Thursday, March 3, 2011

விருப்பமான வரி...



குடிவரி கேட்டு
நீள் செவ்வக நோட்டேந்தி
நாலு பேர் வருவதுண்டு
ஊர் கோவில்
திருவிழாவிற்கு.

சிறகு முளைத்த
அதே
நீள் செவ்வக
கடிதமொன்று
நான்கு முனை
மஞ்சள் அணிந்து
கடல் கடந்த களைப்போடு
கை அடைகிறது
வருடா வருடம்.

வீடு விட்டு
வீடு மாறி
நாடு விட்டு
நாடு போனாலும்
விட்டு விடுவாளா
வீரமாகாளி?....

No comments:

Post a Comment