Wednesday, December 7, 2011

31 வயது பெண்மணி 9 மாத குழந்தையான விசித்திரம்! (காணொளி இணைப்பு

என்றும் இளமையுடன் இருக்க வேண்டும் என்று ஆண்கள் பெண்கள் அனைவரிடத்திலும் இருக்கும் ஆசை. ஆனால் உங்களுக்கு 30 வயதை தாண்டிவிட்டாலே போதும் முதுமை என்று மற்றவர்கள் கேலி பண்ணத்தொடங்கிவிடுவார்கள்.


ஆனால் நாம் தரும் இந்த செய்தி உங்களுக்கு நிச்சயம் ஆச்சரியம் ஊட்டுவதாகவே இருக்கும். ஆம் 31 வயது நிறைந்த ஒரு பெண்மணி இன்னும் 9 மாதக்குழந்தையாகவே இருக்கிறாள் என்றால் நம்புவீர்களா? இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது:-
பிறேசில் நாட்டில் மே மாதம் 1981 ம் ஆண்டு பிறந்தவர் maria audete என்பவர். இவர் பிறக்கும் போது சாதாரண குழந்தைகள் போன்றே பிறந்திருக்கிறார்.

 

இருப்பினும் இவரை தாக்கிய விசித்திரமான நோயினால் இவரின் வளர்ச்சி குன்றி 31 வயதாகிய பின்னரும் சின்னக்குழந்தையின் தோற்றத்துடனையே காணப்படுகிறார். கிட்டத்தட்ட 9 மாதக்குழந்தை எப்படியிருக்குமோ அப்படித்தான் இவரும் இருக்கிறார். 

இவரின் நிலமையைப்பார்க்கும் போது மிக்க பரிதாபமாகவே உள்ளது. எனினும் என்றும் இளைமையாக இருக்கிறாரே என்று பெருமைப்பட்டுக்கொள்வதை விட அவருக்கு வேற எந்த ஆறுதலும் கிடையாது என்றே சொல்ல வேண்டும்.






No comments:

Post a Comment