Wednesday, December 21, 2011

இந்தவருடம் அதிகம் விமர்சனத்திற்கு ஆளாகியிருக்கும் நடிகர் விஜய்

சென்னைக்கு வந்த அன்னா ஹசாரேயை நடிகர் விஜய் ஏன் சந்திக்கவில்லை என பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

கொலிவுட்டின் இப்போதைய பரபரப்பாக பேசப்படும் விடயம் நடிகர் விஜய்யை பற்றி தான்.

ஊழலுக்கு எதிராக போராடி வரும் சமூக சேவகர் அன்னா ஹசாரே சில தினங்களுக்கு முன்னர் ஊழலுக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரத்திற்காக ஒருநாள் பயணமாக சென்னை வந்தார்.

முதற்கட்டமாக மகாத்மா காந்தியை பற்றிய சினிமா படமான “முதல்வர் மகாத்மா” என்ற படத்தை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஃபோர் பிரேம் திரையரங்கில் பார்த்து ரசித்தார்.

அப்போது நடிகர் அர்ஜூன் ஹசாரேயை நேரில் சந்தித்து தன்னுடைய ஆதரவை தருவதாக கூறினார். பிறகு ஹசாரே மாலையில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார்.

இதனிடையே ஊழலுக்கு எதிராக டில்லி ராம்லீலா மைதானத்தில் ஹசாரே உண்ணாவிரதம் இருந்த போது நடிகர் விஜய் நேரடியாக டில்லிக்கு சென்று தனது ஆதரவை தெரிவித்தார்.

ஆனால் அதே விஜய் இப்போது ஹசாரே சென்னைக்கு வந்தும் அவரை பார்க்க போகவில்லை. இதனால் பலரும் விஜய்யை விமர்சனம் செய்ய ஆரம்பித்து விட்டனர். சென்னை வந்த ஹசாரேயை அவர் ஏன்..? பார்க்கவில்லை என்று கேட்க ஆரம்பித்துவிட்டனர்.

ஏற்கனவே முல்லைப் பெரியாறு பிரச்சனை தொடர்பாக இயக்குனர் பாரதிராஜா நடிகர் விஜய்யை மறைமுகமாக தாக்கி பேசியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment