Wednesday, November 16, 2011

தடம் மாறும் நாட்டில் இடம்மாறும் கல்!


அமெரிக்காவின் ‘ரேஸ் டிரெக் பிளாஸா’ பிரதேசம் உலகப் பிரசித்தமானது. இதற்கு ‘மரண வெளி’ என்று பெயர். ஏன் தெரியுமா? இங்கு கண்ணுக்கெட்டிய தூரம் வரை மனிதர்களோ, உயிரினங்களோ, மரம் மட்டைகளோ கிடையாது.பாலைவனம் போன்ற பரந்து விரிந்து கிடக்கும் இந்த மர்ம பூமியில் கற்கள் தானாக நகர்ந்து செல்கின்றன.


நீண்ட காலமாக நிகழ்ந்து வரும் இந்த மர்மத்திற்கான காரணம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இவை நகர்ந்து சென்ற அடையாளங்கள் தெளிவாகக் காணப்படுகின்றது. இங்குள்ள கற்கள் இரண்டு அல்லது மூன்று வருடங்களில் முழு பிரதேசத்தையும் சுற்றி வருவதாக ஆய்வுகள் கூறுகின்றன. சில சமயங்களில் இரு கற்கள் ஒரே நேரத்தில் பயணத்தை ஆரம்பிக்கும். ரயில் பாதை போன்று சுற்றி வருகின்றன.
சில சமயங்களில் அவற்றில் ஒரு கல் வலது பக்கமாகவோ இடது பக்கமாகவோ திரும்பி தனது பயணத்தை தனியாக தொடர்வதுண்டு. இந்த கற்கள் பின்னோக்கி நகர்ந்த சந்தர்ப்பங்களும் இருக்கவே செய்கிறது. இவை நடந்து திரியும் தூரம் 10 ஆயிரம் அடிகளை விட அதிகமாக நகர்கின்றன. சில கற்கள் ஒரு அடி மட்டுமே நகர்கின்றன. இந்த மர்ம பிரதேசம் குறித்து முதன் முதலில் 1948 ஆம் ஆண்டுகளிலே தகவல் வெளியானது. 1972-80 காலப் பகுதியில் உலக அளவினான ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டன.

நிலத்துக்குள் இருக்கும் ஒருவித சக்தியே கற்கள் நகர்வதற்குக் காரணம் என மெசசுசெட்ஸ் பகுதி ஹெம்சயர் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். சிறிய கல்லொன்று வருடம் முழுவதும் இரண்டரை அங்குலம் மட்டுமே நகர்கின்ற போதும் ஆனால் 36 கிலோ எடையுள்ள கல்லொன்று ஆண்டுக்கு 659 அடிகள் நகர்ந்திருக்கிறது. கல்லின் அளவுக்கும் அவை நகர்வதற்கும் எதுவித தொடர்பும் கிடையாது. இந்தப் பாழடைந்த மர்மமான பிரதேசத்தில் மனித நடமாட்டம் இல்லாவிட்டாலும் கற்களின் நடமாட்டம் அதன் ஆய்வுகளும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது.

No comments:

Post a Comment