Friday, December 9, 2011

ஒஸ்தி - ஊத்திகிச்சு - சினிமா விமர்சனம்

இந்தி டபாங் பாத்தீங்களா? அப்போ இந்த படத்தை நீங்க பாக்காம இருக்கறதே மேல். ட்ரைலரில் உள்ள நல்ல பாகங்களையாவது நினைவில் வைத்திருக்கலாம். 

நாசரின் மனைவி ரேவதி தனது கணவர் (வேறு ஒருவர்) இறந்த உடன் சிம்புவுடன்,நாசரிடம் தஞ்சம் அடைகிறாள்.அவருக்கு பிறக்கும் மகன்ஜித்தன் ரமேஷ் இருவரும் சிறுவயதில் முட்டிக்கொள்வதும் மோதி கொள்வதும் பின் அதேதொடர்கதையாகி பெரியவராகும்போதுசிம்புலோக்கல் இன்ஸ்பெக்டர், ரமேஷ் தனது தந்தையுடன் மில்லில் உதவியாக இருக்கிறார்.

அங்கே தேர்தலில் நிக்க போகும் வேட்பாளர்மக்களுக்கு பணப்பட்டுவாடா செய்ய தனதுஆட்களிடம் பணத்தை கொடுத்தனுப்ப அதைலபக்குகிறார் சிம்பு.பணத்தைசிம்புவிடம்இருந்து திரும்ப பெற முயற்சிக்கும்வில்லனிடம் தன் புத்திசாலித்தனத்தால்தப்பிக்கிறார்.

பணம் கொடுக்காமல் இருப்பதை அறியும்மாவட்ட செயலாளர் விஜயகுமார் வில்லனைகண்டிக்க,அவர் சிம்புவின் தாயாரைகொள்கிறார்,மில்லை எரிக்கிறார். நாசர் அதிர்ச்சியில் படுக்கைக்கு செல்ல திணறும் ரமேஷை தன் வசமாக்கி தன்காரியங்களை சாதிக்கிறார், விஜயகுமாரையும் கொல்கிறார்.

பின் சிம்புவை கொல்ல ரமேஷிடம் துப்பாக்கிகொடுத்து அனுப்ப அங்கே ரமேஷ் தன்தவறை உணர்ந்து அண்ணனிடம் சரண்டர்ஆக அவர்கள் இருவரும் எப்படி தங்கள்எதிரியை வென்றார்கள் என்பது தான்ஒஸ்தியின் கதை சுருக்கம்.

சிவாஜி தி பாஸ்,ஒஸ்தி தி மாஸ் என்றுவசனம் பேசி தான்படத்தையேஆரம்பிக்கிறார்கள்.டபாங் ரீமேக்இல்லை இது டபாங்கின் தமிழ் டப் தான் இது.

படம் பார்த்துக்கொண்டே சில பேர் திட்டிகொண்டே இருந்தார்கள்...

காரணம்

முதல் : படம் மதியம் தான் வெளியானதுகாலையில் சென்ற விசில் குஞ்சுகள்எல்லாம் காத்திருக்க வேண்டியதாய்போயிற்று.

இரண்டாம் : அவ்ளோ நேரம் வெயிட் பண்ணிபார்க்கும் போது இருந்த எதிர்பார்ப்பு,படத்தில் இல்லை என்பது தான்.

சிம்பு,படத்தின் மொத்த பலமே இவர்தான்.அந்த ஸ்டைல் போலீஸ் கெட் அப்இவருக்கு நன்றாக பொருந்திருக்கு.சண்டைகாட்சியில் மறுபடியும் பறக்கஆரம்பிச்சிட்டார்.நடனம் நல்லா ஆடுவார்னுஎல்லார்க்கும் தெரிஞ்சது தான்.கொஞ்சம்ஓவராக ஸ்டைல்
பண்ணுவதை தவிர்த்திருக்கலாம்.தன்னைகாவல்துறை என்றுசொல்லிபேசுவது,கண்ணாடிமாட்டிக்கொண்டு அழுவது...நல்ல ஐடியாபாஸ்...!

ரிச்சா,தொப்புளுக்கு கீழ தான் உடைஉடுத்தனும்னு சொல்லி தான்தரணிஅழைச்சிருப்பார் போல.மயக்கம்என்ன வை விட இதில் அதிகமாக அழகாகஇருக்கிறார்.மற்றப்படி கதையில் பாட்டு வரசேர்க்கப்பட்ட உப்பு தான் இவர்.

