Saturday, December 10, 2011

ஏழாம் அறிவு VS வேலாயுதம் - ஒற்றுமையும் வேற்றுமையும்

1. இதுல வில்லன் சீனால இருந்து கிளம்பி வருவான்.. 

1. அதுல வில்லன் ஆப்கான்ல இருந்து கிளம்பி வருவான்..





2. இதுல Bio Weapon Use பண்ணி மக்களை கொல்லுவாங்க.

2. அதுல குண்டு வெச்சி மக்களை கொல்லுவாங்க.

3. இதுல முதல்ல சென்னைலதான் ஆரம்பிப்பாங்க..

3. அதுல இங்கேயும் சென்னை தான்.. ஆனா ஏரியா வேற

4. இதுல ஹீரோ சர்க்கஸ்காரர்

4. அதுல ஹீரோ பால்காரர்

5. இதுல ஸ்ருதி ஒரு Scientist.

5. அதுல ஜெனி ஒரு Reporter.

6. இதுல ஸ்ருதிதான் சூர்யாவுக்கு ' போதிதர்மர் ' யார்னு புரிய வெப்பாங்க.

6. அதுல ஜெனிதான் விஜய்க்கு ' வேலாயுதம் ' யார்னு புரிய வெப்பாங்க.

7. இதுல Senior Scientist ஒருத்தர் லஞ்சம் வாங்கிட்டு இந்தியா அழிக்க உதவி பண்ணுவாரு

7. அதுல உள்துறை மந்திரி லஞ்சம் வாங்கிட்டு இந்தியா அழிக்க உதவி பண்ணுவாரு.

8.இதுல லஞ்சம் 300 கோடி

8. அதுல லஞ்சம் 5000 கோடி

9. இதுல சூர்யா ஒரு சீன்ல ஸ்ருதியை யானை மேல கூட்டிட்டு போவாரு

9.அதுல விஜய் ஒரு சீன்ல ஜெனியை குதிரை மேல கூட்டிட்டு போவாரு

10.இதுல கடைசி Fight-ல சூர்யா சட்டை பட்டனை கழட்டி விட்டுட்டு சண்டை போடுவாரு..

10.அதுல கடைசி Fight-ல விஜய் சட்டையையே கழட்டிட்டு சண்டை போடுவாரு..

தமிழகப் பெண்களின் தாவணியை உருவி கேவலப்படுத்திய மலையாளிகள்.



முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தின் எதிரொலியாக தமிழகத்தில் சில மலையாளிகளின் கடைகள் தாக்கப்பட்ட செய்திகளைத் தமிழர்களாகிய நாம் சங்கடத்தோடு படித்திருப்போம். ஆனால், கேரள எல்லையில் வசிக்கும் கிராமப்புறத் தமிழர்கள் மீதும் கேரளத்துக்கு கூலி வேலைக்குச் செல்லும் பெண்கள் மீதும் சொல்லில் வடிக்க முடியாத வன்முறைகளை அரங்கேற்றி இருக்கிறார்கள் கேரளத்தைச் சேர்ந்தவர்கள்.

எல்லையில் இருக்கும் கிராமங்களில் இருந்து கேரளத்துக்கு தினமும் கூலி வேலைக்குச் செல்லும் தமிழர்கள் எண்ணிக்கை இருபதாயிரத்தைத் தாண் டும். குறிப்பாக, கேரளத்தில் இருக்கும் காபி, ஏலக்காய் எஸ்டேட்டுகளில் வேலை செய்யும் பெரும்பாலான தொழிலாளர்கள் தேனி, கம்பம், உத்தமபாளையம் பகுதிகளில் இருந்து சென்று வருபவர்கள்.

அதிகாலையில் எஸ்டேட்காரர்கள் அனுப்பும் வாகனங்களில் புறப்படும் இவர்கள், மாலையில் அதே வாகனங்களில் வீடு திரும்பிவிடுவது வழக்கம். இந்நிலையில், கடந்த டிச. 5-ம் தேதி இப்படிச் சென்ற வர்களை ஆங்காங்கே வழிமறித்த கேரளத்தைச் சேர்ந்த 'போராட்டக்காரர்கள்’ தமிழர்களை மோசமாகத் தாக்கியதுடன், தமிழகப் பெண்கள் மீது பாலியல் வன்முறையையும் அவிழ்த்து விட்டுள்ளனர்.


''அவங்களும் வேன்ல, ஜீப்லதான் வந்தாங்க. அச்சங்கோடு, மந்திப்பாறை, சேத்துக்குழினு அங்கங்க வழிமறிச்சுட்டாங்க. ஏன்டா... உங்க சோத்துக்கு நாங்க தண்ணி விட்டா, எங்க உசுருக்கே நீங்க உலை வைப்பீங்களான்னு கேட்க ஆரம்பிச்சு, தண்ணி வேணுமா... இந்தாங்கடா மூத்திரத்தைக் குடிங்கடான்னு எங்க மேலேயே...'' என்று சொல்ல ஆரம்பித்த அந்தக் கூலித் தொழிலாளியால் அதற்கு மேல் பேச முடிய வில்லை.

''எங்களை வரிசையா நிப்பாட்டி... ஒரு பள்ளிக்கூடத்துல அடைச்சு வெச் சுட்டாய்ங்க. அப்போ 500 பேருக்கு மேல நாங்க இருந்தோம்... பான்பராக், வெத்தலையை எங்க மூஞ்சி மேல துப்புனாங்க. 'இது, உங்க பொம்பள சி.எம். மேல துப்புறதா நினைச்சுத் துப்புறோம்’ன்னான் ஒருத்தன். வயசுப் பொண்ணுங்க சீலையைப் பிடிச்சு இழுத்து, இடுப்புல, மாருல... என்னால சொல்ல முடியலையே சாமீ'' என்று அலறினார் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர்.

தோட்ட வேலைக்குச் செல்வோரில் சிறுமிகளின் எண்ணிக்கை கணிசமானது. அவர்களைத் தனியாக நிறுத்தி, தாவணியை உருவிவிட்டு, மார்பின் மீது முகத்தைத் தேய்த்து செல்போனில் படம் எடுத்து இருக்கிறார்கள்.

''அண்ணா நாங்க அழுதாலும் அடிச்சாங்கண்ணா. அழறதை நிப்பாட்டிட்டு கேவினாலும் அடிச்சாங் கண்னா'' என்றாள் பன்னிரெண்டு வயது சிறுமி ஒருவள்.


''சப்பாத்து, வண்டிப்பெரியார், கட்டப்பனை, நெடுங்கண்டம்னு எல்லாப் பகுதியிலும் பிரச்னை. பெரிய கொடுமை என்னன்னா, கேரள போலீஸ் காரர்கள் பக்கத்துல இருக்கும்போதேதான் இத்தனை கொடுமையும் நடந்துச்சு. அதைவிடப் பெரிய கொடுமை... நூறடித் தூரத்துல நின்னு தமிழ்நாட்டு போலீஸ் இதை எல்லாம் பார்த்துக்கிட்டு இருந்துச்சு. யாராலும் ஒண்ணும் செய்ய முடியலை'' என்றார் கம்பம் எல்லையில் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர்.

ஆயிரக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டு இருக் கிறார்கள். அவர்களின் பெயரையும் நம்மிடம் சொன்னார்கள். அவர்களுடைய உயிர் பாதுகாப்பு கருதி பெயர்களை வெளியிட மாட்டோம் என்ற உறுதியுடன் இந்தச் சந்திப்பு நடந்தது. கம்பத்தைச் சேர்ந்த பேச்சியம்மாள் (37), கொடியம்மாள் (35) இருவரும் ''அய்யா... எங்க உசுரே போனாலும் பரவாயில்லை. இந்தக் கொடுமையை எழுதுங்க'' என்று துணிச்சலாக வாக்குமூலம் அளித்தார்கள். பேச்சியம்மாளை செருப்பால் அடித்திருக் கிறார்கள். கொடியம்மாளின் பின்புறத்தில் அச்சில் ஏற்ற முடியாத அசிங்கத்தை அரங்கேற்றி இருக்கிறார்கள். இந்தக் கொடுமையின்போது பலத்த காயங்களுடன் உயிர் தப்பியவர்களில் ஜீப் ஓட்டுநர் ஜெய சீலனும் ஒருவர். இவர் மீது சிறுநீர் கழித்து இருக்கிறார்கள்.

இந்தக் கொடுமைகளுக்குக் கொஞ்சமும் குறைவில்லாத கொடுமைகள் கேரள எல்லையை ஒட்டி இருக்கும் _ கேரள அரசின் ஆளுகைக்கு கீழ் இருக்கும் _ தமிழர்கள் வசிக்கும் கிராமங்களில் அரங்கேறி இருக்கின்றன (அந்த மக்களின் பாதுகாப்பு கருதி ஊர்ப் பெயர்கள் தவிர்க்கப்படுகின்றன).


அச்சங்கடைப் பகுதியில் கார்கள், ஜீப்புகள் எரிக்கப்பட்டன. வழியில் தென்பட்ட தமிழர்கள் பலர் தாக்கப்பட்டு இருக்கிறார்கள். கேரள செக் போஸ்ட்டில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கம்பம் அருகே உள்ள என்.டி. பட்டியைச் சேர்ந்த செல்வம் என்பவரின் கார் தீயிட்டுக் கொளுத்தப்பட்டு இருக்கி றது. தமிழர்களின் டீக்கடைகளும் நாசமாக்கப் பட்டன.

தமிழகத்தில் இருந்து கேரளத்துக்கு ஆட்களை ஏற்றிச் செல்லும் 300-க்கும் மேற்பட்ட ஜீப்புகள் அடித்து நொறுக்கப்பட்டு இருக்கின்றன. வாகனங் கள் தலைகுப்புறக் கவிழ்க்கப்பட்டதாக, வேலைக்கு ஆட்களை ஏற்றிச் செல்லும் கம்பத்தைச் சேர்ந்த ருக்மான் கூறினார். வண்டிப்பெரியாரில் ஐயப்பப் பக்தர்கள் வந்த வண்டியை மறித்து செருப்புமாலை போட்டிருக்கிறார்கள். கடைசி நிலவரப்படி தமிழகத்தில் இருந்து செல்லும் ஐயப்ப பக்தர்கள் உத்தமபாளையம் அருகில் உள்ள ராயப்பன்பட்டியில் உள்ள ஒரு ஐயப்பன் கோயிலில் வேண்டுதலை நிறைவேற்றி, ஊர் திரும்பிக்கொண்டிருக்கிறார்கள். மத்திய அரசும், தேசியக் கட்சிகளும் எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கின்றன வெட்கமே இல்லாமல்! 

கேரள எல்லையில் அரங்கேறிய அராஜகத்தை நேரில் சென்று விசாரித்துத் திரும்பி இருக்கிறது 'எவிடன்ஸ்’ அமைப்பின் உண்மை அறியும் குழு. 'எவிடன்ஸ்’ அமைப்பின் செயல் இயக்குநர் கதிரிடம் பேசினோம். ''ஆயிரக்கணக்கான தொழி லாளர்கள், குறிப்பாக பெண்கள் மீது ஒரு பெரிய வன்முறை நடத்தப்பட்டு இருக்கிறது. உயிர் பயம், அவமானம் தரும் அச்சுறுத்தல்... எல்லாவற்றையும் தாண்டி எங்களிடம் 37 பேர் வாக்குமூலம் அளித்து இருக்கிறார்கள். கொள்கைகள், சித்தாந்தம் என்றெல்லாம் பேசும் கம்யூனிஸ்டுகளும் காந்தியம் பேசும் காங்கிரஸ்காரர்களுமே இவ்வளவு அக்கிரமங்களையும் செய்திருக்கிறார்கள். கேரளக் காவல் துறையும் தமிழகக் காவல் துறையும் எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றிருக்கிறார்கள். இந்த விவகாரத்தில் தேசியப் பெண்கள் ஆணையமும் மனித உரிமை ஆணையமும் தானாக முன்வந்து விசாரணை நடத்த வேண்டும். கேரள எல்லையில் நடக்கும் அராஜகங்களைத் தடுக்க முடியாவிட்டால், மன்மோகன் அரசு பதவி விலக வேண்டும்'' என்றார் கதிர்!

இந்தப் பெண்கள் அடுத்த வருடமும் கடைவீதிக்கு வர முடியுமா?

காபூலில் ஒளிபரப்பாகும் டி.வி. நிகழ்ச்சிகளை பார்த்தால், ஆப்கானிஸ்தானில் நிலைமை தற்போது லேசாக மாறி இருப்பதைப் போல காணப்படுகிறது. பாராளுமன்ற கூட்ட நிகழ்வுகளை பெண்கள் ஆர்வத்துடன் பார்க்கிறார்கள். ஆணுக்கு சமமாக பெண்கள் அருகருகே அமர்ந்திருக்கிறார்கள். ஆண்களுடன் வாதாடவும் செய்கிறார்கள்.


என்னதான் பெண்கள் டி.வி.யில் தோன்றினாலும், தீக்குளித்த பெண்களின் (அல்லது தீக்குளிக்க வைக்கப்பட்ட பெண்கள்) பற்றிய செய்திகளும், நாட்டின் ஏதாவது ஒரு மூலையில் இருந்து தினமும் வந்து கொண்டுதான் இருக்கின்றன.

பெண்கள் மட்டும் அல்ல, அனைத்து ஆப்கானிஸ்தான் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த ஒரே வழி, கல்விதான் என்பதை கிட்டத்தட்ட அனைவருமே ஒப்புக் கொள்கிறார்கள். நீண்டகால யுத்தம், ஆப்கானில் ஒரு தலைமுறையையே கல்வி விஷயத்தில் பின்தங்க வைத்திருக்கிறது.

ஆப்கானிஸ்தானில் படித்தவர்கள் இருந்தார்கள். வெளிநாட்டு பல்கலைக் கழகங்களில் கற்றவர்கள் இருந்தார்கள். ஆனால், யுத்த காலத்தில் எல்லோரும் வெளி நாடுகளுக்கு சென்றுவிட்டார்கள். யுத்தம் நடைபெற்றபோது ஆப்கானைவிட்டு வெளியேறியவர்களில் மிகச் சிரிய சதவீதமானோரே, திரும்பி வந்திருக்கிறார்கள். மற்றையவர்கள் வெளிநாடுகளில் செட்டில் ஆகி விட்டார்கள்.

இதுதான், ஆப்கானில் படித்தவர்களுக்கான பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இப்போது நாடு ‘ஓரளவுக்கு’ சுமுகமான நிலையில் உள்ளதால், ஐ.நா.வின் கிளை அமைப்புகள் ஆப்கான் மக்களின் கல்வி விஷயத்தில் கவனம் செலுத்துகின்றன. பள்ளிக்கூடங்கள் கட்டுதல், பாட புத்தகங்களை அச்சடிப்பது, ஆசிரியர்களுக்கு ஆசிரியர்களே கற்றுக் கொடுப்பது, பெண்களுக்கான வகுப்புகளுக்கு ஏற்பாடு செய்வது போன்ற கல்வி பணிகளில் ஐ.நா.சபை ஈடுபட்டு வருகிறது.

ஆப்கானிஸ்தானில் தற்போது ஆண்களும் பெண்களுமாக 50 லட்சம் குழந்தைகள் படிக்கிறார்கள்.

