லி, என் நகைகளை வாங்கி அடகு வெச்சான் ரீகன். மேற்கொண்டு பணத்தை எங்க வீட்டுல கேட்டு வாங்கிட்டு வரச்சொல்லி அடிச்சான். தாங்கமுடியாம காவல் நிலையத்துல புகார் கொடுத்தேன். போலீஸ் ஸ்டேஷனுக்கே வந்து 'திருந்திடறதா' எழுதிக் கொடுத்து ஜாமீன்ல போனவன்தான் இப்ப எங்கே இருக்கான்னு தெரியலை...'' என்று ஒருமையிலேயே கணவனைப்பற்றி கொட்டி முடித்தார் மேரிசுதா.
அதற்கெல்லாம் முன்பாக வீட்டுக்கே சில பெண் களைக் கூட்டிவந்து அவர்கள் எதிரிலும் தன்னை ரீகன் அவமானப்படுத்தியதாக சொல்லும் இவர், புகுந்த வீட்டைவிட்டு புறப்படுவதற்கு முன்பு அந்த கம்ப்யூட்டரில் இருந்து 'ஹார்டு டிஸ்க்'கை எப்படியோ கழற்றிக்கொண்டு வந்ததுதான் க்ளைமாக்ஸ். குவியல் குவியலாக நாம் விவரித்த காட்சிகளை எல்லாம் அதிலிருந்து எடுத்து சி.டி. போட்டு நீட்டினார் - சங்கடத்தோடு!
தான் சேகரித்த சில மொபைல் நம்பர்களை நம்மிடம் கொடுத்தவர், ''இவங்க எல்லாம் ரீகனோட மிரட்டலுக்கு ஆளான பெண்கள். பேசிப் பாருங்க!'' என்று சொன்னார். அவர்களில் சிலரை தொடர்புகொண்டு பேசி, நேரிலும் சந்தித்தோம்.
''காலேஜில் படிக்கிறப்ப என் ஃப்ரெண்டு மூலமா ரீகன் அறிமுகம். சாக்லெட், சுடிதார்னு வாங்கிக் கொடுத்து அசத்தினான். அவன்கிட்ட ஒரு தடவை பேசிட்டா, அப்புறம் விலகவே முடியாது. ஏதேதோ சொல்லி ஈ.சி.ஆர். ரோட்டில் ஒரு ரிசார்ட்டுக்கு கூட்டிப்போனான். கடலில் குளிச்சிட்டு அறைக்குள் உடைமாற்றும் போது எல்லாத்தையும் படம் பிடிச்சிட்டான். சென்டிமென்ட்டா ஏதேதோ சொல்லி என்னை சமாதானப்படுத்தினான். அவன் பேச்சில் மயங்கி பலதடவை என்னை இழந்திருக்கிறேன். அப்பல்லாம் அவன் செல்போனில் படம் எடுக்கிற விஷயம் எனக்கு பெரிசா தெரியலை. என்னோட வேறொரு பாய் ஃப்ரெண்ட் அந்த செல்போன் காட்சிகளைப்பற்றி விவரமா சொன்னப்பத்தான் ரீகனோட விஷமம் எனக்குப் புரிய ஆரம்பிச்சது.
'இப்போ உன் பாய் ஃப்ரெண்டுக்கு தெரிஞ்ச விஷயம் உலகம் முழுக்க தெரியப் போகுது. இன்டர்நெட்டுல போட்டு எல்லாருக்கும் மஜா கொடுக்கலாமா?' அப்படின்னு முற்றிலும் வேறொரு முகத்தோட ரீகன் பேச ஆரம்பிச்சான். தன்னோட அக்கவுன்ட்ல பணம் போடச்சொல்லி பயங்கரமா மிரட்ட ஆரம்பிச்சான்.
ரெண்டு வருஷத்துக்கு முன்னாடிதான் எனக்கு கல்யாணம் ஆச்சு. ரீகன் என்னை காதலிச்சுருக்கான் என்கிற விஷயத்தை மட்டும் அவரே கண்டுபிடிச்சிட்டார். பெருந்தன்மையோட என்னோட வாழ்க்கை நடத்திக்கிட்டு இருக்கார். ஆனா, எந்த நிமிஷமும் தன்னிடம் இருக்கிற வீடியோ, போட்டோக்களை அனுப்பி என் வாழ்க்கையை சீரழிச்சிருவானோன்னுபயமா இருக்கு'' என்று சொல்லி கதறி அழுத அந்தப் பெண்ணின் அடையாளங்கள் இங்கே மறைக்கப்படுகின்றன. மேரிசுதா கொண்டு வந்த வீடியோ காட்சிகளில் இவரோடு ரீகன் அப்பட்டமாக படுக்கை அறையில்!
இன்னொரு இளம்பெண்ணோ, ''முதலில் செல்போனில்தான் எனக்கு அறிமுகம் ஆனான். மூணு மாசம் நாகரிகமா பேசிட்டிருந்தான். ஒருநாள் திருமங்கலம் பஸ் ஸ்டாண்டுக்கு நேரில் வரச்சொல்லி பார்த்தான். அதற்கு அப்புறம் என் அழகை வர்ணிச்சு உருகி மருகினான்!'' என்றதோடு, எப்படியெல்லாம் சென்டி மென்ட்டாக ரீகன் தன்னை வளைத்தான் என்பதை படபடப்பும் பரிதவிப்புமாக வர்ணித்தார். தன் சம்மதத்தோடே அத்துமீறி, அந்தக் காட்சிகளையும் படம் பிடித்துக் கொண்ட விவரங்களையும் சொன்னார். ''இன்னும் எனக்கு கல்யாணம் ஆகலை. என் குடும்பத் துக்கும் விஷயம் தெரியாது. தெரிஞ்சா நான் உயிரோட இருக்க முடியாது!'' என்று கதற ஆரம்பித்து விட்டார்.
ரீகன் தலைமறைவான பிறகு, கடந்த சில நாட்களுக்கு முன்பு இரு குடும்பத்தாரும் உட்கார்ந்து பஞ்சாயத்து பேசியதில்... ஸ்டாம்ப் பத்திரத்தில் ரீகனின் பெற்றோர் நீளமாக ஓர் உறுதிமொழி எழுதிக் கொடுத்து இருக்கிறார்கள் மேரிசுதாவுக்கு. திருமணத்தின்போது கொண்டுவந்த பணம், நகை ஆகியவற்றை திருப்பிக் கொடுப்பதாகவும்... குழந்தை ரிக்காடோவின் எதிர் கால பாதுகாப்புக்கு தனியாக ஒரு தொகை கொடுப்பதாகவும், அதில் அவர்கள் கூறியிருக்கிறார்கள்.
ஆனால், ''இந்த உறுதிமொழிப் பத்திரமே வீடியோ மற்றும் புகைப்படங்களை வைத்து ப்ளாக்மெயில் செய்துதான் எழுதி வாங்கப்பட்டது!'' என்று போலீஸில் ரீகனின் பெற்றோர் புகார் கொடுக்க... மேரிசுதாவையும் தேடுகிறது போலீஸ்.
ரீகனை நாம் போனில் தொடர்பு கொண்டபோது, ''ஹலோ... ஹல்லல்லோ... ஹல்லல்லல்லோ...'' என்றெல்லாம் செமத்தியாக லந்து அடித்தது எதிர்முனை. மறுமுறை தொடர்பு கொண்டால், ''நீங்கள் தொடர்புகொண்ட நபர் செம காண்டில் இருக்கிறார்!'' என்றது குரல். ஆடியோ பதிவுகளில் இருந்த அதே குரல்தான்! இன்னொரு முறை பக்கத்திலிருந்த பெண்ணிடம் போனைக் கொடுத்து விசாரிக்கச் சொன்னது. அந்தப் பெண்ணும் 'ஹலோ' சொல்லிவிட்டு கட் செய்தார்.
ரீகனின் தந்தை ஜேம்ஸை நாம் தொடர்பு கொண் டோம். ''ஜாமீன் எடுத்து எங்கள் மகனை கூட்டிவந்தோம். அப்புறம் எங்கே போனான், என்ன ஆனான் என்று தெரியாது. உங்கள் காதுக்கு வந்ததை விசாரித்து எழுதிக்கொள்ளுங்கள்!'' என்றார் அவர். ஆபாச ஆதாரங்கள்பற்றி கேட்டதற்கு, ''நான் அதில் எதையும் பார்க்கவில்லை. ஆனால், அப்படி இருப்பதாகச் சொல்லி மிரட்டித்தான் பத்திரத்தில் கையெழுத்து வாங்கினார்கள்!'' என்று மட்டும் சொல்லி லைனை கட் செய்தார் ஜேம்ஸ்.
இது மேரிசுதா என்ற ஒரே ஒரு பெண்ணின் வாழ்க்கை சம்பந்தப்பட்ட விஷயம் மட்டும் அல்ல. அடுத்து என்னாகுமோ என்ற அச்சத்தில் ஆழ்ந்திருக் கிறார்கள், அவசரப்பட்டு ரீகனிடம் தங்களை இழந்து விட்ட இன்னும் பல பெண்கள்.
'பாதிக்கப்பட்ட பெண்கள் தாங்களே முன்வந்து புகார் செய்தபின்னரே ரீகன் மீது நடவடிக்கை எடுக்க முடியும்' என்று காவல்துறையினர் காரணம் காட்டிவிடாமல், விரைந்து செயல்பட்டு கணவன் - மனைவி இருவரிடமும் தீவிரமாக விசாரணை நடத்தியே தீரவேண்டும்

பெண்களே அவதானம் ...... யாராக இருந்தாலும் போட்டொ,வீடியா எடுக்க அனுமதிக்காதீர்கள்..........இந்த பதிவையும் பாருங்கள்
பெண்களே! பெண்களே!உஷார்
Download As PDF

பேசும் படம்



நிம்மதியான துக்கம்! 










எங்கே செல்கிறது இந்திய அரசு! 


எங்கே பாதுகாப்பு? 








மின் வசதி இல்லை ஆனால் 
தமிழக அரசு டிவி தராங்க "என்ன கொடுமை சார்"










பக்கத்தில் மின் கம்பி பஸ் டாப்பில் மாணவர்கள்: 
எங்கே காவல் துறை? 










அலாட்டு ஆறுமுகம் 










தமிழக அரசே!!!!!!! 
கல்வி பிச்சை போடு! 










பெண் சிங்கம்! 












ஒன்பது சாமியார் 
Download As PDF
You might also like:

மர்மமெயில்கள் எந்த ஊரில் இருந்து அனுப்ப பட்டது என கண்டுபிடிக்க


நமக்கு வந்த ஈமெயில் எந்த ஊரில் இருந்து அனுப்ப பட்டது என கண்டுபிடிக்க
நமக்கு மெயில் வரும்போது அனுப்பியவர் எங்கிருந்து அனுப்பினார் என்று தெரிந்து கொள்ள முடியும் இந்தநாள் சந்தேகப்படும்படியான நபர் அல்லது மெயில் வந்திருந்தால் எளிதில் கண்டறியமுடியும் . இதற்க்கு Email Tracker proசாப்ட்வேர் டவுன்லோட் செய்து இதன் மூலம் சரியான இருப்பிடத்தை கண்டறியலாம் . இதனை எப்படி பயன்படுத்துவது என பார்க்கலாம் .
1.முதலில் இங்கு சென்று Email Tracker pro Download செய்துகொள்ளுங்கள் .
2.Trace mail என்பதை தேர்வுசெய்யுங்கள் 


3. உங்களுக்கு வந்த மெயில் header காப்பி செய்து கீழ்க்கண்டவாறு paste செய்யுங்கள் .
4. இதில் உள்ள trace என்ற பட்டன் அழுத்துங்கள் அவ்வளவுதான் மெயில் அனுப்பிய சரியான இருப்பிடத்தை காட்டும்


குறிப்பு : மெயில் header எது என்பதை தெரியாதவர்களுக்கு கூகிள் தேடலில் கிடைக்கும் எப்படி ஜிமெயில் யாஹூ என பல மைல்களில் கண்டறியும் முறை உள்ளது .இனி உங்களுக்கு வரும் மர்ம மெயில்கள் எங்கிருந்து வந்தன என
Download As PDF

பால் போன்ற பள பள முகத்துக்கு!


*உணவில் காரத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டும். இந்த காரமான உணவுகள் முகத்தில் பருக்களை அதிகமாக்கி, முகப் பொலிவையே கெடுத்து விடும் அபயம் உள்ளது.

*முப்பது வயதை கடந்தவர்கள் கடலைமாவுடன்,தக்காளிஜூஸ் சம அளவு எடுத்து கலந்து முகத்தில் போட்டு கொள்ளுங்கள்.

அரை மணி நேரத்தில் குளிர்ந்த தண்ணீரால் முகத்தைக் கழுவுங்கள். வாரம் இருமுறை இவ்வாறு செய்து வந்தால் சருமம் சுருக்கமில்லாமல் பளபளப்பாக ஜொலிக்கும்.

*முதல் நாள் இரவே வெந்தயத்தை ஊறவைத்து அரைத்து, தலைக்குத் தேய்த்துக் குளித்துப் வந்தால் பொடுகு தொல்லை மறைந்து விடும். அதுமட்டுமல்ல, மயிர்க் கால்கள் வலுவாகி கூந்தலும் பளபளப்பாக மாறி விடும்.
Download As PDF

அமெரிக்கர்கள் இந்தியர்களை எப்படி அடையாளம் கண்டுகொள்கிறார்கள்!!!!



1. இந்தியனுடைய அம்மா ஷார்ட் ஹேர் வைத்திருப்பார்.

2. இந்தியனுடைய அப்பா நிச்சயம் டாக்டர் அல்லது எஞ்சினியராக் இருப்பார்.

3. 12 வயதுக்கு கிழே உள்ளவர்களுக்கு அரை டிக்கெட் என்கிற இடங்களில் எல்லாம் 15 வயதாகிய தன் பிள்ளைகளுக்கு 12 வயதுதான் என்று சொல்லி வாகுவதம் செய்து டிக்கெட் எடுக்க முயற்சி செய்வார்.

4. கணக்கில் இந்தியபையன் கேட்கும் சிறிய சந்தேகத்திற்கு பெற்றோர்கள் 2 மணி நேரத்திற்கு மேலாக லெக்சர் கொடுத்து கொண்டிருப்பார்கள்.

5. இந்தியனுடைய வீட்டில் 20 lb அரிசி பேக் இருக்கும்.

6. இந்தியனுடைய வீட்டில் குறைந்தது 2 ஜப்பான் தாயாரிப்பு கார்கள் இருக்கும்.

