Wednesday, December 21, 2011

ரூ.300 கோடி கறுப்பு பணம் பறிமுதல்; பிரணாப் முகர்ஜி


டெல்லி மேல்-சபையில் மத்திய மந்திரி பிரணாப் முகர்ஜி கேள்வி ஒன்றுக்கு அளித்த பதிலில் கூறியதாவது:- 

நடப்பு நிதியாண்டில் (2011-12) கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து அக்டோபர் வரை 7 மாதங்களில் ரூ.299.63 கோடி கறுப்பு பணத்தை வருமான வரி அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

இதில் பணம், நகைகள் அடங்கும். ரூ.179.59 கோடியில் பணமும், ரூ.95.67 கோடி மதிப்புள்ள நகைகளும், ரூ.24.36 கோடி மதிப்புள்ள சொத்துக்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

2010-11-ம் ஆண்டில் ரூ.774.98 கோடி கறுப்பு பணம் கைப்பற்றப்பட்டது. இதில் ரூ.440.28 கோடி பணமும், ரூ.184.15 கோடியில் நகைகளும் அடங்கும். மாநில வாரியாக கறுப்பு பணம் கைப்பற்றப்பட்ட விவரங்களை வருமான வரித்துறை பராமரிக்கவில்லை

No comments:

Post a Comment