கிராமப்புறங்களை காட்டிலும், நகர்ப்புறங்களில்தான் அரிதான குழந்தைகள் பள்ளிக்கு செல்கிறார்கள். காபூல் நகரில் 85 சதவீத குழந்தைகள் பள்ளிக்கு செல்கிறார்கள். சில கிராமங்களில் 10 சதவீத குழந்தைகள்கூட பள்ளிக்கு செல்வதில்லை.

காபூல் நகரில் அதிகமான குழந்தைகள் படித்தாலும்கூட, இன்னமும் 60 ஆயிரம் குழந்தைகள் படிக்காமல், தெருவில் சுற்றிக் கொண்டு இருக்கிறார்கள். தெருவில் கூவி விற்பவர்களாகவும், குப்பை பொறுக்குபவர்களாகவும், பிச்சைக்காரர்களாகவும், ஏன் திருடர்களாகவும் கூட இவர்கள் திரிகிறார்கள்.

ஒவ்வொரு நாட்டிலும் இதுபோன்ற காட்சிகளை காணலாம். இது புதிதல்ல. ஆனால், இந்த எண்ணிக்கை ஆப்கானில் மிக அதிகமாக உள்ளது.

ஆப்கானிஸ்தான் என்றாலே, வெளிநாடுகளில் வசிப்பவர்களுக்கு மிகச் சில விஷயங்கள்தான் தெரியும். தெரிந்த விஷயங்கள் இவைதான்: தலிபான்களின் துப்பாக்கி ஆட்சி, கடுமையான இஸ்லாமிய சட்டங்கள், பெண்களுக்கு எதிரான அடக்குமுறை, தீவிரவாதம். போதை பயிர் உற்பத்தி.

அது, கடந்த 15 வருட கால ஆப்கானிஸ்தான். ஆப்கானிஸ்தானுக்கு வேறு ஒரு முகமும் இருந்திருக்கிறது.

ஆப்கானிஸ்தான் நாட்டை மன்னர்கள் முதல் கம்யூனிஸ்டுகள் வரை பலரும் ஆட்சி செய்துள்ளனர். பெண்களுக்கு எதிரான அடக்குமுறையை தீர்க்கவும், கல்வியை முன்னேற்றம் அடையச் செய்யவும், இவர்களில் பலர் முயற்சிகளை மேற்கொண்டும் இருந்திருக்கிறார்கள்.

மீண்டும் தலிபான்களிடம் நாடு வரும்போது...

1970களிலும் 1980களிலும் காபூல் நகரில் பெண்கள் சுதந்திரமாக நடமாடினார்கள். அதுவும் ‘பர்தா’போன்ற அங்கிகள் இல்லாமலேயே நடமாடி இருக்கிறார்கள். அப்போது பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள், அலுவலங்கள் ஆகியவற்றில்கூட, பெண்கள் வேலை செய்துள்ளனர். மேற்கத்திய நாட்டவர்களை போல ஆடை அணிந்திருந்தார்கள். வெளிநாடுகளுக்கும்கூட பெண்கள் சென்று வந்தார்கள்.

ஆப்கானை ஆண்ட கம்யூனிஸ்டுகள்கூட, தங்களது ஆட்சிக்காலத்தில் பெண்கள் உட்பட எல்லோருக்கும் கல்வி கற்க வாய்ப்பு கொடுத்தனர். ஆனால் சில மாகாணங்களில் இருந்த பழமைவாதிகள், “பெண்களுக்கு கல்வியா?” என்று எதிர்ப்பு தெரிவித்தனர்.

அதன்பின் தலிபான்கள் ஆட்சிக்கு வந்தார்கள்.

இந்த எதிர்ப்புக் குரல்கள் தலிபான்களிடம் நன்றாகவே எடுபட்டன. பழமைவாதிகளை பின்பற்றி பெண்களுக்கு பல கட்டுப்பாடுகளை தலிபான்கள் கொண்டு வந்தனர். ஆப்கானிஸ்தானில் உள்ள பெண்கள் பள்ளிக்கூடங்களை தலிபான்கள் குண்டு வைத்தும் இடித்தும் தகர்த்தனர்.

ஆசிரியர்களை தலிபான்கள் படுகொலை செய்தார்கள். குறிப்பாக மாணவிகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியைகளை கொன்று குவித்தார்கள். தலிபான்களின் ஆதிக்கத்தில் இருந்த ஆப்கானிஸ்தானின் தென்பகுதியில் மட்டும் மொத்தம் இருந்த 748 பள்ளிக்கூடங்களில் 380 பள்ளிக்கூடங்களை தலிபான்கள் தரைமட்டமாக்கி விட்டனர். இந்த 380 பள்ளிக்கூடங்களும் பெண்களுக்கானவை.

கடந்த (செப்டம்பர்) மாதம்கூட, கந்தகார் நகரில் பெண்கள் உரிமைக்காக பாடுபடும் மாகாண அலுவலக பெண் அதிகாரி ஒருவரை, தலிபான்கள் சுட்டுக் கொன்றனர். இந்த சம்பவத்தை அடுத்து, ஆப்கானிஸ்தானில் உள்ள தெற்கு மாகாணங்களில் உள்ள கிராமப் பகுதிகளில் பெண்களும், இளம் பெண்களும் இப்போது வீடுகளை விட்டு வெளியே வருவதற்கே பயந்துபோய் இருக்கிறார்கள்.

இதற்கெல்லாம் அமெரிக்காதான் காரணம் என்கிறார் தலிபான் தளபதி ஒருவர். 2001ம் ஆண்டுவரை தலிபான்களின் ஆட்சி பீடமாக விளங்கிய தெற்கு மாகாணங்களில் அமெரிக்க படையினர் நடத்திய தாக்குதலால்தான் எல்லாச் சிக்கல்களும் வந்தன என்று அவர் கூறுவது தலிபான்களின் கோணம்.

இந்தக் கோணம், “சமுதாயத்தில் பெண்களுக்கென விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை அமெரிக்கர்கள் மற்றுகிறார்கள். அதை ஆப்கான் பெண்களும் ஏற்று, சமூகத்தால் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை மதிக்காமல் வீட்டுக்கு வெளியேயும், பொது இடங்களிலும் நடமாடுகிறார்கள். அவர்களை மீண்டும் பழைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுசெல்ல சில கொலைகள் தவிர்க்க முடியாது உள்ளன” என்பதே.

ஆப்கானிஸ்தானில் வளர்ச்சிப் பணிகளில் இருந்து அமெரிக்கா ஒதுங்கத் தொடங்கிவிட்டது. மறு நிர்மாணப் பணிகளை கடந்த ஆண்டு நேட்டோ நாடுகளிடம் அமெரிக்கா ஒப்படைத்துவிட்டது. தற்போது பிரிட்டன், கனடா நாடுகளின் அமைப்புகள்தான் ஆப்கானில் நடைபெறும் புனரமைப்பு பணிகளை மேற்பார்வை பார்க்கிறார்கள்..

இதுதான், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடம்!

அமெரிக்காவின் படையெடுப்புக்கு பிறகு ஆப்கானிஸ்தானில் அந்நாட்டு குடிமக்கள், உள்நாட்டு கிளர்ச்சியாளர்கள், தலிபான்கள் என்று சுமார் 8000 பேர் பலியாகியுள்ளனர்.

தலிபான்களை தேடி அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகளின் தாக்குதல் ஒருபுறம், பாகிஸ்தான் ஆதரவுடன் தலிபான்கள் நடத்தும் தாக்குதல் இன்னொரு புறம் என்று ஆப்கான் அரசு திணறிக்கொண்டு இருக்கிறது.

ஆப்கானிஸ்தானில் இப்போது குளிர்காலம் தொடங்கப் போகின்றது. இதனால் போரிடுவதற்கு தலிபான்களுக்கு இது தருணமல்ல.

ஆனால் வசந்தகாலம் வந்துவிட்டால் போதும், தலிபான்கள் தங்களது வேலையை காட்ட ஆரம்பித்துவிடுவார்கள்.

அந்தச் சமயத்தில், அமெரிக்கா தனது படைகளை வாபஸ் வாங்கத் தொடங்கவுள்ளது.

நேட்டோ படைகள் உள்ளபோதே, பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகளை ஆதரிக்கும் தலிபான்கள், அதற்காக சில கொலைகளையும் செய்யும் தலிபான்கள், நேட்டோ படைகள் விலகியபின் சும்மா இருப்பார்களா?

“பெண்களுக்கு உரிமை என்பது அவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பது மட்டும் அல்ல. அவர்களை சமுதாயத்தில் சம அந்தஸ்துடன் வாழ விடுவது” என்று நேட்டோ படைகளின் பிரிட்டிஷ் தளபதி ஒருவர் கூறினார்.

இதைக் கூறிய பிரிட்டிஷ் தளபதி , அடுத்த ஆண்டு ஆப்கானிஸ்தானை விட்டு, பிரிட்டிஷ் படைகளுடன் வெளியேறிவிடுவார்.

முதல் இரவு ஐதீகம் ?



முதல் இரவு என்றாலே அன்று நிச்சயம் உடல் உறவு வைத்தாக வேண்டும் என்ற 'ஐதீகம்' நம்மிடம் உண்டு. முதலிரவு என்றாலே அது முதல் உறவுக்கான நாள் என்று பொதுவான எண்ணம் நிலவுவதே இதற்குக் காரணம். அன்று நாம் நிச்சயம் உறவு வைத்துக் கொண்டாக வேண்டும். இல்லாவிட்டால் மனைவியோ அல்லது கணவரோ தப்பாக நினைத்துக் கொள்வார்களோ என்ற பயமும் இதற்கு இன்னொரு காரணம்.

அதேசமயம் முதல் நாளிலேயே உறவு வைத்தாக வேண்டும் என்ற கட்டாயம் ஏதும் இல்லை. மன ரீதியாகவும் சரி, உடல் ரீதியாகவும் சரி முதலிரவு நாளன்று உறவு வைத்துக் கொள்வதில் சில சங்கடங்களை சந்திக்க நேரிடும் என்பதால் அன்றைய தினம் தவிர்ப்பது என்பதும் நல்ல விஷயம்தான் என்கிறார்கள் டாக்டர்கள்.

குறிப்பாக, பெற்றோர்கள் பார்த்து நிச்சயம் செய்யும் திருமணம் என்று வரும்போது, அந்த மணமகனும் சரி, மணமகளும் சரி அதற்கு முன்பு வரை பார்த்திருக்க மாட்டார்கள், பேசியிருக்க மாட்டார்கள், இருவருக்குள்ளும் நெருக்கமான நட்பு இருந்திருக்க வாய்ப்பு இல்லை. அப்படிப்பட்ட நிலையில் ஒருவிதமான இறுக்கமான மன நிலையுடன்தான் இருவரும் தனியறையில் சந்திக்கிறார்கள். எனவே முதலில் இருவருக்குள்ளும் இருக்கும் இடைவெளியை இட்டு நிரப்பி, அன்னியோன்யத்தை ஏற்படுத்திக் கொள்ள இந்த முதலிரவைப் பயன்படுத்தலாம் என்பது டாக்டர்கள் மட்டுமல்லாமல், மன நல மருத்துவர்களின் அறிவுரையும் கூட.


மேலும், திருமண நாளன்று மணமகனும், மணமகளும் படு பிசியாக இருப்பார்கள். போட்டோவுக்குப் போஸ் கொடுப்பது, உறவினர்கள், நண்பர்களின் பாராட்டுக்கள், வாழ்த்துகளை ஏற்பது என்று பிசியாக இருக்கும் அவர்களிடம் நிறைய அசதிதான் மேலோங்கியிருக்கும். எனவே முதல் நாள் இரவை ஓய்வாக கழிப்பதும் நல்ல விஷயம்தான்.

இன்னொரு முக்கிய விஷயம், முதல் நாளன்றே உறவு கொள்ள ஆர்வப்பட்டு, அதில் ஏதாவது குழப்பமாகி, கணவனுக்கோ அல்லது மனைவிக்கோ, தனது பார்ட்னர் மீதான திறமை குறித்த அவ நம்பிக்கை வந்து விடும் வாய்ப்புகளும் நிறையவே உள்ளதால், முதல் உறவை, பதறாமல் பார்த்துக் கொள்வது நல்லது.

அது முதல் இரவோ அல்லது மூன்றாவது இரவோ, எதுவாக இருந்தாலும் உறவு என்பது மகிழ்ச்சிக்குரிய ஒன்று என்பதை யாரும் மறந்து விடக் கூடாது. இருவரும் இணைந்து தொடங்கப் போகும் இல்லற வாழ்க்கையில், செக்ஸ் மட்டும்ல்லாமல் அதையும் தாண்டி நிறைய விஷயங்கள் உள்ளன. எனவே அனைத்தையும் சிறப்பாக தொடங்க அருமையான, அழகான அடித்தளம் தேவை. அதை ஆற, அமர திட்டமிடுவதில் தவறு இருக்க முடியாது.

அதற்காக முதலிரவு நாளன்று, படுக்கை அறையில் உட்கார்ந்து கொண்டு, அங்க பிளாட் வாங்கலமா, இங்க வீடு கட்டலாமா, எந்தக் கார் வாங்கலாம் என்ற ரீதியிலான ஆலோசனைகளில் மட்டும் தயவு செய்து குதித்து விடக் கூடாது.

செக்ஸ் உறவு என்பது இருவருக்கும் இடையிலான அன்னியோன்யத்தைப் பொறுத்தது என்பதால், இருவரது மனங்களும் ஒன்றாக இணைந்து, இன்பத்துடன் தொடங்குவது என்பது முக்கியமானது.

அதேசமயம், ஏற்கனவே அறிமுகமாகி, திருமணத்திற்கு முன்பே உடல் ரீதியாகவும் இணைந்து பின்னர் திருமணத்தில் ஐக்கியமாவோருக்கு இந்த காத்திருப்பு தேவைப்படாது.

அடிவயிற்றுக்குள் பட்டாம் பூச்சி படபடக்க முதலிரவு அறைக்குள் நுழையும்போது மனம் பூராவும் மகிழ்ச்சி சிறகடிக்கும். அந்த மகிழ்ச்சி இருவருக்குள்ளும் நீடித்து நிலைக்கும் வகையில், திருமண உறவு செழிப்பாக இருக்கும் வகையில், உங்களது முதல் உறவை அமைத்துக் கொண்டால்
சரிதான்.



ஹாஸ்டலில் தூக்குபோட்டு மாணவி தற்கொலை

புதுக்கோட்டை அருகே விடுதி அறையில் தூக்கு போட்டு நர்சிங் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகில் உள்ள வாணக் கன்காடு கிராமத்தில் வசிக்கும் சுப்புராமனின் மகள் கார்த்திகா(19). புதுக்கோட்டை சத்திய மங்கலம் அருகில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரி விடுதியில் தங்கி முதலா மாண்டு படித்து வந்தார். 

நேற்று நீண்ட நேரம் ஆகியும் கார்த்திகா தங்கியிருந்த அறை திறக் கப்படாமல் இருந்தது. சந்தேகமடைந்த வார்டன் அறையை திறந்து பார்த்தார்.

அப்போது கார்த்திகா தனது சுடிதார் துப்பட்டாவால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
இது குறித்து புதுக்கோட்டை திருக்கோகர்ணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் வழக் குப்பதிந்து கார்த்திகா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

2011 இல் அதிகம் பகிரப்பட்ட தகவல்களை வெளியிட்டது பேஸ்புக் நிறுவனம் -(படங்கள்) -2


உலகின் மிகப்பெரிய சமூக வலைத்தளமான பேஸ்புக் இவ்வாண்டில்

அதன் பாவனையாளர்களால் அதிகம் பகிரப்பட்ட டாப் தகவல்களை வெளியிட்டது. அவற்றின் 2ம் பகுதி இங்கே.

1. மழலை மொழியில் பேசும் இரட்டையர்கள்


2. பிலிப்பைன்ஸில் பிடிபட்ட பெரும் முதலை

நாகர்கோவில் - ரூ. 1 லட்சம் செலுத்தினால் மாதம் ரூ. 8 ஆயிரம் வரை கிடைக்கும் - ஆன்லைன் மோசடி

இது ஒரு செக்ஸ் வீடியோ அல்ல.


நாகர்கோவில் நேசமணி நகர் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர், ஆன்லைன் வர்த்தக மூலம் அதிக லாபம் சம்பாதிக்க முடியும் என விளம்பரம் செய்தார். ரூ. 1 லட்சம் செலுத்தினால் மாதம் ரூ. 8 ஆயிரம் வரை கிடைக்கும் என கூறினார். இதை நம்பி அவரிடம் ஏராளமானவர்கள் பணம் முதலீடு செய்தனர். பங்குகள் விற்பனை ஏற்றம், இறக்கத்துக்கேற்ப மாதந்தோறும் அளிக்கப்படும் தொகை மாறுபடும் எனவும் கூறி இருந்தார். அதன் மூலம் சுமார் ரூ. 1.25 கோடி வரை அவர் முதலீட்டாளர்களிடம் வசூலித்துள்ளார். 

பணத்தை பெற்று கொண்டு ஒரு சில மாதங்கள் அவர் கூறியது போன்று பணம் கொடுத்துள்ளார். அதன் பின்னர் பணம் கொடுக்க வில்லை. பணம் கொடுத்தவர்கள் தேடியபோது அவர் தலைமறைவாகி விட்டார். இது தொடர்பாக ஏற்கனவே நேசமணிநகர் பகுதியில் புகார் மனுக்கள் அளிக்கப்பட்டு இருந்தன. இந்த நிலையில் நேற்று வெள்ளமடம் பகுதியில் , நின்று கொண்டிருந்த அந்த வாலிபரை அவரிடம் ஏமாந்த முதலீட்டாளர்கள் சிலர் சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் அவரை பிடித்து நேசமணி நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது அந்த வாலிபர் டாலர், யூரோ போன்ற வெளிநாட்டு பணங்கள் மதிப்பு குறையும் போது என்னிடம் உள்ள ரூபாயை கொடுத்து அவற்றை வாங்கி வைத்து கொள்வேன். வெளிநாட்டு பணங்கள் மதிப்பு கூடும்போது, அதனை கொடுத்து நம் நாட்டு பணத்தை பெற்றுக் கொள்வேன். இதில் அதிக லாபம் கிடைக்கும் என்று கூறி பலரிடமும் பணத்தை பெற்றேன். இதனை நம்பி பலரும் பணம் செலுத்தினர். ஆனால் அவர்களுக்கு என்னால் பணத்தை திரும்ப கொடுக்க முடிய வில்லை என்றார். அவரிடம் நடந்த விசாரணையில் மேலும் பலருக்கு இந்த மோசடியில் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. இது பற்றி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே ஒரு கோடி ரூபாய்க்கு மேல் மோசடி தொகை இருப்பதால், இந்த வழக்கு குற்றப்பிரிவுக்கு மாற்றப்படும் என தெரிகிறது.

அயோத்தி ராமன் அழுகின்றான்

இணைக்க வேண்டும்
கர சேவகரே வருவீரா
காடுகள் மலைகள் திருத்த வேண்டும்
கர சேவகரே வருவீரா
வறுமைக் கோட்டை அழிக்க வேண்டும்
கர சேவகரே வருவீரா
மாட்டீர்கள் சேவகரே மாட்டீர்கள்
நாம் உடைப்பதற்கே பிறந்தவர்கள்
படைப்பதற்கில்லை
வித்துன்னும் பறவைகள்
விதைப்பதில்லை

விளைந்த கேடு
களைந்த காடு 
வெட்கக் கேடு
சுதந்திர இந்தியா
ஐம்பதாண்டு உயரத்தில்
அடிமை இந்தியன்
ஐநூறு ஆண்டு பள்ளத்தில்

ஏ நாடாளுமன்றமே
வறுமைக் கோட்டிற்குக் கீழ்
நாற்பது கோடிப் பேர் என்றாய்
அறிவுக் கோட்டின் கீழ்
அறுபது கோடிப் பேர்
அதை மட்டும் ஏன்
அறிவிக்க மறந்தாய்

மதம் ஓர் பிரம்மை
மதம் ஓர் அருவம்
அருவத்தோடு என்ன
ஆயுத யுத்தம்
மதம் என்பது ஓர்
வாழ்க்கை முறை, சரி
வன்முறை என்பது
எந்த முறை

கட்டிடத்தின் மீது எப்போது
கடப்பாரை விழுந்ததோ
அப்போதிருந்தே
சரயு நதி
உப்புக் கரித்துக் கொண்டு
ஓடுகிறது..
சீதை சிறைப் பட்டப்பின்
இப்போதுதான் ராமன்
இரண்டாம் முறை அழுகிறான்

மாண்பு மிகு மத வாதிகளே
சில கேள்விகள் கேட்பேன்
செவி தருவீரா

அயோத்தி ராமன்
அவதாரமா மனிதனா
அயோத்தி ராமன்
அவதாரமெனில்
அவன்
பிறப்புமற்றவன்
இறப்புமற்றவன்
பிறவாதவனுக்கா
பிறப்பிடம் தேடுவீர்

அயோத்தி ராமன்
மனிதனெனில்
கற்பத்தில் வந்தவன்
கடவுளாகான்
மனித கோவிலுக்கா
மசூதி இடித்தீர்

போதும்
இந்தியாவில்
யுகம் யுகமாய்
ரத்தம் சிந்தியாயிற்று
இனிமேல்
சிந்தவேண்டியது
வியர்வைதான்
நம் வானத்தை
காலம் காலாமாய்
கழுகுகள் மறைத்தன

போகட்டும்
இனிமேலேனும்
புறாக்கள் பறக்கட்டும்

(பாபர் மசூதி இடிக்கப்பட்ட அந்த நாளில்
இடிந்து போய் எழுதியது என்று
கவிப் பேரரசு எழுதிய இந்த கவிதை
தமிழுக்கு நிறமுண்டு என்ற நூலில்
வெளிவந்துள்ளது..)

நடிகை ஷில்பா ஷெட்டி கர்ப்பம் எப்படி?


பாலிவுட் நடிகையும், ஐ.பி.எல். ராஜஸ்தான் ராயல்ஸின் கிரிக்கெட் அணியின் பார்டனருமான ஷில்பா ஷெட்டி (வயது 36)க்கும், ராஜ்குந்த்ரா என்பவருக்கும் கடந்த 2009ம் ஆண்டு திருமணம் நடந்தது.


தற்போது தான் கர்ப்பமாக உள்ளதாக அவர் டுவிட்டர் இணையதளத்தில் தெரிவித்து உள்ளார். சமீபத்தில் தான் நடிகை ஐஸவர்யா ராய் குழந்தை பெற்றெடுத்தார்.
மேலும், பாலிவுட் நடிகைகளான லாரா தத்தா மற்றும் செலினா ஜெட்லி ஆகியோரும் கர்ப்பமாக உள்ளனர் எனபது குறிப்பிடத்தக்கது.

திருவனந்தபுரம் : 400 விமான பயணிகள் உயிர் தப்பினர் ஒரே ஓடுபாதையில் வந்த 2 விமானத்தால் பரபரப்பு



இது ஒரு செக்ஸ் வீடியோ அல்ல.



திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் நேற்று காலை 2 விமானங்கள் நேருக்கு நேர் மோத இருந்த விபத்து அதிர்ஷ்டவசமாக தவிர்க்கப்பட்டது. இதனால், 400 பயணிகள் உயிர் தப்பினர். திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்று காலை 11.10க்கு எமிரேட்ஸ் விமானம் ஒன்று கத்தார் நாட்டுக்கு புறப்பட்டது. ஓடுபாதையில் இருந்து இந்த விமானம் மேலே எழும்பி கொண்டு இருந்தபோது, கொழும்பில் இருந்து வந்த ஏர்லங்கா விமானம் அதே ஓடுபாதையில் தரை இறங்கியது.
சில வினாடிகள் வித்தியாசத்தில் விமானங்கள் ஒன்றை ஒன்று மிக அருகே கடந்து சென்றன. சில வினாடிகள் தாமதித்து இருந்தால் கூட இரண்டு விமானங்களும் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டு இருக்கும். ஆனால், அதிர்ஷ்டவசமாக அது தவிர்க்கப்பட்டது. இதனால், இந்த விமானங்களில் இருந்த 400 பயணிகள் உயிர் தப்பினர். இந்த சம்பவத்தால், விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
விமான நிலைய கட்டுப்பாட்டு அறையில் இருந்து சிக்னல் கொடுப்பதில் ஏற்பட்ட குளறுபடிதான் இந்த சம்பவத்துக்கு காரணம் என கூறப்பட்டது. இது குறித்து விசாரணை நடத்த திருவனந்தபுரம் விமான நிலைய இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

சென்னையில் இன்று மலையாளப் பத்திரிகைகளுக்கு ஏற்பட்ட கதி!

Chennai, India: The political tussle between Tamil Nadu and Kerala over the Mullaperiyar Dam has shifted to the streets of Chennai, and other cities of Tamil Nadu. Some Tamil groups are still attacking shops owned by Keralites and forcing them to shut down the shops. On a new twist to this situation, distribution of Malayalam news papers in some parts of Chennai stopped today!
முல்லைப் பெரியாறு விவகாரம் தொடர்பாக தமிழகத்தில் கேரள மாநிலத்தவரின் இருப்புக்கும் சொத்துக்களுக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதுடன், அவர்களது இயல்பு வாழ்வு பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அதே நிலைமைதான் கேரளாவில் தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் இந்த எதிர்ப்பு இன்று மற்றொரு அபாயகரமான வடிவத்தை எடுத்துள்ளது.

சென்னை அண்ணாநகரில் இன்று ஒருநாள் மலையாள செய்தித்தாள்களின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.

முல்லைப் பெரியாறு பிரச்சினையில், தற்போது உள்ள அணையை இடித்து விட்டு புதிய அணை கட்ட வேண்டும் என்று கேரள அரசு கூறி வருவதற்கு ஆதரவாகவே மெஜாரிட்டி மலையாள ஊடகங்களில் செய்தி வெளியாகின்றது. கேரள மாநிலத்துக்கு தமிழகத்தால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்பதுபோன்ற பிரச்சாரம் ஒன்றும் அங்கு மும்மரமாக நடைபெறுகின்றது.

அந்தச் செய்திகளும் மலையாள ஊடகங்களில் வெளியாகின்றன.

மலையாள நாளிதழ்களும், அங்குள்ள ஊடகங்களும் இதுபோன்ற தமிழ்-விரோத செய்திகளை வெளியிடுவதற்கு தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளும் சில சமூக அமைப்புகளும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இப்படியான நிலைமையிலேயே, தமிழகத்தின் ஒரு சிறு பகுதியில் மாத்திரம், குறிப்பிட்ட சில பத்திரிகை விநியோகஸ்தர்கள் இன்று தமது எதிர்ப்பைக் காட்டும் விதமாக மலையாள நாளிதழ்களை விநியோகம் செய்வதை நிறுத்தியுள்ளனர். சென்னை அண்ணாநகரில் விநியோகிக்கப்படும் மாத்ருபூமி மலையாள மனோரமா உள்ளிட்ட மலையாள மொழி நாளிதழ்கள் சுமார் ஆயிரம் வீடுகளுக்கு விநியோகிக்கப்படவில்லை.

இப்பகுதி பத்திரிகை விநியோகஸ்தர்கள், “கேரள அரசுக்கு எமது எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் இன்று மட்டும் மலையாளப் பத்திரிகை விநியோகத்தை நிறுத்தியுள்ளோம்” என்று வெளிப்படையாக கருத்தும் தெரிவித்துள்ளனர்.

இது ஒரு மிகவும் அபாயகரமான நடவடிக்கை என்பது சரியாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளதா என்பது தெரியவில்லை. இன்று சென்னை அண்ணாநகரில் தொடங்கியது நாளை தமிழம் முழுவதும் பரவலாக நடைபெறலாம். அதே கதி கேரளாவில் தமிழ் பத்திரிகைகளுக்கு ஏற்படலாம்.

இப்படியொரு பாதை இருக்கிறதே என்று நாளை மறுநாள், தமிழகத்திலுள்ள கேரள மாநிலத்தவருக்கு ஒருநாள் டி.வி. கட் பண்ணப்படுகின்றது என்று கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் அறிவிக்கலாம்.

உலக அமைப்புகளால், மிகவும் மோசமானதாக கூறி எதிர்க்கப்படும் Discrimination Against Race என்பதன் ஆரம்பம் இதுதான்.

மைக்ரோசாஃப்ட்: “இந்தியாவில் துண்டை உதறி தோளில் போடலாமா?”

Kolkatta, India: Global software major Microsoft yesterday (Thursday) said, India is no longer a preferred destination for Multinational Corporations. Asked to throw more light on ‘preferred destination’, Microsoft India chairman Bhaskar Pramanik said, “I think we look at everywhere in the world. I think choices are many”
Mr. Pramanik later clarified that he was speaking about Multinational technology and IT companies. “I think a lot of that need to be resolved. We have to be cautious about any new investment in India” he said.

உலக சாஃப்ட்வேர் ஜயன்ட் நிறுவனம் மைக்ரோசாஃப்ட், தமது அபிமானத்துக்குரிய நாடுகளின் பட்டியலில் இந்தியா கிடையாது என்று நேற்று (வியாழக்கிழமை) அறிவித்துள்ளது. மைக்ரோசாஃப்ட் இந்தியாவில் (கொல்கத்தா) தமது ரிசர்ச் அன்டு டெவலப்மென்ட் சென்டர் (R&D centre) ஒன்றை அமைப்பதற்காக வைத்திருந்த திட்டமும் கைவிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

மைக்ரோசாஃப்ட் (இந்தியா) சேர்மன் பாஸ்கர் ப்ரமானிக்

“பன்னாட்டு நிறுவனங்களின் (Multinational Corporation -MNC) அபிமானத்துக்குரிய நாடாக இந்தியா திகழ்ந்த காலம் இப்போது இல்லை. இந்தியாவுக்கு வருவதில் இனியும் அர்த்தம் ஏதும் கிடையாது என்பதை பன்னாட்டு நிறுவனங்கள் புரிந்து கொண்டுள்ளன. நாம் (மைக்ரோசாஃப்ட்) இந்தியாவில் இயங்குவதில் ஏராளமான சிக்கல்கள் உள்ளன” என்று தெரிவித்துள்ளார் மைக்ரோசாஃப்ட் (இந்தியா) சேர்மன் பாஸ்கர் ப்ரமானிக்.
பிஸினெஸ் வேர்ல்டு சஞ்சிகையால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இன்ஃபோ-காம் கான்பிரன்ஸில் பேசும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்தியா தொடர்பாக பன்னாட்டு ஐ.டி. நிறுவனங்களின் தற்போதைய மனநிலையையே தனது பேச்சு பிரதிபலிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

“நிறைய சிக்கல்கள் இங்கு தீர்த்து வைக்க வேண்டியுள்ளன. அதை தீர்க்கப்படும்வரை இந்தியாவில் பணத்தை முதலீடு செய்வதற்கு பன்னாட்டு நிறுவனங்கள் தயக்கம் காட்டவே செய்வார்கள்” என்று தெரிவித்த ப்ரமானிக்கிடம், “இந்தியாவில் இருந்து விலகிச் செல்வதென்றால், பன்னாட்டு நிறுவனங்களின் அபிமானத்துக்குரிய நாடு எது?” என்ற கேள்விஎழுப்பப்பட்டது.

