Tuesday, December 13, 2011

நன்றிக் கடனுக்காக ஒரு தாலி! - பெயர் வெளியிட விரும்பாத பெண்

வாழ்க்கையே கேள்விக்குறியாகி, என் குடும்பம் தவித்து நின்ற வேளையில், எங்களைக் கரையேற்றினார், என் மாமா. இப்போது அவரே என் வாழ்க்கையை மீண்டும் கேள்விக்குறியாக்கி விடுவாரோ என்ற குழப்பத்தில் நான் இருப்பது, துயரம்!

நான் பிறந்த சில தினங்களிலேயே அப்பா இறந்துவிட்டார். நிராதரவாக நின்ற என்னையும் என் அம்மாவையும் தேற்றி, தாங்கி, பாரம் எனத் தெரிந்தும் எங்களை ஏற்று, இத்தனை காலமாகச் சுமக்கிறார் என் மாமா. இப்போது நான் பட்டதாரியாக வளர்ந்து நிற்பதற்கு, என் மாமா குடும்பத்தின் அரவணைப்புதான் காரணம்.

சமீபத்தில் எங்கள் வீட்டில் என் திருமணப் பேச்சு ஆரம்பித்தது. தன் மகனுக்கு என்னைத் திருமணம் செய்து தரும்படி கேட்டார் என் மாமா. அம்மாவும் முழுமனதுடன் சம்மதித்தார். ஆனால், எனக்கு இதில் உடன்பாடு இல்லை. என் மாமா பையன் நல்லவர், அன்பானவர் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், அவர் பத்தாவது மட்டுமே படித்திருக்கிறார். இப்போது ஆட்டோ ஓட்டிக்கொண்டு இருக்கிறார். இவரை நம்பி எப்படி என் எதிர்கால வாழ்க்கையை ஒப்படைப்பது?

"நீ அவரை ஏத்துக்கிட்டாலும், அவரோட படிப்பு கண்டிப்பா அவருக்கு ஒரு கட்டத்தில் தாழ்வு மனப்பான்மையைக் கொடுக்கும். அது உங்க வாழ்க்கையைப் பாழாக்கும். அவருக்கும் உனக்கும் 10 வயசு வித்தியாசம் வேற. நிதானிச்சு முடிவெடு..." என்று எச்சரிக்கும் என் தோழிகளின் வார்த்தைகளை புறந்தள்ள முடியவில்லை.

என் அம்மாவிடம், "எனக்கு இந்தத் திருமணத் தில் விருப்பமில்லை’' என்று சொன்னபோது... 'நன்றி கெட்டவள்' என என்னைத் திட்டுகிறார். "அவங்க மட்டும் இல்லைனா, இன்னிக்கு நாம இல்லை. எனக்காக இதுக்கு ஒப்புக்கோ. உன் கால்ல விழறேன்..." என்று அழுகிறார். ஆனால், என் மனதில் உள்ள விருப்பங்களை, தயக்கங்களைப் பொருட்படுத்த மறுக்கிறார் அம்மா.

பட்ட கடனுக்காக, என் வாழ்க்கையையே வட்டியாக நினைத்து, 'இதுதான் விதி' என மனதை திடப்படுத்திக் கொண்டு மாமா பையனை ஏற்கவா..? இல்லை, எத்தனை மனங்கள் புண்பட்டாலும் சரி... என் எதிர்கால வாழ்க்கை நிம்மதியாக இருக்க வேண்டும் என, இந்தத் திருமணத்தை எதிர்த்து நிற்கவா..?

குழம்பித் தவிக்கிறேன்... தெளிய வையுங்கள்!

தெளிய வைத்த வாசகர்கள் 


Chennai Devadai முந்தைய தலைமுறை புரிந்து கொள்ளாவிட்டாலும், உன் மாமன் மகனிடம் நேரடியாக சென்று உன் பிரச்சினைகளையும், எண்ணங்களையும், உறவில் மணம் முடித்தால் பிறக்கும் குழந்தைகளுக்கு குறை இருக்கலாம் என்பதையும் சொல்லி பார்க்கலாம்......சரீன், சென்னை.

Suresh Kumar மாப்பிள்ளை நல்லவர் எனில், கடைசிவரை குடும்பத்தை காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை இருக்கும் பட்சத்தில் தாரளாமாக அவரை திருமணம் செய்து கொள்ளலாம். திருமணத்திற்கு படிப்பு மட்டும் ஒரு காரணம் அல்ல. ச


Parimalakannan Kanthan உன்னை படிக்க வைத்த உன் மாமா தன் மகனை ஏன் படிக்கவைக்கவில்லை.... தாழ்வு மனப்பாண்மை எப்போது வரும் ... நீ உன்னை உயர்வாய் நினைக்கையில்... அந்த அளவுக்கு உன்னை வளர்த்தவருக்கு நீ என்ன செய்ய போகிறாய்????????/

முதலில் நீங்கள் சூழலின் இறுக்கத்தைத் தளர்த்த வேண்டும். உதாரணமாக, மாமன் மற்றவர்களுக்கு உங்கள் நிலையினைப் புரியவைக்க சற்று கால அவகாசம் எடுத்துக் கொள்ளலாம். பொதுவாக இப்படி ஆறப்போடுவது, 


