Tuesday, January 4, 2011

இரண்டு ரூபா கவிதை

தள்ளி விட்டுப்போன
நாட்களில் விதைகொண்ட
கிழட்டு மரம் கிளை
யறுந்து நிர்மூலமாகி
ரத்தம் சுண்டி
சுவாசம் காய்ந்து



 





நரம்புகள் உடைந்து

பிணைப்புகள் வெந்து
சுடுகாட்டுக்குழியில்
கட்டை சாம்பலாகி
சித்திரச்சுவடாய் சுவரில்
கண்ணாடிக்கூண்டாய்
மூன்றாம் நாள்
காரியத்துக்கு அஸ்தி
கரைக்கப்பட்டு காத்திருக்க



முதல் நாளிலேயே
தலைவாழை விரித்து
தன் மனையாளை
பணயம் நீட்டி
பாகப்பிரிவிணைக்கு
அடிக்கல் நாட்டி
வியர்க்கவிறுவிறுக்க
படையலிட்டு சொத்துக்கு
வேண்டிக்கொள்கிற
மாப்பிள்ளையே!

வாருங்கள் டீ சாப்பிடலாம்
ரெண்டு ரூபாதான்
நானும் பிச்சைதான்

No comments:

Post a Comment