Saturday, November 26, 2011

தூக்கத்திலும் எஸ் எம் எஸ் அனுப்பும் பெண்கள்

நித்திரையில் குறுஞ்செய்தி அனுப்பும் நிகழ்வுகள் அதிகரித்துள்ளதாகக் அவுஸ்திரேலியாவின் மெல்போர்ணைச் சேர்ந்த நித்திரை பற்றி ஆராயும் நிபுணர் ஒருவரினால் கூறப்பட்டுள்ளது.


இந்த நிகழ்வானது, நவீன தொழினுட்பத்தில் இளைய தலைமுறையின் தங்கியிருப்பை அதிகரித்துள்ளதாகவும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.


இருப்பினும், நித்திரையில் ஒரு குறுஞ்செய்தியை அனுப்புவது என்பது சாத்தியம் என்பதனை விஞ்ஞானிகள் இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லைத்தான்.

அமெரிக்காவின் நித்திரைக்கான சிகிச்சைக் கல்லூரியின் நிபுணர் ஒருவர் குறிப்பிடுகையில் சில இளையோர்களுக்கு இது வாகனம் ஓட்டுவதைப்போல ஊறியிருக்கும் என்றார்.


கைத்தொலைபேசிகள் பல இளையோர்களின் விரல்களைப் போன்ற ஒன்றாகவே ஒன்றிப்போய்விட்டது என பிறிதுதொரு நிபுணர் தெரிவித்துள்ளார். இத்தன்மையை ஒரு தட்டச்சுப் பணியாளரிடமும் காணலாம் என்றார்.


தனது ஆண்நண்பனுக்குத் தான் நித்திரைசெய்த பின்னும் இரண்டு மல்ரிமீடியா குறுஞ்செய்திகளை அண்மையில் ஒரு பெண் அனுப்பியிருந்தார்.


இதற்காக அவர் 11 வித்தியாசமான படிகளைத் தாண்டிச்சென்று அனுப்பியிருந்தார் என்பதும் அதிசயமே.

No comments:

Post a Comment