Saturday, December 3, 2011

'விஸ்வரூபம்' அதிக வரி கட்ட வைக்கும் ! : கமல்


வருமான வரித் துறையின் 150-வது ஆண்டு விழா ஞாயிற்றுக்கிழமை (ஜூலை24 ) சென்னையில் நடைபெற்றது. அவ்விழாவில் கமல்ஹாசன் கலந்து கொண்டார்.

அவ்விழாவில் தமிழக ஆளுநர் பர்னாலா கமல்ஹாசனுக்கு வரி ஏய்ப்பு செய்யாமல் இருந்ததற்காகவும், சரியான நேரத்தில் வருமான வரி செலுத்தியதற்காகவும் சான்றிதழ் வழங்கினார்.

அவ்விழாவில் கமல் பேசும்போது " வருமான வரி செலுத்துவது எனது கடமை. அதன்மூலம் எனக்கு வருமான வரித்துறையுடன் நெருக்கம் உள்ளது.

வருமான வரியை செலுத்த வேண்டியவர்கள் அதை தவிர்க்காமல், முறையாக செலுத்த வேண்டும். இது நாட்டுக்கு நாம் செய்யும் கடமையாக கருத வேண்டும்.

இப்போது நான் நடிக்க இருக்கும் 'விஸ்வரூபம்' படத்தின் மூலம் அடுத்த வருடம் நான் அதிக வருமான வரி செலுத்த வேண்டியவனாக இருப்பேன் " என்று கூறினார்.

No comments:

Post a Comment