Thursday, November 10, 2011

பெண்ணின் அங்கங்களை வெட்டி உண்ட வங்கி ஊழியர்கள்

சில மனிதர்களின் எண்ணங்கள் ஆசைகள் வியப்பூட்டுபவையாகவோ அல்லது அதிர்ச்சி தருபவையாகவோ இருக்கும் என்பது நான் கற்ற உளவியல் எனக்கு சொல்லித்தந்த பாடம்.மற்றவர்களின் கவனத்தை தன் மீது ஈர்க்க சிறு பிள்ளைகள் சக பிள்ளையை அடிப்பது அல்லது அழுவது போன்ற செயல்களும் இதற்குள் அடங்கும்.



ஆனால் பெரியவர்கள் அதுவும் பொதுத்துறையில் உள்ள ஒருவர் மற்றவர்களை கவர்வதற்காக தன் வங்கி அலுவலகத்தில் வைத்து பெண்ணின் அந்தரங்க உறுப்புக்களை வெட்டி உண்பதென்பதை உங்களால் ஏற்கக்கூடியதாக உள்ளதா?


இந்த முகஞ்சுழிக்கும் செயல் குறித்த வங்கி ஊழியரின் பிறந்த நாளில் நடந்திருப்பது வேறு. இந்த பிறந்த நாள் விழாவில் குறித்த வங்கியின் பெண் ஊழியர்களும் கலந்து கொண்டிருந்ததை நாம் எவ்வாறு பார்ப்பது?

சரி இதெல்லாம் எங்கேயோ மேற்கத்தைய நாட்டில் அரங்கேறியிருக்கும் என தப்புக் கணக்கை மட்டும் போட்டு விடாதீர்கள்.எல்லாம் இலங்கை நாட்டின் தலைநகர் கொழும்பில் அரங்கேறியுள்ளது.

குறித்த ஊழியர் பெண்'கள் தொடர்பாக கொண்டிருக்கும் வக்கிர மனநிலையை நாம் இதன் ஊடாக அறியலாமல்லவா? நமக்கு புரியும் இந்த விசயம் ஏன் சக பெண்பணியாளர்களுக்கு புரியவில்லை? இவ்வாறான வக்கிர மனநிலை உள்ள ஊழியரை குறித்த தனியார் வங்கி ஏன் இன்னும் வேலையில் வைத்துள்ளது?

இவ்வாறான பெண்களை அவமதிக்கும் செயல்களை பெண்களின் உரிமைகள் சம்பந்தப்பட்ட அமைப்புக்கள் ஏன் எதிர்க்கவில்லை? ஏன் கண்டனம் தெரிவிக்கவில்லை?

இலங்கையில் இன மத வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு எல்லோராலும் பேணப்பட்டு வந்த இலங்கைக்கே உரித்தான பெண்களை மதிக்கும் கலாச்சாரம் போரின் பின்னர் விற்கப்பட்டு விட்டதா? இதை இலங்கை மக்கள் எவ்வாறு ஜீரணிக்கிறார்கள்? இவ்வாறானவர்களால் வங்கிகளில் வேலை செய்யும் பெண்களின் பாதுகாப்பு ஆபத்தாக உள்ளதா?

என்று பல கேள்விகளை நம்முன் எழுப்பியுள்ள இந்த சம்பவத்தில் வெட்டப்பட்டது பெண்ணின் அந்தரங்க உறுப்பு வடிவிலான் கேக். பிறந்த நாளுக்கு கேக் செய்ய வேறு டிசைன்கள் எவ்வளவோ இருந்தும் ஆபாசமான வடிவில் செய்யப்பட்ட கேக் வெட்டப்பட்டதை சாதாரண விசயமாக நாம் பார்த்து விட முடியாது.

மேலே உள்ள படத்தில் அவர்கள் எடுத்துக்கொண்ட குழுப்படத்தில் அவர்களின் கைகள் எங்குள்ளது என்பதை அம்புக்குறியால் காட்டியுள்ளேன்.அதை வைத்தே அவர்களின் மனநிலையை புரிந்து கொள்ளுங்கள். குறித்த கேக்கின் படங்கள் கீழே தரப்படுகிறது.







படங்கள்: தமிழ் சி.என்.என்

No comments:

Post a Comment