7. படிக்கும் காலேஜ் காம்பஸுக்கு இந்திய பையனை பார்க்க ஏதாவது பெண்வந்தால் பார்க்கும் மற்றவர்கள் கேட்பார்கள் அது உன் அம்மாவா அல்லது சகோதரியா என்று? 
8. இந்தியனுடைய அப்பா அல்லது தாத்தாவின் காதில் ஹேர் இருக்கும் அதை எப்போதும் கட் செய்யமாட்டார்கள்.

9. இந்தியனுடைய பிள்ளைகள் முன்னாள் பெற்றோர்கள் ஒரு போதும் கட்டி அனைக்க மாட்டார்கள் அல்லது முத்தம் தரமாட்டார்கள்.

10. இந்தியனுடைய வீட்டில் உள்ள எல்லா சாப்ட்வெரும் ஒரிஜனல் காப்பி கிடையாது. 
11. இந்திய பையண் நண்பர்களின் பெற்றோர்களை அங்கிள் & ஆண்ட்டி என்றுதான் கூப்பிட வேண்டும்.

12. இந்தியனுடைய வீட்டில் அகர்பத்தி ஸ்மல் அடிக்கும்

13. இந்திய குடும்பம் விலை உயர்ந்த ஹோட்டலில் சாப்பிடும் போது குடிக்க ஐஸ் இல்லாத வாட்டர் மட்டும் ஆர்டர் செய்வார்கள் சாப்பாட்டின் முடிவில் டெஸர்ட் ஆர்டர் செய்யமாட்டார்கள்.


14. இந்திய பையன்கள் ஏதாவது எலக்ரானிக்ஸ் பொருட்கள் வாங்கி கேட்டால் இந்த வயதில் தாங்கள் காலுக்கு கூட ஷு இல்லாமல் இருந்ததை பெற்றோர்கள் சொல்லிக் காண்பித்து கொண்டிருபார்கள்..


15. இந்தியர்கள் ஆன் லைன் கூப்பனை பார்த்தால் குறைந்தது 10 கூப்பன்களையாவது ப்ரிண்ட் செய்து குடும்பத்தோடு கடை க்யூவில் ஒருவர் மாறி ஒருவராக நின்று பொருட்களை வாங்கி கொண்டிருப்பார்கள்குடும்பத்திற்கு ஓன்று என்று சொன்னாலும் தனித்தனியாக நின்று வேறு குடும்ப ஆள் மாதிரி ஆக்ட் செய்து வாங்குவார்கள்.


16. ஏதோ கிப்ட் கொடுப்பது போல் நண்பர் அனைவருக்கும் அந்த கூப்பனை இமெயிலில் பார்வெட் செய்வார்கள். 
17. சம்மர் தொடங்கியதும் இந்தியனுடைய பெற்றோர்கள் அரை டிரெஸ் போட்டு முதல் ஒரு மாதம் மட்டும் வாக்கிங் போவார்கள்.அதுதான் அவர்கள் ஆண்டு முழுவதும் செய்யும் உடற்பயிற்சி ஆகும்

18. இந்தியனுடைய வீட்டு பார்ட்டிகளில் சமோசா, நாந் ,மலாய் குப்தா, தயிர் சாதம்,குலோப் சாமுன் போன்றவை கண்டிப்பாக இருக்கும். நோ ட்ரிங்க்ஸ். நோ மியூஸிக் அல்லது டான்ஸ், ஆளூக்கு ஆள் கத்திக் கொண்டிருபார்கள், குறைந்தது 2 ஆண்ட்டிகளாவது பிள்ளை உண்டாகி வயிற்றை தள்ளிக் கொண்டிருபார்கள்.



19. கோடைகாலத்தில் பீச்சில் இருந்து எல்லோரும் ஈவினிங் வீடு திரும்பும் போதுதான் இந்தியர்கள் அங்கு செல்வார்கள். கையில் லெமன் ரைஸ் மற்றும் சிப்ஸ் இருக்கும். Download As PDF

உங்கள் ஞாபக சக்தி அதிகமாக வேண்டுமா? படியுங்கள் இதை!!



Download As PDF
ஞாபக சக்தியை அதிகரிக்கும் உணவுப்பொருட்கள்: அச்சச்சோ! மறந்து போச்சே... இன்று நாம் அதிகமாகப் பயன்படுத்தும் வாக்கியம் அநேகமாக இதுவாகத்தான் இருக்கும். இதற்குக் காரணம் நினைவாற்றல் இல்லாதது தான். நினைவாற்றல் அதிகரிக்க பாஸ்பரஸ் மற்றும் குளுட்டாமிக் அமிலம் உள்ள உணவுப் பொருட்களைத் தொடர்ந்து சாப்பிட வேண்டும்.

* வாரம் ஒருமுறை வல்லாரைக் கீரையை உணவில் சேர்த்து வருவது நல்லது. இதுவும் ஞாபக சக்தியை அதிகரிக்கும். இக்கீரையை வெயிலில் காயவைத்துப் பொடியாக்கிக்கொண்டு, தினமும் அரை தேக்கரண்டியைப் பாலுடன் சேர்த்து அருந்தி வந்தால் பிள்ளைகள் மற்றும் பெரியவர்கள் நல்ல நினைவாற்றலுடன் சுறுசுறுப்பாகத் திகழ்வார்கள். கீரை கிடைக்காதவர்கள் வல்லாரை கேப்ஸ்யூல்களைப் பயன்படுத்தலாம்.

* பள்ளிப் பிள்ளைகளும், நிர்வாகிகளும் நினைவாற்றலை அதிகரித்துக்கொள்ளவும் நரம்புகளைப் பலப்படுத்திக்கொள்ளவும் தினமும் இரவில் பன்னிரண்டு பாதாம் பருப்புகளைத் தண்ணீ­ரில் ஊறபோட்டு காலையில் அதை அரைத்து சாப்பிட வேண்டும். அரைக்கும் முன் பாதாம் பருப்பின் மேல் தோலை நீக்கிவிட வேண்டும். 100 கிராம் பாதாம் பருப்பில் 490 மில்லி கிராம் பாஸ்பரஸ், தாது உப்பு இருக்கிறது. குளுட்டாமிக் அமிலமும் அதில் இருக்கிறது.

* அதேபோல இருபது கிராம் அக்ரூட் பருப்புகளுடன் பத்து கிராம் உலர்ந்த திராட்சைப் பழத்தை தினமும் ஒருவேளை சாப்பிட்டு வந்தாலும் பலமில்லாத மூளை வலுப்பெற்று நினைவாற்றல் அதிகரிக்கும். செலவில்லாமல் சாப்பிட 50 கிராம் வேர்க்கடலை போதும்.

* ஞாபக சக்தியை அதிகரிக்கும் முதல் பழம் ஆப்பிள். இரண்டாவதாக பேரீச்சை, திராட்சை, மாதுளை, ஆரஞ்சு முதலியன.

* சமையலில் சீரகம், மிளகு ஆகியவை கண்டிப்பாக இடம்பெறவேண்டும். இவை மூளையில் சோர்வு ஏற்படாமல் பார்த்துக் கொள்கின்றன.

* கோதுமை, சோளம், பார்லி, காராமணி, பாசிப்பருப்பு, கேரட், தண்டுக்கீரை, பீட்ரூட், முருங்கைக்காய், சோயாபீன்ஸ், வெங்காயம், வெள்ளைப்பூண்டு, புதினா முதலியவற்றில் பாஸ்பரஸ் உப்பு அதிக அளவில் உள்ளது. இவை தவிர பால், தயிர் போன்றவற்றையும் உணவில் சேர்க்க வேண்டும்.