Rajasekar Mani ‎//மாப்பிள்ளை நல்லவர் எனில், கடைசிவரை குடும்பத்தை காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை இருக்கும் பட்சத்தில் தாரளாமாக அவரை திருமணம் செய்து கொள்ளலாம். திருமணத்திற்கு படிப்பு மட்டும் ஒரு காரணம் அல்ல//

மிகவும் சரியாக சொன்னிர்கள் சுரேஷ்! :)

ஆக மொத்தத்தில் நமது தமிழ் பெண்களுக்கு இன்னும் தாழ்வு மனப்பான்மை போகவில்லை. தன்னை விட அதிகம் படித்திருக்க வேண்டும், தன்னை விட அதிகம் சம்ப்சம்பாதிக்க வேண்டும், பெரிய பணக்காரனாக வேண்டும், இப்படி எல்லாம் தன்னை விட அனைத்திலும் ஒரு படி உயர்வாக இ...See More

Kalpana Ramprasath Mapillai is good guy means better marry him , He will take care of you , dont oppose the marriage

Uma Raj பணமும் படிப்பும் வாழ்க்கை அல்ல.இரு மனங்களின் சங்கமமே திருமணம். அன்பான் கணவர் அமைவது வரம். அம்மா, தோழிகள் சொல்வதற்காக அல்ல. உன்சந்தோஷம் உன் முடிவில். M.Com படித்த என் தங்கை 4-ஆம் வகுப்பு படித்த கணவருடன் நிறைவாக குடும்பம் நடத்துகிறாள்(15 வருடங்களாக).அதற்கு அன்பு மட்டுமே அடித்தளமாக அமைய வேண்டும்.பணத்தை வைத்து வீடு கட்டலாம், குடும்பத்தை கட்ட முடியாது. உன்னிடம் அன்பு இருக்கிற்தா என்று தெரியவிலையே?

நமது தமிழ் பெண்களுக்கு இன்னும் தாழ்வு மனப்பான்மை போகவில்லை. தன்னை விட அதிகம் படித்திருக்க வேண்டும், தன்னை விட அதிகம் சம்ப்சம்பாதிக்க வேண்டும், தன்னை விட அனைத்திலும் ஒரு படி உயர்வாக இ...ருக்க வேண்டும் என்று சொல்லிவிட்டு அப்புறம் ஏன் பெண்ணுரி...See More
December 8 at 1:31pm · Like · 3

Gomathi Natarajan வல்லவனா என்று பார்க்காதே நல்லவனா என்று பார் ...[ரஜினி பன்ச் பாஷையில் அழகாக சொல்கிறேன்]

IGaja Indira Narasihan Gomathi mam sarya soniga

படிப்போ, பத்து வயது வித்தியாசம் என்பதோ தடையில்லை. ஆண் தன்னை விட அதிகமாகத்தான் படித்திருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது ஏன் என்று புரியவில்லை. நீங்கள் பார்க்க வேண்டியது அவர் நல்லவரா, உங்களை வைத்து காப்பாற்றும் தகுதி உடையவரா என்பதை மட்டும்...See More



ரகுநாத் சுரேந்திரன் படித்துவிட்டு சும்மா இருக்குற பையன கல்யாணம் பண்றத விட, பத்து வரை படித்து ஆட்டோ ஓட்டி குடும்பத்தை காப்பற்றுபவருக்கு நீங்கள் மனைவி ஆகலாம்.. உங்களையும் கண்டிப்பாக காப்பாத்துவார்..



Uma Raj முழுமையான அன்பும் தெளிவும் இருந்தால் மட்டுமே மாமா பையனை திருமணம் செய்யுங்கள். அரைமனதோடு ஒத்துக்கொணடு நல்ல, அன்பான, அவருடைய வாழ்க்கையை நரகமாக்கிவிடக்கூடாது.



Balaji Raghavan படிப்பு மட்டும் தான் தடை என்றால், கல்யாணத்திற்கு பிறகு உனது அன்பான கணவரை படிப்பில் கவனுமும் செலுத்தி, பொருளாதரிதிலும் ஒரு பெண்ணால் உயர்த்த முடியும்.


Suren Sundar வணக்கம் நண்பர்களே.. எவ்வளவு பணம் இருந்தாலும் அது குணம் இருக்கிற இடத்துல இருந்தால்தான் மதிப்பு.... பசின்னு வந்த பணத்த உங்களால சாப்பிட முடியுமா? உங்க மாமா உங்கள மருமகள் பார்க்கணும் ன்னு ஆசை படுறாரு... உங்கள் தோழிகள் கூறுவது முட்டாள் தனம். நியாயமாக சுய தொழில் செய்யும் உங்கள் மாமா ஒரு சொக்க தங்கம்... உங்களுக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை என்றால் தைரியமாக கூறி விடுங்கள்... சந்தேகம் கூடாது...

Suren Sundar உங்க மாமா ஆட்டோ ஒட்டுனா கட்ட மாட்டிங்க... இதே நேரம் அவரு Flight ஒட்டுனா ? அம்மணி என்ன செய்விங்க?

No comments:

Post a Comment