Saturday, May 7, 2011

அன்னா ஹசாரேயை ஆதரிப்போம்


ஊழலுக்கு எதிராக டெல்லியில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ள காந்தியவாதி அன்னா ஹசாரேயை ஆதரிப்போம், இந்தியாவின் ஆன்மா இன்னமும் விழித்துக் கொண்டிருக்கிறது என்பதன் உதாரணம் அன்னா ஹசாரே, அவரது செயல்பாடுகள் காந்திய வழி வந்தவை, அவரது போராட்டத்திற்கு அனைவரும் துணைநிற்போம். ஆதரவுக்குரல் கொடுப்போம்
இன்று அன்னா ஹசாரேயை ஆதரித்து கரூரில் நடைபெற்ற உள்ள அடையாள உண்ணாவிரதம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்,
அன்னா ஹசாரே பற்றிய விபரங்களை அறிந்து கொள்ள இளங்கோ ராமசாமி அனுப்பியுள்ள மின்னஞ்சலை இணைத்திருக்கிறேன்
••
ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதா வரைவு பணியில் சிவில் சமூகத்தினருக்கும் பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி பிரபல சமூக சேவகர் அண்ணா ஹசாரே டெல்லியில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளார்.
ஊழல் தடுப்பு மசோதா வரைவு பணியில் முற்றிலும் அரசு அதிகாரிகள் மட்டும் இடம் பெறாமல், சாமான்ய மக்கள் சமூகத்தை சேர்ந்த பிரதிநிதிகளுக்கும் 50 விழுக்காடு இடம் அளிக்க வேண்டும் என்று ஹசாரே வலியுறுத்தி வருகிறார்.
Read more »

No comments:

Post a Comment