Friday, December 9, 2011

வருங்காலத் தொழில்நுட்பம் பாகம் 17

அமேசான் நிறுவனம் சத்தம் இல்லாமல் சாதனை ஒன்றை இந்த வாரத்தில் செய்து இருக்கிறது. எந்தவித பிரமாண்ட அறிவிப்பு களும் செய்யாமல், ஆப்பிளுக்கு பெப்பே காட்டியதுதான் அந்தச் சாதனை. விரிவாகப் பார்க்கலாம்!

ஆப்பிளின் தொழில்நுட்பங்களை மிகவும் விரும்புபவர்களும் வெறுக்கும் ஒரு விஷயம் உண்டு. அது இந்த நிறுவனத் தின் மூடிய தன்மை. குறிப்பாக, ஆப்பிள் சாதனங்களில் இயங்கும் மென்பொருட்களை உருவாக்குபவர்களுக்கு இது மிகப் பெரிய தலைவலி கொடுக்கும் விஷயம். தயாரித்த மென் பொருளை அவர்களது Appstore கடையில் விற்பனைக்கு வைக்க, அவர்களது விதிமுறைகள் கிட்டத்தட்ட சர்வாதிகார பாணியில் இருப்பது தெரிய வரும். சில மாதங்களுக்கு முன்னால், இந்த சர்வாதிகாரத் தோரணையில் பதிப்பு நிறுவனங்களுக்குப் புதிய விதிமுறை கொண்டுவந்தது ஆப்பிள். அதன்படி, பதிப்பாளர்களின் மென்பொருளில் இருந்து நேரடியாக சந்தா வசூலிக்கக் கூடாது. மாறாக, ஆப்பிள் சந்தா வசூலிக்கும். அதில் 30 சதவிகிதத்தை வைத்துக்கொண்டு, மீதியைப் பதிப்பாளருக்குக் கொடுக்கும். அதிர்ச்சியும் எரிச்சலுமாகப் பதிப்பாளர்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்க, பிரபல Financial Times செய்தி நிறுவனம் தனது எதிர்ப்பை ஆப்பிள் புரிந்துகொள்ளும் பாணியில் தெரிவித்தது. 'ஆப்பிள் சாதனங்களில் இயங்கும் பிரத்யேக (Proprietary) மென்பொருள்களை நாங்கள் இனிமேல் தயாரிக்கப்போவது இல்லை. மாறாக, இணையத்தில் இணைக்கக் கூடிய மொபைல் சாதனங்களில் வலைதளமாகவே நாங்கள் எங்களது சந்தாதாரர்களுக்கு எங்களது செய்தித்தாளைக் கொடுக்கப் போகிறோம்!’ என்பதுதான் அந்த அறிவிப்பு. கலங்கிப்போன ஆப்பிள், சில வாரங்களில் மேற்கண்ட இந்த விதிமுறையை நீக்கிவிட்டாலும், இந்தச் சம்பவத்தின் கசப்புச் சுவை மின் பதிப்பாளர்களின் வாயில் தொடர்ந்து இருந்தபடியேதான் இருந்தது. இப்படி எல்லாம் விதிமுறைகளைக் கொண்டுவர முயற்சி செய்யும் நிறுவனத்தின் தொழில்நுட்பத்தில் மட்டுமே இயங்கக்கூடிய விதத்தில் மென்பொருள் தயாரிக்க, மெனக் கெடத்தான் வேண்டுமா? என்பது ஐ.டி. இண்டஸ்ட்ரியில் பெரிதாக எழுந்த கேள்வி. பலரும் பலவித கருத்துக்களைக் கூறிக்கொண்டு இருந்த வேளையில், உலகிலேயே மிகப் பெரிய மின் பதிப்பாளராக இருக்கும் அமேசான் இதைப்பற்றிய கருத்து எதையும் வெளிப்படையாகக் கூறவில்லை. ஆனால், அமைதியாக, Cloud Reader என்ற தொழில்நுட்பத் தில் கடுமையான உழைப்பைச் செலுத்தி இருப்பது இப்போது தெரிய வருகிறது!


