Friday, November 25, 2011

கருணாநிதி முரசொலியில் எழுத நினைத்தது நான் இங்கே எழுதுகிறேன் (Just for fun)...

முக்கனிகள் மூன்று உண்டு -நான் படைத்த நான்காவது கனியே என் கனிமொழியே -உன் 
மூக்கிற்கு அழகூட்ட மூக்குத்தி போட்டு மகிழ்தோம் -எனக்கு அப்போது வலியில்லை-கட்டாயபடுத்தி கலட்டும்பொழுது-என் 
இதயம் இங்கே நொறுங்குதம்மா..

ஒவ்வொரு தாய் தந்தையும் தன் மகளை மாமியார் வீட்டுக்கு அனுப்பிய பின் மன மகிழ்ச்சி அடைந்திருவர் -மாமியார் வீட்டிற்குத்தான் சென்றிருகிறாய் 
மகிழ்ச்சி மட்டும் வரலையம்மா 

கொலுசு போடுவதை நிறுத்திவிட்டால் உன் அம்மா தயாளு -ஏன் தெரியுமா? அதன் சத்தத்தில் -உன் தூக்கம் கெடுமென்று -இன்று 
கொசுக்கடியில் எப்படியம்மா தூங்குகிறாய் ?
நீதிபதி சைனி வாசித்த தீர்ப்பு உனக்கு புரியாதது கண்டு என் மனம் பதை பதைதம்மா 
ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் எவ்வளவு தவறு என்று காலம் எனக்கு உணர்த்தி விட்டதம்மா!!

பட்டக் காலிலே படுமென்பார் கெட்டக் குடியே கெடுமென்பார்--அது யாருக்கு பொருந்துதோ இல்லையோ எனக்கு பொருந்துமம்மா!!!

நீ கட்டும் சேலையின் நிறம் சொல்லும் உன் கைப்பையின் நிறம் என்னவென்று- இன்று நீ தின்னும் கம்மங்களியின் நிறம் மட்டுமே என் கண்களில் தெரியுதம்மா 
மாளிகை போல் மனையிருந்தும்" நம்பர்-6 திகார் ஜெயில்" உன் நிரந்த மனையானதம்மா 


"இது சன் டிவியின் தமிழ்மாலை" -உலக தமிழர்களின் மனைதோறும் கேட்கும் மங்கள வாத்தியம் -இதை உன்னால் கேட்க முடிகிறதாம்மா..
கலைஞர் மகளே உனக்கு வழங்கிய தொலைகாட்சியில் கலைஞர் டிவி தெரியுதாம்மா -----

நான் உங்களிடம் வேண்டுவது ஒன்றே ஒன்றுதான் -கனியை வெளியே விடவிட்டாலும் பரவாயில்லை -கழிவரைக்காவது ஒரு கதவு போட்டு தாருங்கள் ..
உங்கள் கருணாநிதி --

No comments:

Post a Comment