Saturday, July 9, 2011

பேஸ்புக்கில் நட்பாகி பணத்தை திருடியவருக்கு ஐந்தாண்டு சிறை

பேஸ்புக் வழியாக நட்பாகி 63 வயது பெண்ணின் வீட்டுக்குள் புகுந்து அவரைக் கத்தியைக் காட்டி மிரட்டி பத்துப் பவுண் பணத்தையும்,கையடக்கத் தொலைபேசியையும் திருடிச் சென்ற 18 வயது யுவதிக்கு நீதிமன்றம் ஐந்தாண்டு சிறைத் தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது.

 

ருக்ஷானா சலீம் என்ற யுவதிக்கே இந்தத் தண்டனை வழங்கப்பட்டது. தனியாக வசித்து வந்த ஒரு பெண்ணிடமே இந்த யுவதி தனது கை வரிசையைக் காட்டியுள்ளார், கத்தியை முகத்துக்கு நேரே நீட்டி ஒரு பவுண் பணம் தருமாறுதான் முதலில் கேட்டுள்ளார்.

இல்லையேல் அந்த வீட்டைக் கொழுத்தப் போவதாக அச்சுறுத்தியவர் பின்னர் பத்து பவுண் பணத்தையும் தொலைபேசியையும் எடுத்துக் கொண்டு ஓடியுள்ளார்.

இந்த யுவதி கிறேடர் மன்செஸ்டர் பகுதியைச் சேர்ந்தவர்.இந்தப் பெண் நிறைய குற்றங்களைப் புரிந்துள்ள ஒருவர். இதுபோன்ற இன்னும் சில வழக்குகளும் இவருக்கு எதிராக உள்ளன.இந்த வழக்கில் தன்மீது சுமத்தப்பட்ட குற்றத்தை அவர் நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டார்

No comments:

Post a Comment