
அண்மையில், பிரிட்டனில் ஆபாசப்படம் பார்ப்பவர்கள் குறித்து, ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. அதில், 18 முதல் 24 வயதுக்குட்பட்ட பிரிட்டன் இளைஞர்களில் நான்கில் ஒரு பங்கு இளைஞர்கள் ஆபாசப்படம் பார்க்கின்றனர் என்று தெரியவந்துள்ளது.இதனால் அதிக நேரம் தொடர்ந்து ஆபாசப்படம் பார்ப்பதால், மன அழுத்தம் ஏற்பட்டு வேலையில் கவனமின்மை, உறவுகள், தாம்பத்ய வாழ்க்கை போன்றவற்றில் பிரச்னை எழுவது தெரியவந்துள்ளது.
மேலும், இந்த ஆய்வில் தெரியவந்துள்ளதாவது:ஆபாசப்படம் பார்க்கும் இளைஞர்களில் மூன்றில் ஒரு பங்கினர், வாரத்திற்கு ஒரு மணி நேரத்திற்கும் குறைவாக படங்களை பார்க்கின்றனர். நான்கு சதவீதம் பேர் வாரத்திற்கு 10 மணி நேரத்திற்கும் அதிகமாக ஆபாசப்படங்களை பார்க்கின்றனர்.இத்தகைய இளைஞர்கள் தான் அதிக அளவில் மன அழுத்தத்தால் பாதிப்புக்குள்ளாகின்றனர். அவர்கள் உடனடியாக மருத்துவர்களை சந்திப்பது நல்லது.ஆண்கள் சராசரியாக வாரத்திற்கு 2 மணி நேரமும், பெண்கள் 15 நிமிடங்களும் ஆபாசப்படங்கள் பார்க்கின்றனர்.
ஆயிரத்து 57 பேரிடம் இதுகுறித்து கேட்கப்பட்டபோது, 80 சதவீதம் பேர் "எக்ஸ்' தர சான்றிதழ் வழங்கப்பட்ட ஆபாசப்படங்களை விரும்பிப் பார்ப்பதாக தெரிவித்துள்ளனர். இதில், மூன்றில் ஒரு பங்கு பெண்கள் இத்தகைய படங்கள் பார்ப்பதாக தெரிவித்துள்ளனர். இவ்வாறு அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
|
No comments:
Post a Comment