Wednesday, December 21, 2011

தியேட்டர்களில் இனி நைட் ஷோ இல்லை!

பெண்களின் பாதுகாப்பை கருதி, சினிமா தியேட்டர்களில் இரவு காட்சியை ரத்து செய்ய திரையரங்க உரிமையாளர்கள் முடிவு செய்து இருக்கிறார்கள். தமிழ்நாடு முழுவதும் நகரங்களில் உள்ள பெரும்பாலான தியேட்டர்களில், தினமும் 4 காட்சிகள் நடத்தப்படுகின்றன. அவை காலை – பகல் – மாலை – இரவு என நான்கு காட்சிகள்.

நகர்ப்புறங்களிலும், கிராமப்புறங்களிலும் பிற்பகல் – மாலை – இரவு என தினமும் 3 காட்சிகள் மட்டுமே நடத்தப்படுகின்றன. இரவு 10-30 மணி காட்சிக்கு பொதுமக்கள் மத்தியில் ஆர்வம் குறைந்து கொண்டே வருகிறது. இரவு காட்சி முடியும் போது நள்ளிரவு ஆகிவிடுவதால், அந்த காட்சிக்கு வருவதை பெரும்பாலானவர்கள் தவிர்க்கிறார்கள். குறிப்பாக பெண்கள் பாதுகாப்பை கருதி, இரவு காட்சிக்கு வருவதில்லை.
இதனால், தியேட்டர்களில் இரவு காட்சிக்கு கூட்டம் குறைந்து கொண்டே வருகிறது. நிறைய தியேட்டர்களில் இரவு காட்சிக்கு நான்கு அல்லது ஐந்து பேர் மட்டுமே வருகிறார்கள். தியேட்டர்கள் காலியாக கிடக்கின்றன. இதைத்தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் உள்ள பல தியேட்டர்களில், இரவு காட்சி ரத்து செய்யப்பட்டு விட்டது. நிரந்தரமாக அந்த காட்சியை ரத்து செய்வது பற்றி, தியேட்டர் உரிமையாளர்கள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

No comments:

Post a Comment