ரமேஷ்,இந்த படத்தில் நடித்ததற்கு ஒருகிளாப்ஸ்.வெகுளியாக இருப்பதும்தன்காதலிக்காக திருடுவதும் தாயிடம்மாட்டி உருகுவதும்,சிம்புவிடம் முட்டிகொள்வதிலும் பின் பாசம்காட்டுவதிலும்
இவர் தான் இந்த படத்தின் மற்றொரு பலம்.

நாசர்,ரேவதி,சரண்யா மோகன் எல்லாரும்தனக்கு கொடுக்கப்பட்டதைசெய்துள்ளார்கள்.

சந்தானம்,மயில்சாமி,தம்பி ராமையாஎல்லாரும் நகைச்சுவை பண்றங்கனுகடிகடினு கடிக்கிறாங்க. சந்தானம் இன்னும்தன் ஸ்டைலை மாற்றமுயற்சிக்கவேஇல்லை,எல்லாரையும் ஓட்டிதள்ளுகிறார்.
ரிச்சாவை சிரிக்க வைக்க கணேஷ் பாடும்சென்பகமே பாடலில்அனைவரும்சிரிக்கலாம்.

இசை - தமன்..பாடல்கள் ஏற்கனவே ஹிட்அடித்தாலும் பார்க்க இன்னும்ரசிக்கவேமுடிகிறது. பிண்ணனி இசையை ஹிந்திதபாங் பார்த்து போட்டுருக்கலாம்இன்னும்கொஞ்சம் எதிர்பார்த்தேன் தமன்.

கோபிநாத் காமிராவும்,வி.டி.விஜயனின்எடிட்டிங்கும் நம்மை படத்துடன்ஒன்றவைக்கிறது.

வசனங்கள் சில நம்மை மிகவும்ஈர்க்கின்றன..

அவைகள் சில

போதை போட்ற அப்பாவுக்கு பிறந்த போதைஏத்துற பொண்ணு.

கண்ணாடி மாறிடா நான் , நீ எத செஞ்சாலும்திருப்பி செய்வேன்டா...

எவ்ளோ நாள் தான் கெட்டவனாநடிக்கிறது,மங்காத்தாவிளயாடுறேன்(அஜித்ரசிகருள்ள)

உனக்கு என்ன வேணும்,அனகோண்டாமுட்டை அரை டசன் கொடுடா...

குவார்ட்டர கருமாந்திரம் சொல்லாததமிழ்நாடே கொந்தளிக்கும்
(உபயம் : விடிவிகணேஷ்)

கலெக்டர்னா தளபதி அரவிந்த்சாமினுநினச்சேன்....

கவர்மென்ட் ஆபிஸில் பணம் இருக்குறதுஜெட்டி போடாம புல் பாட்டிலைரெண்டுகாலுக்கு நடுவில் வைப்பதற்கு
சமம்.

நான் ஒரு வோட்டு குத்துனா பத்தாயிரம்வோட்டு குத்துன மாதிரி...

அரைக்கு பயப்பட மாட்டேன் அன்புக்கு தான்பயப்படுவேன்.

கலவரத்துல நெருப்புக்கு அரசு வண்டி சாதாவண்டினு எதுவும் தெரியாது.

முதுகுக்கு பின்னாடி குத்துறவன் தான்அதிகம் அதான் முதுகில் கண்ணாடி,அதுஎன்மூணாவது கண்.

திரைக்கதை,இயக்கம் - தரணி.டபாங்கினைடப் செய்து கொடுத்திருக்கிறார்.படத்தின்கதை மட்டும் வைத்துக்கொண்டு புதுசா ஏதும்சொல்லுறேன்னு சொதப்பாமகொடுத்திருக்கிறார்.திரைக்கதையில்
சிறு தடுமாற்றம் இருப்பதைதவிர்த்திருந்தால் ஒஸ்தி யான வெற்றிபெற்றிருக்கலாம்.

ஒஸ்தி - ஹிந்தி டபாங்கினைபார்க்காதவர்கள் பார்த்தால் ரசிக்கும் தமிழ்டபாங்.

No comments:

Post a Comment