ஹைதர் கால டயலாக் இப்போது சென்னையில் ரீ-மிக்ஸ் ரவுண்ட் அடிக்கிறது. ஆண்களுக்கு காது வளையம், பெண்களுக்கு மூக்குத்தி என சென்னை இப்போது ஆன்டிக் ஃபேஷனுக்கு (பழங்காலத்து பொருட்களை மீண்டும் பயன்படுத்துவது) திரும்பிக் கொண்டு இருக்கிறது!


சின்ன கைத்துப்பாக்கி போன்ற 'பியர்சிங் கன்'னை ஆர்த்தி மூக்கில் கச்சிதமாகப் பொருத்தி, சின்னதாக ஒரு டுமீல்! அதுவரை கண்களை இறுக மூடியிருந்த ஆர்த்தி, 'என்னங்க வலியே தெரியலை. துளை போடலையா?' என்று ஆச்சர்யத்துடன் தன் மூக்கில் இருந்த மெட்டல் ரிங்கை கண்ணாடியில் அழகு பார்த்தார். "மூக்கு குத்தியாச்சு. இப்போ வலிக்காது. ரெண்டு நாள் கழிச்சு லேசா வலிக்கும். மூணு நாள் கழிச்சு இந்த மெட்டலை எடுத்துட்டு உங்களுக்குப் பிடிச்ச கலரில், விலை யில் மூக்குத்தி வாங்கிப் போட்டுக்கங்க. துளை செட் ஆகுற வரை இந்த மெட்டல் இருக்கட்டும்!" என்றவர் நம்மிடம் தொடர்ந்தார்.
"மூக்கு குத்துறதில் ஒரு மருத்துவப் பலனும் இருக்கு. கோபப்பட்டா மூக்கு சிவந்துடும்னு சொல்லுவாங்களே... மூக்கு குத்தியிருந்தா அந்த மெட்டல் நரம்புகளை உரசுவதால், கோபம் குறையும். எப்பவும் கூல் கூல்தான். இது காஸ்ட்லி சமாசாரமும் கிடையாது. மெட்டல் மூக்குத்திகளோட ஆரம்ப விலையே 150தான்!" என்று ஸ்வேதா பேசிக்கொண்டு இருக்கும்போதே, "எக்ஸ்கியூஸ் மீ... எனக்கு பியர்சிங் பண்ணணும்!" என்று உள்ளே நுழைந்தார் ஒரு பெண். காது, மூக்கு என எல்லா இடங்களிலும் ஏற்கெனவே துளை போட்டு இருந்தவரிடம். "எங்கே துளை போடணும்?" என்று கேட்டார் ஸ்வேதா. "ஹியர் ப்ளீஸ்" என்று அவர் காட்டிய இடம் கீழ் உதட்டுக்கும் கீழே!
|
No comments:
Post a Comment