Tuesday, December 6, 2011

முதல்வர் 'ஜெ'- க்கு காத்திருக்கும் அடுத்த ஆபத்து..நமக்கும்தான்..

நம் தமிழ் நாட்டில் விளை நிலங்களின் பரப்பு இப்போது பெரிதும் குறைந்துவிட்டது. கடந்த 2000 ஆம் ஆண்டில் 53 லட்சம் எக்டேராக இருந்த விளையும் நிலங்களின் பரப்பு இப்போது 48 லட்சம் எக்டேராகக் குறைந்துள்ளதே இதற்கு சாட்சி.


இதற்கு என்ன காரணங்கள் என ஆராய்வோம்:


தொழிற்துறையின் அபார வளர்ச்சி, 
ரியல் எஸ்டேட் தொழில், 
நகர மயமாதல், 
நிலங்கள் அதிக விலைக்கு போகுதல்,
சிறப்பு பொருளாதார மண்டலங்கள் போன்றவைகள்தான்.


விவசாயத்துக்கு எதிரான இந்த நடவடிக்கையால் விளைநிலங்கள் எல்லாம் விலை நிலங்களாகி மாறிவிட்டன. பெரும்பாலும் மா நகரங்களைச் சுற்றியுள்ள மாவட்டங்களில்தான் இந்த விளைநிலங்கள் அதிகமாகக் குறைந்துள்ளன.
முந்தைய அரசு இந்த நிலங்களைக் காப்பாற்ற ஓர் அரசாணை அறிவிக்கப்பட்டது. விலை நிலத்தை வாங்குவோர் அந்த மாவட்டத்தில் உள்ள வேளாண் இயக்குனரிடம் 'இந்த நிலத்தில் பயிர் எதுவும் செய்யமுடியாது' என தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும். ஆனால் சில ரியல் எஸ்டேட் பேர்வழிகள் சில தகுடுதித்தங்கள் செய்து அந்த என்.ஒ.சி யை வாங்கி விலை நிலங்களை விற்க ஆரம்பித்தார்கள். காலப் போக்கில் அந்த உத்தரவு கைவிடப் பட்டது.


விலை நிலங்கள் குறைந்துகொண்டு வருவதால் உற்பத்தி குறைந்து உணவு பொருள்களின் விலை அதிகரிப்பதற்கான அபாயம் உள்ளது. எனவே விளைநிலங்கள் அழிக்கப்படுவதை தடுக்க கடுமையான சட்டங்கள் கொண்டுவரவேண்டும். இதை கண்காணிக்க தனியாக ஆணையமும் அமைத்தால் நன்றாக இருக்கும்.


பல இலவச(?) திட்டங்களை செயல்படுத்துவதில் ஆர்வம் காட்டும் முதல்வர் தமிழகத்தில் விளைநிலங்களிலும், ஏரிகளிலும் வீடு கட்ட தடை விதிக்க வேண்டும். ரியல் எஸ்டேட் வியாபாரத்தையும் தடை செய்யவேண்டும். 


செய்வார்களா? 
இல்லை கண் கெட்டப் பிறகு சூர்யநம்ஸ்காரம் செய்வார்களா?

No comments:

Post a Comment