மனிதர்களுக்கு நினைவாற்றல் குறைந்து வருவதற்கு மிக முக்கியமான காரணம், கவலைகள்தான். இரத்த ஓட்டக் குறைவும் நோயால் நேரடியாகவோ மறைமுகமாகவோ மூளைக்குச் சரியானபடி இரத்தம் கிடைக்காததும் காரணங்களாகும். மூளை சோர்ந்துவிடாமல் பார்த்துக் கொண்டால் நினைவாற்றல் நன்றாக இருக்கும்.

வானில் வெடித்துச்சிதற இருக்கும் ராட்சத ஒளிப்பிழம்பு: விஞ்ஞானிகள் தகவல்!

வானில் வெடித்துச்சிதற இருக்கும் ராட்சத ஒளிப்பிழம்பு: விஞ்ஞானிகள் தகவல்!
வானில் அடிக்கடி அதிசயங்கள் நிகழ்ந்து வருகிறது. இந்நிலையில் வானில் மிகவும் சக்தி வாய்ந்த வெளிச்சம் ஏற்பட உள்ளது. பூமி தோன்றியதில் இருந்து இதுவரை அது போன்ற நிகழ்வு ஏற்பட்டிருக்காது என்ற நிலை உருவாகும். அந்த வெளிச்சம் இரவை பகல் போன்று ஆக்கும். அது ஒரு வாரம் முதல் 2 வாரங்கள் வரை ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
அதிசக்தி வாய்ந்த விண் மீன் கூட்டம் பூமியில் இருந்து 640 வெளிச்சம் ஆண்டுகள் தூரத்தில் உள்ளது. இவை சிவப்பு நிறத்தில் ராட்சத வடிவிலானவை. இவற்றின் ஆயுட்காலம் முடியும்போது அவை கூட்டம் கூட்டமாக வெடித்து சிதறும். இவ்வாறு வெடித்து சிதறும்போது வானில் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்தில் வெளிச்சம் தோன்றும்.
இது மற்றொரு சூரியன் புதிதாக உதிப்பதை போன்ற தோற்றத்தை உருவாக்கும். இச்சம்பவம் இந்த ஆண்டு இறுதியில் ஏற்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இல்லாவிட்டால் அடுத்த 10 லட்சம் ஆண்டுக்குள்தான் உண்டாகும். இந்த தகவலை ஆஸ்திரேலியாவின் தெற்கு குவின்ஸ்லாந்து பல்கலைக் கழகத்தின் இயற்பியல் துறை தலைவர் பேராசிரியர் பிராட்கார்டர் தெரிவித்துள்ளார்.

ஹெல்த் டிப்ஸ் - மலச்சிக்கல்


நம் மூதையர் காலத்தில் இருந்து தற்காலம் வரையுள்ள அநேக பேர்களுக்கு உள்ள பிரச்சனை மலச்சிக்கல் பிரச்சனை ஆகும். தற்போது எடுத்துள்ள சர்வேயின்படி உலகத்திலுள்ள 10 % க்கும் மேலே உள்ளவர்கள் மலச்சிக்களால் அவதிப்படுவதாக கண்டறிந்துள்ளனர். இதற்கு 70 க்கும் மேற்ப்பட்ட மருந்துக்கள் உள்ளன. டாக்டர்கள் எப்போதுமே மருந்துக்கள் எழுதி தருவார் அல்லது நிறைய காய்கறிகள், பழம். தண்ணீர் & உடல் பயிற்ச்சி செய்ய கூறுவார்கள்.




மருந்துக்கள் முலம் சரி செய்வது ஒகே என்றாலும் அது இயற்கையான வழியாகாது. இதை மனதில் வைத்து வலையில் மேய்ந்த போது சில நல்ல பக்கத்தை பார்க்க நேர்ந்தது. அந்த குறிப்புகள் நல்ல உபயோகமாக இருக்கும் என்று தோன்றியதன் விளைவே இந்த ஹெல்த் டிப்ஸ் பக்கம். இதை நம் தமிழ் உலக மக்களுக்கு பயன் பட வேண்டுமென்று அதை நான் இங்கு தருகின்றேன்.


ஒவ்வொரு நாளும் காலையில் மலம் கழிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி கொள்ளவேண்டும். எப்போது மலம்வரும் போல இருக்கும் போது உடனே கழித்துவிட வேண்டும். அடக்கி கொண்டு பிறகு போகலாம் என்று நினைக்க கூடாது. 


டாய்லெட்டில் எப்படி உட்காரவேண்டும் என்பது மிக முக்கியம். கீழேயுள்ள படத்தை பாருங்கள்.

படத்திலுள்ள படி முன்புறமாக 45-50 டிகிரி சாய்ந்த படி உட்கார்ந்தால் மலவாய் தளர்வாகவும், நேவாகவும் இருப்பதால் எந்த வித முயற்ச்சியில்லாமல் எளிதாக மலம் போகலாம். காலை படத்தில் உள்ளபடி வைக்கவும்.. இது மலம் கழிப்பதற்கு மிகவும் குட் பொஸின் ஆகும்.


ரொம்ப மலச்சிக்கல் உள்ளவர்கள் எனிமா முறையை கடைப் பிடிக்கலாம்.. இதற்கு என மருத்துவ கடையில் எனிமா சிரின்ஸ் விற்ப்பார்கள் அதை வாங்கி உபயோகிக்கலாம்.எனிமா சிரின்ஸ் படம் கிழேயுள்ளது.


சிம்பிள் சால்ட் வாட்டர் எனிமா எளிதானது. மிதமான வார்ம்முள்ள 4 கப் வாட்டரில்( 8 oz = 1 cup) 1 டேபிள் ஸ்பூன் உப்பு போட்டு கரைத்து உபயோகிக்கவும். நெட்டில் நீங்கள் வேறுவிதமான முறைகளையும் காணலாம்.




இது உபயோகமாக இருக்கும் என்று தோன்றினால் இதை தேவைப்படுபவர்களுக்கு சொல்லுங்கள் Download As PDF

`தூக்கத்தில் நடக்கும் வியாதி’க்குக் காரணம் என்ன? விஞ்ஞானிகள் விளக்கம்.!

