Wednesday, November 23, 2011

கன்னிப்பெண்ணைப் பிடித்துக் கொண்ட வாலிப பேய்.

வயசுப் பெண் என்றால் தன்னை அழகு படுத்திக் கொள்ள வேண்டும்.திருத்தமாக உடை உடுத்தி,யாராவது பார்த்தால் மனைவியாகவோ,மருமகளாகவோ கொள்ள மனம் வரவேண்டும்.அந்த பெண் அப்படியில்லை.சமீப காலமாக சரியாக சாப்பிடுவதில்லை. தூங்குவதில்லை.எந்த வேலை சொன்னாலும் ஈடுபாட்டுடன் செய்வதில்லை.

அப் பெண்ணின் தாய்க்கு பாட்டி யோசனை கூறினாள்.’’போய் அந்த சாமியிடம் குறி கேட்டுவிட்டு வா”.அம்மா குறி கேட்டு விட்டு வந்து சொன்னது:’’அவளுக்கு பேய் பிடித்திருக்கிறதாம்” இரவு குடும்பத்தினர் ஒன்றாக அமர்ந்து ஆலோசித்தார்கள்.பேய் ஓட்டுபவனை அழைத்து வர வேண்டும்.அண்ணனுக்கு தெரியும்.
அண்ணன் காலையிலேயே பேய் ஓட்டுபவனை காண கிளம்பிச் சென்றார்.திரும்பி வந்து,”பேய் ஓட்ட பவுர்ணமிக்கு வருவதாக சொல்லியிருக்கிறார்.இதுல இருக்கிற பொருளெல்லாம் தயார் செய்ய வேண்டும்.எலுமிச்சம்பழம்,விபூதி,குங்கும்ம்,வேம்பு இலை,ஆணி,சாட்டை,போன்ற பொருட்கள் முக்கியமாக அதில் இருந்த்து.

இதெல்லாம் என் வீட்டிலிருந்து பத்தடி தூரம் உள்ள ஒரு வீட்டில் நடந்தவை.எங்கள் வீட்டிலும் இதைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தார்கள். எனக்கு பேய் ஓட்டுவதை பார்க்கவேண்டுமென்று ஆசை.அப்போது எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன்.அம்மாவிடம் அனுமதி கேட்டேன்.உடனே மறுக்கப்பட்டுவிட்ட்து.

பவுர்ணமி வந்து விட்ட்து.காலையிலிருந்து எனக்கு பரபரப்பு.எப்படியாவது அதை பார்க்கவேண்டும்.அப்பாவிடம் போய் கேட்டேன்.”அது இரவு பத்து மணிக்கு மேல்தான்!அவ்வளவு நேரத்துக்கு நீ அங்கெல்லாம் போக முடியாது”.என் முகம் போன போக்கை அம்மா கவனித்து விட்டாள்.இன்னொரு அண்ணனை பாதுகாப்புக்கு துணை சேர்த்து அனுமதி கிடைத்து விட்ட்து.

இரவு பத்து மணிக்கு மேல் முழு நிலவு இரவென்ற எண்ணத்தை தராமல் போய்க் கொண்டிருந்த்து.சாமியாருடன் சேர்த்து ஏழெட்டு பேர் அந்த பெண்ணை அழைத்துக் கொண்டு கிளம்பினோம்.”நீ எதுக்கு வர?” என்றார்கள் யாரோ என்னைப் பார்த்து!குடியிருப்பிலிருந்து இரண்டு கிலோ மீட்டருக்கு மேல்போய் விட்டோம்.

கல்லுக்கு நீர் தெளித்து சாமியாக்கி பூசைகள் ஆரம்பமானது.பேய் ஓட்ட வந்திருந்தவர் பாட்டொன்றை பாட ஆரம்பித்தார்.அந்த அக்கா தலையை வேகமாக ஆட்டி ஆட ஆரம்பித்த்து.”யார் நீ? சொல்? என்று உறுமினார் வேப்ப இலையை தலை மீது அடித்தார்.வேம்பு சக்தி.கடவுள்.பேய் அலறி ஏதோ ஒரு பெயரை கூறியது.

”நான் நினைத்தேன்’ என்றார் ஒருவர்.”கல்யாணமாகாமல் தூக்கு போட்டுக் கொண்டு செத்துப் போனானே அவன் தான்”.கடவுளின் அருள் தாங்காமல் பேய்,”நான் போய் விடுகிறேன் என்று ஒப்புக் கொண்ட்து.எழுந்து ஓடு என்று சாமி உறும அந்த அக்கா எழுந்து ஓட ஆரம்பித்த்து.

இருவர் இரு புறமும் பிடித்துக் கொண்டு ஓட,என்னால் முடியவில்லை.துணைக்கு வந்தவரின் பெயரை சத்தமாக்க் கூறிக்கொண்டே நானும் ஓடிக் கொண்டிருந்தேன்.முடிந்த பிறகுதான் போய் சேர்ந்தேன்.புளிய மரமொன்றில் அக்காவின் தலை முடி கொஞ்சம் இருக்குமாறு ஆணி அடித்திருந்தார்கள். முடிகள் தொங்கிக் கொண்டிருந்த்து.

புளிய மரம் பேய் குடியிருக்குமிடம் என்பது கிராமப்புற நம்பிக்கை.புளிய மரத்தின் கீழே உறங்க்க் கூடாது.அக்கா அமைதியாக காணப்பட்டார்.அவரது தந்தை கனிவுடன் விசாரித்தார்.”இப்போ நல்லா இருக்காம்மா? பேயை புளிய மரத்தில் விட்டு விட்டு நாங்கள் அங்கிருந்து கிளம்பிவிட்டோம்.பேய் பிடித்தல் மன நல பாதிப்புதான் என்பதை பிறகு தெரிந்து கொண்டேன்

No comments:

Post a Comment