“மற்றைய பன்னாட்டு நிறுவனங்கள் எங்கே செல்லப் போகின்றன என்பதை நான் கூற முடியாது. மைக்ரோசாஃப்ட்டைப் பொறுத்தவரை நாங்கள் உலகின் எந்தப் பகுதியிலும் ஆபரேஷன் தொடங்குவதை திறந்த மனதுடன் அணுகுகிறோம். அந்த விதத்தில் எமக்கு நிறையவே சாய்ஸ்கள் உள்ளன” என்பது அவர் கூறிய பதில்.

வெளிநாட்டு சூப்பர் மார்க்கெட் செயின்களின் இந்திய வருகை (FDI) தொடர்பாக எழுந்த சர்ச்சைகளும், அந்தத் திட்டம் இடைநிறுத்தப் பட்டுள்ளதும் மைக்ரோசாஃப்ட்டின் முடிவுக்கு காரணமா என்ற கேள்விக்கு அவர் நேரடியாகப் பதிலளிக்கவில்லை. “FDI விமான வர்த்தகத்திலும், ரீடெயில் வர்த்தகத்திலும் நல்ல திட்டம்” என்று சொன்னதுடன் நிறுத்திக் கொண்டார்.

அந்தத் திட்டத்துக்கு எழுந்த எதிர்ப்புதான் சர்வதேச நிறுவனங்களை மிரள வைத்திருக்கின்றது என்று சுலபமாக ஊகித்துக் கொள்ளலாம். இன்றைக்கு வால்-மார்ட்டுக்கு நடந்த கதி நாளைக்கே தமக்கும் ஏற்படலாம் என்ற பயம்தான் இதற்கான காரணம்.

ப்ரமானிக் வெளிப்படையாகக் கூறாவிட்டாலும், எமக்கு தெரியாதா என்ன? இந்தோனேசியா, பிலிப்பீன்ஸ் போன்ற சில தென்கிழக்காசிய நாடுகளும், கிழக்கு ஐரோப்பிய (முன்னாள் கம்யூனிச) நாடுகளில் சிலவும்தான் தற்போது மைக்ரோசாஃப்ட்டின் ஷாப்பிங் லிஸ்டில் உள்ள நாடுகள்! இந்தியாவில் தற்போது இயங்கும் கால்-சென்டர்கள் சிலவும் அதே திசையை நோக்கித்தான் செல்கின்றன.

ரஜினிக்கு கார் பரிசளிப்பதாக வதந்தி: ஷாருக்கான்

ஷாருக்கான் நடித்த ரா ஒன் படம் சமீபத்தில் ரிலீசானது? படத்தில் ரஜினிகாந்த் ஒரு காட்சியில் நடித்துள்ளார். மும்பை சென்று இதற்கான படப்பிடிப்பில் பங்கேற்று நடித்து கொடுத்து வந்தார். இதையடுத்து ஷாருக்கான் சென்னை வந்து ரஜினியை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார். இப்படத்தில் நடித்ததற்காக ரஜினி சம்பளம் வாங்கவில்லை என கூறப்படுகிறது.


இதனால் அவருக்கு விலை உயர்ந்த பி.எம். டபிள்யூ 7 சீரியஸ் என்ற சொகுசு காரை ஷாருக்கான் பரிசாக அளிக்க முன் வந்ததாகவும் அந்த காரை வாங்க ரஜினி மறுத்து விட்டதாகவும் செய்தி வெளியானது. இதற்கு ஷாருக்கான் மறுப்பு தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது: 
ரஜினிக்கும் ரா ஒன் படத்தில் பணியாற்றிய வேறு சிலருக்கும் பி.எம்.டபிள்யூ காரை நான் பரிசளிக்க போவதாக வெளியான செய்தி உண்மையானது அல்ல. அது வெறும் வதந்தி தான். இந்த வதந்தி யாரிடம் இருந்து பரவியது என்று தெரியவில்லை. எப்படித்தான் இதுபோன்ற வதந்திகளை பரப்புகிறார்களோ என புரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

நீங்க நம்பலையா? டி.வி. சேனலில் காமிக்கிறோம், கண்குளிர பாருங்கள்!

Tehran, Iran: Iran paraded what its military described as a captured C.I.A. stealth drone on national television yesterday (Thursday). The drone shown on Iran television appeared to be in good condition, which would seem to be inconsistent with an uncontrolled landing, although closer inspection of the images appeared to reveal a taped fracture on part of the wing.
John Pike, director of Global Security, a consulting firm, said in response to a query from CNN about the video images that the aircraft did not look the way he would expect it to look after a crash, fueling suspicion that the Iranians may have displayed a mock-up. Other aviation experts said the vehicle seen in the video appeared to be authentic.

சி.ஐ.ஏ.-யின் ஆளில்லாத உளவு விமானத்தை (drone) ஈரானிய ராணுவம் கைப்பற்றி வைத்திருக்கும் விவகாரம் தொடர்பாக கடந்த இரு தினங்களாகவே அமெரிக்க ஊடகங்களில் ஏகப்பட்ட வாதப்பிரதிவாதங்கள். சி.ஐ.ஏ. விமானம் ஆப்கான் வான் பகுதியில் தொலைந்துவிட்டது. ஈரான் சொல்வது பொய் என்றெல்லாம் ஏகத்துக்கும் புலனாய்வு ரிப்போர்ட்டுகள்.

இப்படிக் குழப்பம் நிலவிக்கொண்டிருக்க, ஈரான் அதிரடியாக நேற்று (வியாழக்கிழமை) அரசு டி.வி.

டி.வி. சேனலில் காண்பிக்கப்பட்ட காட்சியின் ஒரு பிரேம். விமானத்துக்கு அருகே போஸ் கொடுப்பவர், ஈரானிய ராணுவத்தின் பிரிகேடியர் ஜெனரல் அமீர்-அலி ஹஜிஸாடின் (வலப்புறம் நிற்பவர்).

சேனலில் 2.5 நிமிட வீடியோ கிளிப்பிங் ஒன்றை ஒளிபரப்பியுள்ளது. தாம் கைப்பற்றியுள்ள அமெரிக்க RQ-170 விமானத்தை அதில் காட்டியது.

இப்போது என்னாகும்? ஆம். ஈரானிய தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்ட வீடியோ கிளிப்பிங் தொடர்பாக வாதப் பிரதிவாதங்கள் தொடங்கிவிட்டன.

ஈரானிய தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 2.5 நிமிட கிளிப்பிங்கில் காண்பிக்கப்பட்ட விமானம், நொருங்கிப் போன நிலையில் இல்லை. வெளிப் பார்வைக்கு எவ்வித சேதமும் இல்லாமல் முழுமையாகவே காண்பிக்கப்பட்டது. ஒளிபரப்பில் காண்பிக்கப்பட்ட இமேஜ்களை கவனமாகப் பார்த்தால், விமானத்தின் விங்க் பகுதியில் ஒரு வெடிப்பு ஏற்பட்டிருப்பது தெரிகின்றது. (அதில் ஸ்காட்ச் போடப்பட்டுள்ளது)

ஆனால், அது எப்படி சாத்தியம்? காரணம், ஏதோ ஒரு விதத்தில் இந்த விமானத்தை ஈரானிய ராணுவம் லேன்ட் பண்ண வைத்திருக்க வேண்டும். லேன்டிங் கன்ட்ரோல் அவர்கள் கையில் இருந்திருக்க முடியாது. இதனால் ஸ்மூத் லேன்டிங்குக்கு சான்ஸே கிடையாது, கிராஷ் லேன்டிங் பண்ணி இறக்குவதே ஒரே வழி. லெவல்டு ரன்வேயில் இறக்கியிருந்தாலும்கூட விமானத்தின் ஃபியூவலேஜ் பகுதி தரையில் மோதி சிதைவடைந்திருக்கும்.

அப்படியிருந்தும், விமானத்தை எப்படி முழுமையாகக் காண்பிக்கிறார்கள்?

(இதில் நெட்-லேன்டிங் பாஸிபிளிட்டி ஒன்று உள்ளது. அதற்கெல்லாம் இங்கே சான்ஸ் கிடையாது. காரணம் நெட்-லேன்டிங்குக்கு விமானத்தின் லேன்டிங் கியர் ஆபரேஷன் தரையில் உள்ளவர்களிடம் ரிமோட் கன்ட்ரோலில் இருக்க வேண்டும்)

குளோபல் செகியூரிடி கன்சல்டிங் அமைப்பின் தலைவர் ஜோன் பைக் சி.என்.என். நியூஸ் சேனலுக்கு கொடுத்த பேட்டியில், “ஈரானியர்களால் காண்பிக்கப்படும் இமேஜ் பலவந்தமாக தரையிறக்கப்பட்ட விமானம் போலத் தெரியவில்லை. நொருங்கிப்போன விமானம் ஈரானியர்களிடம் சிக்கியிருக்கலாம். அதை வைத்துக்கொண்டு அவர்கள் தயாரித்த டம்மி பிளேன்தான் இவர்கள் காண்பித்தது” என்று தெரிவித்துள்ளார்.

வேறு சில மிலிட்டரி ஏவியேஷன் எக்ஸ்பர்ட்டுகள், டி.வி.யில் காண்பிக்கப்பட்டது நிஜமான விமானம்தான் என்கிறார்கள். ஆனால், ஈரானியர்கள் அதை எப்படி முழுமையாக இறக்கினார்கள் என்பதற்கு அவர்களிடமும் பதில் கிடையாது.

டி.வி.யில் காண்பிக்கப்பட்ட விமானம் ஒரு மேடையில் வைக்கப்பட்டு பிலிம் பண்ணப்பட்டுள்ளது. (மேடையின் பின்புறம் ஈரானியப் புரட்சிக்கு வித்திட்ட அயதுல்லாக்களின் போட்டோக்கள்!) அந்த வகையில் விமானத்தின் பின்புற-கீழ்ப்பகுதி (ரியா் ஃபியூசலேஸ்) வீடியோவில் காண்பிக்கப்படுவதை தவிர்த்திருக்கிறார்கள். ஒருவேளை சேதம் அந்தப் பகுதியில் இருக்கலாம்.

ஈரானியர்களில் அதிஷ்டத்துக்கு, விமானம் சுயமாகவே 15-45RF லேன்டிங் (15-45 பாகை பின்சாய்ந்த அப்ரைட் லேன்டிங்) அடித்திருந்தால், 75% சிதைவடையாமல் கிடைத்திருக்கலாம்!

சிதம்பரம் நடராஜர் கோயிலில் கொலைகள்!

சிதம்பரம் நடராஜர் கோயிலில் நடந்த கொலைகள் குறித்து எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து... அதன் நகலை அனுப்பவேண்டும்’ என ஓர் அதிரடி உத்தரவைப் பிறப்பித்து... தீட்சிதர்கள் தரப்பை ஹைவோல்ட் அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்.
நீதிமன்ற விவகாரத்தைப் பார்க்கும் முன்... சிதம்பரம் கோயிலில் நடந்ததாகச்சொல்லப்படும் மூன்று கொலை விவகாரங்களைப் பார்க்கலாம்.

கொலை-1:

ஆமூர் செல்வராஜ் என்பவரின் மனைவி ராஜகுமாரி அடிக்கடி நடராஜர் கோயிலுக்குப் போய் வந்தார். இந்த நிலையில் சில தீட்சிதர்கள்... அவரை தங்கள் மன்மதப் பிடியில் மடக்கினர். இந்தத் தகவல் கணவர் செல்வராஜிக்கு தெரியவர... கொதித்துப்போனார். பிறகு?
“இது குறித்து தன் மனைவியிடம் செல்வராஜ் கேட்க... ராஜகுமாரியோ... "அந்தத் தீட்சிதர்கள் மிரட்டி மிரட்டி.. இப்படி பணியவச்சிட்டாங்க..' என கதறியழுதிருக்கார். உடனே... அந்தத் தீட்சிதர்களின் பெயர்களைத் தெரிஞ்சிக்கிட்டு... அவங்களைத் தட்டிக்கேட்க.. 2.7.99-ல் கோபமா கோயிலுக்குப் போயிருக்கார். போனவரை அந்தத் தீட்சிதர்கள் அடிச்சி நொறுக்கிட்டாங்க. அப்புறம் மாரியப்பன் என்பவர் மூலம் அவரை ஆட்டோவில் ஏத்தி... செல்வராஜை அவர் வீட்டில் இறக்கிப் போட்டிருக்காங்க. அப்பவே செல்வராஜிக்கு உயிர் இல்லை. கொலை பத்தி அப்பவே போலீஸுக்குத் தகவல் கொடுத்தும்... "அடப்போங்கய்யா. கோயி லுக்குள்ள போயெல்லாம் விசாரிக்க முடியாது'ன்னு சொல்லிட்டாங்க. "இது என்னங்க நியாயம்?' என்கிறார்கள் ஆமூர்க்காரர்கள் ஆவேசமாக.

கொலை-2:

காங்கிரஸ் தலைவர் மூப்பனாருக்கு உடல்நிலை மோசமான நேரம். காங்கிரஸ் நகர சேர்மனாக இருந்த சந்திரபாண்டியன் தரப்புக் கதர்ச்சட்டைகள்... சித்திரகுப்தனுக்கு சிறப்பு பூஜைகளை செய்துகொண் டிருந்தனர். அந்த பூஜையில் பங்குகொண்டு மந்திரம் ஓதிக்கொண்டிருந்த மூர்த்தி தீட்சிதர்.. அடுத்த கொஞ்ச நேரத்தில்... உள் பிரகாரத்தில் ரத்தக் காயங்களோடு பிணமாகக் கிடந்தார். 
“தீட்சிதர்களுக்குள் தட்சணைப் பணத்தைப் பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில்தான் மூர்த்தி தீட்சி தர் கொல்லப்பட்டிருக்கார். கோயிலுக்குப் போன மாஜி கவுன்சிலர் ராஜ்குமார்.. இதுபற்றி புகார் கொடுத்தும் போலீசார் கண்டுகொள்ளவே இல்லை என்கிறார்கள் ஏரியாவாசிகள்.