`தூக்கத்தில் நடக்கும் வியாதி’க்குக் காரணம் என்ன? விஞ்ஞானிகள் விளக்கம்.!
ஒரு விந்தையான வியாதி- `சோம்னாம்புலிஸம்’ எனப்படும் தூக்கத்தில் நடக்கும் நோய். `குரோமோசோம்’ குறைபாடே இந்நோய்க்குக் காரணம் என்று விஞ்ஞானிகள் தற்போது கண்டுபிடித்திருக்கிறார்கள். சிலரை தூக்கத்தில் நடக்க வைக்கும் `மரபணு சங்கேதக் குறியீட்டை’ அவர்கள் கண்டறிந்திருக்கிறார்கள்.
அந்த சர்வதேச ஆய்வுக் குழு, தூக்கத்தின்போது ஒருவரின் இதுபோன்ற நடத்தைக்கு குரோமோசோமில் ஏற்பட்டிருக்கும் பிழையே காரணம் என்று உறுதியாகக் கூறு கிறது. ஒரே குடும்பத்தின் நான்கு தலைமுறையினரை அவர்கள் ஆய்வு செய்திருக்கின்றனர். அப்போது குரோமோசோமின் ஒரு பகுதியில் ஏற்பட்டிருக்கும் குறைபாட்டை அவர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
அந்தக் குறைபாடான டி.என்.ஏ.யின் ஒரு பகுதி அடுத்த தலைமுறைக்குப் போனால் போதும். அது தூக்கத்தில் நடக்கும் வியாதியை ஏற்படுத்திவிடும். தற்போது, அந்த மரபணு சங்கேதக் குறியீட்டுப் பகுதியை விஞ்ஞானிகள் தனிமைப்படுத்தியிருக் கிறார்கள். அதன்மூலம், தூக்கத்தில் நடக்கும் வியாதிக்குத் தீர்வு காண முடியும் என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்கள்.
வாஷிங்டன் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி ஆய் வாளர்கள், கிறிஸ்டினா கர்னட் என்பவர் தலைமையில் இதுதொடர்பான ஆய்வில் ஈடுபட்டார்கள். அவர்கள், பரம்பரையாக தூக்கத்தில் நடக்கும் வியாதி பாதிப்பு இருந்தவர்களை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டனர். அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த 12 வயதுச் சிறுமி ஹன்னாவுக்குக் கூட குறிப்பிட்ட வியாதிப் பாதிப்பு இருந்தது. அவள் தூக்கத்திலேயே நடந்து வீட்டை விட்டு வெளியேறிவிடுவதை வழக்கமாக (!) கொண்டிருந்தாள்.
அந்தக் குடும்பத்தினரின் உமிழ்நீர் மாதிரிகளை ஆராய்ந்ததில், `குரோமோசோம் 20′-ன் சங்கேதக் குறியீட்டுப் பிழைதான் தூக்கத்தில் நடக்கும் வியாதிக்குக் காரணம் என்று கண்டு பிடிக்கப்பட்டது. அது, தலைமுறை தலைமுறையாகக் கடத்தப்பட்டு வந்திருக்கிறது. பெற்றோருக்கு இந்த `ஜீன்’ இருந்தால் அவர்களின் குழந்தைகளுக்கும் அது செல்லும் வாய்ப்பு 50 சதவீதம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். தங்களின் கண்டுபிடிப்பு, தூக்கத்தில் நடக்கும் வியாதியைக் குணப்படுத்தும் முயற்சியில் ஒரு முக்கியமான முன்னேற்றம் என்றும் அந்த விஞ்ஞானிகள் மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார்கள்.

1 ரூபாயில் உங்கள் கிட்னியை சுத்தம் செய்ய?

நமது இரத்தத்தில் உள்ள உப்பையும், விஷத்தன்மையையும் பில்டர் செய்து சுத்தம் செய்யும் வேலையை நமது கிட்னி செய்து வருகின்றது. அப்படிபட்ட மகத்தான வேலையை நமது கிட்னி இராப்பகலாக செய்து வருகின்றது. அப்படிபட்ட கிட்னியை அவ்வப்போது நாம் தனிப்பட்ட கவனம் செலுத்தி கவனித்து வந்தால் அதன் ஆற்றல் நீண்ட நாள் இருப்பதுடன் ஸ்லோவாக இல்லாமல் வெகு தரத்துடன் இயங்கும். இதற்கு நாம் செய்யவேண்டியது மிகவும் எளிது அதற்கு தேவை 1 ரூபாய் மட்டுமே. 



இந்த ஒரு ரூபாய் கொண்டு நான் கொத்தமல்லிதழை என்னும் இலையை வாங்கி அதை சிறிதாக நறுக்கி சுத்தமான நீரில் 10 நிமிடம் கொதிக்கவிட்டு அதன் பிறகு அதை வடிகட்டி ஆற வைத்து தினமும் ஒரு க்ளாஸ் குடித்து வந்தால் நமது கிட்னி மிகவும் சுத்தமாக்கபட்டு நன்றாக வேலை செய்யும். சால்ட் & விஷக் கழிவுகள் யூரின் மூலம் வெளி வருவதை நீங்கள் கவனிக்கலாம் அதோடு மட்டுமல்லாமல் உங்கள் உடம்பில் ஒரு வித புது மாற்றத்தை உணரலாம்.

இது ஒரு இயற்கையான கிட்னியை சுத்தம் செய்யும் முறையாகும். 

கொத்தமல்லி தழையை ஆங்கிலத்தில் Coriander (Coriandrum sativum) என்றும், ஹிந்தியில் இதை Dhania என்றும் அமெரிக்காவில் இதை Cilatro என்றும். இதையையே வெஸ்டர்ன் உலகத்தில் Chinese parsley or Mexican parsley என்றும் அழைப்பார்கள்.

ஜப்பானின் அணு உலையும், மழையும், பிடாடைனும், கேடயச்சுரப்பியும், போலி குறுஞ்செய்தியை மேலனுப்புதலும்



இதோ இந்த படத்தில் நீங்கள் பார்ப்பதை கேடயச்சுரப்பி கேடயம் (Thyroid Shield) என்று அழைப்பார்கள்


இதை கழுத்தை சுற்றி அணிந்தால் இப்படி இருக்கும்
இதோ இந்த அக்கா அணிந்திருக்கிறார்களே, அப்படித்தான்


இதோ மற்றொரு படம்

இது எதற்கு தெரியுமா

நம் கழுத்தில் கேடயச்சுரப்பி (thyroid gland) என்று ஒரு நாளமில்லா சுரப்பி (endocrine gland) உள்ளது. இது மிகவும் முக்கியமான ஒரு உறுப்பு ஆகும்



ஆனால் கதிரியக்கத்தால் (Radiation) இது அதிகம் பாதிக்கப்படும் ஒரு உறுப்பு. கதிரியக்கம் என்பது அனைத்து உறுப்புகளையும் பாதிக்கும் என்றாலும், இந்த உறுப்பை அதிகம் பாதிக்கும் என்பதால்

ஒருவர் கதிரியக்கதினால் பாதிக்கப்படும் வாய்ப்பு இருந்தால் அவர் இதை கழுத்தில் அணிவது அவருக்கும், அவரது கேடயச்சுரப்பிக்கும் நலம். எனவே ஊடுகதிர் பரிசோதனை மேற்கொள்ளும் பிணியாளரும், அந்த அறையில் இருக்கும் மருத்துவர்கள் அல்லது பிற பணியாளர்களும் இதை அணிவார்கள்

ஏன் இதை அணிகிறார்கள் என்றால், இதை அணிந்தால் தான் கேடயச்சுரப்பிக்கு பாதுகாப்பே தவிர வெறும் பிடாடைனை கழுத்தில் தடவினால் அது கதிரியத்திலிருந்து பாதுகாக்காது



“கழுத்தில் பிடாடைன் (betadine) தடவி ஜப்பானிய கதிரியக்கத்திலிருந்து உங்களை பாதுகாக்கவும்” என்று வரும் குறுஞ்செய்தியை (SMS), மின்னஞ்சலை (E Mail) அடுத்த முறை மேலனுப்பும் (forward) முன்னர் வெறும் பிடாடைன் கதிரியகத்திலிருந்து பாதுகாக்காது என்பதாலேயே கேடயச்சுரப்பி கேடயம் என்ற ஒரு பொருளை பயன்படுத்துகிறார்கள் என்பதை நினைவில் வைக்கவும்

உங்கள் முகம் கண்ணாடி போல பளபளக்க


இந்த பிஸி உலகில் பெண்கள் வேலைக்கும் சென்று , வீட்டிலேயும் வேலை செய்து லேட்டாக தூங்க செல்வார்கள். ஒழுங்கான நேரத்திற்கு தூங்க செல்லாதது உங்கள் தோலுக்கு அதிக கெடுதலை கொடுக்கும்.


