நாடு முழுவதும் கடந்த 2 ஆண்டுகளில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனை மூலம் கணக்கில் காட்டப்படாத ரூ.18 ஆயிரத்து 750 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை நேரடி வரிகளுக்கான மத்திய வாரியம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய வாரியம் மேலும் கூறியதாவது: வரி ஏய்ப்பு பற்றி வரும் நம்பத் தகுந்த தகவல்களின் அடிப்படையிலேயே வருமான வரி சோதனைகள்மேற்கொள்ளப்படுகின்றன.

நாட்டின் எந்த இடத்திலும் தொழிலதிபர்களோ, தொழில் நிறுவனங்களோ வருமான வரி அதிகாரிகளால் தொல்லைகளுக்கு ஆளாகவில்லை. கடந்த 2 ஆண்டுகளில் நாடு முழுவதும் நடத்தப்பட்ட வருமான வரி சோதனைகளில் ரூ.18 ஆயிரத்து 750 கோடி கைப்பற்றப்பட்டுள்ளது.
|
No comments:
Post a Comment