கொலை-3:

அதே 2001-ல் ராமர் என்பவர் கோயில் குளத்தில் பிணமாக மிதந்தார். ’’இந்த ராமர், தீட்சிதர்களுடன் எப்போதும் இருப்பவர். அவர்களுக்கு சகலத்தையும் சப்ளை பண்ணி வந்தவர். இது தவிர தீட்சிதர்களின் அத்தனை அந்தரங்க ரகசியங்களையும் அறிந்து வைத்திருந்தவர். அப்படிப்பட்டவர் திடீர்னு பிணமா மிதந்தது எப்படி? இத்தனைக்கும் இவருக்கு நீச்சல் தெரியும். அதனால்தான் ராமரை யாரோ கொலை பண்ணி குளத் தில் போட்டிருக்காங்கன்னு சந்தேகப்பட் டோம். இது குறித்து நாங்க போலீஸ்ல தெரிவிச்சும்... அவங்க அதை ஒரு பொருட் டாகவே எடுத்துக்கலை என்கிறார்கள் கோயில் அருகே கடை வைத்திருக்கும் வியாபாரிகள்.

-இப்படி நடந்த மூன்று கொலைகளை யும் சிதம்பரம் காக்கிகள் அலட்சியப்படுத்த... முதலில் கொல்லப்பட்ட ஆமூர் செல்வ ராஜின் உறவினரான ஆமூர் இளங்கோவன் என்பவர்... கொலை விவகாரங்களைக் கிண்டிக் கிளறத் தொடங்கினார். பிறகு? 

தனது முயற்சிகள் குறித்து ஆமூர் இளங்கோவனே விவரிக்கிறார்... ""சிதம்பரம் நடராஜர் கோயிலில் நடந்த கொலைகள் குறித்து விசாரிக்கவேண்டும் என்றும் குறிப்பாக.. பலராலும் சந்தேகிக்கப்படுகிற தீட்சிதர்களான தில்லை, பட்டு, ராஜா, கனகு, குப்புசாமி, முருகு, அமர்நாத் போன் றோரைத் தீவிரமாக விசாரிக்கணும்னு அரசுக்கும் காவல்துறைக்கும் ஏகப்பட்ட புகார்களை அனுப்பினேன். இதுக்கு எந்தப் பலனும் இல்லை. அதனால் மனித உரிமைப் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளரான வழக்கறிஞர் விருத்தா சலம் ராஜுவிடம் பிரச்சினையைக் கொண்டு போனேன். இவர்... தீட்சிதர்கள் தடைபோட்ட தேவாரத்தமிழை... சிவநெறியாளர் ஆறுமுகசாமி மூலம் கோயிலுக்குள் பாட... ஏகப்பட்ட முயற்சி எடுத்து வெற்றி பெற்றவர். அவரின் முயற்சிக்குப் பிறகுதான் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பைக் கொடுத்திருக்கிறது'' என்று சிலாகித்தார்.

நாம் அந்த வழக்கறிஞர் விருத்தாசலம் ராஜுவை யும் சந்தித்தோம். உற்சாகமாக நம்மிடம் பேச ஆரம் பித்த ராஜி ""தீட்சிதர்களின் அட்டூழியங்கள் குறித்து... ஏற்கனவே நக்கீரனில் நீங்க எழுதிய கட்டுரைகளைப் படிச்சிருக்கேன். எதற்கும் அஞ்சாதவர்களான தீட்சிதர்கள்.. கொலைகளையும் செய்திருப் பார்களா என... ஒரு குழுவாக விசா ரணையில் இறங்கினோம். அவர்களின் குற்றங்கள் உறுதியானது. இந்தக் கொலை களுக்கான முதல்கட்ட ஆதாரங்களைத் திரட்டினோம். பிறகு சென்னை உயர்நீதி மன்றத்தின் கவனத்துக்கு... இதை உயர்நீதி மன்ற வழக்கறிஞர்களான ரத்தினம், சத்திய சந்திரன் ஆகியோர் மூலம் எடுத்துச் சென்று... "கொலைகளைக் கண்டுகொள்ளாத இந்த போலீஸ் மீது நம்பிக்கை இல்லை. எனவே சி.பி.ஐ. விசாரணை வேண்டும்' என்று கோரிக்கை வைத்தோம். 

நீதிமன்றம் இது குறித்து காவல்துறையிடம் விளக்கம் கேட்க... தற்போதைய கூடுதல் டி.ஜி.பி.ராதாகிருஷ்ணனும், சிதம்பரம் இன்ஸ்பெக்டர் ராமலிங்கமும்... இந்த சம்பவங்கள் குறித்து யாரும் புகார் தரவில்லை என்று மழுப்பல் பதிலை அபிடவிட்டாகத் தாக்கல் செய்தார்கள். நீதியரசர் கே.என்.பாஷா... முதலில் இந்த மூன்று கொலை வழக்கின் பேரிலும் எஃப்.ஐ.ஆரை. பதிவுசெய்து... அதை நீதிமன்றத்துக்கு அனுப்பும்படி அதிரடி உத்தரவைப் பிறப்பித்திருக்கிறார். இது எங்களுக்குக் கிடைத்திருக்கும் மகத்தான முதல்கட்ட வெற்றி. இந்த கொலைவழக்குகள் விசாரணைக்கு வரும்போதும்... தீட்சிதர்களின் கொலைகுற்றங்களை கோர்ட்டில் ஆதாரப் பூர்வமாக நிரூபிப்போம். குற்றவாளிகளுக்கு உரிய தண்டனையை வாங்கித்தராமல் ஓயமாட்டோம்'' என்கிறார் பூரிப்பாக.

உயர்நீதி மன்றத்தின் இந்த அதிரடி உத்தரவால்... ரொம்ப வே வயிறு கலங்கிப் போயிருக்கிறது தீட்சி தர்கள் தரப்பு.

எல்லோரையும் கவர பேசுவது எப்படி?


""கம்ப இராமாயணத்தை எழுதியது யார் தெரியுமா?'' -இது தலைவர் கலைஞர் கழகத்தின் பழைய பேச்சாளர் ஒருவரைப் பார்த்து கேட்ட கேள்வி. அதற்கு அந்தப் பேச்சாளர் ஒரு நிமிடம் அமைதி காத்து... "நீங்கதான் தலைவரே...'ன்னு சொன்னாரு.

தலைவர் கோபமாகி... எல்லா விஷயங்களையும் கத்துக்கிட்டு அதுக்கப்புறம் மக்கள் மத்தியில் பேச வேண்டும்னு அந்தப் பேச்சாளர்கிட்ட சொன்னாரு. இது நிஜமாவே நடந்த சம்பவம்.
கேள்வியிலேயே பதில் உள்ளதைக்கூட புரிஞ்சுக்காத அந்தப் பேச்சாளர் மாதிரி யாரும் இருக்கக்கூடாதுன்னுதான் நம் கழகம் இந்த சொற்பொழிவாளர்களுக்கான பயிற்சிப் பட்டறையை இந்த குளு குளு ஊட்டியில் நடத்திக்கொண்டிருக்கிறது'' என்று து.முதல்வர் ஸ்டாலின் நிகழ்ச்சிக்கு ஓப்பனிங் கொடுத்துவிட்டுப் போக... தாங்கள் இங்கே அமர்ந்திருப்பதின் அவசியத்தை உணர்ந்து உன்னிப்பாய்க் கேட்கத் தொடங்கினார்கள் மாநிலமெங்குமிருந்தும் வந்திருந்த தி.மு.கழகப் பேச்சாளர்கள்.

ஊட்டி மோனார்க் ஹோட்டலில் 16-09-10 அன்று தொடங்கிய இந்த சொற்பொழி வாளர்களுக்கான பயிற்சிப் பட்டறையில் பயிற்சி எடுக்க நடிகை குஷ்புவும் வந்திருந்தார்.

கூட்டத்தை ஏற்பாடு செய்த கொள்கைபரப்புச் செயலாளரும் மத்திய அமைச்சருமான ஆ.ராசா... ""நான் எட்டாவது படிக்கும் போது தான் என் தமிழாசிரியர்... அண்ணா இறந்தபோது கலைஞர் எழுதிய "இதயத்தை தா...?' என்ற கவிதையை படித்து மனப்பாடம் செய்யுங்கள் என்று சொன்னார்.

அந்தக் கவிதையை நான் மனப்பாடம் செய்தபோது... தலைவர் கலைஞரின் அந்த கவிதை என் இதயக் குளத்தில் ஒரு கல்லையெறிந்தது. அதற்குப் பின்தான் கதர்ச்சட்டை வரலாற்று குடும்பத்திலிருந்த நான் தலைவரின் தொண்டனாக ஆனேன். சாதாரண குடும்பத்திலிருந்து வந்த நான் உங்கள் முன்னால் நிற்பதற்கும், உங்களோடு ஒருவனாய் இருப்பதற்கும் தலைவரின் அந்த கவிதைதான் காரணம். அதேபோல் மற்றவர் களை நம் கழகத்திற்கு உங்கள் கருத்துச் செறிவானப் பேச்சுக்களால் வரவழைக்க வேண்டும்'' என்று பேச பயங்கர அப்ளாஸ்.

"அதே கூட்டத்தில் திராவிட இயக்கமும் பெண் ணுரிமையும்' என்ற தலைப்பில் வழக்கறிஞர் அருள் மொழி நீண்ட ஒரு சொற்பொழிவை நிகழ்த்தினார். ""ஒரு குடும்பத்துடன் நீங்கள் ஒரு வாகனத்தில் பயணிக்கும் போது... ஆண்களான நீங்கள் சிறுநீர் கழிக்க வேண்டுமென்றால் ஏதோ ஒரு இடத்தில் கழித்து விடுகிறீர்கள்... பீடி, சிகரெட், டாஸ்மாக் கடை உட்பட எல்லாவற்றையும் வாங்க உங்களை சமூகம் அனுமதிக்கிறது. ஆனால் அதே வாகனத்தில் பயணிக்கும் ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் ஏற்பட் டால் வண்டியை நிறுத்தச் சொல்லி, ஒரு மருந்து கடையிலோ இல்லை ஒரு மளிகைக் கடையிலோ நாப்கின் வாங்கும் நிலை இன்றுவரையிலும் ஏற்படவில்லையே'' என்று அவர் கொதித்த கருத்தில் தங்கள் கவனத்தைப் பதித்தார்கள் பயிற்சியாளர்கள்.

"கலைஞர் உருவாக்கிய சமூக புரட்சி' என்ற பெயரில் பொன்முடி பேசியபின்... பயிற்சியாளர் ஒருவர் "கலைஞர் ஆட்சி செய்திருக்கிற சாதனைகளை புள்ளி விபரங்களாக கொடுக்க வேண்டும் ' என்று கேட்க... ""சாதனைகளை புள்ளி விபரங்களாக கொண்டு பேசினால் மக்களிடையே எடுபடாது. சாதனையின் உண்மைகளை கிராமப்புறங்களில் உள்ள மக்களிடையே பேசும்போது... கலைஞர் உடல்நிலை சரியில்லாமல் சென்னை இராமச்சந்திரா மருத்துவ மனையில் இருந்து உடல்நிலை தேறியபோது நினைத் தார். "நான் இந்த தனியார் மருத்துவமனையில் இருந்து சிகிச்சைப் பெற்றிருக்கிறேன்.

ஆனால் இந்த குப்பனும் சுப்பனும் உடல்நிலை மோசமாகும்போது தனியார் மருத்துவமனையில் கால் வைக்க முடியாது என்ற நிலையிருக்கிறதே... என்ன செய்வது?' என மனம் நொந்து போன கலைஞர்... "ஏழைகளும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நல்ல முறையில் வாழ வேண்டும்...' என்று கலைஞர் காப்பீடு திட்டத்தை உருவாக்கினார் என்ற உண்மை செய்தியை இப்படி சொல்ல வேண்டும்'' என்று முடிக்க... அப்படியொரு கைதட்டல்.

இரண்டுமணி நேரம் இடைவிடாது முழங்கிய கோவை மு.இராமநாதன் இராமாயணம், மகா பாரதக் கதைகளை கதாகாலட்சேபம் செய்பவர்கள் சொல்வது போல்... அதாகப்பட்டது... என்று ஆரம்பித்து பதினைந்து நிமிடங்கள் மூச்சு விடாமல் பேசியது புதிய தலைமுறை பேச்சாளர்களுக்கு அரும் பெரும் மருந்தாக முடிந்தது.

17-09-10 தந்தை பெரியார் பிறந்தநாள் என்ற சிறப்பு வாய்ந்த தகுதியோடு அந்த நாள் சொற்பொழிவாளர்கள் பயிற்சி அரங்கம் தொடங்கியது. 

"சமூக நீதியில் இடஒதுக்கீடு' என்ற தலைப்பில் பேசிய பேராசிரியர் நெடுஞ்செழியன் சொன்ன கருத்துக்கள் ஆழமானவை. அதில் ""செண்பகம் துரைசாமி என்ற 36 வயது பெண்... "மருத்துவக் கல்லூரியில் இடம் கேட்டேன். ஆனால், நான் ஃபார்வேர்டு கிளாஸ் என்பதால் எனக்கு சீட் கிடைக்கவில்லை' என்று 1952-ல் இடஒதுக்கீட்டுக்கு எதிராக வழக்கு தொடுத்தபோது... அந்தப் பெண்ணுக்காக அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர் என்பவர் வாதாடி இடஒதுக்கீட்டையே ரத்து செய்யும் தீர்ப்பை வாங்கினார்.





அதற்குப் பின்னால்தான் அந்த செண்பகம் துரை சாமி மருத்துவக் கல்லூரியில் சீட் கேட்டு விண்ணப் பிக்கவேயில்லை என்று தெரிய வந்ததோடு, முன்னால் வழங்கப்பட்ட அந்தத் தீர்ப்பை எதிர்த்து நாம் போராடி வெற்றியும் கண்டோம்'' என்று நெடுஞ்செழியன் பல புது தகவல்களை சொன்னார். அதேபோல "திராவிட இயக்க மும் பொதுவுடைமையும்' என்ற தலைப்பில் பேசிய விடுதலை விரும்பி... ""இந்தியாவில் ஒரு பசுவுக்கும், ஒரு பூசாரிக்கும் தொண்டு செய்வதையே இந்தியர்கள் பெரிதாக நினைக்கிறார்கள் என்று காரல்மார்க்ஸ் தன் பார்வையை இந்தியாவின் மீது பதித்து சொன்னது எவ்வளவு பெரிய உண்மை. ஆயுதத்தை ஆயுதத்தாலேயே வெல்ல முடியும் என்பது இயலாது. நம் ஆயுதம் தத்துவமாக இருக்க வேண்டும் என்பதை பெரியாரும், அண்ணாவும் விரும்பியதைத்தான் கலைஞர் செய்கிறார்'' என்று பேசிய அவரிடம்... "நாத்திகம் என்பது கடவுள் மறுப்பா?' என்று ஒரு புதிய பேச்சாளர் கேட்க... ""நாத்திகம் என்பது கடவுள் மறுப்பு அல்ல. நாத்திகம் என்பது வேதங்களை மீறுவது...'' என்று சொல்ல பயிற்சியாளர்கள் அவரின் ஒரு மணி நேர ஆழ்ந்த பேச்சை கேட்டு ரசித்தார்கள். 

