Tuesday, January 11, 2011

கம்ப்யூட்டரில் செட்டிங்ஸ் மாற்றாமல் இருக்க

வீடுகளில் டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் ஒன்று இருப்பது வழக்கமாகி விட்ட நிலையில் ஒரு கம்ப்யூட்டரை பலர் இயக்குவதும் தவிர்க்க முடியாததாகி விட்டது.இதில் ஒருவருக்கு கம்ப்யூட்டர் அத்தியாவசிய தேவையாக இருக்கும்.அவரே அதில் உள்ள செட்டிங்ஸ் மற்றும் புரோகிராம்களை அமைத்து இயக்கி வருவார்.மற்றவர்கள் தங்கள் தேவைகளுக்கேற்ப கம்ப்யூட்டரைப் பயன்படுத்துவார்கள்.இதில் பிரச்சனை என்னவென்றால் மற்றவர்கள் அவ்வாறு பயன்படுத்துகையில் தாங்கள் விரும்பும் சில மாற்றங்களை கம்ப்யூட்டரில் ஏற்படுத்தி விடுவார்கள்.இது கம்ப்யூட்டரிலேயே தங்களின் பல வேலைகளை மேற்கொள்வோருக்கு எரிச்சல் தரும் நிலையை தோற்றுவிக்கும்.

எடுத்துக் காட்டாக வேர்டில் ரூலர்,நார்மல் டெம்ப்ளேட்,எக்ஸெல் தொகுப்பில் தேதி அமைப்பு,பக்க அமைப்பு,பிரவுசர் செட்டிங்ஸ் ,இமெயில் செட்டிங்ஸ் ஆகியவை குறிப்பிட்ட அமைப்பில் வைத்து பழகியவர்களுக்கு திடீரென மாற்றங்கள் இருந்தால் அவற்றில் வேலை பார்ப்பது சிரமமாகி விடும்.எனவே மற்றவர்கள் கம்ப்யூட்டரில் செட்டிங்ஸை மாற்றுவதைத் தடை செய்திட வேண்டும் என எண்ணுவார்கள்.

குழந்தைகள் கம்ப்யூட்டரைப் பகிர்ந்து பயன்படுத்துகையில் இது போன்று சூழ்நிலைகள் அடிக்கடி ஏற்படும்.தேவையற்ற புரோகிராம்களை இன்ஸ்டால் செய்து வைப்பதும்,இண்டர்நெட்டில் செட்டிங்ஸை மாற்றி பயன்படுத்துவதும் குழந்தைகள் அடிக்கடி செய்யும் தவறுகளாகும்.

இது போன்ற பிரச்னைகளில் இருந்து கம்ப்யூட்டரைப் பாதுகாக்கவும் அதன் மூலம் உங்களின் நலனைப் பாதுகாக்கவும் விண்டோஸ் Steadystate என்று ஒரு புரோகிராமினை இலவசமாகத் தருகிறது.இதை டவுண்லோட் செய்து இன்ஸ்டால் செய்து விட்டால் உங்களைத் தவிர யாரும் செட்டிங்ஸ் மாற்ற முடியாது.இதை எப்படி அமைப்பது என பார்க்கலாம்.

1.இந்த புரோகிராமின் பெயர் விண்டோஸ் ஸ்டெடி ஸ்டேட்(Windows Steady State) .இது கிடைக்கும் தள முகவரி :www.microsoft.com/windows/products/winfamily/sharedaccess இந்த தளம் சென்று புரோகிராமினை இறக்குவதற்குள் உங்கள் கம்ப்யூட்டரைத் தயார் செய்ய வேண்டும்.அனைத்து டிஸ்க்குகளையும் முதலில் டிபிராக் செய்திடுங்கள்.இதற்கு Start->>All programs->>Accessories->>System Tools->>Disk Defrag menter எனச் செல்லவும்.அனைத்து ஹார்ட் டிஸ்க்குகளையும் தேர்ந்தெடுத்து பின் டிபிராக்மெண்ட் பட்டனை அழுத்தவும்.இதற்கு சிறிது நேரம் ஆனாலும் பொறுமையாக இந்த வேலையை மேற்கொள்ளவும்.முடிந்தவுடன் மைக்ரோசாப்ட் அப்டேட் தளம் சென்று அண்மைக் காலத்தில் மைக்ரோசாப்ட் வழங்கிய அப்டேட் பைல்கள் உங்கள் கம்ப்யூட்டரில் பதியப்பட்டுவிட்டதா என்பதைச் சோதித்துப் பதியப்படாமல் இருந்தால் பதியவும்.பின் நீங்கள் பயன்படுத்தும் ஆண்டி வைரஸ் தொகுப்பிற்கான தளம் சென்று அதனையும் அப்டேட் செய்திடவும்.அத்துடன் உங்கள் கம்ப்யூட்டரின் அட்மினிஸ்ட்ரேட்டர் அக்கவுண்ட் பாஸ்வேர்ட் மூலம் பாதுகாக்கப்பட்டிருப்பதனையும் உறுதி செய்து கொள்ளுங்கள்.இதனை Control Panel->>User Accounts சென்று ஆப்ஷனில் உறுதி செய்யலாம்.

2.இனி விண்டோஸ் ஸ்டெடி ஸ்டேட் புரோகிராமினை இன்ஸ்டால் செய்து இயக்க வேண்டியது தான்.மேலே குறிப்பிட்ட மைக்ரோசாப்ட் தளம் சென்று அத்தளத்தில் உள்ள டவுண்லோட் பட்டனை அழுத்தவும்.முதலில் உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள விண்டோஸ் எக்ஸ்பி காசு கொடுத்து வாங்கிய ஒரிஜினல் பதிப்பா என்ற சோதனை மேற்கொள்ளப்படும்.இந்த வேலிடேஷன் சோதனை முடிந்தவுடன் டவுண்லோட் பட்டனை அழுத்தி புரோகிராமினை டவுண்லோட் செய்திடவும்.இதை டெஸ்க்டாப்பில் சேவ் செய்திடவும்.பின் இது டெஸ்க்டாப்பில் இருக்கும் இடம் அறிந்து SteadyState_Setup_ENU.exe என்ற பைலை டபுள் கிளிக் செய்திடவும்.டயலாக் பாக்ஸ்களுக்கு எஸ் கொடுத்து நெக்ஸ்ட் பட்டனை அழுத்தியவாறு தொடர்ந்தால் புரோகிராம் பதியப்பட்டு விடும்.

3.அடுத்து இந்த புரோகிராமினை இயக்கவும்.ஸ்டார்ட்-ஆல் புரோகிராம்ஸ் சென்று இயக்கலாம்.அல்லது டெஸ்க்டாப்பில் இதன் ஐகானில் மீது கிளிக் செய்து இயக்கலாம்.இந்த புரோகிராம் இயங்கத் தொடங்குகையில் உடனே ஹெல்ப் மெனு திறக்கப்படும்.இதனை மூடவும்.திரையின் வலது பக்கத்தில் கம்ப்யூட்டரில் உள்ள மற்ற யூசர் அக்கவுண்ட்ஸ் அனைத்தும் காட்டப்படும்.அட்மினிஸ்ட்ரேட்டர் அக்கவுண்ட் காட்டப்பட மாட்டாது .உங்களுக்குத் தேவையான பிற யூசர் அக்கவுண்ட்கள் இல்லை என்றால் புதிய யூசர் அக்கவுண்ட்களை உருவாக்கலாம்.இதற்கு "Add a New User" என்ற லிங்க்கில் கிளிக் செய்து பெயர் மற்றும் பாஸ்வேர்ட் கொடுத்து ஓகே கிளிக் செய்தால் யூசர் அக்கவுண்ட் தொடங்கப்படும்.

4.இதில் உள்ள ஜெனரல் டேப்பினைப் பயன்படுத்தி யூசர் ஒருவர் தன அக்கவுண்டிற்கு நிரந்தர மாற்றங்களை ஏற்படுத்துவதைத் தடுக்கலாம்.இதில் ஒரு யூசர் எவ்வளவு நேரம் கம்ப்யூட்டரைப் பயன்படுத்தலாம் என்பதையும் செட் செய்திட முடியும்.

