Thursday, March 3, 2011

ஞாபகங்கள்


(கல்கியில் பிரசுரமான எனது படைப்பு)




ல்லாம் நாம் மறந்திருப்போம்...

ரு நாள்
உன் தலையில் இருந்த
ரோஜாவை பிடுங்கி
தெருவில் எறிந்தேன்.
நீ அழுது புரண்டாய்.
உன் அம்மாவும் என் அம்மாவும்
அடித்து கொண்டார்கள்.
தெரு ரெண்டுபட்டது.

ல்லாம் நாம் மறந்திருப்போம்...

பிறகொரு நாள்
என் தோட்டத்தில் மலர்ந்த
ரோஜாவை பிடுங்கி
உன் கூந்தலில் சூட்டினேன்.
நீ அழவுமில்லை புரளவுமில்லை.
ஆனாலும்
உன் அப்பாவும்
என் அப்பாவும்
அடித்து கொண்டார்கள்.
தெரு ரெண்டுபட்டது.
ல்லாம் நாம் மறந்திருப்போம்...

நேற்று
என் மகள் வந்து
அழுது புரண்டாள்
உன் மகன் ரோஜாவை
பிடுங்கி தெருவில்
எறிந்ததற்காக.
என் மனைவியும்
உன் கணவனும்
அடித்து கொண்டார்கள்.
தெரு ரெண்டு பட்டது.

நீயும் நானும்
விட்டேத்தியாய் வேடிக்கை
மட்டுமே பார்த்தோம்.

நாம் என்ன
எல்லாமுமா மறந்துவிட்டோம்?...

No comments:

Post a Comment