சாதி என்பது மதத்தை விட கொடியது என்று "கடவுள், மதம், சாதி, திராவிட இயக்கப் பார்வையில்...' என்ற தலைப்பில் பேசிய சுப.வீரபாண்டியன் பெரியாரை முன்வைத்து வெளுத்துக் கட்ட பயிற்சியாளர்கள் கைதட்டிக் கொண்டேயிருந்தனர்.

நிகழ்ச்சியின் இறுதியாய் "மொழிப்போர் வரலாறு' என்ற தலைப்பில் பேசிய சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன்... ""மொழிப்போர் போராட்டம்னு தலைப்பு கொடுத்திருந்தா கல்யாணப் பரிசு தங்கவேலு மாதிரி அது ஒரு பெரிய போராட்டம்னு முடிச்சிரலாம்னு பார்த்தேன். ஆனா மொழிப் போர் வரலாறுன்னு தலைப்பு கொடுத்துட்டாங்க''ன்னு சொல்ல... சிரிப்பு களை கட்டியதை அடுத்து பேச்சைத் தொடர்ந்தார்.

""இந்தி எதிர்ப்பு போராட்டத்தின்போது போராட்டத்தில் இருந்தவர்கள் பலர் ஒரு கட்டத்தில் ஒவ்வொருவராய் கழகத்தை விட்டு கழன்றுபோக ஆரம்பித்தார்கள். அதற்குப் பின் போராட்டத்தில் துணையாயிருந்த எல்.கணேசன் அவர்கள் வேறு... துபாய் போய்விட்டார்'' என்று பேச... பயிற்சியாளர்கள் மட்டுமின்றி சுப.வீரபாண்டியன் கூட அந்த சமயத்தில் எல்.கணேசன் துபாய்க்கு எப்போது போனார்? என்று புரியாமல் விழிப்பதை புரிந்து கொண்ட துரைமுருகன்... ""துபாய்க்கு போனா கை நிறைய சம்பாதிக்கலாம் வா...? அப்படினு பல பேர ஆசை காட்டி கூப்புட்டு போய் ஒண்ணுமில்லாத பொழப்புக்கு விட்டுட்டுப் போயிடுவாங்க. அப்படி அழைத்த வைகோ கூட எல்.ஜி. அப்போது போயிட்டாரு'' என்று பேச... எல்லாரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள்.

""இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் போது மாயவரம் சாரங்க பாணி என்ற நமது தொண்டன்... இந்திக்கு எதிராக கோஷமிட்டு உடலில் மண்ணெண் ணெயை ஊற்றிக் கொண்டு... யாரும் தன்னைக் காப்பாற்றக் கூடாது என்பதற்காக ஒரு மரத்தில் தன் காலைக் கட்டி தலைகீழாக தொங்கிக் கொண்டு தீ வைத்துக் கொண்டு எரிந்து அவன் ஆஸ்பத்திரியில் கிடந்தபோது... உடம்பு முழுக்க எரிந்து கிடக்கிற அவனிடம் கண்ணீ ரோடு... உனக்கு வலிக்கலையா? என்று கேட்டேன். அதற்கு அவன்... "வலிக்கிறது. ஏனென்றால் என் நெஞ்சில் கலைஞர் இருக்கிறாரே... அவருக்கு வலிக்குமோ என்பதால் எனக்கு வலிக்கிறது' என்று சொல்லி அவன் இறந்து போனதை சிறையிலிருந்து வெளியே வந்த கலைஞரிடம் சொல்லியபோது தலைவர் அழுத அழுகை இப்போதும் எனக்கு நினைவிருக்கிறது.

அந்த மாயவரம் சாரங்கபாணி யின் அம்மா... மண்ணில் உருண்டு எழுந்து... என் மகனின் சாவுக்கு காரணமானவர்கள் நாசமாய்ப் போகட்டும் என்று மண்ணை எடுத்து வீசி சாபமிட்டார் அந்த சாபம்தான் இப்போதுவரைக்கும் தமிழ்நாட்டை காங்கிரஸை ஆள விடாமல் செய்திருக்கிறது'' என்று அந்த வரலாற்று சம்பவத்தைச் சொல்லி முடித்த துரைமுருகன் உட்பட மேடையி லிருந்தவர்கள், பயிற்சியாளர்கள் என எல்லோரும் அழுதே விட்டார்கள்.

""இந்த பயிற்சிப் பட்டறை முடிந்து திரும்பி போகும்போது பேருந்து ஜன்னல்களின் வழியே நீங்கள் பார்க்கும் போது நிச்சயம் இங்குள்ள மரங்கள் தெரியாது. இந்த பயிற்சிப் பட்டறையின் நிகழ்வுகள் தான் தெரியும். இப்போது கூர் தீட்டப்பட்ட வாளாய் கழகத்தின் கொள்கைகளை எடுத்துக்கொண்டு போகிறீர்கள். இனி மேடைதோறும் பொதுமக்களின் நெஞ்சில் கருத்துக் களை விதையுங்கள்'' என்ற திருச்சி சிவாவின் நன்றியுரையோடும், உணர்ச்சிப் பெருக்கோடும் முடிந்தது சொற் பொழிவாளர்கள் பயிற்சிப் பட்டறை.

தயாநிதி வீட்டில் 323 தொலைபேசி இணைப்புகள். ஆவணங்களை கேட்கிறது சிபிஐ.


முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் வீட்டுக்கு 300-க்கும் மேற்பட்ட தொலைபேசி இணைப்புகள் வழங்கப்பட்டதாகக் கூறப்படுவது தொடர்பான ஆவணங்களைத் தருமாறு தொலைத் தொடர்புத் துறையிடம் சிபிஐ கோரியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ கடந்த வாரம் முதல்நிலை விசாரணையைத் துவக்கியது.

தொலைத் தொடர்புத் துறையின் அமைச்சராக தயாநிதி மாறன் இருந்தபோது, அவரது "போட் கிளப்' இல்லத்துக்கு 323 தொலைபேசி இணைப்புகள் வழங்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இது ஒரு "மினி தொலைபேசி எக்சேஞ்ச்' போலச் செயல்பட்டதாகவும் அங்கிருந்து, பூமிக்கு அடியில் பதிக்கப்பட்ட பிரத்யேக கேபிள் மூலமாக சன் டி.வி.யுடன் இணைக்கப்பட்டதாகவும் சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விடியோ கான்பரன்சிங் போன்றவற்றுக்கும், அதிக அளவிலான தகவல்களைப் பரிமாறிக் கொள்ளவும் இந்தத் தொலைபேசி இணைப்புகள் பயன்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

பி.எஸ்.என்.எல். பொது மேலாளரின் பெயரில் இந்த இணைப்புகள் பெறப்பட்டிருக்கின்றன. தயாநிதி மாறன் வீட்டில் இந்த இணைப்புகள் இருந்தாலும் உண்மையில் அவை அனைத்தும் சன் டி.வி.யின் ஒளிபரப்புக்காகவே பயன்படுத்தப்பட்டன என்றும் குற்றம்சாட்டப்படுகிறது.

இது தொடர்பாக கடந்த 4 ஆண்டுகளாகவே புகார்கள் வந்திருப்பதாகவும், 2007-ம் ஆண்டில் இது தொடர்பாக விசாரிப்பதற்கு அனுமதி கோரியபோது, தொலைத் தொடர்புத்துறை மறுத்துவிட்டதாகவும் சிபிஐ வட்டாரங்கள் கூறுகின்றன.

இப்படியொரு தொலைபேசி எக்சேஞ்ச் செயல்படுவது பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் சில உயரதிகாரிகளைத் தவிர வேறு யாருக்கும் தெரியாமலேயே இருந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த அளவுக்குத் திறன் கொண்ட கட்டமைப்பு நிறுவுவதற்கு பெரும் பணம் செலவிட வேண்டியிருக்கும். ஆனால் கிட்டத்தட்ட இலவசமாகவே இதை தயாநிதி மாறன் பயன்படுத்தினார் என்றும் குற்றம்சாட்டப்படுகிறது.

பாடகி சொர்ணலதா மரணத்தில் மர்மம்!

"மாலையில் யாரோ மனதோடு பேச...' என்று ஒலித்த அந்தக் குரல் இனி நேரில் பேசவோ பாடவோ போவதில்லை. நுரையீரல் பாதிப்பினால் 37 வயது பின்னணிப் பாடகி சொர்ணலதா மரணமடைந்ததால் திரையுலகத்திலும் ரசிகர்களிடமும் ஏற்பட்ட அதிர்ச்சி இன் னும் முழுமையாக விலகவில்லை. அவ ருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் படத்திறப்பு நிகழ்ச்சி நடத்த ஏற்பாடாகி வருகிறது.

தேசிய விருது பெற்ற சொர்ணலதாவின் பெருமைகள் பற்றி சொல்லும் "படத்தொகுப்பாளரும் கதாசிரியருமான சுபாஷ்' ""புகழ்பெற்ற இந்திப்படமான "மொகலே ஆசம்' படத்தை தமிழில் டப் செய்து "அனார்கலி' என்ற பெயரில் தயாரானது. செங்கம் ஜபார்தான் இதற்கானப் பணிகளை செய்தார். இந்திப்படத்தில் நவ்ஷாத் அலியின் இசையில் புகழ்பெற்றிருந்த கவாலி என்ற போட்டிப் பாடலை ஷம்ஷாத் பேகமும் லதாமங்கேஷ்கரும் பாடியிருந்தார்கள். லதாமங்கேஷ்கர் பாடிய பகுதியை தமிழில் பாடுவதற்கு சொர்ணலதாவை தேர்வு செய்தார் இசைச் சேர்ப்பு பணி மேற்கொண்ட சங்கர்கணேஷ். ஷம்ஷாத்பேகம் குரலில் யாரை பாடவைப்பது என்று ஆலோசித்தபோது, அந்தப் பாடலைக் கேட்ட சொர்ணலதா, அந்தக் குரலிலும் தானே பாடுவதாகச் சொன்னார். போட்டிப்பாடலில் இரண்டு வெவ்வேறு குரல்களில் இரு பெரும் பாடகிகள் இந்தியில் பாடியிருந்ததை, தமிழில் சொர்ணலதா மட்டுமே பாடி அசத்தியிருந்தார். இதை அப்போது நவ்ஷாத்திடம் போட்டுக் காட்டினோம். சொர்ணலதாவின் அபார திறமை கண்டு பாராட்டினார் அந்த இசை மேதை. அத்துடன், நாங்கள் வாங்கிச் சென்ற மோதிரத்தையும் சொர்ண லதாவுக்கு விருதுபோல வழங்கினார். "தன் வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவம் இது' என்று எப்போதும் சொல்வார் சொர்ணலதா'' என்றார்.

அவரால் மறக்க முடியாத சம்பவங்கள் நிறையவே இருக்கின்றன என்கிறார்கள் அவரை அறிந்தவர்கள். கேரள மாநிலம் பாலக்காட்டை பூர்வீகமாகக் கொண்ட சொர்ண லதாவின் பெற்றோருக்கு 10 பிள்ளை கள். 4 பெண்கள், 6 ஆண்கள். ஒன்பதாவது குழந்தைதான் சொர்ண லதா. அவருக்கு இரண்டு அக்கா, 6 அண்ணன், 1 தங்கை. இத்தனை பேர் இருந்தாலும், குடும்பத்தில் வரு மானம் ஈட்டக்கூடிய நபர் சொர்ண லதாதான். அக்காக்களுக்கு திரு மணமாகி அவரவர் கணவருடன் தனியாகச் சென்றுவிட்டார்கள். அண்ணன்களுக்கோ தங்கை சொர்ணலதாவின் வருமானத்தில் தான் வாழ்க்கை.

ரெகார்டிங் என்றால் இரண்டு அண்ணன்கள் எஸ்கார்டு போல கூடவே வருவார்கள். பாட்டு சீன் என்ன என்று மியூசிக் டைரக்டர் விளக்கிச் சொல்வதற்குக்கூட சங்கடமாக இருக்கும். அந்தளவுக்கு பின்தொடர்ந்து கொண்டிருப்பார்கள். யாருடனும் சொர்ணலதா பழகிவிடக் கூடாது. அவருக்கு கல்யாண எண்ணம் வந்துவிடக்கூடாது என்ப தற்காகத்தான் இந்தளவுக்கு கண் காணிப்பு. சில மியூசிக் டைரக்டர்கள் கோபப்பட்டு, அண்ணன்களை விரட் டிய சம்பவமும் உண்டு. சொர்ணலதா அதிகளவில் பாட முடியாமல் போன தற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம். அண்மைக்காலமாக சொர்ணலதாவை மேடைகளில் கூட பாடவிடவில்லை. அடிக்கடி சொந்த மாநிலமான கேரளாவுக்கு அழைத்துச் சென்றுவிடுவார்கள். அங்கு டி.வி. நிகழ்ச்சிகளில் ஜட்ஜாக உட்கார வைத்து இவர்கள் செட்டுக்கு வெளியே நின்று கண்காணித்து வந்தார்கள். இந்த நிகழ்ச்சிகளில் நல்ல வருமானம் என்கிற அவரது நெருங்கிய வட்டாரத்தினர் மேலும் சில தகவல்களையும் சொல்கிறார்கள்.

குடும்பச் சுமை முழுவதையும் சுமந்து கொண்டு, தனது விருப் பங்களை வெளிப்படுத் தக்கூட முடியாமல் நெருக்கடியில் இருந்த சொர்ணலதா பயங்கர மனஅழுத்தத்தில்தான் இருந்தார். அவருக்கு நுரையீரல் பாதிக்கப்பட்டி ருந்ததாக இப்போது சொல்கிறார்கள். சைனஸ், ஆஸ்துமா, ஈஸ்னோபீலியா போன்ற நுரையீரல் சம் பந்தப்பட்ட நோய்கள் இருந்தால் இத்தனை சிறப்பான பின்னணி பாடகியாக அவர் வந்தி ருக்க முடியாது. அவர் இறப்பதற்கு இரண்டு நாள் முன்னாடிகூட, ஒரு திரைப்பட விழா தொடர்பான அழைப்பிதழை நேரில் கொடுக்க அவர் வீட்டுக்குச் சென்றவர்களிடம், சொர்ணலதா ஊரில் இல்லையென்றும் வருவதற்கு ஒரு மாதமாகும் என்றும் அண்ணன்கள் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், இரண்டு நாள்கழித்து நுரையீரல் பாதிப்பால் சென்னை மலர் மருத்துவமனையில் அவர் மரணமடைந்துவிட்டதாக செய்தி வருகிறது.

""சொர்ணலதாவின் வீடு இருப்பது சாலிகிராமத்தில். விஜயா, சூர்யா போன்ற ஆஸ்பிட்டல்கள் பக்கத்திலேயே இருக்கின்றன. ஆனால், எதற்காக அடையாறில் உள்ள மலர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவேண்டும்? அந்த மருத்துவமனை ஒன்றும் நுரையீரல் நோய்க்கு ஸ்பெஷாலிட்டி இல்லையே! பாடிப் பறந்த அந்தக் குயிலின் இதய கீதம் ரொம்பவும் சோகமானது. மன அழுத்தமே இதயத்தை நொறுக்கியதா, தற்கொலைக்குத் தூண்டியதா என்றெல்லாம் கேள்விகள் எழுகின்றன. அவரது குரலைப் போலவே உண்மைகளும் ஒரு நாள் உரக்க வெளிப்படும் என்று நினைக்கிறோம்'' என்கிறார்கள் சம்பந்தப்பட்டவர்கள்.

தமிழ் சினிமாவைக் கலக்கக் காத்திருக்கும் விஐபி வாரிசுகள்.

இதனால் சகல தமிழர்களுக்கும் அறிவிப்பது என்னவென்றால், மிக விரைவில், தமிழகத்தின் தலைப்புச் செய்திகளை அலங்கரிக்க இருக்கும் பிரபலங்கள் வீட்டு வாரிசுகளைப்பற்றி ஒரு நியூஸ் ரீல் முன்னோட்டம் இங்கே...

அக்ஷரா ஹாசன், த/பெ. கமல்ஹாசன் 

அக்ஷரா ஹாசனுக்கு இப்போது வயது 20. மணிரத்னத்தின் அடுத்த பட ஹீரோயின் எனச் செய்தி ஏதாவது முளைத்துக் கொண்டே இருக்கும். ஆனால், எதற்கும் அலட்டிக்கொள்ளாமல் இருப்பது அக்ஷரா ஸ்டைல். கால் பந்து வீரர் டேவிட் பெக்காம்தான் அக்ஷராவின் ட்ரீம் ஹீரோ. அம்மா சரிகா நடிக்க, ராகுல் தொல்கியா இயக்கிய 'சொசைட்டி’ என்னும் படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றினார் அக்ஷரா. சினிமாட்டோகிராஃபியிலும் ஆர்வம் அதிகம். எடிட்டிங், ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் என கேமராவுக்குப் பின் உள்ள விஷயங்கள் மீதுதான் இப்போது அக்ஷராவின் கவனம். சல்சா, ஹிப் ஹாப், பால்ரூம் லாட்டின் என அத்தனை வித நடனங்களையும் பயின்று இருக்கிறார். வெளி இடங்களில் பேசாமல் சமர்த்தாக இருக்கும் அக்ஷரா, பள்ளியில் படிக்கும்போது குறும்புக்கார மாணவியாம். அக்ஷராவுக்கு காமெடியும் ஆக்ஷனும் அவ்வளவு இஷ்டம். பிடித்த படம் 'மேட்ரிக்ஸ்’. சினிமாவில் பிடித்த ஹீரோ... அப்பா கமல் மட்டுமே!

நந்தன், த/பெ. மணிரத்னம்

மணிரத்னம் - சுஹாசினியின் மகன் நந்தன். டீன்-ஏஜ் தாண்டியும் இன்னமும் பால் முகம் மாறவில்லை! தீவிரமான வாதப் பிரதிவாதங்களுடன் 'கான்டோர்ஸ் ஆஃப் லெனினிசம்’ (Contours of Leninism) என்ற புத்தகத்தை எழுதியபோது நந்தனின் வயது 16. அவ்வப்போது 'மார்க்சிஸ்ட்’ போன்ற தத்துவ இதழ்களில் நந்தனின் கட்டுரைகளும் வெளிவரும்!

அம்மா - அப்பாவின் சினிமா கனெக்ஷன்பற்றியோ, தான் இன்னாரின் மகன் என்றோ எங்கும் எப்போ தும் அடையாளப்படுத்திக்கொள்ள மாட்டார். தன் தாய் - தந்தை குறித்து யாராவது கேட்டால், இருவரும் திரைப்படத் துறையைச் சேர்ந்தவர்கள் என்று மட்டுமே சொல்வாராம். குறிப்பாக விசாரித்தால் மட்டுமே பெற்றோர் யார் என்ற விவரம் சொல்வாராம்.


நந்தன், இப்போது இங்கிலாந்தின் எடின்பரோ பல்கலைக்கழக மாணவர். மார்க்சியத் தத்துவங் களைப் படிக்கத் தொடங்கியதே நந்தனின் அரசி யல் ஈடுபாட்டுக்குக் காரணம். உலக இலக்கியங்கள் மற்றும் சித்தாந்தங்கள் குறித்த நூல்களை எல்லாம் வாசித்து இருக்கிறார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நடவடிக்கைகளில் ஆர்வமுடன் பங்கேற்பது வழக்கம். ஒரு முறை நிருபர் ஒருவர், ''உங்கள் பெற்றோர் நீங்கள் இப்படி ஒரு கட்சியின் தொண்டராகப் பணியாற்றுவது குறித்து என்ன நினைக்கிறார்கள்?'' என்று கேட்க, ''என்னைப் போல் இங்கு பலர் வந்திருக்கிறார்கள். அவர்களின் பெற்றோர்கள் குறித்து இப்படிக் கேட்காத நீங்கள், என்னிடம் மட்டும் ஏன் கேட்கிறீர்கள்?'' என்று கேள்வியையே பதிலாக அளித்தார். பிரகாஷ் காரத், சீத்தாராம் யெச்சூரி போன்றவர்களிடம் அரசியலும் தத்துவமும் பேசுவாராம் நந்தன். இங்கிலாந்தில் இருந்தாலும் பரமக்குடி படுகொலைகளில் இருந்து பல்வேறு அரசியல் விவகா ரங்கள் வரை சமூக இணையதளங் களில் தன் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டே இருக்கிறார்!

விஜய் பிரபாகரன், த/பெ. 'கேப்டன்’ விஜயகாந்த்

அப்பாவின் பாணியில் முதலில் சினிமாவில் கால் பதிக்க இருக் கிறார் விஜயகாந்த்தின் மூத்த மகன் விஜய் பிரபாகரன். சில மாதங் களுக்கு முன் வரைகூட தம்பி ஏக வெயிட். ஆனால், ஒவ்வொரு நாளும் ட்ரில் எடுக்கும் கடுமையான உடற்பயிற்சிகள் அவரைச் செதுக்குகின்றன. எஸ்.ஆர்.எம். கல்லூரியில் மூன்றாவது வருஷம் பொறியியல் படிக்கும் பிரபாகரனுக்குப் பிடித்தது... சினிமாவும் கிரிக்கெட்டும். விஜயகாந்த்துக்கு கிரிக்கெட் வீரர்களை அறிமுகப்படுத்தி விளையாட்டின் மீது ஆர்வம் உண்டாக்கியதே இவர்தான். ஒரு நாள் விடுமுறை கிடைத்தாலும் மாயா ஜால் மைதானத்துக்கு கிரிக்கெட் பேட் சகிதம் கிளம்பிவிடுவார் விஜய். அணியின் கேப்டன்... வேறு யாராக இருக்க முடியும்? கேப்டன் மகன்தான் கேப்டன்!


அடிக்கடி ஹேர் ஸ்டைல் மாற்றுவது பிரபாகரனின் பொழுதுபோக்கு. 'ஸ்பைக்’தான் பிடித்த ஹேர் ஸ்டைல். ஒவ்வொரு வருட விடுமுறையிலும் வெளிநாடு போய்விடுவார். அரசியலிலும் விருப்பம் உண்டு. ஆனால், அரசியலில் நேரடி என்ட்ரி கொடுப்பதற்கு இது நேரம் இல்லை என்று நெருக்கமான நண்பர்களிடம் பகிர்ந்துகொள்வார்.

கல்லூரியில் மாணவர்கள் என்ன உதவி கேட்டாலும் மறுக்காமல் செய்வார். பிடித்த நடிகை எமி ஜாக்சன். பிடித்த நடிகர்..? விஜயகாந்த் தவிர வேறு யாராக இருக்க முடியும்? சந்தானம் காமெடி பிடிக்கும். 21 வயது பிரபாகரனுக்கு சாக்லேட்கள் என்றால் இப்போதும் உயிர். ஃபேஸ்புக் பக்கத்தில் பிடித்த வாக்கியமாக எழுதிஇருப்பது... 'வம்புச் சண்டைக்குப் போறது இல்லை... வந்த சண்டையை விடுவதுஇல்லை!’

கௌதம், த/பெ. 'நடிகர்’ கார்த்திக், தலைவர், அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி

கார்த்திக் - ராகினியின் முதல் வாரிசு கௌதம். வீட்டில் சார் செம செல்லம். கௌதம் குன்னூரில் படிக்க வேண்டும் என்பதற்காகவே அங்கு இடம்பெயர்ந்தார் ராகினி. கௌதமுக்கு அப்படியே அப்பா கார்த்திக்கின் மேனரிஸம். இப்போது 18 வயதை எட்டிப் பிடித்து இருக்கும் கௌதம், பெங்களூரில் ஃபேஷன் டிசைனிங் படித்திருக்கிறார். கௌதமின் படங்கள், தகவல்கள் துளியும் கசியாமல் கார்த்திக் பொத்திப் பொத்திப் பாதுகாக்கிறார். விரைவில் சினிமாவில் என்ட்ரி கொடுக்கத் தயாராகிவருகிறார் கௌதம். பெங்களூரு நடிப்புப் பயிற்சிக் கல்லூரியில் பயிற்சி எடுத்துவரும் கௌதம், அடுத்த வருடம் அனுபம் கெர் நடத்தும் நடிப்புப்பள்ளியில் சேர மும்பைக்குச் செல்லலாம்!

வீட்டுக்கு எந்த விருந்தினர் வந்தா லும் தன் மகன்கள் கௌதம், காயன்பற்றிப் பெருமையாகப் பேசுவார் கார்த்திக். ஆனால், யார் கண்ணிலும் அவர்களைக் காட்ட மாட்டார். நெருங்கிய உறவினர் - நண்பர்களே கௌதமைப் பார்த்து வருஷமாச்சு என்கிறார்கள். மணிரத்னத்திடம் கௌதமுக்கான அழகான காதல் கதை ரெடி. கௌதம் மேனனும் கௌதமை அறிமுகப்படுத்தக் காத்து இருக்கிறார். தேர்ந்தெடுத்த ஹாலிவுட் படங்களை மகனைப் பார்க்கவைத்துக்கொண்டே இருக்கிறார் கார்த்திக்.

குறளரசன், த/பெ. விஜய. டி.ராஜேந்தர்

நடிகை சுவாதியை திருமணம் செய்யும் ஐடியா இல்லை. - தேவிஸ்ரீபிரசாத்

சார்மி, சுவாதி என நடிகைகளுடன் தொடர்புபடுத்தி வரும் கிசுகிசு பற்றி இசை அமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் கூறியது: எந்த இசை அமைப்பாளரும் என்னைப்போல் நடிகைகளுடன் தொடர்புபடுத்தி கிசுகிசுவில் சிக்கியதில்லை. இது எனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. முதலில் மம்தா மோகன்தாஸுடன் காதல் என்றனர். சார்மியை திருமணம் செய்யப்போவதாக எழுதினார்கள். இப்போது சுவாதியுடன் இணைத்து எழுதுகிறார்கள். 


இந்த நடிகைகள் எல்லோருமே எனக்கு நல்ல தோழிகள். சுவாதியுடன் மேடைகளில் ஜோடி சேர்ந்து ஆடியதால் அவரை மணக்கப்போவதாக சொல்கிறார்கள். அதில் உண்மை இல்லை. என் பெற்றோர் என்னை திருமணம் செய்துகொள்ளச் சொல்கிறார்கள். ஆனால் திருமணம் ஆன பலர் இப்போது பேச்சுலர் ஆகிக்கொண்டிருக்கிறார்கள். 
எனவே இப்போதைக்கு திருமணத்தை பற்றி யோசிக்கவில்லை. இசையில்தான் கவனம். வார இறுதிநாட்களில் நான் பார்ட்டிகளில் பொழுதை கழிப்பதாக நினைக்கிறார்கள். சாப்பிடுவதற்கும், தூங்குவதற்கும்கூட எனக்கு நேரம் இல்லை. இசையில் பிஸியாக இருக்கிறேன்.

விளம்பரம் இல்லாமல் துவங்கிய விஜய் பட ஷூட்டிங்!


விஜய், காஜல் அகர்வால் மற்றும் பலர் நடித்து வரும் படம் துப்பாக்கி. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க இருக்கிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்து வருகிறார். 

விஜய் நடித்த சச்சின் படத்தினை தயாரித்த கலைப்புலி எஸ்.தாணு இப்படத்தினை தயாரிக்க இருக்கிறார். படப்பிடிப்பு தற்போது மும்பையில் நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு துவங்கிய நாளில் படத்தின் விளம்பரங்கள் பேப்பரில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. 

ஆனால் எவ்வித விளம்பரமும் இல்லாமல் படப்பிடிப்பை துவங்கி விட்டார்கள். இதற்கு காரணம் என்னவென்று விசாரித்தால், ஏ.ஆர்.முருகதாஸ் ஏழாம் அறிவு படத்தினை போலவே மொத்த படத்தினை முடித்து விட்டு படத்தினை விளம்பரப்படுத்தால் என்று முடிவு எடுத்து இருக்கிறாராம். 
ஏழாம் அறிவு படத்தின் விளம்பரம் வெளிவரும் முன்பே படத்தினை பற்றி பல்வேறு தகவல்கள் வெளிவந்தன. அது போல இப்படத்திற்கு எந்த ஒரு தகவலும் வெளியாக கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறாராம் ஏ.ஆர்.முருகதாஸ். துப்பாக்கி படத்தினை பற்றி இதுவரை வந்த தகவலில் எதுவுமே உண்மையில்லையாம். 

துப்பாக்கி தோட்டாவை போல சீறி பாய இருக்கிறார் விஜய் என்பது மட்டும் உறுதி.

ரஜினியின் இன்றைய நிலை _ படங்கள் இணைப்பு

ரஜினியின் இன்றைய நிலை _ படங்கள் இணைப்பு

ரகசிய போலீஸில் பெண் பகிரங்க வாக்குமூலம்! மீண்டும் நித்யா கைது?

""ஹலோ தலைவரே... ... தப்பு செஞ்சு அம்பலப்பட்ட பிறகும், புகார் கொடுக்க ஆளில்லைங்கிறதால தண்டனையிலிருந்து தப்பிச்சிடலாம்னு நினைக்கிறவங்க பற்றி என்ன நினைக்கிறவங்க பற்றி என்ன நினைக்கிறீங்க?''

""தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும். தர்மம் மறுபடியும் வெல்லும்ங்கிற வாசகத்தைத்தான் நினைக்கத் தோணுதுப்பா.''

""நித்யானந்தா சாமியாரின் சரச வீடியோ வெளியான பிறகும், அவர் மேலே லெனின்தர்மானந்தா மட்டும்தானே புகார் கொடுத்திருக்காருன்னும், பாதிக்கப்பட்ட பெண்கள் யாராவது புகார் கொடுத் திருக்காங்களான்னுதான் நித்தி தரப்பு இதுவரை கொஞ்சம் தெனா வெட்டாகவே கேட்டுக்கிட்டிருந்தது. லெனின்தர்மானந்தாவின் புகாரின் பேரில் நித்தி மீதான வழக்கை சீரியஸா விசாரிச்சிக்கிட்டிருக்கும் கர்நாடக சி.ஐ.டி போலீசாருக்கு அந்த மாநில ஆளுந்தரப்பிலிருந்து ஏகப்பட்ட நெருக்கடி. வேகத்தைக் கட்டுப்படுத்தும்படி மாநில உள்துறை அமைச்சரே சொன்னாலும், சி.ஐ.டி.யின் வேகம் குறையலை. இந்த நிலைமையில்தான், நித்யானந்தாவால் பாலியல் பாதிப்புக்குள்ளான ஒரு பெண், சி.ஐ.டி போலீசாரிடம் புகார் கொடுத்திருக்கிறார்.''

