Friday, November 25, 2011

ஆங்கிலம் பேச ஆசைப்பட்டும் முடியாமல் போவது ஏன்?

நமக்கு பழக்கமில்லாத எதையாவது செய்யவேண்டிய நிலை வந்தால் பலருக்கு படபடக்கும்.சில நேரங்களில் நான்கு பேர் முன்னால் பேசுவது கூட நெஞ்சு அடித்துக்கொள்ளும்.நேர்முகத்தேர்வுக்கு செல்வது போன்றவற்றைக்கூட உதாரணமாக சொல்ல்லாம்.மனதில் இறுக்கம் ஏற்பட்டு உடலிலும் விளைவுகள் தெரியும்.சிலருக்கு கை நடுங்கும்.மனசு போராடும்.குறிப்பிட்ட நேரத்தில் சில சரியாகப்போய்விடும்.ஒரு கூட்ட்த்தில் பேச வேண்டும் என்றால் அறைகுறையாக பேசிவிட்ட கொஞ்ச நேரத்தில் பிரச்சினை தீர்ந்துவிடும்.

தொடர்ந்து சில காலங்கள் மனமும் உடலும் பாதிக்கப்படும் சூழ்நிலைகளும் உண்டு.சில விஷயத்தை மீண்டும் மீண்டும் செய்ய பழகிவிடும்.நம்மை மிரட்டும் விஷயத்தில் இருந்து ஒதுங்கிக் கொண்டால் மனம் அமைதியாகிவிடும்.கிராமத்தில் படித்த பலருக்கு ஆங்கிலம் பேசுவது ஒரு பெரிய பிரச்சினை.அது ஒரு பெரிய அறிவாளியை காட்டுவது போல நினைத்துக் கொள்பவர்கள் உண்டு.
இன்றும் அரசாங்க கடிதங்கள் பலவும் ஆங்கிலத்தில்தான் இருக்கிறது.சிலர் நிறுவனத்தில் சேர்ந்து படிப்பார்கள்.வீட்டில் புத்தகம் வாங்கி படிப்பார்கள்.ஆனால் எப்போதும் பேசவே மாட்டார்கள்.ஆனால் வேறுவழியே இல்லை.ஒருவருடன் உரையாட வேண்டும்,அவருக்கு ஆங்கிலம் மட்டும்தான் தெரியும்.இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் தானாக வார்த்தைகள் வந்து விழும்.பெரும்பாலும் சரியாகவும் இருக்கும்.அந்த மொழியிலேயே சிந்திப்பது எளிதாக இருக்கும்.

இம்மாதிரி சூழ்நிலைகளில் மனதில் ஏற்படும் இறுக்கமான நிலைதான் பிரச்சினை.சரியாக செய்யத் தெரிந்தாலும் முடியாமல் போய்விடுகிறது.தவறாக போய்விட்டால் நாலுபேர் என்ன நினைப்பார்கள் என்ற எண்ணத்திலேயே ஒட்டு மொத்தமாக வாய்ப்புகளை தவற விடுபவர்கள் அதிகம்.சமாளிக்கும் திறன் மனதுக்கே இருந்தாலும் சிலரால் முடியாமல் போய்விடுகிறது.தன்னம்பிக்கை குறைவும் ஒரு காரணம்.

எப்போதும் எல்லோராலும் உயர்வாகவே கருதப்படவேண்டும்.அத்தனை பேரும் தன்னை பெருமையாக நினைக்கவேண்டும் என்பதுதான் நிஜ பிரச்சினை.அதிகம் அடிபடாதவர்களுக்கு மனதில் இறுக்கம் அதிகமாகும்.வெளியே தலைகாட்டாமல் உள்ளே இழுத்துக்கொள்ளவே விரும்புவார்கள்.ஆனால் ஆசையும் இருக்கும்.ஆங்கிலம் பேசும் ஆசை இருக்கிறது.ஆனால் முடியவில்லை.

தேவை தன்னம்பிக்கைதான்.அது மட்டுமில்லாமல் நல்ல எண்ணங்களும்கூட! பொறாமை,வெறுப்பு,பழி வாங்கும் எண்ணம் போன்றவை மனதில் இருந்தால் மனம் இயல்பாகவே பாழ்பட்டுவிடுகிறது.இவர்களுக்கு எப்போதும் இறுக்கம் அதிகமாகவே இருக்கும்.உளவியலாளர்கள் பலரும் இதை உறுதி செய்கிறார்கள்.நல்ல எண்ணங்களுடன் இருக்கும்போது நமக்கே நம் மீது மதிப்பும் இருக்கும்.

சுய மதிப்பு இருக்கும்போது நாம் செயல்களை செய்ய தயங்குவதில்லை.தயக்கத்தை விட்டுவிட்டாலே நமக்கு வெற்றி எளிது.ஆங்கிலம் என்ன எத்தனை மொழிகளையும் கற்றுக்கொள்ளலாம்.பேசலாம்.அறிவு பெறலாம்.வாழ்க்கையின் வெற்றிகளுக்கும் இவை முக்கியமானவை.தயக்கமும்,கலக்கமும்தான் நம்மை தோற்கடிக்கின்றன.

No comments:

Post a Comment