உங்கள் முகம் பொலிவோட இருக்க அதிக பணம், காலம் செலவழித்தும் அழகு நிலையத்துக்கு சென்று வருவோம். ஆனால் நான் உங்களுக்கு அதிக செலவுயில்லாமல் உங்கள் முகம் கண்ணாடி போல பளபளக்க ஒரு எளிமையான அட்வைஸ் தருகின்றேன். 


ஒரு தக்காளி பழத்தை எடுத்து ரொம்ப சின்னதாக ஸ்லைஷ் பண்ணி முகம் முழுவதும் தடவிக் கொள்ளுங்கள்.

சிறிது நேரம் கழித்து ஒரு எலுமிச்சம் பழத்தை எடுத்து சாறு பிழிந்து அதனுடன் சிறிது பேக்கிங் சோடா சேர்த்து நன்றாக கலந்து முகம் முழுவதும் தடவிக் கொள்ளுங்கள். இருபது நிமிடம் அப்படியே காயவிடுங்கள் அதன் பிறகு நல்ல குளிர்ந்த தண்ணிரில் கழுவுங்கள்.


அதன் பிறகு உங்கள் முகம் கண்ணாடி போல பளபளனு இருப்பதை உணர்விர்கள். காலையில் உங்கள் கணவர் உங்கள் அருகில் வந்தால் உங்களை முத்தமிட வருகிறார் என்று நினைக்காதீர்கள். கண்ணாடியை தொலைத்து விட்டு சேவிங் செய்ய கண்ணாடியில்லாததால்தான் உங்கள் அருகில் வருவார், காலை நேரத்தில் நம்ம ஆட்களுக்கு ரொமன்ஸ் மூடு ஏதுவும் வராதுங்கோ...

கடைசியாக ஆண்களுக்கும் ஒரு குறிப்பு. நீங்களும் இந்த குறிப்பை கடைப்பிடிக்கலாம்.அதன் பிறகு சிவாஜி படத்தில் வரும் ரஜினியை போல பளபளக்காலாம்.

புதிய கண்டுபிடிப்பு: பணத்தை கணக்கிட....Simplified money counting machine


எல்லாமே எளிதாக இருக்கவேண்டும் என்றும் அதிக அளவு பணம் சம்பாதிக்க வேண்டும் நினைக்காத மனிதன் இருக்கமாட்டான். அதுபோல மற்றவர்களுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை சரியாக எண்ணிக் கொடுக்க வேண்டும் என்றும் வாங்கும் போது அதிக அளவு கிடைத்தால் சந்தோஷமே ஆனால் குறைந்த அளவு வாங்கிவிடக் கூடாது என்று ஓன்றுக்கு இரண்டு தடவையாக எண்ணி பார்த்து வாங்கும் பழக்கம் நம்மிடையே உண்டு. 
பணப் புழக்கம் அதிகரித்துவிட்ட தமிழ் நாட்டில் அதுவும் இந்த தேர்தல் சமயத்தில் ஐயாயிரம் பத்தாயிரம் என்றால் எப்படியாவது எண்ணி முடித்துவிடலாம். ஆனால் லட்சக் கணக்கில், கோடிக்கணக்கில் கட்டுக்கட்டாக பணத்தை சில நிமிடங்களில் கச்சிதமாக எண்ணி முடிக்க என்ன வழி..?

வங்கிகளில் இதற்கென கவுன்ட்டிங் மெஷின்கள் இருக்கும். வங்கிகளுக்கோ, பெரிய நிறுவனங்களுக்கோ அதை வாங்கி வைப்பதில் பெரிய பிரச்னை எதுவுமில்லை.ஆனால், தனி நபர்களுக்கு அவ்வளவு பெரிய மெஷின்கள் தேவையில்லை அதற்காக. உங்களின் இந்தக் கவலையைப் போக்க வந்திருக்கிறது பணத்தை எண்ணும் "கவுண்ட்டிங் ரிங்" என்ற மோதிரம். 
இந்த கவுண்ட்டிங் ரிங்கை உங்கள் கட்டை விரலில் மோதிரம் போல மாட்டிக் கொள்ள வேண்டும். மோதிரத்தில் உள்ள பவர் பட்டனை ஆன் செய்து கொண்டால், அதன் டிஸ்பிளேயில் ஜீரோவைக் காட்டும். அடுத்து நீங்கள் பணத்தை வேகமாக மேலிருந்து கீழே அதன்மீது படுமாறு விட்டாலே போதும், மோதிரத்தின் கீழ்ப்பகுதியில் இருக்கும் ரப்பரானது இன்ஃப்ரா ரெட் தொழில்நுட்பத்தின் மூலம் எத்தனை நோட்டுக்கள் மேலிருந்து கீழே போயிருக்கிறது என்பதை அரை நொடியில் கச்சிதமாகக் கணக்கிட்டுச் சொல்லிவிடும். ஒன்றுக்கு இரண்டு முறை எண்ணிப் பார்த்து குறித்துக் கொண்ட பிறகு, டிஸ்பிளேயை மீண்டும் 'ரீசெட்’ செய்து கொள்ளலாம்

.இதில் சிறிய அளவிலான பேட்டரி ஒன்று இருக்கிறது. உங்கள் வேலை முடிந்த பிறகு பேட்டரியை ஆஃப் செய்து கொள்ளலாம் என்பதும் விசேஷமான அம்சம். பல ஊர்களுக்குச் சென்று பணம் வசூல் செய்து வருபவர்களுக்கு கவுண்ட்டிங் ரிங் நிச்சயம் உதவிகரமாக இருக்கும். தேர்தல் நேரத்தில் கட்சி தலைவர்களுக்கு மிகவும் இது உதவியாக இருக்குமென்பதால் இந்த பதிவை வெளிடுகிறேன். ஹீ....ஹீ...........ஹீ........

மக்களே இதுவும் உங்களுக்கு கடினம் என்றால் என்னிடம் அனுப்பி வையுங்கள் நான் உங்களுக்காக கணக்கிட்டு பாதுகாப்பாக வைத்து இருப்பேன். இதற்கெல்லாம் நீங்கள் சுவிட்ஸர்லாந்து போக வேண்டாம். 

தனது அச்சில் இருந்து பூமி 4 இஞ்சியும், ஜப்பான் 8 அடியும் விலகல்..!

