Wednesday, December 21, 2011

விஜய் மேல் பாரதிராஜாவுக்கு ஏனிந்த கொலைவெறி

முல்லைப்பெரியாறு அணை பிரச்சனை குறித்து நடிகர் விஜய்யை மறைமுகமாக விமர்சித்துள்ளார் இயக்குனர் பாரதிராஜா.
தமிழ்நாட்டிலோ அல்லது தமிழர்களுக்கு ஏதாவது ஒரு பிரச்சனை என்றாலோ உடனே தமிழ் திரையுலகத்தினர் குரல் கொடுப்பர்.

அந்த வகையில் இப்போது தமிழ்நாட்டையை உலுக்கிக்கொண்டிருக்கும் முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் திரையுலகினர் யாரும் குரல் கொடுக்காமல் மவுனம் காத்து வருகின்றனர்.

இந்நிலையில் முன்னணி நடிகர் ஒருவரை பற்றி அதிரடியாக விமர்சனம் செய்து ஒரு பெரும் புயலை கிளப்பியிருக்கிறார் இயக்கனர் பாரதிராஜா.

பிரபல பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டியளித்திருக்கிறார் இயக்குனர் பாரதிராஜா. அப்போது அவர் கூறுகையில், ஊழலுக்கு எதிராக அன்னா ஹசாரே டில்லியில் போராட்டம் நடத்தியபோது இங்கே தமிழ் சினிமாவில் இருக்கும் ஒரு கலைஞன் விமானம் ஏறி டில்லி சென்று ஹசாரே போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தார்.

ஏன் அந்த கலைஞனுக்கு இங்கே தேனியில் உயிரை கையில் பிடித்துக் கொண்டு துடிக்கும் தமிழன், அவரது கண்ணுக்கு தெரியவில்லையா? அல்லது அந்த நடிகருக்கு தேனிக்கு செல்லும் வழிதான் தெரியாதா? என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

பாரதிராஜா இப்படி கடுமையாக விமர்சித்திருத்திருக்கும் அந்த நபர் வேறுயாரும் அல், நடிகர் விஜய் தான். இதற்கு விஜய் என்ன பதில் சொல்ல போகிறாரோ...?

No comments:

Post a Comment