சென்ற சில வாரங்களாக இந்தியாவுக்குள் குறுக்கும் நெடுக்குமாகப் பயணித்துக்கொண்டு இருந்ததால், பயணத்தின்போது படிப்பதற்கு எனச் சில புத்தகங்கள் வாங்கினேன். (தமிழ்ப் புத்தகங்கள் எல்லாம் கிண்டில் போன்ற மின் படிப்பான்களில் படிக்க எப்போது கிடைக்கும்?) 90-களின் இறுதியில் 'விகடன் பேப்பர்’ தினசரியில் 'சுஜாதாட்ஸ்’ என்ற தலைப்பில் சுஜாதா எழுதிய பத்திகளின் தொகுப்பைப் படித்தேன். அவரது பெரும்பாலான டெக் கணிப்புகள் இப்போது நிகழ்வுக்கு வந்திருப்பது உண்மை என்றாலும், கம்பி வழி இணைப்பே இணையத்தை பிரமாண்டமாக்கப்போகிறது என்ற அவரது நம்பிக்கையை Y2K காலகட்டத்துக்குப் பின்னர் நடந்த உலகமயமாக்கல் நிகழ்வுகள் தகர்த்து இருப்பது தெரிகிறது. குறிப்பாக, அலை பேசித் தொழில்நுட்பம் இத்தனை பிரமாண்டமாகும் என்பதை அவர் எதிர்பார்க்கவில்லை. அழகிய பல தமிழ் கலைச் சொற் கள் இந்தப் புத்தகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. பல்லூடகம் (Multimedia), மின்னம்பலம் (Cyberspace) போன்ற வார்த்தைகள் படிக்க இனிமை.

உதாரணத்துக்கு,
கேசட் டேப் > சி.டி. தகடு
என்று பலவற்றைச் சொல்லலாம்.
இணைய தொழில்நுட்பத்தைப் பொறுத்தவரை, கல் தோன்றி மண் தோன்றாக் காலத்துக்கு முன்னர் தோன்றிவிட்ட
இ-மெயில் தொழில்நுட்பம், குறுஞ்செய்தி, ட்விட்டர் எனப் பல வந்துவிட்டாலும், இடையீடு இல்லாமல் இன்னும் பல வருடங்கள் வாழும் எனத் தோன்றுகிறது. பிரபலமான குருப்பானில் தொடங்கி, பல வலைதளங்களில் நுழையவே இ-மெயில் முகவரியைக் கொடுக்க வேண்டும். உங்க ளுடன் மிக நெருங்கிய தொடர்பில் இருப் பதற்கு இ-மெயில்தான் தேவை என்ற நிலைதான் இதற்குக் காரணம். ஏன், அமெரிக்க வெள்ளை மாளிகையின் வலைதளமான http://www.whitehouse.gov/ சென்றால், அதிபரிடம் இருந்து தொடர்ந்து செய்திகள் பெற்றுக்கொள்ள உங்கள் இ-மெயில் முகவரி கொடுங்கள் என்கிறது முதல் பக்கம். கொடுக்காமலும் செல்லலாம். ஆனால், அவ்வப்போது 'இ-மெயில் கொடு’ எனக் கேட்டபடி இருக்கும் இந்தத் தளம்!
இ-மெயில் முகவரிகளைக் கொடுப்பதில் பயனீட்டாளர்களுக்கு வரும் மிகப் பெரிய தலைவலி spam. நம் அனுமதி இல்லாமல் நமக்கு அனுப்பப்படும் மின் குப்பைக் கூளங்களான இந்த மெயில்களைக் கட்டுப்படுத்த, அரசாங்க ஆட்சியாளர்கள் தொடங்கி இணைய இணைப்புகள் கொடுக்கும் ISPக்கள் வரை படாதபாடு இல்லை. ஆனாலும், spam மெயில்களின் எண்ணிக்கை குறையவில்லை. spam அனுப்பும் spammer களின் நோக்கம் அதீத அளவில் இ-மெயில் முகவரிகளைச் சேகரித்து, அவை அனைத்துக்கும் இ-மெயில் அனுப்பினால், சிலராவது பார்க்க மாட்டார்களா என்பது தான். இவர்கள் இ-மெயில் முகவரிகளைத் தேர்ந்தெடுப்பதற்கு இ-மெயில் அறுவடை ( Email Harvesting ) என்ற பெயர் உண்டு.

நீதி போதனை: யார் வேண்டுமானாலும் படிக்க முடிகிற வலைதளங்களில் இ-மெயில் முகவரிகளைக் கொடுக்காதீர்கள்.
நண்பர்கள் பலருக்குப் பொதுவான இ-மெயில் அனுப்பும்போது, அவர்களின் முகவரிகளை To பகுதியிலோ அல்லது CC பகுதியிலோ எழுதுகிறீர்கள். அவர்களுக்கு ஒருவரை ஒருவர் தெரியாது என்றாலும், அவர்கள் முகவரிகள் அனைவரும் பார்க்கும்படியாகத் தெரிகிறது.

நீதி போதனை: பலருக் கும் பொதுவான இ-மெயில் அனுப்பும்போது அவர் களது முகவரிகளை BCC பகுதியில் எழுதுங்கள்.
தெரியாத வலைதளங்களில் பொதுவாக, உங்களது இ-மெயில்களைக் கொடுப் பது நல்ல ஐடியா இல்லை. ஆனால், பல வலைதளங் களைப் பயன்படுத்தவே இ-மெயில் தேவை என்ப தால், இது சாத்தியம் அல்ல.
முதன்மையாகப் பயன் படுத்தும் இ-மெயிலைக் கொடுக்காமல், இது போன்ற தளங்களில் பயன்படுத்துவதற்கு என்றே சில எக்ஸ்ட்ரா இ-மெயில் முகவரிகளைப் பலர் பயன் படுத்துவதைப் பார்த்திருக்கிறேன். இதுவும் ஒரு கட்டத்துக்கு மேல் பிராக்டிகலாக உதவாது. ஒரு இ-மெயிலுக்குப் பதிலாக பலவற்றைப் பார்க்க வேண்டிய நிர்ப்பந்தம் வந்து தலைவலியாகவே முடியும். கூகுளின் ஜி-மெயில் இதற்கு ஸ்மார்ட்டான தீர்வு ஒன்றைக் கொடுக்கிறது.
என்ன அது? பார்க்கலாம்.
|
No comments:
Post a Comment