தனது அச்சில் இருந்து பூமி 4 இஞ்சியும், ஜப்பான் 8 அடியும் விலகல்..!
8.9 ரிக்டர் பூகம்பம் காரணமாக, பூமி தனது அச்சிலிருந்து 4 இன்ச் அளவுக்கு இடம் மாறியுள்ளது. அதே போல ஜப்பானின் மத்திய தீவு 8 அடி நகர்ந்துள்ளது.
பூமி தனது அச்சில் 23.5 டிகிரி சாய்வாக மேற்கிலிருந்து கிழக்காக சுழன்று வருகிறது.
இந் நிலையில் 2004ம் ஆண்டு இந்தோனேஷியா அருகே ஏற்பட்ட 9.1 ரிக்டர் அளவிலான பயங்கர பூகம்பம் 2.76 இன்ச் அளவுக்கு (7 சென்டி மீட்டர்) பூமியின் சாய்வை மாற்றியது. இதனால் பூமியின் சுற்று வேகமும் குறைந்து ஒரு நாளின் சில மைக்ரோ செகன்டுகளும் குறைந்தன. மேலும் அந்தமான் தீவுகளுக்கும் இந்திய கடலோரப் பகுதிகளுக்கும் இடையிலான தூரமும் சில அடிகள் குறைந்தது. மேலும்

இதையடுத்து கடந்த தென் அமெரிக்காவின் சிலி நாட்டின் அருகே ஏற்பட்ட நிலநடுக்கமும் இதே போல பூமியின் அச்சை சில செ.மீ. மாற்றி பூமியின் சுற்று நேரத்தின் சில மைக்ரோ செகன்டுகளைக் குறைத்தது.
இப்போது ஜப்பானை உலுக்கிய பூகம்பமும் பூமியின் அச்சை 4 இன்ச் அளவுக்கு மாற்றியுள்ளதோடு, 24 மணி நேரத்தில் 1.6 மில்லி செகண்டுகளையும் குறைத்துவிட்டது.
அமெரிக்க பூகம்பவியல் கழக விஞ்ஞானி கென்னத் ஹட்நட் கூறுகையில், ஒட்டுமொத்த ஜப்பானும் பூமியின் அச்சிலிருந்து 8 அடி அளவுக்கு விலகியுள்ளது. ஜப்பான் வரலாற்றில் இது மிகப் பெரிய பூகம்பமாகும். இந்த கடும் பூகம்பத்தின் காரணமாக வெளியான மிக மிக அபரிதமான சக்தியே, கடலை கொந்தளிக்க வைத்து பெரும் சுனாமி அலைகளை ஏற்படுத்தக் காரணமாக அமைந்தது. 30 அடி அளவுக்கு சுனாமி அலையின் உயரம் இருந்ததற்கும் இதுவே காரணம். குறிப்பாக மியாகி மாகாணத்தை முற்றிலும் சீரழித்துள்ளது இந்த பூகம்பம் என்றார்.

உலகம் இப்படியும் அழியலாம்: வீடியோ பாருங்கள்!


உலகம் இப்படியும் அழியலாம்: வீடியோ பாருங்கள்!
2012 ம் ஆண்டு உலகம் அழியப்போகிறது என கடந்த ஒரு சில ஆண்டுகள் முதலே இணையத்தளங்களில் செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இது பற்றிய செய்தி பல இணையத்தளங்களில் நீங்கள் படித்திருப்பீர்கள். இதை மையமாக கொண்டு பல ஆங்கில திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. விஞ்ஞானிகளாலும் சித்தர்களாலும் கணிக்கப்பட்டு படமாக எடுக்கப்பட்ட பல சம்பவங்கள் நிஜத்திலும் நடைபெற்றுள்ளமை ஒ
ரு பக்கம் இருக்கத்தான் செய்கிறது. அவ்வாறு உலகம் அழியுமானால் இப்படியும் அழியாலாம் என்பதை சொல்லும் வீடியோவை நாம் இணைத்திருக்கிறோம். அதாவது எமது புவியில் மிகப் பிரமாண்டமான விண்கல் ஒன்று மோதுகிறது. இந்த மோதுகையின் வேகத்தால் பாரிய சத்தத்துடன் தீப்பிளம்பாக மாறி கண்டங்கள் நாடுகள் அப்படியே அழிந்து செல்லும் கோரக்காட்சிதான் இது. பார்த்தால் கொஞ்சம் பயம் தொற்றிக்கொள்ளும்.

காருக்குள் மல ஜல கூடம்: சீனாவில் புதுமை!(படங்கள் உள்ளே)


காருக்குள் மலசலகூடம்: சீனாவில் புதுமை!(படங்கள் உள்ளே)
மனிதன் காலத்தையும் நேரத்தையும் மீதப்படுத்து என்னவெல்லாம் பாடுபடுகின்றான். நவீன இந்த உலகில் வாழும் இயந்திர வாழ்க்கையில் நேரம் என்பது மிக மிக பொன்னான ஒரு விடயமாகிப்போய்விட்டது. வேலைப்பழுவின் காரணமாக காலைக்கடன் முடிக்க கூட நேரமில்லாமல் மேலைத்தேய நாடுகளில் பலர் தவித்துக்கொண்டிருக்கின்றனர். இதற்காகவே எப்பொழுதும் வித்தியாசமாகவே சிந்திக்கும் சீனர்கள் புதிய ஒரு முயற்சியை  
கையாண்டுள்ளனர்.  இவர்களின் முயற்சிகள் சிந்திக்க வைத்தாலும் சிரிக்கவும் வைக்கிறது ஒரு நிமிடம். அது வேறு ஒன்றுமில்லை காருக்குள் மலசலகூடம். ம்ம்… எப்படி??? நீங்களே பாருங்கள் புகைப்படங்களே சாட்சி!!
WORLD AMAZING INFORMATION - FIND ONLINE WORLD AMAZING PHOTOS, AMAZING NEWS, WORLD AMAZING FICTIONS, AMAZING REALITY FACTS, AMAZING HUMORS, WORLD AMAZING FACTS, WORLD AMAZING PICTURES, AMAZING LETTERS, AMAZING RHYMES, WORLD AMAZING THINGS, STRANGE FACTS, AMAZING 3D ART & LATEST AMAZING THINGS ACROSS THE WORLD.WORLD AMAZING INFORMATION - FIND ONLINE WORLD AMAZING PHOTOS, AMAZING NEWS, WORLD AMAZING FICTIONS, AMAZING REALITY FACTS, AMAZING HUMORS, WORLD AMAZING FACTS, WORLD AMAZING PICTURES, AMAZING LETTERS, AMAZING RHYMES, WORLD AMAZING THINGS, STRANGE FACTS, AMAZING 3D ART & LATEST AMAZING THINGS ACROSS THE WORLD.








WORLD AMAZING INFORMATION - FIND ONLINE WORLD AMAZING PHOTOS, AMAZING NEWS, WORLD AMAZING FICTIONS, AMAZING REALITY FACTS, AMAZING HUMORS, WORLD AMAZING FACTS, WORLD AMAZING PICTURES, AMAZING LETTERS, AMAZING RHYMES, WORLD AMAZING THINGS, STRANGE FACTS, AMAZING 3D ART & LATEST AMAZING THINGS ACROSS THE WORLD.WORLD AMAZING INFORMATION - FIND ONLINE WORLD AMAZING PHOTOS, AMAZING NEWS, WORLD AMAZING FICTIONS, AMAZING REALITY FACTS, AMAZING HUMORS, WORLD AMAZING FACTS, WORLD AMAZING PICTURES, AMAZING LETTERS, AMAZING RHYMES, WORLD AMAZING THINGS, STRANGE FACTS, AMAZING 3D ART & LATEST AMAZING THINGS ACROSS THE WORLD.








WORLD AMAZING INFORMATION - FIND ONLINE WORLD AMAZING PHOTOS, AMAZING NEWS, WORLD AMAZING FICTIONS, AMAZING REALITY FACTS, AMAZING HUMORS, WORLD AMAZING FACTS, WORLD AMAZING PICTURES, AMAZING LETTERS, AMAZING RHYMES, WORLD AMAZING THINGS, STRANGE FACTS, AMAZING 3D ART & LATEST AMAZING THINGS ACROSS THE WORLD.








