
பார்ப்பத்ற்கே கொஞ்சம் வித்தியாசமாக தெரிந்தான்.ஏதோ கஷ்ட்த்தில் இருப்பது போல எனக்கு தோன்றியது.கைகளில் நடுக்கம்.அடிக்கடி அவனை பார்த்துக்கொண்டிருந்தேன்.”எங்கிருந்து வருகிறீர்கள்?” என்று கேட்டேன்.”சும்மா ஒரு ஃப்ரண்ட பார்க்க வந்தேன்” என்று சொல்லி விட்டு வெளியே சென்றுவிட்டான்.
சிறிது நேரத்தில் மீண்டும் வந்தவன் எனக்கு மூன்று இருக்கைகள் தள்ளி அமர்ந்தான்.நான் அந்த இளைஞனையே அடிக்கடி பார்க்க ஆரம்பித்தேன்.அங்கே பணியாற்றும் யாரோ ஒருவர் அவனை அழைத்துக்கொண்டு போனார்கள்.சற்று நேரத்தில் வெளியே வந்தவன் கிளம்பிச்சென்று விட்டான்.

அதெல்லாம் உங்களுக்கு எதற்கு சார்? இப்படி வருபவர்களின் தகவல்களை வெளியிடுவதில்லை என்றார்கள்.நான் இன்னாருக்கு உறவு என்று அறிமுகப்படுத்திக்கொண்ட பின் அந்த இளைஞரின் விவரங்களை சொல்லாமல் பிரச்சினையை மட்டும் சொன்னார்கள்.

பையன் சென்று காத்திருந்தால் அங்கே வந்து சந்தித்த்து ஒரு ஆண்.எவ்வளவு பணம் வைத்திருக்கிறீர்கள் என்று கேட்க இவன் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை சொல்லியிருக்கிறார்.”இதெல்லாம் மிக்க் குறைவு தம்பி!’ இதற்கு வேறொரு இடம்தான் சரிப்படும் என்று அழைத்துச் சென்ற இடம் வேறு.
அந்த இளைஞனுக்கு பயம் தொற்றிக்கொண்ட்து.பால்வினை நோய்,எச்.அய்.வி.உள்ளிட்ட கிருமித்தொற்று ஏற்பட்டிருக்குமோ என்ற பயத்தில்தான் அங்கே ஆலோசனைக்கு வந்திருக்கிறான்.மூன்று மாதம் கழித்து பரிசோதித்தால் தான் தெரியும் என்று சில ஆலோசனைகளை கூறி அனுப்பியிருந்தார்கள்.கிருமித்தொற்று ஏற்பட்டால் மூன்று மாதம் கழித்தே பரிசோதனையில் தெரியும் என்றார்கள்.அதுவரை அந்த இளைஞன் மன நிலை எப்படி இருக்கும் என்று சிந்தித்துக் கொண்டிருந்தேன்.
|
No comments:
Post a Comment