ஆப்பிளின் ஐ-போன், ஐ-பேட் உட்பட எந்த 'ஸ்மார்ட்’ மொபைல் சாதனத்தில் இருக்கும் browser-ஐப் பயன்படுத்தி https://read.amazon.com/ வலைதளத்துக்குச் சென்றால் போதும். அமேசானின் மின் பதிப்புகளைப் படிக்க முடியும். பொதுவாக, browser பயன்படுத்திச் செல்லும் வலைதளங்களின் மிகப் பெரிய குறைபாடு, இணையத்தில் இணைக் கப்பட்டு இருந்தால் மட்டுமே வலை தளத்தைப் பார்க்க முடியும். இந்தக் குறைபாட்டை நேர்த்தியாகச் சரி செய்து இருக்கிறது, அமேசான். தேவைப்படும் புத்தகங்களைத் தரவிறக்கம் செய்ய மட்டுமே இணைய இணைப்பு தேவை. அதன் பின்னர், அந்தப் புத்தகத்தைப் படிக்க இணையம் தேவை இல்லை. இதைச் சாத்தியமாக்க முடிந்த HTML 5 தொழில் நுட்பம் வெகு விரைவில் பல்லாயிரக் கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கப் போவது நிச்சயம்.

சென்ற வாரக் கட்டுரையில், இ-மெயில் தொழில்நுட்பத்தில் இருக்கும் spam பிரச்னைக்கு கூகுளின் ஜி-மெயிலில் தீர்வு இருக்கிறது என்று சொன்னேன். அதைப் பார்க்கலாம்!

உங்களது முகவரி nallavan@gmail.com என்று வைத்துக்கொள்ளலாம். இந்த முகவரியில் இருக்கும் nallavan என்ற பெயருடன் ஐ இணைத்து வார்த்தை ஏதாவது இணைத்துக்கொண்டால் போதும்... அடுத்த முகவரி ரெடி. உதாரணத்துக்கு, வெள்ளை மாளிகை வலைதளத்தில் உங்களது முகவரியைக் கொடுக்கும்போது nallavan+ white house @gmail.com என்று கொடுக்கலாம். இந்த வசதியைப் பயன்படுத்தி எத்தனை புதிய இ-மெயில் முகவரிகளையும் ஆரம்பித்துக்கொள்ளலாம். ஆனால், இந்த முகவரிகளுக்கு அனுப்பப்படும் மெயில்கள் உங்களது ஜி-மெயில் முகவரியில்தான் வந்துசேரும். தேவை இல்லாத spam மெயில்கள் உங்களுக்கு வரும்போது, அவை எந்த முகவரிக்கு அனுப்பப்படுகின்றன என்பதைப் பார்க்க முடியும். இப்படி உருவாக்கப்பட்ட முகவரி எதற்கா வது spam வந்தால், அதை ஜி-மெயிலில் spam என்று குறித்துவைத்துக்கொள்ளலாம். அந்த நேரத்தில் இருந்து, குறிப்பிட்ட முகவரிக்கு அனுப்பப்படும் மெயில்கள் அனைத்தும் Junk கோப்புக்கு அனுப்பப் பட்டுவிடும்.

இ-மெயில் spam பிரச்னையை வெற்றி கரமாக மேற்கொள்ள டிப்ஸ் ஏதாவது இருந்தால், விகடனின் ஃபேஸ்புக் பக்கத்தில் (http://www.facebook.com/vikatanweb) எழுதுங் களேன்.

நம் ஊரில் கல்லூரி முடித்த மாணவர் கள், பல நிறுவனங்களின் வலைதளங்களில் இ-மெயில்களை எடுத்து வேலைக்கான spam முறையில் விண்ணப்பம் அனுப்புவதை வழக்கமாக வைத்து இருக்கிறார்கள் என்றார் கோவை டெக் நிறுவனம் ஒன்றில் மேலாளராக இருக்கும், சூரியா ராம்பிரசாத்.

அவர்களுக்கான நீதி போதனை: முதல் கோணல், முற்றிலும் கோணல்! நீங்கள் வேலை பார்க்க விரும்பும் குறிப்பிட்ட நிறுவனத்துக்கு நீங்கள் ஏன் பொருத்தமானவர் என்பதை எழுதி அனுப்புவது முக்கியம். இப்படி பொத்தாம்பொதுவாக spam பாணி மெயில் அனுப்புதல் நல்லது அல்ல. சமீபத்தில் பதிவுலகின் கவனத்தை ஈர்த்து இருக்கும் மேத்யூ எப்ஸ்டீன் செய்தது இது. அவருக்கு கூகுள் நிறுவனத் தில் சேர மிக விருப்பம். அதற்காக வலை தளம் ஒன்றையே உருவாக்கி, ஜேம்ஸ் பாண்ட் பாணியில் உடை அணிந்து, இன்ன பிற குரங்குச் சேட்டைகள் செய்து வீடியோ எடுத்து, கலக்கி இருக்கிறார்.

சொடுக்குங்கள் http://googlepleasehire.me/

No comments:

Post a Comment