காந்தமாய் மாறிய சிறுவனின் உடல்; இது நிஜமா??


காந்தமாய் மாறிய சிறுவனின் உடல்; இது நிஜமா??
காந்தத்துக்கு உலோகங்களை தன்பக்கம் ஈர்க்கும் திறன் உள்ளதை அறிவோம். அதுபோல் ஒரு சிறுவனுக்கு காந்த சக்தி இருப்பதாக செய்தி வெளியாகி உள்ளது. எனினும், இது உண்மைதானா என்ற கேள்வியும் எழுந்துள்ளது? செர்பியாவைச் சேர்ந்த 7 வயது சிறுவன் பொக்டன். கரண்டி, ஸ்பூன், கத்தி உள்ளிட்ட உலோகங்கள் இந்த சிறுவனுடைய தோலுடன் ஒட்டிக் கொள்வதாக செய்தி வெளியாகி உள்ளது. இதுதவிர, உலோகம் அல்லாத, பிளாஸ்டிக் தட்டு, தட்டையான கண்ணாடி
பொருட்கள், ரிமோட் கன்ட்ரோல் ஆகியவையும் ஒட்டிக் கொள்வதுதான் விசித்திரமாக உள்ளது.
இது முதல் முறை அல்ல. இதற்கு முன்பும் காந்த சக்தி இருப்பதாக பலர் கூறியுள்ளனர். அந்த பட்டியலில் இந்த சிறுவனும் சேர்ந்துள்ளான். ஆனால், இத்தகைய பொருட்கள் தோலில் ஒட்டிக் கொள்வதற்கு காந்த சக்தி காரணமல்ல. மேலும், தோல் என்பது இழுவை திறன் கொண்டது. இயல்பாகவே சிறிதளவு ஒட்டிக் கொள்ளும் திறன் உள்ளது. பிளாஸ்டிக் மற்றும் தோல் பொருட்கள் சில சமயங்களில் நமது உடலில் ஒட்டிக் கொள்வது வழக்கமானதுதான் என நிபுணர்கள் கூறியுள்ளனர்.உண்மையிலேயே காந்த சக்தி இருந்தால் ஒரு பொருள் ஒட்டிக் கொள்ள வரும்போது சிறுவன் சற்று பின்னால் சாய்வது தெரியும். ஆனால், இந்த வீடியோ காட்சியைப் பார்த்தபோது அப்படித் தோன்றவில்லை. காந்தத்துக்கு கண்ணாடி, ரிமோட் கன்ட்ரோல் ஆகியவற்றை ஈர்க்கும் சக்தி இல்லை. எனவே சிறுவனுக்கு காந்த சக்தி இருப்பதாகக் கூறுவதில் உண்மை இல்லைÕÕ என பெஞ்சமின் ரட்போர்டு என்ற நிபுணர் தெரிவித்தார்.

கொதிக்கும் நெய்யில் கைவிட்டு அப்பம் சுட்ட மூதாட்டி

கொதிக்கும் நெய்யில் கைவிட்டு அப்பம் சுட்ட மூதாட்டி
மகா சிவராத்திரி விழாவில், கொதிக்கும் நெய்யில் கையை விட்டு 80 வயது மூதாட்டி அப்பம் சுடும் நிகழ்ச்சி திருவில்லிபுத்தூரில் நடந்தது.விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கோயில்களில் மகா சிவராத்திரி தினத்தையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடந்தன. திருவில்லிபுத்தூர் வடக்கம்பட்டி தெரு பத்ரகாளியம்மன் கோயிலில் சிவராத்திரி விழா களைகட்டியது.
இங்கு 80 வயதான மூதாட்டி முத்தம்மாள், கடந்த 46 ஆண்டுகளாக மகா சிவராத்திரியன்று கோயிலில், கொதிக்கும் நெய்யில் கை விட்டு அப்பம் சுடுவது வழக்கம்.நேற்றுமுன்தினம் இரவு 47வது ஆண்டாக அப்பம் சுடுகிற நிகழ்ச்சி நட
ந்தது. பல்வேறு கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் செய்த முத்தம்மாள், பத்ரகாளியம்மன் கோயிலுக்கு வந்தார். பின்னர் கோயில் பூசாரி அடுப்பை பற்ற வைக்க, கோயிலுக்கு காணிக்கையாக வந்த நெய்யை சட்டியில் ஊற்றி கொதிக்க வைத்தார். நள்ளிரவு 12 மணியானதும், பெண் பக்தர்கள் குலவை ஒலி எழுப்ப, கொதித்துக் கொண்டிருந்த நெய்யில் முத்தம்மாள் சாதாரணமாக கையை விட்டு, அப்பங்கள் சுட்டார். இரவு 12 மணிக்கு துவங்கி நேற்று அதிகாலை 5 மணி வரை நடந்த இந்த நிகழ்ச்சியை ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்து பார்த்தனர். அவர் சுட்ட அப்பங்கள், பத்ரகாளியம்மனுக்கு அதிகாலையில் படைக்கப்பட்டு, பின்னர் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டன.

உடல் எடையால் உடையின்றி இருக்கும் பெண்.(படங்கள் உள்ளே)


உடல் எடையால் உடையின்றி இருக்கும் பெண்.(படங்கள் உள்ளே)
பார்ப்பவர்களை ஆ..!! என்று வாய்பிளக்க வைக்கும் ஒரு செய்திதான் இது. இது மனிதனா அல்லது மாமிச மலையா என எண்ணத்தோன்றுகிறது எமக்கு. அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தை சேர்ந்த dominique lanoise என்ற பெண்மணி தனது அளவுக்கு அதிகமான உடல் எடையுடன் அசையக்கூட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். அமெரிக்காவின் Miami நகரத்தில் வசிக்கும் 40வயதுடைய பெண்மனியே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார்.
இவரின் தற்போதைய நிறை 400 கிலோ வாக காணப்படுகிறது. இது பற்றி அவர் கருத்து தெரிவிக்கையில் எனக்கு தற்போது 6 பி
ள்ளைகள் இருக்கின்றனர். எனது முதல் குழந்தை பிறந்த பின்னர்தான் எனது உடலில் மாற்றம் ஏற்படத்தொடங்கியது. அதன் பின்னரே உடல் எடை கணிசமான முறையில் அதிகரிக்க தொடங்கியது. இருப்பினும் இன்று எனது எல்லா வேலைகளையும் அவர்களே செய்வதோடு என்னையும் அவர்களே பராமரித்து வருகின்றார்கள்.
எனவே எனக்கு எந்த வைத்திய சிகிச்சையும் தேவையில்லை. இருக்கும் எனது கொஞ்ச வாழ்நாளையும் நான் என் குழந்தைகளுடனையே கழிக்க விரும்புகின்றேன் என தெரிவித்தார். தனது உடலுக்கு பொருத்தமாக ஒரு உடையை கூட அணியமுடியாமல் வீட்டில் நிர்வாணமாக இருக்கும் இவர் தனது வாழ்நாளை தன் படுக்கையறையிலே கழிக்கிறார்.
Nude photo, without dress, nude lady, everseen nude, amazing, funny, sex, hot girls, hot nudegirls








Nude photo, without dress, nude lady, everseen nude, amazing, funny, sex, hot girls, hot nudegirls








Nude photo, without dress, nude lady, everseen nude, amazing, funny, sex, hot girls, hot nudegirls