5.அடுத்து Windows Restrictions என்ற டேப்பைத் தேர்ந்தெடுக்கவும்.இதன் மூலம் கம்ப்யூட்டரைப் பயன்படுத்துபவர்கள் விண்டோஸ் இயக்கத்தின் குறிப்பிட்ட சில வசதிகளைப் பயன்படுத்துவதைத் தடுத்து அமைக்கலாம்.இதில் High,Medium,Low மற்றும் No Restrictions என நான்கு வகையான தடுப்பு நிலைகள் உள்ளன.நீங்கள் அமைக்க விரும்பும் வகையில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம்.இங்கு காணப்படும் பட்டியலில் விண்டோஸ் வசதிகள் அனைத்தும் காணப்படும்.ஒரு குறிப்பிட்ட யூசரைக் கண்ட்ரோல் பேனல் பக்கம் செல்ல முடியாதபடி கூட அமைக்கலாம்.

6.இந்த பட்டியலில் இன்னும் கீழாக ஸ்குரோல் செய்து போனால் இன்னும் பல வகையான தடுப்பு ஆப்ஷன்களைக் காணலாம்.ரெஜிஸ்ட்ரி எடிட்டர் அணுக முடியாமல் தடுத்தல்,சிடிக்கள் தானாக இயங்கும் ஆட்டோ பிளேயைத் தடுத்தல்,சிடி மற்றும் டிவிடிக்களை உருவாக்குவதைத் தடுத்தல் போன்ற பல வழிகள் காட்டப்படும்.இறுதியில் அனைத்து ஹார்ட் டிஸ்க்குகளும் மற்றும் இணைத்து எடுக்கக் கூடிய டிஸ்க்குகளும் பட்டியலிடப்படும்.இதன் எதிரே உள்ள பாக்ஸ்களில் டிக் செய்தால் அந்த ஹார்ட் டிஸ்க் மறைக்கப்பட்டுவிடும்.

7.அடுத்ததாக Feature Restrictions டேப் செல்லலாம்.இதில் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் மற்றும் மைக்ரோசாப்ட் ஆபீஸ் தொகுப்புகளில் குறிப்பிட்ட அளவில் தடை ஏற்படுத்தலாம்.இன்டர்நெட் பயன்பாட்டினையே தடை செய்யலாம்.அல்லது குறிப்பிட்ட தளங்களுக்கு மட்டும் செல்லும் வகையில் செட்டிங்ஸை அமைக்கலாம்.


8.எம்.எஸ்.ஆபீஸ் தொகுப்பினைப் பொறுத்த வரை விசுவல் பேசிக் புரோகிராமினை செயல் இழக்கச் செய்து விட்டால் இதில் வைரஸ் பாதிக்கும் வழிகளை அடைத்து விடலாம்.அதே போல Addin மெனுவைத் தடுத்து விட்டால் கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்கள் ஏற்கனவே இருக்கின்ற ஆட்-இன் வசதிகளை நீக்க முடியாது.புதிதாக எதனையும் சேர்க்கவும் முடியாது.

9.அடுத்து Blocked Programs என்ற டேப் செல்லலாம்.இதில் கிளிக் செய்தால் இடது பக்கம் உங்கள் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்துள்ள அனைத்து புரோகிராம்களின் பட்டியல் கிடைக்கும்.தடை செய்யப்பட வேண்டிய புரோகிராம்களுக்கு எதிரே டிக் செய்தால் அவை வலது புறம் மாறிவிடும்.அனைத்து புரோகிராம்களையும் தடை செய்திட வேண்டும் என்றால் Block All என்பதில் கிளிக் செய்திடலாம்.இன்ஸ்டால் செய்யப்பட்ட புரோகிராம் பட்டியலில் இல்லை என்றால் பிரவுஸ் செய்து அந்த புரோகிராமினைத் தேர்ந்தெடுத்து தடுத்து விடலாம்.

10.பிற யூசர்களுக்கு உண்டான தடையை செட் செய்து விட்டால் இந்த அமைப்பை சேவ் செய்து கொள்ளலாம்.பின் ஒரு நாளில் விண்டோஸ் தொகுப்பை ரீ இன்ஸ்டால் செய்திட வேண்டும் என்றால் மீண்டும் ஒருமுறை இந்தத் தடைகளுக்கான செட்டிங்ஸ் ஏற்படுத்தும் வேலையை மேற்கொள்ளாமல் அப்படியே மீண்டும் ஒரே கிளிக்கில் அமைத்துவிடலாம்.இதற்கு இந்த திரையில் கீழ் வலது மூலையில் உள்ள Export User என்ற லிங்க்கில் கிளிக் செய்து இந்த பேக் அப் எங்கு இருக்க வேண்டுமோ அந்த போல்டர் செல்ல வேண்டும்.பின் யூசர் நேம் மெனுவில் எந்த யூஸருக்கான தடைகளோ அதையும் தேர்ந்தெடுக்க வேண்டும்.அதன்பின் Save கிளிக் செய்து வெளியேற வேண்டும்.இப்படியே ஒவ்வொரு யூசருக்கும் தடைகளை செட் செய்து சேவ் செய்திடலாம்.

11.தனிப்பட்ட யூசர் அக்கவுண்ட்டில் தடை விதிப்பது மட்டுமின்றி சிலவற்றை வேறு எவரும் பயன்படுத்த முடியாதபடியும் தடை செய்திடலாம்.இதற்கு மெயின் செக்ஷனில் உள்ள "Global Computer Settings"பயன்படுத்த வேண்டும்.அதில் Set Computer Restrictions என்ற லிங்க்கை கிளிக் செய்திட வேண்டும்.விண்டோஸ் தொடங்குகையில் யூசர் அக்கவுண்ட்ஸ் திரை தோன்றுவதையும் மறக்கலாம்.இதற்கு 'Turn on the Welcome Screen' என்பதன் எதிரே உள்ள டிக் அடையாளத்தை எடுத்து விடலாம்.


12.பெரும்பாலான தடைகள் எல்லாமே நேரடியாக புரோகிராம்கள் மற்றும் சில வசதிகளைப் பயன்படுத்துவதை தடை செய்திடும் வகையில் அமைக்கப்படுகின்றன.ஒரு சில குறுக்கே புகுந்து தடுக்கும் வகையிலும் அமைகின்றன.எம்.எஸ்.ஆபீஸ் டாகுமெண்ட்கள் சிலவற்றை மற்ற யூசர்கள் பார்க்க முடியாத படி தடை அமைதிருப்போம்.ஆனால் இவற்றை இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரில் திறக்க முயற்சிக்கையில் தடைகள் ஒதுக்கப்பட்டு டாகுமெண்ட்கள் திறக்கப்படும்.எனவே இந்த வகை முயற்சிகளுக்கும் தடை விதிக்க ஸ்டெடி ஸ்டேட் இடம் தருகிறது.இதற்கென 'Prevent users from opening Microsoft Office Documents from within Internet Explorer' என்று ஒரு ஆப்ஷன் உள்ளது.இதனை இயக்கி செட் செய்தால் நாம் மறைத்திடும் டாகுமெண்ட்களுக்கு முழுமையான பாதுகாப்பு கிடைத்திடும்.

13.அப்டேட் பைல்கள் விண்டோஸ் சிஸ்டம் இயங்க மிக மிக முக்கியமானவையாகும்.இவற்றை அவ்வப்போது தானாக சிஸ்டம் அப்டேட் செய்திடும் வகையில் அமைத்திட வேண்டும்.இந்த வசதியினையும் ஸ்டெடி ஸ்டேட் தருகிறது.இதனுடைய மெயின் பேஜில் Schedule Software Update என்று இருப்பதில் கிளிக் செய்திடவும்.பின் அதில் 'Use Windows Steadystate to automatically download and instal updates' என்று இருப்பதில் கிளிக் செய்து இயக்கவும்.அங்கேயே இருக்கும் மெனுவில் எத்தனை நாட்களுக்கு ஒருமுறை விண்டோஸ் இந்த அப்டேட் பைல்களை செக் செய்து அப்டேட் செய்திட வேண்டும் என்பதனையும் செட் செய்திடலாம்.இதே போல அப்டேட் தேவைப்படும் மற்ற செக்யுரிட்டி புரோகிராம்களுக்கும்,ஆண்டி வைரஸ் போல,இதே போல் நாட்களை செட் செய்திடலாம்.


14.விண்டோஸ் ஸ்டெடி ஸ்டேட் புரோகிராமில் மிக மிக முக்கியமானது டிஸ்க் பாதுகாப்புதான்.மெயின் ஸ்க்ரீனில் உள்ள 'Protect the Hard Disk' என்பதில் கிளிக் செய்து இதனை மேற்கொள்ளலாம்.ஆனால் இதனைக் கவனமாகக் கையாள வேண்டும்.முழுமையாக ஒரு டிஸ்க்கை பாதுகாக்க அமைத்துவிட்டால் மை டாகுமெண்ட்ஸ் போல்டரில் எதுவும் சேவ் செய்திட முடியாது.எனவே அதற்கான வழிகளை நன்கு யோசித்த பின்னரே இந்த ஆப்ஷனைத் தேர்ந்தெடுத்து அமைக்க வேண்டும்.

நம் கம்ப்யூட்டரை மற்றவர்களிடமிருந்து காப்பாற்ற மைக்ரோசாப்ட் தரும் அருமையான புரோகிராம் விண்டோஸ் ஸ்டெடி ஸ்டேட் .இலவசமாக கிடைக்கும் இந்த புரோகிராமினை நம் பாதுகாப்பிற்கு பயன்படுத்துவது நல்லது.மேலே சொல்லப்பட்டிருப்பது மட்டுமின்றி இன்னும் பல பாதுகாப்பு வழிகளையும் இந்த புரோகிராம் தருகிறது.

ஒவ்வொரு நாட்டின் பெருமைகள் பற்றிய சில புகைப்படங்கள்




இந்தியாவின் பெருமை




பாகிஸ்தானில் பெருமை



பங்களாதேசின் பெருமை




ஜப்பானின் பெருமை

இந்தோனேசியாவின் பெருமை



ஆஸ்திரேலியாவின் பெருமை



ஹவாயின் பெருமை



சீனாவின் பெருமை





Read more: http://therinjikko.blogspot.com/2009/05/blog-post_4123.html#ixzz1B8ccf6LO

FIRST COMPUTER PROGRAMMER முதல் கம்ப்யூட்டர் புரோகிராமர்

கணினித் துறையின் உயிராதாரமான பணிகளில் ஒன்று மென்பொருள் (கணினியை இயக்குவதற்குத் தேவையான புரோகிராம்கள்) எழுதுவது. இந்த வேலையைச் செய்பவர்களை “கம்ப்யூட்டர் புரோகிராமர்” என அழைக்கின்றனர். உலகின் முதல் கம்ப்யூட்டர் புரோகிராமர் ஒரு பெண். அவர் “அடா பைரன் லவ்லேஸ்” (1816-1852).




புகழ்பெற்ற ஆங்கிலக் கவிஞரான பைரனின் மகள் இவர். மிகச்சிறந்த கணித அறிஞராகவும், இசைக் கலைஞராகவும் திகழ்ந்தார்.

தொடக்க கால கணிப்பீட்டுப் பொறிகளான அனலிட்டிக்கல் என்ஜின் மற்றும் டிஃபரன்ஸ் என்ஜினை வடிவமைத்தவர் சார்லஸ் பாபேஜ்.

தன்னுடைய 18 வயதில் பாபேஜ் உடன் சேர்ந்து பணியாற்றினார், அடா. பாபேஜ் “அனலிட்டிக்கல் என்ஜின்” வடிவமைப்பில் ஈடுபட்டபோது அதன் ஆற்றலை மற்றவர்களைவிட மிகச்சரியாக விளங்கிக்கொண்டார். அனலிட்டிக்கல் என்ஜினை இயக்கத் தேவையான புரோகிராம்களையும் எழுதினார்.

கணினிகள் மூலம் இசையமைக்க முடியும் என முன்னறிந்து கூறினார் அடா. கணினித்துறையில் நீங்காத இடம் பெற்றுள்ள இவர், தன்னுடைய 36 வயதில் புற்று நோய் காரணமாக உயிரிழந்தார்.

1970களின் பிற்பாதியில் அமெரிக்க அரசின் பாதுகாப்புத் துறை ஒரு கணினி மொழிக்கு “அடா” என பெயர் சூட்டி இவரைக் கௌரவித்தது.

நண்பர்கள் யாருமே இல்லையே என் கவலைப்படுபவரா நீங்கள்

சிலர் நன்கு படித்து,நல்ல பதவியிலிருப்பார்,ஏன் புத்திசாலிகளாகக் கூட இருப்பார். அனால், மற்றவர்களுடன் பழகத் தெரியாது.அதனால் இப்படிப்பட்ட நபர்களுடன் நட்பு பாராட்ட யாரும் முன் வருவதில்லை.உறவினர்கள்,நண்பர்கள்,உடன் பணியாற்றுவோர் என,நம் தினசரி வாழ்வில் பலரை சந்திக்கிறோம்.அவர்களுடனான நட்பு வலுப்பட வேண்டும் என்றால்,நமக்கு இனிமையாகப் பழகத் தெரிய வேண்டும்.மற்றவர்களுடன் பழகுவது என்பது ஒரு கலை;இனிமையாகவும் கலகலப்பாகவும் பழகும் ஒருவரிடம் எல்லோருமே இனிமையாகப் பழகத் துவங்குகின்றனர்.


கல்வி,அறிவு,திறமை,துணிச்சல் ஆகியவற்றைப் போன்றே வாழ்வின் வெற்றிக்கு மிக முக்கியமான குணமாக விளங்குவது பிறரிடம் பழகும் தன்மை.இன்று பல கம்பெனிகளில் வேலைக்கு விண்ணப்பித்தால் பாட சம்பந்தமான கேள்விகளை மாயும் கேட்டு உங்கள் அறிவை சோதிப்பதில்லை.உங்களது பேச்சு,பாடி லாங்குவேஜ்,ஆளுமைத் திறன் ஆகியவற்றோடு நீங்கள் மற்றவருடன் பழகும் தன்மை ஆகியவற்றையும் கண்காணிக்கின்றனர்.

அமெரிக்கா போன்ற நாடுகளில்,நீங்கள் ஒரு வேளைக்கு விண்ணப்பித்தால்,நிறுவனத்திலுள்ள முக்கியமானவர்களை பேட்டி காண செய்கின்றனர்.அதன்மூலம்,உங்களால் பிறருடன் எளிதாக பழக முடியுமா,அங்கிருக்கும் எல்லோருடனும் அவரால் ஒத்துப் போக முடியுமா என்றும் பார்க்கின்றனர் எனவே,பிறரிடம் பழகக் கற்றுக் கொள்ளுகள்,உறவுகளை வலுப்படுத்துங்கள்.அப்படி நாம் சந்திக்கும் நபர்களுடனான நட்பு வலுப்பட வேண்டுமென்றால்,நிச்சயமாக நாம் சில செயல்களை மேற்கொள்ள வேண்டும்.அப்போது தான் நம்முடன் பழக மற்றவர்கள் ஆர்வம் காட்டுவர்.பிறருடனான நமது உறவு வலுப்படும்.அப்படி என்ன செய்ய வேண்டும் என்று கேட்கிறீர்களா?
சொற்களை நயமாகவும்,இனிமையாகவும் கையாள வேண்டும்.அதாவது சொற்களை பொறுக்கி எடுத்து பேச வேண்டும்.வாழ்க்கையில் முன்னேறிச் செல்பவர்களை கவனித்தால், அவர்கள் சொற்களை நன்றாக கற்று,அவற்றைச் சரியாக பயன்படுத்துவதை காணமுடியும்.மேலும்,சொல்லின் அழகை வெளிக் கொண்டு வருவதோடு,அவற்றை தூண்டி இயக்கக் கூடிய தன்மையையும் சரியாகப் பயன்படுத்துவர்.அடுத்து,நம்மில் பலரும் நாம் என்ன பேசினாலும்,அதை மற்றவர்கள் அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.அப்படி இல்லாமல்,எதிர்மறையான கருத்துகளையும் முக மலர்ச்சியோடு ஏற்றுக் கொள்ள வேண்டும்.

மேலும்,மற்றவர்களோடு பேசும் பொது,நம் கருத்தை மட்டுமே கூறிக் கொண்டு இருக்கக் கூடாது.மற்றவர்களையும் பேசவிட வேண்டும்.அப்போது தான் அவருடைய கருத்தும் தெரிய வரும்.அப்படி மற்றவர்களுக்கு வாய்ப்பளிக்காமல் நாம் மட்டும் பேசிக் கொண்டே இருந்தால்,கேட்பவருக்கு எரிச்சல் தான் வரும்.விளைவு,நம் கருத்து சரியாக இருந்தால் கூட,அதை கேட்கக் கூடாது என்ற நிலைக்கு அவர் வந்துவிடுவர்.மேலும்,உங்களின் இந்த குணம் இருவருக்கும் இடையே உள்ள உறவை பாதிக்கும்.எனவே,பேசுங்கள்,பேச விடுங்கள்.

இன்டர்நெட் எக்ஸ்பளோரர் உபயோகித்தால் கணினிக்கு ஆபத்து

கூகிள் சமீபமாக எடுத்த கணக்கெடுப்பின் படி, 52.4 சதவீத இண்டர்நெட் எக்ஸ்பளோரர் உபயோகிப்பாளர்கள் ஆன்லைன் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர் என்கிறது. ஏனெனில், இன்டர்நெட் எக்ஸ்பளோரர், ஃபயர்ஃபாக்ஸை போல அடிக்கடி அப்டேட் ஆவது இல்லை. ஆகையால், தினம் தினம் புதிதாய் உருவாகிடும் வைரஸ் / செக்குரிட்டி ஹோல்களிடமிருந்து, இந்த இன்டர்நெட் எக்ஸ்பளோரரால் அதனையும் கணினியையும் பாதுகாத்து கொள்ள முடிவதில்லை. மேலும் பல வைரஸ்/ட்ரோஜன் புரோகிராம்கள் இன்டர்நெட் எக்ஸ்பளோரரில் மட்டுமே செயல்படும் என்பது கூடுதல் அதிர்ச்சி தரக்கூடிய செய்தி. கீழே உள்ள படத்தைப் பாருங்கள், உங்களுக்கே புரியும்.


ஆதாரம் & மூலம்: 
கூகிள் வலைப்பூ.
இணைய உலாவியில், ஃபயர்ஃபாக்ஸ் முதலிடத்தையும், இண்டர்நெட் எக்ஸ்பளோரர் கடைசி இடத்தையும் பிடித்திருப்பதைப் படத்தில் பார்க்கலாம். ஆகையால், கூகிள் ஃபயர்ஃபாக்ஸைத் தத்தெடுத்து பரப்பி வருகிறது.
ஃபயர்ஃபாக்ஸின் நன்மைகள்:

1) Tabbed Browsing

பத்து இணைய தளம் திறக்கும் போது, தனித்தனி திரையாக திறக்காமல், ஒரே திறையில் பல Tab-களில் திறக்கலாம்.

2) 
Popup Blocking - சில இணையதளங்கள் திறந்திடும் போது அதனுடன் ஒன்றிரண்டு பாப் அப் திறை தேவையில்லாமல் திறந்து தொல்லை கொடுக்கும். ஃபயர்ஃபாக்ஸ் பாப் அப் திறைகளை தனிச்சையாக தடுத்திடும்.

3) மாதம் ஒரு முறை 
அப்டேட் ஆகிவிடும்.

4) 
Easy History cleaner - ப்ரொவ்ஸிங் ஹிஸ்டரியை அழிக்க தனி மென்பொருள் தேவை இல்லை. ஃபயர்ஃபாக்ஸ் மூடிடும் போது அனைத்து ஹிஸ்டரி, குக்கீ அழியும் படி செட்டிங்கை மாற்றி கொள்ளலாம்.

5) 
Integrated Search Engine - கூகிள், யாகூ, லைவ், ஆகிய தேடு பொறிகள் ஃபயர்ஃபாக்ஸிலேயே இருக்கும்.

6) 
Download Manager - கோப்புகள் தரவிறக்கம் ஆகி கொண்டிருக்கும் போது, இணையத் தொடர்பு துண்டித்துப் போனால் கூட இணைப்பு வந்தவுடன் தொடர்ந்து தரவிறக்கம் செய்யும்.

7) 
Add-On - இத்தனைக்கும் மேலாக, ஃபயர்ஃபாக்ஸை உங்களுக்கு ஏற்றாற் போல அமைத்துக் கொள்ளலாம். உதாரணமாக, இந்த பக்கதில் இருக்கும் ஆட்-ஆனை நிறுவினால், உங்கள் ஃபயர்ஃபாக்ஸ் முழுவதும் தமிழில் மாறிவிடும்.

இன்னும் பல நன்மைகள் உள்ளன. ஒருமுறை உங்கள் கணினியில் நிறுவி பாருங்கள், உங்களுக்கே தெரியும் பல வித்தியாசங்கள்.

இன்டர்நெட் டவுண் ஆனால்

இன்டர்நெட் இணைப்பு எப்போது கட் ஆகும்;மீண்டும் எப்போது வரும் எனச் சொல்ல முடியாது.பொதுவாக இது போல கட் ஆனால்,உடனே கம்ப்யூட்டரை ரீபூட் செய்து பார்க்கிறோம்.



நமக்கு இன்டர்நெட் சர்வீஸ் வசதி தரும் நிறுவனத்தைத் திட்டித் தீர்க்கிறோம்.கட்டிய காசு தீர்ந்தவுடன் முதலில் இவனை மாற்றினால் தான் நிம்மதி என்கிறோம்.இருப்பினும் கீழ்க்காணும் விசயங்களையும் செய்து பார்க்கலாமே!
  1. வேறு எதனையும் செய்வதற்கு முன்னாள்,உங்கள் மோடத் தினை மீண்டும் ரீபூட் செய்திடுங்கள்.ஒன்றுமில்லை,அதற்கு வரும் மின்சக்தியை நிறுத்தி சில நொடிகள் களைத்து மீண்டும் ஆன் செய்திடுங்கள்.பின் உங்கள் ரூட்டரை ஆன் செய்ிடுங்கள்.
  2. உங்களுக்கு ரூட்டர் வழி இணைப்பு இல்லை என்றால் கம்ப்யூட்டரை ரீபூட் செய்திடுங்கள்.அதன் பின் கேபிள் மோடத்தினை பூட் செய்திடுங்கள்.
  3. மோடத்தில் விளக்குகள் எரிந்து டேட்டா பரிமாற்ற விளக்குகள் சிமிட்டத் தொடங்கினால் இன்டர்நெட் இணைப்பு வந்து விட்டது என்று பொருள்.அனைத்து விளக்குகளும் எரியவில்லை என்றால் உங்கள் இணைப்பிற்கான கேபிள்கள் அனைத்தும் சரியாகப் பொருத்தப்பட்டிருப்பதனை உறுதி செய்திடுங்கள்.அதன் பின் உங்களுக்கு இணைப்பு தந்துள்ள நிறுவனத்தின் கஸ்டமர் சர்விஸ் எண்ணுக்கு போன் செய்திடுங்கள்.அதற்கு முன் அவரிடம் எது போன்ற குறை சொல்ல வேண்டும் என்பதைத் தீர்மானித்து வைத்துக் கொள்ளுங்கள்.
  4. புதிய பிரவுசர் விண்டோ ஓன்று திறந்து கொள்ளுங்கள்.பின் www.dinamalar.com என்று தள முகவரி கொடுத்துப் பாருங்கள்.தினமலர் வெப்சைட் கிடைத்தால்,நல்லது.இல்லை என்றால் தொடர்ந்து படியுங்கள்.
  5. ஸ்டார்ட் ரன் அழுத்தி பாக்ஸில் cmd என டைப் செய்து என்டர் தட்டவும்.உங்கள் திரையில் கருப்பு பாக்ஸில் டாஸ் இயக்கம் கிடைக்கும்.அங்கு துடிக்கும் கர்சரில் Ipconfig/all என டைப் செய்திடுங்கள்.உங்களுடைய default gateway மற்றும் DNS Servers அறிந்து கொள்ளுங்கள்.பின் இவற்றிற்கு கட்டளை கொடுத்துப் பாருங்கள்.பதில் கிடைக்கிறதா?
  6. இவை அனைத்தும் உங்கள் இணைப்பைத் தராவிட்டால், traceroute எனக் கொடுத்துப் பார்த்தால் எங்கு பிரச்சனை ஏற்பட்டு இணைப்பு அறுந்து போகிறது என்று தெரியும். traceroute என்பது ஒரு கட்டளைச் சொல்.உங்கள் கம்ப்யூட்டரில் இருந்து தகவல்கள் ஒரு பாக்கெட்டாக எங்கு எங்கு செல்கின்றன என்று காட்டச் சொல்லும்.ஒரு கட்டளை.traceroute எனக் கொடுத்து பின் ஒரு ஸ்பேஸ் கொடுத்து உங்களுக்குச் சிக்கலைத் தரும் தளத்தின் முழு முகவரியை தர வேண்டும்.பொதுவாக ஒரு தளம் கிடைக்கவில்லை என்றால் இது போல traceroute மற்றும் ping கட்டளைகள் கொடுத்துப் பார்த்து விட்டு பின் இன்டர்நெட் சேவை தரும் நிறுவனத்தைத் தொடர்பு கொள்ளுங்கள்.நிறுவனத்தின் சர்வரில் பிரச்சனை இருந்தால் அவர்கள் உடனே கவனித்துச் சரி செய்வார்கள்.

