Friday, December 9, 2011

நான் எழுதினது நிர்வாண உண்மைகள் (Naked Truth.). சாரு எழுதுறது Brutal Truth..!

சாருநிவேதிதாவின் ஆறாவது நாவல் 'எக்ஸைல்' டிசம்பர் 7ம் தேதி வெளியிடப்பட்டது.

சென்னை முழுவதும் போஸ்டர்கள், நோட்டிஸ், இணையத்தில் விளம்பரம், சினிமா ஹீரோக்களுக்கு வைப்பது போல எழுத்தாளருக்கு பிரம்மாண்ட பேனர் என படு அமர்க்களமாக தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் நடந்தது விழா.

விழாவில் சிறப்பு விருந்தினர்களாக வாலி, இந்திரா பார்த்தசாரதி, மதன் என பலர் கலந்து கொண்டனர்.

விழாவிலிருந்து சில துளிகள் :

நாவல் வெளியீட்டு விழாவை தொகுத்து வழங்கியது சாருவே தான்.

நாவலில் பிரதிகள் ஏலம் விடப்பட, முதல் பிரதி 50,000 ரூபாய்க்கும் இரண்டாவது பிரதி 25,000 ரூபாய்க்கும் வாங்கப்பட்டதாம். வாங்கியவர்கள் அவர்கள் பெயரை குறிப்பிட வேண்டாம் என்று சொல்லிவிட்டானர். " இந்த பணத்தை கொண்டு நூலகம் அமைக்க திட்டமிட்டு உள்ளோம்" என சாருநிவேதிதா சொல்ல பலத்த கரவொலி.

கவிஞர் வாலி நூலை வெளியிட்டு, பின்னர் சாரு வாசகர் வட்டத்தை சார்ந்த இருபது பேருக்கு நாவலை வழங்கினார்.

சாருநிவேதிதா: " நான் ஏன் வாலியை நாவல் வெளீயிட்டு விழாவிற்கு அழைச்சேன்.. வாலிக்கும் எனக்கும் என்ன சம்மந்தம் பல பேருக்கு குழப்பமா இருக்கலாம். ஏன்னா இதுவரைக்கும் என் வாழ்க்கையில யாருமே என்னை பாராட்டனது இல்ல. வாலி ஒருத்தர் தான் ஆனந்த விகடன்ல 'நினைவு நாடாக்கள்'ல பாராட்டி எழுதினாரு. 

வாலிக்கு வயசானாலும் இன்னமும் இப்ப இருக்குற யூத்து என்ன பேசுறாங்க.. என்ன நினைக்கறாங்கன்னு சரியா சொல்வார்.

வாலிக்கிட்ட எனக்கு ரொம்ப பிடிச்சது எல்லாத்துகிட்ட இருந்தும் நல்லதை மட்டுமே எடுத்துப்பாரு. நமக்கு அடுத்தவன் கிட்ட இருக்குற கெட்டதை மட்டும் பார்த்துட்டு இவரை பாக்குறப்ப, எனக்கு இது திருப்புமுனை மாதிரி அமைந்தது.

அதே மாதிரி தான் இந்திரா பார்த்தசாரதி.. என்னுடைய முதல் நாவல் 'ஜீரோ டிகிரி'யை தடை செய்யனும்னு எல்லாரும் சொன்னப்ப, எனக்கு ஆதரவா இருந்தது இவர் மட்டும் தான். அதனால தான் இவர்கள் இருவரையும் அழைத்தேன் "

வாலி : " கடந்த ஆறு மாசமா தான் எனக்கு சாருவோட பழக்கம். சாருவை பத்தி கேள்விப்பட்டிருக்கேன்.. ஆனா படிச்சது இல்லை. நிறைய பேரு சாருவை பற்றி விமர்சனம் பண்றாங்க. எவன் விமர்சனத்திற்கு ஆளாகறானோ அவன் தான் அறிவாளி. மரவட்டையையும் மண்புழுவையும் யாரும் விமர்சனம் பண்ண மாட்டான், நல்ல பாம்பை தான் விமர்சனம் பன்ணுவான்.

'விழாவுக்கு போறிங்க.. அவரை பற்றி தெரியமா'ன்னு என்னுடைய நண்பர்கள் கேட்டாங்க.. நான் சொன்னேன் 'அவரு சாரு நிவேதிதா தானே தவிர சாரு மஜுந்தார் (நக்ஸலைட் தலைவர்) கிடையாது பயப்படறதுக்கு'ன்னு..

