Friday, November 25, 2011

பாலா படம் மிரள வைக்கும் ! : விஷால்

'அவன் இவன்' படத்தினை தொடர்ந்து பாலா இயக்கத்தில் நடிக்க மீண்டும் ஒப்பந்தமாகி இருக்கிறார் விஷால். தற்போது நடித்து வரும் 'சமரன்', அடுத்ததாக லிங்குசாமி படம், அதனைத் தொடர்ந்து பாலா படத்தில் நடிக்க கால்ஷீட் கொடுத்து இருக்கிறார்.

பாலா படத்தில் மீண்டும் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பது குறித்து விஷால் கூறியிருப்பது " அவன் இவன் படத்தினை தொடர்ந்து மீண்டும் இணைந்து ஒரு படம் பண்ணலாம் என்று பாலா சார் கூறினார். ஆனால் அப்படம் இவ்வளவு சீக்கிரமாக ஆரம்பமாகும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.

'அவன் இவன்' படத்தினை போல இந்த படத்தில் மாறுகண் உடையவராக எல்லாம் நடிக்கவில்லை. 
ஆனால் இந்த படத்தில் எனது பாத்திரப் படைப்பு படம் பார்ப்பவர்களை மிரள வைக்கும். இப்போதே அதைப் பற்றி பேசுவது சரியாக இருக்காது. கண்டிப்பாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு புது விருந்தாக அந்த படம் அமையும் " என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment