Tuesday, December 6, 2011

பிரசவத்தின் போது கூடவே இருந்த இரண்டு கணவர்கள்!(படங்கள் இணைப்பு )

பெண்ணொருவருக்கு குழந்தை பிறக்கும் போது இரண்டு கணவர்கள் கூட இருந்த சம்பவம் ஒன்று உலகெங்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.


34 வயதான Jaiya Ma என்ற பெண் Jon Hanauera என்ற 49 வயதானஆண் நண்பருடன் ஆறு வருடங்களாக வாழ்ந்து வந்துள்ளார். அதன் பின்னர் குறித்த பெண் 44 வயதான Ferguson என்ற மரத்தளபாட வடிவமைப்பாளருடன் நாட்டிய வகுப்பு ஒன்றில் சந்தித்து பழகி வந்துள்ளார்.

ஒரு வருடம் கழித்து புதிய காதலன் மூலம் குழந்தை பிறந்துள்ளது. ஆனாலும் Jaiya இன் முதல் கணவரான Jon உம் இந்த காதலுக்கு பச்சைக் கொடி காட்டியுள்ளார். Jaiya இன் புதிய காதலனான Ferguson ஐ தனது வீட்டில் தங்க அனுமதித்துள்ளார்.

இதில் கிளைமேக்ஸ் என்ன வென்றால் குறித்த பெண்ணுக்கு தண்ணீர் தொட்டி முறை மூலம் குழந்தை பிறக்கும் போது இரண்டு காதலர்களும் உடன் இருந்துள்ளனர். தற்போது அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ஒரு அழகிய வீட்டில் மூன்று பேரும் ஒன்றாக வாழ்ந்து வருகிறார்கள்.

தான் ஒரு அதிஷ்டக்காரப் பெண் எனவும், இரண்டுபேரும் ஒரு குறையும் வைக்காமல் தன்னை அன்பாக கவனித்துக் கொள்வதாக மனம் திறந்த வாக்கு மூலம் அளித்துள்ளார் Jaiya. இதுதான் முக்கோணக் காதலோ?




No comments:

Post a Comment