Friday, November 25, 2011

கல்லூரி மாணவிகளை விபச்சாரத்தில் தள்ளிய பெண்புரோக்கர்

சேலத்தில் விபச்சார பெண் புரோக்கரை காவல்துறையினர் கைது செய்தனர். வாடிக்கையாளர் போல நடித்து திட்டமிட்டு பிடித்துவிட்டார்கள்.கைது செய்யப்பட்ட பெண் புரோக்கர் கொடுத்த வாக்குமூலத்தில் உள்ள ஒரு விஷயம்,கல்லூரி மாணவிகளின் வறுமையை பயன்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது.ஒரு மாணவிக்கு இரண்டாயிரம் ரூபாய் கொடுத்த்தாக கூறியிருக்கிறார்.தொழிலதிபர்கள்,அரசியல்வாதிகள் என்று பெரும்புள்ளிகள்தான் வாடிக்கையாளர்கள்.

விபச்சாரம் என்ற சொல் இப்போது பயன்படுத்தப்படுவதில்லை.மரியாதைக்குறைவாக இருப்பதால் பாலியல் தொழிலாளர்கள் என்று அழைக்க ஆரம்பித்தார்கள்.இந்தியா-பாலியலும் பரிதவிப்பும் என்ற இடுகையில் பகிர்ந்து கொண்ட்துபோல இம்மாற்றம் எய்ட்ஸ் வந்த பிறகு ஏற்பட்ட ஒன்று.அவர்களது ஒத்துழைப்பு இல்லாமல் மிரட்டிக்கொண்டிருக்கும் இந்த நோயை கட்டுப்படுத்துவது கஷ்டம்.

பெண் புரோக்கர் கார்ப்பரேட் லெவலில் தொழில் நட்த்தியிருக்கிறார்.ஆந்திரா சென்று ஒரு வாரத்திற்கு 45000 ரூபாய் பேரம் பேசி இரண்டு பெண்களை அழைத்து வந்த்தாக வாக்குமூலத்தில் பெண்புரோக்கர் தெரிவித்துள்ளார்.இந்தியாவில் லட்சக்கணக்கான பெண்கள் பாலியல் தொழிலில் இருக்கிறார்கள்.சேலத்தில் ஆயிரக்கணக்கில் இருக்கிறார்கள்.ஏன் ஆந்திரா போக வேண்டும்? கல்லூரி மாணவிகளுக்கு ஏன் வறுமையை பயன்படுத்தி வலை விரிக்க வேண்டும்?

வாடிக்கையாளர்கள் அப்படி தேர்ந்தெடுத்து கேட்பதுதான் காரணம் என்கிறார்கள்.விவஸ்தை கெட்ட பணம் படைத்தவர்களும்,அரசியல்வாதிகளும்தான் இந்தியாவின் மிகப்பெரிய நோய்.நாற்பது சதவீத மக்களை வறுமையில் வைத்திருக்கும் நாட்டில் இதெல்லாம் ஆச்சரியமான விஷயம் இல்லை.வறுமை மட்டுமல்ல கருப்புப்பணம்,ஊழல்,வரதட்சணை,மது,பெண்ணடிமை எல்லாவற்றுக்கும் இதில் தொடர்பிருக்கிறது.

மேலே சொல்லப்பட்ட சமூகப்பிரச்சினைகளும் ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்டுள்ளவையே! பெற்ற குழந்தைகள் மீது அக்கறையின்றி குடித்துவிட்டு திரிபவன் பிள்ளைகளை பாலியல் தொழிலில் தள்ளுகிறான்.எத்தனை சவரன் போடுவார்கள் என்று கேட்கும் இளைஞன் இவர்களை விபச்சாரத்தில் தள்ளுகிறான்.காதிலோ,கழுத்திலோ தங்கம் இல்லாத பெண் விலை போவது கஷ்டமாக இருக்கிறது.

அரசியல்வாதிகள் ஊழல் மூலம் கருப்புப்பணமாக வெளிநாட்டில் தேக்கி வைத்துக்கொண்டு வறுமையை குறைக்க விடாமல் பார்த்துக்கொள்கிறார்கள்.அப்போதுதான் கிழவனுக்கு கல்லூரிப்பெண் கிடைப்பாள்.தவிர இன்றைய நுகர்வோர் கலாச்சாரத்தில் தேவைகளும் அதிகமாகிவிட்ட்து.விலைவாசியும் ஏறிப்போய்விட்ட்து.

ஒரே துணியை எத்தனை நாளுக்கு துவைத்து போட்டுக்கொண்டிருப்பது? வீட்டில் ஒரு பொருளும் இல்லை.மாப்பிள்ளை வருவார்களா? இப்படி எத்தனையோ கஷ்டங்கள் ஏழைகளுக்கு! ஒரு நாளைக்கு இரண்டாயிரம் ரூபாய் வருகிறது என்று ஆசை காட்டி பலியாக்குகிறார்கள்.இவர்களை பிரைன்வாஷ் செய்யும் புரோக்கர்களுக்கு இருப்பதில் அதிக பட்ச தண்டனை வழங்கவேண்டும்.

No comments:

Post a Comment