Wednesday, December 14, 2011

வாடிக்கையாளரை அலைகழித்த வங்கிக்கு நுகர்வோர் குறைதீர் மன்றம் அபராதம்

திருவட்டார் களத்துநடை பகுதியை சேர்ந்தவர் எமிலி. இவர் முந்திரி ஆலையில் வேலைபார்த்து வருகிறார். இவர் திருவட்டாரில் உள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளார். 
கடந்த 3.11.2004 அன்று வங்கி கணக்கில் 11 ஆயிரத்து 809 சேமிப்பு இருந்துள்ளது. அவரது அவ சர தேவைக்காக 11 ஆயிரம் எடுப்பதற்கு வங்கிக்கு சென்று செக் சிலிப் கேட்டுள்ளார். வங்கியில் பணிபுரிந்த ஊழியர்கள் மறுநாள் வரச் சொல்லியுள்ளனர். 

இதையடுத்து 19.2.2008, 20.2.2008, மற்றும் 27.2.2008 ஆகிய தேதிகளில் எமிலி வங்கிக்கு சென்று வெகுநே ரம் காத்திருந்துள்ளார். 

27.2.2008ல் எமிலியிடம் சேமிப்பு கணக்கில் போதிய பணம் இல்லை என்று தெரிவித்துள்ளனர். இதனால் மிகவும் அதிர்ச்சியடைந்து வீடு சென்றுள்ளார். 
வங்கியில் சேமிப்பு செய்த பணம் எப்படி மாய மானது என்று பலமுறை வங்கி அதிகாரிகளிடம் முறையிட்டும் பலன் கிடைக்கவில்லை. இதனால் எமிலி கன்னியாகுமரி ஜில்லா நுகர்வோர் பாதுகாப்பு மையத்தின் தலைவர் தாம சிடம் புகார்மனு கொடுத் தார்.அதன் அடிப்படையில் வங்கிக்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டது. வங்கியின் விளக்கம் திருப்தியளிக்காத காரணத்தால் மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் தாமஸ் வழக்கு தொடர்ந்து வாதிட் டார். வழக்கை விசாரித்த நீதிபதி சுப்பாராஜ், உறுப்பினர் சகிலாகுமாரி ஆகி யோர் 3.11.2004அன்று எமிலி வங்கி கணக்கில் 11 ஆயிரத்து 500 எடுத்ததாக வங்கிக் கணக்கில் எவ்வித குறிப்பும் இல்லை. 

எனவே மேற்கண்ட 11 ஆயிரத்து 500யை வங்கி, எமிலிக்கு கொடுக்க வேண் டும். மேலும் வங்கியின் சேவையில் குறைபாடு உள் ளது என்றும் மனஉளைச்ச லுக்கு நஷ்டபரிகாரமாக 3 ஆயிரமும், வழக்கு செலவு க்கு sஆயிரமும் வழங்க வேண்டும். 

இந்த தொகையை 2 மாதத்திற்குள் வழங்க வேண்டுமென்று தீர்ப்பளிக்கப்பட்டது.

No comments:

Post a Comment