Saturday, November 26, 2011

தனுஷின் பாடலை கேலி செய்வதை நிறுத்துங்கள்.- சிம்பு

http://www.enayamthahir.com/
தனுஷ் எழுதி பாடியுள்ள WHY THIS KOLAVERI DI பாடல் இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. தனுஷ் எழுதியுள்ள பாடலை சிம்பு ரசிகர்கள் சிலர் தங்களது இணையத்தில் கேலி செய்து வந்தனர்.

இச்செயலை சிம்பு வன்மையாக கண்டித்துள்ளார். இது குறித்து சிம்பு தனது ஃபேஸ்புக் இணையத்தில் " எனது ரசிகர்கள் மற்றும் மீடியா நண்பர்களுக்கு ஒர் வேண்டுகோள். தனுஷ் எழுதி பாடியுள்ள பாடலை எனது பாடலுடன் ஒப்பீடு செய்யாதீர்கள்.

தனுஷ் ஒரு சிறந்த நடிகர் மற்றும் எனது நண்பர். இருவருமே ஒரே துறையில் தான் இருக்கிறோம். யாருக்கும் ஒரு பாடலை எழுதி பாட உரிமையுள்ளது.
சிறு சிறு வார்த்தைகளை சேர்த்து பாடலாக்கி வருவது தற்போது பேஷனாகி உள்ளது. அதை யார் வேண்டுமானாலும் செய்யலாம். ஆகையால் பாடலை கேட்டு சந்தோஷப்படுங்கள்.

கேலி செய்த என்னுடைய ரசிகர்கள் மீது கோபமாக இருக்கிறேன். கேலி செய்வதை நிறுத்துங்கள். நான் பாத்துக்குறேன்... ரிலாக்ஸ்! " என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment