Tuesday, December 6, 2011

பேஸ்புக் இந்தியாவில் தடைசெய்யப்படுமா?

இந்தியாவில் பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூகத் தளங்களில் அரசியல் தலைவர்களையும் மதத்தலைவர்களையும் அதிகமாக விமர்சிக்கப் படுகிறது எனப் புகார் எழுந்துள்ளது.

முக்கியமாக காங்கிரசின் தானைத் தலைவி மற்றும் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் போன்றவர்களைப் பற்றி அதிகமாக கிண்டல் செய்யப் படுவதாக பல செய்திகள் தலைமையின் கவனத்திற்கு போஇருக்கிறது.

பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் அரசியல் தலைவர்களை அருவருப்பாகவும், ஆபாசமாகவும் எழுதுவது மட்டும் இல்லாமல் அவர்களின் புகைப்படங்களை மிகவும் கேவலமான முறையில் வெளியிடுவதாகவும் புகார் சென்றுள்ளது.
இந்த பிரச்சனை பற்றி மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சர் கபில் சிபல், சமூக வலைத்தலங்கலான பேஸ்புக்,டிவிட்டர் போன்ற இணைய தளங்களின் நிர்வாக அதிகாரிகளை அழைத்துப் பேசினார். அப்போது இந்த ஆபாச விமர்சனங்கள் எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பதைப் பற்றி பேசப்பட்டது.

ஆனால் அந்த கூட்டத்தில் கலந்துகொண்ட சமூக வலைத்தளங்களின் நிர்வாகிகள் அவ்வாறு ஒவ்வொரு கருத்தையும் கண்காணித்து கட்டுப்படுத்துவது இயலாத காரியம் என தெரிவித்தனர்.

மேற்கொண்டு இந்த விஷயத்தில் கபில்சிபல் அவர்களின் முடிவைப் பொறுத்தே இந்த வலைத் தளங்களின் செயல்பாடுகள் இந்தியாவில் இருக்கும்.

No comments:

Post a Comment