நான் எழுதினது Naked Truth.. But சாரு எழுதுறது Brutal Truth.. தமிழ்நாடு இவரை சரியாக இனம் கண்டு கொள்ளவில்லையே என்ற கவலை இருந்துச்சு. இதுவரைக்கும் இவரோட முகம் கூட அவ்வளவா பரிச்சயம் இல்ல. நாவல் வெளியீட்டுக்கு வரமுடியமான்னு கேட்டுட்டு புத்தகத்தை குடுத்தாரு.. எடுத்தா கீழ வைக்க முடியல.. 120 பக்கம் படிச்சுட்டு தான் வைக்க முடிஞ்சது. அவ்வளவு அருமையா இருந்தது.

எழுத்தாளன் எதையும் மறைக்காம எழுதணும். அது தான் தர்மம். அடுத்தவர்கள் மனதை புண்படுத்தற மாதிரி மட்டும் எழுதக் கூடாது.

காதல் காமம் இல்லாத மனிதனே உலகத்துல கிடையாது. என் நண்பர் வலம்புரிஜான் பிரமாதமா ஒரு வரி எழுதினாரு. ' காமம் மூக்கு.. காதல் மூக்குத்தி'னார். அது தான் உண்மை. என்னுடைய முதல் கதை 1952ல ஆகஸ்ட் மாதம் கலைமகள்ல 'பிராந்தி'ன்னு எழுதினேன். அப்புறம் நிறைய கதையெல்லாம் எழுதினப்ப தான் கல்கி என்னை ஆல் இந்தியா ரேடியோல சேர்த்துவிட்டார். அப்புறம் தான் எனக்கு கொஞ்சமா பழக்கம் ஏற்ப்பட்டு முன்னாடி வந்தேன்.

எல்லோரும் கதை, கட்டுரை பிரமாதமா எழுதலாம்.. ஆனா கசப்பான உண்மைகளை உள் மனதில் இருக்கின்ற ஆசைகளை தைரியமா வெளிய சொல்லி எழுத துணிவு வேண்டும். ஏதோ செக்ஸ் பற்றி எழுதிட்டாருன்னு சொல்ல முடியாது விசுவாமித்தரனே வழுக்கி விழுந்த இடம். எனக்கு இது எல்லாம் கொச்சையா தெரியல. கற்று அறிய வேண்டிய விஷயம் நிறையா இருக்கு. சாரு ஒரு உன்னதமான எழுத்தாளர் என்கின்ற எண்ணத்தை உலகத்திற்கு பிரகனபடுத்துவதற்காக தான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன்" 

இந்திர பார்த்தசாரதி : " வெளியே பேனரை பார்க்கும்பொழுது எனக்கு ரொம்ப ஆச்சர்யமா இருந்தது. இலக்கியமே உயர்ந்து நிற்பது போல தோன்றியது. எழுத்தாளருக்கு நட்சத்திர அந்தஸ்து வந்தது போல மகிழ்ச்சி.

சாருவோட 'ஜீரோ டிகிரி' வெளியீட்டு விழாவிற்கு 50 பேர் வந்து இருந்தாங்க இப்ப இங்க இவ்வளவு பேரை பார்க்கும்பொழுது, இது சாருவோட வளர்ச்சியை குறிக்குது.

இந்த நாவலை படிக்கும்பொழுது எல்லா கதாபத்திரமும் சாருவே தான். இந்த நாவல் இவரோட தனி முத்திரை.


மேல்நாட்டு மோகத்தினால தான் செக்ஸ் கொச்சைபடுத்தப்பட்டது. நான் சின்ன பையனா படிக்கும்பொழுது புள்ளி வைத்த வார்த்தைகள் அங்க அங்க வரும். என்னடான்னு ஆராய்ச்சி பண்ணி பார்த்தாதான் அதோட அர்த்தம் தெரியும். பசங்க அதை தெரிஞ்சுக்கக்கூடாதன்னு புள்ளி போட்டுருப்பாங்க அந்த கமிட்டி மெம்பர்ஸ். அப்ப தான் பசங்க அத என்னன்னு ஆராய்ச்சி பண்ணுவான். இந்த மாதிரியான அசட்டுதனம் இருக்கு.

