
விபச்சாரம் என்ற சொல் இப்போது பயன்படுத்தப்படுவதில்லை.மரியாதைக்குறைவாக இருப்பதால் பாலியல் தொழிலாளர்கள் என்று அழைக்க ஆரம்பித்தார்கள்.இந்தியா-பாலியலும் பரிதவிப்பும் என்ற இடுகையில் பகிர்ந்து கொண்ட்துபோல இம்மாற்றம் எய்ட்ஸ் வந்த பிறகு ஏற்பட்ட ஒன்று.அவர்களது ஒத்துழைப்பு இல்லாமல் மிரட்டிக்கொண்டிருக்கும் இந்த நோயை கட்டுப்படுத்துவது கஷ்டம்.

வாடிக்கையாளர்கள் அப்படி தேர்ந்தெடுத்து கேட்பதுதான் காரணம் என்கிறார்கள்.விவஸ்தை கெட்ட பணம் படைத்தவர்களும்,அரசியல்வாதிகளும்தான் இந்தியாவின் மிகப்பெரிய நோய்.நாற்பது சதவீத மக்களை வறுமையில் வைத்திருக்கும் நாட்டில் இதெல்லாம் ஆச்சரியமான விஷயம் இல்லை.வறுமை மட்டுமல்ல கருப்புப்பணம்,ஊழல்,வரதட்சணை,மது,பெண்ணடிமை எல்லாவற்றுக்கும் இதில் தொடர்பிருக்கிறது.

அரசியல்வாதிகள் ஊழல் மூலம் கருப்புப்பணமாக வெளிநாட்டில் தேக்கி வைத்துக்கொண்டு வறுமையை குறைக்க விடாமல் பார்த்துக்கொள்கிறார்கள்.அப்போதுதான் கிழவனுக்கு கல்லூரிப்பெண் கிடைப்பாள்.தவிர இன்றைய நுகர்வோர் கலாச்சாரத்தில் தேவைகளும் அதிகமாகிவிட்ட்து.விலைவாசியும் ஏறிப்போய்விட்ட்து.
ஒரே துணியை எத்தனை நாளுக்கு துவைத்து போட்டுக்கொண்டிருப்பது? வீட்டில் ஒரு பொருளும் இல்லை.மாப்பிள்ளை வருவார்களா? இப்படி எத்தனையோ கஷ்டங்கள் ஏழைகளுக்கு! ஒரு நாளைக்கு இரண்டாயிரம் ரூபாய் வருகிறது என்று ஆசை காட்டி பலியாக்குகிறார்கள்.இவர்களை பிரைன்வாஷ் செய்யும் புரோக்கர்களுக்கு இருப்பதில் அதிக பட்ச தண்டனை வழங்கவேண்டும்.
|
No comments:
Post a Comment