Tuesday, December 6, 2011

ரயில்வேயின் கவனத்துக்கு..! -


நாகர்கோவிலில் இருந்து பெங்களூரு செல்ல ரயிலில் முன்பதிவு செய்திருந்தோம். பயண நாளன்று, ஸ்டேஷனுக்குச் சென்றபோது, 'அந்த வண்டி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. டி.வி., பேப்பர்களில் அறிவித்துள்ளோம்' என்று சொல்லி, கட்டணத்தையும் திருப்பிக் கொடுத்துவிட்டனர்.

உடனடியாக மணியாச்சி அல்லது மதுரை சென்றாலும், முன்பதிவு இல்லாமல் வேறு ரயில்களில் பயணிப்பது சிரமமான விஷயம். வயதானவர்கள், குழந்தைகளை வைத்துக் கொண்டு, ரொம்பவே சிரமப்பட்டோம்.

முன்பதிவு விண்ணப்பத்தில் முகவரி, தொலைபேசி எண் எல்லாம் குறிப்பிடப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்பம் முன்னேற்றம் அடைந்திருக்கும் இக்காலத்தில், எஸ்.எம்.எஸ். மூலமாகவாவது தகவலை அனுப்பி இருக்கலாம் அல்லது மாற்று ஏற்பாடு செய்து இருக்கலாமே ரயில்வே நிர்வாகம்!

பின்குறிப்பு: நாமும் பயணத் தேதிக்கு சில தினங்களுக்கு முன்பாகவே, இதுபோன்ற விஷயங்களை உறுதி செய்துகொள்வது அவசியம்!

No comments:

Post a Comment