நம்முடைய புலவர்கள் செக்ஸ்சை ஆபாசமாவே வைக்கல. இந்த நாவலில் எந்த விதமான ஒளிவு மறைவின்றி எழுதியிருக்கிறார். விருப்பம் இருந்தா படிங்க இல்லாட்டி விட்டுருங்க.

இந்த நாவலில் பிரெஞ்ச், ஆங்கிலம்ன்னு நிறையா வருது. ஆனா அந்த அந்த இடத்தில சரியா பொருந்துது. நாவல் புத்தகத்திற்கு பின்னாடி எழுதிருக்கிறார்கள் ' ஒருவர் சாருவை ஏற்கலாம், நிராகரிக்கலாம். ஆனால் நிச்சயம் புறக்கணிக்க முடியாது'ன்னு. அது தான் உண்மை. சாருவை பிடிக்காதவங்க கூட சாரு என்ன சொல்ல வரான்னு BLOG-அ பார்த்து கொண்டு இருப்பாங்க"

சாரு தனக்கு இணையத்தில் கேட்க பட்ட சில கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

உங்களுக்கு முந்தைய கலககாரர்களான பாரதியார் பெரியார் இருவரின் திருப்புமுனை காசி. அடுத்து உங்கள் பயணம் காசியில் இருக்குமா?

"இதுல ஒரு இலக்கணப் பிழை இருக்கு. பாரதியாரும் பெரியாரும் என்னுடைய ஆசிரியர்கள் அவ்வளவு தான். நான் சபரி மலைக்கு போனேன். 18 நாள் தான் விரதம் இருந்தேன். மது, மங்கை இல்லாம என்னால இருக்க முடியுமான்னு யோசித்தேன். இருக்க முடிஞ்சதே. இதுக்கு காசிதான் போகனும்ன்னு அவசியம் இல்லை."

* உங்கள் அடுத்த நாவலின் தலைப்பு என்ன?

"நான் தமிழ் எழுதினாலும் தமிழ்ல வெளியிடப் போறதில்லை. நானே ஆங்கிலத்தில் மொழி மாற்றம் செய்து தான் வெளியிடப் போறேன்.'

* எழுத்தாளர்கள் உங்களுக்குள்ள ஏன் சண்டை போட்டு கொள்கிறீர்கள்?

"அறியாமையால் இந்த கேள்வி கேட்கிறார்கள். இங்க தான் உண்மையா இருக்கிறோம். மற்ற இடங்களில் பொய்யா நடிச்சுட்டு இருக்காங்க. எனக்கு ஜெய மோகனை பிடிக்காது; அவருக்கு என்னுடைய எழுத்துக்கள் பிடிக்காது. இதை ஏன் சண்டைன்னு நினைச்சுகறீங்க? இது தத்துவ முரண்பாடு.

* குழந்தைகள் இருக்கற இடங்களில் உங்களது புத்தகங்களை வைக்க பயமாக இருக்கிறதே?

" இப்ப வர பாடல் காட்சிகளை பார்த்தீங்கன்னா செஸ்ஸ் படம் மாதிரி இருக்கு. பையன் அதை பார்த்துட்டு தான் இருக்கறான், அவுங்க அம்மாவும் கூட தான் இருக்காங்க. இது எல்லாம் தப்பா தெரியாது. மேற்கத்திய சீரழிவுன்னு இங்க தான் சீரழிஞ்சுகிட்டிருக்கு!"

* சினிமா நடிகர்கள்கிட்ட எல்லாம் ஜால்ரா கூட்டம் இருக்குதுன்னு எழுதியிருந்தீங்க.. இப்ப உங்க கிட்டயும் அதே மாதிரி தானே கூட்டம் இருக்கு?

" என் கூட அஞ்சு பேர் இருந்தாங்கன்னா நான் சொல்ற கருத்தை அப்படியே அஞ்சு பேரும் எதிர்ப்பார்கள். எனக்கு எழுத மட்டும் தான் தெரியும். எங்க வாசகர் வட்டத்தில இருக்கறவங்களுக்கு வாசிக்க மட்டும் தான் தெரியும். வேற எந்த வேலையும் தெரியாது. இது பெரிய நிறுவனம் கிடையாது.'

No comments:

Post a Comment