Wednesday, December 21, 2011

டிஜிட்டல் விபச்சாரம்! அதிர்ச்சித் தகவல்!! எச்சரிக்கை ரிப்போர்ட்

தற்கால உலகில் அதி வேகமாகப் பரவி மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்கைப் பெற்று வருகின்றது இணையம். இணையம் மக்களுக்கு நல்ல விடயங்களை எடுத்துச் சென்றாலும் கூட இளைய தலைமுறைகளை சின்னாபின்னமாகச் சீரழித்து அவர்களின் வாழ்க்கையை குழிதோண்டிப் புதைக்கின்றது.

இதற்குக் காரணம் பெற்றோர்கள். பிள்ளைகள் கணனி முன் அமர்ந்து கல்வி பயில்கின்றார்கள் என்ற நினைப்புடன் நிம்மதிப் பெருமூச்சு விடும் பெற்றோர்களின் பிள்ளைகள் இணையம் மூலம் தங்களது கன்னித் தன்மைகளையிழந்து வருகின்றனர். வெளிநாட்டு நிறுவனங்கள் இவ்வாறு சமூகத்தைச் சீரழிக்கும் சில இணையத்தளங்களை உலாவ விடுவது, அவர்களின் கலாசாரத்திற்கு அது ஒத்துழைக்குமே தவிர எமது கலாசாரத்திற்கும் அதற்கும் வெகுதூரம்.

இருந்தும் எமது இளம் சமுதாயம் அதனை நோக்கித்தான் தற்போது முன்னேறி வருகின்றது. இதனால் எம் கலாசாரம் காலாவதியாகி விடும் அபாயம் அண்மித்துக் கொண்டிருக்கின்றது. இது இவ்வாறிருக்க சட் றூம் என்று சில கேடிகளால் உதயம் பெற்றிருக்கும் இவ்வாறான வலைதளங்கள், பல குடும்பங்களுக்கிடையில் பிளவுகளை ஏற்படுத்தும் அளவுக்கு அதன் பாவனைகள் அதிகரித்துள்ளது.

குறிப்பாக ஒரு போதை எனவும் இதனைக் கூற முடியும். அந்தளவுக்கு கணவன் இல்லாத வேளைகளில் மனைவியும், மனைவி இல்லாத வேளைகளில் கணவனும் பெற்றோர்கள் இல்லாவேளை பிள்ளைகளும் வேறு நபர்களுடன் சட் அடித்துப் பின் கற்பழிந்த நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். இவ்வாறான சட் றூம் இணையத்தளங்கள் மூலம் தங்களது அந்தரங்க உறுப்புக்களை பிறருக்குக் காட்டுவதுடன்,


அவர்களின் அந்தரங்க உறுப்புக்களைத் தாங்கள் பார்த்து ரசிப்பதும் நாளாந்தம் நடைபெற்று வந்து தற்போது வழமையாகி விட்ட ஒன்று. எனினும் இத்துடன் இந்தச் சட் நின்றுவிடாது, றூம் போடும் அளவுக்கு ஒரு முன்னேற்றகரமான வேலையைச் செய்து வருகின்றது. குறிப்பாகப் புலம்பெயர் நாடுகளில் இருக்கும் இளைஞர், யுவதிகளே இந்தச் சீர்கேட்டில் முதன்மைவாதிகளாகத் திகழ்கின்றனர்.


யாழ்ப்பாணத்தில் கலாசாரம் கவிழ்ந்து விட்டது என்றும், கப்பல் ஏறுகின்றது என்றும் புலம்பெயர் நாடுகளில் புலம்பிக் கொண்டு, தாங்கள் சட் அடிச்சு, றூம்போட்டு கலாசாரத்தைக் காலாவதியாக்குகின்றீர்கள். இவ்வாறு சட் றூம் இணையங்களில் சட் அடித்து, அந்தரங்க உறுப்புக்களைப் பரிமாறிக் கொண்டவர்களின் ஏராளமான வீடியோக்கள் எம்வசம் உள்ளன. அதாவது, ஒரு நண்பன் தனது சட் றூமில் உள்ள நண்பியின் மேல் பக்கத்தை பதிவு செய்து தனது இன்னொரு நண்பனுக்குக் காட்டும் பட்சத்தில் அதனைப் பார்த்த இந்த நண்பன் நீ மேல்பக்கம்தான் காட்டுகின்றாய், நான் கீழ்ப் பக்கத்தையும் காட்டுகின்றேன் என்று போட்டி போட்டுக் கொண்டு பெண்களின் கற்பை ஏலம் விடுகின்றனர்.


அத்துடன் இவ்வாறு இந்தச் சட்றூமை இயக்கும் நிறுவனம் பாகிஸ்தான் மற்றும் சீனா நாட்டில் இருப்பதும், குறைந்த கட்டணத்தில் இந்த வசதிகளைச் செய்து, பயனாளிகள் அதில் தரவேற்றம் செய்வதை இரகசியமாகப் பதிவு செய்து இந்தியாவில் இருக்கும் நீலப்படம் எடுக்;கும் நிறுவனங்களுக்கு விற்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் வீட்டில் இருந்தே விபச்சாரம் செய்யும் பெண்களாக, ஆண்களாக மாறுகின்றனர் நம் இளையோர்.

