Thursday, March 3, 2011

வலைப்பதிவுகளில் வைரஸ்கள்-அபாயம்-எச்சரிக்கை


அதிசயத்திலும், அதிசயமாக 'கதை' எழுதப் போன நம்ம 'மவராசன்' திடீரென்று ஒரு பாட்டில் பினாயிலை ஒரே மூச்சில் குடித்தவரைப் போல் இன்று பதிவுகளைப் போட்டுத் தள்ளிக் கொண்டிருக்கிறார். என்னவென்று தெரியவில்லை. தலைப்புகளைப் பார்த்தால் படித்தவுடனேயே ராயல் பாருக்கு ஓடிப் போய் ரெண்டு ஸ்மால் கட்டிங் சாப்பிட வேண்டும் போல் தெரிகிறது..


ஆனா.. என் கம்ப்யூட்டர்ல அந்த 'மவராசனோட' http://blog.balabharathi.net இந்த வீடு ஓப்பனே ஆக மாட்டேங்குது.. காரணம் கேட்டா, ஏதோ web filter-ஆமே.. அதை போட்டு என்னையும், என் கம்ப்யூட்டரையும் சில 'வைரஸ்கள்'கிட்ட இருந்து காப்பாத்திருக்கிங்களாம்..

அது 'மவராசன்யா.. வைரஸ் இல்லே'ன்னு 'தல, தல'யா அடிச்சுச் சொல்லிப் பார்த்தேன்.. ம்ஹ¤ம்.. கேக்க மாட்டேங்குறாங்க.. 'மவராசன் மாதிரிதான் தெரியும்.. ஆனா உள்ள விட்டீங்கன்னு வைச்சுக்குங்க.. அப்புறம் உங்க மூளையைக் கழட்டிப் போடுற வைரஸாக கூட மாறலாம்.. எல்லாம் நல்லதுக்கேன்னு நினைச்சுக்குங்க'ன்னு சொல்லிட்டாங்க..

கூடவே நம்ம மா.சிவக்குமார் www.tamilbloggers.org-ன்ற இந்த வீட்ல எதையோ எழுதி விட்டிருக்காரு. ஒருவேளை நம்மளை பத்தி ஏதாவது சொல்லியிருப்பாரோ.. பார்க்கலாம்னு போனா.. அதுவும் ஓப்பன் ஆகலே.. கேட்டா.. அதுவும் தடை செய்யப்பட்ட கொடுமையான வைரஸ்களில் ஒன்றாக இருக்கலாம் என்று எங்களது அலுவலக வைரஸ் எதிர்ப்புக் குழுவினர் கருதுகின்றனர்.

இப்ப நான் என்ன செய்யறது? இந்த 'ரெண்டு வைரஸ்களும்' என்ன எழுதிருக்காங்கன்னு படிச்சுப்போட்டு, யாராச்சும் நம்ம 'வீட்டுல' அதையே ஒரு காப்பி பதிவு போட்டு அனுப்பினீங்கன்னா நல்லாயிருக்கும்..

இல்ல வேண்டாம்.. நீயாச்சும் நல்லபடியா, சூதானமா, புத்திசாலித்தனமா இருந்துக்க ராசான்னு சொன்னீங்கன்னா..

சரீங்க சாமிகளா.. அப்படியே இருந்துக்குறேன்..

அந்த ரெண்டு 'வைரஸ்கள்'கிட்டேயும் இதை மட்டும் சொல்லிருங்க..

"உண்மைத்தமிழனுக்கு Anti Virus கிடைச்ச பின்னாடி இந்த வைரஸ்களை உள்ள விட்டு, படிச்சுப் பார்த்துட்டு அப்புறமா பதில் போடுவாருன்னு.."

2 comments: