Wednesday, November 23, 2011

இது கண்கள் நம்ப மறுக்கும் கொடூரவித்தை!

எத்தனை எத்தனை விதமான மனிதர்கள் எத்தனை விதமான திறமைசாலிகள் எத்தனை விதமான சாதனையாளர்கள் நம்மில்.. இங்கே பாருங்கள் இந்த காணொளியில் வரும் காட்சிகளை




கண்கள் கட்டப்பட்டு நிகழும் இந்த உயிர் பறிக்கும் சாகச, சாதனை, வித்தையை காணும் எம் கண்கள் நம்ப மறுக்கிறது. எப்படி சாத்தியமாகிறது இவையெல்லாம் என்ற கேள்வி காணொளி காணும் அனைவரினதும் மனதில் எழும் அசைக்க முடியாத கேள்வி.


ஒருவரது கண்கள் கறுப்பு துணியால் இறுக கட்டப்படுகிறது.. அதுவும் கட்டுவதற்கு முன்பு கண்ணுக்குள் மண் தூவி அதற்கு மேல் துணியால் இறுக்கி கட்டப்படுகிறது. பின்னர் கண்கள் கட்டப்பட்ட அவரை இன்னொருவர் தலை சுற்ற சுற்றி விடுகிறார். அவர் இருக்கும் இடம் தெரியாமல் திணறுகிறார். ஆம் அங்கே மறுபக்கத்தில் ஒருவர் மல்லாக்க படுக்க அவரின் வயிற்றின் மீது பப்பாசி காய் வைக்கப்படுகிறது. மற்றும் கண்கள் கட்டப்பட்வரின் கையில் கூரிய மண்வெட்டி போன்ற ஆயுதம்… அவருக்கு மல்லாக்க படுத்திருப்பவர் எந்த திசை என்று கூடி தெரியாது… ஆனால் அவரின் வயிற்றில் இருக்கும் பப்பாசிக்காயை மட்டும் வெட்டு ஒன்று துண்டு ரெண்டாக வெட்டுவார்… நம்ப முடியவில்லைதானே… பாருங்கள்….

உபயம்  puthiyaulakam

No comments:

Post a Comment