இருந்தும் இவ்வாறு நடப்பது இந்தப் பெண்களுக்கோ அல்லது ஆண்களுக்கோ தெரியாது. தங்களின் உடல் எத்தனையோ பேரின் கண்களுக்கு விருந்தளிக்கின்றது என்பது இவர்களுக்குத் தெரியாது. தான் ஒருவருடன்தான் சட் அடிச்சதாக நினைக்கின்றனர். இவ்வாறு எடுக்கப்பட்ட காணொளிகளை நாம் இதில் தரவேற்றம் செய்வோமாக இருந்தால், எத்தனையோ குடும்பங்களின் தராதரம் கெட்டு, நீதிமன்ற வாசல் செல்லக் கூடிய நிலைக்குத் தள்ளி விடும்.


இருந்தும் ஆதாரங்களுக்காக நாம் சிலவற்றை இவ்விடத்தில் பிரசுரிக்கின்றோம். இவ்வாறு பிரசுரிப்பது இனிவரும் காலங்களில் இதுபோன்ற செயற்பாடுகள் நடைபெறாதிருப்பதற்காகவும், பிள்ளைகளின் மேல் பெற்றோர்களுக்கு அக்கறை உணர்வு வரவேண்டும் என்பதற்காகவுமே. இது இவ்வாறிருக்க இவ்வாறான இணையங்கள் மூலம் பெண்களுடன் தொடர்பு கொள்ளும் அவ் இணைய நிர்வாகிகள், அப் பெண்களை மடக்கி அவர்களுடன் சட் அடிப்பதுபோல் நடித்து,

பின் அவர்களின் அந்தரங்க உறுப்புக்களை அவ் வீடியோச் சட் மூலம் காண்பிக்குமாறு கேட்டு, அதனை காணொளியாகப் பதிவு செய்து வெளியிடங்களுக்கு உலாவ விடுவதும் அண்மைய நாட்களில் நடந்தேறியுள்ளது. எனவே இவ்வாறான சட் அடிக்கும் இணைய நிறுவனங்களின் உரிமையாளர்களே இதுபோன்ற செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதுடன், பெண்களின் ஆபாச காணொளிகளையும் பதிவெடுத்துத் தரவேற்றம் செய்கின்றனர்.

எனவே பெற்றோர்களாகிய நீங்கள், பிள்ளைகள் மேல் முழுமையான கண்ணோட்டத்தினை வைத்துக் கொள்ள வேண்டும். பிள்ளைகள் கணனி முன் அமர்ந்திருந்தால் அடிக்கடி அப் பக்கமாக வந்து போனால் கூட இவ்வாறான சீரழிவுகளை இயன்றவரைக் குறைத்துக் கொள்ள முடியும். எனது பிள்ளை இவ்வாறு செய்யாது என்று மட்டும் நீங்கள் நினைத்தால் அதுதான் முட்டாள்தனம். ஏனெனில் ஏமாற்றுக்காரர்கள் இருக்கும் வரை ஏமாறுபவர்களும் இருக்கத்தான் செய்வார்கள் அல்லவா? இதேவேளை எமது இணையத்தின் புலனாய்வு செய்திப் பிரிவால் தரப்பட்ட தகவல்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

அதாவது, இச் செய்தியை நாம் தரவேற்றத் தயார் நிலையில் இருந்தபோது, மேற்படி சட் றூம் நிர்வாகியினால் ஒரு பெண் தற்கொலைக்கு முயன்று தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர்கள் தொடர்பான பெயர், விபரங்கள் அனைத்தும் அவர்களின் பாதுகாப்புக்காரணங்களுக்காக நாம் இவ்விடத்தில் பிரசுரிக்கவில்லை. அத்துடன் 21 வயது நிரம்பிய ஒரு இளைஞன் எமது புலனாய்வுச் செய்திப் பிரிவிடம் தான் இதுவரைக்கும் 200 ற்கும் மேற்பட்ட தமிழ்ப் பெண்களின் அந்தரங்க உறுப்புக்களைப் பார்த்து விட்டேன் என ஒரு சாதனையாளன் போல் தெரிவித்துள்ளார்

எனவும் எமது புலனாய்வுச் செய்திப் பிரிவு தெரிவிக்கின்றது. இதேநேரம் இவ்வாறான சட் றூம் வைத்திருக்கும் உரிமையாளர்களும் தங்கள் அந்தரங்க உறுப்புக்களை மற்றவர்களுக்குக் காட்டிய காணொளிகளும் எமது செய்திப் பிரிவிடம் உள்ளது. தேவை ஏற்படின் அதனையும் நாம் தரவேற்றம் செய்வோம். அத்துடன் இது தொடர்பான மேலதிக தகவல்கள் இனிவரும் காலங்களில் இப் பகுதியில் இடம்பெறும். இதேவேளை இத் தகவல்கள் அனைத்தும் யார் மனதையும் புண்படுத்தவோ அல்லது வேதனைப்பட வைப்பதற்காகவே அல்ல. மாறாக ஒரு விழிப்புணர்வுக்காகவே என்பதையும் நாம் இவ்விடத்தில் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றோம்.

No comments:

Post a Comment