இளமை ஊஞ்சலாட வேண்டுமா

முகம்,சரும பகுதிகளில் சுருக்கம் விழுகிறதா? வயதான தோற்றம் தருகிறதா?.கவலையேபடாதீங்க;தினமும் தக்காளி சாப்பிடுங்க,போதும்;இளமை ஊஞ்சலாடும்!



அமெரிக்க நிபுணர் மார்க் பிர்க்மேகின் தலைமையிலான நிபுணர்கள் குழு,இது பற்றி ஆராய்ந்து புதிய உண்மைகளை கண்டுபிடித்துள்ளது.இவர்கள் வெளியிட்ட ஆய்வு அறிக்கையில் கூறியிருப்பது...

ஆப்பிள் மட்டுமல்ல;தக்காளியும் உடலுக்கு மிக நல்லது.தினமும் எந்த வகையிலாவது உணவில் தக்காளி சேர்த்துக் கொண்டால் போதும்,வயதான தோற்றமே தெரியாமல் இளமை நீடிக்கும்.முகத்தில் சுருக்கம் விழாது;சருமம் பளபளவென இருக்கும்.

தக்காளி சாப்பிட்டு வந்தால்,உடலில் "கொல்லெஜன்" என்ற ப்ரோட்டீன் உற்பத்தி அதிகரிக்கிறது.சருமம் சுருங்காமல் ,வழவழப்புத் தன்மை தருவது இந்த ப்ரோட்டீன் தான்.

நாம் சாப்பிடும் உணவுகளை ஜீரணம் செய்து,அவற்றில் இருந்து சத்துகளை பிரித்து பல உறுப்புகளுக்கும் அனுப்பும் வேலையை செய்வது,"மிடோசோன்ட்ரியா" என்ற செல் பகுதி தான்.வயதான தோற்றம் தெரியாமல் இருக்க இந்த செல் மிகவும் பயன்படுகிறது.தக்காளி சாப்பிட்டால் ,இந்த செல் வளர்ச்சி அதிகமாக இருக்கும்.

நம் உடலுக்கு ஆரோக்கியத்தை தருவதில் முக்கிய பங்காற்றுகிறது,"இக்டோபென்" என்ற,"ஆன்டி-ஆக்சிடன்ட்!" மார்பக புற்றுநோய் உட்பட பல வகை புற்றுநோய்கள் வராமல் தடுப்பதில் இதன் பங்கு அதிகம்.ஆண்களின் மலட்டுத்தன்மையை அறவே போக்குவதும் இதன் வேலை. தினமும் தக்காளி சாப்பிடுவதால் இந்த,"ஆன்டி-ஆக்சிடென்ட்"டும் அதிகரிக்கிறது.தக்காளியை பச்சையாக சாப்பிடுவதை விட சமைத்து சாப்பிடுவதில் தான் அதிக சத்துகள் கிடைக்கும்.மற்ற காய்கறிகள் போல சமைத்த பின் தக்காளியில் சத்துக்கள் குறைவதில்லை;அதனால்,உடலுக்கு முழு சத்துக்கள் கிடைக்கின்றன.

-இவ்வாறு ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

பாலூட்டும் தாய்மார்கள் கவனத்துக்கு

பாலூட்டும் தாய்மார்கள் வலி நிவாரணிகளை அதிகம் பயன்படுத்துவது குழந்தைகளுக்கு பெரும் ஆபத்தாய் முடியும் என எச்சரிக்கை செய்துள்ளனர் கனடா நாட்டு மருத்துவர்கள்.

கோடைன் எனப்படும் மருத்துவப் பொருள் அடங்கிய வலி நிவாரணிகளை அதிகம் உட்கொள்வது குழந்தைகளின் உடல் நலத்தைப் பெருமளவில் பாதிப்பதாக அவர்கள் நடத்திய ஆய்வு முடிவு ஒன்று தெரிவிக்கிறது.
இந்த வலி நிவாரணிகளை குறிப்பாக பிரசவ கால வலிகளிலிருந்து தப்புவிக்க தாய்மார்களுக்கு மருத்துவர்கள் பரிந்துரை செய்யும் மருந்தாகும் . அதிலும் குறிப்பாக அறுவை சிகிச்சை செய்து கொண்ட தாய்மார்களுக்கு இந்த மருத்து அத்தியாவசியத் தேவை என்பது குறிப்பிடத் தக்கது.

பாலூட்டும் தாய்மார்கள் தங்களுடைய உணவுப் பழக்கவழக்கம், மருந்து உட்கொள்தல் போன்றவற்றில் அதீத கவனம் செலுத்துவதுண்டு. ஏனெனில் உடலில் கலக்கும் வேதியல் பொருட்கள் பால் வழியாக குழந்தையின் உடலுக்குள் செல்கிறது என்பதே.
தாய்மாருக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தாத இந்தப் பொருள் குழந்தைகளுக்கு மூச்சுத் திணறல், உறுப்புகள் பாதிப்பு, மயக்கம் போன்ற பலவிதமான இன்னல்களை உருவாக்குகின்றது என்பதை இந்த ஆய்வு நிரூபித்திருக்கிறது.
தாய்மார்கள் தாங்கள் உட்கொள்ளும் மருந்து குழந்தையின் உடலுக்குள்ளும் பாயும் என்பதை கவனத்தில் கொள்ளவும், தேவையற்ற மருத்துகளைத் தவிர்க்க வேண்டுமெனவும் இந்த ஆராய்ச்சி எச்சரிக்கை செய்கிறது.


கோதுமை, ஓட்சில் புதைந்திருக்கும் மர்ம நோய்


ஒருவருக்கு ஒத்துக்கொள்ளும் உணவு, அடுத்தவருக்கு ஒத்துக் கொள்ளாது; அதுவே நோயின் அறிகுறியாகவும் இருக்கலாம். இப்படி புதையுண்டிருக்கும் கோளாறுகள் ஏராளம். படிப்படியாக
 இப்போது தான் நிபுணர்கள் ஆராய்ச்சியில் கண்டுபிடித்து வருகின்றனர். அப்படி ஒரு புதையுண்டிருக்கும் கோளாறு தான்



"செலியாக்' நோய்.


கோதுமை, ஓட்ஸ், பார்லி, கம்பு போன்ற தானியங்களில் செய்யப்பட்ட உணவுகள் கூட சிலருக்கு ஒத்துக்கொள்ளாது; அடிக்கடி வாந்தி, பேதி வரும்; மலச் சிக்கல்லில் ஆரம்பித்து, மவுத் அல்சர் முதல், சிறுகுடல் பாதிப்பு வரை பல தொந்தரவுகளை உருவாக்கும். இப்படி பல கோளாறுகளை தந்து, கடைசியில் உயிருக்கே ஆபத்து தரும் அளவுக்கு விசுவரூபம் எடுப்பது தான் "செலியாக்' நோய். குழந்தைகளுக்கு டைப் - 1 சர்க்கரை வியாதியையும் ஏற்படுத்துவது தான் இது தான் என்றும் சமீபத்தில் நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர்.


வருவது ஏன்?



கோதுமை போன்ற தானியங்களில், க்ளூடோன் என்ற ஒரு வகை ப்ரோட்டீன் உள்ளது. இது சிலருக்கு ஒத்துக்கொள்ளாது. அப்படிப்பட்டவர்களுக்கு இந்த தானியங்களில் கஞ்சி போட்டு குடித்தாலும், மற்ற உணவு வகைகளாக செய்து சாப்பிட்டாலும் உடனே பிரச்னை ஆரம்பித்துவிடும். ஆனால், இதற்கு காரணம், "செலியாக்' கோளாறு தான் என்று டாக்டர்களால் இதுவரை கண்டுபிடிக்க முடிந்ததில்லை. நடுத்தர வயதில் ஆரம்பித்தாலும், அறுபது வயதை தாண்டும் போதும் தான் விசுவரூபம் எடுக்கிறது என்கின்றனர் நிபுணர்கள்.




