Saturday, December 24, 2011

விக்ரமை அறைந்த நிருபர் VIKRAM

செய்திக்கு வருவதற்கு முன், எனக்கு சினிமா ஸ்கூப் நியூஸ்களைத் தொடர்ந்து பொன்னுச்சாமியைப் பற்றி ஓரிரு வார்த்தைகள்
உளறி விடுவது நல்லது என்று நினைக்கிறேன். பழம் தின்று கொட்டை போட்டவர் மாதிரி
சினிமா தின்று ஃபிலிம் போட்டவர் நம்ம அண்ணன். சினிமா நியூஸைப் பொறுத்தவரை
'give and take' அதாவது போட்டு வாங்குறதுதான் அண்ணனோட பாலிசி. கொஞ்சம் பழைய
ஆளுங்கிறதால காது கொஞ்சம் மந்தம்.இவரு புராணத்தை அப்புறம் பாக்கலாம்.
நேத்து ரிலீஸான விக்ரம் பட ரிப்போர்ட் பத்தி பொன்னுசாமி சொன்ன பகீர் தகவல்கள்.
படத்தோட மொத்த பட்ஜெட் 38 கோடி ரூபாய்
விக்ரம் சம்பளம் 8 கோடி
சுசீந்திரனுக்கு 2.50 கோடி
யுவனுக்கு 1கோடி
ஹீரொயின் தீஷா 25 லட்சம்
மற்ற டெக்னிஷியன்கள் 2கோடி,,,,விக்ரமின் ஸ்பெஷல் வேண்டுகோளுக்காக ஒரு பாட்டுக்கு
குத்தாட்டம் போட்ட ஷ்ரேயாவுக்கு 25 லட்சம், ரிமாசென்னுக்கு 15 லட்சம். மத்தது கொஞ்சம் கூட
பொறுப்பில்லாம நடந்த 150 நாள் சூட்டிங் செலவு.
பொதுவா ஒரு படத்தோட தலை எழுத்து படம் ரிலீஸான ரெண்டாவது ஷோவுலயே தெரிஞ்சிடும்.
சனிக்கிழமை 3 மணி ஷோ நிலவரப்படி ‘ராஜபாட்டை’ வெறும் ரெண்டு வாரப்படம்தான்.
சில ஏரியாக்களை புரடியூசரே ரிலீஸ் பண்ணியிருக்கதா தகவல்.
மொத்தமே எட்டுக்கோடிதான் வசூலாகுமாம் இந்தப்படத்துக்கு. ஆக புரடியூசருக்கு முதல்
படத்துலயே முப்பது கோடி நாமமாம்.
இவ்வளவு பெரிய நாமத்தை பொட்லுரி .வி. பிரசாத் நெத்தி தாங்குமா?
என்ற கேள்வி ஒருபுறமிருக்க, யாரும் தப்பாக விமரிசனம் எழுதிவிடக்கூடாதே என்பதற்காக, அவசர அவசரமாக இன்று மதியம் மட்டன் பிரியாணி பிரஸ்மீட்டுக்கு எற்பாடு செய்திருந்தார் விக்ரம். முதல் நாள் படம்பார்த்து நொந்து வெந்து அந்து போயிருந்த நிருபர்கள், கேள்விகளால் அனல் கக்கிணார்கள்.
‘’தசாவதாரம்’ படத்து மேல என்ன கோபம் உங்களுக்கு, கமலைக் கிண்டல் பண்றமாதிரி இவ்வளவு கெட் அப்? என்று ஒருவர் ஆரம்பிக்க தொடர்ந்து
விக்ரமை நிருபர்கள் கொத்துக்கறி ப்போட ஆரம்பித்தார்கள். விக்ரமின் மேனேஜர் கிரி ஏடாகூடமாக கேள்வி கேட்பவர்கல்ளை திசை திருப்ப எடுத்த முயற்சிகள் எதுவும் எடுபடவில்லை.சரி இன்னைக்கி சாருக்கு ‘அரிகிரி அசெம்பிளி’தான் ஒரு ஓரமாய் ஒளிந்துகொண்டார்..
‘’ இவ்வளவு மட்டமான படத்துல நடிக்க எப்பிடி ஒத்துக்கிட்டீங்க விக்ரம்? இப்படி ஒரு கேள்வியுடன் விக்ரமின் செவிட்டில் ஓங்கி அறைந்தார் இன்னொரு நிருபர்.
‘’கதை எனக்கு பிடிச்சிருந்தது அதான் நடிச்சேன்.சத்யம்’ தியேட்டருல நல்லா ரசிக்கிறாங்க. எங்கூட வாங்க ,காட்டுறேன்’ போன்ற விக்ரமின் பரிதாபமான பதில்களை நிருபர்கள் எகத்தாளச்சிரிப்புடன் தான் ரசித்தார்கள்..தன்னை வைத்து நிருபர்கள் காமெடி பண்ண ஆரம்பித்துவிட்டதை விக்ரம் புரிந்து கொண்டாலும் தப்ப வழியில்லாமல் தவித்தார்.
உச்சக்கட்டமாக இன்னொரு நிருபர், ‘’விக்ரம் ஹாலிவுட் படங்கள்ல எப்ப நடிக்கப்போறீங்க? என்று கேட்டு சக நிருபரகளை விலா நோகச்சிரிக்க வைத்தார். இப்படி ஒரு சிக்கலான கேள்வியை எதிர்பாராத விக்ரமுக்கு திடீரென விக்கல் வந்துவிட்டது.. அருகிலிருந்த அக்காபினா பாட்டிலை எடுத்து அருந்தி தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டார்..ஆனால் கேல்விக்கு பதில் சொல்லாமல் தன்னை ரொம்ப கேவலமாக பேச ஆரம்பித்து விடுவார்களே என்று நினைத்து,’’ ஹாலிவுட்லருந்து எப்ப கூப்பிடுறாங்களோ அப்ப நடிக்கலாமுன்னு இருக்கேன் பாஸ்’’ என்றார்.
இந்த பதிலின்போது, நம்மை ஒரு கை லேசாக சுரண்டியது. திரும்பிப்பார்த்தால்...அட நம்ம புரடக்‌ஷன் பொன்னுச்சாமி.. தம்பி கொஞ்சம் காதைக்குடுங்க என்றார். வேற வழி? க்டுத்தேன்.
தம்பி படம் ரிலீஸான அன்னைக்கி விக்ரமோட பொண்டாட்டியும் புள்ளைங்களும் பாத்தாங்களாம்.அம்மாவைவிட புள்ளைங்க ரொம்பவேஅப்செட். அப்பாவோட 14 கெட் அப்புமே எங்க ஸ்கூல் டிராமாவை விட ரொம்ப கேவலமா இருக்கு.அதனால அவர ஒரு ஆறு மாசத்துக்கு வீட்டுல சேக்கவேண்டாம் என்று பிள்ளைகள் அம்மாவிடம் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்களாம். என்றார் பொன்னுச்சாமி.
இந்த நேரத்துல இந்த நியூஸ் எதுக்குண்ணே?
‘’தம்பி ஹாலிவுட்ல கூப்பிட்டா இவரு போவாராம். முதல்ல வீட்ல கூப்பிடுறாங்களான்னு பாருங்க’’ அப்பிடீன்னு ஒரு ஃபினிஷிங் போடுங்க’’ என்றார் பொன்னுச்சாமி.
போற போக்குல அண்ணன் நம்மள ஃபினிஷ் பண்ணிடுவார் போல இருக்கே?

No comments:

Post a Comment