""யார் அந்தப் பெண்?''

""புகார் கொடுப்பவர்களுக்கெல்லாம் நித்தி தரப்பால் கொலை மிரட்டல் வந்துக்கிட்டிருக்கிற நிலைமையில், அந்தப் பெண்ணின் பெயரையும் முகத்தையும் நாம ஏன் அடையாளம் காட்டணும். விசாரணை தீவிரமாகும்போது எல்லா விஷயங்களும் வெளியே வந்திடப்போகுது. ஆன்மீகங்கிற பேரில் நித்யானந்தா என்னவெல்லாம் பேசி, தன்னை எப்படியெல்லாம் ஏமாற்றினார், எத்தனை முறை சீரழிச்சாருங்கிற விவரத்தை அந்தப் பெண் சொல்லியிருப்பதால், இந்த வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டிருக்குது. பாதிக்கப்பட்ட பெண் கொடுத்திருக்கிற புகாரின் அடிப்படையில் நித்யானந்தா மீண்டும் கைதாவாராங்கிறதுதான் பரபரப்பான எதிர்பார்ப்பா இருக்கு.''

""இங்கே தமிழ்நாட்டிலும் விஜிலென்ஸ் துறை தீவிரமா செயல்பட்டு, லஞ்ச அதிகாரிகளை கையும் களவுமா பிடிக்குது. ஆனா, அவங்க மேலேயே நடவடிக்கை எடுக்க முடியாம அதிகார வர்க்கத்திலிருந்து நெருக்கடிகள் வருதாமே?''

""ஆமாங்க தலைவரே.. ...மின்சார வாரியத்தில் அசிஸ்டெண்ட் இன்ஜினியரான செல்வம்ங்கிறவரை வாரியத்தின் உள்ளடி வேலையில் ஈடுபடுபவர்களின் தூண்டுதலால் சஸ்பெண்ட் பண்ணிட்டாங்க. அந்த சஸ்பென்ஷனை ரிவோக் செய்வதற்காக அவர் சீஃப் இன்ஜினியர் சீனி வாசனை நாடினார். சீஃப் அதற்கு லஞ்சம் கேட்க, இது பற்றி விஜிலென்ஸிடம் புகார் கொடுத்தார் செல்வம். விஜிலென்ஸ் அறிவுரைப்படி செயல்பட்ட செல்வம், சீஃப் கேட்ட பணத்தோடு நேரில் போய் அவரை சந்தித்து கொடுத்தப்ப ரெடியா இருந்த விஜிலென்ஸ் அதிகாரிகள் மடக்கிட்டாங்க.'' 

""கையும் களவுமா சீஃப் இன்ஜினியர் சீனிவாசன் கைதானது பெரியளவில் பேசப்பட்டது.''

""தொடர்ந்து நடந்த விசா ரணையில் சீனிவாசனுக்கு பல பேங்க் அக்கவுண்ட் இருப்பதும், கோடிக் கணக்கில் பணம் பல இடங்களில் இருப்பதும் தெரிய வந்தது. அத னால் அவர் சஸ்பெண்ட் செய்யப் பட்டார். நிர்வாகத்தின் தவறான நடவடிக்கைகளால் சஸ்பெண்ட்டான ஏ.இ.செல்வத்தின் சஸ்பெண்ட்டை உடனே ரிவோக் செய்திருக்கணும். அதுதான் நடைமுறை. ஆனா, மின்வாரியமோ இதுநாள்வரை செல்வத்தின் சஸ்பெண்ட்டை ரத்து செய்யலை. அதே நேரத்தில், சீஃப் இன்ஜினியரின் சஸ்பென்ஷனை ரிவோக் செய்யும் வேலைகள் நடந்துக்கிட்டிருக்குது. சஸ்பெண்ட் டான நிலையிலும் சீனிவாசனை மின்துறை அமைச்சரின் வீட்டிலும், வாரிய சேர்மன் சி.பி.சிங்குடனும் அடிக்கடி பார்க்க முடியுதுன்னு டிபார்ட்மென்ட்டில் உள்ளவங்களே சொல்றாங்க.''

""கோலிவுட் வட்டாரம் சொல்ற ஒரு தகவலைச் சொல்றேன்.. வரும் 30-ந் தேதியன்னைக்கு தன்னோட ஆதரவாளர்கள் 1000 பேரோடு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி யில் சேரப்போறாரு சினிமா தயாரிப்பாளரான ரோஜா கம்பைன்ஸ் காஜா மொய் தீன். சினிமா துறையில் பல நெருக்கடிகளைத் தாண்டி வந்த காஜாமொய்தீன் இப்ப அரசியலில் காலடி எடுத்து வைக்கிறார். வரும் சட்டமன்றத் தேர்தலில் சிறுத்தைகள் கட்சி வேட் பாளரா இவர் களமிறங்கு வார்னு எதிர்பார்க்கப்படுது.''

""தேர்தல் நெருங்குதே... இனி கோலிவுட் ஆட்கள் அரசியலுக்குள் என்ட்ரியாகும் தகவல்களை நிறைய எதிர்பார்க்கலாம்.''

""சென்னையில் நடந்த டேவிஸ்கோப்பை டென்னிஸ் போட்டியில் பிரேசில் அணியை இந்திய அணி அபாரமா ஜெயித்திருக்குது. 5 ஆட்டங்கள் கொண்ட போட்டியில் முதல் இரண்டு ஆட்டத்தில் சீனியர்களான பயஸும் பூபதியும் ஜெயிக்க முடியாமல் போனாலும், அவர்கள் இருவரும் சேர்ந்து ஆடிய இரட்டையர் ஆட்டம், இளம் வீரர்களான சோம்தேவும், போபண்ணாவும் ஆடிய சிங்கிள் ஆட்டங்களில் ஜெயித்து 3-2 என்ற கணக்கில் இந்திய அணி வெற்றிபெற்று, உலக சுற்றுக்குத் தகுதி பெற்றிருக்குதே..''

""பெருமையான விஷயம்தாங்க தலைவரே.. முதல்வர் கலைஞர் குலுக்கல் முறையில் ஆட்டங்களை நிர்ணயித்தார். இந்த விளையாட்டுப் போட்டியை அனைத்து இந்திய டென்னிஸ் சங்கத்தின் துணைத் தலைவரும் உள்துறை அமைச்சர் ப.சியின் மகனுமான கார்த்தி சிதம்பரம்தான் சென்னையில் நடத்துவதில் முன்னின்றார்.''

""ஆனால், இந்திய டென்னிஸை உலக அரங்கில் உயர்த்தி யவர்களான தமிழகத்தைச் சேர்ந்த விஜய்அமிர்தராஜையோ, ரமேஷ் கிருஷ்ணனையோ இந்த போட்டிக்கு விருந்தினராகக் கூட அவர் அழைக்கலைங்கிற வருத்தம் டென்னிஸ் ஆர்வலர்களிடம் இருக்குது. இத்தனைக்கும், டென்னிஸ் வீரர்களை உருவாக்குவதற்காக விஜய் அமிர்தராஜ் ஒரு அகாடமியே நடத்தி வருகிறார். பயஸ், பூபதி இருவர் உள்பட இன்றைய பிரபல டென்னிஸ் வீரர்கள் பலரும் இந்த அகாடமியில் பயிற்சி எடுத்தவங்கதான். அப்படிப்பட்ட அமிர்தராஜை அழைக்காத கார்த்தியின் செயல் விமர்சனத்திற்குள்ளாகியிருக்குது.''

இனிமே... நோ கிஸ்!- அஞ்சலி

'அங்காடித் தெரு' அஞ்சலியுடன் ஒரு ஹாய் , ஹலோ...
''எல்லாரும் டாப் ஹீரோக்களுடன் நடிக்க ஆசைப்படுவாங்க. நீங்க புதுமுகங்களாத் தேடித் தேடி நடிக்கக் காரணம் என்ன?''

'' 'கற்றது தமிழ்' ஜீவா சார் பெரிய ஹீரோதான். அவர், 'எனக்கு புதுமுகப் பொண்ணு வேணாம். பாப்புலர் ஹீரோயின்தான் வேணும்'னு சொல்லி இருந்தா, என் கதி என்ன ஆகி இருக்கும்? புதுமுகத்தோட மட்டும்தான் நடிக்கணும்னு சாமிக்கு வேண்டுதல் எல்லாம் இல்லை, அது தானா அமையுது! என் கேரக்டர் நல்லா இருந்தா... சம்மதம்தான்!''

'' 'மகிழ்ச்சி' படத்திலும் 'லிப் டு லிப்' நெருக்கம் தெரிகிறதே?''
''கதைப்படி அதில் நான் ஹீரோவின் அத்தை மகள். கிராமங்களில் மாமனிடம் நெருக்கமா இருப்பது யதார்த்தம்தானே? என்னை யார் பார்த்தாலும் 'அங்காடித் தெரு'வில் என் நடிப்பைப் பாராட்டிட்டு, அந்த முத்தக் காட்சியைத்தான் விலாவாரியாக் கேட்கிறாங்க. அதைப்போல, 'மகிழ்ச்சி'யிலும் அதே கேள்வி ஆரம்பிச்சிடுச்சா? போதும் சாமி, இனிமே முத்தக் காட்சியில் நடிக்கவே மாட்டேன்!''



'சிந்து சமவெளி' அனகா முதலில் ஒப்பந்தமானது, 'மைனா' படத்திலாம். படப்பிடிப்பில் இடைவெளி ஏற்பட... கிடைத்த கேப்பில் சாமி படத்துக்கு கால்ஷீட் கொடுத்துவிட்டார் அனகா. 'சிந்து சமவெளி' படத்தைப் பார்த்து டென்ஷனான 'மைனா' டைரக்டர் பிரபு சாலமன், ''உனக்குத் தமிழ் சினிமாவில் பெரிய ஓப்பனிங் கிடைக்கும்னு கனவில் இருந்தேன். நீயோ, மாமனாரை வளைச்சுப்போடுற கேரக்டர்ல எப்படித்தான் ஒப்புக்கிட்டு நடிச்சியோ?'' என்று மைனாவுக்கு செம பரேடாம்!

'பையா' சூப்பர் ஹிட் கொடுத்தும் டைரக்டர் லிங்குசாமிக்கு அடுத்த படத்துக்கான ஹீரோவின் தேதிகள் அமையவில்லை. முதலில் சிம்பு... அப்புறம் விஜய்... இருவருக்கும் கால்ஷீட் அமையாமல் இழுக்க, ஆர்யாவை அமுக்கிவிட்டார் லிங்கு. படத்தின் தலைப்பு 'வேட்டை' பாஸ் ஆர்யா... இனி பிக் பாஸ்!



மலைத் தொடர் நடிகை பல்டி அடித்துப் பார்த்தும் கார்டன் மேடம் தரிசனம் கிடைக்கவில்லை. வேறு ரூட்டில் வேலையை ஆரம்பித்துவிட்டாராம் நடிகை. கட்சியின் கரைவேட்டிகளை கரெக்ட் செய்து கல்லா கட்டுகிறாராம் இப்போது!



அரசியல் நட்சத்திரத்தின் துணைவருக்கு கிசுகிசு ஹீரோயின் மீது பொல்லாத மோகமாம். அவுட்டோர் போயிருந்தபோது, அம்மணியின் கையைப் பிடித்து கண்ணீர் மல்க ஆசையைச் சொன்னாராம். சாரின் அழுகைக் கதை கேட்டு, யூனிட் இன்னும் சிரிக்கிறது!

மலையாள மைனாவுக்காக 12 ஆயிரம் கி.மீ. அலைந்த இயக்குநர்!

வித்தியாசமான கதை, களத்தில் படம் பண்ண வேண்டும் என்பதையே லட்சியமாகக் கொண்ட இயக்குநர் பிரபு சாலமன், "மைனா' படத்திலும் அந்த முயற்சியைத் தொடர்ந்துள்ளார்.சுருளி, மைனா இருவரும் சிறுவயதில் நட்பாகி, பருவம் வந்ததும் காதலர்களாகிறார்கள்.


காதலர்களாக அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள்தான் "மைனா' ஒன் லைன் கதை.

கதைக்களம் தமிழ்நாடு- கேரளா எல்லையில் இருக்க வேண்டும்; அது இதுவரை சினிமாவில் காட்டப்படாத கிராமமாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட ஒரு கிராமத்தைத் தேடுவதற்காக பன்னிரண்டாயிரம் கிலோமீட்டர் பயணம் செய்து, போடியிலிருந்து 20-ஆவது கிலோமீட்டரில் உள்ள குரங்கணி கிராமத்தைக் கண்டு பிடித்திருக்கிறார் பிரபு சாலமன்.
குரங்கணியில் ஆரம்பிக்கும் கதை- செவ்வங்குடி, மூணாறு டாப் ஸ்டேஷன், மூணாறு டவுன், பூப்பாறை, முந்தல், போடி, தேனி வழியாக பயணப்பட்டு பெரியகுளத்தில் முடிகிறது.


படப்பிடிப்புக்கு எந்த வசதியும் இல்லாததால், பொதி கழுதைகள் மூலம் காமிரா மற்றும் உபகரணங்களை ஏற்றிச் சென்று, ஜெனரேட்டர் கொண்டு செல்ல முடியாததால் இயற்கை வெளிச்சத்தில் படமாக்கி இருக்கிறார் கள் பிரபுசாலமனும் ஒளிப்பதிவாளர் சுகுமாரும்.

ஹீரோ சுருளியாக கூத்துப் பட்டறையில் பயிற்சி பெற்ற விதார்த், மலையாள மைனா அமலா, மலையாள நடனப் பள்ளியில் பயிற்சி பெற்ற சேது, சூசன் இவர்களுடன் தம்பி ராமையா காமெடி கலந்த குணச்சித்திர வேடத்தில் நடிக்கிறார். இவர்களோடு குரங்கணி மண்ணின் மைந்தர்களும் வாழ்ந்திருக்கிறார்கள்.

""தமிழ் சினிமாவில் கிராமம் என்றால் செம்மண் பூமி, கரிசல் பூமிதான் ரசிகர்கள் மனதில் பதிந்திருக் கும். இந்தக் கதைக்களம் எந்த சினிமா வையும் ஞாபகப்படுத்தாது. படம் பார்த்துவிட்டு வரும் ரசிகர்கள் இரண்டே கால் மணி நேரம் எங்கோ ஒரு புதிய உலகத்துக்குச் சென்று வந்த உணர்வைப் பெறுவார்கள்'' என்று சத்தியம் செய்து சொல்கிறார் இயக்குநர் பிரபு சாலமன்!

தொடர்ந்து வெற்றிப் படங்களைத் தயாரித்து வரும் கல்பாத்தி எஸ். அகோரம் க்ரூப்தான் இந்தப் படத்தையும் தயாரித்திருக்கிறது. உதயநிதி ஸ்டாலின் வாங்கி வெளியிட உள்ளார்.

""படத்தைப் பத்தி நான் பேசப் போவதில்லை. படம் பேசும்'' என்கிறார் உதயநிதி ஸ்டாலின்!

சொன்ன மாதிரியே பேசியும் விட்டது படம்.