வந்து விட்டால்



இந்த பாதிப்பு வந்தால், சிறுகுடல் கடுமையாக பாதிக்கப்படும். அதன் சுவர்கள் அரிக்கப்படும்; அதனால், உணவு ஜீரணிப்பதும், வைட்டமின், கனிமச்சத்துக்களை பிரிப்பதும் இயலாமல் போய்விடும். அதனால், உடலில் எதிர்ப்புசக்தி அறவே அழிந்து பல்வேறு கோளாறுகள் ஏற்படும்.



கல்லீரல் பாதிக்கப்படும்; கீல்வாத மூட்டு நோய் வரும்; தைராய்டு கேன்சர் போன்றவை வரும். இவற்றுக்கு தான் டாக்டர் சிகிச்சை தருவாரே ஒழிய, தானிய உணவுகளால் தான் வந்தது என்பதையோ, "செலியாக்' என்பதையோ கண்டறிவது மிகவும் அரிது.



அறிகுறிகள் என்ன?



* ஜீரண சக்தி குறையும். கோதுமை உட்பட தானிய வகை உணவுகள் சாப்பிட்டால், ஏற்றுக் கொள்ளாது.



* வாயில் அல்சர் ஏற்படும்.



* லாக்டோஸ் ஏற்றுக்கொள்ளாமல் போவதால் கல்லீரல் பாதிப்பும் ஏற்படும்.



* உடல் உயரம் குறையும். மூட்டு வலி ஏற்படும்; உடல் எடையும் குறையும்.



* ரத்த சோகை ஏற்படும்; வயிற் றுக்கோளாறும் அடிக்கடி வரும்.



* மேற்சொன்ன அறிகுறிகள் வெளிப்படையாக தெரியாமல், லேசாக இருந்தாலும், தொடர்ந்து இருக்குமானால் செலியாக் தான்.



தடுக்க முடியாதா?



எந்த ஒரு கோளாறும் வராமல் தடுக்க வழியில்லாமல் இல்லை. அப்படி இதற்கும் தவிர்ப்பு வழிகள் இருக்கின்றன. மேற்கத்திய நாடுகளில், க்ளூடோன் ப்ரோட் டீன் இல்லாமல் உள்ள தானிய வகைகள் விற்பனை செய்யப்படுகின்றன. பாக்கெட்களில் , இது க்ளூட்டோன் ப்ரோட்டீன் இல்லாதது என்றே அச்சிட்டு விற்பனை செய்கின்றனர்.



ஆனால், இந்தியாவில் இந்த வசதி இல்லை. அதனால் தான் ஓசைப்படாமல், சமீப காலத்தில் பலருக்கு இந்த கோளாறு இருப்பதற்கான அறிகுறிகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் 40 லட்சம் பேருக்கு இந்த பாதிப்பு உள்ளது சர்வேயில் தெரியவந்துள்ளது.



டைப் - 1 டயபடீஸ்



குழந்தைகளுக்கு ஏற்படும் சர்க்கரை நோய்க்கு டைப் - 1 டயபடீஸ் என்று பெயர். இதற்கும், "செலியாக்' கோளாறுக்கும் தொடர்பு உள்ளது என்று மருத்துவ நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர். கல்லீரலில் உள்ள இன்சுலின் சுரப்பி, இன்சுலினை சுரக்கும் திறனை இழக்கிறது; அதனால் குழந்தைகளுக்கு இந்த நோய் வருகிறது. "குழந்தைப்பருவத்தில் செலியாக் நோய் தாக்குவதால், இது ஒரு மரபு நோய் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், உணவு மூலமாகத்தான் வருகிறதா, பரம்பரையாக இது தொடரும் பாதிப்பா என்பதை இன்னும் உறுதி செய்ய இயலவில்லை' என்றும் நிபுணர்கள் கூறியுள்ளனர்.



உணவில் தான் எல்லாம்



ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போலத்தான் செலியாக் கோளா றும். அதனால், உணவில் மாற்றத் தை கொண்டு வந்தாலே, அது வராமல் தவிர்க்க முடியும். எப்படி கொழுப்பு உணவுகளை ரத்த அழுத்த நோயாளிகள் தவிர்க்கின்றனரோ அதுபோல, க்ளூட்டோன் ப்ரோட்டீன் உள்ள கோதுமை உட்பட தானியங்களை தவிர்க்க வேண்டும்.



மேற்கத்திய நாடுகளில் உள்ளது போல, இந்தியாவிலும் க்ளூட் டோன் ப்ரோட்டீன் இல்லாத தானிய வகை உணவு பாக்கெட் களை விற்பனை செய்ய வேண் டிய நிலை எதிர்காலத்தில் வந்தால், இந்த நோய் பாதிப்பு பரவுவதை தடுக்க முடியும் என்பதும் நிபுணர்கள் கருத்து.



தெரியாமலேயே...



செலியாக் நோய் தான் என்று தெரியாமலேயே, வாந்தி பேதிக் கும், ரத்த சோகைக்கும் மற்ற அறிகுறி பாதிப்புகளுக்கும் சிகிச்சை பெறுகின்றனர். டாக்டர்களும் இப்போது தான் விழித்துக் கொண் டுள்ளனர். செலியாக் நோயை கண்டறிய துல்லியமான புதிய ரத்த பரிசோதனைகள் வந்துள்ளன. இதனால், இதன் பாதிப்புகளை ஆரம்பத்திலேயே தடுக்க முடியும்.


முடியும், பிணத்தையும் பேசவைக்க முடியும்.

ஒரே ஒரு பெரிய சைஸ் ஊசியைப் போட்டால், செத்துப்போன பிணம் 10 நிமிடங்களில் எழுந்து விடும். அடுத்த அரை மணி நேரத்தில் சாப்பிடத் தொடங்கி "இப்ப நான் எங்கிருக்கேன்ப? என்று பேச ஆரம்பித்து வாக்கிங் கிளம்பி விடும். அதன் பிறகு மீண்டும் 60 வயசுக்கு ஆயுட் காலம்



இது புதிய ஹாலிவுட் படக்கதை அல்ல! உலகம் முழுக்க சோடாப்புட்டி கண்ணாடியை மாட்டிக் கொண்டு 100க்கணக்கான விஞ்ஞானிகள் இரவு, பகலாக பிணங்களுடன் தலையை பிய்த்துக் கொண்டிருக்கிற சர்வமகா நிஜம்!

மனித உடலில் எது ஊன மடைந்தாலும் செயற்கை கருவி, பைபாஸ் சர்ஜரி வரை சரி செய்து விட முடிகிறது. விலங்குகளின் குளோனிங், டெஸ்ட் டிïப் பேபி என பிறப்பின் ரகசியத்தைக் கூட நம்மவர்கள் கண்டு பிடித்து விட்டார்கள். ஆனால், ஆதாம்-ஏவாள் காலம் முதல், உயிர் பிரிவதை மட்டும் ஒருவராலும் கண்டு பிடிக்க முடியவில்லை.

ஒரு வேளை, அப்படி கண்டு பிடித்து விட்டால்...ப வெரி சிம்பிள்! "இப்பத்தான் உங்களை நினைச்சேன். ஆயுசு ஆயிரம் சார் என்று சொல்ல வேண்டியதிருக்கும்

உலக விஞ்ஞானிகள் நடத்தி வரும் பகீர் ஆராய்ச்சி களை ஹார்ட் அட்டாக் வராத வகையில் சர்வ ஜாக்கிரதையாக மேலும் படிக்க ஆரம்பியுங்கள்.

அமெரிக்காவைச் சேர்ந்த பிலிக்கர் என்பவரது புகைப் படங்கள் தாம் உலகம் முழுக்க உள்ள விஞ்ஞானிகளை மரணத்தை வெல்ல முடியும் என்று உஷார் படுத்தியது. ஏராளமான விலங்குகளின் ஆவி பிரிவதை கடைசி நொடிகளில் கிளிக் செய்து வைத்திருக்கிறார் பிலிக்கர்

இவரது கூட்டாளியான விஞ்ஞானி பி.டபுள்ï போத்தா "கண்ணுக்குத் தெரியும் இந்த ஆவியை ஒரு டெஸ்ட் டிïப்பில் பிடித்து விட்டால் போதும். அக்குவேறு, ஆணி வேறாக ஆராய்ச்சி செய்து மரண ரகசியத்தை கண்டு பிடித்து விடுவோம் என்கிறார்.

வாஷிங்டன், டகோமாவில் உள்ள ஐ.ஏ.என்.டி.எஸ் எனப்படும் இன்டர்நேஷனல் "அசோசியேகன் பார் நியர் டெத் ஸ்டடீஸ் என்ற அமைப்பு மரணங்களைப் பற்றி ஆராய்ச்சி செய்து வருகிறது. டாக்டர் ஜெப் தலைமையில் பலர் இதன் உறுப்பினர்களாக இருக்கி றார்கள்.

இவர்களுக்கு வேலைப யாராவது சாகப் போவதாக கேள்விப்பட்டால் அவருடன் கடைசி வரை இருந்து, கண்காணித்து, ஆராய்ச்சி செய்வது 

தான்!வயிற்றுவலி முதல் ஹார்ட் அட்டாக் வரை மருந்து கண்டுபிடித்த நாம் மூளைச்சாவுக்கும் மருந்து கண்டுபிடிப்பது அவசியம் என்கிறார்கள் இவர்கள். 

சாவுபஎன்பது ஒருசாதா ரண நிகழ்வு. தேவையில்லா மல் இதன் மீது நமக்கு பீதி ஏற்பட்டு விட்டதுபமரணத் திற்கு முன்னதாக முது மைக்கு மருந்து கண்டு பிடிக்க வேண்டும் என்பது இவர்களது கருத்து.

இங்கிலாந்தைச் சேர்ந்த டாக்டர் மிக்கேல் சபோம் நான் மரணத்துக்கு மருந்து கண்டு புடிச்சுட்டேன் என்று கத்துகிறார்! ஒருவரது மரணம் எப்போது தள்ளிப் போனதோ, அப்போதே மரணத்தை வென்று விட்டதாகத்தான் அர்த்தம். வேண்டுமானால் இது தொடக்கமாக இருக் கலாம் என்கிற அவர் பாம் ரெனால்ட்ஸ் என்கிற சாகக் கிடக்கிற பெண்மணிக்கு உயிர் பாலித்தவர்.

இருதயமும், மூளையும் முற்றிலும் செயலிழந்து பெரிய, பெரிய டாக்டர்களால் கைவிடப்பட்டு, உடல் டெம்ப ரேச்சர் 60 டிகிரிக்கும் குறை வான பாம் ரெனால்ட்சை தனது நவீன அறுவைசிகிச்சை மூலம் உயிர் பிழைக்க வைத்தி ருக்கிறார் மிக்கேல்.

முழுவதுமாக மரணித்துப் போன எனது மூளையில் முதன் முதலாக ஒரு சின்ன சத்தத்தைக் கேட்டேன். புர்ர்ர்ர்... என்ற அந்த சத்தம் தான் மெல்ல எனக்கு உயிர் கொடுத்தது. சர்வ நிச்சயமாக நான் மரணத்தை உணர்ந்து திரும்பியிருக்கிறேன் என்கிறார் பாம் ரெனால்ட்ஸ்.

இவர்களைப் போலவே கெவின் வில்லியம்ஸ், பெத்தார்ட்ஸ் பெட்டி, ஆன்டர்சன் ஜார்ஜ், சிட்டிசன் ஹெரால்டு, டர்ட் சார்லஸ், என உலகம் முழுவதும் ஏகப் பட்ட விஞ்ஞானிகள் நீண்ட காலமாக ஆராய்ச்சி செய்து வருகிறார்கள்.

உயிர் பிரியும் போது வலிக்குமாப வலிக்காது என்கிறார்கள் இவர்கள் ஒட்டு மொத்தமாக! உடல் உபாதை களால் ஏற்படுவது தான் வலியே தவிர, மரணத்துக்கு வலி கிடையாது என்கிறார் கள்.

செத்துப்போன உடலை ரோபோ போல் நவீனபபஎந் திரங்கள் மூலம் இயங்க வைக்க முடியுமாபபஎன்ற நம்பிக்கையில்பகடந்தப18 ஆண்டுகளாகபபநூதன தயாரிப்புகள் மூலம் போராடிக் கொண்டிருக்கி றார் டாக்டர் பி.எம்.எச். அத்வதார் என்பவர். 

இதெல்லாம் நடக்கிற விஷயமா டாக்டர்பஎன்றால், "எதையும் கண்டுபிடிக்கப்படு வதற்கு முன்னால் நம்புவது கஷ்டம் தான் ரெயில், விமானம், செல்போன்களை எல்லாம் நீங்கள் நம்பவா செய்தீர்கள் என்கிறார்.

இந்த அதிர்ச்சி விஞ்ஞானி கள் உடற்பயிற்சி, உணவு முறை, ஆரோக்ய வாழ்க்கை மூலம் மனித வாழ்வை நீட்டிக்க முடியுமாப என்பது பற்றியும் இயற்கை ரீதியிலான ஆராய்ச்சி செய்யவும் தவற வில்லை. ஒரு சிலரால் மட்டும் எப்படி 110 வயது வரை வாழ முடிகிறதுப என்கிற கேள்விக் குறிக்கும் இவர்கள் ஒருபுறம் விடை தேடிக் கொண்டிருக் கிறார்கள்.

"கடைசி மூச்சு வரை மருத்துவ கருவிகளை கண்டு பிடித்து விட்ட விஞ்ஞானி களின் அருமை பற்றி உங்க ளுக்குத் தெரியவில்லை. நிச்சயம் ஒரு நாள் மரணத்தின் சூட்சுமம் வெளியே தெரிய வரும் என்கிற ரஷ்யவிஞ் ஞானி ஆன்ஸ்டின்பெராக் வெளி உலகுக்கு தெரியாமல் வேறொரு ஆராய்ச்சி நடத்தி வருகிறார்.

இறந்து போன பிணங் களுக்கு ஊசி போட்டு, உடலைப் பிரித்து உள்ளுக்குள் மருந்து, மாத்திரைகளை வைத்து தைத்து, நவீன கருவி கள் மூலம் எலக்ட்ரிக் ஷாக் கொடுத்து, என்றாவது ஒரு நாள் இது எழுந்து நடமாடும் என்கிற ரீதியில் கடந்த 20 ஆண்டுகளாக இருட்டுக் கூடத்திலேயே தனது பகல் வாழ்க்கையையும் கழித்து வருகிறார்.

இவர்கள் சொல்வதைப் போல் ஒரு வேளை உயிர் ரகசியம் கண்டு பிடிக்கப்பட்டு விட்டால்... பூமி பிதுங்கி வழியும் ஜனத்தொகை, அத்தனை பேருக்கும் உணவு, இருப்பிடம் குடிதண்ணீர் வசதி என மேலும் எழும் ஆயிரக்கணக்கான பூலோக பிரளயங்களுக்கு மேலும் நாம் விடை தேடவேண்டிய திருக்கும்.

"அடேங்கப்பா! இப்பவே கண்ணைக் கட்டுதே!

87வயசு வரை வாழலாம்

ஐக்கிய நாடுகள் சபை சார்பில் உலகமக்கள் தொகை ஆய்வு அமைப்பு 2050-ம் ஆண்டில் மக்கள் தொகை பற்றி ஒரு ஆய்வு செய்துள்ளது.

இது பற்றிய அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

வரும் 2050-ல் உலக மக்கள் தொகை 920 கோடியாக இருக்கும். அமெரிக்கர்களின் இப்போதைய சராசரி வாழ்நாள் 77.5 ஆண்டுகள் ஆகும். இந்தியர்களின் வாழ்க்கை காலம் 64.7 ஆண்டுகள் முதல் 75.5 ஆண்டுகள் வரை.

2050 ஆண்டு வாக்கில் இந்தியர்களின் வாழ்நாள் இன்னும் 11 ஆண்டுகள் அதிகரிக்கும்.

இந்தியாவில் இப்போது 80 வயதை தாண்டியவர்கள் 78 லட்சமாகவும், 65 வயதை தாண்டியவர்கள் 7 கோடி பேரும், 60 வயதை தாண்டியவர்கள் 33 கோடியாகவும் உள்ளனர். இவர்கள் முறையே வருகிற 2050 ஆண்டில் 5 கோடியே 20 லட்சம் பேர், 24 கோடி பேர், 85 கோடி பேராக இருப்பார்கள். இது மிகவும் ஆபத்தான விஷயமாகும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது


Read more: http://therinjikko.blogspot.com/2009/04/blog-post_4065.html#ixzz1B7ZlP2YA

3ஜி சேவைக்கு தடை

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் மற்றும் டாடா டெலிசர்வீசஸ் நிறுவனங்கள் தாங்கள் வழங்கி வரும் 3ஜி சேவையினை நிறுத்தி வைக்க வேண்டும் என அரசு கடிதம் எழுதியுள்ளது.



பாதுகாப்பு விதிகளை இவை மீறுவதனைக் கண்காணிக்க இயலவில்லை எனக் காரணம் காட்டப்பட்டுள்ளது. இந்த இரண்டு நிறுவனங்களும் இச்சேவையை வழங்கிய முதல் தனியார் நிறுவனங்களாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

ரிலையன்ஸ் சென்ற வாரம் இந்த சேவையைத் தொடங்கியது. 3ஜி சேவையை வழங்கத் திட்டமிட்டு வரும் பாரதி ஏர்டெல் நிறுவனத்திற்கும் இதே போன்ற கடிதம் ஒன்றை அரசு அனுப்பியுள்ளது. அரசின் பாதுகாப்பு விஷயங்களைக் கவனித்துக் கொள்ளும் பிரிவினால், இந்நிறுவனங்கள் வழங்கி வரும் இந்த சேவையின் சில பிரிவுகளை, குறிப்பாக வீடியோ அழைப்புகளை, கண்காணிக்க முடியவில்லை என்பதால், இந்த ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிகிறது.

3ஜி சேவையில் வீடியோ அழைப்புகளே மக்களின் முதல் விருப்பமாக இருக்கின்றன. நிறுவனங்களும் இதனையே விரும்புகின்றன. இந்நிலையில் இந்த தடை விதிப்பு மக்களுக்கும் பெரும் ஏமாற்றத்தினை அளிக்கும்.

ஆனால் இந்தத் தடை பொதுத் துறை நிறுவனங்களான பி.எஸ்.என்.எல். மற்றும் எம்.டி.என்.எல். நிறுவனங்களுக்கு விதிக்கப் படவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. 3ஜி சேவை வழங்கும் உரிமத்திற்கென, தனியார் நிறுவனங்கள் ஏறத்தாழ ரூ. 51,000 கோடி செலுத்தியுள்ளனர்.

ரிலையன்ஸ் ரூ.8,585 கோடி செலுத்தி, 13 மண்டலங்களில் இந்த சேவையை வழங்க உரிமம் பெற்றிருந்தது




விநாடிக்கு 0 பைசா திட்டம் 0/SECOND PLAN

மொபைல் போன் சேவையில் அவ்வப்போது பல அதிரடி அறிவிப்புகளை நிறுவனங்கள் வெளியிட்டு வருகின்றன. இவை அனைத்தையும் தூக்கிச் சாப்பிடுவது போல, அண்மையில் வீடியோகான் மொபைல்ஸ் நிறுவனம்,விநாடிக்கு 0 பைசா என்ற திட்டத்தினைச் சென்ற செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்தியுள்ளது.



வீடியோகான் மொபைல் போனை வாங்குவோருக்கு, அதனுடன் வீடியோகான் நிறுவனத்தின் சிம் கார்டு வழங்கப்படுகிறது. இதனைப் பயன்படுத்தி ஒருவர், தினந்தோறும் குறைந்தது 10 நிமிடங்களும், அதிகபட்சமாக 30 நிமிடங்களும் இலவசமாக எந்த நெட்வொர்க் எண்ணுக்கும் பேசலாம்.

அதன் பின்னர் பேசும் அழைப்புகளுக்கு, விநாடிக்கு ஒரு பைசா வசூலிக்கப்படும். வாங்கும் போனைப் பொறுத்து இந்த சலுகை மூன்று மற்றும் ஆறு மாதங்களுக்கு அளிக்கப்படுகிறது. இந்த திட்டம் தற்போது தமிழ்நாட்டில் மட்டுமே அமல்படுத்தப்பட்டுள்ளது.


இத்திட்டம் அடங்கிய ஏழு மொபைல் மாடல்களை, வீடியோகான் மொபைல்ஸ் விற்பனைக்கு வெளியிட்டு உள்ளது. வி 1676, வி 7400 மற்றும் வி 7500 ஆகிய மாடல்களை வாங்குவோர் மேலே குறிப்பிட்ட வகையில் தினந்தோறும் 30 நிமிடங்கள் வீதம் பேசலாம்.

இன்னொரு வீடியோகான் சிம் பயன்படுத்துபவர் எவருடனும், ஓர் ஆண்டு காலம், எவ்வளவு முறை வேண்டுமானாலும் இலவசமாகப் பேசலாம். வி 1404 மற்றும் வி 1428 ஆகிய மாடல் போன்களை வாங்குவோர் ஓர் ஆண்டிற்கு தினந்தோறும் 10 நிமிடங்கள் எந்த நெட்வொர்க் சேவையுடனும் பேசலாம்.

வி 202 மற்றும் வி 1292 மாடல்கள் வாங்குவோர் தொடர்ந்து ஆறு மாதங்களுக்குத் தினந்தோறும் 10 நிமிடங்கள் லோக்கல் காலாக, இலவசமாக எந்த போனுடனும் பேசலாம். தொடுதிரை, குவெர்ட்டி கீ போர்டு, கேண்டி பார் வடிவம் எனப் பலவகைகளில் இந்த போன்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.


வி 7500:

ஆண்ட்ராய்ட் சிஸ்டம், 3.5 ஜி இணைப்பு, வை-பி, ஜி.பி.எஸ்., உடன் 8 ஜிபி கார்ட், 5 எம்பி கேமரா, 3.2 அங்குல மல்ட்டி டச் கெபாசிடிவ் ஸ்கிரீன், 1230 mAh பேட்டரி இரண்டு, கார் சார்ஜர் ஆகியவை வழங்கப்படுகின்றன.


வி 7400:

ஆண்ட்ராய்ட் சிஸ்டம், 3ஜி இணைப்பு, வை-பி, 2.8 அங்குல ரெசிஸ்டிவ் திரை, 1150 mAh பேட்டரி ஆகியவை உள்ளன.


வி 1676:

இரண்டு சிம், 2.4 அங்குல திரை, உள்ளாக அமைந்த லவுட் ஸ்பீக்கர், 2 எம்பி கேமரா, ஜாவா, எட்ஜ், ஜி.பி.ஆர்.எஸ்., ரெகார்டிங் வசதியுடன் எப்.எம். ரேடியோ, 1000 mAh பேட்டரி, நிம்பஸ் மற்றும் ஆப்பரா மினி பிரவுசர் கொண்டது.


வி 1428:

இரண்டு சிம், 2 அங்குல திரை, வீடியோ ரெகார்டிங் வசதியுடன் விஜிஏ கேமரா, புளுடூத், எம்பி3 பிளேயர், 1800 mAh பேட்டரி ஆகிய சிறப்பு வசதிகள் உள்ளன.


வி 1404:

இரண்டு சிம், 1.8 அங்குல திரை, வீடியோ ரெகார்டிங் வசதியுடன் விஜிஏ கேமரா, எம்பி3 பிளேயர், எப்.எம். ரேடியோ, ஸ்டீரியோ ரெகார்டிங், எல்.இ.டி. டார்ச், 1800 mAh பேட்டரி ஆகிய சிறப்பு வசதிகள் கொண்டுள்ளது.


வி 1292:

இரண்டு சிம், எம்பி3 பிளேயர், 20மிமீ ஸ்பீக்கர், இரண்டு சிம், இரண்டு வண்ணங்கள் இணைந்த ஸ்லிம்மான வடிவம், பெரிய கீகள், ரெகார்டிங் உடன் எப்.எம். ரேடியோ, எல்.இ.டி. டார்ச் ஆகிய வசதிகள் கொண்டது.


வி 202:

1.5 அங்குல திரை, எப்.எம். ரேடியோ, எல்.இ.டி. டார்ச், 500 mAh பேட்டரி கொண்டது.

இந்நிறுவனத்தின் விற்பனைப் பிரிவு தலைவர் அன்கல் புன்கானி இது பற்றிக் குறிப்பிடுகையில், போன் மற்றும் சேவை என இரண்டு வழி செலவினைத் தவிர்த்து ஒரு முறை போன் பெற்றால், காசே இல்லாமல் மொபைல் போன் பயன்பாடு என்ற சலுகையை பயனாளர்கள் அனுபவிக்கலாம் என்றார்


Read more: http://therinjikko.blogspot.com/2011/01/0.html#ixzz1B7X9We4J