Friday, November 11, 2011

பேஸ்புக் இணையதளத்தில் சி.பி.ஐ புகுந்துள்ளது

பிரசித்தி பெற்ற சமூக வலைப்பின்னலான பேஸ்புக் இணையதளத்தில் மத்திய புலனாய்வுத் துறை (சி.பி.ஐ) போபால் அலுவலகம் தன்னையும் இணைத்துக் கொண்டுள்ளது. இவ்வாறு தொடங்கியதன் மூலம் வழக்குகள் சம்பந்தமாக பொதுமக்களின் உதவிகளைப் பெற்றுக் கொள்ள அது திட்டமிட்டுள்ளது.

மத்திய புலனாய்வுத்துறையின் போபால் அலுவலகம் பேஸ்புக்கில் கணக்கைத் தொடங்கியுள்ளது.

போபாலில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்தத் திட்டம் பெறும் வரவேற்பைப் பொறுத்து மற்ற இடங்களுக்கும் விரிவுபடுத்தப்படும். வழக்குகள் மற்றும் குற்றங்கள் சம்பந்தமான தகவல்களை மக்கள் இதன் மூலம் நேரடியாக தெரிவிக்கலாம். அண்மையில் போபாலில் ஷெஹ்லா மசூத் என்பவர் கொல்லப்பட்ட வழக்கில் மக்கள் பல பயனுள்ள தகவல்களை அளித்ததாக மத்திய புலனாய்வுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment